ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143663 topics in this forum
-
IMFஇன் ஊழியர்களுடனான... ஒப்பந்தத்தை, நாடாளுமன்றில்... சமர்ப்பிக்க முடியாது: சபாநாயகர். சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தில் வரிகள் தொடர்பான சில முக்கிய விடயங்கள் உள்ளதால் அது தொடர்பான விபரங்களை நாடாளுமன்றத்திற்கு வழங்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி விவாதத்திற்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் எனவே அந்த அறிக்கையை சபையில் சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் தெரிவித்தார். அவரின் கருத்துக்கு பதில் வழ…
-
- 4 replies
- 318 views
- 1 follower
-
-
லெப். ஜெனரல் பாரமி குலதுங்க மற்றும் மேலும் மூவரின் படுகொலைகள் பற்றி ஆராயவும் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் சிறப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிபதி ஜி.டபிள்யு.எதிரிசூரிய, குலசேன ரணசிங்க, ஆகியோரைக் கொண்ட இந்தக் குழுவானது பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கூடவுள்ளது. சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும், எதிர்காலத்தில் நடக்கக்கூடிய இவ்வாறான செயல்களை தவிர்ப்பதற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பினை இந்த குழு எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
- 4 replies
- 1.3k views
-
-
புதன்கிழமை, 29 ஜூன் 2011 08:53 | இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று பாரிய சத்தத்துடன் யாழ். குடா கடல் வான்பரப்பை சுற்றி இன்று புதன்கிழமை காலை 8.33 மணியளவில் பறந்து நோட்டமிட்டுள்ளது. இந்த விமானம் பறந்து நோட்டமிடுவதை யாழ். குடாநாட்டின் கரையோரப்பகுதி மக்கள் அச்சத்துடன் அவதானித்தனர். யாழ். குடா கடல் வான்பரப்பை சுற்றி பறந்து நோட்டமிட்ட இந்த விமானம் பின்னர் அப்பகுதியிலிருந்து மறைந்து சென்றுள்ளது. http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id
-
- 4 replies
- 1.4k views
-
-
அமெ. இறுதி எச்சரிக்கை கவலையில் இலங்கை,அந்நாட்டின் அறிவிப்பை நாங்கள் அசட்டை செய்யவில்லை என்கிறார் கெஹலிய இலங்கை அரசு மீது சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு மேற்கொண்ட பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. இது எமக்கு பெரும் கவலையை அளிக்கின்றது. அதே சமயம் அமெரிக்கா எமக்கு விடுத்திருக்கும் இறுதி எச்சரிக்கையை நாம் சிறிய விடயமாகப் பார்க்கவில்லை அதனை அசட்டை செய்யவும் இல்லை. இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்றுக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: இலங்கை அரசின் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாம் கடந்த பல மாதங்களாக பொறுப்புக்கூறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம். …
-
- 4 replies
- 984 views
-
-
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் உருவச்சிலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அஞ்சலி செலுத்தினார். இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ரணசிங்க பிரேமதாஸவின் மனைவி, அவரின் புதல்வர் அமைச்சர் சஜித்பிரேமதாஸ ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். http://www.virakesari.lk/content/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF
-
- 4 replies
- 393 views
-
-
பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான நோக்கங்களுக்கு இடமளிக்காதிருப்போம் – சாய்ந்தமருதில் ஜனாதிபதி பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான நோக்கங்களினால் இலங்கையர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த இடமளிக்காதிருப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன், பயங்கரவாதம் உலகில் எங்குமே வெற்றிபெற்றதில்லை என்றும் அடிப்படைவாத பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனமான நோக்கங்களுக்கு இலங்கையரிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க கூடாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்திற்கு இன்று (புதன்கிழமை) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் மற்றும் மாகாணத்தின் முஸ்லிம் இளைஞர் யுவதிகளை சந்தித்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்…
-
- 4 replies
- 631 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான பெரும்பான்மை நாடுகளின் ஆதரவை அமெரிக்கா பெற்று விட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சற்று முன்னர் தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவுக்கு எதிரான இந்தத் தீர்மானம், சிறிலங்கா நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான பெரும்பான்மையான 24 நாடுகளின் ஆதரவை அமெரிக்கா பெற்றுக் கொண்டுள்ளது. அதேவேளை, நேற்றுமாலை 9 நாடுகளின் ஆதரவை மட்டுமே கொண்டிருந்த சிறிலங்கா இன்று காலை 17 நாடுகளின் ஆதரவைப் பெற்ற நிலையில் இருப்பதாகவும் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சீனா மேற்கொண்ட பரப்புரைகளின் விளைவாகவே சிறிலங்காவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக…
-
- 4 replies
- 1k views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தையைத் தொடங்க இந்திய அரசு முன்வர வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே காலகட்டத்தில் இலங்கை அரசு ஆயுதங்கள் வாங்குவதற்கு 400 கோடி ரூபாவை இந்திய அரசு வழங்கியிருக்கிறது என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது என தமிழர் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். ""முதல்வருக்கு வேண்டுகோள்'' என்ற தலைப்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்ட தீர்மானத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டிருக்கும் போது அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு உண்டு. இந்திய…
-
- 4 replies
- 1.2k views
-
-
கஞ்சிக்குடிச்சாறில் சிறிலங்கா அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் [வியாழக்கிழமை, 24 யூலை 2008, 06:03 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியை அண்டிய உடும்பன்குளம் பகுதியில் புதிதாக முகாம் நிறுவிக்கொண்டிருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மோட்டார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை 5.20 மணியளவில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதல் சுமார் 40 நிமிட நேரம் நீடித்ததாக விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்டப் பிரிவு தெரிவித்துள்ளது. தாக்குதலை அடுத்து, அப்பகுதியில் முகாம் அமைக்கும் பணிகளை இடையிலேயே கைவிட்டு விட்டு படையினர் தப்பியோடியுள்ளனர். இதன…
-
- 4 replies
- 1.8k views
-
-
யுத்த காலத்தின்போது ஒரு அரசியல் தீர்வு தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறு உறுதி மொழிகளை வழங்கியிருந்தது. நீண்டகாலமாக நிலவும் இந்த பிரச்சினைக்கு தீர்வினை காணும் நோக்கில் அந்த வாக்குறுதிகள் மதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் அவர்கள் நேற்றைய தினம் (03.03.2020) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பின் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் பேசப்பட்ட விடயங்கள் வருமாறு, நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன், கடந்த தேர்த…
-
- 4 replies
- 482 views
-
-
Published By: DIGITAL DESK 3 25 AUG, 2025 | 01:59 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான முன்னாள் நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தடுப்புக்காவலில் உள்ள அவரது உடல்நிலை குறித்து ஆழ்ந்த கவலையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2022-இல் நாடு மிக மோசமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது இலங்கையைக் காப்பாற்ற முன்வந்த தலைவர் விக்கிரமசிங்க என்று சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டுகள் 'ஆதாரமற்றவை' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவை நிரூபிக்கப்பட்டாலும், ஐரோப்பிய தரங்களி…
-
-
- 4 replies
- 385 views
- 1 follower
-
-
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிக்க விரைவான பொறிமுறை Published By: Digital Desk 3 29 Nov, 2025 | 11:20 PM தற்போது நாடு எதிர்கொண்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்குவதில் வெளிநாடுகள், அரசாங்கங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதுடன், மக்களுக்கு நிவாரணங்களை எளிதாகவும் விரைவாகவும் வழங்குவதற்கான விரைவான பொறிமுறையை நிறுவும் நோக்கில் சனிக்கிழமை (29) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. சுங்கம் மூலம் பொருள் நன்கொடைகளை விடுவிக்கும் போது பல்வேறு வரி செலுத்துதல்கள், தர ஆய்வுகள் மற்றும் அனுமதிகளைப் பெறுதல் ஆகியவற்றை விரைவுப…
-
-
- 4 replies
- 286 views
- 1 follower
-
-
குருநாகல் மாவத்தகம பகுதியில் அடையாளங் காணப்பட்ட வெட்டுக்கிளி வட மாகாணத்தில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதா விவசாய பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அந்த வெட்டுக்கிளி தற்போது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் வெட்டுக்கிளி பரவியுள்ளது. எனினும், வெட்டுக்கிளி பரவல் தகவல் பற்றி ஆராய்ந்து வருவதாக வடக்கு விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளத. வழமையாக வடக்கில் காணப்படுகின்ற வெட்டுக்கிளிகளையும் புதிதாக பரவி வருகின்ற வெட்டுக்கிளிகளாக விவசாயிகள் கருதுவதாக திணக்…
-
- 4 replies
- 689 views
-
-
பொதுபல சேனாவின் ஞானாசார தேரர் இந்தியாவினால் நாடுகடத்தல் [ தமிழ், முஸ்லிம் ஆகிய சிறுபான்மையின சமூகங்களை கள்ளத் தோணிகள் என்றும் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதாகவும் சூளுரைத்துவரும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரரை இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பியுள்ளனர். இந்தியாவின் புத்தகாயாவிலுள்ள மகாபோதி விகாரையில் வருடாந்தம் நடைபெறும் “சாஞ்சி மேலா” என்ற மகாபோதி உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற நிலையிலேயே நேற்றைய தினம் இரவு ஞானாசார தேரர் இந்திய அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றார். கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் சில வாரங்களுக்கு முன்னர் கலகொட அத்தே ஞான…
-
- 4 replies
- 689 views
-
-
மந்தனா இலங்கையின் சண்டேலீடர் பத்திரிக்கையின் இணையாசிரியர் மந்தனா இஸ்மயில் அபயவிக்ரம இலங்கையை விட்டு வெளியேறியிருக்கிறார். மூன்று வாரத்திற்கு முன்பு அவரது வீட்டில் இரவில் புகுந்த முகமூடியணிந்த நபர்கள் மந்தனாவையும், அவரது குடும்பத்தவரையும் கத்திமுனையில் மிரட்டிய பின்னணியில் அவர் இலங்கையை விட்டு வெளியேறியிருப்பது இலங்கைக்குள், “ஊடகவியலாளர்களுக்கு எதிரான போர்” தொடருவதை காட்டுவதாக ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பு கவலை வெளியிட்டிருக்கிறது. தொடர்புடைய விடயங்கள் ஆட்கடத்தல், தாக்குதல், மனித உரிமை, பெண்கள் சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்கரமதுங்க நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்துக்குப் பிறகு …
-
- 4 replies
- 640 views
-
-
ரவிக்குமார் எம்.எல்.ஏ. யாழ்ப்பாணம் அல்ல... 'யாப்பா பட்டுவ'! இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. அந்நாட்டின் தலைவிதியை இனவாதம்தான் தீர்மானிக்கிறது என்பது மீண்டும் தேர்தல் முடிவு களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ராஜபக்ஷே மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் ஃபொன்சேகாவைவிட பதினேழு சதவிகிதம் கூடுதலான வாக்குகளை அவர் வாங்கியிருக்கிறார். இது சிங்கள மக்கள் பெருமளவில் ராஜபக்ஷேவைத்தான் ஆதரிக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது. ராஜபக்ஷே முறைகேடான வழிகளைக் கையாண்டு தான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூறப் பட்டாலும், அதை முழுமையாக நாம் ஏற்க முடியவில்லை. ஏனென்றால், அங்கு சிங்களப் பேரினவாதம் கொடிகட்டிப் பற…
-
- 4 replies
- 1.7k views
-
-
மாகாண சபைத் தேர்தலை... விரைவில் நடத்த வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்து ஜனநாயகத்தை உறுதி செய்ய மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலண்ட் இதனைத் தெரிவித்தார். மேலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திக்க எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்பதாகவும் அவர் கூறினார். கொழும்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உடனான சந்திப்பைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மிகவும் கடினமான மற்றும் முக்கிய தருணத்தில் தாம் இலங்கைக்கு விஜயம் செய்துள…
-
- 4 replies
- 371 views
-
-
ஜெனீவாவில் வாய்மூடி இருந்தது ஏன் ? வெளிவிவகார அமைச்சு கேள்வி !! ஐ.நா மனித உரிமைச்சபையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்காவின் பிரதிநிதி வாய்மூடி மௌனமாக இருந்தது ஏன் என்ற கேள்வியினை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கேள்வி எழுப்பியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. செப்பெரம்பர் 26ம் நாளன்று மைய அமர்வில் இடம்பெற்றிருந்த தொடர்பிலான விவாவத்தின் போது 14 தடவைகள் சிறிலங்காவை மையப்படுத்தி குற்றச்சாட்டுக்கள் அரச சார்பற்ற அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிப்பதற்கான உரிமை சம்பந்தபட்ட நாடு என்ற வகையில் சிறிலங்காவுக்கு …
-
- 4 replies
- 430 views
-
-
நாட்டில் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிராக பலவிடையங்கள் பகிரங்கமாகவும் இரகசியமாகவும் அரங்கேறிவரும் இந்நிலையில் மிகுந்த நூதனமாகவும் சில விடையங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே ஹலால் சான்றிதழை விலக்கியுள்ள உபாலி நிறுவனம் அதன் சொக்லேட் உற்பத்திகளில் ஒன்றான Megical Moments எனும் உற்பத்தியில் வடிவமைக்கப்பட்டுள்ள சொக்லட்களிள் பன்றியின் உருவத்தை ஒத்த உருவங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. முஸ்லீம்களாலும் பெரிதும் நுகரப்படும் குறித்த நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்களிள் இவ்வாறான விரும்பப்படாத செயற்பாடுகள் இடம்பெறுவது கவலையளிக்க கூடிய விடயமாகும். குறித்த நிறுவனம் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்குமானால் முஸ்லீம்களாலும் மதிக்ககூடிய நிலமை உருவாகும். இருந்தபோதும் முஸ்லீம்களால் உண…
-
- 4 replies
- 848 views
-
-
சிறிலங்கா அரசின் தடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை: புலம்பெயர் அமைப்புக்கள் முடிவு [saturday, 2014-04-05 19:52:31] சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழர் அமைப்புக்கள் மீதான தடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. இலங்கை அரசாங்கத்தினால் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், நாடு கடந்த தமிழீழ இராச்சியம் உள்ளிட்ட பதினாறு அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாக புலம்பெயர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் தமது அமைப்…
-
- 4 replies
- 704 views
-
-
மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் தமிழ் தரப்பினருக்கு டக்ளஸ் விடுக்கும் அழைப்பு! மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்த தமிழ் தரப்புகள் ஒன்றிணைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில், தமிழ் தரப்புகள் ஒன்றிணைய வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுபடுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைக்க மேற்கொண்டு வரும் அரசியல் சூழலை த…
-
- 4 replies
- 231 views
- 1 follower
-
-
மூதூர் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் படுகொலை விசாரணைக்காக சிறிலங்கா வந்த அவுஸ்திரேலிய தடவியல் வல்லுநர்கள் ஏமாற்றத்துடன் நாடு திரும்பிவிட்டனர். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களையடுத்து மூதூர் படுகொலை தொடர்பாக வெளிநாட்டு வல்லுநர்களை சிறிலங்கா அரசாங்கம் வரவழைத்தது. ஆனால் உரிய சட்டப்பூர்வமான அனுமதியை அவர்களுக்கு அளிப்பதிலும் அது தொடர்பான ஓப்பந்தத்தை நிறைவேற்றுவதிலும் சிறிலங்கா அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்தது. இதனால் மூதூர் பணியாளர்களின் உடல்கள் மீள் பிரேத பரிசோதனை செய்யப்படாத நிலைமை நீடித்து வந்தது. இதனையடுத்து விரக்தியடைந்த அவுஸ்திரேலிய வல்லுநர்கள் தங்களது நாட்டுக்குத் திரும்பிவிட்டனர். http://www.eelampage.com/?cn=28980
-
- 4 replies
- 1.6k views
-
-
ரணிலின் இரட்டை வேடம் [17 - April - 2007] -வி.திருநாவுக்கரசு- ஆட்கடத்தல்கள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், காணாமற் போதல்கள் போன்ற கொடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கவன ஈர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கு முகமாக மக்கள் கண்காணிப்பு ஆணைக்குழு (C.M.C) அழைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மனோகணேசனால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒன்று 2007.04.09 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றதல்லவா? அக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய ரணில் விக்கிரமசிங்க பிரதான உரையினை நிகழ்த்தினார். காணாமற் போன அல்லது கடத்தப்பட்ட தமது அன்பிற்குரியவர்களை காணத்துடிக்கும் அப்பாவி உறவினர்கள் கண்ணீரும் கம்பலையுமாக காட்சியளித்தனர்.காணாமல் போனவர்களை கண்டுபிடி…
-
- 4 replies
- 2.1k views
-
-
வடக்கு மாகாணத்தின் ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்த காலத்திலும் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட நிலையிலும் தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை. ஆனால் இம்முறை வடக்கு மாகாணத்தின் ஆளுநராக தமிழர் ஒருவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இந்நியமனம் ஜனாதிபதி மைத்திரிக்கு சர்வதேசத்தின் பார்வையில் நன்மதிப்பைக் கொடுக்கக்கூடியதாகும். அதேநேரம் ஆளுநர் தொடர்பில், தமிழர்களின் எதிர்பார்ப்பை ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார் என்ற கருத்து நிலையும் ஏற்படவே செய்யும். இவை ஒருபுறமிருக்க, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநரா…
-
- 4 replies
- 926 views
-
-
தேர்தலை தடுக்க புலிகள் முயற்சிப்பதாக நோர்வேக்கு சிறிலங்கா கடிதம் [செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2007, 17:30 ஈழம்] [செ.விசுவநாதன்] கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் நடத்த உள்ள தேர்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்று சிறிலங்காவுக்கான நோர்வேத் தூதுவருக்கு சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் றஜீவ விஜயசிங்க கடிதம் அனுப்பியுள்ளார். நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கருக்கு றஜீவ விஜயசிங்க அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கிழக்கில் தேர்தலை நடத்தினால் அங்கு இரத்த ஆறு ஓடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாளிதழ்களில் வெளியாகியிருப்பதை தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறோம். தமிழ் மக்களைப் பா…
-
- 4 replies
- 1.4k views
-