Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் மக்கள் வாக்களிக்க இடமளிக்க முடியாது! - கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்தார் ஹக்கீம்!!

Featured Replies

 

புலம்பெயர் மக்கள் வாக்களிக்க இடமளிக்க முடியாது! - கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்தார் ஹக்கீம்!!

68448575-0481-4e9a-bbec-70c1b2db73221.jp

வடமாகாண சபைத் தேர்தலில் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் வாக்களிப்பதற்குரிய ஒழுங்குகள் புதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நிராகரித்துள்ளது.

 

புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற இலங்கை மக்கள் தமது வாக்குரிமைகளைப் பயன்படுத்துவதற்கு புதிய சட்டமூலத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளருக்கு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இக்கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் அதன் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நிராகரித்துள்ளார்.

புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற இலங்கை மக்கள் தமது வாக்குரிமைகளைப் பயன்படுத்துவதற்கு புதிய சட்டமூலத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை குறித்து மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தாவது:

 

'1983ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதிக்கும், 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதிக்கும் இடையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தைக் கொண்டு வர சிறிலங்காவின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனூடாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள மக்களும் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்.

வெளிநாடு என்பதில் குறிப்பாக இந்தியாவிலுள்ள ஈழ அகதிகள் மற்றும் கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் அகதி அந்தஸ்துப் பெற்றுள்ளவர்களையும் வடமாகாண சபைத் தேர்தலில் தத்தம் நாட்டில் இருந்தபடியே வாக்களிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரவுள்ளோம்.

சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளருடன் கடந்த வருடம் இடம்பெற்ற சந்திப்பில் வெளிநாடுகளிலுள்ள தமிழ் மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

 

அதேவேளை, வடமாகாண சபைத் தேர்தலில் இந்தியாவிலுள்ள ஈழ அகதிகள் அங்கிருந்தே வாக்களிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்த போது வலியுறுத்தியிருந்தோம்' என மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்திருந்தார்..

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இக்கோரிக்கையை சிறிலங்காவின் நீதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் உடனடியாக நிராகரித்துள்ளார்.

'வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து உள்நாட்டில் வசிப்பவர்கள் மாத்திரமே வடமாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது போல இந்தியாவிலோ ஏனைய நாடுகளிலோ வசிப்பவர்கள் வாக்களிக்க புதிய சட்டத்தில் இடமில்லை' என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

 

அதேவேளை, வடமாகாண சபைத் தேர்தலில் புலம்பெயர் தமிழர்களும், இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளும் வாக்களிக்க விரும்பினால் இலங்கைக்கு வந்து, தாங்கள் அகதிகளாகச் சென்றதை உறுதிப்படுத்தினால் அவர்களும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்க முடியும். அதைவிடுத்து அந்ததந்த நாடுகளில் இருந்தபடியே புலம்பெயர் தமிழர்கள் வாக்களிக்க முடியாது  என்றும் ரவூப் ஹக்கீம மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் வடமாகாணத்தில் இருந்து வெளியேறியவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கும் வகையில் வடமாகாண வாக்காளர் பட்டியலில் மாற்றம் கொண்டு வருவதற்காக அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இச்சட்டமூலம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் வடக்கில் இருந்து வெளியேறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நாட்டின் ஏனைய பிரதேசத்து வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால், அதனை வடமாகாண வாக்களர் பட்டியலில் மாற்றிக் கொள்ள வசதியாக இச்சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக சிறிலங்காவின் நீதி அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

இதனடிப்படையில் வடமாகாண வாக்காளர் பட்டியலில் சுமார் 15,000 முஸ்லிம் மக்கள் இணைத்துக் கொள்ளப்பட வாய்ப்பிருக்கிறது என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=68448575-0481-4e9a-bbec-70c1b2db7322

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ.. உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள முஸ்லீம்கள் இரண்டு இடங்களில் வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை. முஸ்லீம்களைப் பொறுத்தவரை அமைதி.. சமாதானம் நிலவுவதாகச் சொல்லப்படும் வடக்கிற்கு சென்று அங்கு வாழ்ந்ததற்காக அத்தாட்சியை காட்டி மட்டுமே அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

 

 

அதென்ன முஸ்லீம்கள்.. சிங்களவருக்கு ஒரு சட்டம். தமிழர்களுக்கு இன்னொரு சட்டம். ஹக்கீம் நினைச்சதை எல்லாம் தமிழர்கள் கேட்கனுன்னு அவசியம் கிடையாது. தமிழர்கள் தங்கள் வாக்குரிமைக்காக.. ஜனநாயக உரிமைக்காக சர்வதேசத்தை அணுகுவது நல்லது.

 

தேர்தல் ஆணையாளரக் கேள்வி கேட்டால்.. ஏன் ஹக்கீம் குரைக்கிறார்..??! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அது அடிக்கடி குரைத்த பழக்கம்....சும்மயிருக்காது.....

  • தொடங்கியவர்

இந்த புலம் பெயர் மக்களை நாயாக மதிக்க மறுக்கும் கக்கீமைத்தான் கனடாவில் அழைத்து வந்து இராமன் தேடிய சீதை இலக்கிய பிரசங்கம் வைக்க வேண்டும் சில பந்தங்கள் குதித்ததுகள்.  அவர்களை அறிந்த யாரும் இருந்தால் இந்த செய்தியை காட்டுங்கள். <_<

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கக்கீமுதான் நம் இனத்தை கருவறுக்க நினைக்கும் முஸ்லிம் இனத்துரோகி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிச்சுக்கலைச்ச முக்கால் முஸ்லீம்களுக்கு பூரணகும்பம் வைச்சு ஆலாத்தி எடுக்கோணுமெண்டு சொன்னவையள் ஹம் கோயில்தேர்த்திருவிழாவிலை பாக்கிஸ்தான்மாம்பழம் விற்கத்தான் லாயக்கு.

 

தேர்தலை வடக்கில் நடக்க விடக்கூடாது என்பதுதான் முக்கிய நோக்கம் போல கிடக்கு...  கூட்டமைப்பு தேர்தலை எதிர்க்கிறது என்பது அரசாங்கத்துக்கு சாதகமானது...

 

சரி...  இப்படியான தமிழர் விரோத செயற்பாடுகளை  தமிழர்கள் யாரும் சர்வதேசத்துக்கு சொல்ல மாட்டினமோ....?? 

மிகச்சரியான முடிவு,  புலம்பெயர் மக்கள் தாயக மக்களின் பிரச்சனையை அறியாதவர்கள் (பல பேர்) அவர்களால் எப்படி ஒரு சரியான முடிவை எடுக்கமுடியும். தற்போது இலங்கையில் வசிக்காத எவருக்கும் வாக்களிக்க உரிமையில்லை.

 



கூட்டமைப்புக்கு வெளிநாடில வாழுற மக்களை விட்டால் வேறுவழியில்லை. சிலவேளை தமிழீழத்தை கனடாவுக்கோ அல்லது லண்டனுக்கோ மாற்றிட்டினம் போல
 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

அவர் என்ன சொல்ல வாறார் என்றால்.. தீவகத்தில் மக்கள்.. ஈபிடிபி ஒட்டுக்குழு அராஜக அரசியல் செய்வதை சகித்துக் கொண்டு ஆண்டாண்டுகளாக.. கள்ள வாக்குப் போடுவதை கண்டும் காணாமலும்.. இருப்பது போல.. புலம்பெயர் மக்கள் இருக்கமாட்டினம்.. எனவே அவர்களும்.. வாக்குப் போட்டால்.. குத்தியரின்.. 20,000 சுருங்கி சின்னா பின்னமானால்.. அப்புறம் குத்தியரின் கதி...???!

 

அதுதான் ஹக்கீமுக்குப் பின்னால அண்ணன் பன்னாடை பதுங்குகிறார். சோழியன் குடும்பி சும்மா ஆடுமா..??! எல்லாம் ஒரு தொலைநோக்குத் தான்.  :lol::D

Edited by இணையவன்
மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

1- புலம்பெயர் மக்கள் தாயக மக்களின் பிரச்சனையை அறியாதவர்கள் (பல பேர்) அவர்களால் எப்படி ஒரு சரியான முடிவை எடுக்கமுடியும்.

 

2- தற்போது இலங்கையில் வசிக்காத எவருக்கும் வாக்களிக்க உரிமையில்லை.

கூட்டமைப்புக்கு வெளிநாடில வாழுற மக்களை விட்டால் வேறுவழியில்லை. சிலவேளை தமிழீழத்தை கனடாவுக்கோ அல்லது லண்டனுக்கோ மாற்றிட்டினம் போல

 

 

1- உங்களை  வைத்து மற்றவரை கணிக்கக்கூடாது

 

2- எனது குடியுரிமை என்பது திட்டமிட்டு காட்டுமிராண்டித்தனமான இனவாதத்தால் பறிக்கப்பட்டது

தற்பொழுது  உண்மைநிலை தெரிய  வேண்டும என சர்வதேசம் விரும்பினால் எனது கருத்துக்கு செவி  சாய்க்கவேண்டும்.

இல்லையென்றால் எனது தொகுதியில் 7 வாக்கால் வென்று மந்திரி ஆகியது போல் கேலிக்கூத்தாகத்தான் இதுவும் முடியும்.

ஆனால்  புண் மாறாதவடுவாக தொடரும்.............

1- உங்களை  வைத்து மற்றவரை கணிக்கக்கூடாது

 

2- எனது குடியுரிமை என்பது திட்டமிட்டு காட்டுமிராண்டித்தனமான இனவாதத்தால் பறிக்கப்பட்டது

தற்பொழுது  உண்மைநிலை தெரிய  வேண்டும என சர்வதேசம் விரும்பினால் எனது கருத்துக்கு செவி  சாய்க்கவேண்டும்.

இல்லையென்றால் எனது தொகுதியில் 7 வாக்கால் வென்று மந்திரி ஆகியது போல் கேலிக்கூத்தாகத்தான் இதுவும் முடியும்.

ஆனால்  புண் மாறாதவடுவாக தொடரும்.............

ஏன்.....?  

எப்படி.....?

எங்கே........?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்.....?  

எப்படி.....?

எங்கே........?

 

 

இப்படி கேட்ட சிலருக்குப்பின்னால கொஞ்சக்காலம் போனதுண்டு

இன்னும் அவர்கள் இப்படி  கேட்டபடியேதான் உள்ளார்கள்.  செயல் பூச்சியம் :(

 

அதுக்குப்பின் தேர்வு செய்தவழி

செய்பவனை நோண்டாமல் இருப்பது.

அததையாவது செய்யமுடிந்ததே என்ற  திருப்தி. :icon_idea:

அந்தப்பயம் இருக்கணும் .... கக்கீமுக்கு மட்டுமல்ல .............தமிழினத்தை அழிக்கத்திட்டமிட்டு செயல்பட்டுவரும் ,அதற்கு துணைபோகும் ஒட்டுண்ணி அனைவர்க்கும் இருக்கணும் .இது காலத்தின் தேவையும் ,கட்டாயமுமாகும்................

ஹக்கீமின் புதிய சட்டமூலத்தின்படி மற்றைய மாகாணங்களின் தேர்தல் நடைபெற்ற போது அதில் வாக்களித்தவர்கள் முன்பு சிலகாலம் யாழ்ப்பாணத்தில் வசிதவர்கள் என்ற ரீதியில் யாழ் தேர்தலிலும் வாங்களிப்பார்கள். அதாவது இரண்டாவது முறையாக வாக்களிப்பார்கள். ஆனால் யாழ்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் வாக்களிக்கூடாது. ஐரோப்பாவில் வசிப்பவர்களை விடுவோம் தமிழகத்தில் வாழும் மக்களாவது வாக்களிக்க அனுமதிப்பதே தர்மம். ஆனால் ஸ்ரீலங்காவில் தர்மம் உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலிருந்த இடம்பெயர்ந்த இஸ்லாமியர்கள் மட்டுமே இந்த முறை வடமாகாணசபைத் 

தேர்தலில் வாக்களிக்கலாம் என சிறிலங்காவின் நீதியமைச்சர் கூறும் வரை 

தமிழர்களுக்கு நன்மையே    

 

சிங்களவர்களுக்கு செம்பு தூக்கும் இஸ்லாமியர்கள் யாருக்கு வாக்களித்தாலும்

அவர்களுக்குச் சிங்களவர்களாலேயே அழிவு நடக்கும்

 

  • கருத்துக்கள உறவுகள்
எப்படி ஜனநாயக நாடுகளில் தபால் மூலமாக வாக்களிக்கிறார்களோ அதே போல் சனநாயக சிறிலங்காவில் தமிழர்கள் மட்டும் ஏன் முடியாது? சனாதிபதி தேர்த்தலுக்கு சிங்களவர்கள் இங்கிருந்து வாக்களித்தார்களே!! கூட்டமைப்பு மேலும் பல ஆயிரம் வாக்குகளை எடுத்து விடும் என்ற பயம் போல.
 
 


இலங்கை குடியுரிமை உடையவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் வாக்களிக்க உரிமை உடையவர்கள் என நினைக்கிறேன்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.