Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. லைக்கா கிராம வீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் :சம்பந்தன் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் பூந்தோட்ட முகாம் மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வவுனியா வடக்கு சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் அமைக்கப்படும் லைக்கா கிராமத்தின் பணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். லைக்கா கிராம வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்திருந்தார். மேலும் சம்பந்தன் உரையாற்றுகையில், பூந்தோட்ட மக்கள் உட்பட வடக்கு தமிழ் மக்கள் லைக்கா நிறுவனத்தின் வீட்டுத்திட்டத்தினை வரப்பிரசாதமாகக் கொள்…

  2. தீர்மானம் நிறைவேற்றினாலும் நாட்டின் இறையாண்மையில் எவரும் தலையிட அனுமதியோம் நீதிக்காக உயிர் துறப்பது மேல் - ஜனாதிபதி ஆவேச உரை இலங்கைக்கு எதிரான ஐ.நாவின் ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறியிருந்தாலும் எமது நாட்டின் இறை யாண்மை மற்றும் ஒருமைப்பாடு மீது எந்த வொரு அச்சுறுத்தல்களுக்கும் இடமளிக்கப்படமாட்டாது. இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நேற்று முன்தினம் நிறைவேறியிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் களுத்துறை பண்டாரகமவில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்…

    • 6 replies
    • 662 views
  3. இலங்கை தமிழரசுக் கட்சியில் உயர் பதவியில் இருந்து கொண்டு எல்லைமீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மிரட்டல் விடுத்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில். இல்லாத பொல்லாத பொய்களையெல்லாம் ஒருவர் இருவர் அல்ல பலர். கட்சிக்குள்ளே இருந்தே செயற்படுகிற போது அதை காணாமல் இருந்து விட்டு போய் விட முடியாது. ஆனபடியால் அந்த அம்மணிக்கு எதிராக நேற்றைய தினம் நான் வக்கில் நோட்டீஸ் ஒன்று அனுப்பியிருக்கிறேன். மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்யப்படும். 1000 கோடி ரூபாய்க்கு வழக்கு தாக்கல் செய்வதாக அவருக்கு ஏற்கனவே அறிவித்தல…

  4. இலங்கையின் அடுத்த ஜனாதிபதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே, அந்தத் தகுதி அவருக்கு மட்டுமே இருக்கின்றது கூடிய விரைவில் இது நிறைவேறும் என தம்மாலோக தேரர் உறுதி கூறினார். நேற்றைய தினம் யப்பானில் கோத்தபாய தலைமையில் ஓர் பௌத்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் ஏராளமான பௌத்தர்களும் பிக்குகளும் கலந்து கொண்டிருந்தனர். அந்த நிகழ்வில் உரையாற்றும் போதே தம்மாலோக தேரர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், இப்போது பெளத்தத்திற்காக குரல் கொடுத்து அதனை பாதுகாத்து சிங்களவர்களை காப்பாற்றும் ஒருவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மட்டுமே. பௌத்தத்தை காக…

  5. யாழ்.நிலாவரையில் புராதன கட்டடம் – தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வு 21 Views யாழ்ப்பாணம் நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று முற்பகல் நிலாவரைக் கிணறு பகுதிக்கு சென்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர், தியாகராஜா நிரோஷ், சட்டத்தரணி சுகாஸ், மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் அதிகாரிகளிடம் கலந்துரையாடினார். http://athavannews.com/wp-content/upl…

  6. யாழ் நகரில் சீரழியும் தமிழர் கலாச்சாரம் யாழ்ப்பாணத்தில் தமிழ்மக்களின் பாரம்பரியங்கள் சீரளிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். யாழ் அராலியில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையில் இதனைத் தெரிவித்துள்ளார். திறந்துவிட்ட யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை காலாச்சாரம் பரவத்தொடங்கியுள்ளது. தற்போது யாழ்மாவட்டத்தில் தமிழ் மக்களின் காலாச்சாரம் சீரழியும் நிலையினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. இது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இருந்து மீண்டு தமிழ் பாரம்பரியங்களை பாதுகாக்கும் பொறுப்பு இளைய சமூகத்திடம் உண்டு. தமி…

    • 6 replies
    • 2.1k views
  7. அட ராமா! யார் இந்தத் துரோகி? இலங்கையின் சிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரான வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்கள் உலகத் தமிழர்களால் மதிக்கப்படும் ஒருவராவார். 2006 அக்டோபரில் வெளியான குமுதம் தீராநதி இதழில் அவர் அளித்த நேர்காணலில் இந்தியாவும் இலங்கைத் தமிழர்களும் இணைந்து செயல்படவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி இருக்கிறார். அந்த நேர்காணலில் இதுவரை வெளிவராத பல செய்திகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். கேள்வி : இந்திய அமைதிப்படை இலங்கை வந்தபோது இலங்கைத் தமிழர்கள் ஆரவாரமாக அவர்களை வரவேற்றார்கள். ஆனால் விரைவிலேயே காட்சிகள் மாறின. இதற்கு என்ன காரணம்? வ.ஐ.ச. ஜெயபாலன் : அரசியல் காரணங்கள் ஒரு பக்கம் இருக்க. திரைமறைவு வேலைகளும், உலக அரசியல் சதிகளும் இதில் முக்கியப் பங்காற்றின. நிறையப் …

  8. இந்தியாவில் தனித் தமிழ்நாடு கேளுங்கள் என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, இந்திய மத்திய அரசு இலங்கையில் இருக்கும் அரசைப் போல தமிழர்களைக் கொடுமைப்படுத்தவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவின் தம்பி கோத்தபாய, தனித் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லியிருக்கிறார். தமிழ் ஈழம் கேட்கும் போராட்டத்தில் பயங்கரவாதமோ, தீவிரவாதமோ தலையிடக் கூடாது எனும் கருத்து உடையவன் நான். திமுகவினுடைய கருத்தும் இதுதான். நாங்கள் பயங்கரவாதத்துக்குத் தயாராக இல்லை. தமிழ் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும்…

  9. [size=4]யாழிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ்ஸில் நடத்துனருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக பஸ்ஸிலிருந்து விழுந்து இளைஞரொருவர் மரணமாகியுள்ளார். நேற்றிரவு யாழ். பஸ்தியான் சந்திக்கருகில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.[/size] [size=4]கிளிநொச்சி, ஜெயபுரத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு கண்ணன் (வயது 25) என்பவரே இவ்வாறு பலியானவர் ஆவார். இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]கொழும்பு செல்லும் பஸ்ஸில் ஏறி வவுனியா செல்வதற்கு இளைஞர்கள் டிக்கெட் எடுத்துள்ளனர். 180 ரூபா பெறுமதியான டிக்கெட்டை 250 ரூபாவுக்கு நடத்துனர் கொடுத்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கும் நடத்துனருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.[/size] [size=4]இ…

  10. சிறிலங்காவின் வன்னி நடவடிக்கையில் 10 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டுள்ளனர், 25 ஆயிரம் படையினர் காயமடைந்தனர். [செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 30, 2008] வன்னி நடவடிக்கைகளில் 10 ஆயிரம் சிறிலங்கா படையினர் உயிரிளந்துள்ளனர். இவைதவிர தப்பியோடிய மற்றும் காயமடைந்த படையினரின் எண்ணிக்கைகளும் மிக அதிகம். எனவே தற்போது படைப்பலத்தை தக்கவைப்பதற்கு அரசு பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக கொழும்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னிப் படை நடவடிக்கை தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரையிலும் 10 ஆயிரம் படையினர் உயிரிழந்ததுடன் 25 ஆயிரத்துக்கு மேற்ப்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பல ஆயிரம்பேர் உறுப்புக்களை இளந்துள்ளனர். இந்தக்காலப்பகுதியில் 25 ஆயிரத…

  11. திருகோணமலை பாலையூற்று சிறுமி வர்ஷாவை கடத்திச் சென்று கொலை செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் இன்று கண்ணியாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் சாட்சியமொன்றிற்காக அழைத்துச் செல்லும் போது பொலிஸாருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலொன்றில் இடையில் அகப்பட்டே இவர்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இந்த சிறுமி கடத்தல் மற்றும் கொலை வழக்கின் இரண்டு சந்தேக நபர்கள் ஏற்கனவே பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல்களின் போது கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று கொலையுண்டவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த கொலை வழக்கில் மொத்தமாக ஆறு பேர் கைது செய்யப்பட்டிரு…

  12. விடுதலைப் புலிகள் அமைப்பில் எழிலன் இருந்த காலத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்டு வந்த குற்றச்செயல்கள் குறிப்பிட்ட சுவரொட்டி ஒன்று யாழ்.மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, எழிலன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பெரும் பகுதியை ஆட்சேர்ப்பிலேயே செலவிட்டார். யுத்தத்தின் இறுதிநாட்களில் மாபெரும் போர் குற்றங்களில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளின் ஒருசில பெயர்களை சொல்லும்படி கேட்டால் அதில் நிட்சயம் எழிலனது பெயரும் இருக்கும். சிறார்கள் பெண்கள், இளைஞர்ளை கட்டாயமாக படைக்கிணைத்து சனங்களை தப்பிச் செல்ல விடாமல் தடுத்தும் தப்பிச் செல்ல முற்பட்டவர்களை சுட்டுக் கொன்றது போன்ற மூன்று குற்றச்சாட்டுக்களை என்னால் தயக்கமில்லாது எழிலன் மீது மேற்கொ…

    • 6 replies
    • 1k views
  13. இலங்கைக்கு, உதவத் தயார் – சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு! சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவது குறித்துக் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்தது. இவர்கள், நாட்டில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் அவசியமான கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில், இந்த விஜயம் தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் இந்த ஆண்ட…

  14. பொருளாதாரத் தடைகளால்... ரஷ்யாவை, மண்டியிட வைக்க முடியாது – பதில் ஜனாதிபதி ரணில். ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மூன்றாம் தரப்பு நாடுகளை மண்டியிட வைத்துள்ளது என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ஒருபோதும் ரஷ்யா மண்டியிடாது என்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். ரஷ்யா உடனடியாக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்காமல் பேச்சுக்கு உக்ரைன் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மோதல் காரணமாக முழு உலகையும் பிணைக் கைதிகளாக வைத்திருக்க முடியாது எனவே உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்…

  15. சிலரின் தன்னிச்சையான செயற்பாடு விபரீதத்தை ஏற்படுத்தி உள்ளது July 21, 2022 எழுபது ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற ஒரு கட்சியாக நாம் இருக்கும் போது, தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கவலையுடன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற கூட்டம் இடம்பெற்ற போது அங்கு சென்ற டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருடன் எழுத்து மூலம் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறத…

    • 6 replies
    • 414 views
  16. யாழ்ப்பாணத்தில் பயிற்சி முடித்த தமிழ் இராணுவத்தினரின் அணிவகுப்பு! [saturday 2014-09-20 19:00] யாழ். மாவட்டத்தில் இருந்து இராணுவத்தில் இணைந்த இளைஞர் யுவதிகளைக் கொண்ட படையணி ஒன்று, இன்று காங்கேசன்துறையில் அமைந்துள்ள படைத்தளத்தில் பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது. சுமார் 500 வீர வீராங்கனைகளைக் கொண்ட இந்த படையணியில் நூறு பெண்கள் அடங்குகின்றனர். இவர்கள் முறையே பெண்கள் படையணி, பொறியியல் படையணி, பொதுப் படையணி என்பவற்றில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தமிழ் இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை கொழும்பு படைத்தலையைகத்தின் படை அதிகாரி மேஜர் ஜெனரல் அமங்கபொல மற்றும் யாழ் மாவட்ட படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் உதய பெரொ ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். இதனை…

  17. யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதே புலிகளின் திட்டம்: "த நேசன்" ஜஞாயிற்றுக்கிழமைஇ 26 ஓகஸ்ட் 2007இ 07:38 ஈழம்ஸ ஜபி.கெளரிஸ யாழ்ப்பாணக் குடாநாட்டை கைப்பற்றுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கு என்றும் அதற்கான சிறந்த வழியாக அங்குள்ள இராணுவத் தலைமைப்பீடத்தை அகற்ற முற்பட்டுள்ளனர் என்றும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது. த நேசனின் பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்: விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதலில் இருந்து சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறீ கடந்த வாரம் தப்பியிருந்தார். இந்த சம்பவம் பாதுகாப்புத் தரப்பினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்த…

    • 6 replies
    • 1.8k views
  18. சங்கு சின்னமும் அரசியலில் அறமும்! October 11, 2024 சங்கு சின்னத்தை முன்வைத்து பொதுச் சபையினர் ஆங்காங்கே அறம் பற்றி பேச முற்படுவதாகத் தெரிகின்றது. அவர்கள் அவ்வாறு பேசுவது சரியானதா – அதற்கான தார்மீக தகுதி அவர்களுக்கு உண்டா? சங்கு சின்னத்தை ஒரு தேர்தல் தந்திரமாகவே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் எடுத்திருக்கின்றனர். தேர்தல் என்றால் ஒவ்வொரு கட்சியும் தங்களது வெற்றி பற்றியே சிந்திக்கும். இதில், ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சங்கு சின்னத்தை எடுத்திருக்கும் அரசியல் கட்சிகள் தங்களின் நியாயத்தை கூறுகின்றனர். குறிப்பாக, பொதுச் சபையின் சார்பில் பங்கு கொண்ட…

      • Haha
    • 6 replies
    • 475 views
  19. வடக்கு மாகாண அபிவிருத்திக்கான கணிப்புப் பற்றிய கூட்டம் திரு. பாஸ்கரலிங்கத்தின் தலைமையில் இன்று கொழும்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயல்திட்ட நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் சந்திரிக்காவின் செயலணியின் செயலாளர் போன்றோரும் கலந்துகொண்டனர். கூட்டத்தின் ஆரம்பத்திலேயே வடக்கு மாகாண முதலமைச்சரை உரையாற்றுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சரின் உரையில் தெரிவித்திருப்பதாவது, 2003ல் ஒரு தேவைகள் கணிப்பு நடைபெற்றது. பின்னர் 2004ல் சுனாமியும் 2009ல் போரின் முடிவுக்கட்டமும் பல விதமான பாதிப்புக்களையும் அழிவுகளையும் கொண்டு வந்தன. எனவே புதியதொரு கணிப்பு நடைபெறுவ…

  20. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சாணக்கியனுக்கு நாடாளுமன்றத்தில் உயர் பதவி! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இளம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவருக்கு சபாநாயகர் குழுவில் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அமர்வில் பிரசன்னமாகாத சந்தர்ப்பத்தில் அவையை கொண்டு நடத்தும் பொறுப்பு இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தனது நாடாளுமன்ற கன்னி உரையில் நாடாளுமன்றத்தில் மும்மொழியிலும் உரையாற்றிய இரா.சாணக்கியன் பலரது கவனத்தினையும் ஈர்த்திருந்தார். குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்த…

  21. முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் 23 Views முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முறிப்புக் கிராமத்தில் மாபியாக்கள் போல செயற்படும் நான்கு பேர் கொண்ட வன்முறைக் குழு ஒன்று, ஊடகவியலாளர்கள் இருவரை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியதுடன் அவர்களிடம் இருந்த சொத்துக்களையும் அபகரித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இது குறித்து விரிவாக தெரியவருவதாவது, முறிப்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தலைமையிலான குறித்த குழு சட்டவிரோத மரக்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது. அந்தப் பகுதியில் காணப்படுகின்ற தேக்கு மற்றும் முதிரை மரங்களைக் கடத்தும் நடவடிக்கையை வழமையாகக் கொண்டு செயற்ப…

  22. இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கக் கூடாதென உலக நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம கோரிக்கை விடுத்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் உலகின் பல நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், இலங்கையர் களுக்கு புகலிடம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என சர்வதேச நாடுகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிகமாக இலங்கையர்கள் தஞ்சம் கோரும் நாடுகளது உரிய அதிகாரிகளுக்கு இது குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவ

    • 6 replies
    • 2.1k views
  23. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் நீதியரசருமான சி.வி விக்கினேஸ்வரன் இலங்கை அரசியலமைப்பில் காணப்படும் ஓட்டைகள் ஊடாக தமிழ் ஈழம் அமைப்பார் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசியலுக்குள் நுழைந்தமையால் அவர் நல்ல நீதிபதியாக இருந்திருக்க முடியாது. நீதிபதியாக இருந்தவர் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறி வாழவேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்கள் நீதிமன்றில் வழங்கிய தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்களால் பிரச்சினைகளுக்கு உள்ளாவார்கள் என்றும் விமர்வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு வெளிநாடுகளில் சென்று குடியேறாமல் அரசியலுக்குள் நுழையும் நீதிபதி உண்மையானவராக இருக்க முடியாது என கருத்து தெரிவ…

    • 6 replies
    • 1.8k views
  24. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தங்கை கணவர் திருச்செந்தூரில் சஷ்டி விரதம் மேற்கொண்டுள்ளார்.தமிழகத்தில் புகழ் பெற்ற முருகன் ஸ்தலங்களில் முதன்மையானதாக உள்ளது திருச்செந்தூர் முருகன் கோயில், மற்றும்திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் கடந்த 18 ம் தேதி சஷ்டி விழா துவங்கியது. ஆண்டுதோறும் சிங்கபூர், மலேசியா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு வாழ் தமிழர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு விரதம் இருந்து, பக்தர்களுக்கு தினமும் அன்னதானமும் வழங்கி வருகின்றனர். ராஜபக்சவின் சகோதரி கணவரான திருகுமரன் நடேசன் கடந்த 22 ஆண்டுகளாக திருச்செந்தூர் சஷ்டி விழாவில் கலந்து கொண்டு விரதம் இருந்து வருகிறார். இந்த நிலலையில், 23 வது ஆண்டாக கடந்த 17 ம் தேதி திருச்செந்தூர் வந்த அவர்…

    • 6 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.