ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
ஒக்டோபர் மாதம் நடத்த இலங்கை அரசு ஏற்பாடு பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க சர்வதேச மட்டத்தில் எடுக்கபட்ட வேண்டிய முயற்சிகள் குறித்து ஆராயும் சர்வதேச மாநாடு ஒன்றை எதிர்வரும் ஒக்.18 ஆம் திகதி முதல் 20 திகதி வரை கொழும்பில் நடத்த இலங்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷமன் கதிர்காமன் ஞாபகார்த்த நிலையம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தும் என வெளி விவகார அமைச்சர் ரோஹித நேற்று அறிவித்தார்.நேற்று மாலை கொழுமபு 7ல் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமரின் ஞாபகார்த்த நிலையத்தில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனை அறிவித்தார். இம்மாநாடு தொடர்பாக அமைச்சர் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கையில் மேலும் கூறியதாவது : சர்வதேச மட்டத்தில் பெரும் அச்சு…
-
- 5 replies
- 1.7k views
-
-
கிளிநொச்சியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் அமைப்பான யுனிசெஃப்பின் அலுவலகத்தை மூட வேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.9k views
-
-
இலங்கை தாக்குதல்களுக்கு கனடா கண்டனம்- அனைத்துத் தரப்பும் வன்முறைகளைக் கைவிட வலியுறுத்தல் [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 11:15 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைத் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கனடா. அனைத்துத் தரப்பினரும் வன்முறையைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. கனடாவின் வெளிவிவகார அமைச்சு நேற்று புதன்கிழமை (28.11.07) வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் வன்முறை அதிகரித்து வருவதற்கு குறிப்பாக எதிர்பாராத விதமாகவோ அல்லது இலக்கு வைத்தோ பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு கனடா கடும் கண்டனம் தெரிவிக்கிறது.. இனங்களுக்கு அப்பால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக…
-
- 5 replies
- 2k views
-
-
தெளிவான வரைவுத் திட்டமொன்றை இலங்கையிடமிருந்து அமெரிக்கா எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்திற்கு பதிலளிக்கக் கூடிய வகையில் தெளிவான வரைவுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் எதிர்பார்ப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெளிவான திட்டமொன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்காவிட்டால் அதனை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கும் இடையில் நாளைய தினம் முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது . இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அம…
-
- 5 replies
- 1.2k views
-
-
கடுவெல பிரதேசத்தில் 13 வயது சிறுமியை துஸ்பிரயோப்படுத்திய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கடுவெல பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்கருகில் குறித்த சிறுமியின் வீடு அமைந்துள்ளதாகவும், சில தினங்களாக குறித்த வீட்டின் மீது கல் எறி சம்பவம் இடம்பெற்றதை அடுத்து பிரதேசவாசிகள் அருகில் உள்ள விகாரையின் பிக்குவிடம் இதுதொடர்பில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த வீட்டிற்கு திருஸ்டி ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான பரிகார பூஜைகளை செய்ய வேண்டும் எனவும் பிக்கு குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த வீட்டிலிருந்த சிறுமியை தனியே அழைத்துச் சென்று பாலியல்துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்…
-
- 5 replies
- 789 views
-
-
இந்தியாவிலிருந்து மின்சாரம் கொள்வனவு: கடலுக்கடியாக கொண்டுவரத் திட்டம் கடலுக்கடியிலான மின்வட (கேபிள்) திட்டத்தின் ஊடாக, இலங்கைக்கு மின்சார விநியோகத்தை வழங்க, இந்தியா தயாராக இருக்கின்றதென, அந்நாட்டு மின்சக்தி அமைச்சின் செயலாளர் பி.கே.புஜாரி தெரிவித்துள்ளார். இலங்கையின் உள்நாட்டுத் தேவையை ஈடுசெய்யும் முகமாக , 500 மெகாவொட் மின்சாரத்தை இந்தியாவிடம் இலங்கை கோரியுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மின்சார இணைப்பு வசதிகள் இல்லாமையால் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது துணை - கடல் சக்தி இணைப்பு தொழிநுட்பத்தை பயன்படுத்துவது குறித்து, இந்திய மின்சக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட இந்…
-
- 5 replies
- 475 views
-
-
அநுராதபுரத்தில் அன்ரனோரவை சுட்டது போராளி புலவன்! சுட்ட சாம்-7 படையினரிடம்!! ஆனி 1, 2013 சிறிலங்கா விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவர் மீது அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த 2000ம் ஆண்டு மார்ச் 30ம் நாள் வில்பத்து சரணாலயத்துக்கு மேலாக பறந்து கொண்டிருந்த போது, சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் – 32 விமானத்தை சரியாக கால 11.45 மணிக்கு ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டுவீழ்த்தியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இந்தச் சம்பவத்தில் 32 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். சுட்டுவீழ்த்தப்பட்ட அன்டனோவ் -32 ரக விமானம் முன்னதாக, இந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறினால்,…
-
- 5 replies
- 2.1k views
-
-
ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம்! கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளாா். அங்கு காணாமல் போன உறவினர்களையும்,கேப்பாபுலவில் போராட்டம் நடத்தும் மக்களையும், மற்றும் விடுவிக்கப்பட்ட இடங்களையும் சென்று பார்வையிட்டுள்ளார். இன்று (08) காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போன உறவினர்கள் நடத்தும் போராட்ட கொட்டகைக்கு சென்ற ஹரி ஆனந்த சங்கரி அங்குள்ள காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடி விட்டு கேப்பாபுலவில் போராட்டம் மேற்கொள்ளும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் பின்னர் கேப்பாபு…
-
- 5 replies
- 824 views
-
-
தந்தை செல்வாவின் 120வது ஜனன தின நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் தலைவருமாகிய அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்களின் 120வது ஜனன தின நிகழ்வு எதிர்வரும் 2018.03.31ம் திகதி காலை 09.30 மணிக்கு மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சிக் காரியாலத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள், முன்னாள், இந்நாள் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள், இளைஞர் அணி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர் http://www.newsuthanthiran.com/2018/03/29/தந்தை-செல்வாவின்-120வது-ஜனன…
-
- 5 replies
- 1.1k views
-
-
மக்களின் கவனங்களை திசை திருப்பி யதார்த்த நிலமைகளை மறைக்கும் விதமாக யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வடமாராட்சிப் பகுதியில் புதுவருடத் திருவிழா என்ற இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொணடதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்தஹத்துருசிங்கவின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சிகளை டான் தமிழ் தொலைக்காட்சி அனுசரனை வழங்கி நடத்துகிறது. இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ் சிங்களப் பாடல்கள் பாடப்பட்டு கவர்ச்சி நடனங்களும் இடம்பெறுவதாக எமது ச…
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
சமாதானப் பேச்சா? இராணுவ நடவடிக்கையா? விடுதலைப் புலிகளே தீர்மானிக்க வேண்டும் வீரகேசரி நாளேடு அரசாங்கம் கிழக்கை கைப்பற்றியுள்ள நிலையில் எதிர்காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்துவதா ? அல்லது மேலும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதா? என்பதனை விடுதலை புலிகளே தீர்மானிக்கவேண்டும். அவர்களின் கைகளிலேயே அனைத்தும் தங்கியுள்ளன. பேச்சுவார் த்தைகளை ஆரம்பிக்கும் செயற்பாடு புலிகளின் அறிவிப்பிலேயே தங்கியுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரசாங்கமும் விடுதலை புலிகளும் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இரகசிய உடன்படிக்கையொன்றை செய்துகொண்டனர் என்று கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. இது வெறுமனே அரசியல் இலாபம் நோக்கி செய்யப்படும் பிரசாரமாகும். எனவே இ…
-
- 5 replies
- 2.2k views
-
-
பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்து உயர்மட்ட சந்திப்புகள் – அமெரிக்க கடற்படை தளபதி இலங்கை வருகை Published By: Priyatharshan 19 Feb, 2026 | 04:54 PM ( வீ. பிரியதர்சன் ) உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளைப்பிரிவுகளில் ஒன்றான அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியான அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கேலர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியான அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கேலரை அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். அவர் இன்று 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளார். இவ்விஜயத்தின் போது, கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மே…
-
-
- 5 replies
- 249 views
- 1 follower
-
-
நடுவானில் தடுமாறிய உலங்குவானூர்தியை பிரித் ஓதி தரையிறக்கிய லொக்குபண்டார [ ஞாயிற்றுக்கிழமை, 30 டிசெம்பர் 2012, 01:33 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்ச, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சப்ரகமுவ மாகாண ஆளுனர் டபிள்யூ.ஜேஎம் லொக்குபண்டார ஆகியோர் பயணம் செய்த உலங்குவானூர்தி, விபத்து ஒன்றில் இருந்து தப்பியுள்ளது. ஆழிப்பேரலைக்கு இரையானோரை நினைவு கூரும் சிறிலங்கா அரசின் பிரதான நிகழ்வு பதுளையில் கடந்த 26ம் நாள் நடைபெற்றது. இதில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் அதில் பங்கேற்க முடியாது போனதால், அவருக்குப் பதிலாக சிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்ச, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்…
-
- 5 replies
- 678 views
-
-
இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் அனைத்து பிரேரணைகளையும் தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் எலக்சேன்டர் ஏ கர்சாவா தெரிவித்துள்ளார். பிரதமர் டி.எம்.ஜயவர்த்தனவை இன்று சந்தித்த போதே ரஸ்ய தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், மனித உரிமை சபையில் நிரந்தர உறுப்புரிமை இல்லாவிட்டாலும் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை ரஸ்யா வழங்கும். அத்துடன் மேற்குலக நாடுகளின் அழுத்தம் குறித்து தொடர்ந்து இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுநடத்தி வருவருகின்றோம். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ரஸ்யா மத்தியஸ்த்தராக செயற்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=76496&category=TamilNews&language=tamil
-
- 5 replies
- 727 views
-
-
கலப்புக் கிராமங்களை உருவாக்கி, இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வேண்டும் எனவும் மீள்;குடியேற்றத்திற்கு சர்வதேசத்தின் ஆலோசனைகள் தேவையில்லை எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன் அந்தக் கிராமங்களில் இராணுவ முகாம்களை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ள மேதானந்த தேரர், இராணுவ கிராமங்களை உருவாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் சிங்களவர்கள் முன்னர் வசித்து வந்தனர். பயங்கரவாதிகளை அவர்களை விரட்டி விட்டனர். இதனால் முன்னர் இருந்தது போலவே அனைத்து மக்களையும் அங்கு குடியேற்றுவதன் மூலம், எவரும் சமாதானத்துடன் வாழ முடியும். அதேபோல் மீளக்குடியேற்றத்தின் போது, சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் …
-
- 5 replies
- 841 views
-
-
காத்தான்குடிக்கு தனிச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என்ற ஐய்யப்பாடு மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது 09.08.2013ம் திகதி பெருநாள் தினத்தில் காத்தான்குடியிலும் அண்டிய ஆரைய்பதி மட்டக்களப்பு பகுதிகளிலும் முஸ்லீம்கள் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் இருவர் மூவர் சகிதம் பயணித்தனர் தமிழர்களின் பண்டிகைக்காலங்களில் அனுமதிகேட்டால் இல்லை என்று துரத்திப்பிடிக்கும சட்டம் இங்கு !? http://www.arayampathi.com/2013/08/blog-post_9.html
-
- 5 replies
- 711 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகின்றனர். அத்துடன், நவநீதம் பிள்ளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ளார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வருவது தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிடுவதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் செய்த குற்றங்களை அல்ல பயங்கரவாத அமைப்புகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களை ஆராய்ந்து பார்க்கும் காலம் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு வந்துள்ளதாக அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.…
-
- 5 replies
- 495 views
-
-
-சுமித்தி தங்கராசா எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்க கூடாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்று யாழ். பொது நூலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள், அந்த துறை சார்ந்த அவர்களது பொறுப்புக்கள் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. இதன்போதே, பொதுநலவாய அரச தலைவர் மாநாட்டில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்பதில்லையென்பதுடன் இந்த மாநாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு …
-
- 5 replies
- 502 views
-
-
முஸ்லிம்கள் என்றாலே ஒருமடங்கு தண்ணியை ஊண்டிக் குடிக்கும் ஞானசாராவுக்கு,மற்ற முஸ்லிம் தலைவர்களைவிட ரிசாட் பதியுதீனைக் கண்டால்தான் கண்ணுக்குள் உருத்துகின்றது. ஞானசார உண்மையிலேயே நாட்டுப்பற்றுள்ளவர் என்றிருந்தால், நாட்டை நாசப்படுத்திய பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதில் எந்தத்தப்பும் இல்லை என்று கூறியிருக்க மாட்டார். அதே நேரம் இலங்கைக்கு எதிராக செயல்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடத்தும் டயஸ்போராக்களை சந்தித்து சிரித்த முகத்தோடு போட்டோ பிடித்திருக்க மாட்டார். எங்களுக்கு சுயாட்சி தாருங்கள் என்று போராடும் தமிழ் தலைவர்களின் செயல்பாட்டைக் கண்டும் காணாதவர்போல் நாடகமாடமாட்டார். இலங்கையில் நடந்தது போர்க் குற்றமல்ல இனப்படுகொலைதான் நடந்தது என்று விக்கி…
-
- 5 replies
- 710 views
-
-
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இன்று தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஏற்றுக்கொள்வதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்ளையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதுடன், ஏற்கனவே கலந்துரையாடப்பட்டது போன்று இணைந்துசெயற்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணம் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் கையெழுத்திட்டு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இன்று தனது இரண்டாவது பதவிக் காலத்தை ஏற்றுக் கொள்வதையிட்டு தமிழ்…
-
- 5 replies
- 1.4k views
-
-
Two SLA troopers injured in Puthur grenade attack [TamilNet, Monday, 27 November 2006, 22:23 GMT] Unidentified persons lobbed hand grenades on a Sri Lanka Army (SLA) sentry post near Puthur junction on the Jaffna-Point Pedro road Monday around 8:30 a.m injuring two SLA troopers, sources in Jaffna said. Sri Lanka Monitoring Mission (SLMM) in Jaffna visited the site of the attack and conducted investigations. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20415 ஆயிரம் ஆயிரம் எமது தமிழ் உறவுகள் படுகொலை செய்யபடும் போது விசாரனை செய்யாத கண்கானிப்பு குழு இன்று??????????
-
- 5 replies
- 3.3k views
-
-
வல்வையில் சிங்கள இராணுவத்தினருக்கும் – மக்களுக்கும் முறுகல் பலர் கைது * Thursday, March 3, 2011, 5:11 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மக்களை இராணவத்தினர் இன்று காலை 10 மணிக்கு முன்னர் குடும்பப் பதிவுக்கு அழைத்திருந்தார்கள். இது குறித்து சில புத்திஜீவிகள் யாழ் மாவட்ட அரச அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தனக்கு எதுவும் தெரியாது என்றார். இந்த நிலையில் இராணுவத்தினர் பதிவுக்கு அழைத்தபோது, திடீரென இடம்பெறும் பதிவுக் குறித்து சிலர் முரண்பட்டுள்ளனர். வீதியில் வைத்தே பகிரங்கமாக மக்கள் இராணுவத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதட்டமுற்ற படையினர் நியாயம் கேட்ட மகக்ளை கைது செய்தும் உள்ளனர். இந்தநிலையில் மக்களை கைது செய்தமைக்கு வல்வெட்டித்துறை ம…
-
- 5 replies
- 1.5k views
-
-
மட்டு. இந்துக்கல்லூரியில் மத பிரசாரம் -நீதிமன்றம் வழங்கிய பணிப்புரை! மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் நடைபெறவிருந்த கிறிஸ்தவ மத நிகழ்வினை வெபர் விளையாட்டு மைதானத்திற்கு மாற்றுவதற்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்தார். மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் ஜீசஸ் லீவ் என்னும் அமைப்பினால் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அதிபர்,வலய கல்விப்பணிப்பாளர்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்,பொலிஸாருக்கு எதிராகவும் எழுத்தாணை மனு கோரப்பட்டிருந்த நிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா முன்னிலையில் விசாரகைள் முன்னெடுக்கப்பட்டது…
-
- 5 replies
- 720 views
-
-
சாவகச்சேரியில் லஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம் - யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் Published By: DIGITAL DESK 5 சாவகச்சேரியில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் லஞ்சமாக கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தினை பெற மறுத்து தன் கடமையை சரிவர புரிந்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்திற்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார் நேற்றிரவு (07 ) யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்து செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர் கடமையில் இருந்த …
-
- 5 replies
- 804 views
- 1 follower
-
-
சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் தொலைக்காட்சி நாடகத்தை மனைவி பாா்த்ததால் ஆத்திரம் அடைந்த கணவன் தொலைக்காட்சி மற்றும் ஏனைய பொருட்களை அடித்து நொருக்கி அட்டகாசம் பண்ணியுள்ளாா். இதனால் கோபமுற்ற மனைவி சாவகச்சேரிப் பொலிசாருக்கு முறையிட்டதால் கணவனைக் கைது செய்துள்ளது பொலிஸ். கணவா் வேலையால் வந்தும் மனைவி அதனைக் கவனிக்காது தொலைக்காட்சித் தொடா் பாா்த்துக் கொண்டு தினமும் இருப்பதாலே தான் மனமுடைந்து இவ்வாறு செய்துள்ளதாக கணவா் தெரிவித்தாா். கணவரை சாவகச்சேரி நீதிமன்றில் ஆயா்படுத்தியபோது அவரை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டாா். சாவகச்சேரி கெருடாவிலை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அருள்நந்தி சிவதாஸ் (வயது32) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார். http://www.jvpn…
-
- 5 replies
- 873 views
-