Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் தொழில்செய்யும் சீனர்களுக்கு, சீனாவில் இருந்து விசேடமாக சிகரட் கொண்டுவர கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நிதியமைச்சில் இன்று (30) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார். https://newsline.lk/news/6690-2019-05-30-12-24-39?fbclid=IwAR1599cl5xSFvK8vlMfoxDDJraf-IhAFoADkRFcD-QnSwe_YHz23OuXu9_Y

    • 5 replies
    • 1.5k views
  2. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை தொடர்பில் இலங்கை பதற்றமடையவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கையினால் இலங்கை அரசாங்கத்தில் அதிர்வுகள் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=140666&category=TamilNews&language=tamil

  3. தமிழர் உரிமைகள் பற்றி பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்குளை அதிக பணம் கொடுத்து வாங்கிய உரிமைகளை முஸ்ஸிங்களுக்கு தாரைவார்க்க முனைகின்றனர். இந்தியாவின் நெறிப்படுத்தலுக்கு இணங்க கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இந்தியா அரசு கோடிக்கணக்கில் பணம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன. பெருமதியே இல்லாத ஒரு மாகாண சபைத் தேர்தலுக்காக தமிழர்களின் உரிமைகளை அடைமானம் வைத்து வைத்து வெளிநாடுகளை திருப்தி செய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களை பிழையான பாதையில் வழிநடாத்திச் செல்கின்றது. அதனடிப்படையில், மூன்று மாவட்டத்திலும் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளர்களுக்கு 3 இலட்சம் ரூபாபணம் வழங்கப்பட்டதாக தெரியவருகிறது. அதுமாத்திரமல்ல தற்ப…

  4. [size=4]உஷ்.. அப்பப்பா, அக்டோபரில் கருணாநிதி தலைமையில் மீண்டும் டெசோ கூட்டம்![/size] [size=4]வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் டெசோ கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, [/size] [size=4]திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் வருகிற அக்டோபர் 3ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் டெசோ கூட்டம் நடைபெறும். இதில் டெசோ உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்…

  5. இலங்கை பல பாடங்களை புகட்டியுள்ளது-பான்கீமூன் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதிகள் முறையாக செயற்பட்டிருந்தால் அதிகமான மனித உயிர்களை யுத்த களத்தில் பாதுகாத்திருக்க முடியும் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பான் கீ மூன் சர்வதேச உறவுகள் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் ‘நிலைபேறான சமாதானம்-நிலை பேறுள்ள அபிவிருத்தி இலக்குகளை எட்டுதல்’ எனும் தலைப்பில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘ இலங்கை எமக்கு பல பாடங்களை புக…

  6. யாழில் 8 வயது சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்த 65 தாத்தா கைது By Priyarasa 2013-01-31 10:00:49 யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய, குறித்த பாடசாலையில் கடமையாற்றும் காவலாளியொருவர் பெற்றோரால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை வளாகத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். சம்பவத்துடன் தொடர்புடைய 65 வயதுடைய காவலாளி நீண்டகாலமாக பாடசாலையில் கடமையாற்றியுள்ளார். சம்பவத்தைக் கேள்வியுற்ற ஏனைய மாணவர்களின் பெற்றோர் உடனடியாக பாடசாலைக்கு வருகை தந்ததுடன் காவலாளியை தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெ…

  7. 'காணாமல் ஆக்கப்பட்டோர்' என எவரும் இலங்கையில் இல்லை.! "இலங்கையில் 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்' என்று எவரும் இல்லை. அப்படிக் கூறப்படுவோர் போரில் உயிரிழந்திருக்கலாம் அல்லது வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் அல்லது தனிப்பட்ட நபர்களினால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தவிசாளரும் அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என்று தமிழ்த் தரப்பினர் கூறும் விவகாரத்துடன் அரசுக்கும் இராணுவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களையும், இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்களையும் புனர்வாழ்வின் பின்னர் அர…

    • 5 replies
    • 1k views
  8. சிவம் கச்சாய் குமரன் சர்ச்சை : பொங்கி எழுந்த மலையக இளைஞர்கள் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் மலையக மக்கள் அடங்கலாக தமிழ் மக்களை இழிந்த வார்த்தை பிரயோகத்தைப் பயன்படுத்தி தூசித்தமை தொடர்பில் கச்சாய் சிவம் குமரன் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கை வைத்திருக்கும் நபருக்கு எதிராக ஜேர்மன் தூதகரத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இழிந்த சொற் பிரயோகங்களை பயன்படுத்தி, பேஸ்புக் கணக்கொன்றின் ஊடாக காணொளிகளை பதவிட்டமை குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டு, மலையக இளைஞர் தமிழ் சங்கத்தினர் இந்த முறைப்பாட்டு கடிதத்தை கையளித்துள்ளனர். சமூகத்தின் சுபீட்சத்தை மோசமடையச் செய்யும் இவ்வாறான காணொளிகள் வெளியிடப்படுவதை தடைசெய்வதற்கு ஜேர்மன் தூதரகம் நடவடிக்கை எடுக்க வ…

  9. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அதிகாலையில் வெட்டிக்கொலை!-அச்சுவேலியில் பயங்கரம்!! [sunday, 2014-05-04 08:12:17] யாழ்ப்பாணம், அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த மர்மநபர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை வாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் நிர்குணானந்தம் அருள்நாயகி (50), யசோதரன் மதுஷா(27), நிர்குணானந்தம் சுபாங்கன்(19) ஆகியோரே பலியானவர்களாவர்களாவர். இந்தச் சம்பவத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான நிர்குணானந்தம் தர்மிகா(25),த.யசோதரன்(30) ஆகியோர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் சடலங்கள் அச்சுவேலி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள…

    • 5 replies
    • 905 views
  10. டெல்லி: நரேந்திர மோடியின் பதவியேற்பில் கலந்து கொள்ள கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை சமாளிக்கும் வகையில் தம்முடன் இலங்கை வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரனை அழைத்துவர அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் 26-ந் தேதி நடைபெறும் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொள்கிறார். ஆனால் ஒட்டுமொத்த தமிழகமே மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்ள கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் எதிர்ப்பை தணிக்கும் வகையில் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடமாகாணத்தின் முதல்வரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விக்கினேஸ்வரனை தம்ம…

    • 5 replies
    • 799 views
  11. இலங்கை மலையக தமிழர்கள்: 200 வருடங்களில் "தோட்டக்காட்டான்" பெயரே மிஞ்சியது ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ''எங்களுக்கு ஒரு முன்னேற்றமும் இல்லை. என்னதான் இருந்தாலும் தோட்டக்காட்டான் என்ற பெயரைத்தான் வாங்கியுள்ளோம். பிள்ளைகள் போறதுக்கு பாடசாலை இல்லை. எங்களுக்கும் படிக்க வசதி இல்லை. சரி பிள்ளைகளை படிக்க வைக்கலாம்னு பார்த்தால், அதுக்கும் வசதி இல்லை" - கவலைப்படும் இலங்கை மலையக தமிழர்களின் குமுறல்கள் இந்த வரிகள். "முன்னேற்றம் ஒன்று இருந்தால் தானே பிள்ளைகளை படிக்க வைக்க முடியும் முடியும். யார் போனாலும் தோட்டக்காட்டன்னுதான் அழைக்கிறாங்க. அந்த ப…

  12. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியும் அரச பகுதியும் ஒரு நாட்டில் இணைந்து இருக்க வாய்ப்பில்லை: ஜனாதிபதியின் ஆலோசகர் ஜபுதன்கிழமைஇ 28 மார்ச் 2007இ 22:06 ஈழம்ஸ ஜது.சங்கீத்ஸ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரதம ஆலோசகரும்இ ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்காவுக்கான புதிய தூதுவராக பரிந்துரைக்கப்படவிருப்பவரு

    • 5 replies
    • 1.7k views
  13. விடயம்: சிறீலங்கா சனதிபதியின் வத்திக்கான் பயணம் நோக்கம்: சிறீலங்கா சனதிபதி எதிர்வரும் வெள்ளி 20.04.07ல் வத்திக்கானில் புனித பாப்பரசரை சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது சிறீலங்காவின் மனிதவதை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான கவன ஈர்ப்பினைக் கோரும் நடவடிக்கை. படுகொலைகள் - காணமல் போதல் உட்பட்ட மனிதவதைகளை உடனடியாக சிறீலங்கா நிறுத்தல் வேண்டுமெனக் கோரியும், சர்வதேசக் கண்காணிப்பை ஏற்றுக்கொள்ளல், பயங்கரவாத தடுப்புச்சட்டம், அவசரகாலச் சட்டம், ஏ-9 வீதி மூடப்படல் போன்ற விடயங்களை நீக்கும் உறுதிமொழியை சிறீலங்காவிடமிருந்து புனித பாப்பரசர் கோரல் வேண்டுமெனக் வேண்டுதல். வழிமுறை: புனித பாப்பரசருக்கு நேரிடையாகவும், வாழும் நாடுகளில் உள்ள வத்திக்கானிற்கான தூதுரகம்…

  14. கூட்டமைப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி தர வேண்டும் – சபாநாயகருக்கு கடிதம் APR 11, 2015 | 1:45by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் தேர்தல் சட்டம் மற்றும் சிறிலங்கா மற்றும் கொமன்வெல்த் நாடாளுமன்ற விதி முறைகளுக்கு அமைய, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கே வழங்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரியுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலர் கே.துரைராஜசிங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர், கையெழுத்திட்டு, சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். “ 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ந…

    • 5 replies
    • 603 views
  15. கலாநிதி தேவநேசன் நேசையா, தேசமான்ய விருதை ஜனாதிபதியிடம் கையளித்தார்… January 4, 2019 ஜனநாயகத்தை மீறியமைக்காக கலாநிதி தேவநேசன் நேசையா தனக்கு வழங்கப்பட்ட தேசமான்ய விருதை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக நேற்று கையளித்துள்ளார். ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணான வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருவதாக கவலை தெரிவித்திருக்கும் ஓய்வுபெற்ற சிவில் சேவை அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா கடந்த வருடம் தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட தேசமான்ய விருதுக்கான பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்பப்போவதாக அறிவித்திருக்கிறார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் கலாநிதி நேசையா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பகிரங்கக் கடிதமொன்றை எழுதிய…

    • 5 replies
    • 1.2k views
  16. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு திடீரென வருகை தந்துள்ளார். இவரின் வருகையின் நோக்கம் குறித்து எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை. எனினும் மு.ப. 10.30 மணிக்கு அவர் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு செல்கிறார் என அறியமுடிகிறது. இதேவேளை ஜனாதிபதி குறித்த செய்திகளை சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. http://www.malarum.com/article/tam/2015/05/26/10263/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%A…

    • 5 replies
    • 1.3k views
  17. 16 JUN, 2024 | 01:25 PM திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா நேற்று சனிக்கிழமை (15) இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு இடையிலான 42 Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். நேற்று அதிகாலை 02.00 மணிக்கு நீந்தத் தொடங்கி முற்பகல் 11.00 மணியளவில் தனது நீச்சல் பயணத்தை நிறைவு செய்துள்ளார். பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த இலங்­கையின் எட்­டா­வது நப­ரா­கவும், பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த உலகின் முத­லா­வது இஸ்லாமிய நப­ரா­கவும் ஹஷன் ஸலாமா திகழ்கிறார். தரம் 10இல் கல்வி கற்கும் 15 வய­துடைய இவர், கடந்த மூன்று மாதங்­க­ளாக இச்சாதனை முயற்­சிக்­கான தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டு வரு…

  18. யார் என்ன சொன்னாலும் பிரபாகரனின் மரணத்தில் இந்தியாவின் பங்கு அதிகம் இருக்கிறது. அரசாங்கம் தாங்கள் கொன்றதாகச் சொன்னாலும் 75 வீதம் வெளிநாடுகளின் பங்கு இந்த மரணத்திலும் அழிவிலும் இருந்தது என்பதே உண்மையான விடயமாகும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். துறைநீலாவணை சித்திவிநாயகர் வித்தியாலயத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தமிழர்கள் விட்ட தவறுகளைப் பற்றிச் சிந்திக்காது நாம் அரசியல் செய்ய முடியாது. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரில்லை. பிரபாகரனும் அரசியல் அறிவில்லாதவராகவே இருந்தார். இல்லையானால் இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருப்பார் எனவும் கிழக்கு மாகாண…

    • 5 replies
    • 1.1k views
  19. இன்னும் 2 வாரங்களில் மடுப்பகுதியை கைப்பற்றுவதற்கு இராணுவம் கங்கணம் இனிவரப்போகும் போர் வித்தியாசமானதாக இருக்குமாம் - இக்பால் அத்தாஸ் [Tuesday January 22 2008 06:29:56 AM GMT] [யாழினி] இன்னும் இரண்டு வார காலத்தில் மடுப்பிரதேசத்தைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற இலக்கோடு, இராணு வத்தினர் அப்பகுதியில் நடவடிக்கை களை முடுக்கிவிட்டிருக்கின்றனர். இப்போதுள்ள நிலையில் இனிவரப் போகும் போர் வெகு வித்தியாசமான தாகவும் மிகப்பயங்கரமானதாகவும் இருக்கும். இவ்வாறு தெரிவிக்கின்றார் பிர பல இராணுவ ஆய்வாளரும் விமர்சகருமான இக்பால் அத்தாஸ்."சண்டே ரைம்ஸ்" பத்திரிகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இதழில் வெளி வந்த தமது பத்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டி ருக…

    • 5 replies
    • 2.7k views
  20. சனி 02-02-2008 15:51 மணி தமிழீழம் [முகிலன்] பதவி பறிபோகலாம் அச்சத்துடன் நாடு திரும்பினார் ரோஹித பொகொல்லாகம சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகொல்லாகம, பெரும் குழப்பத்திற்கும் மத்தியில் அவசரமாக நாடு திரும்பியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் அமைச்சர் ரோஹித பொகொல்லாகம தங்கியிருந்த வேளையில், பதில் வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெயராஜ் பெர்னான்டோப்புள்ளேயை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நியமித்ததோடு, அவுஸ்திரேலியா, கனடா, ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிற்கான தூதுவர்களையும் நியமித்திருந்தார். இதனால் தனது பதவி பறிபோகக்கூடும் என அச்சமடைந்திருக்கும் அமைச்சர் ரோஹித பொகொல்லாகம, அவசரமாக நாடு திரும்பியுள்ளார். http://www.pathivu.com/index.php?…

    • 5 replies
    • 2.3k views
  21. மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிற்கு எதிராக லண்டனில் வழக்கு லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில், பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர விலக்குரிமைக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர விலக்குரிமையை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் நீக்க வேண்டும் என்றும், அதன்மூலம் அவருக்கு எதிராக லண்டனில் சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என்றும் உலகத் தமிழர் பேரவை சார்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இராஜதந்திர விலக்குரிமையை அனுப்பும் நாட்டினால் மட்டுமே நீக்க முடியும் என்ற போதும், இராஜதந்த…

    • 5 replies
    • 593 views
  22. ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ரணில் அழைப்பு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்காக 13 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய ஆவணத்தை தயாரித்துள்ள ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன், கட்சிப் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு சந்திப்பைப் கோரினார். அவர் நேரத்தை வழங்கியதும் அவரைச் சந்திப்போம் என தெரிவித்துள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், ”முன்வைக்கப்பட்ட 13 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் நிராகரிப்பதால், தமிழ் கட்சிகள் மன…

    • 5 replies
    • 673 views
  23. [size=5]தமிழர் விவகாரத்தில் அடுத்தது என்ன என்ற தமிழர்களின் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் கேட்டதால், தன்னை பதவியில் இருந்து அரசாங்கம் மீள அழைத்துள்ளதாக மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் கல்யாணந்த கொடஹே அவர்கள் கூறியுள்ளார்.[/size] [size=4]இது குறித்து பிபிசியிடம் பேசிய தூதுவர் கொடஹே அவர்கள், '' ஜே.ஆரின் அனைத்துக் கட்சிக் கூட்டம், திம்பு பேச்சுவார்த்தை, பிரேமதாஸ- புலிகள் பேச்சுவார்த்தை, சந்திரிகா மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் அமைதி முயற்சிகள் ஆகியவற்றை தொடர்ந்து, தற்போதைய அரசாங்கம் அனைத்துக் கட்சிக் குழு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகியவற்றை காண்பித்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் நாடாளுமன்றதில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்…

  24. செம்மணி மனித புதைகுழி: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத் மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த குழுவினர் செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடனும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத…

  25. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இறுக்கிப் பிடித்த இலங்கையின் நாணயக் கொள்கையினை தளர்த்தி விட மத்திய வங்கி தீர்மாணித்துள்ளது. இதன் மூலம் தற்போது நிலவும் உயர் வட்டி வீதங்களைக் குறைத்து, பணவீக்கத்தினை கட்டுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியினை தூண்ட எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் தினைக்களம் நேற்று தெரிவித்துள்ளது. வணிக வங்கிகளிற்காக மத்திய வங்கி விதித்து வரும் மீள் கொள்வனவு (7.5%) மற்றும் நேர் மாற்று மீள் கொள்வனவு (9.5%) வீதங்களை 25 புள்ளிகள் அடிப்படையில் குறைப்பதன் மூலம் நாணயக் கொள்கையினை தளர்த்தி வட்டி வீதங்களைக் குறைக்க எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, சாதாரன வைப்புக்கள் (9.8%), நிலையான வைப்புக்கள் (12.78%) மற்றும் கடன்களிற்கான (15.38%) வணிக வ…

    • 5 replies
    • 944 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.