நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
தற்கொலை குண்டுதாரிகளின் குடும்பத்தவர்களின் நிலை என்ன? இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற சில நாட்களிற்கு பின்னர் தற்கொலைகுண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஒருவரின் வீட்டிற்கு வெளியே கூடிய சிலர் தங்கள் பகுதியை கண்காணிப்பதற்கான விழிப்புக்குழுவொன்றை ஏற்படுத்தினார்கள். தற்கொலை குண்டுதாரியின் குடும்பத்தவர்கள் மேலும் தாக்குதல்களை மேற்கொள்வதை தடுப்பதே அவர்களின் நோக்கம் அந்த வீட்டிற்குள்ளிருந்தவர்கள் அச்சத்தின் பிடியில் சிக்குண்டிருந்தனர். தங்கள் குடும்பத்தவர் ஒருவர் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டதால் அவர்கள் தங்களிற்கு என்ன நடக்குமோ என்ற கவலையிலும் அச்சத்திலும் சிக்குண்டிருந்தனர். எனது சகோதரர் தற்கொலைகுண்டுதாக்குதலில் ஈடுபட்டதால் மக்களின் முகத்தை…
-
- 1 reply
- 518 views
-
-
கட்டுரையாளர் 2009 ல் டிசம்பரில் எழுதிய கட்டுரை ஏற்கனவே தெரிந்திருந்தாலும் சில பார்வை கோணங்கள் வித்தியசமாக உள்ளது ஆகவே இங்கு இணைத்துள்ளேன் . முதல் யுத்தம் பிரபாகரன் என்பவரை இந்த நிமிடம் வரைக்கும் வளர்த்தது அவருடைய தன்னம்பிக்கை என்றாலும் அதற்கு மேலும் அவருடைய மூர்க்கத்தனத்தை முழுமையாக ஆளுமை என்று நம்ப வைத்ததிற்கு மறைமுக காரணம் ஜெயவர்த்னே என்றால் அது சற்று கூட மிகையில்லை. ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள் அத்தனை பேரும் சட்ட ரீதியான ஏற்பாடுகளை செய்தார்களே தவிர இவரது கால தமிழர் தாக்குதல்கள் என்பதும் ஒப்பிடும் போது குறைவு. இதுவே தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை என்பதாகவும், அச்சம் என்ற நிலைமையிலும் அவரை ஆதரிக்க வைத்தது. இரண்டும் கலந்து நாள்பட பாசமாகவும் மாற்றம் பெறத் தொடங்கி…
-
- 1 reply
- 3.9k views
-
-
தீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறித்த தகவல்களை இந்தியா அறிந்திருந்தும் தலையிடாமைக்கான காரணத்தை தெரிவிக்கிறார் கேர்ணல் ஹரிகரன் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்பிலான தகவல்களை இந்தியா அறிந்திருந்தும் இலங்கையின் உள்நாட்டு விடயமான பாதுகாப்பில் அளவுக்கு மீறி தலையிட்டால் அது இலங்கை அரசியலில் இந்திய எதிர்ப்பை மேலெழச் செய்வதற்கே வழி வகுக்கும் என்பதாலேயே பொறுமையாக இருந்தது என்று இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள் ஒருவரும் எழுத்தாளருமான கேர்ணல் ஆர்.ஹரிகரன் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, …
-
- 1 reply
- 412 views
-
-
சுழலும் ‘தூஸ்ரா’வும் கவிழும் தன்மானமும் காரை துர்க்கா / 2019 செப்டெம்பர் 17 செவ்வாய்க்கிழமை, பி.ப. 07:08 Comments - 0 மேம்பட்ட மனிதன், பேச்சின் மிதமாய் இருப்பான். ஆனால், சிறப்பான செயல்களில், மிஞ்சி விடுவான். எத்தகைய உயர்வும் தாழ்வும் இன்றி, ஒவ்வொருவருடைய சிந்தனையும் பேச்சும் செயலும், சாதக, பாதக விளைவுகளை ஏற்படுத்த வல்லனவாகும். இந்நிலையில், தமிழ் பேசும் நல் உள்ளங்கள், பெருமை கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரன் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ள கருத்துகள், தமிழ் உள்ளங்கள் மத்தியில் கவலையை, விரக்தியை ஏற்படுத்தி உள்ளன. சீ! இவர்கள் ஏன், இப்படி நடந்து கொள்கின்றார்கள் எனக் கோபத்தை உண்டாக்குகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி (தமிழ் …
-
- 1 reply
- 611 views
-
-
புறக்கணிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட தமிழர்கள் இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் ஒன்றாக மன்னார் மாவட்டம் விளங்குகின்றது. தேர்தல் தொகுதிகளில் வன்னிமாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளிலொன்றாகவும் இது இடம்பெறுகின்றது. இம்மாவட்டத்தில் மன்னார் பட்டினம், மாந்தை மேற்கு, மடு, நானாட்டான், முசலி ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் இயங்கி வருகின்றன. அதேபோல் மன்னார் மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் மன்னார் மற்றும் மடு ஆகிய இரு கல்வி வலயங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றில் மன்னார் கல்வி வலயத்திலுள்ள சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி, புனித சவேரியார் ஆண்கள் பாடசாலை, புனித சவேரியார் பெண்க…
-
- 1 reply
- 475 views
-
-
கடந்த மூன்று தசாப்தங்களாக மிகப்பாரிய அளவில் சிங்கள அரசுகளின் இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டு, இப்போது வன்னி நிலப்பரப்பினை ஆக்கிரமிக்கும் உச்ச நடவடிக்கையாக கிட்டத்தட்ட நான்கு இலட்சம் தமிழ் மக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் நெருக்கித் தனது இன அழிப்பின் உச்சக்கட்டத்தை சிங்கள அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. உணவுத்தடை, மருந்துத்தடை என அடிப்படை வாழ்வாதாரங்களை மறுத்து, அத்தோடு நாளாந்தம் விமானக்குண்டு வீச்சுகளுக்கும், பல்குழல் எறிகணைக் குண்டு வீச்சுகளுக்கும் இரையாக்கப்பட்டும், உடலின் பாகங்கள் சிதைக்கப்பட்டும், அதே நேரம் காயம்பட்டவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஆகக்குறைந்த முதலுதவியையும் கிடைக்காத அளவுக்கு மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக குற்றுயிராகக் கிடக்கும் மக்கள் மேல் குண்டு…
-
- 1 reply
- 732 views
-
-
உள்ளடக்கம்:- சுரேன் ராகவன்(ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவர்) அரசியல் கைதிகளின் விடுதலை பற்றித் தெரிவித்திருக்கும் கருத்தை வரவேற்கின்றேன்; மூத்த பாரிய குற்றங்கள் செய்தவர்கள் பகட்டாக வெளியில் திரியும் போது இந்த அடிமட்ட கைதிகளை விடுவிக்க வேண்டும்.
-
- 1 reply
- 508 views
-
-
ஆயுதப் போராட்டத்திற்கான அறம்:குட்டி ரேவதி inioru.com இல் இருந்து மூல இணைப்பு் இங்கே ஆயுதப் போராட்டம் என்பது ஒரு வன்முறை என்று கூறுதலே ஒரு சமூக இயக்கத் தந்திரமாகவும் அதை ஒரு நாடு இராணுவத்தின் பெயரால் செயல்படுத்தும் போது அதுவே ஒரு ராஜதந்திரமாகவும் அர்த்தம் பெறுகிறது. ஆயுதம் என்றால் என்னவோ உலோகங்களாலும் இன்ன பிற ஆக்கங்களாலும் ஆக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது. இது ஓர் ஒற்றைப் பரிமாணச் சிந்தனையே. ஒடுக்குமுறையைச் செயல்படுத்துபவர்கள் தங்களால் இயன்ற எல்லாவற்றையும் ஆயுதமாகப் பயன்படுத்துகையில் நாம் ஆயுதத்தையே ஆயுதமாகப் பயன்படுத்துவது அறம் பிழைத்ததாகாது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுத இயக்கமும் ஆயுதப் போராட்ட வடிவங்களும் முன்னிலை வகுத்ததாலேயே அதை ஒரு வன்முறை இ…
-
- 1 reply
- 556 views
-
-
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரிக்கு சேவை நீடிப்பு – உயர் அதிகாரிகள் மத்தியில் குழப்பம் OCT 06, 2018 | 14:03by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று மாத கால சேவை நீடிப்பை வழங்கியிருப்பது, இராணுவ உயர்மட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இராணுவத் தலைமை அதிகாரி மற்றும் பிரதி தலைமை அதிகாரி பதவியில் நியமிக்கப்படும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்த்திருந்த மேஜர் ஜெனரல்கள் மத்தியிலேயே இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ, ஓய்வுபெறாததால், பதவி உயர்வு பெறும் வாய்ப்பை இழக்கும் அல்லது பதவி உயர்வு தாமதமடையக் கூடிய மேஜர் ஜென…
-
- 1 reply
- 749 views
-
-
சனல்போர் காணொளி தற்போது வெளிவர காரணம் என்ன? – வேல்ஸ் இல் இருந்து அருஸ் September 11, 2023 இலங்கையில் இடம்பெறும் பூகோள அரசியல் நகர்வுகளில் மேற்குலகம் தனது மற்றுமொரு காயை நகர்த்தியுள்ளது. பிரித்தானியாவை கொண்ட சனல் போர் நிறுவனம் வெளியிட்ட காணொளி என்பது ராஜபக்சா குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலத்தை இல்லாது செய்யும் ஒரு நகர்வு. தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் போரில் இலங்கை அரசுக்கு நிபந்தனைகளின்றி ஆதரவளித்த இந்தியாவும், அமெரிக்காவும் போரின் பின்னர் தமது நிலைகளை உறுதி செய்வதில் காண்பித்த போட்டிகள் தான் இன்றும் இலங்கையை மீளமுடியாத பொறிக்குள் தள்ளிவருகின்றது. போரின் பின்னர் ராஜபக்சாக்களுக்கு இந்திய தரப்பு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததும், சீனா உள்நுளைந்ததும் மேற…
-
- 1 reply
- 397 views
-
-
Published By: RAJEEBAN 23 SEP, 2023 | 09:35 AM சனல் 4 ஆவணப்படத்திற்கு உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த தகவல்களை வழங்கிய ஹன்சீர்ஆசாத் மௌலானா மேலும் பல தகவல்களை அடங்கிய புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் புத்தளத்தின் தென்னந்தோப்பில் இடம்பெற்ற சந்திப்பு – உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முன்னரும் பின்னரும் பிள்ளையானிற்கும் தனக்குமான உரையாடல்கள் உட்பட பல விபரங்களை வெளியிட்டுள்ளார் அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை தூண்டியுள்ளது . ஆவணப்படம் குறித்து சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டும் எ…
-
- 1 reply
- 215 views
- 1 follower
-
-
டாக்டர் நெவில் பெர்னான்டோ கொரோனவால் பாதிப்பு. வைத்தியசாலையில் அனுமதிப்பு. இலங்கைத்தமிழர் அவலத்தில், முஸ்லிம்கள் மட்டுமல்ல, சிங்கள கிறித்தவர்கள் கூட கைவரிசை காட்டி உள்ளனர். இன்று, பௌத்தம் இரு சாராரையுமே தனது சுஜரூபத்தினை காட்டி அடங்க வைத்துள்ளது. ஜேஆர் ஜயவர்தன காலத்தில், இந்த நெவில் பெர்னான்டோவுடன், சேர்ந்து பே-ராட்டம் நடத்திய இன்னொரு கிறிஸ்தவர் சிறில் மத்தியூ. இவர்கள் பௌத்தர்களும் பார்க்க, பெரும் இனவாதிகளாக, தம்மை காட்டிக் கொண்டது மட்டுமல்ல, நடந்தும் கொண்டனர். 1983 ஆண்டு தமிழர் மீதான வன்முறையில், (கலவரம் என்பது தவறு, அது ஒரு இனப்படுகொலை) இந்த சிறில் மத்தியூ பண்ணிய கொடுமைகள் சொல்லி மாளாது. சிறில் மத்தியூ, அரசியல் அனாதையாக இறக்க, அவர் மகன் நந்தா மத…
-
- 1 reply
- 592 views
-
-
வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதில் இலங்கை எதிர்நோக்கும் இடர்பாடுகள் Veeragathy Thanabalasingham on June 21, 2022 Photo, AP Photo/Eranga Jayawardena, Indianexpress பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் சரியாக ஒரு மாதமும் ஒரு கிழமையும் கடந்துவிட்டது. தன்னை ஒரு நெருக்கடிகால பிரதமர் என்று வர்ணிக்கும் அவர் இலங்கை மக்கள் மூன்று வேளை உணவு உண்பதை உறுதிசெய்வதே தனது முதல் பொறுப்பு என்று பதவியேற்ற அன்றே சொன்னார். பிறகு நாட்டின் பொருளாதாரம் எதிர்வரும் மாதங்களில் மேலும் மோசமடையும் ஆபத்து இருக்கிறது என்றும் மக்கள் இரு வேளை உணவுடன் சமாளிக்கவேண்டிய நிலை வரக்கூடும் என்றும் அபாயச்சங்கு ஊதினார்.…
-
- 1 reply
- 328 views
-
-
அண்மையில் உங்களின் twitter பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் “இஸ்லாமிய பெயர்கொண்ட அடிப்படைவாதிகள், “அராபிய தோற்றப்பாட்டை” நகல் செய்யும் சமீபகால கலாச்சாரத்தை கைவிட்டு, இலங்கை சமூகத்துடன் அடையாளப்படும் வழியை தேடவேண்டும்” எனும் செய்தியை பார்த்ததும் மிகவும் வேதனை அடைந்தோம். முஸ்லிங்கள் வலிகளாலும் வேதனைகளாலும் இழப்புகளாலும் உணர்வு இழந்து இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் கூறிய கூற்று எரிகிற வீட்டில் என்னை ஊற்றுவது போலவே காணப்படுகிறது. தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் எனும் உயர்ந்த பொறுப்புள்ள அமைச்சராக இருந்து கொண்டு இவ்வாறு ஒரு சமூகத்தை பற்றி பேச முடியுமா அமைச்சர் அவர்களே! தற்பொழுது நாட்டில் ஏற்பட்டு இருக்கும் கலவரம் பற்றி நீங்கள் அறிந்து இருப்பீ…
-
- 1 reply
- 586 views
-
-
தமிழ்நாட்டின் அரசு முத்திரையில் இடம் பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தை மாற்ற வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் இந்தியாவில் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன. அதுநாள்வரை சென்னை ராஜதானியில் இருந்த சிலபகுதிகள் புதிதாக உருவான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த கு காமராஜர் தலைமையிலான அரசு, அரசாங்க சின்னமாக வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்ந்தெடுத்தனர். இந்த சின்னமே இன்று வரை தமிழக அரசின் சின்னமாக தொடர்ந்…
-
- 1 reply
- 601 views
-
-
ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:- என்னுடைய அப்பாவின் (முன்னாள் எம்.பி தர்மலிங்கம்) தாக்கம்தான் என்னையும் அரசியலுக்கு கொண்டு வந்தது. அவரை அப்பு என்றுதான் சொல்வேன். தமிழரசுக்கட்சி ஆதரவாளனாக அகிம்சைவழியில் ஆரம்பித்த அரசியல் பயணத்தை, 57 வருடங்களின் பின் இன்று மீண்டும் திரும்பிப்பார்த்து, சில சம்பவங்களை எழுதுகிறேன். 1961ம் ஆண்டு சத்தியாக்கிரகம் நடந்தபோது எனக்கு பன்னிரண்டு வயது. அதில் கலந்து கொண்டதுதான் முதல் போராட்டம். பன்னிரண்டு வயதிலேயே அரசியல்ரீதியான தெளிவுடன் அதில் கலந்துகொண்டேன் என பொய் சொல்லவில்லை. அப்புவுடன் நானும் அதில் கலந்து…
-
- 1 reply
- 373 views
-
-
எம்மிடையே இப்படியும் மனிதர்கள்..-இதயச்சந்திரன் (சமூகப் பார்வை) ஒரு பேப்பரின் 200 வது இதழுக்கு, அரசியல் கட்டுரை எழுதுவதைத் தவிர்ப்போம் என்று ஏற்கனவே முடிவெடுத்து விட்டேன். எப்போது பார்த்தாலும், இந்தியா -சீனா ,விடுதலைப்புலிகள், இந்துசமுத்திரப் பிராந்தியம், மகிந்தா- பசில் என்று எழுதிக்கொண்டிருக்கிறார், பொருளாதாரம் பற்றியும் எழுதுகின்றார், சமூக வாழ்வின் பக்கங்கள் குறித்து எழுதுவதில்லை என்கிற ஆதங்கம் பலரிடம் உண்டு. அரசியல் கலவாத காற்றுவெளி இல்லை. அது சில இடங்களில் மேற்பரப்பில் துருத்திக்கொண்டு நிற்கும். அநேகமான துறைகளில் அடியில் ஒளிந்திருந்து எல்லாவற்றையும் இயக்கும். இப்போது அன்றாட வாழ்வுச் சூழலில் நாம் எதிர்கொள்ளும் பொதுமையான ஒருசில விடயங்களைப் பார்ப்போம். சராசரி வாழ்க்…
-
- 1 reply
- 482 views
-
-
சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும் எம். காசிநாதன் / 2019 செப்டெம்பர் 09 திங்கட்கிழமை, பி.ப. 04:56 Comments - 0 இந்தியாவின் “சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்” தொடர்பான வழக்குகளில், “முன் பிணை பெறுவது அரிது” என்ற ஓர் உறுதியான நிலைப்பாட்டை, இந்திய உச்சநீதிமன்றம் எடுத்திருக்கிறது. “பொருளாதாரக் குற்ற வழக்குகளில், முன் பிணை என்பது அரிதாகவே கொடுக்க வேண்டும். அதற்கு, இந்த வழக்கு உகந்தது அல்ல” என்று, முன் பிணை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், திகார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். “ஐ என் எக்ஸ்” மீடியா வழக்கில், சி.பி.ஐ அமைப்பால் கைது செய்யப்பட்ட சிதம்பரம், “திகார் ஜெயிலுக்குப் போய்விடக் கூடாது” என…
-
- 1 reply
- 298 views
-
-
ஒருவன் வாழ்ந்தான் எபதற்குச் சாடசியாக அமைவது அவனது மரணமும் அதன் பின்னரான நாட்களுமேயாகும். வாழ்தல் என்பதற்கும் உயிரோடு இருத்தல் என்பதற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. வாழ்தல் என்பது மரணத்தின் பின்னரும் நிலைத்திருக்கும் மாண்பு கொண்டது. மரணம் உடலைச் சாய்த்த பின்னரும் மக்கள் மனங்கள் அவனது நினைவோடு லயித்திருப்பது அவனது வாழ்தலின் சாட்சியமாக உள்ளது. பாரிஸ் நகரில் பலிகொள்ளப்பட்ட பரிதி அவர்களது வாழ்தலும் உயர்ந்த பதிவுகளையும் பல நினைவுகளையும் அவர் வாழ்ந்த தளங்களிலும் அவர் நேசித்த மனிதர்கள் மனங்களிலும் பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. பரிதி என்ற மாமனிதன் எதை எங்களிடம் விட்டுச் சென்றான்...? எதை எங்களிடமிருந்து கவர்ந்து சென்றான்...? தமிழீழ விடுதலை என்ற ஒற்றை இலட்சியத்தின் உயிரோடையாக…
-
- 1 reply
- 676 views
-
-
காஷ்மீரில் இன ஒடுக்குமுறை இல்லையாம்! காசி ஆனந்தனின் புதிய கவிதை! இந்திய அரசை ஈழ விடுதலையின் நட்பு சக்தியாக சித்தரித்தவர்களின் மோசடிகள் பித்தலாட்டங்கள் எல்லாம் அம்பலமாகிவிட்டன. “ஈழவிடுதலைக்கு இந்தியா பகை சக்தி” என்ற உண்மையை போராடும் மாணவர்களும் இன்று புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இந்திய அரசை தாஜா செய்து ஈழத்துக்கு ஆதரவாக மாற்றி விட முடியும் என்று புலி ஆதரவாளர்களும் புலிகளும் கண்ட கனவை, கந்தக வெறியுடன் பொசுக்கியிருக்கிறது இந்திய அரசு. காசி ஆனந்தன்இந்த சூழலில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “அக்னிப் பரீட்சை” என்ற நேர்காணல் நிகழ்ச்சியில், ஈழத்து “உணர்ச்சிக் கவிஞர்” காசி ஆனந்தன் பேசியிருக்கும் பேச்சு, அவரது அடிமை உணர்ச்சியை அடையாளம் காட்டியது. “நேற்றும் இன்ற…
-
- 1 reply
- 625 views
-
-
லிங்கேஸ்வரன் விஸ்வாதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழினப் படுகொலையை நியாயப்படுத்தும் படம் 'Madras Cafe'. இதனை எதிர்த்து குரல் கொடுப்பதற்கும், இதனைத் தடை செய்வதற்கும் தமிழகத்தில் முதுகெலும்புள்ள தமிழர்கள் இல்லையா? சிங்களப் பேரினவாதம் மனிதாபிமான நடவடிக்கை என்று தமிழின அழிப்பை நியாயப்படுத்தி இனப்படுகொலையினை மூடிமறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. சிங்கள அரசும், இந்திய அரசும் இணைந்து ஈழத்தில் நிகழ்த்தியது இனப்படுகொலையல்ல, அது மனிதாபிமான நடவடிக்கை என்பதனையே இப்படம் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இவ்வாறு இப்படம் தொடர்பான சில தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழினத்தை அழித்த சிங்கள அரக்கர்களும் சோனியா என்ற அரக்கியின் அரசும் இன்று தமிழின அழிப்பை நியாயப்படுத்தும் முயற்சியி…
-
- 1 reply
- 438 views
-
-
சுதந்திரத்தின் போது இலங்கையில் தமிழர் சனத் தொகை 11% ஆக இருந்தது. புலம் பெயர்தல், அழிவுகள் மூலம் இது குறைந்திருக்க வேண்டும் அல்லவா. எனினும் அண்மைய கணக்கெடுப்பினை வைத்து மனோ கணேசன் ஒரு சிந்தனைக்குரிய ஆய்வினை வெளியிட்டு உள்ளார். சனத்தொகைக் கணக்கெடுப்பு என்ன சொல்கின்றது? சிங்களவர் - 74.9% இலங்கைத் தமிழர் - 11.2% முஸ்லிம்கள் - 9.2% இந்தியத் தமிழர் - 4.1% ஆக சுதந்திரத்தின் போது இருந்த வீதாசாரத்தினை இலங்கைத் தமிழர் தக்க வைத்து உள்ளார்கள் போல் தெரிகின்றது அல்லவா. குறிப்பிடத்தக்க கல்வி அறிவும், குறைவான சனப்பெருக்கமும், புலம் பெயர்தலும் கொண்ட இலங்கைத் தமிழர், அதே வீதாசாரத்தினை தக்க வைத்தது எங்கனம் சாத்தியமானது என மனோ கணேசன் ஆராய்ந்தார். 1981 ம் ஆண்டின் பின்னர், சிறிம…
-
- 1 reply
- 806 views
-
-
ஊர்தி அரசியல்..! திலீபன் வாக்கு வங்கியில் முதலீடு! September 21, 2023 ************************************** (மௌன உடைவுகள் -45) — அழகு குணசீலன் — கிழக்கின் பொத்துவில்லில் செப்டம்பர் 17 இல் ஆரம்பித்த திலீபனின் நினைவேந்தல் ஊர்தி ஊர்வலம் வந்தவழியில் வன்முறையில் சிக்கியிருக்கிறது. இதுகுறித்து பல்வேறு கோணங்களில், பல்வேறு கருத்துக்கள் பேசப்படுகின்றன. இவை அனைத்தும் வழமையான தமிழ்த்தேசியம் பாணி. விடுதலைப்போராட்டம், புரட்சி இவை எல்லாம் அரச இயந்திரத்திற்கு எதிரான சட்டமறுப்பு, சட்டம் ஒழுங்கை மீறுவதில், எதிர்ப்பதில் ஆரம்பமாகிறது என்பது வெளிப்படை. போர்க்காலத்தில் இவை உச்சத்தை தொட்ட ஆயுத வன்முறைகளாக இருந்தன. சமகாலம் போர் ஓய்வுக்கு பின்னரான நல்ல…
-
- 1 reply
- 437 views
-
-
வெறுமனே கிடந்த சீனா விறுவிறுவென சோவியத் சீனாவாக மாறிவிட்டது என்ன செய்யப்போகிறது ரஸ்யா… சீனாவும், ரஸ்யா ஆகிய இரண்டு நாடுகளுக்குமிடையே பாரிய மோதல் அறநீராக ஓடிக்கொண்டிருப்பதாக இன்றைய அதிகாலை ஐரோப்பிய செய்திகள் தெரிவிக்கின்றன. அதை கச்சிதமாக வெற்றி கொள்ளவே ரஸ்ய பிரதமர் விளாடிமிர் புற்றின் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளார் என்றும் கூறுகின்றன. இந்த ஆய்வுகளில் இருந்து திரட்டக்கூடிய தகவல்கள் இப்படியுள்ளன : சீனாவும், ரஸ்யாவும் கம்யூனிசத்தின் அடிப்படையில் கொண்டிருந்த நட்பு இதுவரை ரஸ்யாவை கம்யூனிச அண்ணனாகவும், சீனாவை தம்பியாகவும் காட்டி வந்தது, ஆனால் ரஸ்யர்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக சீனா எடுத்த நகர்வு தற்போது சீனாவை அண்ணனாக்கி ரஸ்யர்களை தம்பியாக்கிவிட்டது, இதற்கான காரணங்கள் …
-
- 1 reply
- 686 views
-
-
தேசிய நல்லிணக்கத்துக்கு சிங்கள தேசத்துக்கு இதைவிட வேறு ஏதும் சின்னமோ புகைப்படமோ தேவையில்லை. என்ன மாதிரியாக ஒரு வாஞ்சையுடன் அந்த கொடியை ஏந்தியபடி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதின நிகழ்வு மேடையில் ஆட்டிக்காட்டுகிறார். இந்த சிங்கக் கொடியை நந்திக் கடலின் ஓரத்தில் நீண்ட கம்பத்தில் எந்தவொரு இடைஞ்சல்களுமின்றி பறக்கவிடுவதற்காக சிங்களப்படைகளால் கொல்லப்பட்ட லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் இறுதிநேர கதறல்கள் இந்த மேதின ஆட்டத்தில் சம்பந்தனின் காதில் விழாமலேயே போயிருக்கும். இந்த சிங்கக்கொடியின் கீழேதான் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் சௌ;துள்ளோம். எனவே அந்த கொடியை ஏந்திப்பிடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என அவரின் சட்டத்தரணித்தனமான வாதம் கேட்கலாம். பயமுறுத்தலின் கார…
-
- 1 reply
- 932 views
-