கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3082 topics in this forum
-
ஒரு நிமிடக் கதைகள் ஒரு நிமிடக் கதைகள் பேரம் காரிலிருந்தபடியே நடமாடும் காய்கற…
-
- 1 reply
- 4.3k views
-
-
புத்தரின் தொப்பி ஜீ.முருகன் இப்போது கனவுகள் அதிகம் வருகின்றன. நிம்மதியான தூக்கம் என்பது அரிதாகி விட்டது. இதற்கு நான் புதிதாக வாங்கியிருக்கும் கட்டில்தான் காரணம் என்றால் நீங்க நம்பமாட்டீர்கள். இடது பக்கம் சாய்ந்து படுத்தால் நல்ல கனவுகளும், வலது பக்கம் சாய்ந்து படுத்தால் கெட்ட கனவுகளும் வருகின்றன என்றால் மொத்தமாகவே நம்பமாட்டீர்கள். தயவு செய்து நீங்கள் நம்பவேண்டும். நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. தூங்கிய சிறிது நேரத்திலேயே கனவுகள் தொடங்கிவிடுகின்றன. கனவுகளின் விபரீதமான கணத்தில் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தால் பத்து நிமிடம்தான் தூங்கியிருப்பது தெரிகிறது. ஆனால் பத்து மணி நேரம் நிகழக்கூடிய சம்பவங்களைக் கொண்டதாக இருக்கின்றன கனவுகள். சில கனவுகள் பன…
-
- 1 reply
- 1.2k views
-
-
எதிரி ஓய்வு நிலையிலிருந்த உலகம் மெல்ல மெல்லச் சோம்பல் முறித்துச் செயற்பட ஆரம்பிக்கும் காலை நேரம். சூரியனும் தன் பொற் கிரணங்களை அள்ளி வீசத் தொடங்கி விட்டான். அவசர உலகத்தின் வேகத்திலே மனிதனை விஞ்சிவிட வேண்டுமே என்ற ஆவேசத்துடன் பறவைகள் தம் உறக்கம் கலைத்து இரை தேடக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. வெள்ளைச் சிறகு கட்டிய பள்ளிக் குழந்தைகள், தம் தோட்டத்தைப் பார்க்கச் செல்லும் கமக்காரர்கள், சந்தை வியாபாரிகள், அலுவலக ஊழியர்கள்... என வீதிகள் சுறுசுறுப்படையத் தொடங்கி விட்டன. வழமையாக வசுமதி வீட்டில் பொழுது புலர்வதில் சற்றுச் சுணக்கந்தான். அவர்களுக்கென்ன? கடைகளைக் கவனிக்கக் கணக்கப்பிள்ளைமார், பொருட்களை வாங்குவதற்கும் வீட்டு அலுவல்களைக் கவனிப்பதற்கும் ஏகப்பட்ட வேலையாட்கள், சமையல்…
-
- 11 replies
- 3.6k views
-
-
தாலி ஆலையடி பிள்ளையார் கோவில், கோவில் வீதி உட்பட எங்கும் சனங்கள். எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் இருக்கின்றனர் ஒரு சிலரைத்தவிர. சுமார் ஒரு ஐந்தயிரத்திற்க்கு மேற்பட்டவர்கள் அந்த ஆலையடி பிள்ளியாரிலும் அதை சுற்றியும் தங்கியிருக்கின்றனர். எல்லோரும் தங்களை மறந்து தூங்கிக்கொண்டிருக்கின்றனர். ஒரு சிறு மணல் கூட விழமுடியாத அளவிற்க்கு ஒருவரையொருவர் உரசிக்கொண்டு தூங்குகின்றனர். தூங்கிக்கொண்டிருந்த செல்லம்மா ஏதோ நினைப்பு வந்தவளாக கண்ணை முழிக்கின்றாள். மங்கிய நிலவு வெளிச்சத்தில் எல்லாம் மங்கலாகத் தெரிகின்றது. தலைக்கு வைத்திருந்த கைபையிற்க்குள் தன் கையை வைத்து துளவி தனது மூக்குக் கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டு குந்தியிருக்கின்றாள். குந்தியிருந்து செல்வியை பார்க்கிறாள் அவள…
-
- 6 replies
- 1.9k views
-
-
இறைச்சி வாங்க வழக்கமாக போகும் தமிழ் கடைக்கு போனேன்.கல்லாவில் நின்ற முதலாளி என்னை சிரித்து வரவேற்றதுடன் அப்போது கடையால் வெளியேறிக்கொண்டிருக்கும் வயது போன ஒரு மனுசியை பார்க்குமாறு கண்ணால் ஜாடை காட்டினார்.கையில் ஒரு பையுடன் போய்கொண்டிருந்த ஒரு அம்மாவை .இடைக்கிடை இதே கடையில் பார்த்ததாக ஞ்பகம். "என்ன விடயம் என்று" முதலாளியைக் கேட்டேன் . "மீனோ இறைச்சியோ போய் சொல்லிப்போட்டுவாரும் ஒரு அலுவல் காட்டுகின்றேன் " என்றார். திரும்பி வர செக்குரிட்டி கமரா எடுத்த படத்தை ரீவைன் பண்ணி போட்டுக்காட்டினார். அந்த மனுசி வந்து ஆறு இராசவள்ளிக் கிழங்குகளை மேசையில் வைக்க முதலாளி எடுத்து நிறுத்து பின்னர் இரண்டு கிழங்கை வெளியே எடுத்து மீண்டும் நிறுத்து காசையும் வாங்கிக்கொண்டு விட,மனுசி…
-
- 11 replies
- 2.4k views
-
-
"துரோகம்" நான் கொழும்பில் பொறியியலாளராக வேலை பார்த்துக்கொண்டு இருந்த காலம் அது. எனக்கு உதவி பொறியியலாளராக, வெற்றிநாயகன் என்ற ஒருவன் பதவி பெற்று, என்னுடன் நல்ல நண்பனாகவும் பழகத் தொடங்கினான். எமது நட்பு பலமாக, நாம் எம் தனிப் பட்ட விடயங்களையும் எமக்கிடையில் பகிரத் தொடங்கினோம். இருவரும் அப்பொழுது திருமணம் ஆகாத வாலிபர்கள். ஆகவே பெண் நண்பியை பற்றியும் தாராளமாக கதைப்போம். எமக்கிடையில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஒரு முறை, விடுதலையில் ஊர் போய், திரும்பிய வெற்றிநாயகன், முதல் முதல் தன் காதல் அனுபவத்தை, அன்று மாலை இருவரும் பொது விடுதியில் [pub] சந்தித்த பொழுது சொல்ல தொடங்கினான். தான் ஒரு முறை தன் கிராமத்தில், ஒட்டப்பயிற்சி செ…
-
- 0 replies
- 698 views
-
-
சோபாசக்தி வர்றார்; சொம்பைத் தூக்கி உள்ள வை இந்திய பொதுவுடமை இயக்கத்தின் விடிவெள்ளி அன்புத்தோழர் சாரு மசூம்தார் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க எட்டு ஆவணங்களில் அதிலும் 1965ஆம் ஆண்டு 28 ஜனவரியில் “தற்போதைய சூழலில் நமது கடமைகள்“ என்ற தலைப்பில் எழுதப்பட்ட முதல் ஆவணத்தில் ஒரு பொதுவுடமை கட்சி கமுக்க (ரகசியம் அல்லது தலைமறைவு) கட்சியாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும் அப்பொதுவுடமைக்கட்சியின் உறுப்பினர்கள் தலைமறைவு ஊழியர்களாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும் குறித்து விளக்குவார். அதிலும் அவர் அதை “நமது அமைப்பின் முழக்கங்கள்“ என்ற தலைப்பின்கீழ் ஏழு முக்கிய குறிப்புகளாக வலியுறுத்துவார். நீண்டகால மக்கள் யுத்தமே இனிமேல் இந்த இருபது மற்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கு பலனளி…
-
- 17 replies
- 2.2k views
-
-
ராமசாமி .................வாரானா?................. அது ஒரு பள்ளிகூட பருவம் ....வீட்டிலிருந்து ....... ...பாடசாலை செல்ல மூன்று கிலோ மீட்டர் நடக்க வீண்டும் . நானும் எனது நண்பி கலைவாணி உம் சேர்ந்தே போவம் .. போகும் வழியில் ..வீதிகள் ...வீடுகளில் உள்ள மா மரத்தில் கண் போகும் ..ஒரு பணக்கார வீட்டில் ...நிறைய மா மரங்கள் வகைக்கு ஒன்றாக ..நட்டு ..காய்த்து... குலுங்கும் காலம் .. அவர்கள் வீட்டுக்கு ... காவலாக ஒரு வேலைக்காரன் .....ராமசாமி .. .சில சமயம் ..அவனை கண்டு கேட்டால் ..ஆளுக்கு ஒன்று பிடுங்கி தருவான். ..மத்தபடி ..கள்ள மாங்காய் ..தான் . ஒரு நாள் என் நண்பி துணிந்து மதிலால் பாய்ந்து ...நிலம் முட்ட ..இருந்த காய்களில் சிலதை பிடுங்கி கொண்டு இருக்கு…
-
- 1 reply
- 1.1k views
-
-
“காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்” சயிக்கிளில் முன்னால் பாரில் இருந்து எம்ஜிஆர் பாடிக்கொண்டு வாறார், நான் முக்கி முக்கி கொக்குவில் தொழில் நுட்ப கல்லூரி றோட்டில சயிக்கிளை உழக்குகின்றன். “டேய் கடைசி மேடு வரேக்கையாவது டபிள் பரல் போடடா “ “சொறி மச்சான், அதை கேட்டுவாங்கிப் போனால் அந்த கன்னி என்னவானாள்” எம்சியின் பாட்டு தொடருது. லண்டன் சிட்டியை தாண்டி TRAIN READING நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றது. எம்சியை பத்துவருடங்களுக்கு பின் சந்திக்க போய்கொண்டிருக்கின்றேன். எம்சிக்கு என்ன நடந்தது?. ஊரில என்னோட திரிந்தவர்களுக்குள் நேர்மை ,நீதி என்று எப்பவும் நிப்பவன் எம்சிதான்.வலிய வம்பிற்கு போக மாட்டன் வந்தால் விடமாட்டான்.இதனால் ஆனந்தன் என்ற அவனது பெயர் ஊரில் எம்ஜிஆர்…
-
- 18 replies
- 2.6k views
-
-
றெயில் பயணம் http://fr.wikipedia.org/wiki/Fichier:Attentat_du_RER_B_%C3%A0_la_station_Saint-Michel_2.jpg 1995 ல் ஓர் அதிகாலை நேரம் மனோவினது நித்திரைக்கு உலை வைத்தது அவனது அலாரம் . மனோ வழக்கமாகவே பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே அலாரத்தை வைப்பதுண்டு , இதனால் மனோ பூனைத் தூக்கத்தை சர்மிளாவின் அணைப்பில் அனுபவிப்பதுண்டு . அவனது கை கட்டிலின் மறுபுறம் துளாவியது . அந்த இடம் வெறுமையாகவே இருக்க இந்த நேரத்தில் சர்மி எங்கே போய்விட்டாள் ? என்று நினைத்தவாறே அவன் கட்டிலில் இருந்து விலுக்கென்று எழுந்தான் மனோ . வீட்டின் ஹோலுக்குள் வந்தபொழுது , சர்மை முழுகிவிட்டு பல்கணியில் தனது தலையைத் துவட்டிக்கொண்டிருப்பது கண்ணாடி ஜன்னலுக்கால் தெரிந்தது . அவனுக்கான கோப்பி ஆவி பறந்தபடி குசின…
-
- 10 replies
- 1.4k views
-
-
என்னடா முனிவர் இப்ப கதையில இறங்கிவிட்டார் என்று பார்க்கிறியளே நம்மட பொடியங்கள் செய்யுற வேலையை பார்க்க முடியல்ல அதுதான் இந்த கதை[வெளிநாட்டில ] வணக்கம் சாமித்தம்பி அண்ணே என்ன மகன் வெளிநாடு போக போறான் போல ஓம் சிவன் .நல்லாத்தான் படித்தான் ஆனால் இங்கு வேலை எடுக்கிற என்றால் சும்மாவா என்ன!! அதுவும் நம்மட தமிழ் சனங்களுக்கு வேலை கொடுக்கிறதென்றால் ஒரு வேண்டா வெறுப்பாத்தானே பார்க்கிறாங்கள் அதுதான் சும்மா இங்கு இருந்து என்ன செய்யிறது ஆளை வெளிநாட்டுக்கு அனுப்புவம் என்று பார்க்கிறன் இங்க அவனுக்கு பயந்து இவனுக்கு பயந்து இருக்கிறத்தை விட அங்க போனால் கொஞ்சம் நம்ம நிம்மதியாக இருக்கலாம் தானே...அது சரி அவ்வளவு காசுக்கு எங்க போவியள் . என்ன செய்யுற சிவன் ஒரு வாய் சோறு தாற நிலத்தைத…
-
- 7 replies
- 3.1k views
-
-
சுறு சுறுப்பான காலைப்பொழுதில் வீதியோரத்தில் இருந்த ஒரு மிகப்பெரிய கட்டிடத்தின் பக்கத்தில் அந்த மனிதன் நின்றிருந்தான் அவன் பக்கத்தில் வெள்ளைத்தடியும், நிமிர்த்தி வைத்த தொப்பியில் சில நாணயமும்,சில தாள் காசும் இருந்தது அத்துடன் ஓர் அறிவிப்பும் இருந்தது,அதில் நான் குருடன் தயவு செய்து உதவுங்கள் என்றிருந்தது.விரைந்து செல்லும் மக்கள் அவனை கவனியாது சென்று கொண்டிருந்தனர். அவர்களில் ஓர் இரக்க சிந்தனையுள்ள ஒரு மனிதன் நின்று அந்த அறிவிப்பை வாசித்து விட்டு தொப்பியினுள் தாள் காசு சிலவற்றைப்போட்டு விட்டு கண்தெரியாத மனிதனிடம் எந்த அனுமதியும் பெறாமல் அந்த அறிவிப்பை மாற்றி எழுதிவிட்டு சென்றுவிட்டான். நண்பகல் உணவு இடைவேளையில் வந்த இரக்க சிந்தனையுள்ள மனிதன் கண்டதெல்லாம் தோப்பி நிறைய தாள…
-
- 4 replies
- 4.1k views
-
-
எனக்கு ஏன் இந்த வாழக்கை என தன்னோட கடந்த கால பசுமையான நிகழ்வுகளை இலக்கியா ஜோசிக்க தொடங்கினாள் எனக்கு கிடைத்த மாதிரி குடும்பம் யாருக்கும் கிடைக்குமா?.. எல்லாருக்கும் குடும்பம் கிடைக்கும்… ஆனால் அழகிய சந்தோசமான குடும்பம் கிடக்குமா?.. பாசத்தை காட்ட அம்மா வாணி.. வாணிக்கு ஏற்ற பெயர் போல அவளும் அழகிலும் சரி அறிவிலும் சரி அம்மா கெட்டிகாரிதான்..இல்லை என்றால் எங்கள் குடும்பம் இவ்வளவு கஸ்ரத்திலையும் சந்தோசமாய் இருக்க முடியுமா.. கண்டிப்பையும் பாசத்தையும் ஒரு இடத்தில் பாக்கலாம் அதுதான் என் அப்பா தவம்.. ஆமாம் எனது அம்மம்மா தவம் செய்து எடுத்த பிள்ளைதான் என் அப்பா.. பாசத்திலும் சரி கண்டிபிலும் சரி அப்பாவை குறை சொல்ல முடியாது.. . அப்பா எங்களை கண்டிப்பார்.. பாவம் அம்…
-
- 8 replies
- 2.4k views
-
-
நாயகி - சிறுகதை ஜான் சுந்தர் - ஓவியங்கள்: ஸ்யாம் டிப்பியை ஸ்டீபன் அண்ணன் ஊட்டியிலிருந்து எடுத்து வந்திருந்தார். யாரோ ‘`நல்ல குட்டி, ஜெர்மன் ஷெப்பெர்டு க்ராஸ்’’ என்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ``சாதி நாயும் நாட்டு நாயும் சேர்ந்து போட்ட குட்டிடா’’ ஸ்டீபண்ணன் விளக்கினார். ``ஊட்டில பூன, நாயி, மாடு அல்லாத்துக்குமே முடி அதிகமாத்தான் இருக்கும் இல்ல டீபண்ணா’’ என்றான் இளங்கோ. அவனுக்கு `ஸ்’ வரவில்லை. வேறு சிலவும் வராது. `பைஜாமா ஜிப்பா’வை `பைமாமா மிப்பா’ என்பான் `இங்க’ என்பதற்கு `இஞ்ச’ என்பான். `ம்ம்... சொட்டரோடவே பொறந்துட்டா குளுராதில்ல’’ டிப்பியின் நெற்றியைத் தடவிக் கொடுத்தேன். அது என் விரல்களை நக்கியது. அதன் மீசையரும்பு வ…
-
- 1 reply
- 3.2k views
-
-
இசைவு இராசேந்திர சோழன் நடேசனுக்கு மாமியார் வீடு ரொம்ப சௌகரியம். நல்ல வசதியும்கூட. போய்விட்டால் போதும். மாப்பிள்ளை வந்துட்டார், மாப்பிள்ளை வந்துட்டார் என்று அமர்க்களம் செய்துவிடுவார்கள். கடைசீ மருமகப்பிள்ளை நடேசன். ஏக கடைசீ என்றால் நாலைந்து மருமகப் பிள்ளைகளில் கடைசீ என்று அர்த்தம் இல்லை. இரண்டே மருமகப் பிள்ளைகளில் இரண்டாவது மருமகன். இளைய மருமகன். மாமிக்கு ரெண்டே பெண்டுகள். மூத்த பெண்ணைத் திண்டிவனத்தில் ஒரு டெய்லருக்குக் கொடுத்திருந்தார்கள். இளையவள்தான் நடேசனுக்கு சம்சாரம். அதற்குப் பிறகு மாமிக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வயது இல்லை என்று கருதியோ அல்லது மாமனாருக்கு வசதிப்படாமலோ போயிருக்கலாம். இதனால் நடேசனின் சம்சாரத்திற்குப் பிறகு இளசுகள் யாரும் வீட்டில் இல்ல…
-
- 2 replies
- 1.3k views
-
-
1992 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் நடாத்திய வைர விழா சிறுகதைப் போட்டியில் இவரது "அடைக்கலம்" சிறுகதை முதற்பரிசு பெற்றது. முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2006/07/blog...og-post_09.html
-
- 15 replies
- 3.5k views
-
-
ஆட்டுக்குட்டிகளும் உதிர்ந்த சில இலைகளும் டிசே தமிழன் நன்றி: 'காலம்' ஜூன் 2007 (இதழ் 25 ) (1) அப்போதுதான் கோடை முடிந்து இலையுதிர்காலம் ஆரம்பித்திருந்தது. ஆக வெக்கையோ, குளிரோ இல்லா மிதமான காலநிலை அந்தப் பருவத்திற்கு ஒருவித அழகைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இவன் வகுப்பறைக்குள் இருந்து, மழை பொழியத்தொடங்கிய பின்னேரப்பொழுதை இரசிக்கத் தொடங்கியிருந்தான். மெல்லிய சாம்பல்நிற வானப்பின்னணியில் இலைகள் உதிர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கையில் மனது களிமண்ணைப் போல நெகிழத்தொடங்கியிருந்தது. இவனுக்கு இன்னும் ஒரு மாதம் கடந்தால் பதினைந்து வயது ஆரம்பிக்க இருந்தது. அன்று பாடசாலை முடிந்து பஸ்ஸைப் பிடிக்க சற்றுத் தாமதமாகியதால், வழமையாக பஸ் நிறுத்தத்தில் நிற்கும் நண்பர்களும் போய்விட்டிரு…
-
- 6 replies
- 1.2k views
-
-
. என்ரை பிள்ளையளை எடுங்கோ நான் அவரோடை போப்போறன். அவளுக்கு வயது 28. 3குழந்தைகள். மூத்த குழந்தைக்கு வயது 11. கடைசிக் குழந்தைக்கு வயது 5. அவளைவிடவும் 12வயதால் மூத்த அவளது கணவன் தடுப்பில் இருக்கிறான். பிள்ளைகளை உறவினருடன் விட்டுவிட்டு…., வவுனியாவில் பெண்கள் சிலருக்காக ஒரு நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் அவள் வேலையில் இணைத்துக் கொள்ளப்பட்டாள். வாரத்தில் 2நாட்கள் வேலை வழங்கிய இடத்திலிருந்து விடுமுறை அவளுக்கு. அந்த நாட்களில் ஊருக்குப் பிள்ளைகளைப் பார்க்கப் போய்விடுவதாகப் போய்விடுவாள். திங்கள் காலை அல்லது ஞாயிறு இரவு திரும்பும் போது தனது வளவு மரக்கறிகள் என பெரிய சுமையோடு திரும்புவாள். திங்கள் முதல் வெள்ளி வரை வேலையில் இருப்பாள் பொழுது இருண்டா…
-
- 1 reply
- 1.6k views
-
-
குறிச்சி என்பது? நீலாம்பிகை கன்னிப் பெண்ணாக இருந்தும் மீன் விற்பதற்குச் சங்கானைக்குப் போனதில் அவளது குறிச்சியே அதிர்ந்து போய் இருந்தது. அவள் அதைப் பற்றிக் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அண்ணனின் கடும் எதிர்ப்பைக்கூட அசட்டை செய்யவில்லை. தம்பிராசா என்ன நினைப்பான் என்கின்ற ஒரு எண்ணம் எழுந்தாலும், அதையும் புறங்கையால் தள்ளிவிடுவது போலத் தள்ளி விட்டாள். சங்கானைக்குப் போய் வந்தபின் செக்கல் பொழுதில் கரைக் கிணற்றிற்குக் குளிக்கச் சென்ற நீலாம்பிகைக்கு அதிர்ச்சியாக இருந்தது. அள்ளிய வாளி நீரில் கல்லெண்ணை நாறியது. மேலும் முகர்ந்தபோது அது நிச்சயமாகிற்று. அதற்குள் யார் கல்லெண்ணெய் ஊற்றினார்கள் என்பதையோ, எதற்காக ஊற்றினார்கள் என்பதையோ அவள் அறிய மாட்டாள். நடு ஊராரின் கிணற்றில் குளிக்…
-
-
- 2 replies
- 1.4k views
-
-
என்றும் உன் அன்புக்காய்.... சிறு கதை.... படுக்கையில் இருந்து விழித்த பார்வதிக்கு இன்றும் பொழுது வழமைபோல் விடிந்தது. ஜன்னல் திரையை திறக்க வெளியே ஒரே பனிமூட்டமாய் தெரிய அந்தப் பனிப்புகாரில் தெரு விளக்குகள் மங்கலாகத்தெரிந்து கொண்டிருந்தது. ஆனால் அவளின் அறையோ யாழ்ப்பாண வெய்யில் போல் தக தகவென கொதித்துக்கொண்டிருந்தது. யாழ்ப்பாண ஞாபகம் வரவே, இரண்டாம் கட்ட ஈழப்போரில் சிக்கி கணவரை இழந்த பின் தனது மூத்த மகள் மாலதியையும் கடைக்குட்டி கணேசையும் தூக்கிக்கொண்டு விமானக் குண்டுவீச்சுக்கும் செல் அடிக்குமாக பயந்து இங்கும் அங்குமாக ஓடித்திரிந்து குண்டுவீச்சில் தானும் தன் மகனுமாய் காயமும் பட்டதை நினைத்துக்கொண்டாள். தன் காயத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் மகன் கணேஸ் காயம் பட்டு…
-
- 9 replies
- 2k views
-
-
எனக்கு வேண்டும் விடுதலை............... சிறுகதை..... ''இதுக்கு தான் சொன்னனான் இங்கே நான் வரமாட்டேன் என்று இங்கே வந்து இவ்வளவு கஸ்ரப்பட்டும், பயந்து கொண்டும் இருக்கிறத்துக்கு நாங்கள் அங்கேயே இருந்திருக்கலாம்......! இங்க இருந்து ஒவ்வொரு நாளும் செத்துச் செத்து பிழைக்கிறத்துக்கு அங்க இருந்து ஒரு நாளில செத்துப்போனாலும் பரவாயில்ல.....'' என்ற படி தாய் தகப்பனைக் கோவித்தபடி உள்ளே இருந்து வெளியே கோபத்துடன் வந்தான் சுரேஸ். '' தம்பி கொஞ்சம் நில்லு... ஏன் கோவிக்கிறாய்..உயிருக்குப் பயந்து தானே இங்கே வந்தனாங்கள் அதுவும் உன்னை அங்க வச்சிருந்தா நீ ஏதும் தப்பா முடிவெடுத்திடுவியோ....! எண்டு பயந்துதானே அப்பா இங்க வர முடிவெடுத்தவர். உனக்குத் தெரியும் உன்ர தங்கச்சியும் போன…
-
- 4 replies
- 1.4k views
-
-
"மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒரு குரங்கு..." சௌந்தரராஜன் தனது குரல்மூலம் தத்துவங்களைப் பரப்பிக் கொண்டிருந்தார். அந்தக் காரினுள் எல்லோரது முகத்திலும் ஒருவித இறுக்கம் வியாபித்திருந்தது. இடையிடையே எழும் கோமதியின் விசும்பல் சத்தத்தைத் தவிர, அங்கே அமைதி குடிகொண்டிருந்தது. அதை விரட்டும் முயற்சியில் அந்தக் காரின் சிறிய "ரேப் றெக்கோட"ரில் இருந்து சௌந்தரராஜனின் குரலில் தத்துவப்பாடல்கள் ஈடுபட்டிருந்தன. வீதியின் இருமருங்காலும் பெரியவர் சிறியவர் என்று வயது வித்தியாசமில்லாமல் மக்கள் தமது அன்றாட அலுவல்களுக்காக விரைந்துகொண்டிருந்தார்கள். "ட்ராம்" வண்டிகள் இரும்புப் பாதைகளின் மேலாக பாம்புகளாக நெளிந்துகொள்ள, அவற்றுடன் போட்டிபோட்டவாறு வாகனங்கள் நெரிசலாக ஊர்ந்துகொண்டிருந்தன. மஞ்சள் சி…
-
- 7 replies
- 3.3k views
-
-
நானும் உந்தன் உறவை... நாடி வந்த பறவை! நர்சிம், ஓவியம்: அரஸ் ''டி.ஆர். உன்னையத் தேடுனாப்புல மாப்ள, என்னா மேட்டரு?' காளி அப்படிச் சொல்லிவிட்டு சைக்கிள் பெல்லை, ஒரு சீரான தாள லயத்தில் அடித்துக்கொண்டே போனான். ஒருவன் எவனிடமாவது மாட்டிக்கொண்டால், அடுத்தவனுக்கு இயற்கையிலேயே எழும் மகிழ்ச்சியை அந்த ட்ரிங்... ட்ரிங்... ட்ட்ட்ரிங்ங்... ட்ட்ட்ரிங்ங்... ட்ரிங்... ட்ரிங்... உணர்த்தியது. எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. இத்தனைக்கும் டி.ஆரால் தேடப்படுபவன் நான் அல்ல. என் அருகில் அமர்ந்திருக்கும் ரகு. 'எதுக்குடா டி.ஆர். என்னையத் தேடுறாப்லயாம்?' - லேசாகச் செருமிக்கொண்டே கேட்டான் ரகு. அந்த 'எதுக்குடா?’-வில் லேசான பதற்றமும் 'என்னைய’ என்பதி…
-
- 1 reply
- 2.6k views
-
-
ஷரோனின் மோதிரம் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... சுப்ரபாரதிமணியன், ஓவியங்கள்: அரஸ் கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்கு கத்த வேண்டும் போல் இருந்தது. 'கண்டேன் சீதையை!’ என்று அனுமன் கத்தியது, சம்பந்தமே இல்லாமல் ஞாபகம் வந்தது. 'அடப்பாவி... கிளம்பிட்டியா?!'' என்றுதான் கத்தினான். உடனே அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கைபேசியை முடுக்கினான். மஞ்சள் சுடிதாரில் அவள் சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் தேவி... 30 வயதில் அவள் முகத்தில் இல்லாத அழகை எல்லாம் அவன் கண்டிருக்கிறான். தினமும் 100 குறுஞ்செய்திகள் அனுப்பிய காலமும் உண்டு. 'பிரியலாம்’ என்றுகூட ஒரு குறுஞ்செய்தியில் சொல்லித்தான் பிரிந்தார்கள். அனுப்பியவள் தேவி. …
-
- 0 replies
- 2.3k views
-
-
அவனுக்குக் குழப்பமா இருந்தது, ஒருவகை பயம் கலந்த ,எண்ணங்கள் மாறி மாறி வந்தன.கிராமத்தின் புதிய சூழல், முதல் முதலாக தனியாக ஒரு வீட்டுக்குள், எவரது கண்காணிக்கும் பார்வைகள் அற்ற நிலையில்.அவனுக்கு, எழும் உணர்வுகளை அதன் சூழலை அலசுவது அதன் பின்னரே நிதானமாக செயற்படுவது என வயசுக்கு மீறிய சிந்தனைகள் அந்த விடலைப் பருவத்திலும்.விடலைப் பருவத்திற்கே உரிய உணர்வுகள் எழுந்த போதெல்லாம் அதே அலசல் அதே நிதானம்.ஆனால் இப்போ அந்த நிதானத்தை ,இவள் விழுங்கி விடுவாளோ என்று மனசு படபடத்தது. அவள் பக்கத்து வளவுக்குள் இருந்து பனை ஓலையினால் வேயப்பட்ட கதியால் வேலிக்குள்ளால் மறைந்திருந்து இவன் என்ன செய்கிறான் என்று நோட்டம் விடுவது.ஒவ்வோரு நாள் காலையிலும் இவன் பக்கத்து வீட்டு அண்ணையிடம் இருந்து அன்றைய ப…
-
- 1 reply
- 1.5k views
-