Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை இனப்பிரச்சினைக்கு சுயாட்சியை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்கு அரசு ஒருபோதும் சம்மதிக்காது எனவும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் நேரத்தில் இப்படியான ஒரு கோசத்தை முன்வைப்பதாகவும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான றாஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். http://www.jdslanka.org/index.php/news-features/politics-a-current-affairs/540-unf-leadership-rules-out-self-government-for-tamils-in-sri-lanka அட அவங்களுக்கும் சம் சும்மின்ரை திருகுதாளங்களை சரியாத் தெரிஞ்சுதான் வைச்சிருக்கிறாங்கள்

  2. புலம்பெயர் நாடுகளில் செயற்படும் டயஸ்போறாவை புலிகளெனவும் அவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் தொடர்புள்ளதாகவும் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினரான அஸ்வர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்றையதினம் நடைபெற்ற பெருந்தெருக்கள் மீதான சட்டமூலத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் 2009ம் ஆண்டுடன் அரசாங்கம் புலிகளை அழித்துவிட்டதாக கூறி அரசியல் செய்த நீங்கள் இப்போது கூட்டமைப்பு அரசாங்கத்தை விமர்சித்தால் அதற்கு தகுந்த பதில் தராமல் கூட்டமைப்பு புலிகள் கேட்டதையே கேட்கின்றது கூட்டமைப்புக்கு புலிகளுடன் தொடர்பு என மீண்டும் புலிகளை வைத்து அரசியல் செய்வது நீங்கள…

  3. இயலாமையினால் அரசாங்கம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் முழு நிர்வாண கோலத்திலேயே உள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டுக்கும் ஆப்புவைத்துள்ள அரசு, நிவாரணங்களை நம்பியிருந்த மக்களை கஞ்சிக்கும் வழியில்லாமல் ஆக்கிவிட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. சாதாரண மக்கள் பாவிக்கும் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு கூட அரசாங்கம் மோசமான முறையில் வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளது. உண்மையான மக்கள் பிரச்சினைகளை மடி மறைத்து அரசு புதிய வகையான மாயா ஜாலங்களை காலத்துக்கு காலம் நடத்தி வருகின்றது என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. …

    • 4 replies
    • 1.1k views
  4. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா மூன்று தடவைக்கு மேல் பணித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ‘நான் ஏற்றமாட்டேன்’ என கூறி மறுத்துள்ளார். அத்துடன் “ஏற்றுவதற்குரிய காலம் வரட்டும் அப்போது பார்ப்போம்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். சமூக சேவைகள் அமைச்சினால் விசேட தேவையுடையோருக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது இதன்போது, தேசியக் கொடியேற்றும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை தேசிய கொடி ஏற்றுமாறு சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா கோர…

  5. வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கையர்களில் 1043 பேர் கடந்த மூன்று வருடங்களில் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களில் தொழில்வாய்ப்புகளுக்காக இலங்கையர்கள் 29 நாடுகளுக்கு சென்றிருந்தார்கள். அவர்களுள் இந்த 1043 பேரும் உள்ளடங்குவதாக அந்த பணியகத்தின் பிரதி முகாமையாளர் ஜெகத் படுகெதர தெரிவித்தார். வேலைவாய்ப்புக்களுக்காக வருடாந்தம் வெளிநாடுகளுக்கு சென்று கொடுமைக்குள்ளாகும் இலங்கையர்கள் தொடர்பில் வினவிய போதே அவர் இதனை கேசரிக்கு தெரிவித்தார். தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வோரில் பலர் விபத்துக்கள் , தற்கொலைசெய்து கொள்ளல் ,இயற்கை மரணம் , அந்த நாடுகளின் சட்டத்தை மீறி செயற்பட்…

    • 4 replies
    • 1.1k views
  6. வளரியின் அறிமுகம் http://www.valary.tv/

    • 4 replies
    • 1.3k views
  7. முல்லைத்தீவு மாவட்டத்தின் தென் பக்க முடிவும், திருகோணமலை மாவட்டத்தின் வட திசை தொடக்கமும்தான் கொக்கிளாய். அதாவது இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கினதும், கிழக்கினதும் இதயம் கொக்கிளாய். இப்போது இதயத்தில் பிரச்சினை. தமிழர்களின் இதய நிலத்துக்கு அபாயம். 1984 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதி அது. கடற்றொழில் நிமித்தம் நீர்கொழும்பு பக்கமிருந்து வந்து, கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறியிருந்த 13 சிங்கள குடும்பங்களுக்கும் , கொக்கிளாயின் பூர்வ குடிகளான தமிழர்களுக்கும் இடையில் முறுகல்நிலை உண்டானது. சிங்களவர்கள் தமிழர்களின் வீடுகளை சூறையாடினர். தமிழர்கள் சிங்களவர்களின் வாடிகளைக் கொளுத்தினர். பொலிஸும், ஊர்காவல் படையும் களத்தில் குதித்தது. தமிழர்களை அடித்துத் துவம்…

  8. புதிய அரசியல் யாப்பில், 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு உட்பட்டதாகவே இனப்பிரச்சினைக்கான தீர்வு அமையும் என்றும், வடக்கு கிழக்கு இணைப்பிற்கோ சமஷ்டிக்கோ இடமில்லையென்றும் அரசாங்க உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இந்திய அரசும் ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டத்தினருடனும், இந்திய அதிகாரிகள் பேச்சு நடத்தியிருப்பதாக தெரியவருகிறது. வடக்கு கிழக்கு இணைப்பிற்கு தென்னிலங்கையில் பாரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் இந்தியா அதனை வலியுறுத்தாதென்றும் கூறப்படுகிறது. எனினும், இலங்கை இந்திய உடன்படிக்கை மூலம் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்ப…

    • 4 replies
    • 582 views
  9. இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சிக்கிய தடயங்கள்! யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாய், கூடாவளவு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் 29 வயதுடைய ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்றும் அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் நேற்றிரவு 12:00 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரை பின்தொடர்ந்து சென்ற கொலையாளிகள் அவர் மீது கூரிய ஆயுதங்களினால் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தப்பிக்க இளம் குடும்பஸ்தர் போராட…

  10. விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்ற பிரபல தமிழ் நடிகரின் பெயரைத் தக்க ஆதாரத்துடன் விரைவில் நிரூபிப்பேன் என்று ஜனதாக் கட்சித் தலைவன் அசியல் கோமாளி சுப்பிரமணிய சுவாமி கூறினார். தமிழத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை. இலங்கைப் பிரச்சனையில் தமிழக அரசு மேற்கொண்ட எந்த முயற்சியும் பலன் அளிக்க வில்லை. விடுதலைப் புலகளிளடம் இருந்து பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஒருவரும் பணம் பெற்றிருக்கிறார். இதற்கான ஆதாரத்தை திரட்டி வருகிறேன். விரைவில் அதை நான் நிரூபிப்பேன். என்று பத்திரிகை செவ்வியோன்றில் பேட்டி கொடுக்கும் போது இதனைத் தெரிவித்தார் நன்றி : சுடர் ஒளி

  11. உலகத் தமிழர் பேரவையின் இவ் ஆண்டிற்கான சர்வதேச மாநாடு பிரித்தானிய பாராளுமன்ற கட்டிடத்தில் 27.02.2013 புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், சர்வதேசத்தின் இலங்கை மீதான அழுத்தங்களும் அதிகரித்துவரும் சூழலில் இம் மாநாடு மேலும் இலங்கை அரசிற்கு நெருக்கடிகளை கொடுக்கும் முகமாக அமைந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்த இம் மாநாட்டில் பிரித்தானியாவின் மூன்று பெரும் அரசியல் கட்சிகளையும் சேர்ந்த முக்கிய அமைச்சர்களான , பிரித்தானியத் துணைத் தலைமை அமைச்சரும், லெபரல் ஜனனாயகக் கட்சியின் தலைவருமான NICK CLEGG, பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் ED MILIBAND, லிபரல் ஜனனாயக கட்சியில் மூத்த தலைவரும், அமைச்ச…

    • 4 replies
    • 654 views
  12. ப.சிதம்பரத்தின் ‘இராஜபக்சே’ குரல்! - விடுதலை க.இராசேந்திரன் “இலங்கைத் தமிழர்கள் நம்மவர்கள்; அவர்கள் உணர்வும் நம் உணர்வும் ஒன்று தான்; அவர்கள் உரிமை மறுக்கப்பட்டால் நம் உரிமை மறுக்கப் படுவதுபோல் துடிக்கிறோம்” என்ற பீடிகையுடன் ப.சிதம்பரம் உரையாற்றுகிறார். இப்படி துடித்துப் போய் நிற்கும், ப.சிதம்பரத்தின் முழு உரையிலும் ராஜபக்சே இராணுவம் நடத்தி வரும் இனப் படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட இடம் பெறவில்லை. ப. சிதம்பரத்தின் துடிப்பில் உள்ள நேர்மைக்கு இது மட்டுமே போதும். மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், மயிலாப்பூரில் பெரும் பொருட் செலவில் ஒரு பொதுக்கூட்டத்தில் தனது வழக்கறிஞர் தொழில் திறமையைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டு மக்களின் உறுதியான ஈழத் தமிழர் ஆதரவு சிந்தனை …

    • 4 replies
    • 956 views
  13. இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ‐ மக்கள் கோரிக்கை ‐ சர்வதேச நீதிமன்றத்தின் சட்டத்தரணி லுயிஸ் மொரேனோ ஒக்கம்பே தெரிவிப்பு: இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பில் இலங்கை மக்கள் தன்னிடம் கேட்டுள்ளதாக சர்வதேச நீதிமன்றத்தின் சட்டத்தரணி லுயிஸ் மொரேனோ ஒக்கம்பே தெரிவித்துள்ளார். நியூஸ் வீக் இதழுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் கருத்து வெளியிட்ட அவர் இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை எனவும் எனக் கூறியுள்ளார். சூடானின் டாபூரில் இனப்படுகொலை மேற்கொள்ளப்படுவது தொடர்பாக அந்த நாட்டு ஜனாதிபதி ஒமர் அல் பஷீருக்கு எதிரான வழக்கில் லுயிஸ் மொரேனோ ஒக்கம்பே, அவ…

    • 4 replies
    • 1.1k views
  14. வடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென சனல்-4 ஊடகத்தின் இயக்குனர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டாலே தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிட்டும். இலங்கையை இரண்டாக பிளந்து தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அது தமிழ் மக்களின் சட்டபூர்வமான உரிமையாகும் என கெலம் மக்ரே குறிப்பிட்டதாக திவயின சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை சீர்குலைப்பதற்கு தூண்டும் நோக்கில் புலி ஆதரவாளர்கள் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்துபசாரமொன்றை அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட…

    • 4 replies
    • 531 views
  15. வைகறை, சென்னை 18/09/2009, 16:43 பாக்குநீரிணையில் சிறீலங்கா கடற்படையினரால் 21 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு! பாக்குநீரிணையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட இருபத்தொரு தமிழக கடற்தொழிலாளர்கள் சிறீலங்கா கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை இரவு பாக்குநீரிணையில் அறுநூறு விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை பீரங்கிக் கலங்களில் சூழ்ந்து கொண்ட சிறீலங்கா கடற்படையினர், மீன்பிடிப் படகுகளை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்துக் கடற்தொழிலாளர்களை கடுமையாகத் தாக்கியதோடு, ஐந்து படகுகளையும் அதிலிருந்த இருபத்தொரு கடற்தொழிலாளர்களையும் சிறைப்பிடித்துச் சென்றுள்ளனர். இதன்பொழுது அவசரமாக கரை திரும்ப முற்பட்ட ஏனைய மீன்பிடிப் படகுகள் …

    • 4 replies
    • 573 views
  16. வன்முறைச் செயல்கள்... இலங்கையில் மீண்டும் நடக்காது, என்பதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது – ஜனாதிபதி! வன்முறைச் செயல்கள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா தொற்றுப் பரவலின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களைப் பறிமாறிக்கொள்ளவும் சிறந்த முறையில் நாடுகளை மீளக் கட்டியெழுப்பவும், பிராந்திய தகவல் மையமொன்றை அமைப்பதற்கான ஒத்துழைப்பு, உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு வழங்க, இலங்கை எதிர்பார்க்கின்றது. வைரஸ் தொற்றுக்கு எதிரான தட…

  17. காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது: ராஜபக்‌ஷேவுக்கு மன்மோகன் சிங் கடிதம். பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவுக்கு காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாததிற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், முன்கூட்டிய திட்டமிட்ட பல நிகழ்ச்சிகள் இருப்பதால் பங்கேற்க முடியவில்லை. தான் இலங்கை வராமல் போனது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். பெரும் சர்ச்சைக்கிடையே இலங்கை தலைநகர் கொழும்பில் காமன்வெல்த் மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங் குகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளக்கூடாது என தமிழக அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என தமிழக…

  18. அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டிப் பகுதியில் வெடி மருந்துடன் ஒருவர் கைது வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டிப் பகுதியில் 10 கிலோ கிராம் வெடி மருந்துடன் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்; குருநகர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ள காவல்துறையினர் குறித்த வெடிமருந்து எதற்காகக் கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்த மேலதிக விசாரணைகளைப் மேற்கொண்டு வருகின்றனர். http://globaltamilnews.net/2018/76415/

  19. ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் : பொதுத்தேர்தலுக்கான நிதி 2025 வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு Published By: DIGITAL DESK 3 13 FEB, 2024 | 01:01 PM ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன் குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கான நிதி, 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும். தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசாங்கம் இணைந்து செயற்படும் என ஜனாதிபத ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை …

  20. May 29, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபை பொதுச் சந்தையைக் குத்தகைக்கு விடவேண்டாமென வலியுறுத்தி சந்தை வியாபாரிகள் இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சந்தை மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டது. போராட்டத்துக்கு நகரப் பகுதி வர்த்தகர்க…

    • 4 replies
    • 1.1k views
  21. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அப்போதைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செய்து கொண்ட வெளிநாட்டு சக்திகளின் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுவரை நீடித்திருந்தால் பிரபாகரன் தமீழத்தின் ஜனாதிபதியாக இருந்திருப்பார் என்றும் ரணில் அவரை சந்திக்க விசா எடுத்தே சென்றிருக்க வேண்டும் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பொழுது அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார். அதன் பொழுது தமிழீழ இராச்சியம் நிறுவப்பட்டிருந்தால் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளங்கள் எமக்குச் சொந்தமில்லாது போயிருக்கும் என்றும் குறிப்பிட்டார். நாட்டை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத…

  22. அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கை விடயத்தில் இணைந்திருப்பது இலங்கைக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் புதுடெல்லிக்கும் கொல்கத்தாவுக்கும் மேற்கொள்ளும் பயணம் குறித்து நெருக்கமாகக் கண்காணிப்பதற்கு கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கான பயணத்தை நேற்று தொடங்கிய ஹிலாரி கிளின்டன் சீனா வழியாக வாசிங்டன் திரும்பவுள்ளார். புதுடெல்லிப் பயணத்தின் போது அவர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மத்தாய் உள்ளிட்ட இந்தியத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்புக்களில் …

  23. 22 AUG, 2025 | 04:17 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) “மலையக தமிழ் மக்கள்” என்ற சொற்பதத்தை சட்ட ஆவணங்களில் உள்ளடக்க தேவையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். சனத்தொகை கணக்கெடுப்பின் போதும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏனைய சான்றிதழ்களிலும் மலையக தமிழ் மக்கள் என்ற சொற்பதம் பயன்படுத்தப்படும். சகலரின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் இதனை செய்வோம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையக வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்…

  24. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற கவனஈர்ப்புப் போராட்டத்தின் சில படங்கள். இதன் காணொளி இணைக்கப்பட்டுள்ளது. நன்றி. மேலும் சில படங்கள் இங்கே. http://www.thayakam.net/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.