ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
சர்வகட்சி கூட்டத்தில் பசில் ரணில் கடும் வாக்குவாதம் சர்வகட்சிகூட்டத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. அரசாங்கம் நிதிவிடயத்தில் வெளிப்படைதன்மையுடன் செயற்படுவதை தன்னால் காணமுடியவில்லை என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியம் இலங்கை குறித்து சமர்பித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் இறுதி அறிக்கை இன்னமும் எங்களிற்கு கிடைக்கவில்லை என தெரிவித்தார்,ஆனால் அதனை மறுத்த ரணில் இல்லை ஏற்கனவே அவர்கள் அ…
-
- 4 replies
- 567 views
-
-
அரசியல் கைதிகள் விடுதலையில் குட்டையைக் குழப்பும் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஆரம்பம் முதலே விக்னேஸ்வரன் ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகின்றார். அவர் ரணிலை ஆதரித்தபோதும் அதன் பின்னரான ரணிலுடனான சந்திப்புக்களின்போதும் “முதல்கட்ட நல்லிணக்கமாக அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்றே வலியுறுத்தியதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் நடாத்திய ஊடகவியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார். ஆனால் இடையில் இந்தப் பிரச்சனையில் தலையிட்ட கூட்டமைப்பினர் “அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்காவிட்டாலும் அவர்களில் ஒரு தொகுதிய…
-
- 4 replies
- 432 views
-
-
காசா மீதான தாக்குதலைக் கண்டித்து கிழக்கில் ஆர்ப்பாட்டங்கள்! - இஸ்ரேல், அமெரிக்க கொடிகள் எரிப்பு. [Tuesday 2014-07-29 18:00] காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களை கண்டித்து கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, அம்பாறை மாவட்டத்தில் பாலமுனை மற்றும் சின்னப்பாலமுனை ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டார்கள். பள்ளிவாசல்களில்களிலும் பொது இடங்களிலும் இன்று காலை புனித ரமழான் தொழுகைக்காக ஒன்று கூடிய முஸ்லிம்கள் தொழுகையின் பின்னர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் குறிப்பாக பலஸ்தீன் காஸா மீதான தாக்குத…
-
- 4 replies
- 556 views
-
-
30 வருடங்களுக்கு பின்னர்... திருகோணமலை துறைமுகத்தில் இருந்து, கனிய மணல் ஏற்றுமதி. திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்த முதல் ஏற்றுமதி கப்பலில் புல்மோட்டை கனிய மணல் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கனிய மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குறித்த கனிய மணலை சீனாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1300529
-
- 4 replies
- 380 views
-
-
http://youtu.be/pfkkYH6guY4 யாரிந்த நபர் இவரை எத்தனை உலகத் தலைவர்களுக்குத் தெரியும்?கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி கிடைத்தவுடன் தான் ஏதோ பெரிய மேதாவி மாதிரி பேசுகிறார்.இவரைப் போய் பாலா அண்ணருடன் ஒப்பிட்ட ******** யார்? நியானி: ஒரு சொல் நீக்கப்பட்டுள்ளது.
-
- 4 replies
- 962 views
-
-
இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரரின் அழைப்பினை ஏற்றுக் கொண்ட திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவாரா என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த 1950ஆம் ஆண்டு முதல் இலங்கை செல்ல தலாய் லாமா முயற்சி அவரை ஆண்மீகத் தலைவராகப் பார்ப்பதா அல்லது அரசியல் தலைவராகப் பார்ப்பது என்பது தொடர்பிலும் மாறுபட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. இலங்கை ஒரு அமைதியான பௌத்த நாடு என்பதால் தலாய் லாமாவும் அங்கு வரவேண்டும் என்று தாங்கள் அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரர் பிபிசியிடம் தெரிவித்தார். "கண்டி, அனுராதபுரம் செல்ல விருப்பம்" ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரும் போது, தலாய் லாமாவும் தமது நாட்டுக…
-
- 4 replies
- 613 views
-
-
கிளிநொச்சி, அக்கராயன் ஆற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக ஆற்றுநடுவே காணப்படும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அழிவடையும் அபாயநிலை உள்ளது என கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் ஒருவர் வியாழக்கிழமை (16) தெரிவித்தார். அத்துடன், அக்கராயன் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கையால் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்;படும். சுமார் ஏழரை கிலோமீற்றருக்கு இந்த மணல் அகழ்வு நடைபெறுகின்றது. மணல் அகழ்வு காரணமாக அக்கராயன் மத்திய பகுதி, கிழக்குப் பகுதி, ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம் ஆகிய கிராமங்களின் நிலத்தடி நீர் எதிர்காலத்தில் குறைவடையக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. அக்கராயன் ஆற்றில் மணல் அகழ்வு தொடருமானால் எதிர்காலத்தில் அக்கராயன் பிரதேச…
-
- 4 replies
- 719 views
-
-
அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்யப் போகிறது?இந்தக் கேள்வியும் இதற்குத் தேடவேண்டிய பதிலும் இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானவை. ஏனென்றால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக - ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கின்ற சூழல் இது. இந்தப் பத்தி எழுதப்பட்ட போது, வோஷிங்டனில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் தொடர்ச்சியான பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. என்னென்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது தெரியாத ஒரு பின்னணியில், அதைச் சார்ந்து இந்தப் பத்தி எழுதப்படுகிறது. இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தீர்க்கமானதொரு பங்கை வகிக்க…
-
- 4 replies
- 1.6k views
-
-
அரசியல் தீர்வு குறித்த, அரசாங்கத்துடனான தமது பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து வெளியிட்டார். பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும், இழுப்பறியில் செல்வதால், பேச்சுவார்த்தை மீதான நம்பிக்கையினை மக்கள் இழந்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டினார். பேட்டியை கேட்க கேழே உள்ள குறியீட்டை அழுத்தவும்: http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=3177:2011-11-20-04-59-43&catid=1:latest-news&Itemid=18'>http://akkinik…
-
- 4 replies
- 850 views
-
-
பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஜே.ஶ்ரீங்கா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு வேட்பு மனு கிடைக்கவில்லையெனத் தெரியவருகிறது. கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர் நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவின் 18ஆவது திருத்திற்கு ஆதரவாக வாக்களித்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியிலும் அவருக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், தற்போது ஶ்ரீரங்கா மற்றுமொரு அரசியல் கட்சியில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் இறுதிக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்க…
-
- 4 replies
- 475 views
-
-
ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவது செனட்டர் ஹிலாரி கிளின்டனா அல்லது பராக் ஒபாமாவா என்பது குறித்து சுவாரசியம் காரணமாக உலகம் முழுவதும் அமெரிக்க அரசியலை நோக்கி ஈர்க்கபட்டுள்ள அதே வேளை, இலங்கையிலும் இந்த பிரச்சாரம் வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெற்றறுள்ளதாக இணையத்தள ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுளது. 'அமெரிக்கத் தேர்தல் மூலம் இலங்கைக்கு என்ன நன்மை' எனத் தலைப்பிடப்பட்ட ஆய்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பயங்கரவாதப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள மஹிந்த அரசு, அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியில் இடம் பெறும் போட்டியில் ஆர்வம் காட்டாத போதிலும், ஜனாதிபதி தேர்தலில் ஜ…
-
- 4 replies
- 3.1k views
-
-
தம்புள்ளை பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாக்குல் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஸ்லிம்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில், அரசாங்கம் பல தரப்பினரைப் பயன்படுத்தி மதங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்தமைக்கும் இதன்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி தென்கொரியாவிலிருந்து நாடு திரும்பியதும், இந்தப் பிரச்சினை குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தும்வரை வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாம் என அகில இலங்கை ஜம்யத் உலமா சம்மேளனமும், அரசாங்கத்திலுள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகளும், வேண்டுகோள் விடுத்திருந்தனர். எனி…
-
- 4 replies
- 1k views
-
-
இலங்கையை கெடுக்கும் நால்வர்! தமிழ் முஸ்லிம் மக்கள் உலக ஆதரவுடன் போராட வேண்டிய நிலை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சம்பிக்க ரணவக்க, மேதானந்த எல்லாவல, தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் குணதாச அமரசேகர ஆகிய நால்வரும் நாட்டை நாசமாக்கி படுகுழியில் தள்ளுகிறார்கள். நாட்டின் தேசிய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களை சிறுமைப்படுத்துவதையே இவர்கள் நால்வரும் தமது நாளந்த நடவடிக்கைகளாக கொண்டுள்ளார்கள். இந்த நாட்டில் இன்று நடக்கும், தமிழ்-முஸ்லிம் இனத்தவர்களுக்கும், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தவர்களுக்கும் எதிரான அனைத்து இனவாத, மதவாத நடவடிக்கைகளுக்கும் இந்த நால்வரும்தான் பொறுப்பு கூற வேண்டும். இந்த நாட்ட…
-
- 4 replies
- 894 views
-
-
யாழ் நெல்லியடி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் மகேஸ்வரி வேலாயுதத்தின் கொலையுடன் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தொடர்புள்ளதாக யாழ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.30மணியளவில் நெல்லியடி நவிண்டில் இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள படையினரின் பெரும் பாதுகாப்பு மத்தியில் உள்ள மகேஸ்வரியின் வீட்டுக்கு இராணுவ உடையில் சென்ற மூன்று ஆயுததாரிகளே துப்பாக்கிசூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாவிண்டில் இராணுவ முகாமில் படையினருடன் இணைந்து ஈ.பி.டி.பி.ஒட்டுக்குழுவினரும் செயற்பட்டுவருவதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் டக்ளஸ் தேவானந்தாவுடன் அண்மைக்காலமாக இவருக்கு பலத்த முரண்பாடுகள் தோன்றியிருந்தத…
-
- 4 replies
- 2.5k views
-
-
பகிடிவதையில் ஈடுபட்டார் எனும் குற்றசாட்டில் யாழ்.பல்கலை கழகத்தால் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள மாணவனின் வீட்டின் மீது தாமே தாக்குதலை மேற்கொண்டதாக ஆவா குழு முகநூல் ஊடாக உரிமை கோரியுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் உள்ள குறித்த மாணவனின் வீட்டுக்குள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த நால்வர், மாணவனை அழைத்துள்ளனர். அவர் அங்கில்லாத நிலையில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் யன்னல் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் ஆவா குழு என தம்மை அட…
-
- 4 replies
- 1.3k views
-
-
பாலமோட்டை, நவ்வி, குஞ்சுக்குளம் பகுதிகளில் முன்நகர்வுகள் முறியடிப்பு: 15 படையினர் பலி- 29 பேர் காயம் [சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2008, 08:12 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை, நவ்வி, குஞ்சுக்குளம் வரையான பகுதிகளில் மூன்று முனைகளில் சிறிலங்காப் படையினர் இன்றும் நேற்றும் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில், 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 29 பேர் காயமடைந்துள்ளனர். பாலமோட்டை, நவ்வி, குஞ்சுக்குளம் வரையான பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை 7:10 மணிமுதல் மாலை 6:00 மணிவரை மூன்று முனைகளில சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விடுதலைப்…
-
- 4 replies
- 1.8k views
-
-
கொரோனா காலப்பகுதியில் மதுபானம், புகைத்தல் கடும் விளைவை ஏற்படுத்தும்- மருத்துவர் காண்டீபன் எச்சரிக்கை by : Litharsan கொரோனா வைரஸ் தொற்றுக் காலப்பகுதியில் மதுபானம் மற்றும் புகைத்தல் போன்றன விளைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ள மருத்துவ சங்கம் இதனைக் கட்டுப்படுத்துமாறும் சுகாதாரப் பரிவினரை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது, “ஊரடங்குச் சட்டம் யாழ்ப்பாணத்தில் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் நாட்டில் கொரோனா தொற்றும் வாய்ப்புள்ள அசாதாரண நிலைமை நிலவுவதன் காரணமாக ப…
-
- 4 replies
- 1.2k views
-
-
மிருசுவில் கரும்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டில் முடிந்ததால் ஒருவர் உயிரிழப்புக் காரணமானது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். https://www.ibctamil.com/srilanka/80/142429
-
- 4 replies
- 1.2k views
-
-
“ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தி ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” இது ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் எம். எல். ஏ. ஒருவர் அடித்த கமெண்ட். ஆம். உண்மைதான். ஆனால் ஒரு சின்ன திருத்தம். தமிழக மக்கள் ராஜீவ் காந்தியை என்றோ மறந்து விட்டார்கள். வேறு வேலையைப் பார்க்க போய் விட்டார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் சில எம். எல். ஏ. க்கள் தான் விடாப்பிடியாக ராஜீவ் காந்தியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் ராஜீவ்காந்தி அவர்களது அரசியல் வியாபாரத்திற்குத் தேவைப்படுகிறார். ஏனென்றால் தமிழினத்தை பூண்டோடு அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் சில எம். எல். ஏ. க்களுக்குமான ‘டீலிங்’ அப்படி. …
-
- 4 replies
- 3.3k views
-
-
இலங்கை நிலைமை பெரும் வேதனையளிக்கின்றது : அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வீரகேசரி இணையம் 1/31/2009 11:25:31 AM - இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்தம் பெரும் வேதனையளிப்பதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து அமெரிக்கா பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விரைவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தக் கூடிய ஓர் சூழ்நிலை வெகுவிரைவில் உருவாகும் எனத் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பதில் ஊடகப் பேச்சாளர் ரொபர்ட் வூட் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மீதும்,…
-
- 4 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இப்படி மாறிவிட்டது என நினைக்கும் போது மிகவும் வேதனையளிக்கிறது. எத்தனையோ கல்வி மகான்களை உருவாக்கும் இந்த வளாகம் இன்று 28 ஆவது பட்டமளிப்பிற்காக கூடியிருந்தது. எனினும் பல்கலை வாயிலில் கட்டப்பட்டிருக்கும் வரவேற்பு பதாகை பிரிட்டிஷ் காரருக்கா பட்டமளிப்பு என ஒரு கணம் சிந்திக்க வைத்தது. ஏன் இந்த மாற்றம் இது தமிழர்கள் வாழும் பகுதி அழகாக எமது தமிழ் மொழியால் பட்டமளிப்பு விழா என எழுதப்படாதமை மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது அத்துடன் அதன் வடிவமைப்புக்களும் யாழ்ப்பாணக் கலாச்சாரங்களைக் காட்டுவதாக காணப்படவில்லை. அத்துடன் நாட்டில் மும்மொழி கொள்கை அறிமுகப்படுத்த பட்டிருக்கும் நிலையில் பல்கலைகழக வாயிலில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்று பாதகை தனிய…
-
- 4 replies
- 1k views
-
-
வணங்காமண் கப்பல் சென்னையில் பொருட்களை இறக்க அனுமதி MV Captain Ali docks at Chennai Port
-
- 4 replies
- 964 views
-
-
வெலிவேரிய, ரத்துபஸ்வல கிராம மக்களின் ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் என்று கூறப்படும் இராணுவத்தின் உயர் பதவிநிலை வகிக்கும் நான்கு அதிகாரிகள் பணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்கவின் உத்தரவுக்கிணங்க இராணுவத்தில் பிரிகேடியர் பதவிநிலை வகிக்கும் அதிகாரி ஒருவரும் லெப்டினன் கேணல் பதவிநிலை வகிக்கும் அதிகாரிகள் மூவருமே இவ்வாறு பணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். வெலிவேரிய தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், அவ்விசாரணைகள் முடிவடையும் வரையில் மேற்படி இராணுவ அதிகாரிகள் பணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் …
-
- 4 replies
- 377 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது கொள்கையை வெளியிட வேண்டும்: தமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு இனப்பிரச்சனைக்கு என்ன தீர்வை கொண்டுள்ளது என்ற தனது கொள்கையை வெளியிட வேண்டும் என யாழ் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் அமைப்புக்களும், மாணவர்களும், புத்தியீவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் யாழ் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிவுகளை சந்தித்துள்ளதாகவும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் அது பல புதியவர்களை முன்நிறுத்த உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவருவதை தொடர்ந்து யாழ் மக்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 1976 ஆம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனி வட்டுக்கோட்டை தீர்மானத்தை …
-
- 4 replies
- 565 views
-
-
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=22230
-
- 4 replies
- 3k views
-