Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன தோன்றுகின்றது?

Featured Replies

கீழுள்ள இந்தப்புகைப்படத்தை பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை கவிதையாக தரமுடியுமா?

கவிதையாக வடிக்க முடியாதவர்கள் வசனங்களிலாயினும் கூறுங்கள்.

இப்புகைப்படம் பற்றிய எனது எண்ணங்களை கவிதையாக அல்லது வசன நடையில் இறுதியாக தருகின்றேன்.

நன்றி!

ji3rtx21sfle.jpg

(மேலுள்ள புகைப்படத்துடன் சம்மந்தப்பட்ட செய்தியை பார்க்க இங்கே அழுத்தவும்)

Edited by கரும்பு

கீழுள்ள இந்தப்புகைப்படத்தை பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை கவிதையாக தரமுடியுமா?

கவிதையாக வடிக்க முடியாதவர்கள் வசனங்களிலாயினும் கூறுங்கள்.

இப்புகைப்படம் பற்றிய எனது எண்ணங்களை கவிதையாக அல்லது வசன நடையில் இறுதியாக தருகின்றேன்.

நன்றி!

ji3rtx21sfle.jpg

(மேலுள்ள புகைப்படத்துடன் சம்மந்தப்பட்ட செய்தியை பார்க்க இங்கே அழுத்தவும்)

கரிகால் சோழன் கடலோடிப் புகழ் சேர்த்தான் தமிழனுக்கு .

மிலேலினியத்துக் கரிகாலன்

இந்து சமுத்திரத்தில் " கடல் புறாக்களாய் " பரணி பாடினான் .

ஆனால் நீங்கள் ,

அடக்கியவர் தேசத்தில்

அடிமையாய் பரணி பாடினீர்கள்!!!!!!!

வேண்டாத விருந்தாளிக்கு

அங்கு என்ன வேலை ?

உங்கள் மண் சோகமே பாடினாலும் சொர்க்கமல்லவா ?

சோகத்தை துடைத்தெறிந்து

புதுப் பரணி பாடுங்கள்

கௌரவமாக .............

Edited by சொப்னா

  • கருத்துக்கள உறவுகள்

ji3rtx21sfle.jpg

அணைக்க வேண்டிய கரங்களே,

அள்ளியெறிந்த பரிதாபம்!

தன்னை ஒறுத்துத் தவித்திருப்பாள்,

உன்னைப் பெற்றெடுத்த அன்னை!

உன் கனவுகளின் மூலதனத்தில்,

உயிர் வாழும் தங்கைகள் எத்தனையோ?

வாவென்று அழைத்து, அரவணைக்க,

வாசலுக்கு யாரும் வரவில்லை!

அந்த வாடிய முகங்கள் போதும்!

ஆயிரம் கதை சொல்லுகின்றன!

ஆனாலும் கலங்காதே, தோழனே!

ஏனெனில் நானும் உன்னைப்போல!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த பூமி -அதை

தொடுவதற்கு அழுகின்றோம்

என் வீடு திரும்ப

எனக்கு நடுக்கம்

உயிரைக் கேட்டால் கொடுத்துவிடலாம்

ஒவ்வொரு நாளும் செத்து செத்து......

தப்பினோம் என நினைத்தோம் -இல்லை

விதானையார் வீட்டில் ஒளித்தோம்

ஐ.நாவாவது இரங்கும்

நப்பாசை இருந்தது

சீ அது செத்து நாளாச்சு..

இனி

பூனை துரத்தி விளையாடும்

எலி தான் நாங்கள்...........

கீழுள்ள இந்தப்புகைப்படத்தை பார்க்கும்போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை கவிதையாக தரமுடியுமா?

கவிதையாக வடிக்க முடியாதவர்கள் வசனங்களிலாயினும் கூறுங்கள்.

இப்புகைப்படம் பற்றிய எனது எண்ணங்களை கவிதையாக அல்லது வசன நடையில் இறுதியாக தருகின்றேன்.

நன்றி!

ji3rtx21sfle.jpg

(மேலுள்ள புகைப்படத்துடன் சம்மந்தப்பட்ட செய்தியை பார்க்க இங்கே அழுத்தவும்)

எந்தையையும் தாயயையும் ,

முன்னொருகால் உறுஞ்சிய

அதே வெள்ளையின்

புதிய வம்சத்து எச்சில் துப்பலாய் !!!!!!!

என்னை

இங்கு சொல்லி கொள்ளமலே துப்பி விட்டார்கள் .

என்ன தான் நான் பல அவதாரங்கள் எடுத்தாலும் ,

என் நிலையை உணர்த்திய

வெள்ளைக்கு ஒருகோடி நன்றிகள் ..........

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]என்ன தோன்றுகின்றது?[/size]

இலட்சங்கள் பலவற்றை வட்டிக்கும்

வட்டியின் குட்டிகளுக்கும்

குடியிருக்கும் ஒரே காணித்துண்டையும் ஈடுவைத்து

ஏஜென்சி, சப்-ஏஜென்சி என்று வாரியிறைத்து

சீமைக்கு வந்து சீந்துவாரின்றி

முன்னர் வந்து முதலாளியான தமிழர்களிடம்

இரண்டுக்கும் நாலுக்கும் தும்படித்து

அரை வயிறு கால் வயிற்றுடன் சேமித்த காசையும்

சொலிசிற்றர்களுக்கும் பாரிஸ்டர்களுக்கும் விட்டெறிந்தும்

எல்லா அப்பீல்களும் பிழைத்துப் போய்

ஒளிந்துவாழவும் முடியாமல் பிடிபட்டு

டிரென்சன் சென்ரர்களில் சோறும் கிடைக்காமல்

பிளேன் ஏறுமட்டும் கனவுடன் இருந்த

உங்களுடனும் உங்களது இரண்டு பவுண் பொதியுடனும்

பாயும் சிங்கங்களைக் தாங்கிய பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுடன்

பலவருடம் காணாத கோயில் திருவிழாவுக்கு

புலிப்பல்லுச் சங்கிலியும் கறுப்புக் கண்ணாடியும் அணிந்து

ஒன்றாகப் பயணிக்காமல் பார்த்துக்கொண்ட

இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றுகின்றது.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடனும் உங்களது இரண்டு பவுண் பொதியுடனும்

பாயும் சிங்கங்களைக் தாங்கிய பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுடன்

பலவருடம் காணாத கோயில் திருவிழாவுக்கு

புலிப்பல்லுச் சங்கிலியும் கறுப்புக் கண்ணாடியும் அணிந்து

ஒன்றாகப் பயணிக்காமல் பார்த்துக்கொண்ட

இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றுகின்றது.

வார்த்தைகளின் வலிமை, வியக்க வைக்கின்றது, கிருபன்!

இருவருக்கும், எந்த வித வித்தியாசமும் இல்லை!

'காலம்' என்னும் அரக்கனைத் தவிர!

  • தொடங்கியவர்

இவ்விடயத்தை முதலில் அரசியல் அலசலில் போடலாமா என்று பார்த்தேன். பின்னர் இங்கு இணைத்தேன்.

இதுபற்றி நான் சுருக்கமாக கூறக்கூடியது:

நான் அறிந்தவரையில் 1980கள் தொடக்கம் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வு சூறையாடப்பட்டுள்ளது, நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன, சொந்த இடங்களை விட்டு பல இலட்சம் மக்கள் துரத்தப்பட்டுள்ளார்கள், கற்பனை செய்யமுடியாத அளவிற்கு மக்கள் உளவியல் பாதிப்புக்களிற்கு உள்ளாகினார்கள்.

ஆனால், இலங்கையில் போர் நிறைவடைந்துவிட்ட து, அங்கு ஒரு பிரச்சனையும் இல்லை எனக்கூறுவது - இந்த வாதத்தை சிறீ லங்கா அரசு வைக்கும்போது அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் போவது ஆபத்தானது.

இவ்வாறான இளைஞர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டவேண்டிய பொறுப்பு, அத்துடன் உளபலத்தை கொடுக்கவேண்டிய பொறுப்பு தமிழ்மக்களில் அக்கறைகொண்ட அனைவருக்கும் உள்ளது. நாடு கடத்தப்பட்டு சிறீ லங்காவுக்கு அனுப்பப்படும் இளைஞர்களின் நலன்களை கவனித்து அவர்களுக்கு ஆதரவளிக்க ஏதாவது அமைப்புக்கள், சங்கங்கள் முன்வரவேண்டும்.

நம்மவர்களே இவர்களை "பொருளாதார அகதிகள்" எனக்கூறுவதும், பல்வேறு வகைகளில் மட்டம் தட்டுவதும் வேதனை தருகின்றது. இந்த இளைஞர்களுக்கும் பொருத்தமான வாய்ப்புக்கள், வசதிகள் கிடைத்திருப்பின் இப்படி தலைகுனிவுடன் நிற்கவேண்டி வந்திராது. இவர்களும் உயர்கல்வியை, தொழிற்புலமையை சிறீ லங்காவில் பெற்று சட்டரீதியாக தகமை அடிப்படையில் வெளிநாடுகளுக்கு சென்றிருக்க முடியும். காலம், சூழ்நிலை ஒருவனின் வாழ்வை சூறையாடும்போது, குறிப்பாக திட்டமிட்ட வகையில் காலங்காலமாக சிறீ லங்கா அரசினால் பல்வேறு வகைகளில் தமிழ் மக்கள் நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு அவர்கள் வாழ்வு சின்னாபின்னமாகும்போது அப்படியானவர்கள் இவ்வாறான நிலமையில் சிக்கும்போது அவர்களுக்கு ஆதரவுக்கரம் கொடுக்கவேண்டியது அக்கறைகொண்ட அனைவரினதும் கடமை.

இவ்விடயத்தை கூறுவதற்காகவே மேற்கண்ட விடயத்தை இங்கு பதிந்தேன்.

கவிதைகளை வழங்கிய சொப்பனா, புங்கையூரன், விசுகு, கோமகன், கிருபன் எல்லாருக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அனுப்பப்பட்டவர்கள் புலிகள் என்ற கருத்துப்பட ஒருவர் கருத்து எழுதி இருந்தார்.யாரென்று அனேகருக்கு தெரியும்.ஒரு பேச்சுக்கு அனுப்பப்பட்டவர்கள் புலிகளாக இருக்கட்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் தமிழர்கள் என்ற உணர்வு கூட ஏற்படவில்லை.!!

  • தொடங்கியவர்

தேடிப்பார்த்தேன் நுணாவிலான் காணவில்லை. குறிப்பிட்ட செய்தி இணைப்பை தரமுடியுமா?

சிறீ லங்கா நாட்டை விட்டு ஓடுவதை இப்படியான நடவடிக்கைகள் தடுக்குமாயின் அதை தான் வரவேற்பதாய் இது சம்மந்தப்பட்ட செய்தியில் ஒருவர் எழுதினார். அவர் இந்தக்கருத்தை சிறீ லங்காவில் இல்லாமல் லண்டனில் நின்று கூறுவதுதே நகைப்பாக உள்ளது. தாம் பாதுகாப்பாக வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு சிறீ லங்காவைவிட்டு மற்றவர்கள் ஓடக்கூடாது என நினைப்பது எவ்வகையான நியாயம் என எனக்குத்தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தவரை எம்மவர்கள் எல்லாரும் அங்கிருந்துவெளியேறி இங்குவந்து நல்லவாழ்க்கை பெறவேண்டும்..அதற்க்குப் பிறகு நாங்கள் எல்லாரும் சேர்ந்து நாடுமீட்க்க இங்கிருந்து ஒன்றாகப் போராடுவோம்...அண்மையில் ராஜபக்சவின் மகன் தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேற உதவிபுரிவதாக ஒரு செய்தி வாசித்தேன்..உண்மையில் மகிழ்ச்சியான செய்தி..அவர் அதை குறைந்த காசு வாங்கிக்கொண்டு செய்தார் என்ற்றால் இன்னும் பல ஏழைமக்கள் வர வாய்ப்பாகும்....எமது மக்கள் பலரிடம் காசு இருந்திருந்தால் எம்மைப்போல் அவர்களும் புலம்பெயர்ந்து வந்து அவர்கள் கஸ்ரப்பட்டாலும் அவர்களின் பிள்ளைகளுக்கு உறுதியான ஒரு எதிர்காலத்தை நம்மைப்போல் அமைத்துக்கொடுத்திருப்பார்கள்...அத்துடன் அவர்களும் எம்முடன் சேர்ந்து இங்குபோராட்டங்களில் கலந்துகொண்டிருப்பார்கள்...பின்னர் எமக்கென ஒரு நாடமைந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றாக ஊருக்குப்போகலாம்...அதுவரையும் அவர்களை அங்கிருந்து வெளியேறாதை அஙகியே இரு என்று சொல்ல நாங்கள் யார்..? நாம் பெற்ற இன்பம் அவர்களும் பெறவேண்டும்...பாதுகாப்பை,வசதியான் வாழ்க்கையை,கொலிடேயை,காரை,பிளைட்டை நம்மைப்போல் அவர்களின் குழந்தைகளும் அனுபவிக்கவேண்டும்..நான் மட்டும் வெளிநாட்டுக்கு ஆக்களை எடுக்கும் முகவராக இருந்திருப்பின் அத்தனை பேரையும் இலவசமாக எடுத்திருப்பன்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடிந்தவரை எம்மவர்கள் எல்லாரும் அங்கிருந்துவெளியேறி இங்குவந்து நல்லவாழ்க்கை பெறவேண்டும்..அதற்க்குப் பிறகு நாங்கள் எல்லாரும் சேர்ந்து நாடுமீட்க்க இங்கிருந்து ஒன்றாகப் போராடுவோம்...அண்மையில் ராஜபக்சவின் மகன் தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேற உதவிபுரிவதாக ஒரு செய்தி வாசித்தேன்..உண்மையில் மகிழ்ச்சியான செய்தி..அவர் அதை குறைந்த காசு வாங்கிக்கொண்டு செய்தார் என்ற்றால் இன்னும் பல ஏழைமக்கள் வர வாய்ப்பாகும்....எமது மக்கள் பலரிடம் காசு இருந்திருந்தால் எம்மைப்போல் அவர்களும் புலம்பெயர்ந்து வந்து அவர்கள் கஸ்ரப்பட்டாலும் அவர்களின் பிள்ளைகளுக்கு உறுதியான ஒரு எதிர்காலத்தை நம்மைப்போல் அமைத்துக்கொடுத்திருப்பார்கள்...அத்துடன் அவர்களும் எம்முடன் சேர்ந்து இங்குபோராட்டங்களில் கலந்துகொண்டிருப்பார்கள்...பின்னர் எமக்கென ஒரு நாடமைந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றாக ஊருக்குப்போகலாம்...அதுவரையும் அவர்களை அங்கிருந்து வெளியேறாதை அஙகியே இரு என்று சொல்ல நாங்கள் யார்..? நாம் பெற்ற இன்பம் அவர்களும் பெறவேண்டும்...பாதுகாப்பை,வசதியான் வாழ்க்கையை,கொலிடேயை,காரை,பிளைட்டை நம்மைப்போல் அவர்களின் குழந்தைகளும் அனுபவிக்கவேண்டும்..நான் மட்டும் வெளிநாட்டுக்கு ஆக்களை எடுக்கும் முகவராக இருந்திருப்பின் அத்தனை பேரையும் இலவசமாக எடுத்திருப்பன்.....

தம்பி/அண்ணை சபேசு!

இதைத்தானே இன்னுமொரு பதிவில்ல இப்ப போட்டனான். மகிந்ததாவின் புத்தா முல்லைத்தீவை வைத்துக்கொண்டு அங்கே இருக்கும் ஆக்களை அவுஸ்திரேலியாக்கு அனுப்பினால் அதும் 2 லட்சத்துக்கு, சிவனே எண்டு, எல்லா சனமும் வந்து சேர்ந்து போடுங்கள். அதுகளுக்கு ஒரு வாழ்வு வந்தாய் இருக்கும்.

எங்கடை ஆக்கள் இப்ப ஒரு மார்க்கமாய் தான் இருக்கினம். எங்களுக்குத்தான் ஒரு மண்ணும் விளங்குது இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.