நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
தமிழ் மக்கள் கேட்க வேண்டிய கேள்விகள் Editorial / 2019 மார்ச் 14 வியாழக்கிழமை, மு.ப. 09:53 ஜெனீவாத் திருவிழா, கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இதே பத்தியில் சில காலத்துக்கு முன்னர் சொன்னது போல, ‘அடுத்தது என்ன’ என்ற கேள்விக்கு ‘அடுத்த ஜெனீவா’ பதிலாகக் கிடைத்துள்ளது. சர்வதேசத்தின் பெயரால், இன்னமும் எவ்வளவு காலத்துக்குத் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்பதற்கு, காலம்தான் பதில் சொல்ல வேண்டும். முழு மேற்குலகும், தமிழ் மக்களின் பக்கத்தில் நிற்கிறது என்று, கடந்த பத்தாண்டுகளாக எமக்குச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், மேற்குலகு இதுவரை தமிழ் மக்கள்தொடர்பில், எவ்வாறு நடந்து வந்துள்ளது? குறிப்பாக, 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர், என்று வ…
-
- 2 replies
- 736 views
-
-
ஆடி வேல் விழா இவ்வருடம் ஆவணி வேல் விழா ஆனது எப்படி! இலங்கையின் வரலாறு தொடங்கிய காலம் முதல் இத்தீவை ஆண்ட மன்னர்களின் போஷிப்பையும் கதிர்காம முருகனாலயம் பெற்றிருந்தமை பற்றி பாளி நூல்கள், வரலாற்று மூலகங்கள், சந்தேச நூல்கள் போன்றவற்றின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. குபேரன், இராவணன், மகாநாகன் பாண்டிய கதிர்காம சத்திரிய மன்னர்கள், தேவநம்பிய தீசன், துட்டகாமினி, 2ஆம் காசியப்பன், 4ஆம் அக்ரபோதி, தம்புலன், 3ஆம் மகிந்தன் சோழ மன்னர்கள், விஜயபாகு, மகா பராக்கிரம பாகு என இலங்கையை ஆட்சிசெய்த பல மன்னர்களின் ஆதரவையும் மானியங்களையும் கதிர்காம முருகனாலயம் பெற்றிருந்தது. கி.பி.1581 முதல் 1593வரை சீதாவக்கை இராச்சியத்தை ஆட்சி செய்த முதலாம் இராஜசிங்கன் காலத்தில் கதிர்காமத்தில் இருந்…
-
- 2 replies
- 1.1k views
-
-
குரான் வன்முறையை தூண்டுகிறதா? உண்மையுல் முஸ்லீம் மத்ததிற்கும் பயங்கரவாதிகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லையா என்ற வாதப்பிரதிவாதங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி உள்ளது. இஸ்லாம் ஒரு அமைதி மார்ககம். இனிய மார்ககம் என்றெல்லாம் மத முட்டாள்த்தனங்களை பரப்பவிழையும் மதவாதிகள் தம்மால் இயன்ற அளவுக்கு பரப்பிவருகிறார்கள். அதனால் முகநூலில் வந்த குரான் மொழி பெயர்பை இங்கு இணைக்கின்றேன். அரபு மொழிபெயர்ப்பை என்னால் சரிபார்கக முடியாவிட்டாலும் உண்மையாக இருக்கும் என்றே நம்புகிறேன். அப்படி மொழி பெயர்ப்பில் தவறுகள் இருந்தால் யாராவது அரபு தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டலாம். (அரேபிய அடிமைகளே இதை பலவீனமான ஹதீஸ் என்று சொல்லி தப்பிக்க முடியாது, இது அனைத்தும் குர்ஹான் வசனங்கள்...). …
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
விநாயகம் மறைவு: தியாகத்துக்கும் – துரோகத்துக்கும் உள்ள இடைவெளி மறைந்துவிட்டது! மரணம் யாரையும் துரோகி ஆக்குவதுமில்லை புனிதர்கள் ஆக்குவதுமில்லை!! : த ஜெயபாலன் தேசம்நெற் தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளக புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த விநாயகம் என்று அறியப்பட்ட கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி தனது அறுபதாவது வயதில் யூன் 4 பிரான்ஸில் காலமானார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த இவர் கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் உட்பட பல தாக்குதல்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். இவ்வாறான ஒரு போராளியின் மறைவையொட்டி ஒருசாரார் இரங்கலைத் தெரிவிக்க இன்னுமொரு சாரார் அவரின் மரணத்தை ‘துரோகத்தின் பரிசு’ என்று எள்ளி நகையா…
-
- 2 replies
- 452 views
-
-
சமீப காலமாக லண்டனில் புதுவகையான திருட்டு ஒன்று ஆரம்பமாகியுள்ளது. அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்குள் லண்டனில் வசிக்கும் பல தமிழர்கள் வீட்டில் நகைகள் அதுவும் குறிப்பாக தாலிக்கொடிகள் களவாடப்பட்டு வருகிறது. நடன நிகழ்ச்சி நடக்கிறது இல்லையேல் இசை நிகழ்ச்சி நடக்கிறது அல்லாது போனால் தென்னிந்திய நடிகர்கள் வருகிறார்கள் என்று TV இல் விளம்பரம் போனால் அதனை நீங்கள் பார்க்கிறீர்களோ இல்லையோ மிக உண்ணிப்பாக கள்வர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக லண்டனில் உள்ள ஒரு பகுதியில் ஒரு நிகழ்வு நடந்தால் போதும்... அப் பகுதியில் உள்ள தமிழர் வீடுகளை உடைத்து உளே புகுந்து நகைகளைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் தயாரக உள்ளதாகச் சொல்லப்படுகிறது. …
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்தியா கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 220 மொழிகளை இழந்துவிட்டதாக வதோத்ராவில் இயங்கும் மொழி ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு மையம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1960ஆம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 1,100 மொழிகள் பேசப்பட்டு வந்தன. ஆனால், அவற்றில் சுமார் 220 மொழிகள் தற்போது வழக்கத்திலேயே இல்லாமல் மாயமாகிவிட்டது என்று எழுத்தாளரும், ஒருங்கிணைப்பாளருமான கணேஷ் தேவ் தெரிவித்துள்ளார். இதுவரை நாங்கள் செய்த ஆய்வில் சுமார் 780 மொழிகள் மட்டுமே கிடைத்துள்ளன. அதில் 100 மொழிகளை எங்களால் திரட்ட முடியாமல் கூட போயிருக்கலாம். எனவே அதையும் சேர்த்தால் 880. 1100 மொழிகளில் தற்போது 880 மொழிகள்தான் உள்ளன என்றால், மற்ற மொழிகள் மாயமாகிவிட்டன. இது கவலை தரும் நஷ்டம் என்று தெரிவித்துள்ளார்…
-
- 2 replies
- 519 views
-
-
75 ஆண்டுகளுக்கும் மேலாக கற்றுக்கொண்ட பாடம் என்ன ? லூசியன் அருள்பிரகாசம் 0000000000000000000000000000000000000 எங்கள் மரபணுவின் பொதுவான தன்மைகள் பேராசிரியர் காமனி தென்னக்கோன் மற்றும் ஏனையோரால் மேற்கொள்ளப்பட்ட மரபணு [டி .என். ஏ ]ஆய்வுகள் (த ஐலண்ட் இல் பெப்ரவரி 2019 யில் அவரது கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) : “சிங்கள மற்றும் இலங்கைத் தமிழர்களின் பெரும்பாலான டி.என்.ஏ ஆய்வுகள் பாரியளவில் மரபணு ரீதியான வேறுபாட்டைக் காண்பிக்கவில்லை.மக்கள் இலங்கைத் தீவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பொதுவான வம்சாவளியைக் கொண்டுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.மேலும், “மரபணுக் கலவை பற்றிய ஆய்வில், இலங்கையின் சிங்களவர்கள் இந்தியாவின் வடகிழக்கிலுள்ள வங்காளிக…
-
- 2 replies
- 328 views
-
-
சென்னை: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்து, பின்னர் இந்தியாவின் தலையீட்டால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது இந்தியாவின் ஆங்கில மீடியாக்களுக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஏதோ இலங்கையை, தமிழகத்தினர் அத்தனை பேரும் சேர்ந்து அழித்து விட்டது போலவும், தமிழகத்தின் நியாயமான போராட்டத்தால் இந்தியாவுக்கு பேராபத்து வந்து விட்டதைப் போலவும் இவர்கள் காட்டமாக தமிழக தலைவர்களையும், தமிழக கட்சிகளையும் விமர்சித்து எழுதி வருகின்றனர். எல்லாவற்றுக்கும் காரணம், தமிழக அரசியல் தலைவர்கள் குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி கொடுத்த அழுத்தம், நெருக்கடி மற்றும் மிரட்டல்தான் காரணம் என்றும் இவர்கள் புரியாமல் எழுதி வருகின்றனர். …
-
- 2 replies
- 705 views
-
-
ஆதி தமிழரின் சோழர் கால புலி பதித்த தற்போதைய தமிழீழ தேசிய கொடியை நாம் பின்பற்றுவோம். இதையே தமிழ் நாட்டு தமிழரும் தங்கள் தேசிய சின்னமாய் பயன்டுத்தலாம். விடுதலை புலிகளின் உத்தியோக கொடியில் எழுத்துகள் உள்ளன.தேசியக்கொடியில் அப்பிடி இல்லை. ஆகவே இதையே உலகத்தில் உள்ள அனைவரும் தமது பேதம் கடந்து ஏற்றுகொள்ள வேண்டும். உதாரணம் இந்திய தேசிய கொடிக்கும் இந்திய காங்கிரஸ் கொடிக்கும் அதில் உள்ள சக்கரம் மட்டுமே வித்தியாசம்.அதற்காக பாரதிய ஜனதா கடிசியோ இல்ல காகிரசை பிடிக்காத கட்சிகளோ இந்திய மூவர்ண கொடிய தமது கொடி இல்லை என்று கூறவில்லை. அதே போல் நானும் எமது பிளவுகளை கைவிட்டு ஒரே கொடியின் பின் அனைத்து தமிழரும் இணைவதே எம்மை உலகில் நிலை நிறுத்தும். எமது அணைத்து நிகழ்வுகளிலும் மரியாதை செய்வோம் என்ற…
-
- 2 replies
- 1.5k views
-
-
Courtesy: தி.திபாகரன், M.A. இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் பொருளாதார நெருக்கடியால் பட்டினி சாவு என்பது எந்த ஒரு நாட்டுக்கும் ஏற்படப் போவதில்லை. உலகின் அரசியல் பொருளாதாரம் என்பது உச்சக்கட்ட. வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாகக் காலனித்துவத்தின் முடிவுடன் Dead labour (இயந்திர சாதனங்களும் மூளையுழைப்புச் சாதனங்களும், அதேவேளை உயிருள்ள மனித உழைப்பு Living labour எனப்படும்) வளர்ச்சியுடன் பாரியளவு தொழிலாளர்களின் தேவையைக் குறைத்து பண்ட உற்பத்தியில் இயந்திரங்கள் பல்லாயிரம் மனிதர்களுடைய வேலையை சில இயந்திரங்களும் ரோபோக்களும் செய்து முடித்து விடுகின்றன. இதனால் உபரி உற்பத்தி (தேவைக்கு அதிகமான பண்டங்களின் உற்பத்தி) சேமிப்பில் உள்ளது. அதுமட்டுமன்றி திடீரென ஏற…
-
- 2 replies
- 257 views
-
-
10 DEC, 2024 | 12:27 PM இலங்கையர்களின் நினைவுகளிலிருந்து என்றும் அகலாத டச்மார்ட்டின் Dutch Martinair DC8 விமான விபத்து நிகழ்ந்து டிசம்பர் நான்காம் திகதியுடன் ஐம்பது வருடங்களாகியுள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா சர்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் நோர்ட்டன் பிரிட்ஜின் ஏழு கன்னிமலையில் மோதி விழுந்துநொருங்கியது. அந்த விமானத்திலிருந்த 182 பயணிகள் உட்பட 191 பேரும் உயிரிழந்தனர். மக்காவிற்கு சென்றுகொண்டிருந்த யாத்திரிகர்கள் உட்பட 191 பேர் பயணித்துக்கொண்டிருந்த அந்த விமானம் கடும் காடுகள் மத்தியில் காணப்பட்ட மலையில் மோதி விபத்துக்குள்ளானது.விமானத்தின் சிதைவுகள் காணப்பட்ட பகுதியில் பயணிகளின் உடல்களு…
-
-
- 2 replies
- 236 views
- 1 follower
-
-
இலங்கை ஜனாதிபதியின் மாளிகை பொது குளியலறையாக மாறுகின்றது ஏஎவ்பி ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற பல மாத சீற்றத்துடனான வேண்டுகோளின் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிரித்தனர் மகிழ்ந்தனர் -செல்பி எடுத்துக்கொண்டனர் தீடிரென ஜனாதிபதியின் இல்லத்திற்குள் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்ததால் அங்கு காணப்பட்ட நீச்சல் தடாகத்தில் நீச்சல் அடித்தனர். சனிக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் ஜனாதிபதிமாளிகையை கைப்பற்றினர்,இதன் மூலம் மிகமோசமான பல மாத பொருளாதார நெருக்கடி காரணமாக உருவான பொதுக்கள் அதிருப்திக்கு சில நிமிடங்களிற்கு முன்னரே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச படையினரின் உதவியுடன் அங்கிருந்து தப்பிவெளியேறியிருந்தார்,அவரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக அவர்கள் வானை நோக்கி எச…
-
- 2 replies
- 348 views
-
-
ராஜீவ் காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு தன்னை ஒரு நேர்மையாளராகக் காட்டிக்கொள்ள முற்பட்டதுதான். அவரது அரசியல் பிரவேசத்தின்போது அட்டையில் அவரது படத்தைப் போட்டு மிஸ்டர். க்ளீன் (திருவாளர் பரிசுத்தம்) என்று வர்ணிக்காத பத்திரிகைகளே இந்தியாவில் இல்லை எனலாம். அரசியலில் அவர் தோற்றுப் போனதற்கும் இதுதான் காரணம். ராஜீவ் காந்தியால் தான் ஏற்படுத்திக்கொண்ட அந்த மக்கள் மத்தியிலான நன்மதிப்பை, காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போனதுதான் அவரது தோல்விக்கு முக்கியக் காரணம். ஆனால், இந்திரா காந்தி, ராஜீவைப் போன்றவரல்லர். உங்கள் அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறதே என்று கேட்டபோது, 'உலகமெல்லாம் நடப்பதுதான்' என்று அலட்டிக் கொள்ளாமல் பதில் அளித்தவர் அவர். இது நடந்தது 1983-ம் ஆண்டில…
-
- 2 replies
- 1.1k views
-
-
இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் நாட்டில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்ததாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வேலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழா, திருவள்ளுவர் விழா ஆகியவை வேலூர் ஊரீசு கல்லூரியில் இன்று (10) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் க.வி.விக்னேஷ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கை…
-
- 2 replies
- 705 views
-
-
இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா, இடதுசாரிகளா? – 01 July 23, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — “இடதுசாரிகளை விட இனவாதிகளே மக்களை ஈர்த்தனர். அதனால் நாடு நாசமானது” என்று ஒரு பதிவைத் தன்னுடைய முகப்புத்தகத்தில் போட்டிருந்தார் ஜீவன் பிரசாத். ஒரு காலம் ஈழப்போராட்டத்தோடு இணைந்திருந்தவர் ஜீவன். அதேவேளை கலை, ஊடகவியல்துறை, திரைப்படம் எனப் பல துறைகளிலும் ஆளுமை மிக்கவர். ஜனநாயகவாதி. மாற்றங்களை எப்போதும் விரும்புகின்றவர். அவர் தன்னுடைய அவதானங்களின் வழியே கண்டடைந்த உண்மை இது. அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதே, அதையும் விட உண்மையானது. ஏனென்றால், இந்த ஈர்ப்பு இனரீதியான மேம்பாட்டை எந்த இனத்துக்கும் தரவில்லை. இனப்பாதுகாப்ப…
-
- 2 replies
- 410 views
-
-
இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது புலிக்காச்சல் புலிக்காச்சல் இதுவும் எலிக்காச்சல் பிளேக் கோழிகாச்சல் குனியா மாதிரி இதுவும் ஒரு காச்சல் தான் இதன் தோற்றம் இலங்கையில் புலிகள் ஆயுத போராட்டம் தொடங்கிய காலத்திலேயே இந்த காச்சலும் இலங்கையில் தேற்றம் பெற்று பின்னர் தமிழ்நாடு ஊடாக இந்தியா விரலும் பரவி இன்று அவுஸ்ரேலியா தொடக்கம் கனடாவரை பரவியிருக்கிறது.இது தானாகவும் தொற்றி கொள்ளும் மற்றது பரம்பரையாகவும் இது பரவும் ஆனால் மிக அபூர்வமாக இலட்சத்தில் ஒருவரே இந்த நோயால் பாதிக்கபடுகிறார்கள். சாதாரணமாக காச்சல் வருபவர்கள் எல்லோரும் வைத்தியரிடம்தான் போவார்கள் ஆனால் புலிகாச்சல் வந்தவர்கள் மட்டும் காவல்துறையினரிடம் போவார்கள். சரி இந்த காச்சலால் பாதிக்கபட்வர்கள் அல்லது…
-
- 2 replies
- 1.5k views
-
-
காந்தியும் சீமானும் சந்திக்கும் “தாய் மதம் திரும்புங்கள்” எனும் புள்ளி ஆர். அபிலாஷ் “வெளிப்படையாகவே சொல்கிறேன் நான் ஒருசனாதனவாதி தான்.” - மகாத்மா காந்தி “கிறிஸ்தவமும் இஸ்லாமும் தமிழர் சமயமே இல்லையே.. ஒன்றுஐரோப்பிய மதம்.. இன்னொன்று அரேபிய மதம். என்னுடையசமயம் சைவம். என்னுடைய சமயம் மாலியம். என்னுடைய சமயம்சிவசமயம். மீளணும் எனும்போது, மரச்செக்கு எண்ணெய்க்குதிரும்பியதைப் போல சீனியை விட்டுட்டு கருப்பட்டிக்கு வருகிறமாதிரி திரும்பி வா.” - சீமான் சீமான் ஒரு இந்துத்துவவாதியா, அவருடைய தமிழ் தேசியம்ஆர்.எஸ்.எஸ்ஸின் தமிழிய வடிவமா என்றெல்லாம் இப்போதுகேள்விகள் எழுகின்…
-
- 2 replies
- 778 views
-
-
உக்ரேனிய நெருக்கடி பின்னணி பற்றிய தகவல்கள் February 28, 2022 உக்கிரேனிய நெருக்கடி பல்வேறு கேள்விகளை முன்தள்ளி உள்ளது. “வளங்களுக்கான யுத்தம் – தொடரும் பொருளாதார நெருக்கடி – வரப்போகும் உலக நடைமுறைகள் பற்றிய கேள்விக்குறி – மக்கள் முன்னெடுக்க வேண்டிய தேசிய கோரிக்கை சார் நிலைப்பாடு என்ன ? போன்ற பல கேள்விகள் முதன்மைப்படுள்ளன. இவை பற்றி மேலதிகமாக ஆய்வு செய்யமுன் இந்த நெருக்கடியின் பின்னனி நிலவரங்கள் பற்றிய சில புள்ளிகளை பின்வரும் கட்டுரை பதிவு செய்கிறது.. ” – எதிர் ஆசிரியர்குழு – உடைவின் பின்பும் பழைய சோவியத் யூனியன் நாடுகள் பலவற்றின் வளங்கள் மேல் தனது கட்டுப்பாட்டைத் தொடர்ந்து நிலைநாட்டி வந்திருக்கிறது ரஷ்யா. மொஸ்கோ ஆதரவு அரசுகளை இந்த …
-
- 2 replies
- 543 views
-
-
மனதை விட்டகலாத மாமேதை! மாமனிதர் பேராசிரியர் துரைராசா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும் யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, யாழ்ப்பாணச் சராசரி மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தவர் பேராசிரியர் துரைராஜா. இளமையில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கல்விகற்று பின் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கணிதம் கற்று பல்கலைக்கழகத்திற்கு முதல் மாணவனாகத் தெரிவாகி பொறியி யல் விஞ்ஞானப் பட்டம் பெற்று பின் பிரித்தானியாவில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். பேராதனைப் பல்கலைக் கழ கத்தில் விரிவுரையாளராக, பேராசிரிய ராக, பீடாதிபதியாக சேவையாற்றி யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றிய எமது பேராசிரி யரை இத்தினத்தில் நினைவு கூர்வது சாலப் பொருந்தும். …
-
- 2 replies
- 745 views
-
-
கனவுகளை களைந்து நினைவில் வாழ புத்தி கூர்மை அவசியம் தமிழா !! (தமிழா- தமிழ் மொழி பேசுவோர்.) நூருல் ஹுதா உமர் ஆசிய நாடுகளில் முதன் முதலாக ஆண் பெண் என இருபாலாருக்கும் வாக்குரிமையை வழங்கிய நாடு இலங்கை. ஆசியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பை ஆரம்பித்த நாடு. உலகின் முதலாவது பெண் பிரதமரை தெரிவுசெய்து உலகுக்கு பாலின சமநிலையயை காட்டிய நாடு. உலகிலேயே முதன் முதலாக வனவிலங்கு சரணாலயத்தை அமைத்த நாடு. உலகுக்கு உயர்தர தேயிலை மற்றும் உயர்தரமான வாசனைகொண்ட கறுவாவை ஏற்றுமதி செய்த நாடு என பட்டியல் இடும் அளவுக்கு சிறப்புகள் நிறைந்தது எமது தேசம். பல்வேறு சிறப்பு பெருமைகள் கொண்ட இந்துசமுத்திரத்தின் முத்துக்கு... மரகதத்தீவுக்கு... புராதன பாரசீக வணிகர்கள் விளித்த செரண்டிப்…
-
- 2 replies
- 982 views
-
-
இன்று டைட்டானிக் கப்பல் சம்பவத்தின் நூற்றாண்டு டைட்டானிக் கப்பல் கடலில் விபத்திற்குள்ளானதன் நூற்றாண்டு விழா அணுசரிக்கப்பட்டது. கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி லண்டனில் செளதம்டான் துறைமுகத்திலிருந்து நியூயார்க் நோக்கி புறப்பட்ட டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15-ம் தேதி நள்ளிரவில் அண்டிகார்கா கடலின் பனிப்பாறையில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 1200-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். அந்த கோர விபத்து நடந்ததன் நூற்றாண்டு விழா இன்று அணுசரிக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் கடந்த 11-ம் தேதி எம்.எஸ். பால்மோரல் என்ற கப்பல் டைட்டானிக் கப்பல் அதே லண்டன் செளதம்டான் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு டைட்டானிக் பயணித்த பாதையில் சென்றுள்ளது. நாளை அஞ்சலி செலுத்துகின்றனர். கடந்த…
-
- 2 replies
- 829 views
-
-
இந்தக் கட்டுரை எழுதப்படும் போது வடக்கு மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பநிலை தீரவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக கடையடைப்பு, எதிர்ப்புப் பேரணி, கண்டனக் கூட்டமென வடக்கு சுறுசுறுப்பாக இருக்கிறது. இந்த நிலையில், நாளை என்ன நிகழும் என்பது பற்றிய கணிப்புக்களை வெளியிடுவதும் கடினமானது. இந்தப் பிரச்சினையின் ஆழத்தை மதிப்பிடுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். தமிழ் அரசியல் பரப்பில் கடந்த இரண்டு வாரகாலமாக வடக்கு மாகாண சபை விவகாரமே பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால், அமைச்சர்கள் மீதான விசாரணைதான் இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் போல் தெரியும். அதுதான் உண்மையான காரணமா? முதலில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்! ஒக்டோபர் 2013இல் வ…
-
- 2 replies
- 334 views
-
-
எத்தனையோ பிரச்சினைகள் மத்தியிலும் இன்று இலங்கையில் மிக முக்கிய இடம் வகிப்பது முஸ்லீம்களின் சனத்தொகை உயர்வாகும். (மிச்சம் முக்கியம்) இதை சாட்டாக வைத்தே ஒரு திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு நோக்கி பேரினவாதிகள் நகர்கிறார்கள் .இன்னுமொரு இனம் அதற்கு தூபம் போட்டு மகிழ்கிறார்கள். அது எல்லாம் உண்மையா? 1)ஜாதகப் பொருத்தங்கள்…. பொதுவாக இலங்கையில் பௌத்தர்களாகட்டும்,இந்துக்களாகட்டும் திருமணம் என்று வரும் போது ஜாதகம்,ஜோசியம் என பலவற்றை ஆராய்ந்து,தட்டிக் கழித்துக் கொண்டிப்பதால் ஆண்,பெண் இரு தரப்பினரதும் திருமண வயது கூடிக் கொண்டே போகிறது.ஆனால் முஸ்லீம் பெண்கள் பெரும்பாலும் 22/23 வயதில் திருமணம் முடித்து விடுகின்றனர். இருபது வயதுகளில் ஒவ்வொரு மாதமும் கருக்கட்டலுக்கு அதிக வாய்ப்புகள் இரு…
-
- 2 replies
- 647 views
-
-
இன்னமும் ஞாபகம் இருக்கின்றது .. “காக்காமாரே ..இஞ்சேயிருந்து போவது உதுதான் கடைசி முறை வடிவாய் இன்னொரு முட்றை பார்த்துக்கொள்ளுங்கோ .. உது ஈழம் ,இஞ்ச இனி உங்களுக்கு இடமில்லை தெற்கே போய் அஸ்ரப்பிட்ட கேளுங்கோ ..” என்று மாங்குளத்தில் கூட்டம் ஒன்றோடு நின்று கொண்டு எங்களை பார்த்து சிரித்த வண்ணம் குரல் எழுப்பிய அந்த கிழட்டு உருவத்தை .. அது நடந்த்து 1990 ஆகஸ்ட் மாதத்தில் .. ஒரு சில மாதங்களில் அந்த கிழடு சொன்னது உண்மையாகியது . ஆம் , இரண்டு மணி நேரத்தில் எங்களது அனைத்து சொத்துக்களும் பறி முதல் செய்யப்பட்ட நிலையில் இந்தியன் ஆமி செல்லமாக அழைத்த ‘குட்டிச்சிங்கப்பூரில்’ இருந்து அகதிகளாக ஆக்கப்பட்டோம் . எங்களைப்பற்றி வெளி உலகத்துக்கு சொல்லட்டுவதற்கு அப்போது வாட்சப் இருந்திருக்கவில்லை…
-
- 2 replies
- 741 views
-
-
எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும் - தேசியத் தலைவர் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கை. பதிவேற்றுனர்: திரு வேந்தனார் திகதி: 28 Dec, 2024 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கையை காலத்தின் தேவை கருதி இன்று மீள் வெளியீடு செய்கின்றோம் .! இன்று இரத்தம் வழிந்தோடும் எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும்.! வரலாற்று ரீதியாக ஈழத்தமிழினம் ஒரு அப்பட்டமானஇன அழிப்பை எதிர்நோக்கி நிற்கின்றது. தமிழரின் தேசிய அடையாளத்தைச் சிதைத்துவிடும் நோக்கில் மிகவும் நுட்பமாகத் திட்டமிடப்பட்டு இந்த இன அ…
-
-
- 2 replies
- 311 views
-