Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. வான்கோழி நடனம் - ரஸவாதி அவுஸ்திரேலியா, மெல்பேர்ண் நகரத்தில் இருந்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட கார் ஓடும் தூரத்தில் “ரறல்கன்” நகரம் இருக்கின்றது. நகரம் என்று சொல்ல முடியாது. அதி அற்புத கிராமம். அங்கேதான் அந்த எழுத்தாளர் தனது வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அவர் இறந்தபொழுது மனைவி அவருடன் இருக்கவில்லை. அவர் ஏற்கனவே நான்கு மாதங்களுக்கு முன்பதாக இலங்கை போய் விட்டார். அவரின் இறப்பைப் பரிசோதித்த வைத்தியர்கள் ‘இயற்கை மரணம்’ – அடல்ற் டெத் என்று வாக்குமூலம் சொன்னார்கள். அவருக்கு ஏகப்பட்ட வருத்தங்களும் மனவருத்தங்களும் இருந்திருக்கின்றன. ஆனால் அவரது மனைவி தனது கணவனின் இறப்பில் சந்தேகம் இருக்கின்றது என்று இலங்கையில் இருந்தபடி தெரிவித்தார…

  2. வாடைக்காற்று வாடைக்காற்று நாவல் .pdf வடிவில் கீழ் உள்ள இணைப்பிணை அழுத்தி வாசியுங்கள். (இணைப்பு தரவேற்றம் செய்ய சிறிது நேரம் எடுக்கும்) http://noolaham.net/project/167/16603/16603.pdf நந்திக்கடல் நந்திக்கடல் நாவல் .pdf வடிவில் கீழ் உள்ள இணைப்பிணை அழுத்தி வாசியுங்கள். (இணைப்பு தரவேற்றம் செய்ய சிறிது நேரம் எடுக்கும்) http://noolaham.net/project/172/17152/17152.pdf

    • 2 replies
    • 1.5k views
  3. நமலி போல் வாழேல் - சிறுகதை விநாயக முருகன், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி வீட்டுக்கு வெளியே வரும்போது, தெருவில் பட்டாசுக்குப்பைகள் மிதந்துகொண்டி ருந்தன. மழையிலும் மக்கள் தீபாவளியை எப்படியோ கொண்டாடியி ருந்தார்கள். மீண்டும் ஒரு பெருமழை வரும் என்று தோன்றியது. கவலையுடன் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன், ஏதோ சத்தம் கேட்டு அங்கு நின்றிருந்த காரைத் திரும்பிப் பார்த்தேன். முதலில் பார்க்கும்போது, காருக்குக் கீழே துணிமூட்டை போலத்தான் தெரிந்தது. என்னைப் பார்த்து விருட்டென அது வெளியே வந்ததும்தான் நாய் என்று உணர்ந்தேன். பயத்தில் அனிச்சையாக எனது கால்கள் பின்னால் நகர, படிக்கட்டில் ஏறி நின்றுகொண்டேன். அவ்வளவு பெரிய உயரத்தை எப்படிக் குறுக்கி, அந்த காருக்கு அடியில் …

    • 2 replies
    • 3.2k views
  4. Started by ஏராளன்,

    கதையாசிரியர்: எஸ்.பொன்னுத்துரை கதைத்தொகுப்பு: குடும்பம் சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.) ஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது. வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம் ஐந்து பிள்ளைகளையும் பெட்டைக்குஞ்சுகளாகவே பீச்சி விட்டாள். அரிய விரதங்கள் பிடித்து, இருக்காத த…

  5. காதலர் தினச்சிறுகதை: ஆசை வெட்கமறியாதோ..? குரு அரவிந்தன் - நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள். ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது, மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது. சரியா பிழையா தெரியவில்லை. - எழுபது கிலே மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள். இப்படியான முகஅலங்காரங்களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் செய்வது வழக்கம். ஆனால் இவள் தலையை ஒரே சீராக வேகமாக அசைத்துக் கொண்டு உதட்டுக்கு அலங்காரம் செய்ததால் அவளது அந்தச் செய்கை என்னை அவளது பக்கம் திரு…

  6. படித்ததில் பிடித்தது....வலைப்பூவில் எழுதும் கேமாவின் ஒரு நினைவுப்பதிவு இது. பாணும் பஞ்சமும் ஸ்ரீமா அம்மாவும். நான் நினைக்கிறன் 1974 ம் ஆண்டுப் பகுதியெண்டு.அந்த நேரம் ஸ்ரீமா அம்மாவின்ர (ஸ்ரீமாவோ பண்டாரநாயக)ஆட்சிக்காலம்.காசு கையில இருந்தாலும் சாப்பாட்டுச் சாமான்கள் ஏதும் வாங்கேலாது.பஞ்சம்...பஞ்சம் பசி...பசி.நாங்கள் வீட்ல 5 பேர்.அப்பா கோயில் சேவகம் செய்ற சாதாரண தவில்காரர்.அப்பப்ப கையில கிடைக்கிற காசைக் கள்ளமில்லாம அம்மாட்ட கொண்டு வந்து குடுத்திடுவார்.வெத்திலை போடுறது மட்டும்தான் அவருக்குப் பிடிச்ச கெட்ட பழக்கம்.வெறும் தேத்தண்ணியும் வெத்திலைத்தட்டமும் இருந்தா அவருக்குப் பசிக்காது என்கிறாப்போல.அம்மா பாவம்.அப்பா கொண்டு வந்து குடுக்கிறதைப் பக்குவமா செலவழிப்பா.…

    • 2 replies
    • 1.1k views
  7. பிடிகயிறு - சிறுகதை நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம் பிடிமாடாப் போச்சேடா தவுடா!'' - சொல்லிக்கொண்டே ஓடியதில் மூச்சு முட்டியது பாண்டிக்கு. கையில் இருக்கும் பிடிகயிற்றைச் சுற்றிக்கொண்டே சற்று நின்று மூச்சுவாங்கிய பாண்டியை, பரிதாபமாகப் பார்த்தான் தவுடன். ''விடப்பா, நிண்டு விளையாடுச்சு. நல்லவேள, குத்தித் தூக்கத் தெரிஞ்சிச்சு அந்தப் பாளமேட்டுக்காரனை. எல்லக் கவுறு வந்ததும் தாவிப் பம்மிப் படுத்துட்டான் தாயளி. இல்லேண்டா அவென் கொடலு கொம்புல தொங்கிருக்கும்!'' அதை ஆமோதிப்பது போல பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. கிட்டத்தட்ட ஆறேழு கிலோமீட்டர் ஓடிய களைப்பு, அவர்களின் முகங்களிலும் இடுப்புகளிலும் தெரிந்தன. கையை மாற்றி மாற்றி இடுப்பைப் பிடித்தவாறே அங்கிருந்த…

  8. எனக்கு நீ வேணும் ரிஷபன் கீழிருந்து அழைப்பு மணியை இரண்டு முறை விட்டு விட்டு அழுத்தினேன். இது தான் சங்கேதம் . பத்மா எட்டிப் பார்த்தாள். மாடிப் போர்ஷனில் குடியிருக்கிறாள். ஒரே மகன்; ஷ்யாம். "உங்களுக்கு ஃபோன்..." "தேங்கஸ்... இதோ வரேன்..." ஃபோனில் பேசும் போது பத்மாவின் குரல் திடீரென உரத்துக் கேட்டது. "அதெல்லாம் முடியாது...." "வேணாம்... எனக்குப் பிடிக்கல..." மறுபடி தணிந்து போனது யாராக இருக்கும், பத்மாவிற்கு தொலைபேசி அழைப்பு வருவது மிக அபூர்வம்.பேசி முடித்திருக்க வேண்டும். அறைக்குள் எட்டிப் பார்த்தாள். "ஸாரி. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா.." "சேச்சே... அதெல்லாம் இல்லே..." மேஜை மீது வெள்ளைத் தாள்களும். பேனாவும்.இரண்டு வாரங்களாய்…

    • 2 replies
    • 834 views
  9. ஏங்க.. “ஏங்க....” அமானுஷ்யமான குரலைக் கேட்டு பதறிப்போய் சட்டென்று கழுத்தில் வெட்டிக் கொண்டேன். கொஞ்சம் ஆழமான வெட்டு. ரத்தம் கொப்பளித்தது. “எத்தனை தடவை சொல்லியிருக்கேன்... ஷேவிங் பண்ணறப்ப பிசாசு மாதிரி கத்தாதேன்னு...” எரிந்து விழுந்தபடி வெட்டுப்பட்ட இடத்தில் ‘கலோன்’ தடவினேன். தீயாய் எரிந்தது. “சொல்லித் தொலை. எதுக்கு இப்படி ‘ஏங்க ஏங்க’ன்னு உயிரை எடுக்கறே?” “உங்க பொண்ணு என்னா சொல்றான்னு கேளுங்கன்னு கூப்பிட்டா இப்படி பைத்தியக்காரன் மாதிரி கத்தறீங்களே?” பதிலுக்கு இளவரசியும் சீறினாள். நேரடியாக சொல்ல மாட்டாள். கூடவே ஒரு ‘மாதிரி’யையும் இணைப்பாள். சொன்ன மாதிரியும் ஆச்சு. சொல்லாத மாதிரியும் ஆச்சு. அப்பாவும், அம்மாவும் மாறி மாறி கத்துவதைப் பார்த்து ஷாலு மிரண்டா…

  10. அந்திமத் தேடல் செத்துப் போய் விடுவோமோ என முதல் முறையாக எனக்கு பயம் தொற்றிக் கொண்டது. என்னுடைய வயது, அனுபவம், தேசாந்திரியாக ஊர் சுற்றியது, மழை, வெள்ளம், நெருப்பு...இப்படி இயற்கையை மூர்க்கமாக எதிர் கொண்ட போதெல்லாம் கூட, இறப்பு என்னைத் தழுவி விடுமோ என நான் எப்போதும் அஞ்சியதில்லை. கேவலம், பசியால் செத்து விடுவோமோ...? பசியின் கோரத்தால் குடல் மேலெழுந்து, மூச்சே கழுத்தை நெறிக்கிறது. என்னுடைய வயசு என்ன இருக்கும்? தோற்றத்தைக் கொண்டு கணிப்பவர்கள் எனக்கு 70, 80 வயது இருக்கும் எனச் சொல்வார்கள். வயிறு என்று ஒன்று இருந்தால்தானே பசி எடுப்பதில் நியாயமிருக்கும்?! கடைசியாக எப்போது, என்ன சாப்பிட்டேன…

    • 2 replies
    • 1k views
  11. உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது. ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு த…

  12. கடிதத்தை பிரித்தேன், தோழர் ---------------க்கு , உம்முடன் லண்டனில் இருந்து வந்த தோழர் ----------, சில விசம பிரசாரங்களிலும்,இயக்க கட்டுப்பாடிற்கு விரோதமான செயற்பாடுகளிலும் ஈடுபட்டதற்காக விசாரணைக்காக முகாம் B யில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நீர் உடன் உரத்தநாடு சென்று அவரை விசாரணை செய்து அறிக்கை தருமாறு வேண்டுகின்றேன். இப்படிக்கு செயலதிபர் முகுந்தன் குறிப்பு - உரத்தநாடு போகுமுன் மாதவனை சந்திக்கவும். கடிதத்தை மடித்து பொக்கெற்ருக்குள் வைத்துவிட்டு மாதவனை சந்திக்க போகின்றேன்.உரத்தநாடு போய் வருவதற்கு செலவு காசும்,அதைவிட ஒரு பாசலும் தந்தார்.இதில் ஒன்பது லட்சம் ருபா இருக்கின்றது அனைத்துமுகாம் பொறுப்பாளர் கருணாவிடம் கொடுத்துவிடவும் என்றார்.மாலை திருவள்ளுவர் போ…

    • 2 replies
    • 1.3k views
  13. Started by சுமங்களா,

    படித்ததில் பிடித்திருந்த கதை. தமிழ்நதி எழுதியிருந்தார்..அதனை இங்கு இணைக்கிறேன்.http://tamilnathy.blogspot.com/2009_07_01_archive.html மாபெரிய பால்வெளி. அதில் சூரியனைச் சுற்றியும் சுழன்றும் செல்லும் பூமியென்ற சிறு கிரகம். அகன்ற நிலப்பரப்பில் ஒரு நாடு. அதிலொரு நகரம். அங்கே குட்டியூண்டு பகுதி. அந்தக் குட்டியூண்டு பகுதியிலொரு குட்டியூண்டு அறையில் ஒரு சதுர அடிக்கும் குறைவான ஒரு பெட்டியின் முன்னமர்ந்து நாங்கள் சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறோம். பால்வெளியையும் இந்தப் பெட்டியையும் இணைத்தும் நினைத்தும் பார்க்க கொஞ்சம் நகைப்பாகத்தான் இருக்கிறது. வேலிச்சண்டை, கோழிச்சண்டையிலிருந்து இணையச் சண்டைக்கு நாங்கள் பரிணாம வளர்ச்சி பெற்றிருப்பதை எண்ணித் திருப்தியுற வேண்டியதுதான். களைப…

    • 2 replies
    • 945 views
  14. புத்தரின் கண்ணீர் - சித்தாந்தன் சமரசிங்க புத்தரின் சிலை முன்னால் கண்களை மூடிக்கொண்டுஅமர்ந்திருந்தான். விகாரையின் வாசலில் ஓங்கி வளர்ந்திருந்த அரச மரத்தின்இலைகளின் சலசலப்பு கேட்டுக்கொண்டிருந்தது. கண்களை இறுக மூடிமனதை ஒருநிலைப்படுத்த முயன்றான். அவனின் கண்களுக்குள்ஆயிரமாயிரம் பிணங்கள் சிதறிக்கிடப்பதான பிரமை ஏற்பட்டது.பிணங்களுக்கிடையில் நின்று தன் மகன் பலமாக சிரிப்பது போலிருந்தது.அவனால் கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை.துயரமும், அவமானமும் அவனது இதயத்தைப் பிளந்தன. புத்தரின் முகத்தை கூர்ந்து பார்த்தான். அந்த முகத்தில் விரிந்த கருணையும்கண்களின் நிர்மலமும் அவனை மேலும் மேலும் வதைத்தன. பகவானுக்குமுன்னே அமர்ந்து பிரார்த்திக்க தனக்கு தகுதி இல்லையெனநின…

  15. பின்னேரம் நாலு மணிக்கே இருட்டிவிட்டது.வெளியால சரியான குளிர் சுருண்டு படுக்கையில் கிடந்தான் ரகு .அவன் இந்த நாட்டுக்கு வந்து இரண்டு வருடங்களாகிறது இன்னும் அகதி அந்தஸ்த்து கிடைக்கவில்லை.நண்பனுடன் இந்த அறையில் இருக்கிறான்.நண்பன் இங்கு வந்து ஏழு வருடங்கள் அவனுக்கு அகதி அந்தஸ்த்து கிடைத்து ஒரு கொம்பனியில வேலையும் செய்கிறான். இன்று நண்பனுக்கு மனக்கஷ்டத்தை கொடுத்துவிட்டதாய் இவனது மனம் சொல்லிக்கொள்கிறது. இன்று இவனின் நண்பனின் நண்பனுக்கு ஐம்பதாவது பிறந்த நாள் கொண்டாட்டம்.அதற்கு வருமாறு நண்பன் இவனையும் அழைத்தான். இவன் மறுத்துவிட்டான்.நண்பன் தனது நண்பனிடம் சொல்லியும் அழைப்பு விட்டான்.ரகுவோ குறை நினைக்கவேண்டாம் என்றுவிட்டான். அது இவனது நண்பனுக்கு மனத்தாக்கமாய் இருக்கவேண்டும்.நண…

  16. பாம்புபிடி இனம் கல்பேலியாவும் ரொக்ஸானா என்னும் குழந்தையும்..! - ராஜஸ்தான் கதைகள் முடிவிலிருந்து தொடங்குகிறேன் இந்தப் பயணக் கதையை. பயணம் முடிந்த ஏழாவது நாள் சென்னை விமான நிலையத்துக்குள் நுழையும் போதே பெரும் மழை கொட்டத் தொடங்கியிருந்தது. சுற்றி ஒரே பரபரப்பு. எல்லோருக்கும் வீட்டுக்குத் திரும்பும் சந்தோஷம். எனக்கு அப்படி ஓர் உணர்வு இல்லை. என் மனம் இன்னும் "ரொக்ஸானா"வின் சிரிப்பிலேயே நிலைத்திருந்தது. முழு பற்கள் முளைத்திடாத அவள் பொக்கை வாயும், அந்தச் சிணுங்கலும், என்னை நோக்கி அவ்வப்போது அவள் நீட்டிய அந்த விரல்களின் மென்மையும், அவள் கண்களின் அழகைப் பெருமளவுக் கூட்டிய அந்த "மை"யும், நடனத்தின் இடையிடையே அவளின் அம்மா சில நிமிடங்கள் வந்து அவளுக்கு ப…

  17. பூதக்கண்ணாடி ஜே.பி. சாணக்யா ஓவியங்கள்: அனந்தபத்மநாபன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் ஊரில் நடந்து முடிந்திருந்த அந்தச் சம்பவங்களைப் பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது என்றாலும் அவற்றைப் பற்றிய குறைந்தபட்ச விவரிப்புகள்கூட அவற்றின் தீவிரத்தை உங்களுக்கு உணர்த்திவிடும் என்பதாலும் நானும் அச்சம்பவங்களின் சாட்சிகளில் ஒருவனாய் இருப்பதாலும் இவற்றை உங்களுக்குத் துணிந்து சொல்கிறேன். நமக்கு அருகிலுள்ள மனிதர்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வுகளை இவை எனக்குத் தந்திருப்பினும், அவற்றிலிருந்து மெய்ஞ்ஞானிகள் தவிர்த்து, ஒருவருக்கும் பயனற்றதாகவே அவை முடிந்துவிடும். எங்களுக்கும் வத்சலாவுக்கும் நேர்ந்ததைப் போல. இளவழகனுக்கு நான்காவது வயது நடந்துகொண்டிருந்த ஒரு …

    • 2 replies
    • 987 views
  18. ஒரு நிமிடக் கதை: வாட்ச்மேன் இரவு மணி பத்து. கடைசி பஸ்ஸை பிடிக்க விரைந்த மாணிக்கத்தின் கண்ணில் அந்த ஏடிஎம்மில் அமர்ந்திருந்த வாட்ச்மேன் தட்டுப்பட்டார். ‘இது நம்ம தங்கராசு மாதிரியில்ல இருக்குது?’ மனதில் கேட்டுக் கொண்டவர் ஏடிஎம்மை நெருங்கினார். அது அவர் நண்பர் தங்கராசுவேதான். “எலே தங்கராசு என்னாச்சு? வயசான காலத்துல எதுக்கு உனக்கு இந்த வேலை? இப்பத்தான் பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சே, அதுக்குள்ள மருமக கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டாளா?” கேட்ட நண்பனை கையமர்த்தினார் தங்கராசு. “அந்த புள்ளையைப் பத்தி அப்படி எல்லாம் பேசாதே. என் மருமக தங்கம்.” “அப்ப எதுக்கு உனக்கு இந்த வாட்ச்மேன் உத்யோகம்? கல்யாணத்துக்கு முந்தி உன்னை உக்…

  19. Started by கிருபன்,

    ஆராதனா - அனோஜன் பாலகிருஷ்ணன். அபத்தமான தருணங்களில் ஒன்று பஸ் பயணம்.அதுவும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருவது மகா எரிச்சலை கிளப்பியது.மெல்ல மெல்ல தன்னிலை இழந்து அரைத்தூக்கத்தில் இருந்தேன். ஏஸி பஸ்க்கு ஆசைப்பட்டதின் விளைவாக குளிர் தாங்காமல் அவதிப்பட்டு குல்லா சகிதம் சில கிழவர்கள் குறட்டை விட்டு பஸ் எஞ்சின் சத்தத்தை முறியடித்தனர். சுற்றிப்பார்த்தேன் கவனிக்கத்தக்கவகையில் ஒரு இளமை ததும்பிய பெண்களையும் காணவில்லை. என் பின்னால் சுவட்டருடன் இருந்த ஒரு கிழவர் என் பிராணத்தை வேண்டனும் என்ற நோக்கத்தில் இருந்தார்போலும்,என்னால் சீட்டை பின்னால் மடிக்க முடியவில்லை.கொஞ்சம் மடித்தால் “கால் வைக்க முடியவில்லை தம்பி..கொஞ்சம் நிமித்திரியலே……” சம்பந்தம் இல்லாத சத்தங்கள்,முகங்கள். இ…

  20. விளக்கு விற்பவன் கதை – யுகன் எனக்கு கோவில்கள் அதன் பிரமாண்டங்கள் எப்போதுமே ஆச்சரியம் தருவனவாகவே இருந்திருக்கின்றன. நான் தீவிர ஆன்மீகவாதியோ முழுமையான கடவுள் மறுப்பாளனோ அல்லன். மனிதர்களிடையே காணப்படும் வர்க்க பேதத்தையும் ஏற்றத்தாழ்வுகளையம் கண்டும் கருஞ்சிலையாய் இருக்கும் கடவுளரில் எனக்கு உடன்பாடில்லைத்தான், இருந்தும் எனக்கு கோவில்கள் பிடிக்கும் என்னுள்ளே கரையில் இட்ட மீனாக துடிக்கும் அமைதியின்மையை வலை போட்டுப் பிடித்துக்கொண்டவை கோவில்கள். கோவில்கள் எனக்கு அமைதியைத்தரும் இடம் மட்டுமல்லாமல் ஆச்சர்யம் தருவனவாக இருப்பது அங்கு காணப்படும் சிற்பங்கள் மற்றும் சுவரோவியங்களும்தான். சிற்பங்கள் ஓவியங்கள் என்றதும் இந்தியக் கோவில்கள் தான் என்னை ஆக்கிரமித்துக்கொள…

  21. ஆண்மை - எஸ்.பொன்னுத்துரை ஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது. வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம் ஐந்து பிள்ளைகளையும் பெட்டைக்குஞ்சுகளாகவே பீச்சி விட்டாள். அரிய விரதங்கள் பிடித்து, இருக்காத தவம் எல்லாம் கிடந்து, கண்ட கண்ட தெய்வங்களையெல்லாம் கையெடுத்துக் கும…

  22. சுவையான தேநீர் போடுவது எப்படி? சீன மகாராஜா ஷெனொங் 'சுடுதண்ணி' குடித்துக்கொண்டிருந்தார். நிச்சயமாக அரண்மனையில் இல்லை. வெளியில் எங்கோ காட்டில் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று குடித்துக் கொண்டிருந்த சுடுதண்ணி சுவையாக மாறியது. அதன் நிறமும் மாறிவிட்டது. மாண்புமிகு ஷெனொங் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாகக் கடவுள் நம்பிக்கை அல்லது பேய்,பிசாசு நம்பிக்கை இல்லைப் போல. தேத்தண்ணிப் பேணிக்குள்ளே மெதுவாகப் பார்வையை விட்டார். எங்கிருந்தோ மரத்தில் இருந்து உதிர்ந்து பேணிக்குள் விழுந்திருந்த இலைகளைக் கவனித்தார். வேறு பேர்வழிகள் எனில் உடனே கவிதை எழுதத் தொடங்கியிருப்பார்கள். மகாராஜா புத்திசாலி. ஆராய்ந்து பார்த்து அந்த இலைகள் எந்த மரத்தில் இருந்து உதிர்ந்தன என்று கண்டுபிடித்தார். இதுத…

  23. கிறிஸ்துமஸ் லைட்ஸ் – தன்ராஜ் மணி “ரூப், விண்டோ எல்லாத்துலயும் நிறைய… நிறைய்ய்ய்ய லைட்ஸ் வேணும் இந்த இயர்,” கைகளை அகல விரித்து சுவர் அகலத்திற்கு நீண்டிருந்த சாளரத்தின் முன்நின்று குதித்துக் கொண்டே சொன்னான் டெரி. சோபாவில் உட்கார்ந்திருந்த தேவதாஸ் ஐபேடில் இருந்து தலையைத் தூக்கி அவனைப் பார்த்துச் சிரித்தார். “இங்க வா,” என்றார் ஐபேடை சைட் டேபிளில் வைத்தபடி. ஓடி வந்து, வந்த வேகத்தில் தாவி, கால் முட்டியைத் தன் அப்பாவின் மடியில் அழுத்தி, முகத்தை அவர் மார்பில் பதித்து, கட்டிக் கொண்டான். வலியில், “ஐயோ,” என்று கத்தி விட்டார் தேவதாஸ். “எத்தன வாட்டி சொல்றது உனக்கு. இயர் த்ரி போய்ட்ட, இப்படி வந்து எம் மேல குத…

    • 2 replies
    • 1.2k views
  24. சந்தியா - சிறுகதை அவள் அறிமுக எழுத்தாளர் - புவனா ஸ்ரீதர் விமானம் ஒரு மணி நேரம் தாமதம். அதுவரை மொபைல்தான் துணை. ஃபேஸ்புக்கில் சந்தியா புகைப்படத்துக்கு லைக் போட்ட படி, ‘எப்படி இருக்க வேண்டியவ... அடையாளம் தெரியாத அளவு மாறிட்டா...’ என நினைத்துக் கொண்டேன்.. சந்தியாவைப் பார்க்கத்தான் கனடாவில் இருந்து இந்தியாவுக்கு நானும் என் எட்டு வயது மகளும் பயணப்படுகிறோம். அப்படியே சந்தியாவின் நினைவில் மூழ்கினேன்... இன்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு. சந்தியாவுக்கு பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடன்ட் அவார்ட் கிடைத்தது. கேம்பஸ் இன்டர்வியூவில் இருவரும் ஒரே கம்பெனிக்குத் தேர்வானோம். சந்தியா, வசதியான குடும்பத்தில் ஒரே பெண். என் குடும்பத்தில் நான் வேலைக்குப் போகவேண்…

  25. Started by nunavilan,

    பெரியாத்தா வீட்டுவாசலிலேயேபெரியாத்தாஉட்கார்ந்திருப்பார்.வீட்டுக்கு வருபவர்களின்கண்களில் சட்டென படவேண்டும் என்பதுதான் அவளுடைய திட்டம்.தங்கையின் வீட்டில் வந்து உட்கார்ந்து 5வருடங்கள் ஓடிவிட்டன பெரியாத்தாவிற்கு. தோள் துண்டை குறுக்காக மாட்டிக் கொண்டு பவுடர் பூசிக் கொள்வாள். வீட்டுக்கு வெளியில் போகவும் அனுமதியில்லை. “வாங்க தம்பி! உட்காருங்க” “நான் பெரியாத்தா. என் தங்கச்சி வீடுதான் இது. குளிச்சிக்கிட்டு இருக்கா? இதோ வந்துருவா. உட்காருங்க” “நான் பெரியாத்தா. அப்படித்தான் கூப்டுவாங்க முன்னலாம். நானும் நல்லாத்தான் இருப்பேன். அழகா எலும்பா... என் புருஷன் பத்து வருசத்துக்கு முன்னாடியேசெத்துட்டாருயா” “எப்படி செத்தாருனுத்தானே நினைக்கற?” “எல்லாம் குடிதான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.