அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9268 topics in this forum
-
பி.பி.ஸி. தமிழோசையில் ஆனந்தி வேலை செய்த காலத்தில் கொழும்பிலுள்ள தமிழ் இயக்கங்களின் தலைவர்களைப் பேட்டி காண்பதுண்டு. இப்பேட்டிகளின்போது அவர் ஓர் அனைத்துலகப் பேரூடகத்தின் விதிகளுக்கு அமைவாகக் கேள்விகளை கேட்பவர் போல் தோன்றுவார். ஆனால் அவர் அக்கேள்விகளுக்குள் இனச்சாய்வுடைய நுட்பமான கொழுக்கிகளை மறைத்து வைத்திருப்பார். அக்கொழுக்கிகளின் மூலம் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கும் தமிழ் இயக்கங்களை அவர் அம்பலப்படுத்த முயற்சிப்பார். ஒரு வெளிப்பார்வையாளருக்கு ஆனந்தியின் கேள்விகள் பி.பி.ஸி. நியமங்களுக்கு உட்பட்டவையாகவே தோன்றும். ஆனால், இனச்சாய்வுடையோருக்கு அங்கே நுட்பமாக மறைக்கப்பட்டிருக்கும் கொழுக்கிகள் தெரியும். போர்க் காலங்களில் ஈழத் தமிழர்கள் ஆனந்தியின் கேள்விகளை ரசித்துக் கேட்பார்கள். …
-
- 5 replies
- 1.3k views
-
-
கோத்தாவின் தலைவலி துமிந்த சில்வா என்பவன் தூள் (போதைப்பொருள்) கோஸ்ட்டி தலைவன். செய்த கொலைக்காக மரண தண்டனை பெற்று சிறையில் இருந்த போதும், தனது தூள் ராஜ்யத்தினை சிறையில் இருந்தே நடத்திக் கொண்டு இருந்தான். பாதுகாப்பு செயலாளராக, கோத்தா இருந்த போது, அவருடன் மிக பெரும் உறவினை வைத்து இருந்தான். தான், விடுதலை செய்யப்படுவேன் என்று அவனுக்கு தெரிந்து இருந்தது. மாறாக எனது தந்தை, பிரேமச்சந்திரா, மகிந்தாவின் வலது கையாக இருந்தார். சந்திரிக்கா, மகிந்தவினை முன்னிலைப்படுத்த மறுத்த போது, ஒரு ஜனநாயக வாதியாக, தேவையான அரசியல் செய்து, அவர் பிரதமர் ஆகவும், பின்னர் ஜனாதிபதி பதவிக்கு போட்டி இடவும் பெரும் ஒத்தாசை செய்தார். அப்படி செயல் பட்ட ஒருவர் கொலை செய்யப்பட்ட போது…
-
- 5 replies
- 946 views
-
-
"தீப்பிடித்த வரலாறு: யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நினைவு கூர்தல் இன்று [31/05/2024]" கி.மு. 3000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரீகத்தை படைத்த மாயன் மக்களை ஸ்பெயின் நாடு பீரங்கிகளை கொண்டு தாக்கி 'யுகடான்" (Yucatan) மாநிலத்தை கைப்பற்றயது . அத்துடன் நிறுத்தி விடவில்லை. 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'. வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்…
-
-
- 5 replies
- 653 views
-
-
இவரைப்பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை.அரகலய போராட்டத்தில் முன்நின்றிருக்கிறார்.மிகமிக தெளிவாக பேசுகிறார். இவரின் கதையைக் கேட்டால் செந்தில் தொண்டமான் மேல் கெட்ட கோபம் வருகிறது.
-
-
- 5 replies
- 857 views
- 1 follower
-
-
ரணில் வகுக்கும் வியூகத்தில் விழாமலிருப்பது எப்படி? - நிலாந்தன் ரணில் விக்கிரமசிங்க ஒரு தந்திரசாலி என்பது தமிழ் மக்களின் மனதில் ஆழப் பதிந்த ஒரு படிமம்.எனவே அவர் தந்திரசாலி என்று தெரிந்து கொண்டும் அவருடைய பொறியில் போய் விழுவது என்பது சுத்த முட்டாள்தனம். ஒரு தந்திரசாலியை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தரப்பும் தந்திரமாக யோசிக்க வேண்டும். ரணிலை எதிர் கொள்வதற்கு தமிழ் தரப்பு தயாராக வேண்டும். கஜேந்திரக்குமார் கூறுகிறார்,ரணில் கூட்டாட்சிக் கட்டமைப்பை உருவாக்கத் தயார் என்று அறிவித்தால் தாங்களும் பேசத்தயார் என்று. ரணில் அதைச் செய்ய மாட்டார். அதை செய்துவிட்டு அவர் ஜனாதிபதியாக இருக்க முடியாது. எனவே பேச்சுவார்த்தைகளை அவர் அங்கிருந்து தொடங்கப் போவதில்லை. அந்த நிபந்தனையை …
-
- 5 replies
- 2.2k views
- 1 follower
-
-
-
- 5 replies
- 998 views
-
-
மேற்குலகு, அதற்கு போட்டியாகும் எழும் சீனா, இந்திய மாக்கடல் வல்லரசாகும் கனவோடு உலக அரசியலில் எத்தனிக்கும் இந்தியா என இம்மூன்று சக்திகளின் கரங்கள் இத்தோல்வியின் பின்னால் தொழிற்பட்டன -குணா.கவியழகன்*. 01. ஈழப்போராட்டத்தில் ஆயுதப்போரின் தோல்வி வெறும் உள்நாட்டுப் பரிமாணம் கொண்டதல்ல. இருதரப்பு மோதல்களின் முடிவாய் நிகழ்ந்த வெற்றி தோல்விகளும் அல்ல. இத்தோல்வியின் பின்னணியில் அனைத்துலக அரசியல் பரிமாணம் உண்டு. பொதுப்புத்தியில் இதற்கு அனைத்துலக காரணிகள் உண்டு எனத் தெரிந்தாலும் அதன் பரிமாணம் என்ன? எதற்காக நிகழ்ந்தது? எப்படி நிகழ்ந்தது? என்ன காரணத்திற்காக நிகழ்ந்தது? என்பது வெகுசன அறிவுக்கு எட்டவில்லை. ஆனால் எட்டவேண்டியது அவசியம். போர் தோற்றாலும் தமிழர்கள் போராட்டத்தில் தோற்றுப்ப…
-
- 5 replies
- 1.1k views
-
-
மேலெழும் இனவாதம் அம்பாறையிலும் உலகெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்கள் மிகவும் நெருக்கடியான ஒரு நிலைமையைத் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள். சிரியாவிலும் பலஸ்தீனத்திலும் நடைபெறுகின்ற திட்டமிட்ட இனஅழிப்புகள், வார்த்தைகளுக்குள் அடங்காத பெரும் சோகத்தையும் மனச் சஞ்சலத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்க, இலங்கையில் மீண்டும் இனவாத சக்திகள் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தம்மைத் தயார்படுத்தி இருக்கின்றன. இதைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டும் விதத்தில், அம்பாறை வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சர்வதேச ரீதியாக, முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற ஆயுத பலப்பிரயோகத்துக்குப் பின்னால், அமெரிக…
-
- 5 replies
- 674 views
-
-
இந்தியா தொடர்பில் சம்பந்தனின் தடுமாற்றம் - யதீந்திரா பொதுவாக தேர்தல் காலங்களில்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, குறிப்பாக இராஜவரோதயம் சம்பந்தனுக்கு இந்தியாவின் ஞாபகம் வருவதுண்டு. அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் பேசும்போது, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தங்களுக்கு பின்னால் இந்தியா இருப்பதாக தெரிவித்திருக்கின்றார். ஆனால் ரணில்-மைத்திரி அரசாங்கத்துடன் தேனிலவில் மெய்மறந்திருந்த காலத்தில் சம்பந்தனுக்கு இந்தியாவின் நினைவு எழவில்லை. கடந்த ஜந்து வருடகால ரணில்-மைத்திரி ஆட்சியில் கிட்டத்தட்ட, இந்தியா என்று ஒரு நாடு இருப்பதையே சம்பந்தனும் அவரது சகாக்களும் மறந்;திருந்தனர். புதுடில்லிக்குச் சென்றால் சிங்களவர்கள் கோபிப்பார்கள் என்ப…
-
- 5 replies
- 1.4k views
-
-
அமெரிக்க போர்களும் விளைவுகளும்: கடந்த பத்தாண்டு- ஒரு பார்வை: ராஜன் சடகோபன் உலக வல்லரசான அமெரிக்கா, கடந்த 10 ஆண்டுகளில் தன்னை காப்பாற்றி கொள்ள போர் என்ற ஆயுதத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தியது, அந்த போரால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை சுருக்கமாக விளக்குகிறது இக்கட்டுரை அமெரிக்க வரலாற்றில், போர் என்பது ஒரு தொடர் கதை. அந்த நாடு உருவாகும் முன்பு, அங்கிருந்த செவ்விந்தியர்களை அழித்ததில் துவங்கிய அந்தப் போர், நிலத்துக்காக, அடிமைகளுக்காக, வர்த்தக உரிமைகளுக்காக, துறைமுகப் பகுதிகளுக்காக, இயற்கை வளங்களுக்காக இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரண்டாவது உலகப் போருக்கு பின், வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா மீதான பனிப்போர், கொரியா, வியட்நாம், …
-
- 5 replies
- 1.8k views
-
-
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22ஆவது அமர்வு ஆரம்பமாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இலங்கை விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடர் தொடங்குவதற்கான நாட்கள் நெருங்க நெருங்க, இலங்கை அரசாங்கம் மீதான அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. வரும் திங்கட்கிழமை - 25ஆம் திகதி - தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் அடுத்தமாதம், 22ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறப் போகிறது. இந்தக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும் என்பது ஓர் ஆண்டுக்கு முன்னரே தெரிந்த விடயம் தான். அதாவது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு மறைமுகமாக ஓர் ஆண்டு கால அவகாசம் கொடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம், தீ…
-
- 5 replies
- 904 views
-
-
-
- 5 replies
- 948 views
-
-
எவ்வளவு போராட்டம் செய்துவிட்டோம்! எவ்வளவு வாதங்கள் செய்துவிட்டோம்! அட.. அதிமுகவும் திமுகவும் கூட ஒன்றுசேர்ந்து நாடாளுமன்றத்தில் எத்தனை முறை குரல் கொடுத்துவிட்டார்கள்! ஆனாலும் ஈழப்பிரச்சினையில் இந்தியா ஏன் சிங்களர்களுக்கு இவ்வளவு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் இருக்கிறார்கள் என்பதற்கு மூன்று முக்கியமான காரணங்கள் உண்டு. நேரு காலத்தில் இருந்தே இந்திய அரசுக்கு தமிழகம் என்றால் வேண்டாத பிள்ளைதான். "டேய் இத நீ படிச்சே ஆகனும்" என வாத்தியார் கொடுத்த தேவையில்லாத புத்தகத்தை "நான் ஏன் சார் இதப் படிக்கனும்? எனக்கு தேவைனா நான் படிச்சுக்குறேன். நீங்க சொல்றதுக்காக என்னால கட்டாயமா படிக்க முடியாது!" என முகத்தைத் திருப்பிக்கொண்ட ஒரே ஒரு சுயமரியாதையுள்ள மாணவன் தமிழகம் தான்! அதுமட்டும…
-
- 5 replies
- 1.4k views
-
-
மேனன் விஜயம் - நிலாந்தன் 07 ஜூலை 2013 சிவ்சங்கர் மேனன் நாளை மறுநாள் வருகிறார். அவர் வருவது ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு என்றும், அப்படி வரும்போது அவர் அரசுப் பிரதிநிதிகளைச் சந்திப்பார் என்றும் ஒரு செய்தி உண்டு. ராஜிய நகர்வுகளில் இதுவும் ஒரு வகைதான். அதாவது வேறு எதற்கோ வருவதுபோல் வந்து விவகாரத்தைக் கையாண்டுவிட்டுப்போவது என்பது. ஆனால், எது விவகாரமோ அதைப் பிரதான நிகழ்ச்சி நிரலாக உத்தியோகபூர்வமாக இரு நாடுகளும் அறிவிக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். அப்படி உத்தியோக பூர்வமாக அறிவிக்குமளவிற்கு இவ்வருகை முக்கியத்துவமற்றது என்று கருதியிருக்கலாம் அல்லது அப்படி அறிவிப்பதால் ஏதாவது ஒரு தரப்புக்கு நேரிடக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க முயற்சிக்கலாம். எதுவாயி…
-
- 5 replies
- 903 views
-
-
இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கூறுகூறானால் தமிழரின் நிலை? -இலட்சுமணன் தேசிய அரசியலில் (தமிழர்களின்) என்றுமில்லாத அளவுக்குப் பிரிவினைகள் தோன்றியுள்ளன. சுயலாப நோக்கிலான அரசியல் மேலோங்கி உள்ளதே, இதற்கான பிரதான காரணமாகும். ஆனால், சிங்கள தேசியவாதத்தை நிலைநிறுத்தும் அரசியல் மாத்திரம், பலமான சக்தியாக மேலெழுந்து செல்கிறது. இத்தகைய சூழ்நிலை ஒன்றின் உருவாக்கத்துக்கு, இராணுவ மேலாதிக்கப் போக்கும், இலங்கை, சிங்கள தேசம் என்ற இனவாதச் சிந்தனையும் அடிப்படையாக அமைந்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் உட்கட்சி மோதல்களும் அதற்குள்ளே முகிழ்ந்துள்ள வர்க்கவாத சாதியவாதச் சிந்தனைகளும் ஐ.தே.கவின் அரசியல் எதிர்காலம் தொடர்பாகக் கேள்விக்குறியை முதன்மைப்படுத்தி நிற்கின்றன. இந…
-
- 5 replies
- 981 views
-
-
பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், முதல் தடவையாக இலங்கைக்கு வருகைத் தந்த உயர்நிலை வெளிநாட்டு இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரலாற்றில் பதிவாகியுள்ளார். இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபத…
-
-
- 5 replies
- 762 views
- 1 follower
-
-
சமஸ் எல்லைப் பாதுகாப்புப் பணியின்போது, உயிரை இழந்த ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களுக்குக் கிடைக்காத மரியாதை அது. ‘இந்தியாவின் வீரத்திருமகன்’ என்ற பிரதமரின் பட்டம், நாடாளுமன்ற அனுதாபத் தீர்மானம், மாநில அரசின் மூன்று நாள் துக்க அறிவிப்பு, இரங்கல் தெரிவிக்க சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம், அதில் ‘தேசிய தியாகி' என்ற அறிவிப்போடு, இந்த மரணம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானம், மகள்களுக்கு அரசுப் பணி உத்தரவாதம், மாநில அரசின் சார்பில் ரூ. 1 கோடி, மத்திய அரசின் சார்பில் ரூ. 25 லட்சம் நிதி, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையோடு நடந்த இறுதிச் சடங்கில் மாநில முதல்வரில் தொடங்கி ‘நாட்டின் இளவரசர்’ வரையிலான முக்கியஸ்தர்களின் பங்கேற்பு. யார் இந்த ச…
-
- 5 replies
- 1.8k views
-
-
-
- 5 replies
- 1k views
-
-
முள்ளிவாய்க்கால் பாடம் கடந்த ஆண்டு, மாவீரர் நாளை ஒழுங்கமைத்து நடத்துவது யார் என்று கிளம்பிய பிரச்சினை, இப்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரத்திலும் வந்து நிற்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு இன்னமும் சில நாட்களே எஞ்சியிருக்கின்ற நிலையில், பேரவலம் நிகழ்ந்த அந்த மண்ணில் நிகழ்வுகளை ஒழுங்கமைப்பது யார் என்ற குழப்பம், மோதல்களும் உருவாகியிருக்கின்றன. நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைப்பது தாமே என்று வடக்கு மாகாணசபையும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் மல்லுக்கட்டத் தொடங்கியிருக்கும் நிலையில், தமிழ் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் நிலை …
-
- 5 replies
- 2k views
-
-
வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? என்.கே. அஷோக்பரன் தற்போதைய நிலையில், இலங்கையில் எந்தவொரு மாகாண சபையும் இயங்கும் நிலையில் இல்லை. 2019 ஒக்டோபர் எட்டாம் திகதி, ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததோடு, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளும் இயங்கா நிலையை அடைந்தன. 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று சில தரப்புகள், குறிப்பாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பு, கோரிக்கை வைத்திருந்தாலும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அந்தக் குரலும் அடங்கிவிட்டது. 2020இல் ‘கொவிட்-19’ பெருந்தொற்றுப் பரவல், நாட்டை முடங்கு நிலைக்குக் கொண்டு வந்த பின்னர், மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி, எந்த அரசியல் கட்சியும…
-
- 5 replies
- 842 views
-
-
சீன கப்பல் தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை உன்னிப்பாக அவதானிக்கின்றது இந்தியா By RAJEEBAN 07 NOV, 2022 | 09:09 AM சீனாவின் யுவான்வாங் 6 கப்பல் தனது பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள இந்தியா இந்த கப்பல் தொடர்பில் இலங்கை எடுக்கவுள்ள நிலைப்பாட்டை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது. கடலிற்குள் 200 கடல் மைல் தூரம் வரை காணப்படும் தனது பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் யுவான் வாங் கப்பல் நுழைவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. ஒடிசா கரையில் உள்ள அப்துல் கலாம் சோதனை நிலையத்திலிருந்து இந்தியா மேற்கொள்ளும் ஏவுகணை பரிசோதனைகள…
-
- 5 replies
- 360 views
- 1 follower
-
-
லிங்கேஸ்வரன் விஸ்வா இராஜதந்திர உறவின் விரிவாக்கம் என்ற போர்வையில் ஆபிரிக்காவில் புலிகளைத் தேடும் சிறிலங்கா!! அலசுகின்றது ஈழதேசம்!!! சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்ற முதுமொழியை மெய்பிப்பதாக ஆபிரிக்க தேசத்தின் மீது சிறிலங்காவிற்கு ஏற்பட்டுள்ள தீடிர் பாசம் அமைந்துள்ளது. அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ சொல்லிக் கொள்ளும்படியான ஆதாயங்கள் ஏதுமற்ற நிலையில் ஆபிரிக்க தேசத்தின் மீது சிறிலங்கா கவனம் செலுத்தியுள்ளமை புலிகளை தேடியே என்பதை அறிய முடிகின்றது. சிறிலங்கா அதிபர் ராஜபக்சே முதற்கொண்டு அறிவிக்கப்படாத சிறிலங்காவின் அதிபரான கோத்தபாய ராஜபக்சே வரை பயணங்களை மேற்கொண்டு உறவை புதுப்பிப்பதற்கு வலுவான காரணமாக மறைவாகியுள்ள புலிகளின் முக்கிய தலைவர்களைத் தேடியே என்பத…
-
- 5 replies
- 1k views
-
-
புலிப்பார்வையில் அன்புத் தம்பி பாலச்சந்திரனை.. சிறுவர் போராளி என்று சித்தரிப்பதை நியாயப்படுத்த முனையும்..சோபாசக்தி போன்ற கொரூரர்களுக்கு ஒரு பகிரங்க மடல்..!!!!! உங்களால் முடிந்தால்.. நேர்மைத் திறனிருந்தால்.. மக்களுக்கு இவை தொடர்பில் விளக்குங்கள்...!!!! மடல்:::: (புலிப்பார்வை படக் காட்சி) இந்த சோபாசக்தி.. 1988/89 களில் யாழ்ப்பாண வீதிகளில்.. நின்று பள்ளி மாணவர்களை பிடித்து.. இந்திய படை முகாம்களில்..கட்டாய இராணுவப் பயிற்சி அளித்து.. தமிழ் தேசிய இராணுவம் (TNA - Tamil National Army) என்ற பெயரில்... யாழ்ப்பாண வீதிகளில் புலிகளோடு சண்டைக்கு விட்ட.. ஒட்டுக்குழுக்களின் செயலை கண்டிப்பாரா..???! அவை சிறுவர் போராளிகளின் ஆரம்பம் என்று மொழிவாரா.. அல்லது அவை பற்றி எழுதுவாரா.. ஏன…
-
- 5 replies
- 1.1k views
-
-
நன்றி - யூரூப் சமகால அரசியலோடு தொடர்புடைய உரையாடலாதலால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
- 5 replies
- 569 views
-
-
"தமிழர்கள் செத்தால் வருத்தல் இல்லையா?" சமஸ் படங்கள் : கே.ராஜசேகரன் தமிழக அரசியலில் இனரீதியிலான தாக்குதல் கலாசாரத்தைத் தொடக்கிவைத்திருக்கிறார் சீமான். விளையாட்டுப் பயிற்சி, சுற்றுலா என்று தமிழகம் வந்த சிங்களர்கள் மீது அவருடைய 'நாம் தமிழர்’ இயக்கத்தினர் முன்னின்று நடத்திய தாக்குதல்கள், இலங்கை அரசு தன்னுடைய பிரஜைகளை தமிழ்நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தும் அளவுக்குச் சென்றது. தேசிய ஊடகங்கள் தமிழ் அமைப்புகளை வெறி பிடித்தவையாகச் சித்திரிக்கின்றன. ஆனால், சீமானோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் பேசுகிறார். ''தமிழ்நாட்டின் ராஜ் தாக்கரே ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?'' ''ராஜ் தாக்கரேவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் இந்த மண்ணின் மீத…
-
- 5 replies
- 1.8k views
-