Jump to content

ஆசியாவின் ராணியை 2,000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய இலங்கை மறுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published by J Anojan on 2022-01-05 19:55:27

 
 

ஆசியாவின் ராணி எனப் பெயரிடப்பட்டுள்ள நீலக்கல்லை 2,000  கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

This Giant 683-Pound Blue Sapphire Could Be Worth Over $100 Million – Robb  Report

இது தொடர்பில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கருத்துத் தெரிவிக்கையில், 

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட  மிகப் பெரிய இரத்தினக்கல்லான  'ஆசியாவின் ராணி' எனப் பெயரிடப்பட்டுள்ள நீலக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 2,000  கோடி  ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு கொள்வனவு செய்ய டுபாய் நிறுவனமொன்று முன்வந்துள்ளது.

அந்த விலையில் இரத்தினக்கல்லை வழங்க இலங்கை தயாராக இல்லை. டுபாய் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றே இந்த விலையை அறிவித்திருந்தது. 

அதனை விடவும் அதிக விலை எதிர்பார்ப்பில் ஏலத்தில் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இரத்தினபுரி, பலாங்கொடை பிரதேசத்திலுள்ள சுரங்கமொன்றிலிருந்து 310 கிலோகிராம் எடையுடைய 'கொரண்டம்' வகை மாணிக்கக்கல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆசியாவின் ராணியை 2,000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய இலங்கை மறுப்பு | Virakesari.lk

Link to comment
Share on other sites

டுபாய் இன்னும் இலங்கைக்குக் கடன் குடுக்கவில்லை என்று நினைக்கிறேன் 😂 அதனல பயப்படத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, இணையவன் said:

டுபாய் இன்னும் இலங்கைக்குக் கடன் குடுக்கவில்லை என்று நினைக்கிறேன் 😂 அதனல பயப்படத் தேவையில்லை.

இந்த ராணியை,  வாங்கத்தானோ…மற்ற நாடுகள் எல்லாம்,
நீயா… நானா… என்று, போட்டி போட்டுக் கொண்டு கடன் கொடுக்கிறார்கள் போலுள்ளது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

இந்த ராணியை,  வாங்கத்தானோ…மற்ற நாடுகள் எல்லாம்,
நீயா… நானா… என்று, போட்டி போட்டுக் கொண்டு கடன் கொடுக்கிறார்கள் போலுள்ளது. 😁

3 பில்லியனுக்கு 30 ராணியை வாங்கலாமே?🤣

ஒரு அந்தபுரமே வைக்கலாம் 😜

30x👸

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

3 பில்லியனுக்கு 30 ராணியை வாங்கலாமே?🤣

ஒரு அந்தபுரமே வைக்கலாம் 😜

30x👸

கடைசியாய்…. அந்தப்புரத்து, அத்திவாரத்துக்குத்தான்…
இந்த ராணிக்கல்லு, உதவப் போகுது போலை கிடக்கு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

3 பில்லியனுக்கு 30 ராணியை வாங்கலாமே?🤣

சில்லறை காசு வைச்சிருக்கிற எனக்கே போற வாற இடமெல்லாம் ராணியள் எண்டேக்கை.....😎

3 பில்லியன் எண்டால்....? 🥰 😍 😍 🥰 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்நியருக்கு நாட்டையும் நாட்டின் சொத்தையும் விற்கத் தயங்காத சிங்களம்..தமிழர்களுக்கு ஒரு துண்டு நிலத்தை தானும் கொடுக்க தயாராக இல்லை என்றால்.. சிங்கள அரசுகளின் எண்ணத்தில் எவ்வளவு மோசமான தமிழர் எதிர்ப்பு வக்கிரம் அடங்கி இருக்கென்று பார்த்துக் கொள்ளோனும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச மதிப்பீடு  செய்பவர்களை இந்தக்கல்லை இன்னமும் பரிசோதிக்க விடவில்லை கல்லுக்கு நீல வெளிச்சம் கொடுத்து வைத்து இருக்கினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

சர்வதேச மதிப்பீடு  செய்பவர்களை இந்தக்கல்லை இன்னமும் பரிசோதிக்க விடவில்லை கல்லுக்கு நீல வெளிச்சம் கொடுத்து வைத்து இருக்கினம் .

யூ  மீன் புத்தர்ரை பல்லு மாதிரி....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அப்பாவுக்கு இரண்டு பிள்ளைகள். அப்பா வயது போன காலத்தில்  அவரை பராமரிக்க யாரும் முன்வரவில்லை. ஆனால் அப்பா ஒரு பையில் புளியங்கொட்டைகளை போட்டு, தலையணைக்கு கீழ் வைத்து, பிள்ளைகள் காணும்படி அதை எடுத்து மீண்டும் தலையணைக்கு கீழ் வைத்து விட்டு, அதன்மேல் படுத்துக்கொள்வாராம். இதைப்பார்த்து இரண்டு பிள்ளைகளும் நீயா? நானா? என்று போட்டிப்போட்டு கந்தையை பராமரித்தார்களாம். இறுதியில் அப்பாவும் இறக்க, இரு பிள்ளைகளும் அப்பாவின் தலையணைக்கு கீழ் இருந்த பையை ஆவலோடு பிரித்து பார்த்தபோது, புளியங்கொட்டைகளை கண்டு தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று வருந்தியதோடு, தங்கள் கடமையை தாங்கள் செய்யாமல் விட்டதாலேயே தந்தை இப்படியான தந்திரத்தை கையாண்டார் என்பதையும் நினைத்து வெட்கப்பட்டார்களாம். இது ஒரு வேடிக்கையான கதை. இவர்கள் விலையை அதிகம் எதிர்பார்த்தால் இதையும் இழக்க வேண்டியேற்படலாம். யாரும் திரும்பிப் பார்க்காத நிலை வரலாம்.  விற்பதற்கு தேயிலையையும் மக்களையும் தவிர எதுவுமே  இல்லை நாட்டில் இல்லை இப்போ.

Link to comment
Share on other sites

9 hours ago, nedukkalapoovan said:

அந்நியருக்கு நாட்டையும் நாட்டின் சொத்தையும் விற்கத் தயங்காத சிங்களம்..தமிழர்களுக்கு ஒரு துண்டு நிலத்தை தானும் கொடுக்க தயாராக இல்லை என்றால்.. சிங்கள அரசுகளின் எண்ணத்தில் எவ்வளவு மோசமான தமிழர் எதிர்ப்பு வக்கிரம் அடங்கி இருக்கென்று பார்த்துக் கொள்ளோனும். 

இது வக்கிரமல்ல, வரலாற்றுரீதியாக சோழ தமிழர்கள் சிங்களவருக்கு செய்த அக்கிரமத்தின் விளைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

510 கிலோ ஆக இருந்த இந்த இரத்தினக்கொத்து இப்போது 310 கிலோ ஆகிவிட்டதா? நாள் ஆக ஆக சிறிதாகிக் கொண்டே போய் இறுதியில் இரத்தினத்தை யாராவது பார்த்தீங்களா என்று விசாரித்தாலும் ஆச்சரியமில்லை.

 

https://www.bbc.com/news/world-asia-57981046

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்புக்கல்லாக இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vanangaamudi said:

510 கிலோ ஆக இருந்த இந்த இரத்தினக்கொத்து இப்போது 310 கிலோ ஆகிவிட்டதா? நாள் ஆக ஆக சிறிதாகிக் கொண்டே போய் இறுதியில் இரத்தினத்தை யாராவது பார்த்தீங்களா என்று விசாரித்தாலும் ஆச்சரியமில்லை.

 

https://www.bbc.com/news/world-asia-57981046

 

மகிந்த சகோதரர்கள்…. இரத்தினக் கல்லை, சுரண்டி… விற்றிருப்பார்கள். 😂

Link to comment
Share on other sites

18 hours ago, குமாரசாமி said:

சில்லறை காசு வைச்சிருக்கிற எனக்கே போற வாற இடமெல்லாம் ராணியள் எண்டேக்கை.....😎

3 பில்லியன் எண்டால்....? 🥰 😍 😍 🥰 

நம்பீட்டம் நீங்கள் சில்லறைக் காசு தான் வைச்சிருக்கிறியள்🤭

கவனம் Finanzamt வீடுதேடி வரப்போகினம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shanthy said:

நம்பீட்டம் நீங்கள் சில்லறைக் காசு தான் வைச்சிருக்கிறியள்🤭

கவனம் Finanzamt வீடுதேடி வரப்போகினம்🤣

சில்லறைக் காசுக்கா? ராணிகளுக்கா?😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, satan said:

ஒரு அப்பாவுக்கு இரண்டு பிள்ளைகள். அப்பா வயது போன காலத்தில்  அவரை பராமரிக்க யாரும் முன்வரவில்லை. ஆனால் அப்பா ஒரு பையில் புளியங்கொட்டைகளை போட்டு, தலையணைக்கு கீழ் வைத்து, பிள்ளைகள் காணும்படி அதை எடுத்து மீண்டும் தலையணைக்கு கீழ் வைத்து விட்டு, அதன்மேல் படுத்துக்கொள்வாராம். இதைப்பார்த்து இரண்டு பிள்ளைகளும் நீயா? நானா? என்று போட்டிப்போட்டு கந்தையை பராமரித்தார்களாம். இறுதியில் அப்பாவும் இறக்க, இரு பிள்ளைகளும் அப்பாவின் தலையணைக்கு கீழ் இருந்த பையை ஆவலோடு பிரித்து பார்த்தபோது, புளியங்கொட்டைகளை கண்டு தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று வருந்தியதோடு, தங்கள் கடமையை தாங்கள் செய்யாமல் விட்டதாலேயே தந்தை இப்படியான தந்திரத்தை கையாண்டார் என்பதையும் நினைத்து வெட்கப்பட்டார்களாம். இது ஒரு வேடிக்கையான கதை. இவர்கள் விலையை அதிகம் எதிர்பார்த்தால் இதையும் இழக்க வேண்டியேற்படலாம். யாரும் திரும்பிப் பார்க்காத நிலை வரலாம்.  விற்பதற்கு தேயிலையையும் மக்களையும் தவிர எதுவுமே  இல்லை நாட்டில் இல்லை இப்போ.

சர்வதேச நிறுவனங்கள் இன்னும் விலைமதிப்பற்ற கல்லுக்கு சான்றளிக்கவில்லை ஏன் என்பது புதிராக உள்ளது .

13 hours ago, கற்பகதரு said:

இது வக்கிரமல்ல, வரலாற்றுரீதியாக சோழ தமிழர்கள் சிங்களவருக்கு செய்த அக்கிரமத்தின் விளைவு.

அப்படி சோழர்கள் சிங்களவருக்கு செய்தவற்றை  சொல்லிடுங்க எனக்கும் வரலாறு ரொம்ப பிடிக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

மகிந்த சகோதரர்கள்…. இரத்தினக் கல்லை, சுரண்டி… விற்றிருப்பார்கள். 😂

உண்மையாகவே இது விலை மதிப்பிட முடியாத அளவு விலை உயர்ந்த ராணியாக இருந்திருந்தால்; ராஜபக்ஸ குடும்பம் எப்பவோ தங்கள் அந்தப்புரத்தில் சேர்த்திருப்பார்கள், ஒருவேளை ராணியை மாற்றி ராணியின் தோழியை  வைத்து விட்டார்களோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, shanthy said:

கவனம் Finanzamt வீடுதேடி வரப்போகினம்🤣

வாற Finanzamt   என்ரை நிலமையை பாத்திட்டு  தங்களாலை முடிஞ்ச சில்லறையை தட்டுலை போட்டுட்டுத்தான் போவினம்...😁

Link to comment
Share on other sites

11 hours ago, ஏராளன் said:

சில்லறைக் காசுக்கா? ராணிகளுக்கா?😆

குமாரசாமி தான் பதில் சொல்ல வேண்டும்.😊

6 hours ago, குமாரசாமி said:

வாற Finanzamt   என்ரை நிலமையை பாத்திட்டு  தங்களாலை முடிஞ்ச சில்லறையை தட்டுலை போட்டுட்டுத்தான் போவினம்...😁

வாற அலுவரரைப் பொறுத்தது. எதுக்கும் வீட்டுப் பக்கம் பூசணிக்காய் வெட்டி வையுங்கோ.😊

Link to comment
Share on other sites

14 hours ago, பெருமாள் said:

அப்படி சோழர்கள் சிங்களவருக்கு செய்தவற்றை  சொல்லிடுங்க எனக்கும் வரலாறு ரொம்ப பிடிக்கும் 

பிடித்திருந்தால் படித்திருப்பீர்களே? 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

பிடித்திருந்தால் படித்திருப்பீர்களே? 😇

எனக்கு தெரிந்து ராஜராஜ சோழன் செய்த பிழை விகாரைகளுக்கு மானியமும் குடுத்து பிக்குகளை வளர்த்து விட்டதும் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

பிடித்திருந்தால் படித்திருப்பீர்களே? 😇

உங்கடை பார்வையில் எப்படி என்பதை அறிய ஆவல் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, shanthy said:

வாற அலுவரரைப் பொறுத்தது. எதுக்கும் வீட்டுப் பக்கம் பூசணிக்காய் வெட்டி வையுங்கோ.😊

வாற அலுவலர் வந்து என்னத்தை புடுங்குறது?......நான் ஜேர்மனிக்கு வந்தநாள் தொடக்கம்  சோசல் வாசகன் எண்டது பரமரகசியம் கண்டியளோ😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • atacms ஏவுகணைகள்  (ஒவ்வொன்றும் $1.5 மில்லியன்) அனுப்பியன் காரணம் இப்பொது தெரிகிறது, அமெரிக்கா gsldb வேலைசெய்யாதபடியால்    (ருசியா சமிக்ஞை தடுப்பும், சேறும் காரணமாக சொல்லப்படுகிறது ).  அனால் gsldb  இன் idea ஐ  ருசியா முதல் செய்தது, இப்போது தூரமும், சக்தியும் கூட்டி  உள்ளது    
    • த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு அறிவோ அறிவு.................எப்ப‌டி க‌ண்டு பிடிச்சிங்க‌ள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேக‌மாக‌ எழுதும் போது சில‌ எழுத்துக்க‌ள் ச‌ரியா ரைப் ப‌ண்ணு ப‌டுதில்லை கார‌ண‌ம் கை நிக‌ம் வ‌ள‌ந்தால்   இன்னொரு எழுத்தையும் கூட‌ ப‌தியுது நிதான‌மாய் எழுதினால் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட‌ த‌ட்ட‌ 9வ‌ருட‌மாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................
    • இந்த நிதி ஒதுக்கீட்டின் விபரம் அலசப்படுகிறது. சின்ஹா அலசலின் படி, ஏறத்தாழ 10 பில்லியன் ஆயுதங்களே உக்கிரனுக்கு வழங்கப்பட போகிறது. மிகுதி, முன்பு வழங்கியவைக்கு, வழங்க திட்டமிட்டு இப்போதும் நிலுவையில் (உற்பத்தி செய்யப்பட வேண்டியவை) உள்ள ஆயுதங்களுக்கு (கிட்டத்தட்ட 10 பில்லியன்), பகுது ஆலோசனைகளுக்கு (consultancy, வழமையாக கடன் கொடுக்கும் பொது மேற்கு செய்வது), உக்கிரைன் அரச சேவை சம்பளம்  போன்றவைக்கு  கட்டணம் ஆக செலுத்தப்படுகிறது. ஆகவே மொத்த ஆயுத தொகை 20 -25 பில்லியன், அனால் அதிலும், வேறு எதாவது செலவுகள் (பயிற்சி போன்றவை) உள்ளடக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை.   https://jackrasmus.com/2024/04/23/ukraine-war-funding-failed-russian-sanctions-print/   This past weekend, April 20, 2024 the US House of Representatives passed a bill to provide Ukraine with another $61 billion in aid. The measure will quickly pass the Senate and be signed into law by Biden within days. The funds, however, will make little difference to the outcome of the war on the ground as it appears most of the military hardware funded by the $61 billion has already been produced and much of it already shipped. Perhaps no more than $10 billion in additional new weapons and equipment will result from the latest $61 billion passed by Congress. Subject to revision, initial reports of the composition of the $61 billion indicate $23.2 billion of it will go to pay US arms producers for weapons that have already been produced and delivered to Ukraine. Another $13.8 billion is earmarked to replace weapons from US military stocks that have been produced and are in the process of being shipped—but haven’t as yet—or are additional weapons still to be produced. The breakdown of this latter $13.8 amount is not yet clear in the initial reports. One might generously guess perhaps $10 billion at most represents weapons not yet produced, while $25-$30 billion represents weapons already shipped to Ukraine or in the current shipment pipeline.   ....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.