கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3082 topics in this forum
-
கள்ள வீசா – ஒரு கனவு May 10, 2022 — அகரன் — பாரிசுக்கு வந்து ஒன்பது வருடமும் 25 நாட்களும் கடந்தபோது எனக்கு அகதி அடைக்கலம் கிடைத்தது. அன்று வெள்ளிக்கிழமை. ஊரில் தூக்கத்தின்போதுநாளொரு கனவு வருவது உண்டு. எப்போது நாடுகளிள் எல்லைகளை கடக்கும் இலட்சியத்தில் இறங்கினேனோ அன்றில் இருந்து எனக்கு கனவு வந்ததாக நினைவில்லை. விதிவிலக்காக இன்று வெள்ளிக்கிழமை அதிகாலைகனவு ஒன்று எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. கனவிற்கும் விசாகிடைத்ததற்கும் சாமி சம்மந்தம் இருக்குமோவென்று யோசித்தேன். ஒரு சாமியுமில்லை. சம்மந்தமுமில்லை. கனவு கண்டெழும்பி அதன் நினைவுகளோடு காலை பத்துமணிக்கு வேலைக்குச் சென்றேன். கனவைப்பற்றி ஏன் சொல்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. அதுவல்ல நான் சொல்ல…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஸ்ரீவத்ஸன் மெடிக்கல் ரிப்போர்ட்டில் இருந்த, உச்சரிக்கக் கஷ்டமான அந்த வார்த்தையை வெறித்துப் பார்த்தான். "Lymphangioleiomyomatosis". சிவப்பு எழுத்துக்களில் இருந்த அந்த வார்த்தையில் எமன் தெரிந்தான். அவன் மனைவி வைஷ்ணவியை அந்த வார்த்தை மூலமாக எமன் நெருங்கிக் கொண்டிருந்தான். டாக்டர் அவனுக்கு அந்த வியாதியைப் பற்றி விளக்க முயன்றது அரையும் குறையுமாகத் தான் அவன் மூளைக்கு எட்டியது. "...இதை LAMன்னு சுருக்கமா சொல்வாங்க. இதுக்கு இது வரைக்கும் சரியான மருந்து கண்டுபிடிக்கலை. இது ஒரு அபூர்வமான வியாதி. இது வரைக்கும் சுமார் 500 கேஸ்களை அமெரிக்காலயும், ஐரோப்பாலயும் பதிவு செஞ்சுருக்காங்க. இப்ப சின்சினாட்டி யூனிவர்சிட்டியில் இதைப் பத்தி ஆராய்ச்சி செஞ்சுகிட்டிருக்காங்க. இந்தியால இது முதல் க…
-
- 0 replies
- 1.4k views
-
-
முள்ளிவாய்க்காலின் மூச்சுக்காற்று… மனிதனால் வீசமுடியாத காட்டுமிராண்டிக் குண்டு வீச்சுக்கள்.. மானிடத்துக்கு விரோதமான படுகொலைகள்… நாகரிக உலகமே வெட்கித் தலைகுனிந்து வெந்து வெந்து சாகவேண்டியளவு பாலியல் வக்கிரங்கள்.. பிணங்களைப் புணர்ந்த பேய்கள்.. உலக சாஸ்திரங்கள் பிணம் தின்றன.. ஐ.நா சாத்திரங்கள் மலம் கொட்டி நாறின.. ஐயோ.. என்ற அலறலுடன்.. வாழ வேண்டிய குழந்தைகள் எல்லாம் செத்து சிதறி.. ஓ..ஓ.. சாவே தலைகுனிந்து நின்றது.. சமஸ்கிருதம்.. சிங்களம்… சீனம்… பாகிஸ்தான்… மொழிகளின் வெற்றிச் சத்தத்தைத் தவிர அங்கு வேறெதையும் கேட்க முடியவில்லை.. சொற்ப நேரத்தில் முள்ளிவாய்க்கால் உறைந்து போனது.. மறுநாள்… எஞ்சிய எலும்புகளை கூட்டி அள்ளி.. எரித்து.. பஸ்ப்ப…
-
- 7 replies
- 1.4k views
-
-
சிந்தனை செய் மனமே! விமான நிலைய லவுஞ்சில் மெதுவாக நடை போட்டுக் கொண்டிருந்த போது தான் அவளைப் பார்த்தான் மூர்த்தி. காயத்ரி மாதிரி இருக்கிறதே?. அவளே தானா? பக்க வாட்டில் அவள் முகத்தைப் பார்த்த போது சந்தேகமாக இருந்தது. டேபிள் ஃபேன் திரும்புவது போல மெதுவாக முகத்தைத் திருப்பினாள். அவள் முகம் பிரகாசமாய்ப் பளிச்சிட்டது. காயத்ரி தான் அவள். செதுக்கிய மாதிரி இருக்கும் அந்த மூக்கும் அளவான நெற்றியும் அவளைத் தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்? எவ்வளவு நாட்கள் காவிரிக் கரையில் எட்ட நின்று அந்த அழகை ஆராதித்திருக்கிறான். அவள் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு நாலு வயது பையன். அவன் உடை வெளி நாட்டு ஸ்டைலில் இருந்தது. முதுகில் "புசு புசு'வ…
-
- 0 replies
- 1.4k views
-
-
அவர்கள் அப்படிதான் / கோமகன் ( பிரான்ஸ் ) 1985 ஆம் வருடம் அதிகாலை இருபாலை சோம்பலுடன் விழித்துக்கொண்டிருந்தது. கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அருகே இருந்த அந்த முகாமும் சோம்பலுடன் இயங்கிக் கொண்டிருக்க உறுமலுடன் நுழைந்து கிரீச் என்ற ஒலியுடன் நின்றது இளம்பிறையன் வந்த டட்சன் பிக்கப். பிராந்தியப் பொறுப்பாளரின் தீடீர் வருகையால் முகாம் பொறுப்பாளன் சிவா உட்பட எல்லோருமே பரபரப்பானார்கள். அவர்களின் பரபரப்பை இளம்பிறையன் உள்ளர ரசித்தாலும் அதை வெளிக்காட்டாது விறைப்பாக முகாமின் உள்ளே நுழைந்தான். இளம்பிறையன் அந்த முகாமின் ஹோலில் இருந்த மேசையில் இருந்து முகாமின் தினக்குறிப்பேட்டை படித்துக்கொண்டிருந்தான். அவனுக்காக தயாரித்த தேநீரை நடுக்கத்துடன் கொண்டு வைத்தான் ஒரு போராளி…
-
- 4 replies
- 1.4k views
-
-
முதலே சொல்லிட்டன் இது கதையில்லை. இதை எங்கை இணைப்பது என்று தெரியாதபடியால் கதைப்பகுதியில் இணைத்துள்ளேன். பிரதீபா (சக்திவேல்) என்றொரு நண்பி கொழும்பில் இருந்தார். அப்பொழுது நாங்கள் உயிர்ப்பு என்றொரு இதழை வெளியிட்டுப் பழகினோம். அதற்கொரு ஆக்கம் கேட்டபோதுதான் சோமிதரன் தன் வாழ்நாள் எழுத்துக்களை ஒரு பைலில் இட்டு “என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்” என்ற ரேஞ்சில் தந்திருந்தார். பிறகது தொலைந்து போய்விட்டது என்று மூன்று வார்த்தைகளில் நான் கடந்து போவது அவருக்கு கடுப்பை ஏற்படுத்தலாம். விதி வலியது கொழும்பு பாடசாலையில் வெளியான ஆண்டு மலரிலேயே கண்கெட்ட பிறகும் சூரியநமஸ்காரம் செய்யலாம் என்று அரசியல் கட்டுரைகள் எழுதத்தொடங்கியிருந்தேன். அதற்குச் சற்று நாட்களின் முன்னர்தான் சந…
-
- 6 replies
- 1.4k views
-
-
மண்மேடாகிற நகரம் ஏ-9 வீதியில் இராணுவ வாகனங்களில் செல்லும் இந்தியப் படைகள், கிராமம் எங்கும் நடமாடிக் கொண்டிருப்பதும் அதிகாலை விடியும்போது கைது செய்யப்பட்டவர்கள் வரிசையில் அழைத்துச் செல்லபடுவதும் துப்பாக்கியுடன் வீட்டுக்கு களவாக வந்துபோகும் ஒன்றுவிட்ட அண்ணாவும் ரெலிகப்படர் வந்து தாக்கிக்கொண்டிருந்த கிளிநொச்சி நகரமும் மிகச்சிறிய வயது ஞாபகங்களாக இருக்கின்றன. போருக்குள் வறுமையும் அப்பவால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்து உறவுகளால் ஒதுக்கி விடப்பட்ட அம்மாவின் துயரமும் மிகவும் நேசத்திற்குரிய தங்கச்சியை வளர்க்கும் நெருக்கடியும் விளையாட்டுத் தனத்துடன் இருந்து கடைசியில் கனவிற்காக இழந்த அண்ணாவும் கிளிநொச்சியும் அகதியாய் அலைந்த பிரதேசங்களும் என்று வாழ்வு கழிந்து கொண்டிக்கிறது.---…
-
- 1 reply
- 1.4k views
-
-
மான்டேஜ் மனசு 15 - நீரில் மூழ்கி காதலில் மீண்ட பறவை! ஒரு மந்தமான மதியப்பொழுதில் ஸ்பென்சர் பிளாசா சரவண பவனில் சாப்பிடப் போகும்போதுதான் யதேச்சையாக சந்துருவை சந்தித்தேன். சினிமா டீமுடன் பேசிக்கொண்டிருந்தவன் என்னைப் பார்த்து கையசைத்தான். ஒரு ஹாய், 2 நிமிட நலம் விசாரிப்புக்குப் பிறகு வருத்தம் படர பேசினான். ''காலேஜ் முடிச்ச 3 வருஷத்துல உருப்படியா எதுவும் பண்ணலை மச்சி. ஃபீல்டுக்கு வராதது இன்னும் பயமா இருக்குடா. அதான் சின்ன கம்பெனி படமா இருந்தாலும் பரவாயில்லைன்னு ஒரு புராஜெக்டுக்கு ஓ.கே. சொன்னேன். 'சீன் சொல்லுங்க பாஸ்'னு சொல்றாங்க. எழுதி கொடுக்கிறேன். ஆனா, பேட்டா மட்டும்தான…
-
- 0 replies
- 1.4k views
-
-
கி.நடராசன் அப்துல் ரவூப் சட்டென விழித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார். யாரோ கதவைத் தட்டியது போல இருந்தது. மங்கலான பச்சை ஒளியில் அவரது மனைவியும், குழந்தையும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருப்பதை கவனித்தார். குழந்தையின் உடலிலிருந்து இனிய பால்மணம் அந்த அறை எங்கும் தாய்மையை நிரப்பிக் கொண்டு இருந்தது. அப்துல் ரவூப் மணியைப் பார்த்தார். நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டி இருந்தது. அப்பொழுது கடப்பாறை கொண்டு வீட்டின் கதவை இடிப்பது போல் பலமாக பலர் சேர்ந்து தட்டுவது கேட்டது. இந்த நடுநிசியில் யார் இப்படி…? கதவை திறக்காவிடில் உடைத்து விடுவார்களோ என்ற பயத்தில் விரைந்து சென்று திறந்தார். அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார் அப்துல் ரவூப். ஒரு பெரிய போலிஸ் பட்டாளமே அங்கே…
-
- 1 reply
- 1.4k views
-
-
[size=6]ஆமிக்காறர் போட்டுக்குடுத்த அம்மாவின் வீடு [/size] Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Tuesday, July 17, 2012 2010...., அம்மா வீட்டிலிருந்து நாட்டுக்காக 4பிள்ளைகளைக் கொடுத்தாள். இன்று அம்மாவுக்காக ஒரு பிள்ளையும் அம்மாவோடு இல்லை. அம்மா உழைச்சுக் கட்டிய கனகபுரம் வீடும் போய் இப்ப பரந்தனில் அம்மாவின் முதிசமான அரை ஏக்கர் வயல் நிலத்தில் ஒரு குடிசைதான் அம்மாவின் வசந்தமாளிகை. 7தகரத்தோடும் ஒரு சின்ன உரப்பையோடும் 2நாளாக காணியில் போயிருந்தாள் அம்மா. ஆண்துணையும் இல்லை ஆட்களின் துணையும் இல்லாமல் தன்கையே தனக்குதவியென்ற முடிவில் புல்லைச் செருக்கி ஒரு பாயை விரித்துப் படுத்துறங்கக்கூடிய அளவுக்குத்தான் நிலத்தைத் துப்பரவாக்கினாள். கதியால் இறுக்கி கிடைச்ச தகரங்களைப்…
-
- 3 replies
- 1.4k views
-
-
மான்டேஜ் மனசு 5 காதல் கொண்டவர்களின் கதை! மனசுக்கு சுகமில்லாதபோது செல்வராகவன் படங்களைப் பார்ப்பது என் வழக்கம். அப்படி ஒரு மழை நாளில்தான் 'காதல் கொண்டேன்' படம் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பிளஸ் 2 முடித்த தருணத்தில் காதல் கொண்டேன் ரிலீஸாகி இருந்தது. படம் பார்த்துவிட்டு வந்த என் அண்ணன் ஈஸ்வரன் 'படம் பிரமாதம்' என்று சொல்லிக்கொண்டிருந்தான். அவ்வளவு சீக்கிரம் எந்தப் படத்தையும் ஓஹோ என சொல்லமாட்டான். வகுப்பறையில் தூங்கிக் கொண்டிருக்கும் தனுஷை எழுப்பும் புரொபசர் , ''அந்த கணக்கை சால்வ் பண்ணு'' என திட்டி தீர்ப்பார். எந்த அலட்டலும் இல்லாமல் கணக்கு போட்டுவிட்டு கடைசி பெஞ்ச்சில் தூங்குவான் தனுஷ் என சிலாகித்துக்கொண்…
-
- 0 replies
- 1.4k views
-
-
நேற்று முதல்… நேரிலும், தொலைபேசியிலும், ஈமெயிலிலும், இன்பாக்ஸிலும் 100க்கும் மேற்பட்ட வாசகவாசகிகள் தொடர்பு கொண்டு, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள், ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் சிமிர்னா தொண்டு நிறுவனம் வெளியிட உள்ள “மனிதம்” நூலுக்காக பகிர்ந்து கொண்ட, இந்த உன்னத நிகழ்வினை, எளிதில் படிப்பதற்கு வசதியாக தட்டச்சு செய்து வெளியிடச் சொல்லி கோரிக்கைகள் வைத்ததைத் தொடர்ந்து இதோ இங்கே அனைவரின் விருப்பப்படியே பதிவாகிறது : எது மனிதம்? அழுகிற விழிகளைத் துடைக்க விரல்களை நீட்டுவதா? பசிக்கிற குழந்தைக்கு பன் வாங்கித் தருவதா? துக்க வீட்டில் பிணம் தூக்கி பூ வீசுவதா? கோடையில் வாசலில் தண்ணீர் பந்தல் வைப்பதா? கிழவி பாதை கடக்க கரம் பிடித்து போக்குவரத்தை நிறுத…
-
- 0 replies
- 1.4k views
-
-
கண்ணனின் தாய் அருந்ததி தனது மகன் கண்ணனைப் பற்றி மிகவும் துக்கப் பட்டுக் கொண்டிருக்கிறாள். இதுவரை அவன் ஒரு நல்ல தமிழ் இளைஞனாக இருந்ததாகவும், தற்போது பல கேள்விகளைக் கேட்டுத் தனது தமிழ் அடையாளத்தை அவன் தேடுவதாக அவளது பேதை மனம் துடிக்கிறது. அவனுடைய பேச்சைக் கேட்டு மகள் கருணாவும் ஏதோ கேட்கத் தொடங்கி விட்டாள். கண்ணனின் குடும்பம் தமிழ் அகதிகளாக லண்டனில் காலடி எடுத்து வைத்தவர்கள். “கடவுள் அருளால் இவ்வளவு நன்றாக இருக்கிறோம். நீங்களும் மற்றவர்கள் மதிக்கத் தக்கதாக வாழ, உயர்ந்த எங்கள் தமிழ் கலாச்சாரம் சார்ந்த பண்பாடுகளை அறிந்து கொள்ளுங்கள். எண்ணங்களை விருத்தி செய்யங்கள். கடவுளை வணங்குங்கள்” என்று தனது இரு குழந்தைகளுக்கும் அடிக்கடி புத்தி சொல்பவள் அவள். ஆணும் பெண்ண…
-
-
- 3 replies
- 1.4k views
- 1 follower
-
-
அவனின் வீடு மதவிற்கு பக்கத்தில் உள்ள ஒழுங்கையினுள் இருந்தது.அந்த மதவடி வீதியில் ஒரு பிலாமரம் அதில் பல பிலாக்காய்கள் காய்த்திருக்கும் இதனால் அந்த இடம் ஆயிரம் காச்சி பிலாவடி என்று ஊரார் அழைத்தனர்.அதற்கு அருகில் வாழும் மக்களையும் ஆயிரம்காய்ச்சி பிலாவடியார் என்று அழைப்பது வழக்கமாகிவிட்டபடியால் இவனையும் அந்த அடையாளம் தானாகவே ஓட்டி கொண்டது. பாடசாலையில் படிக்கும் பொழுது "டே பிலாவடி இங்கே வாடா" என்று வாத்தியார் கூப்பிடுவார் அதை இவன் பெரிதாக கண்டு கொள்வதில்லை,கண்டு கொள்வதிற்கு ஏற்ற மனபக்குவம் அப்போது அவனிற்கு இருக்கவில்லை. உயர்தர பாடசாலை மாணவர்களின் ஒன்றுகூடல் நடைபெற்றது பல பாடசாலைகளிளும் இருந்து மாணவர்கள் வந்து பங்குபற்றினார்கள் இவனுக்கு அருகில் இருந்த யாழகி (யாழ்பாணத்த…
-
- 8 replies
- 1.4k views
-
-
ஸ்லீப்பர் செல்' தீபாவளி! விடிந்தால் தீபாவளி; கையில், மொபைல் போனுடன், ஆழ்ந்த, 'ஸ்லீப்'பில் இருந்த தாண்டவராயனை, அதிரடியாக எழுப்பினாள், மனைவி அலமேலு... ''உங்களுக்கென்ன பெரிய, 'ஸ்லீப்பர் செல்'லுன்னு நெனைப்பா... கையில செல்லை பிடிச்சு, குறட்டை விட்டு தூங்கினுக்கிறீங்க... ராத்திரி, பிரேக்கிங் நியூஸ்ல, அந்த ரிசாட்காரங்களுக்கு ஒரு ஆளு குறையுதுன்னு சொன்னாங்கல்ல... பொழைக்கத் தெரிஞ்ச ஜன்மமாயிருந்தா, எப்படா விடியும்ன்னு தூங்காம காத்திருந்து, விடிஞ்சதும் ஓடிப் போய் ஆதரவு கொடுத்து, தலைவர் தர்றத வாங்கிக்கினு வரும்...'' என்று அர்ச்சித்தவள், ''சட்டுபுட்டுன்னு தலைக்கு ஊத்துகினு, தீபாவளி பலகாரம் சாப்பிட்டுட்டு, ரிசார்ட்டுக்கு ஓடப்பார…
-
- 0 replies
- 1.4k views
-
-
முதலாவது பாகத்தை வாசிக்கப் பின்வரும் இணைப்பில் கிளிக்கவும்! http://www.yarl.com/...howtopic=110495 [size=4]வவுனியா புகையிரத நிலையத்தினுள், ஒரு பெருமூச்சை விட்டவாறு யாழ்தேவி நுழைந்தது.[/size] [size=4]அநேகமானவர்கள், தங்கள் மதியச் சாப்பாடுகளை, இங்கேயே முடித்து விட அவசரப் பட்டனர். வவுனியா தாண்டினால், கையைக்காலை நீட்டிச் சாபிடுவது கொஞ்சம் கடினமாக இருக்கும்![/size] [size=4]பல பெண்கள் போட்டிருந்த தாலிக் கொடிகள், இப்போது கணவர்களிடம் கை மாறின. சில புத்திசாலியான கணவர்கள், தங்கள் உள்ளாடைகளில், ஒரு விதமான இரகசியமான பொக்கட்டுகளைத் தைத்திருப்பார்கள் போலும். அவர்கள் நகைகளை வாங்கியதும்,யாழ்தேவியின் கழிப்பறைக்குள் போய் வந்த படி, இருந்தது அதனை உறுதிப் படுத்திய…
-
- 14 replies
- 1.4k views
-
-
இவன் - அகரமுதல்வன் ஓவியங்கள் : செந்தில் இவனுக்குச் சொந்தவூர் யாழ்ப்பாணம். இரண்டு காதுகளும் கேட்காது. இயக்கம் அடிச்சுத்தான் காது கேட்காமல் போனது. இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு நாட்டிலயிருந்து வெளியேறி சென்னையில இருந்திருக்கிறான். அடுத்த ரெண்டு வருஷம் கழிச்சு களவாய்க் கனடாவிற்குப் போய்த் திரும்ப ஒரு மாத லீவில இப்ப சென்னைக்கு வந்திருக்கிறான். இன்னும் பத்து நாளில கலியாணம். இது இவனுக்கு இரண்டாவது கலியாணம்தான். முதல் மனிசியும் பிள்ளையும் முள்ளிவாய்க்காலில செத்துப்போயிட்டினம். இந்தக் கதையை நான் முடித்துக்கொள்ள சரியாக ஏழரை நிமிடங்கள் ஆகும். கதை நிகழத் தொடங்கிற்று. பத்து நாள்களில் கலியாணப் பந்தலில் மாப்பிளை வேஷத்தோடு இருக்கப்போகிற இவன் சிறைச்சாலையில்தான் என…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஈழத்தில் உருவகக்கதையின் மூலவர் நாவற்குழியூர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப்பகிர்வுநிகழ்வு கடந்த 4ம் திகதி (04.08.2007) அன்று கனடா நாட்டின் ரொரன்ரோ மாநகரில் இடம் பெற்றது. பண்டிதர் சு.வேலுப்பிள்ளையின் (சு.வே) இழப்பு தமிழ்ச் சமூகத்திற்குமான ஒரு வெற்றிடம் “சிறுகதை எழுத்தாளனைவிட ஒரு உருவகக் கதை எழுதுபவன் ஆழமான சிந்தனையாளனாக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்டதொரு ஆழமான பார்வை பண்டிதர் சு.வேயிடம் காணப்பட்டதினால்; அவரை உருவகக் கதையின் பிதாமகராக ஈழத்து இலக்கிய உலகம் இன்றும் மதிக்கின்றது. அத்தோடு ஆசிரியராக, வகுப்பறை கற்பித்தலுடன் மட்டும் நின்றுவிடாமல் கல்வி வெளியீட்டு திணைக்களத்தினூடாக முழுத் தமிழ் தேசியத்திற்கும் கல்வி கற்பித்த பெருமை உடையவர…
-
- 3 replies
- 1.4k views
-
-
வைர விழா (சவால் சிறுகதை) முன் குறிப்பு: மக்களே!!! சவால் சிறுகதையாம். ஏதோ நம்மால முடிஞ்சே இலக்கியப்பணி. சிகப்புல உள்ள வாசகங்கள் இடம் பெற்றிருக்கனுமாம். காமினி கெட்டவள் இல்லையாம். ப்ளாஷ் பேக் எழுதக் கூடாதாம். அப்பப்பா... எவ்வளவு நிபந்தனைகள். விறுவிறுப்பா(அப்படின்னு எனக்கு நினைப்பு) கதை ஒரே நாள்ல நடக்கற மாதிரி எழுதியிருக்கேன். முயற்சி எப்புடின்னு நீங்களே சொல்லுங்க. விடியற்காலை 5:45 மணி: அண்ணா நகர் 18th கிராஸ். சூரியன் மாமனைப் பார்த்து பேசுவோமா வேண்டாமா என்று வெட்கப்பட்ட பெண்போல் தொடுவானத்தில் எட்டிப்பார்த்தது. பால்காரர்களும் பேப்பர்காரர்களும் ஓசோன் காற்றை சுவாசித்தபடி கர்ம சிரத்தையாக வீடு வீடாக பாலிட்டார்கள், பேப்பரிட்டார்கள். "சொத்" என்று கதவில் மோதி படியில் விழுந…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிவா கத்திக் கொண்டிருந்தான்.. 'என்னம்மா பொண்ணு இவ நாம் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பியது கண்டவனையும் லவ் பண்ணவா..... என்ன நினைசிட்டுருக்கா இவ மனசில தங்கச்சின்னு கூட பார்க்க மாட்டேன்... வெட்டி போட்டுடுவேன் ....' நம்ம சாதி சனம் என்ன பேசும்.... அப்போது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கரி.. சிவாவின் மனைவி கல்யாணம் ஆகி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. ஒரே சாதியில் நடந்த திருமணம்....' ''என்ன இவன் கூட பிறந்த தங்கையின் மனதை புரிந்து கொள்ளாமல் இப்படி பேசுகிறானே மனதில் நினைத்துக் கொண்டாள். உள்ளே சிவாவின் தங்கை அழுது கொண்டிருந்தாள். அப்போது சங்கரி உள்ளே வந்தாள்.. அண்ணியை பார்த்தவுடன் கண்களை துடைத்து கொண்டாள். ''அழாதே கண்ணை துடைச்சுக்கோ...காதலிக்கறது தப்பில…
-
- 3 replies
- 1.4k views
-
-
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 01 மெல்ல மெல்லக் கிழக்கு வெளித்துக் கொண்டிருந்த அதிகாலைப் பொழுதில் வேலிக்கரை வேம்பில் ஒரு குச்சியை முறித்து பற்களைத் தீட்டியவாறே தென் கிழக்குப் பக்கமாக காட்டு மரங்களுக்கு மேல் தெரிந்த வானத்தைப் பார்த்தார் பரமசிவம் அண்ணாவியார். அது வழமை போலவே மங்கலான ஒரு நீல நிறத்திலேயே படர்ந்து கிடந்தது. ஆனால் மெல்ல மெல்ல அது செந்நிறமடையும் போதே சூரியன் உதிக்கும் என்பதையும் காட்டுமரங்கள் செவ்வண்ணம் படரும் என்பதையும் அவர் அறிவார். ஆனால் தென்கிழக்குத் திசையின் பற்றைகளும், மரங்களும் அடர்ந்த நிலப்பகுதி சூரியனின் வரவின் பல மணி நேரம் முன்பே கொட்டப்பட்ட குருதியால் சிவந்துபோயிருக்கும் என்றே அவர் கருதினார். முள்ளிக்குளம் பக்கமாக இரவு இரண்டு மணியளவ…
-
- 7 replies
- 1.4k views
-
-
வட் இஸ் திஸ் .! வெரி நைஸ் ..! :- யோகு அருணகிரி June 28, 2013 11:09 am பதிந்தவர் Supes By யோகு அருணகிரி நாட்டில இருத்து படாத துன்பம் எல்லாம் பட்டு பிறந்ததில் தொடங்கி இடம் பெயர்ந்து மாறி மாறி குடிசை போட்டு கறையான் புற்றிலும் பாம்பு புற்றிலும் கரப்பான் பூச்சியுடனும் வாழ்க்கை நடத்திய எமக்கு வெளிக்கிட்டு வெளிநாடு வந்து ஒரு ஐந்துவருடம் போயிட்டா நாங்க காட்டுற அலப்பாரை இருக்கே தாங்கமுடியாது பாருங்கோ … மார்க்கிலதான் உடுப்பு போடுவம் சப்பாத்து போடுவம் விலை உயர்ந்த போன்தான் பாவிப்பம் …. பொரும்பாலும் தமிழை தவிர்ப்பம் …. தெரியுதோ தெரியாதோ இங்கிலுசுதான் கதைப்பம் நோ ..யெஸ் ..யா..சோ .வெள்ளையைவிட நாங்கதான் அதிகமா பாவிப்பம் பாருங்கோ . இப்படி ஒரு குடும்பம் நமக்கு பக்கத்தில் இருக்குற…
-
- 5 replies
- 1.4k views
-
-
காதல் பற்றிய உங்களது தனிப்பட்ட கருத்தக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி. பிரியன்.
-
- 2 replies
- 1.4k views
-
-
தீபச்செல்வன் கிரிஸ் மனிதர்கள் என்கிற இரத்த பூதங்கள் இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் சிறுபான்மை இன மக்களை அச்சுறுத்தும் கிரிஸ் மனிதர்கள் எனப்படும் அரச பூதங்கள் நடமாடி மக்களின் இயல்பு வாழ்வைத் தின்று வருகின்றன. முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் இந்த பூதங்கள் இரத்தம் குடிக்கும் நோக்குடன் அப்பாவி மக்களை இலக்கு வைத்துள்ளன. யுத்தம் மூலம் லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களைக் கடித்துக் குதறி சனங்களின் இரத்தத்தை இந்தப் பூதங்கள்தான் குடித்தன என்பதை நிரூபிக்கும் விதமாகத் தொடர்ந்து இரத்தப்பசியுடன் அலைகின்றன. உலகம் மிக நவீன கண்டுபிடிப்புகளால் வளர்ந்துள்ள நிலையில் அதன் செல்வாக்குடன் ஈடுகொடுக்கத்தக்க நிலையில் நகரும் இலங்கை நாட்டில் மனிதர்களைக…
-
- 1 reply
- 1.4k views
-
-
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ஒரு ஓய்வான பொழுதில் சகோதர (சிங்கள) மொழி கன்சல்டன்ட் சொன்னார். பழைய காலத்தில் மக்களிடம் (சிங்களவர்) ஒரு வழக்கம் இருந்ததாம்! ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பி இருவரும் ஒரே பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதுதான் அது! சும்மா கதை விடுதா பயபுள்ள? -அதிர்ச்சியுடன் சந்தேகமாகப் பார்க்க, புரிந்து கொண்டு சொன்னார். காட்டுப் புறங்களில் விவசாயம் செய்யும் போது வீடும், விவசாய நிலமும் அதிக தூரத்தில் இருக்கும். இரவில் காட்டு விலங்குகள் காரணமாக பயிர் நிலத்தைக் கண்காணிக்க வேண்டும். அதே நேரத்தில் வீட்டில் மனைவி தனியாக! அப்போ வேறு ஆண்கள் இடையில் வந்துவிடாமல் மனைவியை ஒருத்தரும், பயிர்நிலத்தை ஒருத்தரும் மாறி,மாறி!? ஏன் இரண்டு பேரும்…
-
- 1 reply
- 1.4k views
-