துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
நீண்ட காலமாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் பத்தி எழுதாளராக விளங்கிய நண்பி சாந்திக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்... [சமூகவியல் ஆய்வாளரும் பெண்ணியலாளரும் பத்தி எழுத்தாளருமான சாந்தி சச்சிதானந்தம் காலம் ஆகினார்:] அரசியல் விமர்சகரும், சமூகவியல் ஆய்வாளரும், பெண்ணியல் வாதியுமான சாந்தி சச்சிதானந்தம் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழலை காலமானார். நீண்டகாலமாக சுகயீனமடைந்திருந்த நிலையிலும், சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டியதுடன் சமகால அரசியல் நிலைமைகளையும் நாளேடுகளில் விமர்சித்து வந்தார். கொழும்பு – 07 டொரின்டன் அவனியுவிலுள்ள விழுது மேம்பாட்டு மையத்தின் ஸ்தாபகரும், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பதவிவகித்த அவர், ஐக்கிய நாடுகள் சபையிலும் ஆரம்பகாலங்களில் பணியாற்றியிரு…
-
- 19 replies
- 2.9k views
-
-
எனது அத்தான் - என் அப்பாவின் அக்காவின் மகனும், எனது மூத்த அக்காவை திருமணம் செய்த எங்கள் சொந்த மச்சானும் ஆகிய திரு தம்பு சுப்பிரமணியம் நேற்று இலங்கையில் காலமானர். எனது 5 வயதிலேயே அப்பாவை இழந்த எனக்கும் எங்கள் குடும்பத்தையும் தனது சொந்த உறவாக கவனித்து வந்தவரின் இழப்பு எங்கள் குடும்பத்தை நிலைகுலையச் செய்துவிட்டது. இன்னமும் நானும் எங்கள் குடும்பமும் அவரின் இழப்பை தாங்கமுடியாமல் தவிக்கின்றோம். இந்தத் துயரச்செய்தியை எனது யாழ் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
-
- 37 replies
- 3.2k views
-
-
அப்துல் கலாமின் இறப்பும், தகர டப்பாக்களின் சப்தமும் / மு. கோபி சரபோஜி ( சிங்கப்பூர் ) கடந்த 27.07.2015 ல் அப்துல் கலாம் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி எட்டியதும் தங்கள் வீட்டுத் துயரமாக நினைத்து பகிரப்பட்ட துக்க நினைவுகளோடு விமர்சனம் என்ற பெயரில் சில தகர டப்பாக்கள் போட்ட சப்தங்கள் அவர்கள் நினைத்ததைப் போல ஒன்றையும் புரட்டிப் போட வில்லை. அவர்கள் பாசையிலேயே சொன்னால் ஒரு மயிரையும் புடுங்கவில்லை. இறந்த ஒருவரை ஏன் விமர்சனம் செய்யக் கூடாது? இறந்தவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? அவரின் செயல்பாடுகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன? இந்த மூன்று கேள்விகளை மட்டுமே முன் வைத்து எழுதப்பட்ட பெரும்பாலான விமர்சன வாந்திகளை எடுத்தவர்கள் தங்களைச் செல்வாக்கு மிக்கவர்களாக, தங்களின…
-
- 0 replies
- 590 views
-
-
நம்பவே கடினமான செய்திகள்.. முகநூலில்.. யாழ் இந்து இணையத்தில்.. படிக்கக் கிடைத்தது. யாழ் மத்திய கல்லூரி மற்றும் ஐங்கரன் சேரின் (ஐங்கரநேசன் வட மாகாண சபை அமைச்சர்) யுனிவேர்சல் தனியார் கல்வி நிறுவனம் உட்பட சிலவற்றில் கல்வி கற்பித்த.. விஞ்ஞான ஆசிரியர் பாலா மாஸ்டர் (செம பகிடி விடுவார்) கடந்த மாதம் (ஜூலை 2015) இறைவனடி சேர்ந்து விட்டதாக யாழ் மத்திய கல்லூரி முகநூல் பக்கத்தில் இருந்து அறியக் கிடைக்கிறது. மதிப்புக்குரிய ஆசான் பாலசுப்பிரமணியம் என்ற பாலா சேருக்கு ஆழ்ந்த இரங்கல்களும்.. அவரின் ஆத்மா நித்திய சாந்திய அடைய பிரார்த்தனைகளும். மேலும்.. யாழ் இந்துக் கல்லூரி (2013 இல் இருந்து வேம்படிக்கு இடமாற்றப்பட்டிருந்தவர்) விலங்கியல்/உயிரியல் ஆசிரியர் பாஸ்கரன் அவர்களும் கடந்த ஆண்டி…
-
- 4 replies
- 1.9k views
-
-
அண்ணல் கலாம் மறைந்தார் அவனி அழுகிறது. காலா கலாமைக் கவர்ந்தது ஏன் எங்களுக்கம் மேலாம் அறிஞனினி வேண்டாமென்றெண்ணினையோ! கண்ணிழந்த காலன் கலாமை எடுத்து விட்டான் அண்ணலை எங்கள் அரிய தமிழுறவை எண்ணியிருந்து எண்பத்தி மூன்றகவை காணப்பறித்த தறு கண்ணாளன் தோற்கானா? எத்தனை பேர் இன்னும் இப்புவியில் தொண்ணூறை தாண்டியும் வாழ்கின்றார் தறி கெட்ட காலனுக்கேன் இத்தனை வன்மம் எம் தமிழத்தாய் பெற்றெடுத்த சொத்தினை எங்கள் சோதியைப் போயேன் பறித்தான் அறிவியலே உந்தன் ஆற்றல் இதுதானா? குறிவைத்து இந்தக் குவலயத்தில் நல்லோரை தட்டிப் பறிக்கும் தரம் பாராக் காலனை ஏன் எட்டியுதைக்க இன்னும் வழிகாணாய் ஐஸாக் நியூட்டனைப்போல் ஐன்ஸ்டீன் அறிஞனைப்போல் அறிவியலுக்காய் வாழ்ந்த அப்துல் கலாம் எங்கள் அன்னை தமிழின் அரு…
-
- 23 replies
- 2.7k views
-
-
-
- 31 replies
- 10.5k views
-
-
-
- 7 replies
- 722 views
-
-
நாதஸ்வரமேதை இசைப்பேரறிஞர் சாவகச்சேரியூர் கே.எம்.பஞ்சாபிகேசன் 26.06.2015 இன்று அதிகாலை 12.20 மணியளவில் கொழும்பில் காலமாகிவிட்டார். இறக்கும் போது அவருக்கு வயது 91. அவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை சாவகச்சேரியில் நடைபெறவுள்ளன. ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இருந்து சாவகச்சேரிக்குப் பூதவுடல் எடுத்துவரப்படவுள்ளது. திங்கட்கிழமை அவரது சாவகச்சேரி சங்கத்தானையில் உள்ள வீட்டில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன. தென்மராட்சியின் இசை முகவரியாகத் திகழும் இசைப்பேரறிஞருக்கு எங்கள் இதயபூர்வமான அஞ்சலி உலகளாவிய ரீதியில் புகழடைந்த பஞ்சாபிகேசன் அவர்கள் 01.07.1924 ஆம் ஆண்டு தவில்வித்துவான் முருகப்பாபிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதியினரின் மூத்த புதல்வராய்ப் பிறந்தார். இவரது சகோதரன் நடராஜ சு…
-
- 4 replies
- 1.1k views
-
-
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவானந்தன் அவர்கள் 22-06-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
-
- 3 replies
- 731 views
-
-
நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்று.. 2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும். யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார். நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர். இவரது…
-
- 4 replies
- 582 views
-
-
சக கள உறவு அஞ்சரனின் உறவின் அகால மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகிறோம். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். மாணவிக்கு கண்ணீரஞ்சலி.
-
- 38 replies
- 3.9k views
-
-
பிரபல எழுத்தாளர் பூநகரான் குகதாசன் மாரடைப்பால் மரணம்! [Tuesday 2015-04-28 20:00] பூநகரான் என்னும் புனைபெயரில் ஊடகங்களில் சமுக மற்றும் அரசியல் ஆய்வு கட்டுரைகளை எழுதிவந்த குகதாசன் பொன்னம்பலம் அவர்கள் கனடாவில் மாரடைப்பால் காலமானார். ஏயர் கனடா(Air Canada ) விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றியவரும், இலங்கையில் தபால் அதிபராக தபால் திணைக்களத்தில் பணியாற்றியவரும், எழுத்தாளரும் கவிஞருமாக சமூகத்தில் நன்கு அறியப்பட்டவரும் கனடா உதயன் பத்திரிகையின் தொடர் எழுத்தாளருமான “ பூ ந க ரா ன் கு க தா ச ன்” நேற்று கனடாவின் மேபிள் ( Maple) நகரில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அனைத்து நண்பர்களுக்கும் அறியத்தருகின்றோம். …
-
- 10 replies
- 1.3k views
-
-
சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில்:- இலங்கையின் பிரதான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு தினமாகும். பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில், பம்பலப்பிட்டியில் வைத்து கடத்தப்பட்டு பாராளுமன்றத்திற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1959, ஆகஸ்ட் 11, ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பில் பிறந்த சிவராம் தராகி என்ற பெயரில் த ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989இல் தன் முதல் கட்டுரையை எழுதினார். அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவாக…
-
- 12 replies
- 1.6k views
-
-
பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. இஸ்லாமிய, திராவிட இயக்கப் பாடல்கள் பாடியதன் மூலம் புகழ் பெற்றவர் நாகூர் ஹனிபா. 11-ஆம் வயதில் பள்ளிக்கூடத்தில் பாட ஆரம்பித்த நாகூர் ஹனிபா திருமண வீடுகள், மேடைக்கச்சேரி என்று தொடர்ந்து பாடினார். கடந்த 65 ஆண்டுகளில் 5000-க்கும் மேற்பட்ட திருமண வீடுகளில் பாடியுள்ளார். தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக நாகூர் ஹனிபா உயிர் பிரிந்தது. மூலம்-தமிழ் இந்து .
-
- 30 replies
- 7k views
-
-
ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் இன்று (புதன்கிழமை) உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. 1950-ம் ஆண்டு இலக்கிய வாழ்க்கையை தொடங்கிய ஜெயகாந்தன் தன் படைப்புகளால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இலக்கிய நண்பர்களால் ஜே.கே என்று அழைக்கப்பட்டவர். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படத்துறை என ஜெயகாந்தனின் படைப்புலகம் பரந்து விரிந்தது. ஜெயகாந்தன் எழுதிய கதைகளை வைத்து, 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'ஊருக்கு நூறு பேர்' ஆகிய மூன்று திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. 'உன்னைப்போல் ஒருவன்', 'யாருக்காக அழுதான்', 'புதுச்செருப்பு கடிக்கும்' ஆகிய மூன்று படங்களை ஜெயகாந்தன் இயக்கினார். கடந்த 2002- ம் ஆண்டு இலக்கிய உலகின்…
-
- 29 replies
- 9.5k views
-
-
கமலினி செல்வராஜன் காலமானார் இலங்கை தமிழ் கலைத்துறையில் பல்துறைக் கலைஞராக திகழ்ந்த கமலினி செல்வராஜன் காலமானார். தமிழ் நாடகம், திரைப்படத் துறைகளில் திறமையான நடிகையாகவும் வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பாளராகவும் விளங்கிய கமலினி கடுமையான சுகயீனமுற்றிருந்த நிலையில் காலமானார். ரூபவாஹினியில் ஒளிபரப்பான அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், கே. எஸ். பாலச்சந்திரன் எழுதிய 'திருப்பங்கள்', எஸ். ராம்தாசின் 'எதிர்பாராதது', எஸ். எஸ். கணேசபிள்ளை எழுதிய 'சமூக சேவகி' போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். கமலினி செல்வராஜன் ரூபவாஹினியிலும், ஐ.ரி. என். தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி வந்தார். இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர…
-
- 29 replies
- 7.4k views
-
-
இலங்கை இரசாயனவியல் பட்டையக் கல்வியகத்தின் முதன்மையாளராகவும்.. கொழும்பு.. யாழ்.. றுகுணு.. திறந்த பல்கலைக்கழகம்.. பேராதனை.. சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய இரசாயனவியல் பேராசிரியர்.. Prof. J.N.O Fernando புற்றுநோய் காரணமாக அண்மையில்.. இயற்கை எய்தியுள்ளார். இவர் பப்புனிகினியாவிலும் கல்வி கற்பித்துள்ளார். இவர் கொழும்பு பல்கலைக்கழகம்.. மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி பழைய மாணவராவார். குறுகிய காலம்.. இவரின் ஆசிரிய சேவையில் கல்வி பெற்றவன் என்ற வகையில்.. கண்ணீரஞ்சலிகள். மிகவும் அமைதியான குணம் கொண்ட நல்லதொரு ஆசான். (RIP)
-
- 1 reply
- 720 views
-
-
யாழ்கள உறவு சுமேரியர் அம்மா (நிவேதா உதயன் ) அவர்களின் தந்தையார் ஜெர்மனியில் இன்று காலமாகிவிட்டார். அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பதுடன் துயரிலும் பங்குகொள்கிறேன்.
-
- 82 replies
- 12.3k views
-
-
கி பி அரவிந்தன் அவர்கள் இன்று காலை காலமாகி விட்ட துயர செய்தி கிடைத்தது 70 களில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சிவகுமரோடு தீவிரமாக இயங்கிய சிலரில் இவரும் ஒருவர் .பின்னர் ஈழப்புரட்சிகர அமைப்பின் மைய உறுப்பினராக இருந்து நீண்டகாலம் செயற்பட்டவர். 1977 இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டு சில காலம் சிறையில் இருந்தவர். பாலம் இதழின் வெளியீட்டிற்காக தமிழகத்தில் இருந்து பங்களித்தவர். புலம்பெயர்ந்து பிரான்ஸில் இருந்த சுந்தர் இறுதிவரை அங்கே குடியுரிமை பெறாமல், அதற்காக விண்ணப்பிக்காமல் வாழ்ந்தவர். அப்பால் தமிழ் என்ற இணையத்தளத்தை இயக்கியவர். அதற்கு முன் மௌனம் என்ற இலக்கிய இதழை நண்பர்களுடன் இணைந்து வெளியிட்டார். பல கவிதை நூல்களை வெளியிட்ட கி.பி.அரவிந்தனின் அண்மைய நூல் பிர…
-
- 34 replies
- 4k views
-
-
புல்லாங்குழல் மேதையும் மருத்துவருமாகிய டாக்டர் தியாகராஜா கெங்காதரன் காலமானார் . தியாகராஜா சுகிர்தம் தம்பதியரின் மூத்தமகனாக 1929 ஆம் ஆண்டில் பிறந்த கெங்காதரன் கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவர் ஆவார். பள்ளிப் படிப்பில் தேறி மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவாகி 1953இல் மருத்துவராக அரச சேவையில் இணைந்தார். பத்தாண்டுகள் அரச சேவையில் பணியாற்றி பின்னர் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். தொடர்ந்து மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை, மானிப்பாய் கீறீன் ஞாபகார்த்த வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகளில் யாழ். மக்களுக்காகத் தனது சேவையை வழங்கினார். வண்ணார்பண்ணையில் தனது வைத்திய நிலையம் ஒன்றை நிறுவியும் சேவை நல்கினார். . 1995 இ…
-
- 21 replies
- 1.7k views
-
-
மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவரும் பள்ளிப் பருவம் முதல் இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றியவரும் .தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர். இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல், பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்த மாபெரும் மனிதர் ஆவார். இனவாத அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்த போதிலும், தாயகத்திலும், இந்தியாவில…
-
- 4 replies
- 673 views
-
-
யாழ்க்கள உறவும், NOW-WOW நிர்வாகியும், கடந்த தவணையில் நாடுகடந்த அரசின் மாசாசுசெட் மானிலத்தின் பிரதிநிதியுமான சுபா சுந்தரலிங்கத்தின் தந்தையாராகிய சுந்தரலிங்கம் தம்பிமுத்து 17 பெப்ரவரி 2015திலன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். விபரங்கள். திரு சுந்தரலிங்கம் தம்பிமுத்து பிறப்பு : 28 ஓகஸ்ட் 1936 — இறப்பு : 17 பெப்ரவரி 2015 யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை மூர்த்த நயினார் கோவிலடி, ஐக்கிய அமெரிக்கா Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் தம்பிமுத்து அவர்கள் 17-02-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். நிகழ்வுகள் பார்வைக்கு திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/02/2015,…
-
- 23 replies
- 2.2k views
-
-
-
- 7 replies
- 678 views
-
-
வடக்கு மாகாணசபை உறுப்பினர் கனகசுந்தரசுவாமி காலமானார் FEB 17, 2015 | 18:16by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தரசுவாமி (வயது-67) இன்று மாலை யாழ்ப்பாணத்தில் காலமானார். நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்றுமாலை அங்கு மரணமானார். முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம சேவையாளராக கடமையாற்றி ஓய்வுபெற்ற கனகசுந்தரசுவாமி, கடந்த 2013 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் முல்லைத்தீ…
-
- 8 replies
- 604 views
-
-
அஞ்சலிகள்
-
- 24 replies
- 1.4k views
-