ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
விமானப்படைப் பெண்ணின் தேசிய சாதனையை முறியடித்தார் யாழ்.வீராங்கனை! Published on June 10, 2011 இலங்கை மெய்வன்மைச் சங்கத்தினால் நடத்தப்படும் கனிஷ்ட பிரிவுக்கான தடகளப் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவி கே.தனுஷா தேசிய ரீதியில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். இவர் 20 வயதுக்குட்பட்டோருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 3 மீற்றர் உயரத்தைத் தாண்டியதன் மூலம் தேசிய ரீதியில் இந்தச் சாதனையை ஏற்படுத்தி முதலிடம் பெற்றார். இதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டு விமானப்படை வீராங்கனை ஒருவர் இந்தப் போட்டியில் 2.90 மீற்றர் உயரத்தைத் தாண்டியதே தேசிய ரீதியில் சாதனையாக இருந்து வந்தது. அந்தச் சாதனையை சே.தனுஷா நேற்று முறியடித்துச் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தார். கனிஷ்ட…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
புதன் 30-05-2007 07:04 மணி தமிழீழம் [மயூரன்] வடக்கைக் கைப்பற்றும் நோக்கம் தமக்கு இல்லை - இராணுவத் தளபதி சரத்பொன்சேகா வடக்கைக் கைப்பற்ற ஜயசிக்குறு போன்று பாரிய படைநடவடிக்கையை ஒன்றை மேற்கொள்ளும் திட்டம் தமக்கு இல்லை என சிறீலங்காவுக்கான தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றி பின்னர் வடக்கில் புலிகளைப் பலவீனமடையச் செய்து அதன்பின்னர் பேச்சுவார்த்தைகளுக்கு இழுப்பதே தமது மூலோபாயம் என சரத்பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கில் விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்ற 5 தொடக்கம் 6 மாதங்கள் தேவைப்படுகின்றன. இதேநேரம் வடக்கைக் கைப்பற்றும் நோக்கம் தமக்கு இல்லை. வடக்கில் ப…
-
- 5 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா இராணுவம் ஏற்க மறுத்த இராணுவத்தினரின் சடலங்கள் விடுதலைப் புலிகளால் இன்று உரிய மரியாதைகளுடன் எரியூட்டப்பட்டுள்ளன.மன்னாரி
-
- 5 replies
- 1.7k views
-
-
கிறீஸ் பூதம் பின்னணியில் கோத்தபாய ராஜபக்ஷ அடித்துக் கூறுகிறார் மங்கள படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவிற்கமைய படைத்தரப்பின் புலனாய்வுத்துறையினரே மர்ம மனிதர்களின் (கிறீஸ் பூதம்) பின்னணியில் இருக்கின்றனர்.இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கிறீஸ் பூதம் களேபரத்தை இட்டு கருத்துத் தெரிவித்த மங்கள சமரவீர மேலும் தெரிவிக்கையில்,வெள்ளை வாகனங்களைக் கொண்டு முன்னர் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த படைத்தரப்பின் புலனாய்வுத்துறையினர் தற்போது மர்ம மனிதர்கள் எனும் பேரில் பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். மர்ம மனிதர்கள் என பொதுமக்களால் பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் ப…
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு: தமிழக ஊடகம் தகவல் [புதன்கிழமை, 13 யூன் 2007, 14:04 ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைக்கு இந்தியா இரகசிய உதவி செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தமிழ் ஊடகமான தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: இலங்கையில் உள்நாட்டுப் போர் வலுத்து வரும் நிலையில், இலங்கை அரசின் பக்கம் இந்தியா, மெல்ல மெல்ல சாயத் தொடங்கியுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய நிறுவனங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவி அளிக்கும் என தெரிகிறது. இலங்கையில் அமைதி முயற்சி பலன் தராததால், மீண்டும் உள்நாட்டுப்போர் ஏற்பட்டுள்ளது. இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளும் கடும் போர…
-
- 5 replies
- 1.6k views
-
-
10 DEC, 2023 | 11:03 AM நாடு முழுவதும் நேற்று (09) மாலை திடீரென மின் துண்டிக்கப்பட்டதற்கு, கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்புக்கு மின்னல் தாக்கியமையே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மின்சக்தி அமைச்சும் இலங்கை மின்சார சபையும் இரு வேறு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த கூறியுள்ளார். நேற்று மாலை 5.15 மணியளவில் நாடு முழுவதும் திடீரென மின் துண்டிக்கப்பட்டு, பல பிரதேசங்களில் இரவு 11.30 மணியளவிலும், வேறு சில இடங்களில் நேரம் தாமதமாகவும் மீண்டும் மின் விநியோகிக்கப்பட்டு, நிலைமை இயல்புக்கு திரும்பியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/1713…
-
- 5 replies
- 710 views
- 1 follower
-
-
இலங்கையில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசை ஆதரிக்காதீர்கள். ஆதரித்து கூட்டுக் குற்றவாளியாகாதீர் என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். வைகோ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, எழுதி உள்ள கடிதம்: இலங்கையின் இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்வதற்கு அனைத்துவிதமான ஆயுத உதவிகளையும், நிதியையும் அள்ளித்தந்ததுடன், இராணுவ உதவிகளையும் இந்திய அரசு செய்தது, உலகத் தமிழர்களின் நெஞ்சில் பலத்த ரணத்தையும், தாங்க முடியாத துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த மூன்று உறுப்பினர் விசாரணைக் குழு, சுட்டிக் காட்டி உள்ளது. ஆன…
-
- 5 replies
- 1.8k views
-
-
இலங்கையில் தமிழருக்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகள் மீது ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐநா. மூலம் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்: - இலங்கை போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் - இலங்கையில் நடைபெறும் அநீதிகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஈழத் தமிழர் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே தீர்மானித்துக் கொள்ள வகை செய்யும் தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் …
-
- 5 replies
- 984 views
- 1 follower
-
-
42ஆவது தேசியவிழா இறுதிநாள் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேனவுடன் – வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார் ஆரம்ப விழாவை வட மாகாண முதலமைச்சர் பகிஸ்கரித்திருந்த நிலையிலேயே இன்று தேசிய விளையாட்டுப் போட்டியின் நிறைவு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த 29 ஆம் திகதி முதல் 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் பல்வேறு தடகளப் போட்டிகள் இடம்பெற்றன. தேசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆரம்ப விழாவை பகிஸ்கரித்திர…
-
- 5 replies
- 912 views
-
-
சிங்களவர்கள் அதிகளவில் பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் குமார வெல்கம 14 மார்ச் 2013 இலங்கையில் சிங்களவர்கள் குறைந்து வருவவதாகவும் இதனால் சிங்களவர்கள் அதிகளவில் பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் எனவும் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழில் செய்யும் அதேவளை திருமணம் செய்து பிள்ளைகளையும் அதிகளவில் பெற்றெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற போக்குவரத்துச் சபைக்கான புதிய நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஜனத் தொகையில், சிங்களவர்கள் குறைந்து கொண்டு வரும் நிலையில், இளைஞர்கள் தொழில் புரிந்து கொண்டு, எதிர்கால சிங்கள சந்ததிகளை உருவாக…
-
- 5 replies
- 428 views
-
-
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த இளைஞர் ஒருவருக்கு மல்லாகம் நீதிமன்றம் மூவாயிரம் ரூபா தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த குறித்த இளைஞர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பொலிசாரால் கடந்த திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்தே குறித்த இளைஞருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 11.45 மணியளவில் சுன்னாகம் நகரப் பகுதிக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் அவருடன் வந்தவரை இறக்கிவிட்டு அப் பகுதியில் பல தடவைகள் சுற்றியுள்ளார். இதனை அப்பகுதியில் ரோந்தில் ஈடுப…
-
- 5 replies
- 788 views
-
-
கோடரி வெட்டுக்கு இலக்காகி கர்ப்பிணிப் பெண் படுகொலை ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண், கோடரி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர் 7 மாத கர்ப்பிணியான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவர் மீதே இவ்வாறு கோடாரி வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு குழந்தையின் தயான இப் பெண்ணின் வீட்டுக்குள், திருடும் நோக்கோடு இன்று மதியம் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள், கோடாரியால் கொத்தியுள்ளனர். இரத்த வெள்ளத்தில் இருந்த பெண்ணைக் கண்ட அயலவர்கள், உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக, ப…
-
- 5 replies
- 2.2k views
-
-
இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் வாக்குறுதி அளித்தபடி, 13வது திருத்தச்சட்டத்துக்கும் அப்பாற்பட்ட அரசியல்தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம் இந்திய தேசிய பாதகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=21372
-
- 5 replies
- 580 views
-
-
திங்கட்கிழமை, 24, ஆகஸ்ட் 2009 (20:59 IST) தமிழர்களைக் கொண்டு இயங்கும் யாழ்ப்பாணம் வங்கி இலங்கையின் வடபகுதி நகரான யாழ்ப்பாணத்தில் அனைத்து ஊழியர்களையும் தமிழர்களாகவே கொண்டு இயங்கும் கிளை ஒன்றை திறக்க கொழும்பு சம்பத் வங்கி முடிவு செய்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்த பிறகு வட பகுதியில் வங்கிக் கிளையை திறக்கும் முதல் வங்கி இது. இந்த வங்கியின் ஊழியர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளது இந்த வங்கி. வங்கிக்கு ஆள்களைத் தேர்வு செய்ய சுமார் 2000 மனுதாரர்களிடம் நேர்முகப் பேட்டி நடத்தி தகுதிவாய்ந்த 27 பேரை வேலைக்கு தேர்வு செய்துள்ளது வங்கி நிர்வாகம். இந்த 27 பே…
-
- 5 replies
- 2.2k views
-
-
வடமாகாண முதலமைச்சரின் செயற்பாட்டிற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம். அத்துடன் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொடும்பாவி எரிப்போம் என தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி உறுப்பினர் க.ஞானசீலன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி என்ற வகையில் வடமாகாண முதலமைச்சரின் செயற்பாட்டிற்கு நாம் எமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். முதலமைச்சர் இரண்டு நீதிபதிகளையும், ஒரு அரச உத்தியோகத்தரையும் வைத்து இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தியிருந்தார். …
-
- 5 replies
- 419 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பெருமைப்படுத்தியும் அதீதமாக புகழ்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் நாடாளுமன்றில் ஓர் அறிக்கையொன்றை விடுத்து இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். பிரபாகரனின் பிறந்த நாள் இன்றாகும், நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியத்தை நியாயப்படுத்தியும் மறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் போராளிகளையும் மாவீரர் தினத்தில் நினைவுகூர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் பேசினார். இவரது உரையை அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டித்தனர். பிரபாகரன் தமிழ்,சிங்கள இனத் தலைவர்கள் பலர் கொலை செய்யப்பட காரணமாக இருந்தாரென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாய…
-
- 5 replies
- 1.2k views
-
-
நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் நிலைமையைப் பொறுத்து படைகளை அனுப்ப இந்தியப் பிரதமருக்கு அதிகாரம் இருப்பதாக இராணுவ ஆய்வாளரும், இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியுமான கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போரில் இந்தியப் படையினர் நேரடியாகப் பங்கெடுத்தது தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைத் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்கக் கோரி இந்திய உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது, அல்லது சில நெருக்கடியான நிலைமைகளின் போது படைகளை அனுப்பும் அதிகாரம் பிரதமருக்கு உள்ளது. 1989ல் மாலைதீவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்ட போது, அந்த நாட்டு அரசாங்கம் …
-
- 5 replies
- 478 views
-
-
அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேருக்கு விளக்கமறியல் அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது கடந்த 20ஆம் திகதி இரவு அருண் சித்தார்த் தலைமையில் பெண்கள் அடங்கிய 7 பேர் கொண்ட வன்முறை கும்பல் தாக்குதல் மேற்கொண்டது. பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் அருண் சித்தார்த், அவரது மனைவி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 06 பேரையும் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களில் ஒருவருக்கு கடுமையான எச்சரிக…
-
- 5 replies
- 1.3k views
-
-
பயங்கரவாத தடை தட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விபூசியாவின் அம்மாவுக்கு இன்றும் பிணை வழங்காத நிலையில் அம்மாவுக்காக காத்திருந்த விபூசிகாவின் பூப்புனித நீராட்டு விழா அம்மா இன்றிய நிலையில் நடந்தது. தனது பூப்புனித நீராவிட்டு விழாவுக்காக அம்மா பாலேந்திரன் ஜெயக்குமாரியை பிணையில் அனுப்புமாறு விபூசிகா ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதம் எழுதியிருந்தாள். இந் நிலையில் விபூசிகாசின் தயார் ஜெயக்குமாரிக்கு இன்று பிணை வழங்க நீதிமன்றம் மறுத்திருந்தது. தனது தயார் பூப்பூனித நீராட்டு விழாவுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்த விபூசிகா இன்று ஏமாற்றம் அடைந்தாள். கிளிநொச்சியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் சிஐடியினரால் சேர்க்கப்பட்ட விபூசிகாவின் பூப்புனித நீராட்டு விழா இன்று இடம்பெற்ற…
-
- 5 replies
- 2.9k views
-
-
உத்தியோகபூர்வ பயணயமாக சீன சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந்நாட்டு ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் இறுதியில் இரு நாடுகளுக்குமிடையேயான 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பண்டைக்காலத் தொடர்புகளை இன்னும் வலுவாக்கும் வகையில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சுகாதாரம், அறிவியல், கல்வி, சமூகம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. http://www.malarum.com/article/tam/2015/03/26/9325/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8…
-
- 5 replies
- 998 views
-
-
கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் : மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் ! NO COMMENTS பௌத்தமதகுரு ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் மற்றுமொரு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை கடுமையா சாடியுள்ளார். மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் மிகப்பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் என குறிப்பிட்டுள்ளார். கோட்டபயவிடம் நிர்வாகத் திறமையிருக்கவில்லை தனக்கு யாரால் நன்மை கிடைக்கும் என கருதினாரோ அவர்களையே கோட்டபய தன்னை சுற்றிவைத்த…
-
- 5 replies
- 458 views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி பலியான மன்னார் மாவட்ட இயேசு சபை இயக்குனர் அருட்தந்தை நிக்கலஸ்பிள்ளை பாக்கியறஞ்சித் அடிகளாரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு அகவணக்கம் செலுத்தினர். மேலும் வாசிக்க
-
- 5 replies
- 1.2k views
-
-
வெலிஓயா மற்றும் மன்னார், வவுனியா களமுனைகளில் பலியான விடுதலைப்புலிகளின் 14 உடலங்களை இராணுவம் அனுராதபுரத்தில் வைத்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைந்துள்ளது. கடந்த வாரமும் 9 புலிகளின் உடலங்களை இராணுவம் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்..! செய்தி: ரெயிலிமிரர்
-
- 5 replies
- 3.3k views
-
-
18 MAY, 2025 | 02:41 PM நான் உயிருடன் இல்லாவிட்டாலும், ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் . இதுவே என்னுடைய ஒரே ஆசை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மே 19 ஆம் திகதி போர் வெற்றி நாள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215060
-
-
- 5 replies
- 484 views
- 2 followers
-
-
Colombo (News 1st) எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்ட வேட்பாளராக சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்குவதற்கு TELO எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானித்துள்ளது. TELO சார்பில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் தலைமைக்குழு உறுப்பினருமான சுரேன் என்றழைக்கப்படுகின்ற சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்குவதற்கு கட்சி தீர்மானித்ததாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று அறிவித்துள்ளார். யாழ். தேர்தல் மாவட்டத்தில் ரெலோவிற்காக ஒதுக்கப்பட்ட ஒற்றை ஆசனத்தை நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அவருக்கு வழங்குவதற்குத் தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்டவர…
-
- 5 replies
- 601 views
-