ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143622 topics in this forum
-
கஞ்சா ஏற்றுமதியை... சட்ட பூர்வமாக்கும் நடவடிக்கையை, ஆரம்பித்தது... இலங்கை ! கஞ்சா (Hemp) ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்களை உருவாக்க அமைச்சரவைப் பத்திரம் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கஞ்சா உற்பத்தி மூலம் நாடு பாரிய ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் எதிர்வரும் 5ஆம் திகதிக்குள் இதற்கான ஆவணத்தை வகுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு மருத்துவம் மற்றும் ஆயுர்வேத நடைமுறைகளை மேம்படுத்துவதன் மூலம்; இலங்கையினால் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெர…
-
- 5 replies
- 327 views
- 1 follower
-
-
இலங்கையின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைவரப் போக்கைத் தீர்மானிக்கும் திங்களாக இந்த நவம்பர் மாதம் அமையப்போகின்றது. நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று இந்த மாதத்துடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. நாட்டின் பாதுகாப்புச் செலவினத்தை இரட்டிப்பாக்கி அவரது அரசு சமர்ப்பிக்கப் போகும் வரவு-செலவுத் திட்டம் நாளை மறுதினம் நாடாளுமன்றில் பகிரங்கப்படுத்தப்பவிருக்கி
-
- 5 replies
- 2.7k views
-
-
கரு ஜயசூரிய மற்றும் ரணில் விக்ரமசிங்கவுடன் தாம் மோதவில்லை எனவும் அமரிக்காவின் CIA மற்றும் பிரித்தானியாவின் MI6 போன்ற புலனாய்வு துறைகளுடன் மோதினோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என சபாநாயகர் அறிவித்த போது கைகளை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வெளிநாடுகளின் தூதுவர்கள் தற்போது சுகமான நித்திரையில் இருப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில இதனை குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்திடம் இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் செய்தமை தாய…
-
- 5 replies
- 1.3k views
-
-
கொச்சிக்கடை அந்தோனியார் கோயிலருகில் இன்றும் ஒரு குண்டு வெடித்திருக்கிறது. வாகனத் தரிப்பிடத்தருகில் வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிஎஉந்த சிறிய வெண்ணிற வான் ஒன்று வெடித்துச் சிதறும் ஒளிநாடா வெளிவந்திருக்கிறது. தற்கொலைத் தாக்குதலாகவோ அல்லது இராணுவத்தால் வெடிக்கவைக்கப்பட்ட வானாகவோபிருக்கலாம்.
-
- 5 replies
- 950 views
-
-
ஒரே நாளில் இருவேறு ஆலயங்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்; சிலைகள் உடைப்பு இனந்தெரியாத நபர்கள் சிலர் மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய நவக்கிரக விக்கரங்களை உடைத்ததுடன், சில விக்கரகங்கள் வீதிகளிலும், ஆலய கிணற்றிலும் போட்டு விட்டு சென்றுள்ளனர். ஆலயத்தின் நவக்கிரகத்திலுள்ள விக்கிரகங்கள், ஆஞ்சநேயர், நந்தி, பலிபிடம் அடங்களாக 13 சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. வழக்கம் போல் அதிகாலை ஆலயத்திற்கு சென்ற ஆலய பரிபாலன சபைச் செயலாளர் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு கீழே கிடைப்பதை கண்டுள்ளார். இதன்பின்னர் நிருவாக சபையினர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் தெரியப்படுத்தியதுடன், பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவித்து பொலிஸார் சம்பவ …
-
- 5 replies
- 974 views
- 1 follower
-
-
அறுகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இது தீவிரவாத குழுவினால் திட்டமிடப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க பிரதிநிதிகள் அமெரிக்க பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர். எயார் வைஸ் மார்ஷல்(ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொண்டா, மற்றும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் (30ம் திகதி) இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைவர்களை சந்தித்து இதுபற்றி தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட குழுவை வழிநடத்திய ஈரான் பிரஜை உள்ளிட்ட தலைவர்கள் இந்த வலையமைப்பு தீவிரவாத வலையமைப்புடன் இணைக்கப்படவி…
-
- 5 replies
- 363 views
-
-
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட 1500 இந்திய அமைதிப் படையினரின் நினைவாக நாடாளுமன்ற வளவில் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபியை வெகு விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. மே மாதம் 22ம் திகதி அல்லது சார்க் உச்சிமாநாட்டுக்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கான விஜயம் மேற்கொள்ளும் போது இது திறந்து வைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மிகச் சிறந்த முறையில் நிர்மாணக்ககப்பட்டு வரும் இந்த நினைவுத் தூபியில் இந்திய அமைதிப் படையைச் சேர்ந்த 1,500 பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையே இதனை அமைக்கும் பொறுப்பை முன்னெடுக்கின்றது. விடுதலைப் புலிகளுடனான மோதல்கலில் கொல்லப்பட்ட இந்திய அமைதிப் படைக்கு இலங்கை உரிய மரியாதை அளிக்க வி…
-
- 5 replies
- 1.6k views
-
-
அல்லைப்பிட்டியில் இராணுவத்தால் கைதான 600 பேருடன் கொண்டு செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளை காணவில்லை அல்லைப்பிட்டி சுற்றிவளைப்பில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 600 பேருடன் கொண்டு சென்ற எமது மூன்று மகன்களை காணவில்லை என பெற்றோர் சாட்சியம் அளித்துள்ளனர். மேலும் தமது சாட்சியத்தில் குறிப்பிடுகையில், அல்லைப்பிட்டியில் நாம் வசித்து வந்த வேளை 1990ம் ஆண்டு 8ம் மாதம் 25ம் திகதி எமது பிரதேசத்தை இராணுவத்தினர் சுற்றி வளைத்து எம்மை ஒருஇடத்திற்கு அழைத்து சென்று அனைவரையும் ஒன்றாக கூட்டினர். அங்கு 14 வயது முதல் 45 வயது வரையிலான அனைவரையும் வேறாக நிற்குமாறு கூறி அவர்களை வேறு படுத்தி அவர்களில் 600 பேரை இராணுவத்…
-
- 5 replies
- 796 views
-
-
சீனாவிடமிருந்து பறித்து இந்தியாவிடம் கொடுக்கப்பட்ட யாழ்.மாவட்ட வீதி அபிவிருத்தி திட்டங்கள் கிடப்பில்..! யாழ்.குடாநாட்டிலுள்ள சில முக்கிய வீதிகளின் புனரமைப்பிற்கான ஒப்பந்தம் சீனாவிடமிருந்து இந்தியா வுக்கு மாற்றப்பட்டதால் புனரமைப்பு பயணிகள் கிட ப்பில் போடப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணம்-மானிப்பாய், காரைநகர்- வழுக்கையாறு, புங்குடுதீவு- குறிகாட்டுவான், யாழ்ப்பாணம்- பொன்னாலை- பருத்தித்துறை ஆகிய பெரு வீதிகளின் மறுசீரமைப்பு பணிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட பின்னர் அவை கைவிடப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வீதிகளின் மறுசீரமைப்பு பணிக்கான ஒப்பந்தம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பின்னர் இந்திய அரசு கரிசனை செலுத்தியது. அதன் பின்னர் இந…
-
- 5 replies
- 737 views
- 1 follower
-
-
கொழும்பிலிருந்து மக்களை வெளியேறக் கோரும் அரசு வன்னியிலிருப்பவர்களை அழைப்பது வேடிக்கை - மனோ எம்.பி. வீரகேசரி நாளேடு 9/14/2008 8:43:03 PM - கொழும்பில் காரணமின்றி தங்கியிருக்கும் மக்கள் வெளியேற வேண்டும் எனத் தெரிவிக்கும் அரசாங்கம் வன்னியிலிருந்து மக்கள் வெளியேறி அரசாங்க பகுதிகளுக்கு வரவேண்டுமென கோருவது வேடிக்கை. அரசாங்கத்தின் இந்த இரட்டை வேடத்தினை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்தார். இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அதற்காக மக்களை பலிக்கடாக்களாக்குவதை மக்கள் பிரதிநிதிகளினால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். கிள…
-
- 5 replies
- 1.5k views
-
-
நாட்டில் தற்போது றம்புட்டான் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் அனைத்து பாகங்களிலும் அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தலைநகர் கொழும்பின் பெரும்பாலான இடங்களில் றம்புட்டான் பழ விற்பனை சூடுபிடித்துள்ளதனை காணக்கூடியதாய் உள்ளது. குறிப்பாக றம்புட்டான் பழத்தின் பிரதான உற்பத்தி இடமான மல்வானையில் இருந்து அதிகளவான றம்புட்டான் பழங்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தலைநகரில் குவிந்து கிடக்கும் றம்புட்டான் பழங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முண்டியடித்துக் கொண்டு வாங்குவதனை அவதானிக்க முடிகின்றது. Go to Videos தலைநகரில் களைகட்டும் ரம்பு…
-
- 5 replies
- 2.7k views
-
-
பெயர் குறிப்பிடாத இந்திய தூதுவ அதிகாரி இலங்கையின் சுப்ப-சட் யை ஒரு மாயமானா வருணிக்காத குறையில் தாழ்த்து பேசியுள்ளார். "அது ஒரு தொலை தொடர்பு செய்மதி மட்டுமே. மேலும் அது சீனாவின் பாதையில்தான் சுற்றும். இலங்கையின் பாதையில் அல்ல. அந்த நிலையில் அதை பற்றி ஒன்றும் செய்ய இயலாது என்று கூறினார்" "It's a commercial communication satellite. It's going to be in a Chinese (orbit) slot and not in a Sri Lankan slot. At that far, you can't do anything and it's not a concern for us," said an Indian diplomat based in Sri Lanka, speaking on condition of anonymity. http://in.reuters.co...outh Asia News)
-
- 5 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி கூடு கலைந்து மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளாகியத்தில் 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2000 மாணவர்கள் வரை கல்வி கற்கும் பாடசாலை காணப்பட்ட பெரிய குளவி கூடு ஒன்று கலைந்துள்ளது. வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான பயிற்சிகளுக்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள…
-
- 5 replies
- 293 views
- 1 follower
-
-
ஒன்றுபட்ட இலங்கை - ஒரு தவறு ! - பிரித்தானிய அரசியல் பிரமுகர் பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் கவுரவ ராச்சல் ஜோய்ஸ் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை "தமிழ், சிங்களம் ஆகிய இரு தேசங்களாக இருந்த நாடுகளை பிரித்தானிய காலணித்துவம் இணைத்தது ஒரு மாபெரும் தவறு" என்று மன்னிப்புக் கோரியுள்ளார். இலங்கையில் சுமார் 30 லட்சம் தமிழர்கள் பூகோள ரீதியாகவும், சரித்திர ரீதியாகவும் தனித்துவமான பிரதேசமொன்றை பிரித்தானிய காலணித்துவம் வரும் வரையிலும் கொண்டிருந்தனர் என்றும், அவர்களது தனித்துவமான அரசும் நிர்வாகமும், பிரித்தானிய காலத்துக்கு முன்னெரேயே தனித்துவம் பெற்று விளங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து வாசியுங்கள்..... Unitary Ceylon was an…
-
- 5 replies
- 1.5k views
-
-
''ஈழப் போரில் மாண்ட போராளிகளின் காலடி மண்ணெடுத்து திலகமாக இட்டுக் கொண்டு''.. கருணாநிதி சென்னை: ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் மத்திய ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், அமைச்சரவையிலிருந்தும், கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்தோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில் வாசித்த அறிக்கை: ஈழத் தமிழர்ப் பிரச்சனையில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக செல்வா காலந்தொட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் அங்குள்ள தமிழர்களின் உரிமைக்காகவும்- தமிழர் வாழ்வாதாரங்களின் பாதுகாப்புக்காகவும்- தமிழ் மொழியின் சமத்துவமான தகுதிக்காகவு…
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழரே இப்படி செயற்பட்டால் பின் எப்படி மற்றையவர்கள்...? April 26, 2013 04:34 pm மன்னார் - உப்புக்குளம் புதுத்தெரு பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு நிலையத்திற்கு (கொமினிக்கேசன்) சென்ற மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மன்னாரைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார். தனது கையடக்கத்தொலைபேசிக்கு மீள்நிரப்பு (றிலோட்) செய்து விடுமாறும் பணத்தை பின்பு தருவதாகவும் கூறியுள்ளார். அதற்கு குறித்த நிலையத்தின் உரிமையாளர் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கஞ்சா பொதியினை தொலைத்தொடர்பு நிலையத்தில் வைத்து அதன் உரிமையாளரை கைது செய்ய முயற்சிகளை மேற்கொண்ட சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக எமது …
-
- 5 replies
- 968 views
-
-
எமது மக்களின் பண்பாட்டு கலாசாரங்களை அழித்து சாம் பராக்கிய அரசுடன் இணைந்து ஆட்சிப்பீடத்திலுள்ள கட்சி வேட்பாளர்கள் இன்று எமது மக்களுக்குச் சேலை வழங்குகின்றார்கள். யாருக்குத் தேவை இவர்களின் சேலைகள்? இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும் வடமாகாணசபை வேட்பாளருமாகிய பா.கஜதீபன். வலி.தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஷ் தலைமையில் ஏழாலையில் நடைபெற்ற தோதல் பரப்புரைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: எங்களுக்கு வாக்களித்தால் பலாலியில் மக்களை மீளக் குடியமர்த்துவோம் என்று கூச்சலிடுகிறார்கள் அரச கட்சியில் போட்டியிடுபவர்கள். தமக்கு தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறுவதற்காகவ…
-
- 5 replies
- 425 views
-
-
காலிமுகத்திடலில் மக்கள் நிறைந்து கடலில் விழுந்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறோம் : பஷில் இம்முறை கூட்டு எதிரணி காலிமுகத்திடலில் நடத்தும் மே தினக்கூட்டமானது அரசாங்கத்திற்கு மிகப்பெரிய செய்தியை கூறுவதாக அமையும். மிகப் பிரமாண்டமான மேதினக்கூட்டத்தை நாங்கள் நடத்துவோம் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். எமது மே தினக்கூட்டத்திற்கு நாட்டில் அனைத்து பாகங்களிலிருந்தும் மக்கள் கலந்துகொள்வார்கள். வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் பங்கேற்பார்கள். மேலும் மக்களினால் காலிமுகத்திடலை நிரப்புவது எமக்கொரு ப…
-
- 5 replies
- 519 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. பாணந்துறை வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் மரணிப்போரின் சடலங்களை அப்புறுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பிணவறைகள் நிரம்பிவழிகின்றன. “ஆகையால், சலங்களை ஓரிடத்தில் வைத்து டயர்களைப் போட்டு எரியூட்டுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என பாணந்துறை நகர சபையின் தவிசாளர் நந்தன குணத்திலக்க தெரிவித்தார். Tamilmirror Online || பிணவறைகள் நிரம்பின: டயர்களை போட்டு எரிக்க முடிவு
-
- 5 replies
- 494 views
-
-
8 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு ! 24 OCT, 2022 | 05:23 PM அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறையிலுள்ள 08 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல தடவைகள் நடத்திய கலந்துரையாடல்களின் பலனாக இந்த கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு முன்னதாக ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் பேரில் கைதிகள் தொடர்பான தகவல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. க…
-
- 5 replies
- 538 views
- 1 follower
-
-
-யோ.வித்தியா யாழ்.மாவட்டத்தில் இவ்வருடம் (2014) நிலவிய அதிகவெப்பம் மற்றும் பனிப்பூச்சியின் தாக்கத்தால், திராட்சைப்பழ உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வடமாகாணப் பிரதி விவசாயப் பணிப்பாளர் கிருஸ்ணன் ஸ்ரீபாலசுந்தரம் வியாழக்கிழமை (28) தெரிவித்தார். கடந்த வருடங்களைவிட (100 ஏக்கர்) இவ்வருடம் அதிக நிலப்பரப்பில் (120 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில்) திராட்சைப் கொடிகள் செய்கை பண்ணப்பட்டது. இதன்மூலம் அதிக விளைச்சலைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அதிக வெப்பத்தால் கொடிகள் அதிகம் பூக்கவில்லையென்பதோடு, பனிப்பூச்சிகளின் தாக்கமும் அதிகமாக காணப்பட்டதால் இம்முறை விளைச்சல் குறைவாகவேயுள்ளது. வழமையாக திராட்சைச் செய்கையில், ஒருகொடியில் இருந்து 20 கிலோகிர…
-
- 5 replies
- 624 views
-
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாவிற்கு 19 வாகனங்கள் : 950 000 ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதா ? - பிரத்தியேக செயலாளர் விளக்கம் By DIGITAL DESK 5 21 JAN, 2023 | 01:03 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட தேவைகளுக்காக 19 வாகனங்களும் , 950 000 ரூபா பணமும் வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஷ்வர பண்டார அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். அவரால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : 'முன்ன…
-
- 5 replies
- 834 views
- 1 follower
-
-
கொலை அச்சுறுத்தல் விடுத்த தாதிய போதனாசிரியர், அச்சத்தில் மாணவர்கள்!
-
- 5 replies
- 702 views
-
-
குமரன் பத்மநாதன் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை - சட்ட மா அதிபர் 31 ஆகஸ்ட் 2015 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி., குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணைகளில் குமரன் பத்மநாதன் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது ஜே.வி.பி. கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் குமரன் பத்மநாதனுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மேன்முறையீ…
-
- 5 replies
- 481 views
-
-
பதவி மோகத்தால் தமிழ்தேசியத்தை பலிகடாக்கும் சுமந்திரன் - சாணக்கியன்! வேலன் சுவாமி Vhg நவம்பர் 01, 2024 தமிழ்தேசிய முகமூடியை அணிந்துக் கொண்டு சுமந்திரன் - சாணக்கியன் போன்றோர், தமிழ்தேசியத்திற்கு எதிராக இதுவரை காலமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என பி2பி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமி தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், “தமிழரசுக்கட்சியை ஒதுக்குவதற்கான நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம். கட்சியை கடந்து தமிழ் தேசியம் என்கின்ற ஒரே இலட்சியத்தை ஒருங்கிணைத்து இந்த நாடாளுமன்ற தேர்தல் இருக்க வேண்டும். தமிழரசுக்கட்சியில் சுமந்திரன் சாணக்கியன் போன்றோர் தாங்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் பதவி வேண்டும் என்பதற்காக தமக்கு சார்பா…
-
-
- 5 replies
- 340 views
-