Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட யார் காரணம்? : இந்தியா தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட யார் காரணம்? : இந்தியா தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்

புதுடில்லி: விடுதலைப்புலிகளுடன் அமைதி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு, கடும் சண்டையில் இலங்கை ராணுவம் இப்போது இறங்கி விட்டது; ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீடித்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் பின்னணியில் இந்தியா இருந்தது பலருக்கும் தெரியாத ரகசியம். இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வரும் கடும் சண்டையை இந்தியா, "அமைதி பார்வையாளராக' பார்த்து வருகிறது என்று தான் பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால், இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும்; சண்டையால் பலனில்லை என்று முடிவுக்கு வந்து, அந்த நாட்டுக்கு உதவ முன்வந்தது இந்தியா தான்.

தொடர்ந்து போர் நீடிக்கும்: அதிபராக ரணசிங்கே பிரேமதாசா இருந்தபோது தான், இலங்கையில் புலிகளின் தாக்குதல் அதிகமானது. அதன்பின், அதிபரான சந்திரிகா குமாரதுங்கேயின் ஆட்சிக்காலத்திலும், புலிகளின் ஆக்ரோஷ தாக்குதல் நிற்கவில்லை. தொடர்ந்து, இலங்கை ராணுவத்துக்கு பின்னடைவு தான். இந்தியாவில் பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்றதும், 1999ம் ஆண்டு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா, ரகசியமாக பல முறை இலங்கைக்கு சென்று வந்தார்; சந்திரிகாவுடன் பேச்சு நடத்தினார். "புலிகளுடன் மோதி, ராணுவம் ஜெயிக்க முடியாது; புலிகளும் ஜெயிக்க முடியாது; தொடர்ந்து போர் நீடிக்கும்; மக்கள் தான் பாதிக்கப்படுவர். அதனால், அமைதிக்கு வழி செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார் பிரிஜேஷ். "இந்தியா அதற்கு உதவ வேண்டும்' என்று, சந்திரிகா கேட்டுக்கொண்டபோது தான், நார்வேயை அமைதிப்பேச்சில் ஈடுபடுத்தும் திட்டம் உருவானது. இலங்கை விஷயத்தில், இந்தியா நேரடியாக தலையிட தயாரில்லை; அதே சமயம், அண்டை நாடான இலங்கையில் அமைதி திரும்பினால் தான் பாதுகாப்பு, வர்த்தகம் ஆகிய எல்லாவற்றுக்கும் நல்லது. அதனால், இலங்கையில் அரசியல் ஆதாயம் தேடாத , புவியியல் ரீதியாக சம்பந்தப்படாத ஐரோப்பிய நாடான நார்வேயை தலையிட வைக்க இந்தியா விரும்பியது.

2001 ம் ஆண்டு தேர்தல் வந்தது: இதைத்தொடர்ந்து சில முறை, நார்வே துõதுக்குழு, ஓசைப்படாமல், டில்லி வந்து, பிரிஜேஷ் மிஸ்ராவுடன் பேசியது. புலிகளுடன் பேச்சு நடத்த, நார்வே துõதுக்குழுவுக்கு தலைவராக எரிக் சோல்ஹைம் தேர்வு செய்யப்பட்டார். 2000ம் ஆண்டு, முதன் முறையாக, புலித்தலைவர் பிரபாகரனை சந்தித்து பேசினார். இதையடுத்து, அந்த ஆண்டு டிசம்பர் மாதம், சண்டை நிறுத்தத்துக்கு பிரபாகரன் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து நார்வே குழுவுடன் பேச்சும் தொடர்ந்தது. சிறிய அளவில் புலிகள் தாக்குதல் நடந்தாலும், பேச்சும் நடந்து வந்தது. இந்நிலையில், 2001ம் ஆண்டு ஜூலை மாதம், இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தாக்குதலை புலிகள் நடத்தினர். இதனால், இலங்கை அரசு பெரும் பீதியடைந்தது. ஏற்கனவே, 2000 ம் ஆண்டில் அரசியல் குழப்பம் நடந்து, அதிபர் தேர்தல் நடந்தது. மீண்டும் 2001 ம் ஆண்டு தேர்தல் வந்தது. அதில், எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமரானார். இதன் பின்னும், அமைதி ஒப்பந்தத்துக்கான ஏற்பாடுகளை இந்தியாவின் ஒத்துழைப்புடன் நார்வே தொடர்ந்து செய்து வந்தது. 2002 ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி, அமைதி ஒப்பந்தத்தில், பிரபாகரன் கையெழுத்திட்டார்; மறுநாள், ரணில் விக்ரமசிங்கே கையெழுத்திட்டார்.

அமைதி ஒப்பந்தத்தின்படி, சண்டை நடக்காமல் கண்காணிக்க சர்வதேச குழுவை அமைக்கும் யோசனையையும் இந்தியா கூறியது. அதன்படி, நார்வே, சுவீடன், அயர்லாந்து, டென்மார்க், பின்லாந்து நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.அமைதி ஒப்பந்தத்திற்கு ஒத்துழைத்த நார்வே மீது, இலங்கை கட்சிகள் கடும் புகார்களை கூறி வந்தன. புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில், இந்தியாவில் 2004 ம் ஆண்டு, லோக்சபா தேர்தல் நடந்து, ஆட்சி மாறியது; பிரதமராக, காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் , பொறுப்பேற்றார். அதன்பின், இலங்கை மீதான இந்தியாவின் பார்வை சற்று மாறியது; சமீபத்தில், அமைதி ஒப்பந்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Dinamalar

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ அப்படியா?

சமாதானம் குழம்புவத்குக்கு இந்தியாவின் ஒரு செயற்ப்பாடும் காரணமாக இருக்கவில்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்புலிமாமா கதைகள் எங்கிருந்து உருவாகின? யாருக்காவது தெரியுமா? :rolleyes:

ஆவ்........ நித்திரை வருது.......

அது சரி...... இண்டைக்கு குண்டொண்டும் போகேலையாங்கோ?

:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

TamilNet இல் 2/3 நாட்கள் தலைப்பாக கிடந்த செய்தி.

India's Peace and War

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

TamilNet இல் 2/3 நாட்கள் தலைப்பாக கிடந்த செய்தி.

India's Peace and War

எல்லாம் சரிதான். ஆனால் எல்லாருக்கும் இங்கிலிசு விளங்காது பாத்தியளோ :rolleyes:

ஓ ... அதுதான் இந்தியா கருணாவுக்கு ஒத்துளைக்க ENDLF ஐ கிழக்குக்கு அனுப்பி வச்சதோ...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா இலங்கையில் அமைதி முயற்சி ஏற்படுத்த விளைந்தது என்பது முழம் அல்ல மைல் நீளமான பூக்களைக் கோர்த்து அதைத் தமிழர் காதுகளில் சுற்றுவதற்கு ஒப்பானது. இந்தியா மட்டுமல்ல நோர்வே கூட தமது சுயநலமின்றி இலங்கை விவகாரத்தில் ஈடுபடவில்லை. பிராந்தியத்தில் வல்லரசாக வேண்டுமாயிருப்பின் அயல்நாடுகளில் தன் கைகளைப் பலப்படுத்தவேண்டிய தேவை இந்தியாவிற்கு உண்டு. அவ்வேளையில் அயல்நாடுகளில் ஒரு குழப்பமா ன சூழலும் நிலவேண்டும். அப்போதுதான் அதனால் தன் கால்களை அந் நாடுகளில் பலப்படுத்தமுடியும்.

இந்தியா இலங்கைப் பிரச்சினையை ஓர் நீறுபூத்த நெருப்பாக வைத்திருக்க விரும்புமேயன்றி என்றும் அமைதித்தீர்வு ஏற்பட வழிகாட்டப் போவதில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் சரிதான். ஆனால் எல்லாருக்கும் இங்கிலிசு விளங்காது பாத்தியளோ :rolleyes:

உண்மைதான் குமாரசாமி அவர்களே. TamilNet தமிழிலும் தனது அதே செய்திகளை வெளியிட்டால் நன்றாக இருக்கும். அல்லது புதினம் போன்ற இணையத் தளங்கள் தமிழ்நெட்டை அப்படியே தமிழாக்கம் செய்தாலே தமிழிலில் வாசிப்பவர்களுக்கு நல்ல தரமான செய்திகள் கிடைக்கும்.

என்னப்பா இது வாஜ்பேயி சமாதான் செய்விக்கிறார். மன்மோகன் குழப்புகிறார். தினமலர் என்ன செய்துகொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இலங்கையில் அமைதி முயற்சி ஏற்படுத்த விளைந்தது என்பது முழம் அல்ல மைல் நீளமான பூக்களைக் கோர்த்து அதைத் தமிழர் காதுகளில் சுற்றுவதற்கு ஒப்பானது. இந்தியா மட்டுமல்ல நோர்வே கூட தமது சுயநலமின்றி இலங்கை விவகாரத்தில் ஈடுபடவில்லை. பிராந்தியத்தில் வல்லரசாக வேண்டுமாயிருப்பின் அயல்நாடுகளில் தன் கைகளைப் பலப்படுத்தவேண்டிய தேவை இந்தியாவிற்கு உண்டு. அவ்வேளையில் அயல்நாடுகளில் ஒரு குழப்பமா ன சூழலும் நிலவேண்டும். அப்போதுதான் அதனால் தன் கால்களை அந் நாடுகளில் பலப்படுத்தமுடியும்.

இந்தியா இலங்கைப் பிரச்சினையை ஓர் நீறுபூத்த நெருப்பாக வைத்திருக்க விரும்புமேயன்றி என்றும் அமைதித்தீர்வு ஏற்பட வழிகாட்டப் போவதில்லை!

தெரிந்தும் ஏன் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது? அரியாலை வரை பிடிபட்ட இடங்களை தக்கவைத்து யாழையும் மீட்டிருக்கலாமே.. இந்தியா, சர்வதேச நாடுகள் போன்றனவற்றின் தார்மீக ஆதரவின்றி தனிநாடு அடையமுடியும் என்று தப்பான எண்ணத்தில் தமிழர்கள் இருந்தால் இப்படியேதான் நிலைமை இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவையான செய்தியைத் தந்ததுக்கு தினமலர் பத்திரிகைக்கு வாழ்த்துக்கள். :lol:

தினமணி பத்திரிகையில் செய்தி வந்தால் ஒரளவு நம்பலாம். தினமலர் என்பது ஈழச் செய்திகள் தரும் இன்னும் ஒரு லங்காபுவத்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட யார் காரணம்? : இந்தியா தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம் சந்திரிகா தெரிவிப்பு

24 February 2008செய்திகள்

புலிகளுடன் அமைதி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு, கடும் சண்டையில் இலங்கை ராணுவம் இப்போது இறங்கி விட்டது; ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீடித்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் பின்னணியில் இந்தியா இருந்தது பலருக்கும் தெரியாத ரகசியம். இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையே நடந்து வரும் கடும் சண்டையை இந்தியா, "அமைதி பார்வையாளராக' பார்த்து வருகிறது என்று தான் பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால், இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும்; சண்டையால் பலனில்லை என்று முடிவுக்கு வந்து, அந்த நாட்டுக்கு உதவ முன்வந்தது இந்தியா தான்.

ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாசா அவர்கள் இருந்தபோது தான், இலங்கையில் புலிகளின் தாக்குதல் அதிகமானது. அதன்பின், அதிபரான சந்திரிகா குமாரதுங்கா அவர்களின் ஆட்சிக்காலத்திலும், புலிகளின் ஆக்ரோஷ தாக்குதல் நிற்கவில்லை. தொடர்ந்து, இலங்கை ராணுவத்துக்கு பின்னடைவு தான் எற்பட்டது. இந்தியாவில் பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்றதும், 1999ம் ஆண்டு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா, ரகசியமாக பல முறை இலங்கைக்கு சென்று வந்தார்; சந்திரிகாவுடன் பேச்சு நடத்தினார். "புலிகளுடன் மோதி, ராணுவம் ஜெயிக்க முடியாது; புலிகளும் ஜெயிக்க முடியாது; தொடர்ந்து போர் நீடிக்கும்; மக்கள் தான் பாதிக்கப்படுவர். அதனால், அமைதிக்கு வழி செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார் பிரிஜேஷ்.

"இந்தியா அதற்கு உதவ வேண்டும்' என்று, சந்திரிகா கேட்டுக்கொண்டபோது தான், நோர்வேயை அமைதிப்பேச்சில் ஈடுபடுத்தும் திட்டம் உருவானது. இலங்கை விடயத்தில், இந்தியா நேரடியாக தலையிட தயாரில்லை; அதே சமயம், அண்டை நாடான இலங்கையில் அமைதி திரும்பினால் தான் பாதுகாப்பு, வர்த்தகம் ஆகிய எல்லாவற்றுக்கும் நல்லது. அதனால், இலங்கையில் அரசியல் ஆதாயம் தேடாத , புவியியல் ரீதியாக சம்பந்தப்படாத ஐரோப்பிய நாடான நோர்வேயை தலையிட வைக்க இந்தியா விரும்பியது.

2001 ம் ஆண்டு தேர்தல் வந்தது: இதைத்தொடர்ந்து சில தடவைகள் நோர்வே தூதுதுக்குழு, விளம்பரமற்ற முறையில், டில்லி சென்றது, அங்கு பிரிஜேஷ் மிஸ்ராவுடன் பேசியது. புலிகளுடன் பேச்சு நடத்த, நோர்வே தூதுதுக்குழுவுக்கு தலைவராக எரிக் சோல்ஹைம் தேர்வு செய்யப்பட்டார். 2000ம் ஆண்டு, முதன் முறையாக, புலித்தலைவன் பிரபாகரனை சந்தித்து பேசினார். இதையடுத்து, அந்த ஆண்டு டிசம்பர் மாதம், போர் நிறுத்தத்துக்கு பிரபாகரன் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து நோர்வே குழுவுடன் பேச்சும் தொடர்ந்தது. சிறிய அளவில் புலிப்பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்தாலும், பேச்சும் நடந்து வந்தது. இந்நிலையில், 2001ம் ஆண்டு ஜூலை மாதம், இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தினர். இதனால், இலங்கை அரசு பெரும் பீதியடைந்தது. ஏற்கனவே, 2000 ம் ஆண்டில் அரசியல் குழப்பம் நடந்து, அதிபர் தேர்தல் நடந்தது. மீண்டும் 2001 ம் ஆண்டு தேர்தல் வந்தது. அதில், எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கா, பிரதமரானார். இதன் பின்னும், அமைதி ஒப்பந்தத்துக்கான ஏற்பாடுகளை இந்தியாவின் ஒத்துழைப்புடன் நோர்வே தொடர்ந்து செய்து வந்தது. 2002 ம் ஆண்டு பிப்ரவரி 22ம் திகதி, அமைதி ஒப்பந்தத்தில், பிரபாகரன் கையெழுத்திட்டார்; மறுநாள், ரணில் விக்ரமசிங்கே கையெழுத்திட்டார்.

அமைதி ஒப்பந்தத்தின்படி, சண்டை நடக்காமல் கண்காணிக்க சர்வதேச குழுவை அமைக்கும் யோசனையையும் இந்தியா கூறியது. அதன்படி, நோர்வே, சுவீடன், ஐஸ்லாந்து, டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.அமைதி ஒப்பந்தத்திற்கு ஒத்துழைத்த நோர்வே மீது, இலங்கை கட்சிகள் கடும் புகார்களை கூறி வந்தன. புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில், இந்தியாவில் 2004 ம் ஆண்டு, லோக்சபா தேர்தல் நடந்தது, ஆட்சி மாறியது; பிரதமராக, காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் , அவர்கள் பொறுப்பேற்றார். அதன்பின், இலங்கை மீதான இந்தியாவின் பார்வை சற்று மாறியது; சமீபத்தில், அமைதி ஒப்பந்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

http://vizhippu.net/node/13337

  • கருத்துக்கள உறவுகள்

புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு முதன் முதலில் இந்தியாதான் ஆப்பு வைத்தது. பலாலிப் பகுதியில் மக்கள் மீளக் குடியேறுவதைத் தடுக்க உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற ஒன்றை கொண்டுவரும்படி இலங்கைக்கு ஆலோசனை கூறியதோடு தனது ஓய்வுபெற்ற ராணுவத் தளபதியை இலங்கைக்கு அனுப்பி இதைச் செய்தும் கொடுத்தது( இவர் ஒரு தமிழர் என்பது வேற விடயம்). இதுதான் முதற் கோணலே ! அதற்குப்பின் கருணாவுடன் சேர்ந்து பரந்தன் ராஜனை இங்கு கொண்டு வந்ததும் இந்தியாதான். பாக்கிச்த்தான் காரனும் சீனாக்காரனும் ஆயுதம் கொடுத்து விடுவான் எண்டு இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து வருவதும் இந்தியாதான். இலங்கையின் ராணுவப் புலநாய்வுத்துறைக்கும் விமானப்படைக்கும் பூனேயில் பயிற்சி கொடுப்பது இந்தியாதான். ரஷ்ஷிய விமானப்படை அதிகாரிகளை இலங்கைக்கு கூட்டி வந்து ஒப்பந்தம் செய்ய வைத்ததும் இந்தியாதான். இன்னும் கடல் ரோந்து, கண்காணிப்பு, உளவுத்தகவல் பரிமாற்றம் எண்டு நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைவதும் இந்தியாதான். இப்போது திருகோணமலையையும் கான்கேசந்துறையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலம் தமிழரின் ஈழக் கனவுக்கு ஆப்பு வைப்பதும் இந்தியாதான்...........................

அதுசரி, பார்ப்பணப் பத்திரிகை ஒன்றில் இருந்து வேறு என்னத்தைத்தான் எதிர்பார்க்கமுடியும். தனது பரம்பரைத் தொழிலை அது செய்யட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட இந்தியா காரணம் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்

புதுடெல்லி

விடுதலைப் புலிகளுடன் அமைதி ஒப்பந் தத்தை முறித்துக் கொண்டு கடும் சண்டையில் இலங்கை இராணுவம் இப்போது இறங்கி விட்டது; ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீடித்த சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னணியில் இந்தியா இருந்தது பலருக்கும் தெரியாத ரகசியம். இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வரும் கடும் சண்டையை இந்தியா, அமைதிப் பார்வையாளராக பார்த்து வருகிறது என்று தான் பலரும் நினைத்து வருகின்றனர்.

ஆனால் இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும்; சண்டையால் பயனில்லை என்று முடிவுக்கு வந்து அந்த நாட்டுக்கு உதவ முன் வந்தது இந்தியா தான் என இணையத்தளம் ஒன்று கூறுகின்றது.

அதில் மேலும் ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாஸ இருந்த போது தான் இலங்கையில் புலிகளின் தாக்குதல் அதிகமானது.

அதன் பின் ஜனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்க வந்த பின்னர், அவரது ஆட்சிக் காலத் திலும் புலிகளின் ஆக்ரோஷ தாக்குதல் நிற்க வில்லை. தொடர்ந்து இலங்கை இராணுவத் துக்கு பின்னடைவு தான்.

இந்தியாவில் பிரதமராக வாஜ்பாய் பொறுப் பேற்றதும் 1999ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா, ரகசியமாகப் பலமுறை இலங்கைக்குச் சென்று வந்தார்; சந்திரிகாவுடன் பேச்சு நடத்தினார். புலிகளுடன் மோதி இராணுவம் ஜெயிக்க முடியாது; புலிகளும் ஜெயிக்க முடியாது; தொடர்ந்து போர் நீடிக்கும்; மக்கள் தான் பாதிக்கப்படுவர். அதனால், அமைதிக்கு வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து இந்தியா அதற்கு உதவ வேண்டும் என்று சந்திரிகா கேட்டுக் கொண்டபோதுதான் நோர்வேயை அமைதிப்பேச்சில் ஈடுபடுத்தும் திட்டம் உருவானது. இலங்கை விடயத்தில் இந் தியா நேரடியாகத் தலையிடத் தயாரில்லை.

அதே சமயம், அண்டை நாடான இலங்கையில் அமைதி திரும்பினால் தான் பாதுகாப்பு, வர்த்தகம் ஆகிய எல்லாவற்றுக்கும் நல்லது.

அதனால் இலங்கையில் அரசியல் ஆதாயம் தேடாத புவியியல் ரீதியாக சம்பந்தப்படாத ஐரோப்பிய நாடான நோர்வேயைத் தலையிட வைக்க இந்தியா விரும்பியது.

2001ஆம் ஆண்டு தேர்தல் வந்தது இதைத் தொடர்ந்து சில?றை நோர்வே தூதுக்குழு ஓசைப்படாமல் டில்லி வந்து பிரி ஜேஷ் மிஸ்ராவுடன் பேசியது. புலிகளுடன் பேச்சு நடத்த நோர்வே தூதுக்குழுவுக்கு தலை வராக எரிக் சொல்ஹெய்ம் தேர்வு செய்யப்பட்டார். 2000ஆம் ஆண்டு முதன் முறையாக புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து, அந்த ஆண்டு டிசம்பர் மாதம் யுத்த நிறுத்தத்துக்கு பிரபாகரன் ஒப்புக் கொண் டார்.

தொடர்ந்து நோர்வேக் குழுவுடன் பேச்சும் தொடர்ந்தது. சிறிய அளவில் புலிகள் தாக்கு தல் நடந்தாலும் பேச்சும் நடந்து வந்தது. இந் நிலையில், 2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தாக்குதலை புலிகள் நடத்தினர். இத னால், இலங்கை அரசு பெரும் பீதியடைந்தது.

ஏற்கனவே 2000ஆம் ஆண்டில் அரசியல் குழ ப்பம் நடந்து ஜனாதிபதித் தேர்தல் நடந்தது.

மீண்டும் 2001ஆம் ஆண்டு தேர்தல் வந்தது.

அதில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்க பிரதமரானார். இதன் பின்னும் அமைதி ஒப்பந்தத்துக்கான ஏற்பாடுகளை இந்தி யாவின் ஒத்துழைப்புடன் நோர்வே தொட ர்ந்து செய்து வந்தது. 2002ஆம் ஆண்டு பெப்ர வரி 21ஆம் திகதி அமைதி ஒப்பந்தத்தில் பிரபாகரன் கையெழுத்திட்டார். மறு நாள் ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டார்.அமைதி ஒப்பந்தத்தின்படி சண்டை நடக்காமல் கண் காணிக்க சர்வதேசக் குழுவை அமைக்கும் யோசனையையும் இந்தியா கூறியது. அதன் படி, நோர்வே, சுவீடன், அயர்லாந்து, டென் மார்க், பின்லாந்து நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

அமைதி ஒப்பந்தத்திற்கு ஒத்துழைத்த நோர்வே மீது இலங்கை கட்சிகள் கடும் புகா ர்களைக் கூறி வந்தன. புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்நிலையில் இந்தியாவில் 2004ஆம் ஆண்டு "லோக்சபா' தேர்தல் நடந்து ஆட்சி மாறியது.

பிரதமராக காங்கிரஸ் கட்சியின் மன் மோகன்சிங் பொறுப் பேற்றார். அதன் பின் இலங்கை மீதான இந்தியாவின் பார்வை சற்று மாறியது.

சமீபத்தில் அமைதி ஒப்பந்தத்துக்கு முற்று ப்புள்ளி வைக்கப்பட் டது.

வீரகேசரி

செத்துப்போன ஒப்பந்தம்... அது இனி வரலாற்று குப்பையில தான் சேரும்...

இதுக்கும் இந்தியா தான் தகப்பனா? அப்ப இந்தியா தொடங்கினா அதன் முடிவு பற்றி இனி எல்லாருக்கும் தெரியும் எண்டு சொல்லுங்கோ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.