Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் அனுபவங்கள்: பொல்லுக்கொடுத்து அடிவாங்குதல்

Featured Replies

வணக்கம்,

2008ம் ஆண்டு யாழில எனது கடைசித் தலைப்பாக இந்த பொல்லுக்கொடுத்து அடிவாங்குதல் பற்றி கதைக்கலாம் எண்டு நினைக்கிறன். நான் ஏற்கனவே குறிப்பாக யாழ் மூலம் இதில அதிகம் அனுபவப்பட்டு இருக்கிறதால - எனது அனுபவங்களை இதில சொல்லுறதை குறைச்சு உங்களுக்கு ஏதாவது அனுபவங்கள் இருந்தால் அதுபற்றி அறிஞ்சுகொள்ள விரும்புறன்.

பொல்லுக்கொடுத்து அடிவாங்குபவர்களில முக்கியமான ஆக்கள் எண்டு பார்த்தால் படைப்பாளிகள், மற்றது ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் எண்டு சொல்லலாம்தானே? பலர் இந்த தர்ம அடியை வாங்குற பயத்திலதான் படைப்பு இலக்கியங்களில ஈடுபடுவது குறைவோ எண்டும் எண்ணவேண்டி இருக்கிது. யாழில கூட பலர் சுய ஆக்கங்கள் செய்யாமல் இருக்கிறதுக்கு இல்லாட்டிக்கு பதில் கருத்துக்கள் எழுதாமல் வெறும் பார்வையாளர்களாக இருக்கிறதுக்கு இந்தவிடயம் காரணமாக இருக்கிது.

நான் முன்பு சில விசயங்களை வாசிச்சு அறிஞ்சன் என்ன எண்டால் சிறுகதைகள், நாவல்கள், திரைப்படங்களை சிலர் செய்தபோது அதைப்பார்த்துவிட்டு வேறு ஆக்கள் இது தங்கள் பற்றிய கதை எண்டு சொல்லி அதன் தயாரிப்பாளர் / கதாசிரியரை போட்டுத்தாக்கி இருக்கின்றார்கள். கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில நையாண்டி மேளம் எண்டு ஓர் நகைச்சுவை தொடர் போறது. அதில பங்குபற்றுகின்ற கலைஞர்கள் கூட தமக்கு இப்படியான அனுபவங்கள் ஏற்பட்டது பற்றி சொல்லி இருந்தார்கள்.

யாழ் எண்டு பார்த்தால் சாந்தி அக்கா, சாத்திரி அண்ணா போன்றோரும் தமது ஆக்கங்கள் மூலம் தங்கள் தனிப்பட்ட வாழ்வில ஏற்பட்ட பாதிப்புக்கள், மிரட்டல்கள் பற்றி சொல்லி இருக்கிறீனம். பின்விளைவுகள் பற்றி யோசிக்காது ஒரு விசயத்தை சும்மா எழுதிப்போட்டு போறது இல்லாட்டிக்கு படைச்சுப்போட்டு போறது எண்டு நாங்கள் செயற்பட்டால் எமக்கு தர்ம அடி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

நான் கூட யாழ் இணையத்தில எழுதுவதை நிறுத்த / குறைக்க யோசிச்சதன் அல்லது யோசிப்பதன் முக்கிய காரணங்களில ஒன்று ஏன் சும்மா பொல்லுக்கொடுத்து அடிவாங்குவான் எண்டு தான். விமர்சனங்களை தாங்குவது அல்லது விமர்சனங்களுக்கு முகம் கொடுக்கிறது எண்டுறது வேறு, பொல்லுக்கொடுத்து அடிவாங்குவது என்பது வேறு எண்டு சொல்லலாம்.

நாங்கள் எல்லாரும் அடிப்படையில சாதாரண மனுசர்கள். ஒருவர் சொல்லிற ஒரு கருத்து - சிலவேளைகளில மாதக்கணக்காக அல்லது வருசக்கணக்காக எங்கட மனதில அழியாமல் நிண்டு உறுத்தலை ஏற்படுத்திக்கொண்டு இருக்கக்கூடும். ஓரிரு விரல் விட்டு எண்ணக்கூடிய படைப்பாளிகள் மாத்திரமே மனம் கலங்காத வகையில அவர்களுக்கு கிடைக்கின்ற பொல்லடிகள் அவர்களை பாதிக்காதவகையில மனவைராக்கியம் உடையவர்களாக இருக்கக்கூடும். மிகுதி எல்லாரும் பெறுவது வேதனைகளும் மன உலைச்சல்களுமே.

ஒவ்வொருத்தர் படைப்புக்களில ஈடுபடுவதற்கு ஏதாவது எழுதுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனக்கு எண்டால் முக்கியமாக பொழுதுபோக்கு. சிலருக்கு பணம். சிலருக்கு புகழ். இப்படி வெவ்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். இந்தவகையில பொல்லடி கிடைக்கும்போது அதை எப்படி ஒவ்வொருத்தரும் தாங்கிக்கொள்ளுறம் அல்லது முகத்தை / உடம்பை கொடுக்கிறம் எண்டுறதில வேறுபாடுகள் இருக்கலாம். உதாரணமாக, பணத்தை மையப்படுத்தி ஓர் ஆக்கத்தை செய்பவருக்கு கிடைக்கின்ற வேதனை (பொல்லடி) பொழுதுபோக்கை மையப்படுத்தி ஓர் ஆக்கத்தை செய்யுறவருக்கு கிடைக்கிற வேதனையை விட குறைவாக இருக்கலாம்.

நாளாந்த வாழ்வில கூட ஓர் விசயத்தை செய்யேக்க நீங்கள் எல்லாரும் வெவ்வேறு விதமான தர்மசங்கடமான நிலைகளை அடையக்கூடும். ஏதாவது ஓர் செயலை செய்யும்போது பொல்லடி கிடைப்பதற்கான வாய்ப்பு எல்லாருக்கும் இருக்கிது. இதுபற்றி உங்கள் கருத்துக்கள், அனுபவங்கள் பற்றியும் சொல்லுங்கோ. நன்றி!

உங்களுக்கு இனிய 2009 புத்தாண்டு வாழ்த்துகள்! பொல்லடி வாங்காமல் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்! :rolleyes:

முரளி,

பொல்லுக் கொடுக்கமால் எப்படி பொல்லுக் கொடுத்தல் பற்றி கட்டுரை எழுதலாம் என்பதற்கு நல்ல உதாரணம் இந்தக் கட்டுரை.

அதுக்காக மற்றவைய பொல்லுக் கொடுக்கச் சொல்லி எழுதிறது, அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன பொல்லாப்பா இருக்கப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனங்களை( நல்ல, கூடாத) ஏற்பது போல் பொல்லை கொடுத்து அடி வாங்குதல் என்பதும் ஒரு தனி அனுபவம் தானே. அனுபவங்கள் தான் பாடப்புத்தகங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கலைஞன் (சீ..முரளி) ஒரு தலைப்போட. கருத்து எண்டு பார்க்காமல் தனிப்பட்ட தாக்குதல் அடிக்கடி நடக்கிற இடமாக யாழ் களம் இருக்கிறதால இது பொருத்தமான தலைப்புத் தான். எனக்கு பொல்லுக் கொடுத்து அடி வாங்கிற அனுபவம் யாழ் களத்திலயும் அதுக்கு வெளியிலயும் நிறைய நடக்குது. ஆனால் ஒரு ஒற்றுமை என்னண்டால் உள்ளேயோ வெளியேயோ, மாற்றுக் கருத்து மாணிக்கங்களோட தான் இந்த அனுபவம் எனக்குக் கிடைக்குது. மாற்றுக் கருத்தெண்டால் எதில மாற்றுக் கருத்து எண்டு யாழ் பார்க்கிறவைக்கு விளங்கும் தானே நல்லா? உதாரணத்துக்கு இங்க ஒரு "புத்திஜீவி" (அப்படி அவர் தான் தன்னைச் சொல்லிக் கொள்கிறார், நான் "நோ கொம்மென்ற்ஸ்") யோட அடிக்கடி தமிழர் போராட்ட நியாயம் பற்றியும் தற்போது ஏன் புலிகள் சமாதானம் சரணடைதல் எண்டு போக இயலாது என்பது பற்றியும் பல சுற்றுகள் விளங்கப் படுத்தி விவாதம் செய்திருக்கிறன். ஆனால் புத்திஜீவி எப்பவும் என்னைத் தாக்குகிற பொல்லு என்னண்டால் "நீர் இங்க இருந்து வன்னிக்கு இப்பவே போய் போராட ரெடியோ? இல்லாட்டி அந்தச் சனம் போராடட்டும் எண்டு சொல்ல உமக்கென்ன அருகதையிருக்கு? என்பது தான். இதுக்கு நான் என்ன சொல்ல? இங்க பண உதவி கேட்டு வாற மின்னஞ்சல்களுக்கு கூட நான் பதில் அனுப்புறதில்ல. கனடாவிலும், ஐரோப்பாவிலும் இருக்கிற உறவுகளுக்கு ஏதாவது அனுப்பித் தான் பணம் குடுக்கிறது. இந்த நாட்டுச் சட்டங்களுக்கு அவ்வளவு கீழ்ப் படிவு (அல்லது பயம்) நான்.ஆனாலும் தூர இருக்கிறதால நாங்கள் ஆதரவுக் குரல் தராம, அடுத்த எக்ஸ்ட்றீமுக்குப் போய் உங்கள் போலத் துரோகிகளாக மாறக் கூடாது எண்டு ஒரு சின்னப் பொல்லால புத்திஜீவியத் திருப்பித் தாக்கியும் இருக்கிறன். பொல்லுக் குடுத்து வாங்கிற அடியத் தாங்கிற சக்தி எதனால வருகுது எண்டு சில காரணங்கள் முரளி சொல்லியிருந்தார். நான் எங்கயும் பொல்லடி வாங்கத் தயாராயிருக்கிறது ஒரு காரணத்தால தான் எண்டு நினைக்கிறன்: என்னில பாதி வயசே ஆன பெண் ஆண் பிள்ளைகள் அங்க பொல்லடியில்லை, செல்லடி, கிளஸ்டர் குண்டு, செத்த பிறகும் பிராண்டுகிற மன நோயாளிகளின் வக்கிரம் எண்டு எத்தினையத் தாங்குதுகள். நாங்கள் கொஞ்சம் பொல்லைக் குடுத்து அடி வாங்கினால் என்ன குறைஞ்சு போயிரும்?

வேலை துவங்க முதல் யாழ் வந்ததால எழுதிக் கொண்டிருந்திட்டன். வேலை முடிஞ்சு பார்ப்பம் மீதிய. எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். :rolleyes:

நான் கூட யாழ் இணையத்தில எழுதுவதை நிறுத்த / குறைக்க யோசிச்சதன் அல்லது யோசிப்பதன் முக்கிய காரணங்களில ஒன்று ஏன் சும்மா பொல்லுக்கொடுத்து அடிவாங்குவான் எண்டு தான். விமர்சனங்களை தாங்குவது அல்லது விமர்சனங்களுக்கு முகம் கொடுக்கிறது எண்டுறது வேறு, பொல்லுக்கொடுத்து அடிவாங்குவது என்பது வேறு எண்டு சொல்லலாம்.

ஒவ்வொருத்தர் படைப்புக்களில ஈடுபடுவதற்கு ஏதாவது எழுதுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனக்கு எண்டால் முக்கியமாக பொழுதுபோக்கு. சிலருக்கு பணம். சிலருக்கு புகழ். இப்படி வெவ்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். இந்தவகையில பொல்லடி கிடைக்கும்போது அதை எப்படி ஒவ்வொருத்தரும் தாங்கிக்கொள்ளுறம் அல்லது முகத்தை / உடம்பை கொடுக்கிறம் எண்டுறதில வேறுபாடுகள் இருக்கலாம். உதாரணமாக, பணத்தை மையப்படுத்தி ஓர் ஆக்கத்தை செய்பவருக்கு கிடைக்கின்ற வேதனை (பொல்லடி) பொழுதுபோக்கை மையப்படுத்தி ஓர் ஆக்கத்தை செய்யுறவருக்கு கிடைக்கிற வேதனையை விட குறைவாக இருக்கலாம்.

ஆவ் முரளி நல்லா பொல்லடி (சொல்லடி) யாழில வாங்கீட்டீங்களோ?? :rolleyes:

சரி சரி யாழில எழுதுறதுக்கு யோசியாதேங்கா நல்லா உங்கட படைப்புகளை

நீங்கள் எழுதுங்கோ. யாழ்ல எல்லாம் சகஜமப்பா <_<

  • கருத்துக்கள உறவுகள்

முரளி உங்களுக்கு மன்னிக்கவும் உங்கள் ஆக்கங்களுக்கு கிடைக்கும் சொல்லடிகள் பாராட்டுக்களுக்கு சமன்.ஆகவே துணிந்து தொடருங்கள் உங்கள் பணியை.

  • கருத்துக்கள உறவுகள்

சீரடி, சிலம்படி என்று பழகி இருப்பவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி எடுக்கவேண்டும் என்பதற்காகவே பொல்லைக் கொடுத்து பொல்லடிபடவேண்டும். இதெல்லாம் சமூகசேவை! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லுக்கொடுத்து அடிவாங்குதல் என்பது relay மட்டுமே. ஆகவே தொடர்ந்து ஓடுங்கள் எல்லைக்கே. :rolleyes:<_<

  • தொடங்கியவர்

உங்கட பொல்லடி வாங்கிய அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுவீங்கள் எண்டு பார்த்தால், நான் இன்னும் பொல்லடி வாங்குறதுக்கு ஆலோசனைகள் மற்றும் ஊக்கம் கொடுக்கிறீங்கள். எல்லாம் அனுபவிச்சுப் பார்த்தால்தான் தெரியும்.

உங்கட பொல்லடி வாங்கிய அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுவீங்கள் எண்டு பார்த்தால், நான் இன்னும் பொல்லடி வாங்குறதுக்கு ஆலோசனைகள் மற்றும் ஊக்கம் கொடுக்கிறீங்கள். எல்லாம் அனுபவிச்சுப் பார்த்தால்தான் தெரியும்.

அனுபவிச்சவனுக்குத்தான் எப்படி அதில் இருந்து தப்பலாம் என்பதும் புரியும். அதனால்தான் எந்த வேலைக்குப் போனாலும் அனுபவம் கேக்கிறார்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட பொல்லடி வாங்கிய அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுவீங்கள் எண்டு பார்த்தால், நான் இன்னும் பொல்லடி வாங்குறதுக்கு ஆலோசனைகள் மற்றும் ஊக்கம் கொடுக்கிறீங்கள். எல்லாம் அனுபவிச்சுப் பார்த்தால்தான் தெரியும்.

முரளி,

அண்மையில் தான் யாழில் பொல்லடி வாங்கி இருந்தேன் :rolleyes:

ஆனால் அதுவும் ஒரு அனுபவமாகத்தான் இருந்தது.

'எவ்வளவு எவ்வளவு பொல்லடிகள் வாங்குகின்றோமோ அவை எல்லாம் வெற்றியின் படிகள் என்று எண்ணிக்கொள்ளுங்கள்(எண்ணுறது என்று எண்ணிக்கையையும் சேர்த்துத்தான் சொல்லுறன்)...

'அடிகள் எல்லாம் வெற்றியின் படிகள்'..

அதுக்காக எழுதுறதை விடலாமோ?!! !!!

  • கருத்துக்கள உறவுகள்

முரளி ஆரம்ப காலங்களில் பத்திரிகைகளில் மட்டுமே சில ஆக்கங்களை எழுதியபொழுது அதன் மறு தாக்கம் என்பது பெரிதாய் தெரியவில்லை காரணம் பத்திரிகையில் வருவதை படித்து விட்டு பேசாமல் அல்லது மனதிற்குள் திட்டிவிட்டு போய்விடுவான் ஆனால் அதனை யாழ்களம் போன்று கருத்துக்களை மற்றவர்களும் வைக்கும் கருத்துக்களங்களிலும்.அல்லது வலைப்பூக்களில் படைப்புக்ககைளை போடும் பொழுது தான் எம்முடைய ஆக்கம் மற்றவர்களிடம் எவ்வளது தாக்கத்தினை ஏற்றபடுத்தியிருக்கின்றது என்பது தெரியவரும். ஆனால் அவைதான் எமது எழுத்துக்களை புடம் போடும் விமர்சனங்கள் சில நேரம் விசனத்தை ஏற்படுத்தினாலும். அவை நம்மை பண்படுத்தும். உண்மையில் யாழ் களம் என்னையும் நன்றாகவே பண்படுத்தியிருக்கிறது. எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களை பண்படுத்தும்.அதே போலவே நீங்களும் நிறைய படைப்புக்களை தரவேண்டும் பல பொல்லுகளை கொடுத்து வாங்கவேண்டும். நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறவேண்டும். என்று புதுவருட வாழ்த்துக்களுடன் விடை பெறுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.