கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
துணையானாள் சித்தி கருணானந்தராஜா இருளைக் கிழித்துக்கொண்டு, பொந்தில்; இருந்து சீறிவரும் பாம்பு போல அக்குழாய் ரயில் பிளாட்பாரத்தருகில் வந்து நின்றது. கதவுகள் திறக்கப்பட்டதும் முதியவர் தட்டுத்தடுமாறி ஏறினார். அவருக்கு வழிவிட்டுக்கொடுத்த சாரா அவரைப் பின்தொடர்ந்தாள். காலியாக இருந்த இருக்கையில்; அமர்ந்த கிழவரின் முன்னால் அவள் இருந்து கொண்டாள். ஏனோ! அந்தக் குழாய் ரயில் நிலையப் பிளாட்பாரத்தில் அவரைப் பார்த்ததிலிருந்து சாராவுக்கு அவருடன் சீண்ட வேண்டும் போலிருந்தது. எப்படி அவருடன் கதைகொடுப்பது அல்லது வம்புக்கிழுப்பது என்று தெரியாமலிருந்தவளுக்கு முதியவரின் பக்கத்திற்கிடந்த லண்டன் மெட்ரோ பத்திரிகை கைகொடுத்தது. முதியவர் தனது பக்கத்திற்கிடந்த பத்திரிகையை வாசிக்க எடுக…
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். மருத்துவச்சி உக்கார்ந்து கொண்டிருந்தாள். பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன. ‘த்துப்..’ பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அடுத்த நொடி, ‘சர்ர்க்’ என்று ஒரு சத்தம். படக்கூடாத இடத்துல பிளேடு பட்டு, என் பிறப்புறுப்பு கிழிவது நன்றாகத் தெரிந்தது. நரநரவென்று முன்னும் பின்னுமாக இழுத்தாள். அந்தக் கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள், குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம். ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன.’’ …
-
- 27 replies
- 9.6k views
-
-
தர்மினி ‘எழுத்ததிகாரத்திற்குள் சிக்கிக் கொள்ளாத,புனைவுகளற்ற வாய்மொழி வரலாற்றின் அச்சு அசலான கச்சாப்பிரதி இது என்றால் மிகையாகாது’-கருப்புப்பிரதிகள் சாதனை செய்தவர்கள்,சாகசங்கள் புரிந்தவர்கள் சமூகத்துக்காகப் போராடியவர்கள் தங்களின் வெற்றிக்கதைகளை வீரக்கதைகளை எழுதிக் கொண்டிருந்தார்கள். இப்போது இச்சமூகத்தின் கசடுகளிலிருந்தும் புறக்கணிப்புகளிலிருந்தும் விளிம்பு மனிதர்கள் தம் கதைகளைச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.இவர்களது எழுத்துகளை, உணர்வுகளை, கதையாடல்களை விலக்கிவிட்டு கலாச்சாரமும் இலக்கியமும் பன்முனைப்புடன் நகர முடியாது. வாழ்வில் வேதனைகளையும் அவமானங்களையுமே கொண்டவர்களாக நம்மிடையில் மக்கள் வாழ்வது பற்றிய சலனஞ் சிறிதுமின்றி பண்பாடு, விழுமியங்கள் என்று கதையளந்து கொண்டிருப்பதைய…
-
- 2 replies
- 3.9k views
-
-
அன்று சாய்சுரேசுக்கு தூக்கமே வரவில்லை காரணம் தாத்தாவினதும் அம்மாவினதும் ஊருக்கு போற சந்தோசத்தில்.தாத்தாவும் அம்மாவும் அவர்களின் ஊரை பற்றி அதிகமாகவேசொல்லி இருந்தார்கள்.தாத்தா சொன்னவைகளை சாய் நினைத்து பார்கிறான்,தாத்தாவின் ஊர் கிணற்று தண்ணியை குடித்தால் இனிக்கும் அதில் குளித்தால் அரைவாசி வருத்தம் போய் விடும் என்று கூறியவை,கருத்தக் கொழும்பான் மாம்பழமும் புட்டும் சாப்பிட வேண்டும்,இங்கத்தய அப்பிள் அதுக்கு பிச்சை வாங்க வேண்டும்,வீட்டில் அடி வளவில் இருக்கிற பிலாபழம் பழுத்தால் வீட்டுகுள்ளேயே வாசம் வரும் என்று கூறியவை,கொழும்பு யாழ் ரயில் பயணத்தை பற்றி கூறியவை தாத்தாவின் வாகனத்தை கூறியவைகள் எல்லாம் அவனுக்கு தாத்தாவின் ஊரை பற்றி அதிக கற்பனைகளை உருவாக்கி விட்டது. …
-
- 18 replies
- 3.9k views
-
-
அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன் மத்தியானத்திலிருந்தே விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது... மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸீக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற 'வேனு'ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்துத் தேய்ந்து அடங்கிப் போனபின் …
-
- 4 replies
- 1.6k views
-
-
குளிர்சாதனப் பெட்டி அட்சரம் (இதழ் - 4) டிசம்பர் 2002-பிப்ரவரி 2003 ஆசிரியர் - எஸ். ராமகிருஷ்ணன் தமிழ் புனைவியலின் வரைபடம் என்ற முழக்கத்தை முகப்பில் தாங்கிவரும் `அட்சரம்' என்ற சிற்றிதழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் முயற்சியில் வெளிவருகிறது. புனைக்கதைகளுள் புதிய வடிவங்களை புகுத்தும் பல கதைகளை இச்சிற்றிதழ் இந்த இதழில் வழங்கியுள்ளது. பின் நவீனத்தில் அல்லது கற்பனாதீத தொர்த்த வகையைச் சேர்ந்த எழுத்துக்கள் லத்தீன் அமெரிக்காவிற்கு வெளியே எப்படி வளர்ந்து வருகிறது என்பதை இந்த இதழின் "சிறப்புப்பகுதி" என்ற மொழிபெயர்ப்பு கதைகள் உணர்த்தும். இந்தப் பகுதியிலிருந்து இசபல் ஸாஜ்ஃபெர் எழுதிய "குளிர்சாதனப் பெட்டி" என்ற பிரஞ்சுக் கதையை வாசகர்களுக்குத் தருகிறோம்) குளி…
-
- 3 replies
- 1.9k views
-
-
ரயிலில் இருந்து இறங்கும்போதே வயிற்றை கலக்க ஆரம்பித்துவிட்டது. அடக்க முடியவில்லை. இந்த டக்கீலா கருமத்தை இரவு அடிச்சாலே இதே பிரச்சினை தான். அவதானமாக இருந்திருக்கவேண்டும், இருக்கத்தான் டக்கீலா விடவில்லையே! காலையிலேயே ஒரு மாதிரி மார்க்கமாக தான் இருந்தது. கொஞ்சம் இஞ்சி போட்டு கோப்பி குடிச்சதால அவ்வளவு தெரியவில்லை. ஆனால் ரயில் ஜோலிமொன்ட் ஸ்டேஷன் கடக்கும் போது வயிறு கொஞ்சம் மக்கர் பண்ண தொடங்கியது. அட இதெல்லாம் நமக்கு சாதாரணம் என்று அதை பற்றியே யோசிக்காமல் பாட்டு கேட்டுக்கொண்டு வந்ததில் ஒருமாதிரி சமாளித்தாயிற்று. மெல்போர்ன் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கும்போது புரிந்துவிட்டது. இன்றைக்கு சங்கு தான். அலுவலகத்துக்கு பதினைந்து நிமிடங்கள் நடக்கவேண்டும். இந்த வயிற்றோடு தாம் தாம் என்று…
-
- 25 replies
- 19.5k views
-
-
இந்த விடுமுறையில் நாட்டுக்கு சென்ற பொழுது சந்தித்த சிலரில் சில இளைஞர்களுடன் பேசிய பொழுது கேள்வி பட்ட விசயம் இவ்வளவுத்துக்கு இப்படி சற்றும் சத்தமில்லாமால் ஊடுருவிட்டார்கள் சற்று ஆச்சரியமாக இருந்தது .பக்கமாக பக்கமாக ஆய்வு கட்டுரைகள் நடத்தும் இவர்கள் கூட ஏன் கண்டு கொள்ளவில்லை என்பது ஆச்சரியமளிக்கவில்லை .இதே போல 80 களிலும் 83 இன கலவரத்துக்கு முன்னே சில வியாபர ஏஜன்ட் வடிவத்தில் இருந்த வெறும் சதாரணர்களே இந்த ஆள் பிடித்து தரும் படி கேட்ட சம்பவம் அங்கங்கே நடை பெற்று கொண்டு இருந்தது ..அந்த நேரம் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்று நம்ப மறுத்த விடயம் ..பின்னர் ஆனால் சந்திரகாசன் ஆள் பிடிக்க ஆளாக செய்யபட்ட பின் தான் ஆங்கில ஊடகங்கள் பரவலாக வெளியிட்டன. இது புலானாய்வுதுறையினர்.. …
-
- 2 replies
- 1.6k views
-
-
கண்ணனின் தாய் அருந்ததி தனது மகன் கண்ணனைப் பற்றி மிகவும் துக்கப் பட்டுக் கொண்டிருக்கிறாள். இதுவரை அவன் ஒரு நல்ல தமிழ் இளைஞனாக இருந்ததாகவும், தற்போது பல கேள்விகளைக் கேட்டுத் தனது தமிழ் அடையாளத்தை அவன் தேடுவதாக அவளது பேதை மனம் துடிக்கிறது. அவனுடைய பேச்சைக் கேட்டு மகள் கருணாவும் ஏதோ கேட்கத் தொடங்கி விட்டாள். கண்ணனின் குடும்பம் தமிழ் அகதிகளாக லண்டனில் காலடி எடுத்து வைத்தவர்கள். “கடவுள் அருளால் இவ்வளவு நன்றாக இருக்கிறோம். நீங்களும் மற்றவர்கள் மதிக்கத் தக்கதாக வாழ, உயர்ந்த எங்கள் தமிழ் கலாச்சாரம் சார்ந்த பண்பாடுகளை அறிந்து கொள்ளுங்கள். எண்ணங்களை விருத்தி செய்யங்கள். கடவுளை வணங்குங்கள்” என்று தனது இரு குழந்தைகளுக்கும் அடிக்கடி புத்தி சொல்பவள் அவள். ஆணும் பெண்ண…
-
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
அக்கா யோ.கர்ணன் அக்காவிற்கு துப்பரவாக அசோக்கை பிடிக்கவில்லை. ஏதோ பெரிய அரியண்டமொன்றை பார்க்கிற மாதிரித்தான் பார்த்தாள். அவள் ஏற்கனவே நுட்பம் பார்க்கிறவள். அசோக் வேற கொஞ்சம் ஊத்தையாக இருந்தது. அசோக்கை முதல்முதல் காணேக்க, அவள் முகம் கோணலாததை பார்க்க மாட்டியள். அவளின்ர இந்த சிடுசிடுத்த முகத்தை பார்த்திட்டுதான், சிறுவன் குரங்கென்று ஆளை கூப்பிடுறனான். அவளுக்கு அசோக்கை பிடிக்காமல் போனதற்கு படிக்கிற காலத்தில நடந்த சம்பவமொன்றும் காரணமாயிருக்கலாமென்று நினைக்கிறன். அக்காவோட படிச்ச பொடியள்ளயே வலு காவாலிப் பொடியன் ஒருத்தன் இருந்திருக்கிறான். அவனின்ர பெயரும் அசோக்தான். அவனுக்கு என்ன காத்துக் கறுப்படிச்சதோ தெரியாது, அக்காவில காதல் வந்திட்டுது. அவன் எங்கட றோட்டா…
-
- 13 replies
- 1.4k views
-
-
அது 1988 ஆம் ஆண்டின் ஒரு சனிக்கிழமை "இண்டைக்குப் பள்ளிக்கூடமில்லை, சுண்ணாகம் லைபிறறிக்குப் போனால் தினத்தந்தியில் இருந்து பொம்மை, குமுதம் எல்லாம் வாசிக்கலாம்" என் உள்மனது துரத்த, அப்பா தன் மதிய உணவை உண்ட களைப்பில் கட்டிலில் மதிய நேரத்துக் கோழித்தூக்கம் போடும் நேரம் பார்த்து அவரின் பி.எஸ்.ஏ சைக்கிளை எடுத்துக் கொண்டு சத்தம் கேட்காதவாறு மிதிக்கிறேன். அம்மா முத்துலிங்க மாமா வீட்டுப் பக்கம் போயிருப்பா அவ இருந்தால் சுண்ணாகம் பக்கம் எல்லாம் போக விடமாட்டார் என்ற அவநம்பிக்கை வேறு. அம்மா பயப்பிடுவதில் காரணம் இல்லாமல் இல்லை. 1987 ஆம் ஆண்டு இந்தியன் ஆமிக்கும் புலிகளுக்கும் சண்டை மூண்ட பிறகு ஒவ்வொரு நாளும் கே.கே.எஸ் றோட்டுப் பக்கம் போறதே பெருங்காரியம் தான். எப்ப என்ன நடக்…
-
- 0 replies
- 811 views
-
-
வெள்ளிக்கிழமை இரவுகள் அ.முத்துலிங்கம் ஏதோ காட்டு மிருகம் துரத்தியதுபோல உள்ளே பாய்ந்தாள் ஆகவி. பத்து வயதுதான் இருக்கும். அவளுடன் வந்த காற்றும் உள்ளே நுழைந்தது. புத்தகப் பையை கீழே எறிந்தாள். எதையோ தேடுவதுபோல இரண்டு பக்கமும் பார்த்தாள். பத்து மைல் தூரம் ஓடிவந்ததுபோல அவளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. தாயார் சமையல் அறையில் இருந்து மெள்ள எட்டிப் பார்த்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இப்படி நடப்பதுதான். பள்ளியிலிருந்து வரும்போதே சண்டை பிடிக்க ஏதாவது காரணத்துடன் வருவாள். அகிலா தனியாக கனடாவுக்கு அகதியாக வந்தபோது நாலு மாதம் கர்ப்பம். ஐந்து மாதம் கழித்து ஆகவி பிறந்தாள். தாயாரின் ஒரே செல்லம். அவர் மடியில் தலைவைத்து படுக்க அகிலா முடியை கோதிவிட்டார். ‘கோதாதே. என்…
-
- 3 replies
- 2.6k views
-
-
ய்ய்யீஈஈஈ! - சிறுகதை ரேவதி முகில் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி சிரித்துக்கொண்டிருந்த பாண்டியின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்ட அம்மா, கையிலிருந்த கடிதத்தை மீண்டும் வாசித்தாள். வத்தலக்குண்டில் புதிதாகத் தொடங்கியிருந்த ஜவுளிக்கடையிலிருந்து வந்திருந்த கடிதம் அது. பாண்டிக்குப் பொங்கலுக்கு டவுசர் சட்டை வாங்கிய போது ஒரு பரிசு கூப்பன் கொடுத்தார் கள். குலுக்கலில் தங்களது கூப்பனுக்கு கலர் டி.வி பரிசு விழுந்திருப்பதாகவும், வருகிற சனிக்கிழமை மாலை வந்து பரிசைப் பெற்றுக்கொள்ளுமாறும் அதில் எழுதியிருந்தது. அதற்குள் தெருவில் சேதி பரவியிருந்ததால், வந்து விசாரித்துப் போனார்கள். பரிசு விழுந்த கதையை வாய் ஓயாமல் எல்லோருக்கும் சொல்லிக் கொண் டிருந்தாள் மயிலத்தை. பாண்டி பிறந்தபோ…
-
- 0 replies
- 3k views
-
-
நாங்கள் எங்களின் வீட்டில் மகிழ்வோடு வாழ்ந்து வந்தோம். எங்களின் மூச்சுக் காற்று வீட்டோடு கலந்து போயிருந்தது. வீடு எங்களுக்கு எல்லாமுமாக இருந்தது. திடீரென்று ஒரு நாள் அவர்கள் எங்கள் முற்றத்தில் வந்து நின்றார்கள். அவர்களின் வீட்டில் இருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வந்து நின்றார்கள். வரவேற்பது எங்கள் பண்பு. அவர்களுக்கும் இடம் கொடுத்தோம். அவர்கள் பல்கிப் பெருகினார்கள். ஒரு நாள் வீடு முழுவதும் எங்களுக்கே சொந்தம் என்றார்கள். எங்களை எங்களின் வீட்டை விட்டு அடித்து விரட்டினார்கள். நாங்கள் தெருவுக்கு வந்தோம். எங்களின் வீட்டைத் தாருங்கள் என்று நயமாகக் கேட்டோம். அவர்களிடம் பொல்லாத நாய் ஒன்று இருந்தது. அதை எம் மீது ஏவினார்கள். "நாயைப் பிடி! எங்களோடு பேசு! எங்களின் வீட்டைத் தா…
-
- 9 replies
- 2.2k views
-
-
வழிகாட்டிய வா(ரி)சு அது ஒரு தனியார் தொழிலகம். அந்த நிறுவனத்தில் பேண்ட் ஜிப், லெதர் பேக் ஜிப் முதலியன உற்பத்தி செய்யப்படுகின்றன. சிப்காட் தொழில் வளாகத்தில் இந்த நிறுவனம் இயங்குகிறது. ஐநூறு தொழிலாளர்கள் ஜிப் ஆலையில் வேலை பார்க்கிறார்கள். ஐம்பது பேர் நிர்வாகப் பிரிவில் மேனேஜர், உதவி மேனேஜர், உதவி அலுவலர், உதவியாட்கள், கணக்காளர் போன்ற பதவிகளில் அங்கம் வகிக்கிறார்கள். நிர்வாகப் பிரிவில் பணிபுரியும் அலுவலர்களில் முக்கியமானவர்களை அழைத்து தலைமை அலுவலகம் அவ்வப்போது பயிற்சிகள் தரும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள நமக்கு வாய்ப்புக் கிடைக்காதா..? என்று எல்லோருமே ஆவலாய் எதிர்பார்ப்பார்கள். "ஆபீஸில் உள்ள உதவி மேன…
-
- 1 reply
- 668 views
-
-
பதினொரு பேய்கள் அ. முத்துலிங்கம் ஆறு மாதம் சென்ற பின்னர்தான் தோழர் சிவா சுப்பிரமணியத்துக்கு என்ன பிரச்சினை என்பது புரிய ஆரம்பித்தது. இயக்கத்தில் அவர் சேர்ந்து மூன்று வருடம் ஆகியிருந்தது. அவருடன் சேர்த்து செயல்குழுவில் 11 பேர் இருந்தனர். அவர்தான் யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாளர் என்று அறிவிப்பு வந்துவிட்டது. ஆனால் செயற்குழுக் கூட்டத்தில் செல்வன் கேட்ட கேள்வி அவரை யோசிக்க வைத்தது. அதில் இருந்த நியாயம் அவருக்கும் தெரியும். மற்ற குழுக்காரர்கள் அவனை அவமானப்படுத்திவிட்டார்கள். எல்லோரிடமும் வாகனம் இருந்தது. துப்பாக்கி இருந்தது. அவர்களிடம் ஒன்றுமில்லை. தலைவர்கள் இந்தியாவில் சொகுசாக உட்கார்ந்துகொண்டு கட்டளைகள் பிறப்பித்தார்கள். எப்படிப் போராட முடியும்? யாழ்ப்பாணத்தில் மாத்த…
-
- 2 replies
- 2.4k views
-
-
மறையாது பிரவாகம்! சீனபெரும் சுவரும், இத்தாலி சாய்ந்த கோபுரமும்,,, இந்திய தாஜ்மஹாலும் ,,பாபிலோனிய தொங்குதோட்டம் என்னு போய்கிட்டு இருக்குறவயா உலக அதிசயம்? இல்லை! அதிசயம் என்னு என் மனசில் எப்போதும் ஆணியாய் அறைபட்டு கிடப்பது பிரபாகரன் என்ற ஒரு பெயரே! அது சத்திர சிகிச்சையாலொண்ணும் அகற்றிவிடமுடியாதது! இழுத்து எடுக்கமுயன்றால் அதோடு சேர்ந்து இதய திசுக்களும் சேர்ந்து இழுபட, என் மரணம் சம்பவிக்கலாம்! அவர் ஒரு அதிசயம் ! ஏன்? குழந்தைப்பருவத்திலிருந்து முதுமை எட்டிபார்க்கும் வயசுவரை வளைந்தே கொடுக்காத ஓர் வாழ்க்கை வாழ்ந்தாரே..அதனாலயா? இல்லை! அவர் ஓர் அதிசயம்! எதுக்காக? கொஞ்சம் தன்மானத்தை கூறுபோட்டு விற்றிருந்தால் தெற்காசியாவின் கோடிகளுடனும் ,குட்ட…
-
- 15 replies
- 3.6k views
-
-
சாத்தானின் குழந்தை. ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபத்தியேழாம் ஆண்டு . தை மாதம். யாழ்குடாநாடு எங்கும் இரவும் பகலும் இடைவிடாத புயலுடன் கூடிய பெருமழை.மழை வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த கிராமங்களில் ஒன்றுதான் மானிப்பாய் கிராமமும். அன்று பத்தாம் திகதி அதிகாலை நான்கு மணி நாற்பத்தியொரு நிமிடம். இருபது வினாடிகள். வானைக்கிழித்ததொரு பெரு மின்னல் தோன்றி மானிப்பாய் வைத்தியசாலையின் பின்னே மண்ணைத்தொட்டது. அங்கு காணியொன்றில் மழையில் நனைந்தபடி தலையை தொங்கப் போட்டுகொண்டுக்கொண்டிருந்த மாடு ஒன்று ம்மா...........என்ற சத்தத்துடன் கருகி இறந்து போனதோடு மின்கம்பிகளும் அறுந்து விழ எங்கும் கும்மிருட்டு.ஒருசில வினாடிகளில் பெருத்த இடியோசை ஆழ்ந்தஉறக்கத்திலிருந்த அனைவரையுமே திடுக்கிட்டு எழவைக…
-
- 30 replies
- 4.9k views
-
-
வைணவ - சைவ கலப்பு குடும்பத்தில் பிறந்து தொலைத்ததால் எந்த பாரம்பரிய பெயர் வைப்பது என்ற குழப்பம் நான் பிறந்தபோது என் குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜாதகத்தில் பார்த்தவரை “மோ”வில் தொடங்கும் பெயர் வைத்தால் மட்டுமே இந்தப் பயல் ஜீவிதம் செய்ய முடியும் என்ற உண்மை கண்டறியப்பட்டிருக்கிறது. 'பையனுக்கு தண்ணியிலே கண்டம்', ‘ரெண்டு பொண்டாட்டி' போன்ற விவரங்களையும் கூட ஜாதகம் மூலமே அறிந்திருக்கிறார்கள். அம்மாவுக்கு அவர்கள் அம்மா வீட்டில் பிரசவம் ஆனதால் பெயர்சூட்டு விழாவும் அங்கேயே நடக்க இருந்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட தாத்தா லபக்கென ‘மோகன சுந்தரம்' என்ற மொக்கை டைட்டிலை தேர்வு செய்துவிட்டிருக்கிறார். முருகபக்தரான அப்பாவோ முருகன் பெயரை சூட்டவேண்டும் என்ற கொலைவெற…
-
- 4 replies
- 2.2k views
-
-
[size=4] சொல்லமறந்த கதைகள் 10 (அங்கம் 02) முருகபூபதி – அவுஸ்திரேலியா புதுவை இரத்தினதுரை தனது குடும்பத்திற்காக மத்தியகிழக்கு நாடொன்றுக்குச்சென்று உழைத்து திரும்பியபின்னர், விடுதலைப்புலிகளினால் ஈர்க்கப்பட்டு அவர்களின் கலை. பண்பாட்டுக்கழகத்தினை வளர்த்தார். 1986 இல் நான் அவரை இறுதியாகச்சந்தித்தபோது அவருக்கு தனித்தமிழ் ஈழம்தான் கனவு. அவரின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவர் ஒருகாலத்தில் மாக்ஸீயம், கம்யூனிஸம் பேசியவர். எழுதியவர். அதிலிருந்து முற்றாக விடுபட்டாரா? என்பது எனக்குத்தெரியாது. ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமையை விட்டும் அதன் கொள்கைகளை விட்டும் இறுதிவரையில் அவர் விடுபடவில்லை. ‘அதிதீவிரவாதிகள் சந்தர்ப்பவாதிகளாக மாறிவிடுவார்கள்’ என்று மேதை லெனின் சொல்லி…
-
- 3 replies
- 766 views
-
-
வீழ்ச்சி லஷ்மி சரவணகுமார் கள்ளக்காதல் விவகாரத்தில் தனது கணவனைத் தற்கொலைக்குத் தூண்டிய அந்தப் பெண் ஒரு வாரமாகத் தன்னைத் தொடர்ந்து வருவதைக் கவனித்த மூர்த்தி பதற்றமடையத் துவங்கினான். திருச்சி நீதிமன்றத்தில் செய்தி சேகரிக்கச் சென்றவன் தேநீர் அருந்துவதற்காக ஒரு கடையில் ஒதுங்கியபோதுதான் முதல் தடவையாக எதிர்ப்பட்டாள். அவளை அடையாளம் தெரியாததால் அவன் பொருட்படுத்தவில்லை. அடுத்தநாள் தனது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் பிஷப் ஹீபர் காலேஜ் சிக்னலில் பச்சை விளக்கிற்காகக் காத்திருந்த இடைவெளியில் தனக்குப் பின்னால் பழைய இரு சக்கரவாகனத்தில் அந்தப் பெண் இருப்பதைப் பார்த்தான். கூர்மையாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கொலை ஆயுதம் ஒன்றின் முனையிலிருக்கும் கூர்மைமிக்கப் பார்வையது.…
-
-
- 2 replies
- 304 views
-
-
குமர்ப்பிள்ளை - சிறுகதை அ.முத்துலிங்கம் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி கீழ்க்காணும் சம்பவத்தைப் படித்தவுடன் நீங்கள் நம்பினால் அது கற்பனை; நம்பாவிட்டால் அது உண்மை. நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். வெளிநாட்டில் என் தொழிலை வளர்த்து, நான் நிறைய சம்பாதித்தேன். மனைவி போன பிறகு நான்கு பிள்ளைகளும் நான்கு நாடுகளில் தங்கிவிட்டார்கள். குளிர் கூடக்கூட பகல் குறையும் நாடு அது. என் பிறந்த ஊரில் மீதி வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு. போர் முடிந்ததும் யாழ்ப்பாணத்துக்குப் போய், நான் பிறந்து வளர்ந்த வீட்டைத் திருத்தி எடுத்துத் தங்கினேன். இருபது வருடங்களுக்குப் பிறகு என் சொந்த ஊரைப் பார்க்கிறேன். உடையாத ஒரு வீட்டைக்கூடக் காண முடியவில்லை. கோயில்க…
-
- 1 reply
- 2.8k views
-
-
ஒரு நிமிடக் கதை: மதிப்பெண் பாஸ்கரின் வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு ராகவன் கிளம்பிச் சென்றதும், மனைவி ரோகிணியிடம் வந்தார் பாஸ்கர். “பக்கத்து வீட்டுக்காரரான ராக வனோட நாம நல்லாத்தான் பழகு றோம். ஆனாலும் அவருக்கு நம்ம மேல அசூயையும் பொறா மையும்தான் இருக்குபோல!” சொன்னார் பாஸ்கர். “ஏன் அப்படி சொல்றீங்க? இவ்வளவு நேரம் நல்லாத்தானே பேசிட்டுப் போனார்” நிதானமாகக் கேட்டாள் ரோகிணி. “நல்லா பேசிட்டிருந்தாரா? இவ் வளவு நேரம் தன்னைப் பற்றியும் தன் தம்பிகளைப் பற்றியுமே கர்வமா பேசிட்டிருந்தாரு. கவ னிச்சல்ல?” “ஆமா கேட்டுட்டுத்தான் இருந் தேன். அவர் எப்படி மளிகை கடை நடத்தி முன்னுக…
-
- 1 reply
- 2.8k views
-
-
நினைவுகள் நிஜமாகிறது அந்தத் தரிப்பிடத்தையும் கடந்து பஸ் சென்று கொண்டிருந்து வழக்கமாக இந்தப் பஸ்ஸில்தான் அந்தப்பெண்ணும் பயணம் செய்வாள். ஆனால் இன்று அவளைக் காணாதது சந்துருவின் மனதுக்குள் ஏதோ மாதிரியாக இருந்தது. அந்தப் பெண் இந்தப் பயணப்பொழுதுகளில் மிகவும் வாட்டசாட்டமாகவே காணப்பட்டாலும் அவளது உள்ளத்திலே ஏதோ ஒரு சோகம் குடிகொண்டிருப்பதை மட்டும் அவனால் ஊகித்து உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. தினமும் அவனுடன் பயணம் செய்யும் அப்பெண்ணோடு அவன் இதுவரை கதைத்ததில்லை. ஆனால் கண்கள் கதை பேசி உதடுகள் உண்மை சொல்ல மறுத்து புன்முறுகல் செய்த நாட்கள் பலவுண்டு. ஆயினும் எப்படியாவது அப்பெண்ணுடன் கதைக்கவேண்டும்.. போல் சந்துருவின் மனம் தவித்தது. இருப்பினும் முன்னுக்குப் ப…
-
- 3 replies
- 1.9k views
-
-
கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 10) நன்கு தமிழ் பேசத் தெரிந்தவர் என்கிற காரணத்துக்காகவே நளினி சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக, விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். சம்பவ இடத்தில் நளினி எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பார்த்தாலே, இது அவரைச் சிக்கவைப்பதற்காகவே புனையப்பட்ட கதை என்பது புலனாகும். அரசுத் தரப்பு ஆவணத்தில் 77-வது பக்கத்தில், ‘சிவராசன் தமிழ்நாட்டுக்காரர் போல் பேசக்கூடிய ஆற்றல்கொண்டவர்’ என எழுதப்பட்டு உள்ளது. அவரே நன்கு தமிழ் பேசும்போது, மொழிப் பிரச்சினைக்காக ஏன் நளினியை அங்கே அழைத்துச் செல்ல வேண்டும்? அரசுத் தரப்பு சான்றுகளின்படி, குற்றமுறு சதியின் உறுப்பினர் ஹரிபாபுவும் (பத்திரிகைப் புகைப்பட…
-
- 0 replies
- 986 views
-