Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது May 9, 2025 9:08 am ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் பயிற்சி அமர்வின் போது புறப்பட்ட பெல் 212 ரக ஹெலிகாப்டர் மதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் இருந்துள்ளனர். இதுவரை விமானிகள் உட்பட 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இலங்கை விமானப்படையின் பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மீட்புபணியின் போது இரண்டு விமானிகள் உட்பட பயணித்த…

  2. இலங்கையில் பிடிப்பட்ட ஹெராயின் மதிப்பு 75 லட்சம் டாலர் இலங்கையின் தென் கடற்பரப்பில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் 75 லட்சம் டாலர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட ஹெராயின் பொதிகள் இந்தப் போதைப் பொருளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சிறிய கப்பல், இரானியர்களுக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பின் புறநகர் பகுதியான நீர்கொழும்பில் தங்கியிருந்த கும்பலே, இந்தக் கடத்தலுக்கான திட்டத்தை தீட்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஹெராயின் கடத்திவ…

    • 4 replies
    • 564 views
  3. எழுக தமிழ் பேரணிக்கு பதிலாக இலங்கையரே எழுக என்ற அடிப்படையில் பேரணி நடத்தப்பட வேண்டுமென தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்று எழுக தமிழ் பேரணி குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சிங்களவரே எழுக, தமிழரே எழுக மற்றும் முஸ்லிம்களே எழுக என்னும் தொனிப் பொருட்களில் பேரணிகள் நடத்தப்படுவதனை விடவும், இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டை அபிவிருத்திக்கு பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டிய யுகமொன்ற உருவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் எழுக தமிழ் பேரணி நடத்தப்படவுள்ளது. இந்தப் பேரணி நடத்தப்படுவதற்கு விசேட வித…

    • 4 replies
    • 448 views
  4. ஈழப் போராட்டத்தில் களம் இறங்கியிருக்கிறது தமிழ்த் திரையுலகம். [பிரித்தானிய நேரம் : April 23rd, 2009 at 10:10] அரசியல் கட்சிகளே இதுவரை கிளப்பாத முழக்கத்தோடு ஈழப் போராட்டத்தில் களம் இறங்கியிருக்கிறது தமிழ்த் திரையுலகம். இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் போரை நடத்திவரும் சோனியாவை தமிழகத்துக்குள் விடமாட்டோம்!, என்பதுதான் தமிழ்த் திரையுலகத்தின் தடதட முழக்கம். ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் அமைப்பினரைச் சந்திக்க இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்றனர் திரைத்துறை பிரமுகர்கள். அங்கேயே ஒலிவாங்கியை பிடித்து மத்திய அரசுக்கு எதிராகவும், குறிப்பாக சோனியாவுக்கு எதிராகவும் கொந்தளிக்கத் தொடங்கி விட்டார்கள். இயக்குநர்கள் வட்டாரத்த…

  5. வற்றாப்பளை பொங்கல் விழா ஆரம்பம் வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி விசாகப் பொங்கல் விழா, இன்று அதிகாலை 4.00 மணிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்து வருதலுடன் ஆரம்பமானது. http://uthayandaily.com/story/6165.html

    • 4 replies
    • 466 views
  6. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையே எமது எதிர்காலத்தை நோக்கிய பயணம் – ஜனாதிபதி! இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையுடன் வளமான எதிர்காலத்தை நோக்கிய எமது பயணம், பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டும். விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி நவிலும் தைப்பொங்கல் தினம், இந்துக்களின் சிறப்புமிக்க கலாசாரம் மற்றும் மத ரீதியிலான பண்டிகையாக விளங்குகின்றது. உலக வாழ் இந்துக்களுடன் இணைந்து இப்பண்டிகையைக் கொண்டாடும் இலங்கை வாழ் சகோதர இந்து மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தைபொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தைப்பொங…

  7. யுத்த கால கட்­டத்தில் இலங்­கையில் நடந்­தவை என்­ன­வென்­பதை ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­குழு அறிந்து கொள்ள வேண்டும். உலகின் நடு­நி­லை­யான ஒன்­றியம் பக்­கச்­சார்­பாக நடந்து கொள்­ளக்­கூ­டா­தென இரா­ணுவப் பேச்­சாளர் ருவான் வணிக சூரிய தெரி­வித்­துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடை­பெ­ற­வுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் சபை அமர்­விற்கு முன்னர் இலங்­கையின் உண்மை நிலை பற்­றிய எட்டு வீடியோ காணொ­ளி­களை ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­விற்கு அனுப்­ப­வுள்ளோம் எனவும் அவர் தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், யுத்­தத்­திற்கு முன்­னரும் இறுதிக் கட்ட யுத்­தத்தின் போதும் இலங்­கையில் என்ன நடை­பெற்­றது? குறிப்­பாக வடக்கில் இரா­ணு­வத்­தினர் எவ்­வாறு ச…

  8. யுத்தம் முடியவில்லை; அது புதுவடிவம் பெற்றுள்ளது! நெஞ்சில் ஈரமற்ற வரண்டு இறுகிய கற்பாறைகளால் தமிழ் இதயங்களை நசுக்கிப் பிழிந்த சாற்றில் இருந்து சிங்கள சமூகம் அரசியற் கெந்தகம் ஆகிவிட்டது. இந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவு இப்போது ஒரு வெடிமருந்துக் கிடங்கு. இந்து சமுத்திரம் சார்ந்த வல்லரச நலன்கள் ஈழத்தமிழர் மீதான ஒடுக்குமுறையில் மையங்கொண்டது. நுனித்துலாவில் எரிந்த தீப்பந்தம் இப்போது அடித்துலாவுக்கு மாறிவிட்டது. பச்சைக் கண்களின் பார்வையில் முள்ளிவாய்க்காலில் சிங்கமும் – புலியும் சண்டையிட்டன என்பதுதான் தெரியும். ஆனால் யார் யாரோ நலன்களுக்காகவெல்லாம் வெள்ள முள்ளிவாய்க்கால் இரத்த வாய்க்கால் ஆனது. பச்சைக் கண்களால் பார்க்கும் அரசியற் கண்ணற்றோரின் பார்வையில் யுத்தம் முடிவடை…

  9. (நா.தனுஜா) புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவிருக்கும் வேட்பாளர்களால் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு உரியவாறான தீர்வு கிட்டாது என்பதனால் நாளைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் புதிய ஜனாதிபதித் தெரிவிற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமலிருப்பதற்குத் தமது கட்சி ஏகமனதாகத் தீர்மானித்திருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். நாடு பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நாளைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதில் வாக்களி…

  10. பொதுநலவாய போட்டிகளின் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே கலந்துகொள்கிறார் என்ற செய்தி பொய்யானது இந்தியாவின் புதுடெல்லி நகரில் நடைபெறும் 19வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவுநாள் விழாவின் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே கலந்துகொள்வதாக அரச மற்றும் தனியார் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது எனவும், பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர் என்ற வகையிலேயே ஜனாதிபதி இதில் கலந்துகொள்வதாகவும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாhpயொருவர் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி இந்த வைபவத்தில் கௌரவ விருந்தினராக கலந்துகொள்கிறார் என அரசாங்கத்தின் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் பொதுநலவாய நடவடிக்கைகளில் அவ்வாறான வ…

    • 4 replies
    • 961 views
  11. இலங்கையில் மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறை அவசியம்! – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அறிக்கை. [Tuesday 2014-09-23 09:00] இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான அவர் நாளை சமர்ப்பிக்கவுள்ள வாய்மொழி அறிக்கையின் வரைவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த கால மற்றும் நிகழ்கால மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் இதில் வலியுறுத்தியுள்ளார். seithy.com

  12. உள்நாட்டு விசாரணை செப்ரெம்பருக்குள் முடியாது – சிறிலங்கா அரசு கூறுகிறது MAR 01, 2015 | 10:09 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் குறித்த உள்நாட்டு விசாரணை வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னர் நிறைவடையாது என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னதாக, உள்நாட்டு விசாரணை குறித்த கட்டமைப்பு மற்றும் சட்டங்கள் தான் உருவாக்கப்படும். வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்கு முன்னதாக, சட்ட நடைமுறைகளை நிறைவு செய்வது கடினமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு விசாரணைகளுக்கு காலஅவகாசம் அளிக்கும் வகைய…

  13. சார்க் மாநாட்டில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் கூறுகின்றன. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகள் தேக்கமடைந்துள்ள பின்னணியில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இந்திய நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அரசுடன் இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு தொடர்பாக பேச்சு நடத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இடைநிறுத்திய பேச்சுக்களை மீள ஆரம்பித்த போதும் எந்த முன்னேற்றங்களும் எட்டப்படாத நிலையில், அமெரிக்க, பிரித்தானிய, கனேடிய அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டுப் பயணங்கள் சிற…

  14. நாளைய சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி. சசிதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், சம்பள உயர்வுக்காக ஒருநாள் விடுமுறையை அறிவிப்போம். அதிபர்கள் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக 1998 ஆம் ஆண்டுமுதல் மாறி மாறி வருகின்ற ஆட்சியாளர்களிடம் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கையளித்தோம். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தீர்ப்பதாக வாக்குறுதியளித்து பின்னர் ஏமாற்றப்பட்டோம். இது காலம் காலமாகத் தொடர்கின்றது. இன்றைய கால கட்டத்தில் வாழ்வதற்…

  15. Published By: VISHNU 25 AUG, 2024 | 11:03 PM இந்தத் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியனேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப்பின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் நம்பிக்கை தெரிவித்தார். வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் பொதுக் கட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் வவுனியாவை சேர்ந்த சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் கடந்த எட்டு ஆண்டுகளாக ஜனாதிப…

  16. 17 DEC, 2024 | 07:39 PM யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 6 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர் என யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 9 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில்…

  17. கடல்சார் பாதுகாப்பு ஆற்றலை முன்னேற்றும் திட்டத்தின் கீழ், சிறிலங்காவுக்கு 2.4 பில்லியன் ரூபாவை ஜப்பான் கொடையாக வழங்கியுள்ளது. சிறிலங்கா கடலோரக் காவல்படையின் கடல்பாதுகாப்பு ஆற்றலை முன்னேற்றும் நோக்கில் ஜப்பான் இந்த உதவியை வழங்கியுள்ளது. இதன் மூலம், கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, கடற்கொள்ளை முறியடிப்பு, கடல்கடந்த குற்றங்களை தடுத்தல், கடல்வளங்கள் அழிக்கப்படுவதை தடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதற்கு, சிறிலங்கா கடலோரக்காவல்படைக்கு இரண்டு ரோந்துக் கப்பல்கள் வாங்கப்படவுள்ளன. இந்த இரண்டு ரோந்துக் கப்பல்களும் 30 எம் ரகத்தைச் சேர்ந்தவையாகும். ஜப்பானில் கட்டப்படும் இந்தக் கப்பல்கள் சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்படும். அத்துடன் சிறிலங்கா கடலோரக் காவல்படையினர…

    • 4 replies
    • 365 views
  18. மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணததினாலும் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்கள் கடுமையாக பாதிப்படைந்திருந்தனர். இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தினால் எமது கிராமத்திற்கு படகுகள் மூலம் அனுப்பி வைத்த உலர் உணவுப்பொருட்கள் முழுமையாக வந்தடையாததன் காரணத்தினால் அவற்றை பகிர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அதனால் அவற்றை திருப்பி அனுப்பி வைத்ததாகவும் குஞ்சுக்குளம் பங்குத்தந்தை லக்டன் டி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 'முசலி பிரதேசத்திற்கு 35 படகுகள் மூலம் உலர் உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் போது மன்னார் மாவட்டத்தினால் எமக்கு தெரிவிக்கப…

    • 4 replies
    • 670 views
  19. இலங்கை அரசின் மின்தளங்கள் சில தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன கடந்த வார இறுதியில் இலங்கை துறைமுக அதிகார சபையின் மின்தளம் இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களின் மின்தளங்கள் (ரூபவாஹினி, வன் சிறிலங்கா) வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்கள மின்தளம் இதில் தொலைக்காட்சி நிறுவனங்களின் தரவுகளும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் தரவுகளும் கசியவிடப்பட்டுள்ளன. தளங்களின் முக பக்கம் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் நிர்வாகத்தின் பகுதிகள் களவாடப்பட்டு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. http://www.dailymirror.lk/news/25208-govt-web-sites-hit-in-spate-of-attacks.html முன்னைய செய்தி: சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் மின்வலை தளம் தாக்கப்பட்டது http://www.yarl.com/forum3/in…

  20. -சுமித்தி தங்கராசா ஊடகங்களின் மீது தாக்குதல் மேற்கொள்பவர்கள் ஒருவரை கூட கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க முடியாத ஜனாதிபதி நிச்சயமாக தனது பதவியை திறப்பதுதான் நாட்டு மக்களுக்கு செய்யும் பேருதவி என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இன்று தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இன்று உதயன் பத்திரிகை மீண்டும் ஒரு முறை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. தானியங்கி துப்பாக்கியுடன் வந்தவர்கள் 3 மேற்பட்டவர்களினால் எச்சரிக்கை வேட்டுகளை தீர்த்து, அங்கு வேலை செய்யக்கூடிய ஊழியர்களை விரட்டி, மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றார்கள். இது வெறுமனவே யாழ்ப்பாணத்தி…

    • 4 replies
    • 893 views
  21. நாம் மக்களுக்காகவே போராடுவோம்... போராட ஆசைப்படுவோம். மூலம்: http://www.globaltamilnews.net/tamil_news....=9933&cat=5 கடந்த எட்டு மாதமாக எண்ணிலடங்கா மக்களை பலி எடுத்து ஓய்ந்திருக்கிறது போர். முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களில் போராளிகளை களை எடுப்பது, பெண்களை பாலியல் வன்முறை செய்வது, குழந்தைகளை பிடித்துச் செல்வது என்று மக்களை அச்சுறுத்தும் ஒரு போர் தொடர்ந்து கொண்டிருக்க ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். உளவியல் ரீதியாக சிதைப்பட்ட நிலையில் புலம்பெயர் நாடுகளில் தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்வது என்ற துயரில் கதறி அழுதபடி ஆற்றாமையால் துடிக்கிறார்கள் தமிழ் மக்கள். நம்பிக்கை கொள்ளும் படியான ஒரு செய்தியும் …

  22. இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல’ – க.வி.விக்னேஸ்வரன் 97 Views இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல. தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்ல. அவர்கள் இன்று நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை” என வாரத்துக்கொரு கேள்வி என்ற பதிவில் நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர் வழங்கியுள்ள கேள்வி பதிலில், கேள்வி: இந்து சமுத்திர வல்லரசுகளின் போட்டியில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் பிரிவினையைத் தூண்டப் பார்க்கின்றன என்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ச பகிரங்கமாகக் கூறியுள்ளாரே. அது பற்றிய உங்கள் பார்வை என்ன? பதில்: மேன்மைதகு ஜனாதிபதி அவர்களின் தப்பான சிந்தனையின் வ…

    • 4 replies
    • 935 views
  23. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டதற்கு ஒரு சில தரப்பலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22658

  24. மழுப்ப வேண்டாம் கேட்ட கேள்விக்கு பதிலளியுங்கள் யாழில் சுமந்திரனை அதிர வைத்த இளைஞர்| https://youtu.be/cSl6NKI9A8I

    • 4 replies
    • 907 views
  25. புங்குடுதீவு வித்தியா படுகொலை : குற்றப்பத்திர ஏடுகளை பாதுகாக்க நீதிமன்று உத்தரவு யாழ்ப்பாணம், புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பில் முதல் ஒன்பது எதிரிகளுக்கும் எதிரான குற்றப்பகிர்வு பத்திர வழக்கு ஏடுகள் இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற பதிவாளருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணையானது கொழும்புக்கு மாற்றப்படுவது தொடர்பான முயற்சிகள் உயர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பகிர்வு பத்திரத்தை இரும்பு பெட்கத்தில் வைத்து பாதுகாக்குமாறு யாழ்.மேல் நீதிமன்றமானது நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது. இதேவேளை குறித்த வழக்கானது கடந்த திங்கட்கிழமையே சட்டமா அதிபரால் யாழ்.மேல் …

    • 4 replies
    • 419 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.