Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. அன்பு நண்பர்களே, ஈழப் போராட்டத்தினை பற்றி எம் தமிழக இளைஞர்கள் எந்த அளவு அறிவுடையவர்களய் உள்ளார்கள் என அறிய விரும்பி கீழ்கண்ட ஓர் மின் அஞ்சலை என் நண்பர்களுக்கு அனுப்பினேன். இது குறித்து ஓர் விவாதத்தை அவர்களிடம் ஏற்படுத்தி, ஈழ ஆதரவை வளர்க்கவேண்டும் என்பதே என் முயற்சி. அன்பு நண்பர்களுக்கு வணக்கம் , இலங்கை நாட்டில் உள்ள நம் தமிழ் சகோதரர்கள் அனுபவிக்கும் துயரங்ககளை குறித்தும், அவர்களது துயர் துடைக்க போராடும் விடுதலை புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் ஓர் விவாதத்தை தொடங்கிட விழைகிறேன். கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் கொண்டுள்ள நிலைப்பாடுகளை இவ்விவாதத்தில் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அ. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசால் நிகழ்த்தப்படும் …

  2. மாவீரர்கள் கண்ணுறங்கும் தாயக மண்ணில் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியாத ஒரு காலப் பகுதியில் அந்த மாவீரர்களின் கல்லறைகளைத் தாங்கியதாய் இணையத் தளமொன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது. மாவீரர்கள் குறித்த விபரங்கள் அடங்கிய இந்தத் தளம் விரைவில் அனைவரும் சென்று விளக்கேற்றி வணக்கம் செலுத்தக் கூடிய வகையில் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. மாவீரர்களது விபரங்கள், மாவீரரான திகதி, இடம் உள்ளிட்ட பல தகவல்களுடன் தொகுக்கப்பட்டு வரும் இந்த இணையத்தளத்தில் குறித்த மாவீரர் பற்றிய தகவல்களைத் தேடும் வசதி உள்ளிட்ட பல வசதிகளும் இணக்கப்பட்டுள்ளன. 1995ம் ஆண்டு முதல் தாயக விடுதலை நோக்கிய தகவல்களுடன் இயங்கி வரும் www.eelamweb.com என்ற இணையத்தளமே மாவீரர்கள் தகவல்களைத் தாங்கிய இணையத்தளமாக மாற்றம…

  3. எழில் மிகுந்த இலங்கை மாதாவின் வடபகுதியின் பிரதான நகரம் யாழ்ப்பாணம். இம் மாவட்டத்தின் தெற்குப் பகுதியாக அமைந்துள்ள சாவகச்சேரி தொகுதியைக் கொண்ட பகுதி தென்மராட்சியாகும். தென்மராட்சியின் தென் மேற்குப் பகுதியில் சுமார் 6 கி.மீற்றர் தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் கைதடி நாவற்குழி தெற்குப் பகுதியாகும். இதன் எல்லைகளாக கிழக்குப் பகுதி தென்னஞ்சோலைகளாலும் மறவன்புலோ மேற்கும், தெற்கு கடலாலும், மேற்கு தென்னஞ் சோலையும் பனைவளமும் கொண்டதாகவும் இயற்கை எழில் கொண்ட பசுமை நிறைந்த பகுதிகளாகவும் அமைந்துள்ளன. இக்கிராமம் கைதடி நாவற்குழி தெற்காக இருந்தாலும் கோவிலாக்கண்டி என்றால் தான் அநேகருக்கு தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. கைதடி நாவற்குழி தெற்கு மக்கள் அநேக காலமும் தாமும் தன்பா…

  4. இலங்கை இராணுவம் அண்மைய நாட்களாக மக்கள் மீது எரிகுண்டுகளை வீசிவருவதாக வெளியான செய்திகள் குறித்து ஏற்பட்ட குழப்பங்களையும், இந்த எரிகுண்டுகள் என்றால் என்ன? அவை எவ்வாறு தொழிற்படுகின்றன? அதன் தாக்கங்கள் என்ன? அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? என்பதுபற்றியான ஓர் அலசலினை இங்கு பார்ப்போம். பொஸ்பரஸ், இது ஓர் ஆவர்த்தன அட்டவணையில் அணுஎண் 15 கொண்ட ஓர் மூலகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அணு நிறையானது 30,9738 g.mol -1. இது விஞ்ஞான ரீதியான தகவல். இது தவிர நாம் பார்ப்போமானால் இந்த பொஸ்பரஸின் தன்மை பற்றி சிறிது அவதானிக்கவேண்டும். இந்த பொஸ்பரஸ் ஆனது வளி அதாவது ஒக்சிசன் படுமிடத்து எரியக்கூடிய தன்மை உள்ளதனால் இது எப்போதும் நீரில் இட்டே பாதுகாக்கப்படும். இது பலவகைப்படும் அதாவது…

  5. நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை என்பது 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில்மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 18ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் 'புக்காரா' விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது மொத்தம் 39 பேர் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 ப…

  6. மக்களின்அவலங்கள் தொடர்பான காட்சிப்பதிவுகள் புதிய காட்சிப்பதிவுகள் இணைகபட்டுக்ள்ளது இங்கே அழுத்தவும் உங்களிடமுள்ள காட்சிபதிவுகளை sumbit என்ற பகுதியில் இணைக்கவும் ( http://tamilsweet.com/livetamil/submit.php...bmit&part=1 ) நன்றி www.Tamilsweet.com

    • 7 replies
    • 6.2k views
  7. இருபத்தியொராம் நூற்றாண்டின் முதன்மை அடையாளமாக இனத்தேசியம் (ETHNIC NATIONALISM)ஏற்றுக்கொள்ளப் படுகின்றது. பெரும்பாலான உள்நாட்டுப் போர்கள் இன விடுதலைக்காகவே நடைபெறு கின்றன. பல்லின நாடுகளில் எண்ணிக்கை யில் கூடிய இனம் சிறுபான்மையினரை அடக்கி ஆள விளையும்போது விடுதலைப் போர் வெடிக்கின்றது. சிங்கள இனத்தவர் தம்மை 'மகா ஜாதிய' என்றும் தமிழரை 'சுளு ஜாதிய' என்றும் அழைக்கின்றனர். இதே துவேச மனப்பான்மை வேறுபல நாடுகளிலும் காணப்படுகிறது. ' வெள்ளை நிறவெறி' உடற் தோல் அளவு ஆழமானது. சிங்கள இனவெறி உடலை ஊடுருவி ஆன்மாவரை செல்கிறது', என்றார் முன்னாள் கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் சி.கதிரவேற்பிள்ளை. சிங்கள அரசியல் கட்சிகளுக்கிடை யில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை முன்னெடுக்கும் போட்டாபோட்டி நடக்க…

    • 7 replies
    • 1.8k views
  8. ""பாய பதுங்கும் புலிகள்...."" இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் பாரிய திட்டமிடலுடன் திரளாக பல பட்டாலியன் படையணிகளோடு களமுனையை திறந்து சமராடி அந்த பகுதியை ஆக்கிரமிக்கின்ற பொழுது அதை அதற்கமைவாக தக்க வைத்து கொள்ள வேண்டும். அதற்காண விநியோகங்கள் தடையின்றி நிகழ்த்த படவேண்டும் அப்பொழுதுதான் அந்த படைகளின் இருப்பை நிலை நிறுத்தி கொள்ளலாம் ஆனால் அது சாத்தியமா என்பதுதான் கேள்வி...? விடுதலைப் புலிகள் விட்டு வெளியேறிய பிரதேசங்களை பல உயர் படையணி கட்டளை தளபதிகள் விசேடமாக அங்கு பணியாற்றி அந்த பிரதேச வேறுபாடுகள் சாதக பாதக வழிமுறைகளை முன்கூட்டியே தெரிந்து பார்த்தறிந்து வடக்கு நோக்கி திரும்பியிருந்தார்கள். இவை முன்கூட்டியே தேசிய தலைமையினால் ஒருங்கிணக்கப்பட…

  9. தயவு செய்து யாரிடமாவது தமிழீழத் தேசிய கீதம் (சுதா ரகுநாதன் பாடியது) இருந்தால் அதனை அல்லது அதன் திரியை இணைக்க முடியுமா?

  10. பெப்ரவரி 4 ஆங்கில ஏகாதிபத்தியம் இலங்கை எனும் தீவை விட்டு வெளியேறிய பின் இனவெறி பிடித்த சிங்கள பேரினவாதம் காலுன்றி இன்றுடன் 58வது வருடத்தை அடைகின்றது. காலத்திற்கு காலம் தமிழ் மக்கள் வேட்டையாடப்படல், தமிழர்களின் பூர்வீக நிலங்கள் குடியேற்றங்கள் எனும் பெயரினால் அபகரிக்கப்படல், தமிழர்களின் கலை/கலாச்சார விழிமியங்கள் அழிக்கப்படுவதுதான் இந்த இரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கும் தீவின் 58 வருடகால சரித்திரம்!!! இந்த இரத்தம் தோய்ந்த 58வது அகவையே, இலங்கை என்பது "ஒரு நாடு" என்ற சொல்லை மாற்றும் ஆண்டாகவும் முடியப் போகிறது!!! 58 வருட இனவாதத்திற்கு முடிபு கட்டும் ஆண்டாகவும் அமையப் போகிறது!!! 58 வருட அடக்குமுறையிலிருந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கப்போகும் அந்நன்னாள் வெகுதூரத்திலில்லை.

  11. வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதியில் இருந்து வெளியேறிச் சென்று - நேற்று இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை பணயக் கைதிகளாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனக் கொலைத் தாக்குதலில் இன்று 1,496 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 476 பேர் சிறுவர்கள். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரவலம் அங்கு நிகழ்வதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 2.6k views
  12. [size=4][/size] *தமிழீழ மாவட்டங்கள் {1}யாழ்ப்பாணம் {சப்ததீவுகள் உட்பட} {2}மன்னார் {3}கிளிநொச்சி {4}வவுனியா {5}திருகோணமலை {6}மட்டக்களப்பு {7}அம்பாறை {8}புத்தளம் {9}முல்லைத்தீவு *தமிழீழ உட்கட்டுமான அமைப்புகள் வழங்கற் பிரிவு மருத்துவப் பிரிவு கொள்முதல் பிரிவு பரப்புரைப் பிரிவு தமிழீழப் பொறியியற்றுறை வெடிபொருள் தொழில்நுட்பப் பிரிவு கணிணி தொழில்நுட்பப் பிரிவு இலத்திரனியல் தொழில்நுட்பப் பிரிவு போர்கருவித் தொழிற்சாலை தமிழீழ இராணுவ விஞ்ஞானக் கல்லூரி விடுதலைப்புலிகளின் ஆங்கிலக் கல்லூரி திரைப்பட , புத்தக மொழிபெயர்ப்புத் துறை புலனாய்வுத் துறை தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியற்றுறை தமிழீழ விளையாட்டுத் துறை தமிழீழக் க…

  13. வாகரையை இராணுவம் கைப்பற்றிய பின்னர் Channel 4 வில் வந்த ஒரு விபரண வீடியோ. தமிழீழ பிரதேசம் பற்றியும், கருணா குழு பற்றிய குற்றச்சாட்டுக்களையும் வீடியோவில் கொண்டு வந்து ஒரு அலசலை செய்து இருந்தார்கள்.. http://www.channel4.com/player/v2/asx/show...=show:4814:6106 பார்க்க முடியவில்லை எண்றால்... http://www.channel4.com/news/special-repor...age.jsp?id=4515

  14. தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மே 5-ம் தேதியன்று 37-வது அகவையில் கால் பதிக்கிறது. 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (எல்.ரி.ரி.ஈ) 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கினார். தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பா…

  15. பூநகரி என்ற இடத்தின் பெயர் ஓரளவு பிரபலமானது. இப்போது பாதை திறப்பு விவகாரத்திலும் அடிபடத் தொடங்கியுள்ளது இப்பெயர். நீண்டகாலமாக சிங்களப்படைகளின் வசமிருந்த இந்நிலம் தற்போது தமிழர் சேனையிடமுள்ளது. பூநகரி கூட்டுப்படைத் தளத்தின் மீது புலிப்படை நடத்திய மிகப்பெரும் பாய்ச்சலொன்றின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவுநாள் நேற்றாகும். பூநகரியில் சிங்களப்படைகளிருந்தபோது அப்படைமுகாம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக முற்றுகைக்குள்ளாகியிருந்த காலத்தில் குடாநாட்டை இறுக்கியிருந்த படைத்தளங்கள் இரண்டு. ஆனையிறவு ஒரே தரைவழிப்பாதையை இறுக்கியிருந்தது. கடல்வழியான மாற்றுப்பாதையும் இறுக்கி யாழ்.குடா மக்களை இக்கட்டிலாழ்த்தியது பூ…

  16. லங்கையில் தொடரும் போரும் இனத்துவ முரண்பாடுகளும் இலங்கை வாழ் மக்களின் வாழ்வை மிக மோசமான அவலத்திற்குள் தள்ளிஉள்ளது. இதன் விளைவால் தினமும் மக்கள் படுகின்ற துயரங்கள் இங்கு "மனித இருப்பை" பெரிதும் கேள்விக்குட்படுத்தி விட்டுள்ளது. "மூதூர் வெளியேற்றம்" தொடர்பான இச் சிறு நூலைத் தொகுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வாகரையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை அண்மித்து நிகழ்ந்த சம்பூர் பிரதேச மக்களின் வெளியேற்றமும், அவர்கள் மீளவும் சம்பூர் பிரதேசத்திற்கு திரும்பிச்செல்ல முடியாமல், தற்போதும் நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்து வருவதும் பெரும் மனித இடப்பெயர்வுத் துயரங்களாகவே உள்ள…

      • Like
    • 7 replies
    • 1.3k views
  17. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதி…

  18. முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது கடும் தாக்குதல்; பல நோயாளிகள் பலி; பலர் படுகாயம் காணெளி Get Flash to see this player. Watch "SL Navy Attack on Mullivaikal Hospital 1 29.04.2009 " Get Flash to see this player. Watch "SL Navy Attack on Mullivaikal Hospital 2 29.04.2009 "

    • 7 replies
    • 3.3k views
  19. தொடரும் இக்கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களினால் படைக்கப்பட்டதுடன், 2002ல் தலைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டு வெளியானது. முதன் முதலில் வெளியான ஆண்டு: 2012இற்கு முன்னரே. மூல வலைத்தளம்: அறியில்லை மூல எழுத்தாளர்: வர்ணகுலத்தான் 1975 சித்திரைமாத முதல்வாரத்தில் தான் முன்னெப்பொழுதும் பழகி இருக்காத நாதன் தன்னைத்தேடி தங்களுடைய தெணியம்பை வீட்டிற்கு வந்ததும் தனதுகையில் வைத்திருந்த சிறுகடதாசித்துண்டில் இருந்தபெயரை கவனமாக வாசித்து தன்னை அழைத்ததும் கலாபதிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இவ்வாறு பெயரை எழுதிவந்து வாசிப்பதென்பது வல்வெட்டித்துறையில் என்றுமே வழக்கமாக இருந்ததில்லை. காரணம் அந்தஊரில் எல்லோரும் எல்லோருக்கு…

  20. தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே. உங்களுக்காக ஒரு வரி எழுத முடியாமல் சோகத்தின் உச்சத்தால் அலைபாயும் என் மனதை ஒரு நிலையில் வைத்திருக்க என்னால் முடியவில்லை. எதற்காக உங்களால் என்னுள் இந்த மாற்றம்? நீங்கள் தாயக கனவுடன் தலைவன் வழியில் பயணித்த காரணத்தினாலயா? உங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத தியாக தீபங்கள் என்ற படியாலா? உங்கள் தியாகங்களை போற்றி புகழ முடியாத சிகரங்களாக நீங்கள் உள்ள படியாலா? நீங்கள் தாயக கனவுடன் உறங்கிய உங்கள் கல்லறைகளை காணாத ஏக்கத்திலா? இன்று அனைத்தையும் இழந்து அனாதரவாய் என் இனம் சிங்களவன் பிடியில். பொறியில் சிக்கிய எலியைப் போல் சிக்கித் தவிக்கும் அவலத்தை கண்டும் தட்டிக் கேட்க முடியாத நிலையில் வேதனையின் உச்சத்தால் இந்த மாற்றமா?

  21. புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தடை தீவிரமானது அல்ல-நொதர்லாந்து தூதுவர். விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையானது அமெரிக்கா விதித்தது போன்று தீவிரமான தடை அல்ல என்று சிறிலங்கவிற்கான நொதர்லாந்து தூதுவர் கொழும்பில் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய தடையானது அவர்களை பேச்சு வார்த்தைக்கு கொண்டு வருவதற்கான அழுத்தமே தவிர வேறு எதுவும் இல்லை. எனினும் எமது நோக்கம் நிறைவேறது ஒஸ்லோ பேச்சுக்கள் முறிவடைந்து கவலை அளிக்கிறது. பேச்சுக்கள் இனி வரும் காலங்களில் நடைபெறும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு . விடுதலைப் புலிகள் ஐரோப்பிய நாடுகளுடன் எந்த நேரமும் தொடர்புகளை வைத்துக் கொள்ளலாம் புலிகள் மீதான தடை நிதி சேகரிப்பு நடவட…

    • 7 replies
    • 1.8k views
  22. புலிகளின் முதல் விமானம் Friday, February 06, 2009 எழுத்தாளர்: சாத்திரியார் அபி அப்பா என்றொரு பதிவர். அவர் பல விடயங்களை நல்ல நகைச்சுவையாகப்பதிவார். அவரது நகைச்சுவை பதிவுகளை நானும் படித்து சிரிப்பதுண்டு அப்படித்தான் .எப்போதும் போடும் நாய் இன்னிக்கு போடலை.என்றொரு பதிவிட்டிருந்தார் நானும் ஏதோ நகைச்சுவைப்பதிவாகவே இருக்குமென நினைத்து உள்ளே போய் பார்த்தால் அங்கு அவரது பதிவில் ஈழத்து இயக்கங்களில் ஒன்றாகவிருந்த ரெலோ என்கிற இயக்கத்தின் இரண்டு விமானங்களை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர் என்கிற ஒரு தவறான கருத்தினையும் எழுதிப்பதிவிட்டிருந்தார். அதற்கான பதிலினை நான் அவரது பதிவிலேயே இட்டிருந்தாலும்.மேலும் இதுபோன்ற தவறான தகவல்கள் அதனைப்படித்தவர்கள் மனங்களில் பதிந்து போகாமல் இரு…

  23. [size=5] சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்[/size] [size=5]யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தமிழுக்கும், சைவசமயத்துக்கும் தன் வாழ் நாளில் அரும்பெரும் தொண்டாற்றி பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார். ஒரு பெண் தனித்து நின்று சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்பதை தனது உலகளாவிய நற்பணிகள் மூலம் நிருபித்துக் காட்டியுள்ளார். யாழ்ப்பாண வரலாற்றில் பதிவான இவரைப் பற்றி சில வரிகள் இங்கே:[/size] [size=5]அப்பாக்குட்டி - தையற்பிள்ளை தம்பதியினருக்கு இரண்டாவது பிள்ளையாக தங்கம்மா 1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07 ஆம் திகதி பிறந்தார். பொருட் செல்வத்திலும் பார்க்க அருட் செல்வமே அதிகம் இவரிடம் இருப்பதாக ச…

  24. மூலம்: https://www.facebook.com/TrincoAid/posts/334149313677151/ (தடித்த எழுத்துக்களுக்கு மாற்றியவர் நன்னிச் சோழன் ஆவார்) --------------------------------------------------------------------------- குடும்பிமலை எதிர் தொப்பிக்கல் கல் தோன்றிய காலத்தில் இருந்தே இந்தப் பிரதேசத்தில் இருக்கும் குசலான மலை, கேவர் மலை, தொப்பிகல் மலை, கார் மலை, குடும்பி மலை, நாகம்பு மலை, ரெண்டு கல் மலை, படர் மலை, மண் மலை போன்ற பல மலைகளில் இதுவும் ஒன்று. பெரிய மலைகள் என்று இல்லாமல், மலைக் குன்றுகள் என்றே சொல்லலாம். இன்று நிலஆக்கிரமிப்பின் அடையாளமாக தொப்பிகல் மலையும், குடும்பி மலையும் விளங்குகின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.