Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரும்புலிகள் தினம்

Featured Replies

..............¸ÕõÒÄ¢ Á¡Å£Ã÷¸ÙìÌ Å£ÃŽì¸õ.........

¿ýÈ¢ §Á¡¸ý À¢ÃÍâò¾¨ÁìÌ...

அது எனது காட்லிக்கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலம். துன்னாலையிலிருந்து பெரும் கூட்டம்மொன்று எக்காலத்திலும் காட்லியை ஆக்கிரமித்திருக்கும். அக்கூட்டத்தில் ஒரு மெல்லிய உயர்ந்த உருவமும் அமைதியான தோற்றத்தைக் கொண்ட வசந்தனும் ஒருவன். என்னை விட சில வயது கூடியவனான வசந்தனும், நான் படித்த காலத்தில் உயர் வகுப்பில் இருந்தான். பாடசாலை இல்ல விலையாட்டு போட்டி காலங்களில் மைதானத்தில் அந்த நெடிய உருவம் தடியூன்றி பாயும் கம்பத்துடனேயே நின்ற நினைவுகள் இன்றும் ....

அது 83 இறுதிக்காலம், வசந்தனின் பல நண்பர்கள் படிப்புக்களை உதறியெறிந்து விட்டு தேச விடுதலைக்கு பயணித்த காலத்தில் வசந்தனும் மிகச் சிந்தித்து தூரநோக்குடன் வரலாற்றுக்கடமையில் தன்னையும் விடுதலைப் புலிகளுடன் இணைத்துக் கொண்டான். வசந்தன் எனும் இளைஞன் மில்லராக சரித்திரத்தை எழுதுவதற்காக .....

அந்தக் காலகட்டம் யாழ்நகர் கிட்டண்ணாவினால் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்ட காலம். யாழ் வடமராட்சியை சுற்றிவர சிங்கள மிருகங்களின் முகாங்கள். அவற்றைச் சுற்றி உறங்காத கண்மணிகள். ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் நேரடி மோதல்களும், செல்வீச்சுக்களும்! எம்முகாமைச் சுற்றி மோதல் தொடங்குதோ அவ்விடத்தை நோக்கி மில்லரின் நீல நிற எல்வ் வாகனம் மின்னல் வேகத்தில் விரையும். உணவு, ஆயுதங்கள் உடன் விரைந்து காயப்பட்ட போராளிகளை உடனுக்குடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வான். அக்காலத்தில் ஒரு இடத்தில் மோதல் ஏற்பட்ட உடன் சிறீலங்கா விமானப்படையின் பெல் ரக கெலிகொப்ரருகள் விரைந்து வந்து கண்டபடி துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருப்பார்கள். அவற்றையெல்லாம் கணக்கேயெடுக்காது எவ்விடத்தே உதவி தேவையோ அவ்விடத்தே மில்லர் நிற்பான்.

அது 87 காலப்பகுதி.சிறீலங்கா இராணுவம் பாரிய யுத்த எடுப்புக்களுடன் வடமராட்சியை கைப்பற்றியிருந்தார்கள். அக்கால கட்டத்தில்தான் ஒருநாள் நான், எனது நண்பன், அவனின் மூத்த சகோதரனுமாக யாழ் பல்கலைக்கழக பகுதிக்கு சென்றிருந்தோம். அங்குதான் இறுதியாக மில்லைரைச் சந்தித்தோம். எனது நண்பனின் சகோதரனின் நெருங்கிய நண்பன் மில்லர். "என்ன பிடிச்சிட்டாங்களடாப்பா? .." என்று எனது நண்பனின் வாயிலிருந்து வர, ஒரு கணம் மில்லரின் கண்கள் கலங்கியபடி "விடமாட்டோம், மச்சான்" .. என்ற ஒரு வார்த்தையுடன் எங்களிடமிருந்து விடை பெற்றான். எமக்கு அப்போது புரியவில்லை மில்லரின் வாயிலிருந்து வந்த சொல்லின் அர்த்தம்!!

சில நாட்களில் நானும் யாழ்குடாவை விட்டு வெளியேறி விட்டேன். எனது நண்பன் தனது வீட்டுக்கும் சென்று விட்டான். அவனது வீடு நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் உள்ள வீதியில் தானிருந்தது. அக்கல்லூரியில் தான் சிங்கள இராணுவமும் பாரிய முகாம் அமைத்து இருந்தார்கள். அன்றைய சரித்திரத்தை எழுதிய இரவில் சிறிது சிறிதாக வெடிச்சத்தங்களும் செல்வீச்சுக்களுமாக அதிர்ந்து கொண்டு இருக்கும்போது பாடசாலை வீதியிலுள்ள அனைத்துக் காப்பரன்களும் எம்மவர்களால் வழித்து துடைத்தெறிந்த பின் ஒரு வாகனம் பாடசாலையை நோக்கி வேகமாய் நகர்ந்து, ஒரு பாரிய வெடியோசையுடன், விண்ணை முட்டிய தீப்பிளம்பு எழுந்தவுடன் அணைத்தும் அடங்கி விட்டதாம். என் நண்பனும் வீதியில் வந்து பார்த்தால் எல்லாவிடமும் எம்மவர்களாம். தப்பிய இராணூவம் பின் புறத்தால் பருத்தித்துறையை நோக்கி ஓடுவதாக சிலர் கூறினார்களாம். அதுவரை ஈழ விடுதலைப் போராட்டம் காணாத புதிய அத்தியாயம் ஒன்று முதல் முறையாக எழுதி முடிக்கப்பட்டு இருந்தது.

அந்த மாபெரும் வரலாற்றை எழுதி மில்லர் மண்ணோடும், வாணோடும் கலந்த அன்றைய நாள், எம்மினம் இருக்கும்வரை .........

ஒரு பலவீனமான மக்களின், பலமான சக்தியாக பரிமாணம் எடுத்திருக்கும் கரும்புலிகளின் பயணம், எம் தலைவனின் இலக்கு அடையும்வரை ....

photo257yu.jpg

பாருங்கள் ஜயா பாருங்கள் தயவுசெய்து புலத்தில் வாழும் சன(நா)யகவாதிகளே பாருங்கள். இவன் யாழ்பாணத்து தமிழனுக்காக போகவில்லை மட்டக்களப்பு தமிழன்னுக்காக போகவில்லை தமிழீழ தமிழன்னுக்காக விதைத்த இந்த

சிவகாசி வீரனை பாருங்கள்..................

தமிழீழ மண்ணின் விடியலுக்காக தங்கள் உயிர்ப்பூக்களை தேசக்காற்றில் கலந்து நிற்கும் கரும்புலி மறவர்களின் படத்தொகுப்பு

http://www.tamilnaatham.com/photos/2006/JU...4/BLACK_TIGERS/

  • கருத்துக்கள உறவுகள்

photo257yu.jpg

பாருங்கள் ஜயா பாருங்கள் தயவுசெய்து புலத்தில் வாழும் சன(நா)யகவாதிகளே பாருங்கள். இவன் யாழ்பாணத்து தமிழனுக்காக போகவில்லை மட்டக்களப்பு தமிழன்னுக்காக போகவில்லை தமிழீழ தமிழன்னுக்காக விதைத்த இந்த

சிவகாசி வீரனை பாருங்கள்..................

எமக்காக தன்னுயிரினை நீத்த இந்தியத்தமிழன் செந்தூர் பாண்டியன்.

http://www.tamilnaatham.com/photos/2006/JU...es/Slide28.html

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு அமைய சில நாடுகளில் கரும்புலிகள் தினம் கொண்டடப்படுவதில்லை. என்றாலும் இன்று அம்மாவீரர்களினை எல்லோரும் நீங்கள் இருக்கும் இடத்தில்/வேலைத்தளத்தில் இருந்தும் மனதால் வீர அஞ்சலி செலுத்துங்கள். கரும்புலிகளுக்கு வீர அஞ்சலி.

  • கருத்துக்கள உறவுகள்

எம் பாதுகாப்பிற்காய் தன் உயிரைத் தியாம் செய்த கரும்புலிகளின் ஈகத்தால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கரும்புலிகளுக்கு எம் நினைவஞ்சலிகள்!!

விடுதலையை நேசிக்கும் மனதுதான் மரணத்தையும் துச்சமாய் மதிக்கும்!

எமக்காய் மரணித்த கரும்புலிகளுக்கு எமது நினைவஞ்சலிகள்!

மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தம்முயிரை தியாகம் செய்து தமிழ் ஈழம் காண வானத்தில் நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் நம் கரும்புலிகளுக்கு எனது வீரவணக்கங்கள்.

எமக்காக தமது இன்னுயிரை நீத்த கரும்புலிகளுக்கு எனது வீரவணக்கங்கள்.

தமது இன்னுயிரை தற்கொடையாக்கிய கரும்புலிகளுக்கு எனது வீரவணக்கங்கள்

http://72.22.81.139/forum3/viewtopic.php?t...t=5444&start=45

எமது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தம்முயிரை ஈந்த கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கங்கள்

எங்களுக்காகவும்..எங்கள் ஈழத்திற்காகவும்..தங்கள் உயிரை நீத்த கரும்புலிகளுக்கு எனது வீரவணக்கங்கள் :lol:

எம் மக்களிற்களின் விடுதலைக்காய் தம் உயிரை தியாகம் செய்தவீரர்களிற்கு எனது அஞ்சலிகள்

தாம் நேசித்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தம் இன்னுயிரையே துச்சமெனமதித்து.'தியாகம்' என்னும் சொல்லிற்கே புதியவரைவிலக்கணம் வகுத்தவரே உங்களுக்கு எனது வீரவணக்கத்தை செலுத்துகறேன்.

தமிழ்மண்ணுக்காக தம் உயிர்களையே ஆயுதமாக்கிய கரும்புலிவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள்.

உயிராயுதம் எடுத்து வீர வரலாறு படைத்த உங்கள் அனைவருக்கும் எனது தரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உயிரையே ஆயுதமாக்கிய உங்களை கனத்த இதையத்துடன் நினைவு கூறுகிறேன்.இதை விட வேறு எதுக்கும் தகுதி இல்லாதவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொற்களால் வீரம் காட்டும் பேதலிகளுக்கு ("உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு" என மார்தட்டும் பூச்சாண்டிகளுக்கு) எம் அருமை நண்பர்கள் உதாரணப்பிறவிகள். எம்மை வாழவைக்க தம் இனிய உயிரை தியாகம் செய்து எம்மில் கலந்துவிட்டார்கள். எமக்கும் அத்தைரியத்தை தர அவர்களிடமே வேண்டுகிறேன், இன்று! அல்ல என்றுமே!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.