ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143624 topics in this forum
-
கிழக்கில் சிறுபான்மை சமூகங்களிடையே மோதல்களை உருவாக்க திரைமறைவில் சதி கிழக்கில் வாழும் சிறுபான்மை சமூகங்களிடையே மோதல்களை உருவாக்கி தமது அரசியல் சுயலாபங்களை அடைந்து கொள்வதற்காக சிலரால் பல்வேறு சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ்; நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இனமுறுகல்களை ஏற்படுத்தும் விதமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கிழக்கின் முன்னாள் முதல்வர் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர், அரசியல் சதிகாரர்களின் சுயலாப நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிக் கொள்ளாமல் உணர்ச்சிவசப்ப…
-
- 5 replies
- 660 views
-
-
ஊடகவியலாளர் கோபாலரத்தினம் காலமானார் கே.எல்.ரி.யுதாஜித் “எஸ்.எம். ஜீ” என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுபவரும் இலங்கைத் தமிழ் ஊடகத் துறையின் விருட்சமெனப் புகழப்படுபவருமான ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம், மட்டக்களப்பில் இன்று (15) காலமானார். இறுதிக் கிரியைகள், மட்டக்களப்பு பூம்புகார் 4ஆம் குறுக்கிலுள்ள அவரது மகளின் வீட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளதென, உறவினர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், கன்னாதிட்டியில் 1930.10.03இல் பிறந்து பெருமாள் கோயிலடியில் வாழ்ந்த கோபலரத்தினம், தனது ஆரம்பகல்வியை சேணிய தெரு சன்மார்க்க போதனா துவிபாசா பாடசாலையிலும் பின்னர் இராமகிருஷ்ண மிஷன் யாழ்.வைதீஸ…
-
- 5 replies
- 1.4k views
-
-
தெற்கிலும், வடக்கிலும்.... இந்திய உதவியுடன், வீடமைப்புத் திட்டங்கள்-பிரசன்ன ரணதுங்க. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தரவிற்கு அமைய தெற்கிலும் வடக்கிலும் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் துரிதப்படுத்தப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. அதற்கமைய ஹம்பாந்தோட்டையில் 24 வீடமைப்புத் திட்டங்களும், மாத்தறையில் ஒன்றும் மேற் கொள்ளப்படுகின்றதோடு... அம்பாந்தோட்டையில் மேலும் 26 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், தெற்கில் நிர்மாணிக்கப்படவுள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1200 ஆகும். இந்தத் திட்டங்களுக்காக இந்தியாவிலிருந்து 600 மில்லியன் ரூபாய் பெறப்பட உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 5 replies
- 717 views
- 1 follower
-
-
யாழ். செம்மணியில் நீரில் மூழ்கி இளைஞன் பலி By DIGITAL DESK 5 18 NOV, 2022 | 10:24 AM யாழ்ப்பாணம் செம்மணி பகுதியிலுள்ள குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போனநிலையில் அவரது சடலம் கடற்படையின் உதவியுடன் வியாழக்கிழமை (17) மீட்கப்பட்டது. குறித்த குளத்தினை அண்மித்த பகுதியில் வசித்துவரும் இளைஞன் ஒருவரே தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளை இவ்வாறு காணாமல் போயிருந்தார். இதனையடுத்து மீன்பிக்கச்சென்ற இளைஞனை காணத நிலையில், அப்பகுதி மக்கள் குளத்தில் தேடுதல் நடாத்தினர். இதையடுத்து மக்களால் இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. கோப்பாய் பொலி…
-
- 5 replies
- 542 views
- 1 follower
-
-
கூட்டமைப்பை பதிவு செய்யப்போவதில்லை – லண்டனில் மாவை! “தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனிக்கட்சியாக பதிவு செய்யப்படமாட்டாது. அது கட்சிகளின் கூட்டமைப்பாகவே தொடர்ந்தும் செயற்படும்” இவ்வாறு லண்டன் வந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா விருந்துபசார நிகழ்வொன்றின் போது தெரிவித்தார் என லண்டன் செய்திகள் தெரிவித்தன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று முன்தினம் லண்டன் சென்றார். அங்கு நடைபெற்ற இராப்போசன விருந்துபசார நிகழ்விலேயே மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார என லண்டன் செய்தகள் தெரிவித்தன. ‘ரெலோ’ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டால் தங்கள் இயக்கத்தை கலைக்கப் போகிறார்கள் எனக் கூறியி…
-
- 5 replies
- 951 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவரும், குஷ்டரோக நோயாளியைக் கண்டு ஒதுங்குவதைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஒதுக்கி வைத்துள்ளனர் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மன்னார் தாழ்வுப்பாடு வீதியில் அமைந்துள்ள ஆஷ் ஹோட்டல் மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறியதாவது, 'நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு தெரிவிக்குமாறு ஆளும் கட்சி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவோ, தமிழ்த் தேசியக் கூ…
-
- 5 replies
- 759 views
-
-
orkflow: Public வவுனியா நிருபர் புதன்கிழமை, யூன் 8, 2011 பான் கி மூனின் இரண்டாம் பதவிக்காலத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. ஒரு மாதிரி பான் கி மூனின் அடுத்த பதவிக்காலம் உறுதியாக்கபட்டு வருகின்றது. இந்தியாவிற்கும் பான் கி மூன் இற்குமான நெருக்கமான உறவை நம்பியார் அவர்களே மேற்கொண்டு வருகின்றார். முள்ளிவாய்க்காலில் இந்தியாவின் சொற்படி ஆடிய பான் கி மூனிற்கு இப்போ இந்தியா நல்ல கைமாறுதலை செய்துள்ளது. . நேற்று முந்தினம் நியூயோர்க்கில் நடந்த ஆசிய குழுவினுடனான சந்திப்பிலேயே இந்தியா தனது ஆதரவினை உறுதிப்படுத்தியுள்ளது. ஈழ நாதம்
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
சிறிலங்கா மீது கடுமையான நடவடிக்கை: ஐரோப்பிய ஒன்றியம் - இணைத்தலைமை நாடுகள் முயற்சி. இலங்கையில் மோசமடைந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசு மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இணைத்தலைமை நாடுகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேற்கொண்ட கடுமையான அறிக்கையைத் தொடர்ந்து சிறிலங்காஅரசு மீது தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தயாராகுவதாகவும் ஐரோப்பிய ஒன்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை தடுப்பதற்கு வியன்னாவிற்கு சென்றுள்ள சிறிலங்காவின் பிரதிநிதிகள் குழு தோல்வியை சந்தித்துள்ளது. அருணி விஜ…
-
- 5 replies
- 2k views
-
-
ரணில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளராக “ஆவா குழு” அருண் – ஆதரவாளா்கள் கடும் அதிா்ச்சி March 22, 2024 ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளராக “ஆவா குழு”வின் தலைவராக தெரிவிக்கப்படும் அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க இந்த விடயத்தை அறிவித்தார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனே செயற்பட்டு வருகின்றார். அருண் சித்தார்த்தின் நியமனம் குறித்து விஜயகலா மகேஸ்வரனு…
-
- 5 replies
- 759 views
-
-
Published By: VISHNU 07 JUL, 2024 | 07:42 PM மறைந்த இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் உரிமைகளுக்காகவும் முன் நின்ற தலைவர் என்றும் சம்பந்தனும் தானும் எப்போதும் பிரிக்கப்படாத இலங்கைக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இரா.சம்பந்தனுடன் உடன்பாட்டுடன் முன்நோக்கி கொண்டு வந்த அந்தக் கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். திருகோணமலையில் அன்னாரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) பிற்பகல் நடைபெற்ற சம்பந்தனின் இறுதி கிரியையில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்…
-
-
- 5 replies
- 536 views
- 2 followers
-
-
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும்; இந்திய பிரதமரிடம் எடுத்துரைக்கவுள்ளோம் - மாவை.சேனாதிராசா இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் இந்திய பிரதமரிடம் எடுத்துரைக்கவுள்ளோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சோ.மாவை சேனாதிராசா தெரிவித்தார். இலங்கைக்கு வருகை தருகின்ற இந்தியப் பிரதமர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சந்திக்கின்றார். இந்தச் சந்திப்பில் எத்தகைய விடையத்தை கலந்துரையாடவுள்ளீர்கள் எனக்கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிணை மேற்கொண்டு குறுகிய நேரப் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நாளை இலங்கை வருகின்றார். மூன்று மணித்தியாலங்கள் தங்கியிருக்கும் இந…
-
- 5 replies
- 674 views
-
-
ஈழத்தமிழர் பிரச்சனைக்கு சிலையாய் உள்ள தலைவர்களிடம் மனு கொடுக்கிறேன்: புதுச்சேரியை கலக்கிய ரவீந்திரன் இலங்கைத் தமிழர்களுக்காக காலில் சங்கிலி கட்டிக்கொண்டு நடைபயணம் மேற்கொண்ட சம்பவம், புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி நெல்லித்தோப்பைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர், இலங்கையில் வாழும் தமிழர்களைதமிழராக மட்டும் பார்க்காமல், மனிதர்களாகவும்பார்க்க வேண்டும், இலங்கை தமிழர்கள் படும்துயரங்களை அனைவருக்கும் தெரியப்படுத்தும்வகையில், 26.03.2012 அன்று காலை நூதன போராட்டம் நடத்தினார். சிலுவை போன்ற மரக் கட்டையை ஏந்தி, கை மற்றும் கால்களைச் சங்கிலியால் பிணைத்துக்கொண்டு, கடற்கரை காந்தி சிலை அருகிலிருந்து,நேற்று காலை நடைபயணத்…
-
- 5 replies
- 1.4k views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீதான போர்க் குற்றச் சாட்டுக்களை தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீதான போர்க் குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் மக்கள் இனி அக்கறை செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில் போர்க் குற்றத்தில் கோத்தபாய மட்டும் ஈடுபடவில்லை.போர் நடைபெற்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க் குற்றத்தில் ஈடுபட்டனர் என சர்வதேசம் கூறி வருகின்றது. ஆனால் எதோ …
-
- 5 replies
- 855 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஒரே நிலைப்பாட்டில் ஒன்றிணைந்து செயற்படும் நோக்கில் தமிழ் தேசிய பரப்பிலுள்ள ஐந்து கட்சிகளும் இன்று கூடி கலந்துரையாடினோம். எனினும் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவராத நிலையில் நாளைய தினம் ஆரம்பமாகும் தபால்மூல வாக்களிப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தாம் தமிழ் மக்களை கோர முடியாதுள்ளதாக மாணவர் ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது. எனினும் தமிழ் மக்கள் தமது வாக்குரிமையை தவறாது பிரயோகிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. யாழ் மற்றும் கிழக்கு பல்கலை மாணவர்களின் தொடர் முயற்சியால் கொள்கையில் ஒன்றாக பயணிக்கும் ஐந்து தமிழ்கட்சிகள் இன்று 30.10.2019 புதன…
-
- 5 replies
- 796 views
-
-
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலைக்கு மத்தியில், மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்வதற்காக 128 மெகாவோட் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து உடனடியாக கொள்வனவு செய்ய மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இது தொடர்பில் நேற்று முன்தினம் இலங்கை மின்சார சபைக்கு அறிவித்தப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/235248/உடனடியாக-கொள்வனவு-செய்ய-தீர்மானம்
-
- 5 replies
- 866 views
-
-
இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ் யுவதிகள் பாலியலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் : சட்ட வைத்திய அதிகாரி. சிறீலங்கா | ADMIN | DECEMBER 14, 2012 AT 18:38 அண்மையில் இராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்களுள் பதின்மூன்று தமிழ் யுவதிகள் மன உளைச்சலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், அவர்கள் அனைவரும் பாலியலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என சட்ட வைத்திய அதிகாரி ஒருவரிடமிருந்து தகவல்கள் கசிந்துள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில், அனுமதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் யுவதிகள் அனைவரும் பாலியலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வசதிகள் கிளிநொச்சி வைத்தியசாலையில் இல்லாமையினால், யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து குறித்த ம…
-
- 5 replies
- 795 views
-
-
போரின் இறுதியில் சவேந்திர சில்வாவை பதவி நீக்க சரத் பொன்சேகா முயற்சித்தார்! - கொழும்பு ஊடகம் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது படைத்தரப்பின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை அப்பதவியில் இருந்து நீக்க சிறிலங்காவின் அப்போதைய படைத் தளபதி சரத் பொன்சேகா முயற்சி மேற்கொண்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இவ்வூடகத்தில் படைத்துறை ஆய்வாளர் சாமிந்ர பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரை ஒன்றிஜலேயே இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடபில் இக்கட்டுரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் சிறிலங்கா படைத்தரப்பால் முற்றுகையிடப்பட்டிருந்த முள்ளிவ…
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கையில் போர் நிறுத்தத்தினை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மூன்றாவது நாளாக மேற்கொண்டு வரும் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள தமிழ் இளையோர்கள் அடையாள உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 659 views
-
-
கண்ணதாசன் தொடர்ந்தும் சிறையில் August 26, 2020 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக கடமையாற்றிய கண்ணதாசன் மீதான ஆயுள் தண்டனைத் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டு வழக்கை மீள விளக்கத்துக்காக எடுப்பதற்காக வவுனியா மேல் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு நேற்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது, வரும் செப்பெரம்பர் 7ஆம் திகதி அழைக்குமாறு தவணையிட்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், அன்றைய தினம் எதிரியை மன்றில் முற்படுத்துமாறு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு உத்தரவிட்டார் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற மிருதங…
-
- 5 replies
- 1.1k views
-
-
சர்ஜுன் லாபீர்) மரணித்த உடல்களை நல்லடக்கம் செய்யவேண்டும் என்பது இஸ்லாமிய, கத்தோலிக்க மக்களின் கட்டாய மார்க்க கடமையாகும். கொரோனா தொற்று ஏற்பட்ட பின்பு மரணித்த உடல்களை அடக்கம் செய்வதற்கு பதிலாக எரிப்பதற்கு அரசு தீர்மானித்த போது. பாராளுமன்றத்தில் உள்ள சகல முஸ்லிம் கட்சிகளின் எம்பிக்களும், தலைவர்களும், போர்க்கொடி தூக்கினார்கள். இதற்காக அரசின் உயர்மட்டத்தை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்ய முயன்றனர். போதாக்குறைக்கு வெளிநாட்டு தூதுவர்கள் இராஜதந்திரிகளை சந்தித்து முறையிட்டார்கள். அதே நேரம் இதே மதக்கடமையை செய்யவேண்டிய இன்னுமொரு சமூகமான கிறிஸ்தவ, கத்தோலிக்க சமூகம்…
-
- 5 replies
- 576 views
- 1 follower
-
-
சீனாவிடமிருந்து இலங்கையை தம்வசம் வைத்திருக்க இந்தியாவும் மேற்கு நாடுகளும் முயச்சி-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் December 19, 2021 தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் முடக்கி, சீனாவிடமிருந்து இலங்கையை தம்வசம் வைத்திருக்க இந்தியாவும் மேற்கு நாடுகளும் முயல்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எந்த ஜனநாயக நாட்டிலாவது அரசமைப்பை நடைமுறைப்படுத்துமாறு கேட் கிறார்களா? அரசமைப்பு என்றால் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி நடைமுறைப்படுத்தப்படாவிடின் அதன் பெறுமதி பூச்சியம்…
-
- 5 replies
- 424 views
-
-
’செழுமையை நோக்கி செல்கிறது இலங்கை’ இலங்கையின் பொருளாதாரம் ஏற்கனவே சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், சில மாதங்களுக்கு முன்னர் இருந்த பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் நாடு செழுமையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய பொருளாதாரத்திற்கு ஆசிர்வாதம் வழங்கும் விசேட நிகழ்வு கண்டி மல்வத்தை விகாரையில் நேற்று (15) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் நாங்கள் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டோம் எனவும் மேலும் 500 மில்லியன் டொலர் கடனையும் செலு…
-
- 5 replies
- 818 views
-
-
இலங்கை அரசியலுக்குள் இந்தியாவை கூட்டமைப்பு தான் இழுத்துவிடுகிறதாம் சிறிலங்காவின் உள்நாட்டு அரசியலில் இந்தியாவை இழுத்து விடும் வெளித் தெரியாத பரப்புரை ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது இந்திய அரசியல்வாதிகளில் ஒருவரான அன்பரசு குற்றஞ்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.அன்பரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடக்க இருக்கும் அரச தலைவர் தேர்தலில் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இந்தியா ஆதரவு வழங்குவதாகப் பொய்யான உறுதிமொழிகளைக் கூறுவதன் மூலம் சிறிலங்காவின் உள்நாட்டு அரசியலில் இந்தியாவை இழுத்து விடும் வெளித் தெரியாத பரப்புரை ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. கூட…
-
- 5 replies
- 566 views
-
-
அரசியல் கைதிகள் குறித்த கேள்வியும் முதலமைச்சரின் பதிலும்… ஊடகவியலாளர்களின் கேள்விக்கான முதலமைச்சரின் பதில் பதில் : இரண்டு விடயங்கள் உண்டு. ஒன்று பொதுவானது. மற்றது பிரத்தியேகமானது. அதாவது தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனே பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது பொதுவான கோரிக்கை. அது பயங்கரவாதத் தடைச்சட்டத்துடன் தொடர்புடையது. ஜெனிவாவில் பல வருடங்களுக்கு முன்னரே ஐ.நாவுக்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனே கைவாங்குவதாக உறுதி மொழி கொடுத்த இலங்கை இன்னமும் அதைச் செய்யவில்லை. அதனைக் கைவாங்கி விட்டால் அதன் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களை உடனே பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுங்கள் என்று கோருவது இலகுவாய் இருந்திருக்கும். ஏனெ…
-
- 5 replies
- 590 views
-
-
சமயரீதியான வைபவங்களின்போது மிருகங்களை கொல்வது விரைவில் சிறீ லங்காவில் தடைசெய்யப்படக்கூடும் என்று கூறப்படுகின்றது. மேற்கோள் மூலம்: Plan to ban animal sacrifices at religious festivals
-
- 5 replies
- 931 views
-