Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆட்டிறைச்சி அரை கிலோ மைசுhர் பருப்பு அரை கிலோ சுக்கினி( பிக்கினி அல்ல)அரை கிலோ வெங்காயம் 2 பெரியது பச்சைமிளகாய் உங்கள் உறைப்புக்கு எற்றால் போல உள்ளி 5 இஞ்சி ஒரு துண்டு உப்பு கறுவா பட்டை ஏலக்காய் தக்காளிபழம் 5பெரியது மல்லி இலை சிறிதாக வெட்டியது தேசிக்காய் 1 எண்ணை கொஞ்சம் செய்முறை: முதலில் வெங்காயம் ப.மிளகாய் உள்ளி இஞ்சி இவற்ரை அரைக்கவும் இறைச்சியை ஓரளவு பெரிய துண்டுகளாக வெட்டவும் சக்கினியையும் அப்படியே வெட்டவும் தக்காளியையும் வெட்டி வைக்கவும் அடுப்பில் சட்டியை வைத்து சிறிதளவு எண்ணை ஊற்றி கறுவா ஏலக்காய் போடவும் பின் அரைத்த விழுதை போடவும் அதன் பச்சை மணம் போகும் வரை சமைக்கவும் பின் இறைச்சியை போடவும் பின் பருப்பு அதன் பின் சுக…

  2. சமையல் என்பது முறை அல்ல, .தொழில் அல்ல..அது ஒரு கலை... என்றுமே எவருக்கும் அம்மாவின் சமையல் சுவைக்கும். உலகம் முழுதும் சுற்றினாலும், பல் நூறு உணவு உண்டாலும், நாக்கின் அடியில் அம்மாவின் உணவின் சுவை என்றுமே ஒட்டியிருந்து, நினைக்கும் நேரத்தில் இனிமை தரும். நான் பல இடங்களில் கை கழுவினாலும் இன்றும் அம்மாவினதும் யாழ்ப்பாண உணவினதும் சுவை என் நாக்கு முழுதும் ஒட்டியிருக்கு. சமையல் கலையில் ஈடுபாடு இருப்பதால், அம்மா எப்படி யாழ்ப்பாண முறையில் சமைத்தார் என்ப்தை அறிய ஆவலாக இருக்கின்றேன் உங்களில் யாருக்கேனும் பின்வரும் உணவை யாழ்பாண முறையில் தயாரிக்கும் முறை தெரிந்தால் தரவும்....வீட்டில் வார இறுதி நாட்களில் சமைத்து பார்க்க ஆவலாக இருக்கின்றேன் 1. மீன் பொரியல் (மிக இலகுவானது …

    • 25 replies
    • 11.7k views
  3. முந்தானை முடிக்கும் வெந்தயக்குழம்பு என் பசுமைதேசத்துக் கறுப்புத் தேவதைக்குச் சமர்ப்பணம். (யாழ்கள உறுப்பினர் கறுப்பிக்கு) பெயர் அறிந்து கறிகள் சமைக்கப்பழகவில்லை. எல்லாம் ஆதியின் கைங்கரியம்.... பசியின் கொடுமை தாங்க முடியாத என் வீட்டு எசமானியின் முறுவல்கள் மட்டுமே ஆதியின் நளபாகத்தின் ஆசிரியர். தான்தோன்றியாக ஆதியின் அக்கிரமத்தில் உருவாக்கப்படும் கறிகளுக்குப் பெயர் சூட்டுவிழாவை யாழ்க்கள வம்பர்களிடம் விட்டுவிடுகிறேன். சுவைஞர்களின் சிந்தனைகளில் உதிக்கும் அற்புதப் பெயர்களை ஆதியின் அடங்காப்பாகம் அட்டில் கலையில் சேர்த்துவிடுவோம்.சரி முந்தானை முடிக்கும் வெந்தயக் குழம்பு. எப்போதுமே உணவுத்தயாரிப்புக்கு குறைவாகவோ, அதிகமாகவோ அடுப்பின் சூட்டு நிலை இருக்கக்கூ…

  4. வணக்கம் கன நாளைக்குப் பிறகு சுவைஞர்கள் பகுதிக்கு ஆதிநைனா வந்துள்ளேன். உள்ளாரக் கூப்பிடுங்க. பயப்படாதீங்க எல்லாருக்கு நல்லது செய்யத்தான் வந்திருக்கிறன். ஒரு காலத்தில கனபேரின் வால்கள் வளர்ந்ததற்கு ஆதியைக் காரணம் சொன்னாங்க. இனிமே எல்லாருடைய நா வளர்ச்சிக்கும் ஆதியை சொல்லுவாங்க. நா என்றால் பேச்சு வன்மையை வளர்க்கப்போறன் என்று நினைக்கப்படாது. சுவைகள் அறியும் நா வளர்ச்சியைத்தான் ஆதிநைனா ஆரம்பிக்கப்போறன். இங்க ஆதிநைனா போடுற அட்டில் இரகசியங்களை வாசிக்கிற நீங்களே வச்சுக்கொள்ள வேணும் செயல்முறையைச் செஞ்சு பாக்கவேணும். பின்னாடி உங்க உங்க எசமானிகள் என்ர வீட்டு எசமானியைக் கூப்பிட்டு உன் வீட்டுச் சமையல்காரனின் செய்முறைப் பதிவால தாங்கள் வீட்ல நிம்மதியா இருக்க முடியுதில்லை என்று முறைப்பாட…

  5. நான் நேற்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கப்போகும் போது ....... கடையில் அரிசி மா என்று நினைத்து , ஐந்து கிலோ ஆட்டா மாவை தெரியாத்தனமாக வாங்கிவிட்டேன் . அதனை வீட்டிற்கு கொண்டுவந்தவுடன் ....... என்ரை மனிசி அதனை பார்த்து , அது அரிசி மா இல்லை , ஆட்டா மா என்று கண்டு பிடித்து விட்டா ..... எங்களுக்கு முன் , பின் ஆட்டாமாவில் சமைத்து பழக்கம் இல்லை . அதன் பெறுமதி குறைவு என்றாலும் உணவுப் பொருட்களை வீணாக்க விரும்பாத கொள்கை உடையவர்கள் நாங்கள் . அதனை வாங்கிய கடையில் திருப்பிக் கொடுக்கலாம் என்றால் ......, வாங்கிய உணவுப் பொருட்களை திரும்ப எடுக்க கூடாதென்பது கடையின் சட்டம் . இப்போ பிரச்சினை என்னவென்றால் ......... அரிசி மாவுக்கும் , ஆட்டா மாவுக்கும் வித்தியாசம் தெரியா…

  6. நீங்கள் தேடும் சமையல் குறிப்பினை பார்ப்பதற்கு அறுசுவை டாட் கோம் செல்லுங்கள். என்ன தேவையோ முழுவதும் பார்த்து பயனடையலாம்.

    • 0 replies
    • 1.9k views
  7. நீங்கள் தேடும் சமையல் குறிப்பினை பார்ப்பதற்கு அறுசுவை டாட் கோம் செல்லுங்கள். என்ன தேவையோ முழுவதும் பார்த்து பயனடையலாம்.

    • 0 replies
    • 5.2k views
  8. Started by Penmann,

    சூப் செய்ய தேவையானவை இறைச்சி - கோழி சிக்கன் சீசனிங் சிக்கன் சூப் கியூப் மரவள்ளி கிழங்;கு உருளைக்கிழங்கு கரட் போஞ்சி தக்காளிப்பழம் சோளம் மல்லி இலை உப்பு செய்முறை:- இறைச்சி சிக்கன் சீசனிங்கில் பிரட்டி 30 - 1 மணித்தியாலங்களுக்கு ஊறவிடவும் மரவள்ளி கிழங்கை வெட்டி துண்டுகளாக தண்ணீர்விட்டு பாத்திரத்தில் அவியவிடவும் ஓரளவு அரை வேக்காட்டில் சோளம், கரட், உருளைக்கிழங்கையும் போட்டு அவியவிடவும். சொற்ப வேளையில் போஞ்சியையும் போட்டு அவியவிடவும். இறைச்சியை வேறு பாத்திரததில் எண்ணெய் விட்டு நன்கு பிரட்டி பதப்படுத்தி மரக்கறிகள் அவியும் பாத்திரத்தில் போட்டு மூடி விடவும், பின்னர் உப்பு சிறிதளவு, சிக்கன் கியூப் சிறிதளவு, மல்லி இலை சிறுதுண்டு வெட்டிய தக்காள…

    • 0 replies
    • 2.3k views
  9. ரியூனா கறி தேவையான பொருட்கள் ரியூனா மீன் பேணி - 1( Tuna in Brine or Tuna in Sunflower Oil) 2 தக்காளிப் பழம் 1 வெங்காயம் - நடுத்தர அளவு 2- 3 பச்சை மிளகாய் சிறிதளவு பெருஞ்சீரகமும் கடுகும் சிறிதளவு எண்ணை சிறிதளவு மிளகாய்த் தூள் . கருவேப்பிலை சிறிதளவு உப்பு சிறிதளவு தேசிக்காய்ப் புளி அடுப்பில் சட்டியை வைத்து சிறிதளவு எண்ணையைவிட்டு சூடாக்கி பின்னர் வெட்டிவைத்த வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு தாளிக்கவும், ஓரளவு வதங்கியதும் கடுகு பெருங்சீரகம், கருவேப்பிலை எல்லாத்தையும் போட்டுத் தாளிக்கவும். வெங்காயம் பொரிந்து பொன் நிறமாய் வந்ததும் வெட்டிவைத்த தக்காளிப் பழத்தையும் போட்டு ரியூனாவையும் போட்டு சிறிது மிளகாய்த் தூள் உறைப்புக்குத் தகுந்த மாதிரிப் போ…

  10. .......... இது நம்ம ஊரு ஸ்பெஷல் .... ... அழகான ஊர் .. ஊரை சுற்றி தோட்டங்கள் .... தோட்டங்களில் ஆங்காங்கே பூவரசு ஆடுகாற்களுடன் கிணறுகள் ..... அதன் அருகருகே தென்னோலையால் வேயப்பட்ட சிறு குடில்கள்..... தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுபவர்கள் களைப்பாற, வேலை செய்பவர்கள் இளைப்பாற, நீர் இறைக்கும் இயந்திரங்களை சிலவேளை இரவுகளில் விட்டுச் செல்லவும் இக்குடில்கள் ..... அதனை விட பாடசாலையை கட் அடித்து விட்டோ, மதில் ஏறிப் பாய்ந்து சென்று நாலு போத்தல் கள்ளுகளுடன் ஒதுங்கவும் அருமையான இடம் ... நன்றிகள் குடில்களே!! ... அது என்ன கோழிப்புக்கை????? .... கள்ளுடன் தோட்ட குடிளுக்குள் ஒதுங்கியாச்சு! ... போட்டால் பசிக்கும் ... சாப்பிட??? .. வீடுகளுக்கு போக முடியாது, முறியும் மட்டும்!! ...…

  11. உப்பு மா செய்வது எப்படி ? அதற்கு என்ன ... என்ன சாமான்கள் தேவை என்பதை யாராவது அறியத் தருவீர்களா ?

    • 37 replies
    • 29.2k views
  12. ஆடுகளத்தில் கொத்துரொட்டி பார்சல் பரிசாகத் தர முடியவில்லை... அது தான் எல்லாருக்கும் கிடைக்கிறது மாதிரி கொத்துரொட்டி செய்யும் முறையாவது தேடித் தரலாம் என்று நினைச்சன்...பார்த்தபோது ஒருக்கா try பண்ணலாமா என்று தோன்றியது... செய்து பார்த்தேன்... நன்றாக வந்தது... சாபிட்டுவிட்டேன் நாளைக்கு விடுமுறை எடுக்க வேணுமோ தெரியாது... (இதைப் பார்த்ததும் இளையபிள்ளையையும், தமிழ் சிறி அண்ணாவையும் ஞாபகம் வந்தது... )

  13. இது நான் வாசித்த ஒரு சமையல். விரியும் சிறகுகள் என்ற இணையத்தில் வி.ஜெ. சந்திரன் (canada)அவர்கள் படத்துடன் தந்த செய்முறை.நன்றி சந்திரன் நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்கள். சுட்ட கத்தரிக்காய்ச் சம்பல் சுட்ட கத்தரிக்காய்ச்சம்பல் தேவையான பொருட்கள் ஒன்று/ இரண்டு பேருக்கு 4 - மேசைக்கரண்டி தயிர் 1 - பெரிய கத்தரிக்காய் * சுட்ட சம்பலின் நிறம் வெளிர்ப்பாக இருக்க வேண்டும் என விரும்பினால் வேள்ளை கத்தரிக்காய் தான் நன்றாக இருக்கும். * வெள்ளை கிடைக்கவில்லை என்றால் ஊதா கத்தரிக்காய் பாவிக்கலாம். நீண்ட கத்தரிக்காயை தான் பெரிய கத்தரிக்காய் என சொல்லியுள்ளேன். நீண்ட கத்தரிக்காய் கிடைக்கவில்லையென்றால் சிறிய …

    • 11 replies
    • 7.1k views
  14. இறால் வடை செய்யும் முறை தேவையான பொருட்கள் இறால் - 15 கடலை பருப்பு - 1/4 கப் ஊறவைத்தது சின்ன வெங்காயம் - 10 பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - 1 கொத்து இஞ்சி&பூண்டு விழுது - 1/4 ஸ்பூன் தேங்காய் துருவல் - 3ஸ்பூன் மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணை - 1/2 கப் பொரிக்க செய்முறை முதலில் கடலைப்பருப்பை தண்ணீரை சுத்தமாக வடித்து மிக்சியில் அரைக்கவும் பிறகு இறால் தவிர மேற்கண்ட எல்லாவற்றையும் மிக்சியில் பருப்புடன் போட்டு மைய்யாக அரையாமல் ஒன்றிரண்டாக இருக்குமாறு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும் அதனுடன் பொடியாக நறுக்கிய இறாலை சேர்த்து கலக்கவும் இதனை வடைகளாக தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும் .

  15. உங்கள் வீட்டு சமையல் அடுப்பு + குசினி பால் போல பளிச்சிட.. செயன்முறை: 1. வசதி, தேவைக்கு தகுந்தபடி பாலை கவனமாக சுடவைக்கும் பாத்திரத்தில் ஊற்றவேண்டும். 2. பால் நிரம்பியுள்ள பாத்திரத்தை ஓர் மூடியினால் மூடிவிடவேண்டும். 3. அடுப்பை பற்றவைக்கவேண்டும். 4. இனி உங்களுக்கு விருப்பமான ஓர் வேலையில் ஈடுபடவேண்டும் (பராக்கு பார்த்தல், பத்திரிகை வாசித்தல்) 5. புகை எச்சரிக்கை மணி (smoke alarm) அடிக்கும்போது அல்லது நிலத்தில் தடாங்க் என்று பால் பாத்திரத்தின் மூடி விழும் சத்தம் கேட்கும்போது ஓடிச்சென்று அடுப்பை அணைக்கவேண்டும். 6. இப்போது பால் பாத்திரத்தை சுற்றி அடுப்பிலும், மற்றும் நிலத்திலும் பால் பொங்கி வழிந்து இருப்பதை காண்பீர்கள். 7. ஓர் துணியை கவனமாக பால் ஊற்றுப்பட…

    • 14 replies
    • 3.3k views
  16. பீட்ரூட் சோமபானம் தயாரிப்பு முறை 10 பேர் அளவு... 10 lbs பீட்ரூட் 3 பெரிய (மஞ்சள்) எலுமிச்சம் சாறு 2 lbs சீனி அரை அவுன்ஸ் கிறாம்பு 1 அவுன்ஸ் இஞ்சி கொஞ்சம் யீஸ்ட் 10 பைன்ட் தண்ணீர்.... செய்முறை...... விரைவில்... http://londoncurryking.com/

    • 0 replies
    • 2.9k views
  17. ரொட்டி அல்லது சப்பாத்தி செய்முறை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  18. பயத்தம் லட்டு (பணியாரம் அல்ல) தேவையான பொருள்கள்: பாசிப் பயறு 500 கிராம் சீனி 500 கிராம் ஏலக்காய் தூள் சிறிதளவு முந்திரிப் பருப்பு தேவையானது நெய் 100 கிராம் உப்பு சிறிதளவு செய்முறை: முதலில் பயறை நல்ல வாசம் வரும் வரை வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும் பின் சிறிதளவு நெய் விட்டு முந்திரி பருப்பை பொன்னிறமாக பொரித்து வைக்கவும் அதன் பின் பாத்திரம் ஒன்றில் அரைத்த பயத்தம் மா உப்பு சீனி முந்திரி பருப்பு ஏலக்காய் தூள் அத்துடன் மிகுதியாக உள்ள சுhடாக்கிய நெய் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்த பின் உருண்டைகளாக பிடித்து பின் உண்ணவும் இல்லையேல் பரிமாறவும்........ நான் தளத்தில சுட்டு கொடுக்க அவா தயாரிச்சு தந்தவா...... சுப்பர் தான் நான்…

    • 22 replies
    • 8.8k views
  19. முட்டை தொக்கு செய்யும் முறை தேவையான பொருட்கள் முட்டை - 5 பெரியவெங்காயம் - 6 தக்காளி {பெரியது எனின் } - 3 இஞ்சி - 1 துண்டு உள்ளி - 4 பல்லு மிளகாயப்பொடி - தேவையான அளவு எண்ணை - தேவையான அளவு உப்பு -தேவையான அளவு வெங்காயத்தை நீள வாக்கில் சீவி பொன்னிறமாக வதக்கவும் .வதங்கி வரும்போது தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் சேர்த்து வதக்கவும் .தக்காளி வதங்கியதும் இஞ்சி உள்ளி இரண்டையும் நன்றாக இடித்து இதனுடன் சேர்த்து வதக்கவும் .பின் மிளகாயப்பொடி உப்பு போட்டு கிளறவும் .இதனுடன் ஒரு தம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் .நன்றாக கொதித்து வரும்போது அவித்த முட்டையை நாலாக கீறி {துண்டாகாதபடி } இதனுடன் சேர்த்து கிளறி மூடிவிடவும் . …

    • 8 replies
    • 8.1k views
  20. Started by thamilmaran,

    கரட் கேக் தேவையான பொருட்கள் துருவிய கரட் 200 கிராம் அரைத்த பாதாம் பருப்பு 200 கிராம் சீனி 180 கிராம் மா 50 கிராம் அரை சின்ன கரண்டி பேக்கிங் பவுடர் 2 சின்ன கரண்டி கறுவா பவுடர் 3 பெரிய முட்டை ஐசிங்சுகர் அலங்கரிக்க செய்முறை முதலில் முட்டை சீனி இரண்டையும் கலக்கவும் பின்மாவையும் பேக்கிங் பவுடரையும் சேர்க்கவும் பின் துருவிய கரட் பாதாம் பருப்பு கறுவா பவுடர் என்பவற்றை சேர்க்கவும். அதன் பின் 20 நிமிடம் வெதுப்பியில் வெதுப்பவும். ஆறியதும் ஐசிங் சுகர் தூவி பிமாறவும் மிக மிக சுவையான இனிப்புப் பண்டம் (இனிப்பான பண்டங்களை இடை இடை உண்டு எங்கள் வார்த்தைகளை இனிமையானவை ஆக்குவோம்!!!!!!) சர்கரை நோய் உள்ளவர்கள் கொஞ்சமாய் சாப்பிடுங்கோ.....!!!!!

    • 16 replies
    • 5.5k views
  21. கார பக்கோடா தேவையான பொருட்கள். கடலை மா (மூன்று கப் ) செத்தல் மிளகாய் (3) வெங்காயம் கடுகு பெ.சீரகம் கறிவேப்பிலை உப்பு பொரிக்க தேவையான எண்ணெய் செத்தல் மிளகாய் வெங்காயம் என்பவரை சிறிதாக அறிந்து வைத்து கொள்க . நீரை கொதிக்க விடுக, கடலை மாவை கட்டிகள் இல்லாமல் அரித்து கொள்க . வெட்டிய வெங்காயம் ,மிளகாய் தாளினை சாமான்கள் யாவற்றையும் போட்டு தாளித்து கொள்க ,இவற்றுடன் அரித்தமாவை சேர்த்து கொள்க . பின் சுடு நீரை மெதுவாக சேர்த்து கிளறி , உதிரியாக வைத்து கொள்க. நன்றாக கொதித்த , எண்ணயில் போட்டு பதமாக பொரித்து எடுக்கவும் ஆறிய பின் பரிமாறலாம் .ஆறிய பின் காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைக்கலாம் குறிப்பு . காரம் அதிகம் தேவையெனில் ,ஒரு கரண்டி மிள…

  22. இப்போ என்னோட சமையல் வரலாறை [வல்லாரைன்னு எழுதிட்டேன்] எடுத்து கொண்டால் இன மொழி சாதி மத வேறுபாடு அற்று செய்முறைகள் அமைந்திருக்கும். அதில் குறிப்பாக கடலுணவை எடுத்து கொண்டால், எந்த நாட்டு செய்முறை என்றாலும் சமைப்பதுண்டு. பார்க்க நன்றாக இருந்து, சுவையும் நல்லாயிருக்கும் என காதுவழி கதைகள் வந்தால் சமைப்பதுண்டு. ஆனால் மீனை/நண்டை/இறாலை வெட்டுவதோ, சுத்தம் பண்ணுவதோ என் வேலையில்லை. அதுக்கு ஒரு காரணம் இருக்கு......ஒரு சின்ன ப்ளாஸ்பக் டொய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்

  23. Started by தூயா,

    தேவையானவை: spirals pasta 3 கோப்பை வெட்டிய குடமிளகாய் 1/4 கோப்பை நீளமாக அரிந்த வெங்காயம் 1/2 கோப்பை அரிந்த சிவப்பு மிளகாய் 2 Tuna Fish [Tin] 1/2 கோப்பை உப்பு தேவைக்கேற்ப செய்முறை: 1. பாஸ்டாவை நீரை சுட வைத்து, அவித்து எடுங்கள். பாஸ்டாவை கொதி நீரில் போடும் போது தேவையான அளவு உப்பும், 1 தே.க எண்ணெயும் சேருங்கள். நன்றாக அவிந்த பாஸ்டாவை நீர் வடித்து வைத்து கொள்ளுங்கள். 2. ஒரு சட்டியில் எண்ணெய் சேர்த்து குடமிளகாய், வெங்காயம் மிளகாயை பச்சை வாசம் போகும் வரை வதங்குங்கள். 3. வதங்கிய வெங்காயம் மிளகாயோடு Tuna மீன் தூள்களை சேர்த்து 2 நிமிடங்களுக்கு கிளறி, அவித்து வைத்திருக்கும் பாஸ்டாவை சேர்த்து கிளறுங்கள். உப்பு சரி பார்த்து கொள்ளுங்கள். 4. சுட சுட தட்டில் போட்…

    • 3 replies
    • 2.5k views
  24. தேவையானவை: குட்டி மீன் மிளகாய் தூள் 1/2 தே.க மஞ்சள் தூள் 1/4 தே.க உப்பு தேவைக்கேற்ப எண்ணெய் பொரிக்க செய்முறை: 1. மீனை வெட்டி, சுத்தம் செய்து எடுத்துக்குங்க. 2. வெட்டிய மீனுக்கு மேற்கூறிய தூள்களையும், உப்பையும் போட்டு நன்றாக பிரட்டி கொஞ்ச நேரம் வையுங்க. [அவசரம் என்றால் உடனே பொரிக்கலாம்] 3. எண்ணெயை சூடாக்கி மீன்களை போட்டு பொரித்தெடுங்கள்.[இரண்டு பக்கமும் திருப்பி பொரிக்க வேண்டும்] http://thooyaskitchen.blogspot.com/2009/03/blog-post_12.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.