ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 20 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாளை காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌனத்தை கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கோரியுள்ளது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி நடந்த சுனாமி பேரழிவில் 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். மேலும், மாவட்ட மட்டத்திலும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/314131
-
-
- 27 replies
- 1.8k views
- 3 followers
-
-
எமது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணனை ஆதரித்து, கட்சியின் கொள்கைக்கு துரோகம் செய்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் 10 உறுப்பினர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (30) சற்றுமுன் தெரிவித்துள்ளார். அத்துடன் மணிவண்ணனை ஆதரித்ததன் மூலம் கட்சியின் கொள்கைக்கு துரோகம் இழைத்து, யாழ்ப்பணம் மாநகர சபையின் எமது கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பத்துப்பேர் டக்ளஸ் தேவானந்தாவுடன், கைகோர்த்து கட்டிப்பிடித்துக் கொண்டுள்ளனர். அவர்களை எமது இயக்கத்தில் இருந்து நீக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார். டக்ளஸை கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கும் 10 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்! | NewUthayan
-
- 27 replies
- 2.6k views
- 1 follower
-
-
09 NOV, 2023 | 12:29 PM (எம்.நியூட்டன்) அரசாங்கம் சைவமக்களை மனம் நோகச்செய்து வருகிறது. கோவில்களையும் காணிகளையும் அபகரித்து வருகிறது. இது அரசாங்கத்துக்கு நல்லதல்ல என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சைவமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர், அரச அதிகாரிகள் எவ்விதமான அக்கறையும் இல்லாமல் இருப்பது மனவருத்தத்தை தருகிறது. ஜனாதிபதி யாழ்ப்பாண விஜயத்தின்போது நல்லை ஆதீனத்தின் குரு முதல்வரையும் என்னையும் சந்தித்து கலந்துரையாடியபோது, காங்கேசன்துறை தல்செவன ஹொட்டல் பயன்படுத்தப்படுகின்ற ந…
-
- 27 replies
- 1.4k views
- 1 follower
-
-
[size=4] [/size] [size=4]ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்துப் போராளிகளுக்கும் தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று தெரிவித்தார்.[/size] [size=4]வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் போராளிகளுக்கு அஞ்சலி தெரிவித்தார். "தமிழ் மக்களின் விடுதலைக்காகவே புலிகள் மற்றும் போராளிகள் ஆயுதம் ஏந்திப் போராடி தமது உயிர்களைத் தியாகம் செய்தனர். இனப்பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில்தான் அவர்கள் தியாகம் செய்தனர்.[/size] [size=4]அப்பாவி இராணுவத்தினரும் உயிரிழந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கு…
-
- 27 replies
- 1.8k views
-
-
தன்னைக் காதலித்த பல்கலைக்கழக மாணவி வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் காரில் ஊருக்கு வந்து இறங்கியதைத் தாங்க முடியாத யாழ். பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருபாலை கிழக்கில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. நீண்ட காலமாக காதலித்த தனது காதலி இந்தியாவுக்கு வழிபாட்டு ஸ்தலத்திற்கு குடும்பத்துடன் சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார். இந்தப் பெண் ஊருக்கு வரும் போது திருமணம் முடித்து புது மாப்பிள்ளையுடன் காரில் செல்வதைக் கண்டதினால் இவர் உயிரை மாய்த்துள்ளதாகவும் உயிரிழந்தவரின் நண்பர்கள் கூறினர். யாழ். பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் பிரிவில் 3 ஆம் வருடத்தில் கல்வி பயின்று வந்த 23 வயதுடைய ஞானேந்திரன் பிரசாத் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாண…
-
- 27 replies
- 2.3k views
-
-
யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தை சர்வதேச அரங்காகப் புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு விருந்தினர்களாகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னோஸ்வரன், இந்தியத் துணைத் தூதரக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா, வடமாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, வடமாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு விளையாட்டு அரங்குக்கான அடிக்கல்லை நட்டுவைத்தனர். இல…
-
- 27 replies
- 1.2k views
-
-
வன்னியில் சிங்களத்தினால் தமிழர்களின் லட்சக்கணக்கான வீடுகள் அழித்தொழிக்கப்பட்டு, இன்று அங்குள்ள எஞ்சிய மக்கள் படங்குகளின் கீழும், மரங்களின் கீழும் ஏதிலிகளாக வாழும் சூழ்நிலையில், மிக வேகமாக வன்னியில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருகிறது. வன்னியில் உள்ள தமிழ் பூர்வீக கிராமமான கொக்கிளாயில் 80களில், அங்கிருந்த மக்களை கொன்றொளித்தும், அவர்களின் உடைமைகளை அழித்தும் அப்பகுதிகளில் இருந்து துரத்திய சிங்களம், அங்கு சில சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தியது. மீண்டும் இப்போது லண்டனில் இருக்கும் சிங்கள இனவாத அமைப்புகளினதும், இனவாதிகளினதும் உதவியுடன் கொக்கிளாயில் மீண்டும் சிங்கள குடியேற்றங்களை ஆரம்பித்திருக்கிறது. படங்கள்: சிங்கள இராணுவ இணையத்தளத்திலிருந்து ..
-
- 27 replies
- 2.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி உள்ளிட்ட மூவர் இன்று அதிகாலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். முல்லைதீவு பொலிஸார் இவர்கள் மூவரையும் கைது செய்ததன் பின்னர் இவர்கள் மூவரும் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போதே பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவரும் உயிரிழந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். இதே வேளை சில ஊடகங்களில் இதன் போது இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளமைக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் இராணுவ வீரர் பயிற்சியின் போதே உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.virakes…
-
- 27 replies
- 4.5k views
-
-
கரவெட்டியில் படுகொலை செய்யப்பட்ட புலிவீரரை காட்டி கொடுத்த நித்தியானந்தன் பாபு இராணுவ பாதுகாப்புடன் நேற்று கொழும்புக்கு கூட்டி வரப்பட்டுள்ளான். கரவெட்டி மத்தி தச்சந்தோப்பு பிள்ளையார் கோவிலடியில் சிங்கள இரானுவத்தால் பதுங்கி இருந்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட போராளியை கரவெட்டியை சேர்ந்த நித்தியானந்தன்( நித்தி)னின் மகன் பாபு( வயது 32 திருமனம் ஆகி 3 பிள்ளைகள்மனைவிபெயர் கிளி வயது 29) காட்டி கொடுத்த பின் இரானுவத்தின் பாதுகாப்புடன் கொழும்பு கூட்டி வரப்பட்டுள்ளான். பாபுவின் இரண்டாவது அக்கா கவிதா திருமனம் முடித்தது விக்கி என்ற முன்னால் போராளி முன்னர் நடந்த சண்டை ஒன்றில் கால் ஒன்றை இழந்த பின் இயக்கததை விட்டு விலகிவிட்டார் இவர் விலகும் போது கால் இழந்ததுக்காக புலிகளி…
-
- 27 replies
- 8.5k views
-
-
ஜேர்மன் சென்றடைந்தார் ஜனாதிபதி... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன ஆகியோர் பேர்லினில் அமைந்திருக்கும் Tegel விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை சென்றடைந்தனர். ஜேர்மன் அரசாங்கத்தின் பிரதான தலைமை மரபுச்சீர்முறை அலுவலர் ஜேர்ஹன் கிறிஸ்டியன் மெர்டென்ஸ், ஜனாதிபதியும் அவரது பாரியாரையும் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றதுடன், ஜேர்மனில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஹோட்டலில் வரவேற்றனர். (படங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு) - See more at: http://www.tamilmirror.lk/166191/%E0%AE%9C-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%9F-%…
-
- 27 replies
- 1.6k views
-
-
போராட்டம் நடத்தப்படாமல் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார்.. பிரச்சினைக்கான தீர்வை பேச்சுவார்த்தை மூலம்தான் பெற்றுக்கொள்ள முடியும் என்ற போதிலும், போராட்டம் நடத்தப்படாமல் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதன் மூலம் எவ்விதப் பயனும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார். தமிழ்ச் சமூகம் பாரிய அழிவொன்றை சந்தித்துள்ள நிலையில், யாரும் தற்போது ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பார்கள் எனத் தான் நம்பவில்லை எனவும், இதனால் அகிம்சை வழியிலான போராட்டத்தை வலுப்பெறச் செய்வதன்மூலமே சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய விஜயத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரச…
-
- 27 replies
- 1.3k views
-
-
உணவகங்களில்... விலை அதிகரிப்பை, மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை... எடுக்கும் பொறுப்பு, அதன் உரிமையாளர்களுக்கு? சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால், தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஆனாலும், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டால், ச…
-
- 27 replies
- 1.1k views
-
-
யாழில் கனடா பெண் குளித்ததை பார்தவருக்கு உறவினர்கள் அடி உதை! ஜூலை 16, 2014 சங்கானைப் பகுதியில் கனடாவில் இருந்து விடுமுறையில் வந்து தங்கி நின்ற குடும்பப் பெண் ஒருவர் வீட்டுக் கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது ஒரு நபர் அயல் பகுதிக் காணியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் இருந்து தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாக அலறியுள்ளார். சங்கானைப் பகுதியில் பெண் யுவதி ஒருவர் குளிப்பதைப் பார்த்ததாகத் தெரிவித்து கள் இறக்கும் தொழிலாளி கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார். இவரது சைக்கிளும் அடித்து நொருக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து அந்த வீட்டில் நின்ற உறவினர்கள் அந் நபரை கீழே இறக்கி கடுமையாகத் தாக்கி கட்டி வைத்திருந்துள்ளனர். தான் கள் இறக்கும் தொழிலாளி என்றும் தென்னை மரத்தில் ஏறி கள்…
-
- 27 replies
- 2.1k views
-
-
தமிழ் தேசியத்தலைவன் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஈழத்தில் மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5 ஆவது கட்டப்போர் வெடிக்கும் என்று தொல் திருமாவளவன் கூறினார். ஈழத்தில் வீர மரணம் அடைந்த விடுதலைப்புலிகளுக்கும், களப்பலியான தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. அப்போது பேசிய திருமாவளவன், ஒரே நாளில் 50 ஆயிரம் பேர்களை கொன்றுவிட்டு உலக மக்கள் பார்வையை மறைக்க பிரபாகரனை சுட்டுக்கொன்றுவிட்டதாக சிங்கள இனவெறியன் கோழை ராஜபக்ஸ அண்டப்புழுகினான். கடந்த ஜனவரி 2 ஆம் திகதி கிளிநொச்சி பகுதியை இராணுவம் கைப்பற்றியது என்ற செய்தி அறிந்து மிகவும் துடித்துப்போனேன். அன்று முதல் தொடர்ந்து பல…
-
- 27 replies
- 3.8k views
-
-
கேணல் பரிதி படுகொலை விவகாரம்: இரண்டு சந்தேக நபர்கள் கைது! விசாரணை திருப்பம்! சிறீலங்கா | ADMIN | NOVEMBER 13, 2012 AT 08:27 பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பரிதி என்னும் நடராஜா மதீந்திரன் அவர்களின் படுகொலையை அடுத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையின் குற்றவியற் பிரிவினர் இப்படுகொலை தொடர்பாக 33 வயதுடைய சிறீலங்காப் பிரஜை ஒருவரைக் கைது செய்துள்ளதாகக் காவற்துறையினரின் தகவலை மேற்கோள் காட்டி Le Parisien செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இவர் மீதான விசராணை மூலம் மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் தமது பிரத்தியேகத் தொடர்பின் தகவல் மூலம் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை பிரான்ஸில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியான பிரான்ஸ்-தமிழர் ஓருங…
-
- 27 replies
- 4.1k views
-
-
இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் எமது மக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அறவழிப்போராட்டங்கள் விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கக்கூடியவையா? அல்லது தமிழ்தேசியத்திற்கு எதிரானவர்களின் பிரச்சாரத்திற்கு ஒத்துப்போகின்றனவா? இப்போது வரும் ஆக்கங்களையும், செயல்பாடுகளையும் பார்க்கும்போது விடுதலைப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஸ்ரீலங்கா உட்பட உலகநாடுகள் எல்லாம் எதை எதிர்பார்த்தார்களோ அதற்குத்தான் நாமும் முன்னுரிமை கொடுப்பது போன்ற ஒரு தோற்றப்பாடு தோன்றியுள்ளது. அதாவது எமது மக்களின் இன்றைய அவலத்தை நான் புரியாதவனுமல்ல, உணராதவனுமல்ல ஆனால் மக்களிடம் இருந்து விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தும் எதிர்த்தரப்பின் செயல்பாடுகளில் தான் நாங்களும் இப்போது ஈடுபடுகின்றமாதிரி தோன்றுகி…
-
- 27 replies
- 5.6k views
-
-
Published by J Anojan on 2022-01-05 19:55:27 ஆசியாவின் ராணி எனப் பெயரிடப்பட்டுள்ள நீலக்கல்லை 2,000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய இரத்தினக்கல்லான 'ஆசியாவின் ராணி' எனப் பெயரிடப்பட்டுள்ள நீலக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 2,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு கொள்வனவு செய்ய டுபாய் நிறுவனமொன்று முன்வந்துள்ளது. அந்த விலையில் இரத்தினக்கல்லை வழங்க இலங்கை தயாராக இல்லை. டுபாய் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றே இந்த விலைய…
-
- 27 replies
- 2k views
- 1 follower
-
-
27 JAN, 2024 | 11:29 AM இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்காக புதிய நிர்வாகத் தெரிவுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தலைவர் தெரிவில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனநாயகத் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் இன்று சனிக்கிழமை (27) திருகோணமலையில் இடம்பெறுகின்றன. அவ்வாறு ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறுவதற்கு முன்னதாக தற்போது திருகோணமலை முருகாபுரி ஜேக்கப் கடற்கரை தனியார் விடுதியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுவினர் ஒன்றுகூடி கலந்துரையாடி வருகின்றனர். …
-
- 27 replies
- 2.2k views
- 2 followers
-
-
தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை ! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி. விவகாரத்தைத் தீர்மானிப்பதற்காக இன்று தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூடுகின்றது. வவுனியாவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அரசியல் குழுவில் அங்கம் வகிக்கும் மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம், சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கி.துரைராஜசிங்கம், தவராசா கலையரசன், கவீந்திரன் கோடீஸ்வரன், சண்முகம் குகதாசன் மற்றும் குலநாயகம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி, ஒரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றிருந்தது. …
-
-
- 27 replies
- 1.9k views
-
-
எங்கள் மக்களின் காணியை எவருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது! சம்பந்தன் – குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- போர் முடிந்துவிட்டது, விடுதலைப் புலிகளும் தற்போது இல்லை. இந்த நிலையில் எங்கள் மக்களுடைய காணிகளை எவருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது என்று எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். காணிப் பிரச்சினை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, படைத்தளபதிகள், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு, கொழும்பில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித…
-
- 27 replies
- 1.4k views
-
-
தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது! யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(17) பெய்த கனமழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட நிலையில் அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன. அந்த கம்பிகள் அண்மையில் திருட்டு போன நிலையில் , குறித்த பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் இன்று பெய்த மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. https://athavannews.com/2025/1447545
-
-
- 27 replies
- 2k views
- 2 followers
-
-
கதிர்காமத்திலிருந்து இந்தியாவிற்கு புகையிரதம் வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014 02:15 -எம்.றொசாந்த் கதிர்காமத்தில் புகையிரத டிக்கெட் வாங்கி இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு செல்லும் காலம் மிகவிரைவில் உதயமாகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா புதன்கிழமை (27) தெரிவித்தார். அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (27) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு இந்திய அரசாங்கம் பல உதவிகளைச் செய்துள்ளது. இந்தக் கைத்தொழில்பேட்டை புனரமைப்பு செய்யப்பட்டதால், உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்…
-
- 27 replies
- 1.6k views
-
-
இலங்கையில்... "விடுதலைப் புலிகள்" தாக்குதல் நடத்தவிருப்பதாக, இந்திய புலனாய்வு பிரிவு தகவல்! தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒன்றிணைந்து இலங்கையில் தாக்குதல்களை நடத்த தயாராகி வருவதாக... இந்திய புலனாய்வு பிரிவுகள், எச்சரிக்கை விடுத்துள்ளதாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை இரண்டு முறை அவசரகால நிலைமையை அறிவித்துள்ளன. இந்தநிலையில் சர்வதேச தொடர்புகளைக் கொண்ட புலம்பெயர் தமிழர்களின் ஒரு பிரிவினர், போராட்டக் காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த முயல்வதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக குறித்த செ…
-
- 27 replies
- 1.7k views
- 1 follower
-
-
இலங்கை பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு தொடங்கியது.இச்செயற்குழுவில், ’இலங்கை தமிழர் நல உரிமை பேரவை’ சார்பில் இலங்கை பிரச்சனையில் அரசியல் தீர்வு காண கோரி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி வரும் 7ம் தேதி அன்று சென்னையிலும், பிப்ரவரி8,9ஆகிய தேதிகளில் மாவட்ட தலை நகரங்களில் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இச்செயற்குழு முடிந்த பிறகு முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை தொடர்ந்து வல…
-
- 27 replies
- 3.2k views
-
-
போர்குற்ற ஆவணங்களை மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக சமர்ப்பிக்கலாம்-எம்.எ.சுமந்திரன் http://youtu.be/Lx1YUwXM84M?list=UUgnFSj7jQffD5V5m05j4dPw
-
- 27 replies
- 1.9k views
-