ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143639 topics in this forum
-
928 கிலோ கொக்கைன் சிக்கிய, அழிந்ந கதை போதைப் பொருள். இன்று நாட்டுக்கு மிகவும் அச்சுறுத்தலாக மாறி வருகின்ற ஒரு சாபம். இந்த போதைப் பொருளை முற்றாக நாட்டில் இருந்து ஒழிக்க பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பங்களிப்புடன் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அமுல் படுத்தி வரும் நிலையில், நாளுக்கு நாள் போதைப் பொருள் கடத்தல்காரர்களும் தமது திட்டங்களை மாற்றி வருகின்றனர். இந் நிலையில் அவற்றை முறியடித்து, போதைப் பொருளினை கைப்பற்றும் பொலிஸார் அவ்வாறு கைப்பற்றப்படும் போதைப் பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என தொடர்ச்சியாக மக்கள் எழுப்பி வந்த கேள்விக்கு, இது தான் இறுதியில் நடக்கும் என செயல் ரீதியாக பதிலளித்தனர். …
-
- 4 replies
- 481 views
-
-
ஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு அடுத்த 12 மாதங்களில் ஒரு இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளை சிறிலங்காவுக்கு ஈர்க்கும் வகையில், சீன நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. கொழும்பில் நேற்று இந்த உடன்பாடு, சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. பீஜிங்கைத் தளமாக கொண்ட யிங்கி ட்ரவல் நிறுவனத்துடனேயே, சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் உள்ள கிறீன் லீவ்ஸ் லெய்சர் நிறுவனம் இந்த புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது. சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதன் மூலம், 120 மில்லியன் டொலர் வருமானத்தை எதிர்பார்த்து இந்த…
-
- 4 replies
- 669 views
-
-
யாழ்ப்பாணம் மத்திய புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறையை நோக்கி யாழ்தேவி, ஞாயிற்றுக்கிழமை (28) தனது பரீட்சார்த்த சேவையை ஆரம்பித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தையும் ஊடறுத்து யாழ்தேவி புகையிரதம் காங்கேசன்துறையை அடைந்தது. இந்த பரீட்சார்த்த சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்து, காங்கேசன்துறைவரை புகையிரதத்தில் பயணத்தையும் மேற்கொண்டிருந்தார். எதிர்வரும் 2ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் யாழ்தேவி புகையிரத சேவை காங்கேசன்துறைவரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.tamilmirror.lk/…
-
- 4 replies
- 652 views
-
-
ஆயுதக் குழுக்களின் தாக்குதல் சாத்தியம் : நாடும் திரும்பும் ஜனாதிபதிக்கு உயர் அடுக்கு பாதுகாப்பிற்கு உத்தரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி நாட்டிற்கு வரும் போது உயர் அடுக்கு வாகன பேரணிக்கு, எதிரான அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் சில வகையான நாச வேலைகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். ஆயுதக் குழுக்களின் தாக்குதல்…
-
- 4 replies
- 393 views
-
-
வடபகுதி மக்களுக்கான இந்திய வீடமைப்புத் திட்டம் பல்வேறு காரணங்களால் தாமதம்: இந்தியப் பிரதித் தூதுவர் விக்ரம் மிஸ்ரி ஏற்றுக் கொள்கிறார் [Monday, 2011-07-11 22:56:48] போரினால் பாதிப்புகளுக்கு உள்ளாகிய வடபகுதி மக்களுக்கான இந்திய வீடமைப்புத் திட்டம் பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ளதாக இந்தியப் பிரதித் தூதுவர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். ஆரம்ப கட்டமாக, ஆயிரம் வீடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படும் என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.வடக்கு மக்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இந்தியா ஒன்றிணைந்த சக்தியாகத் தொடர்ந்து செயற்படும் எனவும் இந்தியப் பிரதித் தூதுவர் தெரிவித்தார். வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற இந்திய வீடமைப்புத் திட்டம் மற்…
-
- 4 replies
- 405 views
-
-
சம்பந்தன் வளர்த்த கடா அவர் மார்பில் பாய்ந்து விட்டது என அவருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் தமிழரசுக்கட்சி கொழும்புக்கிளைத் தலைவரும், கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரந் குறித்தே அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தின் முழு விவரம் அப்படியே வருமாறு:- நீங்கள் வளர்த்த கடா உங்கள் மீது பாய்ந்துவிட்டது. ஆப்பிரஹாம் சுமந்திரனின் தன்னிச் சையான முடிவுகளால் தமிழ்த் தேசியம் தேய்ந்து, கட்சிக்கு ஏற்படுகின்ற பாதிப்பு களைத் தவிர்ப்பதற்காக கடந்த காலத்தில் நான் உங்களுக்கு பல கடிதங்களை எழுதியிருந்தேன். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக நீங்கள் அவரின் மீது எவ்வித ஒழுக்காற்று நடவ…
-
- 4 replies
- 992 views
-
-
இலங்கைக்கு மீண்டும் வருகைதந்ததையிட்டும் பழைய நண்பர்களைக் காணக்கிடைத்ததையிட்டும் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த இரு தினங்களாக கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பரந்தளதவிலான சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தேன். http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=2695:2011-09-14-07-33-29&catid=1:latest-news&Itemid=18'>http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=2695:2011-09-14-07-33-29&catid=1:latest-news&Itemid=18 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிஸ் , ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதி…
-
- 4 replies
- 1.1k views
-
-
முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றனர் Editorial / 2019 ஜூன் 19 புதன்கிழமை, மு.ப. 11:31 அமைச்சுப் பதவிகளில் இருந்து அண்மையில் விலகிய, முஸ்லிம் பிரதிநிதிகளில் இருவர், இன்று (19) மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இதற்கமைய, கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோரே, இவ்வாறு அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/செய்திகள்/முஸ்லிம்-அமைச்சர்கள்-இருவர்-மீண்டும்-பதவியேற்றனர்/175-234369
-
- 4 replies
- 1.1k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கிளிநொச்சி:- கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக 3200 குடும்பங்களைச் சேர்ந்த 11500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்திரம் அருமைநாயகம் இன்று ஞாயிற்றுக் கிழமை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளத்தினால் இடம்பெயர்ந்து 300 வரையான குடும்பங்கள் 12 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆவர்களுக்கான முதற்கட்டமாக சமைத்த உணவு வழங்க்கப்பட்டு வருகிறது. அது மட்டுமன்றி படுக்கை விரிப்பு, படுக்கை விரிப்பு, சிறுவர்களுக்கான பால்மா என்பனவும் வழங்கியுள்ளதாக தெரிவித்த அரச அதிபர், கரைச்சி பிரதேச செ…
-
- 4 replies
- 398 views
-
-
மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மதுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று (26-04-2012) துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் களுபோவில மதுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களுபோவில மதுத்துவமனையில் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்கவிடம் வினவியபோது, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டதாக அவருக்கு வயிறு பகுதியில் அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அனில் ஜயசிங்க குறிப்பிட்டார். ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் காவல்துறை பாதுகாப…
-
- 4 replies
- 805 views
-
-
கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.! சிவா பசுபதியிடம் விரக்தியில் கூறினார் விக்னேஸ்வரன் ! இணையங்களில் வந்த செய்தியை உறுதிப்படுத்தியது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. முன்நாள் சட்டமா அதிபர் திரு சிவா பசுபதி அவர்களிடம், வட மாகாண சபை முதல்வர் திரு விக்னேஸ்வரன் விடுத்த வேண்டுகோளை அவர் மறுத்ததாகவும், அதனால் முதல்வர் விசனமுற்றதாகவும் வந்த செய்தி பற்றி திரு விக்னேஸ்வரனிடம் வினவியபோது, இது தமிழ் மக்கள் பேரவைக்கு எதிரானவரின் விசமத்தனமான செயல் என்றும், தான் அது பற்றி கருத்து கூறத்தேவையில்லை என கூறியுள்ளார். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல் அரசியல்வாதிகள் பலதுபட்டால் செய்தியாளர் காட்டில் மழை. உண்மையில்லாமல் தானாக கை கால் முளைத்து அந்த செய்தி உலாவரவில்…
-
- 4 replies
- 555 views
-
-
நீதிக் கட்டமைப்புக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளித்துள்ளனர்- இலங்கை பிரதம நீதியரசர் இலங்கையின் நீதிக் கட்டமைப்புக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளித்திருப்பதாக பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் நீதிமன்றங்களை அமைப்பதற்கு நீதியமைச்சர் எடுத்திருக்கும் நடவடிக்கையையும் அவர் பாராட்டியுள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நீதிமன்றங்களை அமைப்பதற்கு நீதியமைச்சர் எடுத்திருப்பதாகவும், அவ்வாறு அமைக்கப்பட்ட நீதிமன்றங்கள் மீது தாக்குதல் நடத்தாமல் நீதிக் கட்டமைப்புக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளித்திருப்பதாகவும் நீதியரசர் குறிப்பிட்டார். நாட்டின் நீதித்துறையை கட்டியெழுப்புவதற்…
-
- 4 replies
- 2.3k views
-
-
வீரகேசரி நாளேடு 10/27/2008 - ராடர் கருவிகள் உள்ளிட்ட இலகுரக இராணுவ தளபாட உதவிகளே இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் எந்தப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவர் பசில் ராஜபக்ஷ எம்.பி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியுடன் நேற்று முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தி மத்திய அரசிற்கும் தி.மு.க.விற்கும் இடையில் நிலவிய முறுகலுக்கு சுமுக தீர்வை ஏற்படுத்திய பின்னர் இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மேலும் கூறியுள்ளதாவது: இலங்கை தமிழர் பி…
-
- 4 replies
- 975 views
-
-
குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம். குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் “ஆலயத்திற்குச் சென்ற பயணிகள் படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த படகில் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் எனப் பலர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் உடனடியாக ஈடுபட்டுள்ளனர். இதில் மூன்று பேர் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மே…
-
- 4 replies
- 280 views
- 1 follower
-
-
யாழில் இருந்து மேலும் படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பி வைப்பு திகதி: 26.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] பெரும் இராணுவப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா அரசு தற்போது கிழக்கு மற்றும் யாழ்குடாவில் நிலைகொண்டுள்ள படையினரை அங்கிருந்து எடுத்து வன்னிக் களமுனைக்கு அனுப்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் கிழக்கில் இருந்து 500 படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்காப் படையினரின் படைத்தளங்களிலுள்ள படையினர் குறைக்கப்பட்டு அங்குள்ள படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் பருத்துறை, அச்சுவேலி, யாழ்ப்பாணம் படைத்தளங்களில் படையினர் இவ்வாறு குறைக்கப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டுள்…
-
- 4 replies
- 2.9k views
-
-
அன்டனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி -சண்முகம் தவசீலன் சனிக்கிழமை காலை மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதனின் பூதவுடல், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையிலிருந்து உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சனிக்கிழமை 5.30 மணியளவில் எடுத்துச்செல்லப்பட்டு முல்லைத்தீவு நகரிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனையடுத்து, நாடாளுமன் உறுப்பினர் சிவமோகன், வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், க.சிவநேசன் லிங்கநாதன், இந்திரராசா ஜெனோபர் உள்ளிட்டவர்களும் ஏராளமான பொதுமக்கனும் அஞ்சலி செலுத்தினார்கள். …
-
- 4 replies
- 575 views
-
-
(செ.தேன்மொழி) 'வியத்மக ' அமைப்பினூடாக புத்திஜீவிகளை உள்ளடக்கிய ஆட்சிமுறையை முன்னெடுப்பதாக கூறிக்கொண்டு அரசாங்கத்தை அமைத்தவர்கள், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்கி உலகச்சாதனை புரிந்துள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல கூறினார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தன்னை மாறுப்பட்ட பண்புக் கொண்ட ராஜபக்ஷ ஒருவராகவே காண்பித்துக் கொண்டிருந்தார். வியத்மக அமைப்பின் ஊடாக புத்திஜீவிகளை உள்ளடக்கிய ஆட்சி முறையை முன்னெடுக்கப்போவதாகவே தெரிவித்து வந்தார். அதன் காரணமாகவே மக்கள் அவரை …
-
- 4 replies
- 536 views
-
-
யாழ்ப்பாண சிங்கள ராணுவத்தின் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவின் கட்டளைப்படி கஜபாகு படைப்பிரிவின் இரண்டாவது கட்டளையிடும் அதிகாரியான மேஜர் பத்திரண தலமையிலான இராணுவக்குழுவே யாழ் உதயன் பத்திரிக்கையாலயத்தை எரித்ததாக சிங்கள இணையத்தளமான லங்கா ஈ நியூஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. அது மேலும் தெரிவிக்கையில், மகிந்த ஹத்துருசிங்கவுக்கு மிகவும் நெருக்கமான மேஜர் பத்திரன, ஹத்துருசிங்க மனநோய் சிகிச்சை பெற்று வந்த வேளையில் அவருக்குத் தேவையான உதவிகளை வழங்கிவந்ததாகவும், இதனாலேயே அவரிடம் இந்த தாக்குதல் வேலை ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உதயன் பத்திரிக்கையாலயம் மீதான தாக்குதலுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஹத்துருசிங்க தலமையில் நடை…
-
- 4 replies
- 1.1k views
-
-
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய போட்டியில் பதக்கம் வென்ற வவுனியா மாணவி! [saturday, 2013-10-05 14:11:01] நடைபெற்று வரும் தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் 21 வயதிற்குட்பட்ட 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த கமலநாதன் லேகாஜினி மூன்றாம் இடத்தை பெற்று வெங்கலப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இப்போட்டிகள் நேற்று முன்தினம் ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றன. வவுனியா சைவப்பிரகாச இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான கமலநாதன் லேகாஜினி இந்தவருடம் நடைபெற்ற 55ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள், வவுனியா மாவட்ட தேசிய விளையாட்டு விழா, வடமாகாண தேசிய விளையாட்டு விழா என்பவற…
-
- 4 replies
- 577 views
-
-
மனோ கணேசனுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். https://www.dailymirror.lk/breaking_news/Mano-Ganesan-contracts-COVID-19/108-224976 விரைவில் நலம் பெற வேண்டும்.
-
- 4 replies
- 488 views
-
-
தற்போது இலங்கை வந்துள்ள உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://www.newswire.lk/wp-content/uploads/2022/02/IMG-20220225-WA0032.jpg உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தே குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://www.newswire.lk/wp-content/uploads/2022/02/IMG-20220225-WA0031.jpg ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை குறிப்பிட்டு பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட உக்ரேனியர்கள் கோஷமிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன் உக்ரேனிய பிரஜைகள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
-
- 4 replies
- 584 views
-
-
திருடர்களுடன் சேர்ந்து ஆட்சியமைத்தால் மக்கள் மீண்டும் பாடம்புகட்டுவர் ; சந்திரிகா Weiterempfehlen அரசாங்கம் திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைத்தால் மக்கள் மீண்டும் பாடம்புகட்டுவரென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். கட்டுநாயக்கவில் அமைந்துள்ள விஜயகுமாரதுங்கவின் நினைவுத் தூபிக்கு அஞ்சலிசெலுத்திவிட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் ஊடகவியலாளர்கள் உங்களது பேரனார் அரசியலில் ஈடுபடுவாரா என கேட்டதற்கு, அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா என அரசியலுக்குள் நுழைய வேண்டிய அவசியமில்லை. மக்கள் எவ…
-
- 4 replies
- 599 views
-
-
சம்பந்தனின் ‘13’ கனவை நிராகரிக்கிறாரா விக்கி? – குறைகள் தொடர்பில் மோடியிடம் விளக்கத்தயார் என்கிறார்!? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் தொடர்பில், இந்தியப் பிரதமருக்கு எடுத்துச் சொல்வதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச் சரை சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினரிடம் அவர் நேற்றுமுன்தினம் நேரடியாகத் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அவரிடம் கேட்ட போது, நான் அழைக்கப்பட்டால், நிச்சயமாக 13 ஆவது திருத்தத்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்குமாறு இந்தியாவை வலியுறுத்தியது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு! வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தில் இடம் பெற்றது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நாடி வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் நடவடிக்கையாகவே இந்த சந்திப்பு இடம் பெற்றதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்தது. https://athavannews.com/2023/1319424
-
- 4 replies
- 383 views
-
-
குடும்பத்தை வாழ வைத்த மாகாணசபை உறுப்பினர்கள்: புதிய கட்சியின் முதலாவது அதிரடி தாக்குதல்! August 24, 2018 வடமாகாணசபை உறுப்பினர்களின் தனிப்பட்ட ஆளணி தொடர்பான விபரங்கள் நேற்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வடமாகாணசபையின் அனேக உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களையே தனிப்பட்ட ஆளணியில் நியமித்து வைத்திருந்ததை இது அம்பலப்படுத்தியிருந்தது. இது குறித்து தமிழ்பக்கத்திற்கு மேலதிக சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை வாசகர்களுடன் பகிர்கிறோம். அண்மையில் ரெலோவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பிக்கும் கணேஸ் வேலாயுதத்தின் அதிரடி தாக்குதலே இந்த தகவல் வெளியானதன் பின்னணி. புதிய கட்சி ஆரம்பித்தாயிற்று, மாகாணசபை தேர்தலும் நெருங்குகிறது, கூட்டமை…
-
- 4 replies
- 1.1k views
-