ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
தமிழ் மக்களாகிய நாம் தனி ஈழத்தைக் கோரவில்லை. மாறாக, சுயமரியாதையுடன் வாழும் உரிமையையே கோருகின்றோம் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மன்னார் மறை மாவட்ட ஆயரை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆசிபெற்றார். இதன்பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே ஆயர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். இராயப்பு ஜோசப் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளதாவது, 'இந்த நாடு பல இன, சமய, மொழி கலாச்சாரங்களை கொண்ட நாடு. ஆனால், ஒரே மக்கள் ஒரே நாடு என்று சொல்லிக்கொண்டு இருக்கின்ற ஆட்சியே இன்று இங்கு இருக்கின்றது. துன்பங்களை தாங்கிக்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் கருத்துக்கள் இன்றைய ஆட்சியாளர்களின் சிந்தனைக…
-
- 5 replies
- 679 views
-
-
பொங்கும் தமிழராய் பொங்கி எழுந்து பேரணிகளில் பங்கெடுத்திடுவோம்! தமிழீழ பிரதமர் வி.ருத்ரகுமாரன் [ ஞாயிற்றுக்கிழமை, 18 செப்ரெம்பர் 2011, 08:34.10 AM EST] இவ்வாரம் இரண்டு 'பொங்குதமிழ்' மக்கள் எழுச்சி நிகழ்வுகள் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்றன. முதலாவது பொங்குதமிழ் பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை, 19.01.2011 அன்று ஜெனிவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை தலைமைப் பணிமனை நோக்கி இடம்பெறுகிறது. இப் பேரணியில் சுவிஸ் வாழ் தமிழ் மக்களோடு ஐரோப்பாவின் ஏனைய நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் இணைந்து கொள்கின்றனர். இரண்டாவது பொங்குதமிழ் - விடுதலையின் உயிர் மூச்சுப் பேரணியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை, 23.09.2011 அன்று நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் அவையின் தலைமை…
-
- 5 replies
- 1.1k views
-
-
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தோருக்காக பிரார்த்தனை 21 Apr, 2024 | 01:04 PM உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றுக்கான பிரார்த்தனை மற்றும் ஐந்தாவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. (படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்) …
-
- 5 replies
- 419 views
-
-
யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியின் அதிரடி முடிவு : அதிர்ச்சியில் பலர் யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று (25) நடைபெற்ற பேரவைக் கூட்டத்தினை தொடர்ந்து கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் தன்னுடைய பதவி விலகியுள்ளார். மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைகளால் யாழ்.பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகளை தட்டிக் கேட்டமை, மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சீரிய முடிவுகளை எடுப்பதற்கு பல்கலைக்கழக பேரவை ஒத்துழைப்பு வழங்காமை போன்ற காரணங்களால் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியல் ரீதியில் அழுத்தங்கள்.. யாழ் பல்கலையில் சம காலத்தில் தமிழ் இனத்துக்கும் எதிர்காலத்துக்கும் நம்பிக்கைத்தரகூடிய ஒரு ஆளுமை பல்கலையின் பேரவையின் முடிவின…
-
- 5 replies
- 660 views
- 1 follower
-
-
பிரபாகரன் இறந்து விட்டார் - விஜயகலாவின் கருத்துக்கு டக்லஸ் பதில் எமக்கு கிடைத்த தகவல்களின் படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என, முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் இரண்டாவது ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் பிரபாகரனின் மரணச் சான்றிதல் இன்றும் வழங்கப்படவில்லை என்ற கருத்தை வௌியிட்டிருந்தார். இது குறித்து இன்று ஊடகவியலாளர் ஒருவர் முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், …
-
- 5 replies
- 793 views
-
-
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்தியாவை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1k views
-
-
யாருடன் போராடுவதற்காக பாதுகாப்புக்காக 355 பில்லியன் நிதி ஒதுக்கீடு – பாராளுமன்றத்தில் விக்கினேஸ்வரன் கேள்வி 2021 ஆம் ஆண்டு யாருடன் போராடுவதற்காக 355 பில்லியன் ரூபாவை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளீர்கள். தமிழர்களுடனா, இந்தியர்களுடனா அல்லது மேற்கத்தைய நாட்டவர்களுடனா போராடப்போகின்றீர்கள் என தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார். அத்துடன் தமிழர்களை நம்பி அவர்களின் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அவர்களுக்குரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளது. நாம் நாட்டைப்பிரிக்க கேட்கவில்லை. ஒரே நாட்டுக்குள் எம்மை நாமே ஆள வழி விடுங்கள் என்றே கேட்கின்றோம். அவ்வாறு செய்தால் நாமும் …
-
- 5 replies
- 1k views
-
-
வன்னியில் நடைபெறும் மனித அவலத்தின் காரணமாக அவுஸ்திரேலியா, சிட்னி வாழ் 3 தமிழ் இளைஞர்கள் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று சனிக்கிழமை மாலை 5 மணி முதல் Parramatta Church St ல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சுதா தனபாலசிங்கம், மதிவண்ணன் சின்னதுரை, பிரதீபன் இராஜதுரை ஆகிய மூன்று தமிழ் இளைஞர்களுமே உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் முன்வைத்துள்ள நான்கு கோரிக்கைகள்:- 1. உடனடி போர் நிறுத்தம் அமுல்படுத்த வேண்டும் 2. போர் தளத்தில் இருக்கும் தமிழ் உறவுகளுக்கு அத்தியாவசியமான உணவு தண்ணீர் மற்றும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாக வேண்டும் 3. போர் தளத்தில் தவிக்கும் தமிழ் மக்களுக்கு மருத்துவ உதவி உடனடியாக…
-
- 5 replies
- 904 views
- 1 follower
-
-
ஈழத்தமிழரை காக்கக்கோரி பெங்களூரில் தமிழக உறவுகளால் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பெங்களூரில் “மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்” இன்று ஞாயிறு காலை (07/06/2009) நடைபெற்றது. முன்னதாக பெங்களூரு கிழக்குத் தொடர்வண்டி நிலைய திடலில் எழுச்சி கரமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கருநாடகத் தமிழ் மக்கள் இயக்க தலைவர். சி.இராசன் தலைமை தாங்கி உரையாற்றினார். தொடர்ந்து பேராசிரியர். பாப்பையா தமிழீழ மக்களுக்கான ஆதரவை தனது கன்னட உரையின் வழித் தெரிவித்துக் கொண்டார். சிறப்புரையாற்றிய இயக்குநர் சீமானின் உணர்ச்சிக் கரமான உரையைக் கேட்டு கூடியிருந்த தமிழர் கூட்டம் உணர்ச்சி பிழம்பாகவே மாறிவிட்டது. குடும்ப நலனுக்காக…
-
- 5 replies
- 1k views
-
-
யாழ்.போதனா பணிப்பாளராக மீண்டும் மருத்துவர் த.சத்தியமூர்த்தி September 3, 2021 யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரினை கருத்தில் கொண்டு மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் பொறுப்பேற்கிறார். மேற்படிப்புக்காக கடந்த பெப்ரவரி ஆரம்பத்தில் பிரித்தானியா சென்றிருந்த அவர், தனது பொறுப்பை தற்காலிகமாக பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்திருந்தார். எனினும் தற்போது விடுமுறையில் நாடு திரும்பிய மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தியை பணிப்பாளர் பொறுப்பை ஏற்க சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டது.அதற்கமைய அவர் தனது மேற்படிப்பை…
-
- 5 replies
- 670 views
-
-
எதிர்வரும் அரச தலைவர் தேர்தலை முன்னிட்டு உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதற்கான அறிவிப்பை மகிந்த ராஜபக்ச வெளியிடவுள்ளார். வலிகாமம்-வடக்கு பிரதேசங்கள், பளை, தனங்கிளப்பு அரியாலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொடர் காவலரண்களை உடைத்து அகற்றும் பணி இன்று ஆரம்பிக்கப்படவிருக்கிறது. அதற்கான பாரிய இயந்திரங்கள் யாழ்ப்பாணத்திற்கு ஏற்கனவே வரவழைக்கப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கிறது. உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டாலும் இராணுவத்தினர் நிலைகொண்டிருக்கு முன்னரங்க பாதுகாப்பு வேலிகள் தொடர்ந்தும் பேணப்படவுள்ளது. அதாவது உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டாலும் இராணுவத்தினரின் பிரசன்னம் இருக்கும். பொதுமக்கள் தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலம் உயர் ப…
-
- 5 replies
- 769 views
-
-
இன்றைய குரலுக்குரிய அம்மாவின் 3ஆண்பிள்ளைகளும் மண்ணுக்காக மடிந்து போனார்கள். இன்னும் ஒரு 17வயது மகன் முள்ளிவாய்க்காலில் காணாமல் போய்விட்டான். இன்றைய அம்மாவின் நம்பிக்கை 9வயது மகள் மட்டுமே. இரவல் வீடுகளில் அம்மாவின் வாழ்வு இப்போது கழிகிறது. தனது பிள்ளைகளை இழந்த வலியும் வேதனையும் நிரம்பிய மனசுக்குள் உறைந்து துயரங்களை யாருக்கும் சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது துயரங்களால் தின்னப்பட்டுக் கொண்டிருக்கிறார். பள்ளிக்குச் செல்லும் 9வயது மகளின் விருப்பங்களை நிறைவுசெய்ய முடியாது தனக்குள் குமுறும் இந்தத்தாய் தனது மகளுக்கான கல்வியைக் கோருகிறார். தானில்லாது போனால் தனது மகளை காப்பாற்றுங்கள் எனக்கெஞ்சுகிறாள். இந்தத்தாய் போல் பல்லாயிரம் தாய்கள் தங்கள் காணாமற்போன பிள்ளைகளையும…
-
- 5 replies
- 1.8k views
-
-
சம்பூரை நோக்கிய படையெடுப்பில் இதுவரை தாங்கள் கட்டைப்பறிச்சான் வரை முன்னேறி விட்டதாகவும்..சம்பூரை அடைய இன்னும் 2 கிலோமீற்றர்கள் மட்டுமே உள்ளதாகவும் சிறீலங்கா படைத்துறைத் தலைவர் கூறியுள்ளார். அதையும் தாங்கள் சில தினங்களுக்குள் பிடித்து திருமலையை புலிகளிடமிருந்து பாதுகாத்துவிடுவினமாம்..! இதேவேளை சண்டைக்குப் பயந்து வெளியேறிய முஸ்லீம் மக்களை இராணுவம் வெளிச்செல்ல அனுமதிக்கவில்லையாம்..! சம்பூர் இராணுவ நடவடிக்கையில் இராணுவத்தின் முன்னேற்றம் குறித்து புலிகள் இன்னும் எதுவும் சொல்லவில்லை..! Fonseka vows to capture Sampur [TamilNet, August 31, 2006 09:25 GMT] Sri Lanka Army (SLA) commander Lt. Gen. Sarath Fonseka vowed Thursday to take control of Tamil Tiger…
-
- 5 replies
- 2.4k views
-
-
70 வயதில் விக்கி தமிழ்த் தேசியம் பேசுகிறார் – கைலாகு தராத முன்னணி – TNAயில் ஒட்டுக் குழு இல்லையா? யாழ்.மாநகர சபையில் ஈ.பி.டி.பி. யின் முதலாவது பிரேரணை ஊழலை விசாரணை செய் என்பதே .. தமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை பௌத்த சிங்கள கலாசாரத்திற்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு 70 வயதில் வந்து தமிழ் தேசியம் கதைக்கின்றார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம். ரெமிடியஸ் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …
-
- 5 replies
- 617 views
-
-
குடாநாட்டில் உள்ள அரச அலுவலகங்களில் சுடிதார் அணியவும் தடை * Tuesday, January 25, 2011, 17:35 யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் கடமையாற்றும் பெண் ஊழியர்கள் சேலை அணிந்தே கடமைக்கு வரவேண்டும் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபரினால் பணிக்கப்பட்டுள்ளது. பெண் அரச ஊழியர்கள் அலுவலக கடமை நேரங்களில் பஞ்சாபி அல்லது சுடிதார் அணிந்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டை மற்றும் குட்டைப் பாவாடைகளை அணியக்கூடாது என்ற தடை ஏற்கனவே இருந்து வருகிறது. கடந்த வாரம் யாழ். செயலகத்தில் இடம் பெற்ற பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர்களுடனான கலந்துரையாடலில் பெண் ஊழியர்களை சேலை அணிந்து கடமைக்குவர பணிப்பதெனத் தீர்மானிக்க…
-
- 5 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா புலநாய்வுத்துறையின் பிரச்சார வீடியோ இனம் தெரியாத முகம்தெரியாத நபர் ( கே.பீ யின் ஆளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்) ஒருவரால் எனக்கு அனுப்பப்பட்ட வீடியோ. அதிலுள்ள இணைப்புகளைப் பாருங்கள். http://www.youtube.com/watch?v=zO82y30UecI&feature=player_embedded http://www.youtube.com/watch?v=zO82y30UecI&feature=player_embedded
-
- 5 replies
- 1.2k views
-
-
சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவுடன் குவான்சூவில் உள்ள ஆறு ஆலமர ஆலயத்திற்கு வழிபடச் சென்றார். ...
-
- 5 replies
- 2.3k views
-
-
ஜப்பானின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை இடைநிறுத்துவதற்கு இலங்கையின் அப்போதைய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானிய பிரதமர் ப்யுமியோ கிசிடாவிடம் தமது மன்னிப்பை கோரியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் முன்கொரணப்பட்ட இந்த திட்டம், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்யப்பட்டது. இந்தநிலையில் டோக்கியோவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவிற்கும் இடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இருதரப்பு பாரிய திட்டங்களை உடன்பாடு இன்றி நிறுத்தவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில…
-
- 5 replies
- 684 views
- 1 follower
-
-
சிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம்? இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்துள்ளதைக் கண்டித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அபிவிருத்திக் குழு தீர்மானம் நிறைவேற்றக்கூடும் எனத் தெரிகிறது. மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியோ அல்லது சிறிலங்கா அரசாங்கத்தை கண்டனம் செய்தோ ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அபிவிருத்திக் குழு தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை நிலைமைகள் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த மூன்று மணிநேரம் நடைபெற்றதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திலும் இத்தகைய விவாதம் நடைபெற உள்ளது. ஐரோப்பிய அபிவிருத்திக் குழுவின் இலங்கை நிலைமைகள் தொடர்பான கூட்டம் எதிர்வரும்…
-
- 5 replies
- 2.4k views
-
-
சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 18 ஜூலை 2011 கூறுகிறார் மகிந்த இனப்பிரச்சினை பற்றி ஒன்றுக்கொன்று முரணாகக் கதைப்பவர்களது குழந்தைகளும் மனைவிமாரும் வெளிநாடுகளிலேயே இருக்கின்றார்கள். அவர்கள் தமது அரசியல் நலனுக்காகவே வேறுபாடுகளை உருவாக்க முற்படுகிறார்களென குற்றஞ்சாட்டியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இன்று யாழ்ப்பாணத்திற்காக விஜயம் ஒன்றினை மேற்கொண்டு சென்றிருந்த அவர் வேலணையில் தனது பிரச்சாரக் கூட்டத்தினை ஆரம்பித்திருந்தார். இன்றைய பிரச்சாரக் கூட்டத்தில் அவர் தீவக மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். கடந்த தேர்தல்களில்; தீவக மக்களே அரசிற்கு கூடிய ஆதரவு அளித்ததாகத் தெரிவித்த அவர் இந்த வகையிலேயே வடக்கிற்கான பிரச்சார நடவடிக்கைகளில் முதலாவது பிர…
-
- 5 replies
- 992 views
-
-
மறக்கமுடியாத வடுவான சுனாமி பேரழிவு – 14 ஆண்டுகள் ஆகியும் மறையாத சுவடுகள்! 2004 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 26 ஆம் திகதி அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா யாவா தீவுகளில் கடலுக்கடியில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வைத் தொடர்ந்து உருவாகிய ஆழிப்பேரலையானது இந்து சமுத்திரத்தின் கரையோர நாடுகளை தாக்கிய பேரனர்த்தத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள் நாளை ஆகும். உலகையே உலுக்கிய சுனாமி என்ற ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தால் ஏற்பட்ட பேரழிவின் சுவடுகள் 14 ஆண்டுகள் ஆன பின்பும் மறையவில்லை. இந்தோனேசியாவின் சுமத்ராவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் உருவான சுனாமிப் பேரலை, இந்தோனேசியாவை மாத்திரமல்லாது இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மாலைதீவு, பங்களாதேஷ் என ஏறக்குறைய 12 நாடுகளின் கரையோரப் பகுதிகளை அழித்தத…
-
- 5 replies
- 1.6k views
-
-
செஞ்சிலுவை சங்க பணியாளர்களின் கொலையுடன் தொடர்புடையவர்கள் வன்னிப் பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டனர்: ரம்புக்வெல. இலங்கை செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகளை பொலிசார் இனம் கண்டுள்ளதாகவும் எனினும் அவர்களை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளார் மகாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார் செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் இருவரின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் அரசாங் கட்டுப்பாடற்ற வன்னி பிரதேசத்திற்குள் தப்பிச் சென்று விட்டதாகுவம் அதனால் அவர்களை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் எனினும் ச…
-
- 5 replies
- 1.8k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யெற்பாட்டுடன் இணைந்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துக்கொண்டு பேச்சுவார்த்தையினை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா புத்திமதி கூறவேண்டும் என ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெவித்துள்ளார். இந்திய வெளியுறவு அமைச்ர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார். கிளிநொச்சி, அறிவியல் நகரில் புனரமைக்கப்பட்ட சிவபாத கலையகம் எனும் பாடசாலையின் கட்டடத்தினை கிருஷ்ணா திறந்து வைத்தார். இங்கு இடம் பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கூறினார். இந்த வைபவத்தில் அமைச்ர்களான பஷில் ராஜபக்ஷ, ரிசாத் பதியுதீன், வடமா காண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி, உட்பட பலரும் கலந்து கொ…
-
- 5 replies
- 872 views
-
-
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் பிரதிநிதிகள் பெயர்களை வழங்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வேறெந்த நாடுகளினதும் அழுத்தம் கிடையாது. இந்த விடயத்தில் கூட்டமைப்பின் செயற்பாடு மிகவும் சுதந்திரமாகவே உள்ளது. எமக்கு அழுத்தங்கள் இருப்பதாகக் கூறப்படுபவற்றை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் அழுத்தங்களின் காரணமாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான பிரதிநிதிகள் பெயர்களைத் தமிழ்க்கூட்டமைப்பு வழங்குமெனத் தகவல்கள் வெளிவந்திருப்பது குறித்துக் கேட்டபோதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: நாடாளுமன்றத் தெரிவு…
-
- 5 replies
- 1.1k views
-
-
45 தமிழக மீனவர்களுக்கு 10 கோடி ரூபா அபராதம் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 35 நாட்டுப்படகு மீனவர்கள், 10 விசைப்படகு மீனவர்கள் என 45 தமிழக மீனவர்களுக்கு மொத்தம் 10 கோடி ரூபா அபராதம் விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் திகதியன்று கைது செய்தனர். அவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் முற்படுத்தியபோது நீளமான ஒரு நாட்டுப் படகிலிருந்த 12 மீனவர்களுக்கு தலா ரூ. 35 இலட்சம் அபராதமும், மற்ற மூன்று நாட்டுப் படகிலிருந்த 23 மீனவர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் அபராதமும் விதித்…
-
-
- 5 replies
- 545 views
-