Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்காலையில் விழுங்கிய நஞ்சு தன்னைத் தின்றிருந்தால் எதையும் தெரியாமல் போயிருப்பேனென்று துயரமுறும் அவனைத் தேற்றுவதற்கு வார்த்தைகள் வருவதேயில்லை. கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதற்காக கலியாணம் செய்து கொண்டதும் கடமைகளுக்காக தன்னைப்பற்றிய உண்மைகள் எதையும் சொல்லாமல் அவளைக் காதலித்ததும் தனது துரோகங்களில் முதன்மையானதென மனதால் அழுகின்றான். ஏதோவொரு துணிச்சலில் ஏதோவொரு நம்பிக்கையில் எல்லாவற்றையும் செய்து முடித்து இன்று…..அவனை விடுதலை செய்யாதிருக்கும் கம்பிகளுக்கு நடுவிலிருந்து அவனது அவளுக்காகவும் அவனது குழந்தைக்காகவும் வாழவேண்டுமென்றே விரும்புகின்ற ஒரு கைதி.......

மேலும் விபரங்களுடன் வாசிக்க உதவ கீழ் உள்ள இணைப்பில் அழுத்துங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77207

  • Replies 123
  • Views 7.7k
  • Created
  • Last Reply

சாந்தி முதலில் இணைப்பிற்கு நன்றிகள்!!

இப்போராளிக்கு மட்டுமல்ல எல்லாப் போராளிகள், சிங்களத்தின் அழித்தொழிப்புகளிலிருந்து தப்பி, மீள முற்படும் பொதுமக்களுக்கும் உதவி செய்ய வேண்டிய கடமைப்பாடு ஒவ்வொரு புலத்தமிழனின் தலையிலும்! இதை நாம் செய்யாது முடிப்பின், சிங்களம் எதை சாதிக்க விரும்பி, இம்மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தியதோ, அதற்கு நாமே பலியாகி விடுவோம்!!

அதற்காக ஏன் நாம் நாடுகடந்த அரசையும், மற்றைய புலத்தில் உள்ள தமிழ் அவைகளியும் நோகின்றோமோ, புரியவில்லை??? அந்த அமைப்புகளிடையே கருத்தொற்றுமை/சீரான குறிக்கோள்/.. போன்ற பல பிரட்சனைகள் உள்ளன, மறைப்பதற்கில்லை!! அதற்காக இந்த புலம் பெயர் அமைப்புகள்தான், அவர்களது கடமைகளை(செய்ய வேண்டியவைகளை) விடுத்து, இப்போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் செய்ய முற்பட்டால் சிங்களம் அனுமதி தருமா?? இல்லை அதனை ஏற்கப்போகிறதா?? இல்லை அனுமதி கிடைத்தாலும், அவர்களால் பயனடையும் மக்களை சிங்களம் வாழவா விடப்போகிறது???

சில காலங்களுக்கு முன்னுக்கு, யாழில் மீள்குடியேறிய ஒரு தொகுதி மக்கள் மீண்டும் சிங்களத்தினால் துரத்தப்பட்டுள்ளனர்! என்னத்தை செய்ய முடிந்தது எம்மால்???

சில நாட்களுக்கு முன்னுக்கு சாந்தி திண்ணையில் ... யாழ்கள ஜீவாவின் உதவியினால் பலனடைந்த ஒருவர், இனம் புரியாதோரினால் கடத்தப்பட்டார் ... நாம் செய்தோம், வாழ வைக்க முடிந்ததா? தடுக்க முடிந்ததா???

அங்குள்ள மக்களுக்கு சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஒரு நிலையான அரசியல் தீர்வு ஏற்படும் வரை, சிங்களம், நாம் எவ்வளவற்றையும் அம்மக்களுக்கு செய்தாலும், அவர்களை வாழ விடப்போவதில்லை!!!!

இங்குள்ள புலம் பெயர் அமைப்புகள், தமிழ் மக்களுக்கு சிங்களம் கடந்த 60 ஆண்டுகாலமாக செய்த அட்டூளியங்களுக்கு நீதி கிடைக்க பாடுபட நாம் உந்துதல் கொடுக்க வேன்டும்! இறுதி யுத்தத்தில் ஓரிரு நாட்களில் 40000 மக்கள் கேட்டு கேள்வியில்லாமல் சிங்களத்தினால் அழித்தொழிக்கப்பட்டதற்கு நீதி கிடைக்க போராட நாம் உந்துதல் கொடுக்க வேண்டும்! யுத்த குற்றவாளிகளை தண்டிப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உந்துதல் கொடுக்க வேண்டும்!! ... அவர்கள் இவ்வேலைகளை பார்க்கட்டும்!! இவற்றையாவது சரியாக செய்யட்டும்!! அதனை தட்டிக் கேட்போம்! எல்லாவற்ரையும் அவர்களின் தலையில் போடு தப்பிக்க எண்ணுகிறோம்!

அடுத்து இன்று சிங்களம் எமக்கு ஓர் பேரளிவை தந்து விட்டு ... எம்மை சரணாகதி அடையச்சொல்லி வற்புறுத்துகிறது!! நாமும் எம் எதிர்பார்ப்புகள் பிழையாக சென்றதால் மனமுடைந்து, அவனது வலையில் வீழ முற்படுகிறோம்!! இல்லை எம்மால் இனி ஒன்றும் செய்ய இயலாது எனும் எண்ணத்தில் அவனது வலையில் வீழ்கிறோம்.

வன்னி யுத்ததில் ஏறக்குறைய 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் அதற்கு முன் 200000 வரையிலான பொதுமக்கள் சிங்களத்தினால் கொல்லப்பட்டனர், அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த பிரதேசங்களில் இருந்து அடித்து விரட்டப்பட்டனர். யாழில் கூட பாதுகாப்பு வலயமெனும் போர்வையில், மிக செழிப்பான இடங்கள், யாழில் ஏறக்குரைய மூன்றில் ஒரு பங்கிற்கு கூடிய பிரதேசத்தில் இருந்து விரட்டப்பட்டனர். இன்று 20 வருடங்களுக்கு மேலாகியும், மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை!! இன்று 40000 அழிவுகளுக்கு பின் நாம் சரணாகதி அடைவது சரியென்றால், நாம் அதனை முன்பே செய்திருக்கலாம்!

இல்லை, இறுதி யுத்ததில் சிங்களம் ஏற்படுத்திய அழிவுதானே, எமக்கு சிங்களம் தந்த இறுதி அழிவு??? இல்லவே இல்லை!! இது தொடர்கிறது ... நிற்கப்போவதில்லை, நாம் சரணாகதி அடைந்தாலும்!!!

எமக்கு இன்றிருக்கும் பலம் புலம்பெயர் சமூகமே! இச்சமுகத்தில் இருக்கும் எம் அமைப்புகள் உறுதியாக/ஒற்றுமையுடன்பொது இலக்கை நோக்கி/சர்வதேச ஏற்றுக்கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும்! அங்குள்ள மக்களுக்கு ஓர் அமைதியான வாழ்வை, ஒரு அரசியல் தீர்வின் மூலம் ஏர்படுத்திக் கொடுக்க முற்பட வேண்டும், அதற்காக உறுதியுடன் செயற்பட வேண்டும்!! இல்லையேல் அங்குள்ள மக்களுக்கு நாம் எல்லாவற்றையும் செய்தாலும், அவர்களின் வாழ்வு சுபீட்சமடைய சிங்களம் விடப்போவதில்லை!

அங்குள்ள போராளிகள், பொதுமக்களுக்கான தேவைகளை புலம்பெயர் சமூகம் செய்யத்தான் வேண்டும், அதேவேளை அவர்களை பணயக்கைதிகளாக்கி, இப்புலம்பெயர் சமூகத்தின் அரசியர் செயற்பாடுகளை முடக்கும் சிங்களத்தின் எண்ணங்களுக்கு அடிபணியாது இருப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி முதலில் இணைப்பிற்கு நன்றிகள்!!

அதற்காக ஏன் நாம் நாடுகடந்த அரசையும், மற்றைய புலத்தில் உள்ள தமிழ் அவைகளியும் நோகின்றோமோ, புரியவில்லை???

ஆமென்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமென்

அண்ணை பைபிளை மூடிவைச்சிட்டு வாங்கோ. :D

  • கருத்துக்கள உறவுகள்

மேலே குறிப்பிட்டுள்ள நபர் மீது தென்னிலங்கை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஒரு வழக்கிற்கு பிணைப்பணம் தலா 5 இலட்சங்கள் வரை முடியும் எனவே 5 வழக்குகளிற்கும் 25 இலட்ச ருபாய்கள் தேவைப்படும்..25 லட்ச ருபாய் என்பதை சாதரணமான எங்களைப்போன்ற தனிநபர்களால் உதவ முடியாது ..அதேநேரம் புலம்பெயர் நாடுகளில் அமைப்புக்கள் வைத்திருப்பவர்களிற்கு அதாவது நா.கடந்த அரசு அல்லது தமிழர் பேரவைகள் என்பவர்களிற்கு 25 இலட்சம் என்பது சாதாரண தொகை. அவர்கள் மனம்வைத்தால் செய்யலாம்..மேலே குறி;பிட்ட கைதியும் தனக்காக தன்பெயரை சொல்லி வெளிநாட்டில் இயங்கும் அமைப்புக்களிடம் கதைத்து பார்க்கசொல்லியிருந்தார் நாமும் சிலரை அணுகி கதைத்தோம்.பிரயோசனம் இல்லை.. அதற்காக நாடுகடந்த அரசோ தமிழர் பேரவைகளோ நேரடியாக இங்கைக்கு போய் நீதிமன்றத்தில் வாதடச்சொல்லவில்லை அது அவர்களால் முடியாதென்பது எமக்கும் தெரியும். அவர்கள் உதவ முன்வந்தால் அதற்கான வழிகளை எம்மால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.இந்த அமைப்புக்களில் இரக்க குணம்கொண்ட யாராவது இதனைபடித்து ஏதாவது ஏற்பாடுகள் செய்தாலும் செய்வார்கள் என்கிற ஏக்கத்தில்தான் இறுதியாக இதனை பகிரங்கமாக எழுதியிருக்கிறோம்..முன் வருவார்களா?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனுக்கும் அவன் அரசுக்கும் தமிழ் மக்கள் அனைவருமே பொன் முட்டை இடும் வாத்துக்கள்.

கடந்தவார இறுதியில் நடந்த ஒரு கூட்டத்திற்கு போயிருந்தேன்.தேடகம் ஒழுங்குபணியிருந்தது.முதன் முதல் மாற்றுக்கருத்துளோர்களும் நாடு கடந்த அரசு பிரதிநிதிகளும் கூடியிருந்தார்கள்.இலங்கையில் இருந்து கம்னியூஸ்ட் கட்சிசார்பாக செந்திவேலும்,வியூகம் சார்பில் ஜான் மாஸ்டரும் நாடுகடந்த அரசு சார்பில் பொன்.பாலராஜனும் தமது கருத்துகளை முன்வைத்தார்கள்.பின்னர் வந்திருந்தோரின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள்.

ஏதொ ஒரு ஜனநாயகத்திற்கான தொடக்கம் என்றும் விரும்பினால் கொள்ளலாம்.

தாங்கள் ஒரு போத்தலுக்குள் அடைக்கப்பட்ட மனநினையிலேயே இருப்பதாகவும் வருங்காலங்களில் எல்லோரும் பங்கு பற்றும் ஒரு நிலைக்கு நாடு கடந்த அரசு வளரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.புலிகளின் பணம் பற்றி தமக்கு ஒன்றுமே தெரியாது என கைவிரித்தார்.

பிரான்ஸில் ஈ.பீ.ஆர்.எல்.எப் கூட்டமும் ஜேர்மனியில் புளொட் கூட்டங்களும் நடைபெற்றுள்ளன.நாட்டிலும் தமிழரங்கத்தில் தமிழர் தேசியக் கூட்டைமைப்பு பங்கு பற்றியிருக்கின்றது.ஏதோ ஜனநாயக வழியில் எமக்குள் அடிபடாமல் ஒன்றுபட்டேமேயானல் ஏதாவது விடிவு கிடைக்கும்.

மீண்டும் புலிகளை இங்கு இழுப்பதாக நினைக்க வேண்டாம்.நாங்கள் அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கலாம் ஆனால் உலகம் அவர்களை வைத்திருக்கும் கணிப்பு முற்றிலும் வேறானது. இன்று டொரொன்டோ ஸ்டாரில் ஒரு செய்தி லசந்தாவின் கொலை பற்றி வந்திருக்கின்றது.அதில் அவர்கள் லசந்தா புலிகளை பற்றி எழுதிய வசனம் ஒன்றையும் போட்டிருக்கின்றார்கள்.இதே போல் எவராவது எமது நாட்டு பிரச்சனை பற்றி கதைக்க தொடங்கும் போது புலிகளை பற்றி அவர்கள் கொடுக்கும் வரைவிலக்கணம் மிக கீழ்த்தரமானது.இவைகளெல்லாவற்றையும் கருத்திலெடுத்தே நாம் அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும்.

சாந்தியக்கா முடிந்தால் தனிமடலில் தொடர்புகொள்ளவும்.என்னாலான உதவிகளை செய்கின்றேன்.எனக்கு நீங்கள் போட்ட தனிமடலுக்கு பதில் போட்டென் பின்னர் ஒன்றயும் காணவில்லை விட்டுவிட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி முதலில் இணைப்பிற்கு நன்றிகள்!!

இப்போராளிக்கு மட்டுமல்ல எல்லாப் போராளிகள், சிங்களத்தின் அழித்தொழிப்புகளிலிருந்து தப்பி, மீள முற்படும் பொதுமக்களுக்கும் உதவி செய்ய வேண்டிய கடமைப்பாடு ஒவ்வொரு புலத்தமிழனின் தலையிலும்! இதை நாம் செய்யாது முடிப்பின், சிங்களம் எதை சாதிக்க விரும்பி, இம்மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தியதோ, அதற்கு நாமே பலியாகி விடுவோம்!!

சில காலங்களுக்கு முன்னுக்கு, யாழில் மீள்குடியேறிய ஒரு தொகுதி மக்கள் மீண்டும் சிங்களத்தினால் துரத்தப்பட்டுள்ளனர்! என்னத்தை செய்ய முடிந்தது எம்மால்???

சில நாட்களுக்கு முன்னுக்கு சாந்தி திண்ணையில் ... யாழ்கள ஜீவாவின் உதவியினால் பலனடைந்த ஒருவர், இனம் புரியாதோரினால் கடத்தப்பட்டார் ... நாம் செய்தோம், வாழ வைக்க முடிந்ததா? தடுக்க முடிந்ததா???

அங்குள்ள மக்களுக்கு சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஒரு நிலையான அரசியல் தீர்வு ஏற்படும் வரை, சிங்களம், நாம் எவ்வளவற்றையும் அம்மக்களுக்கு செய்தாலும், அவர்களை வாழ விடப்போவதில்லை!!!!

அடுத்து இன்று சிங்களம் எமக்கு ஓர் பேரளிவை தந்து விட்டு ... எம்மை சரணாகதி அடையச்சொல்லி வற்புறுத்துகிறது!! நாமும் எம் எதிர்பார்ப்புகள் பிழையாக சென்றதால் மனமுடைந்து, அவனது வலையில் வீழ முற்படுகிறோம்!! இல்லை எம்மால் இனி ஒன்றும் செய்ய இயலாது எனும் எண்ணத்தில் அவனது வலையில் வீழ்கிறோம்.

இல்லை, இறுதி யுத்ததில் சிங்களம் ஏற்படுத்திய அழிவுதானே, எமக்கு சிங்களம் தந்த இறுதி அழிவு??? இல்லவே இல்லை!! இது தொடர்கிறது ... நிற்கப்போவதில்லை, நாம் சரணாகதி அடைந்தாலும்!!!

எமக்கு இன்றிருக்கும் பலம் புலம்பெயர் சமூகமே! இச்சமுகத்தில் இருக்கும் எம் அமைப்புகள் உறுதியாக/ஒற்றுமையுடன்பொது இலக்கை நோக்கி/சர்வதேச ஏற்றுக்கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும்! அங்குள்ள மக்களுக்கு ஓர் அமைதியான வாழ்வை, ஒரு அரசியல் தீர்வின் மூலம் ஏர்படுத்திக் கொடுக்க முற்பட வேண்டும், அதற்காக உறுதியுடன் செயற்பட வேண்டும்!! இல்லையேல் அங்குள்ள மக்களுக்கு நாம் எல்லாவற்றையும் செய்தாலும், அவர்களின் வாழ்வு சுபீட்சமடைய சிங்களம் விடப்போவதில்லை!

அங்குள்ள போராளிகள், பொதுமக்களுக்கான தேவைகளை புலம்பெயர் சமூகம் செய்யத்தான் வேண்டும், அதேவேளை அவர்களை பணயக்கைதிகளாக்கி, இப்புலம்பெயர் சமூகத்தின் அரசியர் செயற்பாடுகளை முடக்கும் சிங்களத்தின் எண்ணங்களுக்கு அடிபணியாது இருப்போம்!

நெல்லையன் உங்கள் அனைத்து ஆதங்கங்களுக்கும் இதுவே எனது பதில்.

புற்றுநோய் மாறாதது உயிர்கொல்லி. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை மாறாத நோயிற்கு ஏன் மருத்துவமென்று சாகவிடுவதில்லையே..!

வாழும்வரை மருந்துகளைக் கொடுத்து வாழ்விக்கிறது மருத்துவம். அதுபோல்தான் இவனுக்கான முயற்சிகளும்.

முடியும் வரை முயற்சிப்போம். அவனுக்காக ஏதுமறியாத அவனது மனைவியும் குழந்தையும் சிறையில் அவலப்படுகிறார்கள். அவர்களுக்காவது ஒரு ஒளி தெரியுமானால் அதுவே அவனுக்கு மகிழ்ச்சிதான்.

இதே ஒரு முக்கிய புள்ளியாக கையில் பலத்துடன் இருப்போரின் அன்புக்கு அல்லது உரிமைக்கு உரியவரானால் எத்தனைகோடியானும் கொட்டிக்கொடுத்துவிடுவோம். இவனோ பயித்தியக்காரன் கையில் கோடிகோடியாக இருந்த கடைசிநிமிடம் வரை இலட்சியமென்றே வாழ்ந்து தொலைந்ததே இவனுக்கு வினையாகிப் போயிருக்கிறது.

எல்லாம் நாம் 3ம் நபர்களாக நின்று எழுதவும் சொல்லவும் இலகுவாயிருக்கும். ஆனால் நடைமுறையில் அதை அனுபவிப்பவனுக்குத்தான் அதன் வலியும் துயரமும். நாங்கள் 3வதும் அல்லது பல்லாயிரம் தொலைவிலிருந்து தத்துவம் பேசுகிறோம்.

ஏட்டுச்சுரைக்காய் எதற்குத்தான் உதவும். :D

நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா முடிந்தால் தனிமடலில் தொடர்புகொள்ளவும்.என்னாலான உதவிகளை செய்கின்றேன்.எனக்கு நீங்கள் போட்ட தனிமடலுக்கு பதில் போட்டென் பின்னர் ஒன்றயும் காணவில்லை விட்டுவிட்டேன்.

தனிமடல் இட்டுள்ளேன் பாருங்கள். நீங்கள் ஏற்கனவே போட்ட மடல் எதுவும் கிடைக்கவில்லை.

எதுக்கென்றாலும் குறிப்பிட்ட ஒரு மக்கள் தொகுதியினர் தான் சிலுவை சுமக்கனும் என்று என்று எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயம் 10 வருடத்திற்கு மேலாக போராட்டகளம்..3-4 வருடம்கள் சிறை வாழ்க்கை..இன்னும் என்ன எதிர்பார்கிறீர்கள் இவரிடமிருந்து.. ..

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை பைபிளை மூடிவைச்சிட்டு வாங்கோ. :D

சாந்தியக்கா

நேரம் கிடைக்காத வேளையில் அவசர பதில் எழுதமுடியாதபோது

நான் நினைப்பதை வேறு ஒருவர் எழுதியிருந்தால்

அதுவே என் கருத்தும் என்பதற்காகவே ஆமென் என்ற வார்த்தையை நான் பாவிக்கின்றேன்

மதம் இதற்குள் அடங்காது பைபிளை நான் படித்ததில்லை.

இதற்குள் அதை எழுதி இந்த திரியை திசைதிருப்ப விரும்பவில்லை.

அவரவர் அவரவரது வேலையை செய்யட்டும் என்பதே என் கருத்து.

அத்துடன் தங்களது முயற்சிக்கு எனது ஆதரவு என்றும் உண்டு.

அவர்களிடமும் நாம் கேட்கலாமே தவிர

இதை செய்யத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பது போன்ற சுட்டுவிரல்நீட்டுதல்கள் சரியா என்பது தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா

நேரம் கிடைக்காத வேளையில் அவசர பதில் எழுதமுடியாதபோது

நான் நினைப்பதை வேறு ஒருவர் எழுதியிருந்தால்

அதுவே என் கருத்தும் என்பதற்காகவே ஆமென் என்ற வார்த்தையை நான் பாவிக்கின்றேன்

மதம் இதற்குள் அடங்காது பைபிளை நான் படித்ததில்லை.

இதற்குள் அதை எழுதி இந்த திரியை திசைதிருப்ப விரும்பவில்லை.

அவரவர் அவரவரது வேலையை செய்யட்டும் என்பதே என் கருத்து.

அத்துடன் தங்களது முயற்சிக்கு எனது ஆதரவு என்றும் உண்டு.

அவர்களிடமும் நாம் கேட்கலாமே தவிர

இதை செய்யத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பது போன்ற சுட்டுவிரல்நீட்டுதல்கள் சரியா என்பது தெரியவில்லை.

ஓ அப்படியா ! நீங்கள் ஆமென் என எழுதும் போது அது ஏதோ அசெளகரியம் போலிருக்கிறது. அதுதான் எழுதினேன். மற்றும்படி மதத்தை குறைகூறும் எண்ணமில்லை.

அவரவர் அவரவர் வேலையை செய்ய வேண்டுமென்பதே எனது விருப்பமும். மேலுள்ள விபரத்துக்னகு உரியவனுக்காக பலரிடம் கையேந்தியதில் நாட்டுக்காக போனவருக்கு ஏனாம் விடுதலையென்ற விமர்சனங்கள் பலதரப்பிலிருந்து வந்தது. அது நான் குறிப்பிட்ட அரசு அவைகளிலிருந்தும்தான். அவைகளில் அவன் படைத்த வெற்றிகளுக்கு சொக்லேட் அனுப்பியவர்களும் அடங்குகின்றனர். இன்று தேடுவாரற்று இருக்கிறான். வெற்றியில் பங்குபோட்டவர்கள் அவன் வேதனையில் இருக்கும் போது ஒற்றை ஆறுதல் வார்த்தையைக்கூட சொல்ல அஞ்சி ஒளித்திருக்கிறார்கள். அந்த ஆதங்கமே இன்று இதை எழுத நேர்ந்தது.

இதையெல்லலாம் செய்ய அவர்களில்லை ஆனால் இவனுக்காக இவர்கள் எல்லோரும் செய்ய வேண்டிய கைமாறு நிறையவே இருக்கிறது. மன்னிக்கவும் இது சுட்டுவிரல் நீட்டி குற்றம் பிடிக்கும் நோக்கமில்லை. அவன் வெளியில் வரவேணும்.

மாறாத புற்றுநோயளரை உயிர்கொல்லும் நோய்தானே மருந்தெதற்கு என விட்டுவிடாதது போல இவனுக்கான விடுதலையில் அக்கறையை தொடர அதற்கான வளங்கள் எதுவுமில்லாமல் என்னாலும் கனவுதான் காணமுடிகிறது.

நாங்கள் அவனது நிலையில் இருந்து பார்க்காமல் எங்களது உச்சங்களிலிருந்து பார்ப்பது வேதனையாக இருக்கிறது.

மீண்டும் மன்னித்துக் கொள்ளுங்கள் விசுகு.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

மாறாத புற்றுநோயளரை உயிர்கொல்லும் நோய்தானே மருந்தெதற்கு என விட்டுவிடாதது போல இவனுக்கான விடுதலையில் அக்கறையை தொடர அதற்கான வளங்கள் எதுவுமில்லாமல் என்னாலும் கனவுதான் காணமுடிகிறது .

என் நிலையும் அதுதானக்கா

நேற்று இது போன்ற ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது

பல மணித்தியாலங்கள் அதே நினைவு. நெஞ்சு பொறுக்குதில்லை. ஆனால் ஒரு கை மட்டும்தட்டி...........

மேலே குறிப்பிட்டுள்ள நபர் மீது தென்னிலங்கை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஒரு வழக்கிற்கு பிணைப்பணம் தலா 5 இலட்சங்கள் வரை முடியும் எனவே 5 வழக்குகளிற்கும் 25 இலட்ச ருபாய்கள் தேவைப்படும்..25 லட்ச ருபாய் என்பதை சாதரணமான எங்களைப்போன்ற தனிநபர்களால் உதவ முடியாது ..அதேநேரம் புலம்பெயர் நாடுகளில் அமைப்புக்கள் வைத்திருப்பவர்களிற்கு அதாவது நா.கடந்த அரசு அல்லது தமிழர் பேரவைகள் என்பவர்களிற்கு 25 இலட்சம் என்பது சாதாரண தொகை. அவர்கள் மனம்வைத்தால் செய்யலாம்..மேலே குறி;பிட்ட கைதியும் தனக்காக தன்பெயரை சொல்லி வெளிநாட்டில் இயங்கும் அமைப்புக்களிடம் கதைத்து பார்க்கசொல்லியிருந்தார் நாமும் சிலரை அணுகி கதைத்தோம்.பிரயோசனம் இல்லை.. அதற்காக நாடுகடந்த அரசோ தமிழர் பேரவைகளோ நேரடியாக இங்கைக்கு போய் நீதிமன்றத்தில் வாதடச்சொல்லவில்லை அது அவர்களால் முடியாதென்பது எமக்கும் தெரியும். அவர்கள் உதவ முன்வந்தால் அதற்கான வழிகளை எம்மால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.இந்த அமைப்புக்களில் இரக்க குணம்கொண்ட யாராவது இதனைபடித்து ஏதாவது ஏற்பாடுகள் செய்தாலும் செய்வார்கள் என்கிற ஏக்கத்தில்தான் இறுதியாக இதனை பகிரங்கமாக எழுதியிருக்கிறோம்..முன் வருவார்களா?????

இங்கு சாந்தி/சாத்திரியின் முயற்சிகளை ஒருவரும் குறைகூற வரவில்லை ... மாறாக .... இத்தலைப்பிற்கே சில பதில்கள்!! மேலும் அடிமனது தாக்கங்கள்/விருப்புகள்/வெறுப்புகள் எம்மை அறியாமல் வெளிவந்து விடும் .. அதில் தவறில்லை! ஆனால் அவை சரியா? பிழையா? என்பதே பிரட்சனை!!

மே18 முடிய, பல போராளிகள்/பொதுமக்கள் கைது செய்யப்பட்டும்/சரணடைந்தும் முகாங்களில் கிடக்க ... சிங்களம் குறுகிய காலத்தில் இவர்களை விற்பனைப் பொருளாக்கியது!! இந்த விற்பனையில் ராஜபக்ஸ சகோதரர்களின் மாமாக்களாக/இடைத்தரகர்களாக டக்லஸ் தேவானந்தா/சித்தார்த்தன் ஈடுபட்டு, முபத்தினாயிரம் ரூபா முதல் முப்பது லட்சம் வரை கூவிக்கூவி புலத்தில் உள்ள போராளிகள்/பொதுமக்களின் உற்றார்/உறவினர்/நண்பர்களிடம் விற்று, தாமும் பணமும் சம்பாதித்தார்கள்! பின்பு இந்த பிஸ்னஸ் டக்லஸ்/சித்தார்த்தன் கும்பலிடமிருந்து கே.பிக்களிடம் போனது வேறு கதை!

இவ்வவிடைத்தரக மாமாக்களினால் சில போராளிகள்/பொதுமக்கள் வெளியில் எடுக்கப்பட்டார்கள்தான்!! ஆனால் பலர் புலத்திலிருந்து காசை கொடுத்தும் போராளிகள்/பொதுமக்கள் என்ற பொருளை பெறமுடியாமல் ஏமாத்தப்பட்டார்கள், சிலர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் வரை கொண்டு வரப்பட்டு மீண்டும் ... கொண்டு வந்தர்களே இராணுவத்தினரோ/ஒட்டுக்குழுக்களோ தான் ... கைது என பிடித்துச் செல்லப்படனர்! இப்படி இந்த பல லட்சங்களை கொடுத்தும், கிடைக்காதவர்கள் பலர்!!

இங்கு மேலுள்ள போராளிக்கு சிங்களம் நிர்ணயித்த விலை 25லட்சம் ரூபா! சரி, அதனை இங்கிருந்து யாராவது கொடுத்தாலும், அப்போராளி விடுதலை செய்யப்படுவதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? விடுவிக்கப்பட்டாலும் மீண்டும் கைது செய்யப்பட மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? அவரது உயிருக்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

இன்று சிங்களத்தின் பார்வையில் ... நாம்,/புலம்பெயர்ந்தவர்கள் என்பது ஒரு பணம் காய்க்கும்/பறிக்கும் விருட்சம்! அதுவும் இன உணர்வுக்கு மேல் உணர்ச்சி உணர்வுள்ளவர்கள்! எவ்வாறு இந்த விருட்சத்தை அணுகுவது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறான்! அதன் வெளிப்பாடே அண்மைய கேபியின் மூலம் நாடகங்களை அரங்கேற்றுகிறான்! நாமும் அதற்கு பலியாக வேண்டுமா???

சிங்களவனுக்கும் அவன் அரசுக்கும் தமிழ் மக்கள் அனைவருமே பொன் முட்டை இடும் வாத்துக்கள்.

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சாந்தி/சாத்திரியின் முயற்சிகளை ஒருவரும் குறைகூற வரவில்லை ... மாறாக .... இத்தலைப்பிற்கே சில பதில்கள்!! மேலும் அடிமனது தாக்கங்கள்/விருப்புகள்/வெறுப்புகள் எம்மை அறியாமல் வெளிவந்து விடும் .. அதில் தவறில்லை! ஆனால் அவை சரியா? பிழையா? என்பதே பிரட்சனை!!

மே18 முடிய, பல போராளிகள்/பொதுமக்கள் கைது செய்யப்பட்டும்/சரணடைந்தும் முகாங்களில் கிடக்க ... சிங்களம் குறுகிய காலத்தில் இவர்களை விற்பனைப் பொருளாக்கியது!! இந்த விற்பனையில் ராஜபக்ஸ சகோதரர்களின் மாமாக்களாக/இடைத்தரகர்களாக டக்லஸ் தேவானந்தா/சித்தார்த்தன் ஈடுபட்டு, முபத்தினாயிரம் ரூபா முதல் முப்பது லட்சம் வரை கூவிக்கூவி புலத்தில் உள்ள போராளிகள்/பொதுமக்களின் உற்றார்/உறவினர்/நண்பர்களிடம் விற்று, தாமும் பணமும் சம்பாதித்தார்கள்! பின்பு இந்த பிஸ்னஸ் டக்லஸ்/சித்தார்த்தன் கும்பலிடமிருந்து கே.பிக்களிடம் போனது வேறு கதை!

இவ்வவிடைத்தரக மாமாக்களினால் சில போராளிகள்/பொதுமக்கள் வெளியில் எடுக்கப்பட்டார்கள்தான்!! ஆனால் பலர் புலத்திலிருந்து காசை கொடுத்தும் போராளிகள்/பொதுமக்கள் என்ற பொருளை பெறமுடியாமல் ஏமாத்தப்பட்டார்கள், சிலர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் வரை கொண்டு வரப்பட்டு மீண்டும் ... கொண்டு வந்தர்களே இராணுவத்தினரோ/ஒட்டுக்குழுக்களோ தான் ... கைது என பிடித்துச் செல்லப்படனர்! இப்படி இந்த பல லட்சங்களை கொடுத்தும், கிடைக்காதவர்கள் பலர்!!

இங்கு மேலுள்ள போராளிக்கு சிங்களம் நிர்ணயித்த விலை 25லட்சம் ரூபா! சரி, அதனை இங்கிருந்து யாராவது கொடுத்தாலும், அப்போராளி விடுதலை செய்யப்படுவதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? விடுவிக்கப்பட்டாலும் மீண்டும் கைது செய்யப்பட மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? அவரது உயிருக்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

இன்று சிங்களத்தின் பார்வையில் ... நாம்,/புலம்பெயர்ந்தவர்கள் என்பது ஒரு பணம் காய்க்கும்/பறிக்கும் விருட்சம்! அதுவும் இன உணர்வுக்கு மேல் உணர்ச்சி உணர்வுள்ளவர்கள்! எவ்வாறு இந்த விருட்சத்தை அணுகுவது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறான்! அதன் வெளிப்பாடே அண்மைய கேபியின் மூலம் நாடகங்களை அரங்கேற்றுகிறான்! நாமும் அதற்கு பலியாக வேண்டுமா???

புற்றுநோய் மாறாதது உயிர்கொல்லி. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை மாறாத நோயிற்கு ஏன் மருத்துவமென்று சாகவிடுவதில்லையே..!

வாழும்வரை மருந்துகளைக் கொடுத்து வாழ்விக்கிறது மருத்துவம். அதுபோல்தான் இவனுக்கான முயற்சிகளும்.

இங்கு நீங்கள்கூட இந்த விடயத்திற்குள் கே.பி என்ற பெயரை இழுக்கிறீர்கள். இதுபோலத்தான் அவன் உரைத்த நாடுகடந்த பேரவை மக்களவை செயற்குழுக்களும். இன்று அவனைப்பற்றி எழுதியது பற்றி ஒருவர் ஊடாக அவனுக்குத் தகவல் போயிருக்கிறது. இரவு கதைத்தேன். அவனுக்கு நீங்கள் எழுதியவற்றை வாசித்துக் காட்டினேன். அவன் சொன்னான் களம் பலமாயிருந்திருந்தால் போடாபயித்தியங்களே என்று தன்னால் ஆயுளுக்கும் இருந்துவிட முடியும். ஆனால் இன்று ஏன் இருக்கிறேன் என்ற அர்த்தமே தெரியாமல் இருப்பதாக வேதனையுடன் கூறினான்.

இந்தக்கதையை அவனுக்கு இனிப்புகள் அனுப்பிய அல்லது அவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் பார்த்தால் ஏதாவது விடிவுவருமென்று இன்னும் நம்புகிறான். உங்கள் சிங்கள ஆதிக்க நாடக அரங்கங்கள் பற்றி எவ்விட அக்கறையுமில்லை அவனிடம்.

மீண்டும் நாங்கள் 3ம் நபர்களாக அவனைப் பார்க்கிறோம். அதுதான் இன்னொருவரின் தலையில் நீங்களும் சிலுவையை இறக்கிவிட்டு நீண்ட கதை சொல்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லியான் நீங்கள் கூறுவது போல பலர் மீண்டும் கைது செய்யப்பட்டும் உள்ளனர் சிலர் தப்பியும் வந்துள்ளனர்..அதற்காக முயற்சி என்பதே செய்யாமல் இருக்க முடியாது தானே .நாம் முடிந்தவரை பலவழிகளிலும் முயற்சிக்கிறோம்..சிலநேரம் அந்த உறவு வெளியில் வந்தால் மகிழ்ச்சியே நன்றி வணக்கம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கென்றாலும் குறிப்பிட்ட ஒரு மக்கள் தொகுதியினர் தான் சிலுவை சுமக்கனும் என்று என்று எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயம் 10 வருடத்திற்கு மேலாக போராட்டகளம்..3-4 வருடம்கள் சிறை வாழ்க்கை..இன்னும் என்ன எதிர்பார்கிறீர்கள் இவரிடமிருந்து.. ..

எதுக்கென்றாலும் உவைதானே லூசுகள் மாதிரி இலட்சியமெண்டு போனவை அப்ப அவைதானே சிலுவையில்லை சிகரத்தையும் சுமக்க வேணும்.

என்னத்தை வீணா எதிர்பார்கிறம். இவனைப்போன்றவை தப்பக்கூடாது சாகவேணும் அப்பதான் எங்கடை லட்சியம் வெல்லும். :wub::lol: :lol: :lol:^_^:):D :D

என் நிலையும் அதுதானக்கா

நேற்று இது போன்ற ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது

பல மணித்தியாலங்கள் அதே நினைவு. நெஞ்சு பொறுக்குதில்லை. ஆனால் ஒரு கை மட்டும்தட்டி...........

பலகைகள் இருந்தும் பயனில்லையே :D

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் பிடிக்கிறதென்றால் தேசிய தலைவரில் இருந்து அரசாங்கத்தோட இணைந்து வேலை செய்து கொண்டிருக்கும் டக்கிளஸ் தேவானந்தா வரைக்கும் இதில குற்றம் பிடிக்கலாம்.

பிரச்சனை குற்றம் காண்பதல்ல. பிரச்சனைக்கு தீர்வு என்ன.. இவர்களின் மறுவாழ்வுக்கு உத்தரவாதம் என்ன..??! சிறு சிறு உதவிகள் பரிசுத் தொகைகள்.. உண்மையில் இவர்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மீட்குமா என்பதும் கேள்விக்குறியே...??!

இந்த மக்களின் இன்றைய தேவை.. போராளி என்ற நிலைகளுக்கு அப்பால்.. இன்று அவர்கள் சாதாரண மக்கள்...

1. பாதுகாப்பு உத்தரவாதம்.

2. அரச மற்றும் இராணுவத்தின் தொல்லைகளின் இருந்து முற்றாக நீங்கி இருத்தல்.. நிம்மதியாக சுதந்திரமாக செயற்படுதல்.

3. அடிப்படை சமூகக் கட்டமைப்போடு ஒருங்கிணைதல்.

4. அடிப்படை கட்டுமானத் தேவைகள். வீடு.. நிலம்.. போன்றவை.

5. நிரந்தர வருவாய்க்கான வழிமுறைகள்.

6. வருவாயை பெறுவதற்கான தொடர்சியான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும். முதலீட்டு தோல்விகளில் இருந்து மீட்சிக்கு உதவுதல்.

7. ஊனமுற்றவர்களுக்கு விசேட வசதிகள்.

8. அன்றாட பணிகளை பூர்த்தி செய்யக் கூடிய நிர்வாகக் கட்டமைப்பு.

இவற்றை எல்லாம் சிறு பண உதவிகள் பூர்த்தி செய்ய முடியாது. அவை இவர்களின் குறுகிய கால தேவைகள் சிலவற்றை பூர்த்தி செய்யப் பயன்பட்டாலும்.. பிரச்சனை அதையே நம்பி இவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்க முயற்சிப்பதும் தான்.

உண்மையில்..

நாடு கடந்தவையை மற்றவையை திட்டும் நேரத்துக்கு போரை முன்னெடுத்த அரசுகளிடம் போய் இவர்களின் விடுதலைக்கும் மறுவாழ்வுக்கும் உதவி கேட்கலாம். இந்தியப் பேரரசு.. பாகிஸ்தான் அரசு.. சீன அரசு.. ஜப்பான் அரசு.. ரஸ்சிய அரசு.. பிரித்தானிய அரசு.. அமெரிக்க அரசு.. இவை எல்லாம் முன்னின்றுதான் போரை முன்னெடுத்தன. நோர்வே கூட பங்களித்தது. படகுகளை கையளித்து கண்காட்சி வைத்தது.

வெளிநாடுகளில் உள்ள குறிப்பிட்ட நாட்டு தூதரகங்களின் முன்னாள் தமிழர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டங்களை செய்து இந்த மக்களின் பிரச்சனைகளை போரின் விளைவுகளால் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பொருண்மிய சமூகக் கட்டமைப்புக்கள் தகர்க்கப்பட்டுள்ளத்தை இனங்காட்டி தீர்வுகளைக் கோரி நிற்கலாம். அது பயங்கரவாதத்திற்கு உதவுவதாக சொல்லப்பட முடியாதது. ஆனால் அதை நாங்கள் செய்ய மாட்டம். எங்களை நாங்களே திட்டிக்கொண்டு திரிவம்.

வெளிநாடுகள்.. அவர்கள் விரும்பிய படிக்கு போரை முடித்து விட்டார்கள். ஆனால் மக்களின் மறுவாழ்வு.. போராளிகளின் உயிர் உத்திரவாதம் எதுவுமே கவனத்தில் கொள்ளப்படவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனை பற்றி எவரும் மூச்சும் விடுவதில்லை.

நாடு கடந்த அரசோ.. புலம்பெயர் மக்களோ எதனையும் நிரந்தரமாக செய்ய முடியாது. இன்று பணப்பிரச்சனை என்றால் நாளைக்கு காணிப்பிரச்சனை வரும். நாளண்டைக்கு சிங்களக் குடியேற்றத்தால் பிரச்சனை வரும்.

எல்லாத்துக்கும் ஒவ்வொரு கதை எழுதிக் கொண்டு நம்மை நாமே திட்டிக்கொண்டு திரிவதால்.. பிரச்சனைகளின் தோற்றுவாய்கள் தீரப்போவதில்லை.

போரை தீவிரமாக முன்னெடுத்த முக்கியமான சக்திகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே இவர்களுக்கு உருப்படியான நிரந்தர தீர்வுகளை எட்டிக்கொடுக்க முடியும்.

நாடு கடந்த அரசு என்பது வெற்றிடத்தில் துளிர்விட்டிருக்கும் ஒரு முளை. அதனிடம் பெரிய எதிர்பார்ப்புக்களை முன்வைத்து நிற்பதை விட்டு.. ரடார்களும் ஆயுதங்களும் அள்ளி வழங்கி யுத்தத்தை முன்னெடுத்த அரசுகளிடம் போய் உதவி கேட்டு நில்லுங்கோ.. அழுத்தங்களை பிரயோகித்து நில்லுங்கோ.. ஆர்ப்பாட்டங்களைச் செய்து நில்லுங்கோ.. அதுதான் நியாயமானது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ்

தங்களது நேரத்துக்கு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலகு இலகு இலவச ஆலோசனை வழங்குதல் இலகு....அதனிலும் இலகு வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு நாங்களும் எங்கள் குடும்பங்களும் ஒருகுறையுமில்லாமல் இருக்க மல்லாந்து பஞ்சு மெத்தையில் புரண்டு கனவுகாணுவது......

அண்மையில் சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர் என்று சொல்லி ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டது உங்களுக்கு தெரியும் உண்மையில் அவர் அத்துடன் தொடர்பு ஏதும் அற்றவர்.. இதுவரை 12 வருடம்கள் சிறையில் களித்துள்ளார்.அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை காலம் 30 வருடம்கள் இன்னும் 30 வருடம்கள் சிறையில் கழிக்க வேண்டும் .17 வயதில் சிறைக்கு சென்றவர் வெளியே வரும் போது ஏறக்குறைய 50 ,60 வயது...

இவர் மேல் பல குற்றச்சாட்டுகள் சுமத்த பட்டுள்ளன என்று சாத்திரி அண்ணா கூறினார். அப்பிடியாயின் இவரின் வழக்குகள் நீதி மன்றுக்கு போகுமாயின் இவருக்கான தண்டனை காலம் மிக நீண்டதாக இருக்கும்..

இங்கு கருத்துகள் வழங்கும் யாரவது இவர் உங்களின் சகோதரர் அல்லது உறவாக இருப்பின் உங்களின் கருத்து இங்கு எழுதுவது போல தான் இருக்குமா...?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர் என்று சொல்லி ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டது உங்களுக்கு தெரியும் உண்மையில் அவர் அத்துடன் தொடர்பு ஏதும் அற்றவர்.. இதுவரை 12 வருடம்கள் சிறையில் களித்துள்ளார்.அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை காலம் 30 வருடம்கள் இன்னும் 30 வருடம்கள் சிறையில் கழிக்க வேண்டும் .17 வயதில் சிறைக்கு சென்றவர் வெளியே வரும் போது ஏறக்குறைய 50 ,60 வயது...

தொடர்பேயில்லாத ஒருவனுக்கான தண்டனைக்காலம் 30வருடமாகியுள்ளது. அவன் வாழ்க்கையே சிறையில்தானென முடிவாகிவிட்டது. இதெல்லாம் எங்களுக்கு பிரச்சனையில்லை. எங்கடை வாய்வீரம் தான் எங்களுக்குப் பெரிசு. மிகவும் இலகு வரலாற்றுக்கதை சொல்வதும் வீரம் பற்றி விவாதிப்பதும்.

மேலே குறிப்பிட்டுள்ள நபர் மீது தென்னிலங்கை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஒரு வழக்கிற்கு பிணைப்பணம் தலா 5 இலட்சங்கள் வரை முடியும் எனவே 5 வழக்குகளிற்கும் 25 இலட்ச ருபாய்கள் தேவைப்படும்..25 லட்ச ருபாய் என்பதை சாதரணமான எங்களைப்போன்ற தனிநபர்களால் உதவ முடியாது ..அதேநேரம் புலம்பெயர் நாடுகளில் அமைப்புக்கள் வைத்திருப்பவர்களிற்கு அதாவது நா.கடந்த அரசு அல்லது தமிழர் பேரவைகள் என்பவர்களிற்கு 25 இலட்சம் என்பது சாதாரண தொகை. அவர்கள் மனம்வைத்தால் செய்யலாம்..மேலே குறி;பிட்ட கைதியும் தனக்காக தன்பெயரை சொல்லி வெளிநாட்டில் இயங்கும் அமைப்புக்களிடம் கதைத்து பார்க்கசொல்லியிருந்தார் நாமும் சிலரை அணுகி கதைத்தோம்.பிரயோசனம் இல்லை.. அதற்காக நாடுகடந்த அரசோ தமிழர் பேரவைகளோ நேரடியாக இங்கைக்கு போய் நீதிமன்றத்தில் வாதடச்சொல்லவில்லை அது அவர்களால் முடியாதென்பது எமக்கும் தெரியும். அவர்கள் உதவ முன்வந்தால் அதற்கான வழிகளை எம்மால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.இந்த அமைப்புக்களில் இரக்க குணம்கொண்ட யாராவது இதனைபடித்து ஏதாவது ஏற்பாடுகள் செய்தாலும் செய்வார்கள் என்கிற ஏக்கத்தில்தான் இறுதியாக இதனை பகிரங்கமாக எழுதியிருக்கிறோம்..முன் வருவார்களா?????

:D... ஒன்று புரியவில்லை, .... ஐந்து வழக்குகள்.... அதுவும் தென் இலங்கை தாக்குதல்கள் சம்பந்தமானவை .... பிணை??????!!!!!! புரியவில்லை!!!!!?????

முதலில் இப்படியானவர்களை பிணையில் விடுவார்களா????????? சரி பிணையில் எடுத்தாலும் ... என்ன நிகழப்போகிறது???? தப்பலாமா???? அல்லது வெளியில் வர, சிங்களவன் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பானா????? ... ????? பல கேள்விகளுக்கு ... பதில் வெற்றிடமாகவே உள்ளது!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்துகள் வழங்கும் யாரவது இவர் உங்களின் சகோதரர் அல்லது உறவாக இருப்பின் உங்களின் கருத்து இங்கு எழுதுவது போல தான் இருக்குமா...?

எங்கள் சகோதரங்களையெண்டால் பாதுகாப்பா எங்கையும் அனுப்பீடுவம். இது யாரோ ஒரு தாயின் பிள்ளைதானே என்ன கவலை இந்த மனநிலையில் உள்ளவர்களால் மட்டுமே இன்னும் வரலாறு சொல்லி வீரம் பேச முடியும்.

வீணா இப்போது நாங்கள் அம்மணமாய் நிற்கிறோம் ஆனால் அடிபணியமாட்டோமென ஆவேசமாகப் பேசுவதை அரசியல் என்கிறோம்.

முடிந்தால் யாராவது உதவினால் அவனுக்கு விடிவு உண்டு. இல்லை இந்தச்சாதியை நம்பி இவர்களுக்காக போனதற்கான தண்டனையாக அவன் வாழ்வு அந்தக்கம்பிகளோடு போவதுதான் வெற்றியென்றால் நாங்கள் என்ன செய்வோம். :wub::D

புற்றுநோய் மாறாதது உயிர்கொல்லி. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை மாறாத நோயிற்கு ஏன் மருத்துவமென்று சாகவிடுவதில்லையே..!

வாழும்வரை மருந்துகளைக் கொடுத்து வாழ்விக்கிறது மருத்துவம். அதுபோல்தான் இவனுக்கான முயற்சிகளும்.

இங்கு நீங்கள்கூட இந்த விடயத்திற்குள் கே.பி என்ற பெயரை இழுக்கிறீர்கள். இதுபோலத்தான் அவன் உரைத்த நாடுகடந்த பேரவை மக்களவை செயற்குழுக்களும். இன்று அவனைப்பற்றி எழுதியது பற்றி ஒருவர் ஊடாக அவனுக்குத் தகவல் போயிருக்கிறது. இரவு கதைத்தேன். அவனுக்கு நீங்கள் எழுதியவற்றை வாசித்துக் காட்டினேன். அவன் சொன்னான் களம் பலமாயிருந்திருந்தால் போடாபயித்தியங்களே என்று தன்னால் ஆயுளுக்கும் இருந்துவிட முடியும். ஆனால் இன்று ஏன் இருக்கிறேன் என்ற அர்த்தமே தெரியாமல் இருப்பதாக வேதனையுடன் கூறினான்.

இந்தக்கதையை அவனுக்கு இனிப்புகள் அனுப்பிய அல்லது அவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் பார்த்தால் ஏதாவது விடிவுவருமென்று இன்னும் நம்புகிறான். உங்கள் சிங்கள ஆதிக்க நாடக அரங்கங்கள் பற்றி எவ்விட அக்கறையுமில்லை அவனிடம்.

மீண்டும் நாங்கள் 3ம் நபர்களாக அவனைப் பார்க்கிறோம். அதுதான் இன்னொருவரின் தலையில் நீங்களும் சிலுவையை இறக்கிவிட்டு நீண்ட கதை சொல்கிறீர்கள்.

சாந்தி ... உங்கள் பதிலுக்கு ... ஆயிரம் கேள்விகள் முன்னெழுகின்றது!!!! ... சந்தேகங்களால் குட்டையை குழப்ப முயலவில்லை!!! ... விடுவோம்!

என்னைப் பொறுத்தவரை அங்கு பாதிப்புற்ற பொதுமக்கள், மாவீரர் குடும்பங்கள், போராளிகளின் குடும்பங்கள் என எம்முதவிகள் தற்போது இருந்தால் போதுமானவை!! ... சிங்கள சட்டத்திற்குள் அகப்பட்டவர்களுக்கு ... அவர்கள் குற்றவாளிகள்/சுற்றவாளிகள் என்பதற்கு அப்பால் என்ன நடைபெறும் என்பவை எம் கடந்த கால வரலாறுகளில் இருந்து தெரியும்!!!

... இங்கு முன்பொருவர் குறிப்பிட்டது போல் .... நாம், புலம்பெயர்ந்தவர்கள், சிங்களவனுக்கு பொன் முட்டைகளிடும் வாத்துக்கள் .... முன்பு தமிழ்த்தேசியம் என்று கேட்டுக்கேள்வியற்று எமது வங்கி காசோலைகளை அழித்தோமோ ... அதனையே இன்று இப்போராளிகள் விடயத்தில் சிங்களம் பிரயோகிக்கப் பார்க்கிறது ... அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது!!!

மே18இற்குப்பின்னம் வவுனியா முகாமில் இருந்த பொதுமக்களை சிங்களம் கிடைக்கப்பெற்ர சர்வதேச உதவிகளை தென்பகுதிகளுக்கு திசை திருப்பி விட்டு, எவ்வாறு ... புலத்தில் உள்ள மக்களிடம்/உறவுகளிடம்/நண்பர்களிடம் ... பணம் பறித்தது என்பது நினைவிருக்கும்!

... உணர்ச்சிகள்/உணர்வுகளுக்கு அப்பால் ... சிங்களத்தின் சூழ்ச்சி வலையில் நாம் அகப்படாமல் புத்தியுடன் செயலாற்றுவோம் ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.