Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    88006
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts
  3. putthan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    14676
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/14/22 in all areas

  1. பரNaகோர்ட்..... பரNaகோர்ட் "பழைய போத்தல்,பேப்பர், பித்தளை,அலுமினியம் சருகை சேலை இருக்கா" "அண்ணே நில்லுங்கோ பழைய புத்தகம் கொஞ்சம் இருக்கு எடுத்திட்டு காசு தாங்கோ" " ஒரு கிலோ இருக்கு இந்தா இரண்டு ரூபா" காசை வாங்கி பொக்கற்றுக்குள்ளே போடுற நேரம் குகனின் அம்மா "தம்பி யாரோட கதையுச்சுகொண்டிருக்கிறாய் படலையில் நின்று" "அம்மா அது பழைய அலுமினிய சமான்கள் வாங்கிற பரனகோர்ட்அண்ண" "நிற்க சொல்லு இரண்டு அலுமினிய சட்டி கிடக்குது கொடுத்திட்டு ஏதாவது வாங்குவோம்" இரண்டு பழைய அலுமினிய சட்டியை கொண்டு வந்து கொடுத்தா ,அவரும் சட்டியை காலால் மிதித்து நெளித்து நிறுத்து பார்ட்த்து விட்டு சைக்கிளில் கட்டி வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் பக்கற்றையும் சின்ன அலுமினியம் சருவச்சட்டியையும் காட்டி "அம்மா இந்த பிளாஸ்டிக் பக்கற் வேணுமா அல்லது அலுமினிய சட்டி வேணுமா" "அம்மா பிளாஸ்டிக் பக்கற் நல்லது வடிவா இருக்கு இதை எடுங்கோ" தாயார் அனுமதி தரமுதலே குகன் பரணகொர்ட் அண்ணரின் சைக்கிளிலிருந்து அதை கழற்றி வீட்டுக்குள் எடுத்து சென்று விட்டான். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய தந்தையிடம் பிளாஸ்டிக் பக்கற்றின் வருகை பற்றி விளக்கினான் . தந்தையோ அவனுக்கு பொருளாதர அரசியல் வகுப்பு எடுத்தார் "நீ கொடுத்த அலுமினியம் 30 ரூபா பெறும் அவன் தந்த பக்கற் 10 ரூபா தான் பெறும்" "அந்த சட்டிகளை நாங்கள் பாவிக்கிரதில்லை தானே" " என்றாலும் பெறுமதி இருக்குத்தானே அது தானே அவன்கள் எடுக்கிறாங்கள்" "அப்பா வள‌வுக்குள் இருக்கும் பழைய போத்தல் எல்லாம் பொறுக்கி எடுக்கப்போறேன் இரண்டு கிழமையில் பரண்கொர்ட்காரர் வருவார் கொடுக்கபோறன்" "எல்லாத்தையும் தூக்கி கொடுத்து போடாதை ,அம்மாவிடம் காட்டிபோட்டு கொடு" அப்பர் ஏதோ புலம்புகிறார் என நினைத்து தனது காரியங்களை செய்யத்தொடங்கினான். வளவில் உள்ள போத்தல்களை பொறுக்கி கொண்டிருக்கும் பொழுது கண்ணில் பட்டது ஆடுகளுக்கு புண்ணாக்கு நீர் வைக்கும் பித்தளை சட்டி ,உண்மையிலயே அது ஒர் சட்டியல்ல பானை .ஆடுகள் உணர்ச்சி வசப்பட்டு உதைபந்தாட்டங்கள் விளையாடி சகல பக்கத்திலும் அடி வாங்கி சட்டி வடிவில் வந்து விட்டது இருந்தாலும் ஒரு ஓட்டை விழவில்லை. இரண்டு கிழமை கழித்து பரணகோர்ட் அண்ணர் கூவின சத்தம் கேட்க படலையை திறந்து கையை காட்டினான். இந்த தடவை இருவர் வந்திருந்தனர் சைக்ககிள் நிறைய பிளாஸ்டிக் பாத்திரங்கள் ,அலுமினிய பாத்திரங்கள் எல்லாம் கட்டியிருந்தன அதை பார்த்தவுடன் இவனுக்கு ஆடுகளுக்கு புது பாத்திரம் வாங்கி வைக்க வேணும் என்ற ஆசை வந்து விட்டது ...இருந்த போத்தல்களை கொடுத்தான் ஒரு சின்ன பிளாஸ்டிக் பாத்திரம் கொடுத்தார்கள் . "அண்ணே எனக்கு இந்த அலுமினிய சட்டியை தாங்கோ" அவர்கள் சிரித்து கொண்டே "இந்த போத்தலுக்கு இது தரமுடியாது வேறு ஏதாவது பித்தளை சட்டி அல்லது சருகை சீலை கொண்டு வாங்கோ" அவன் ஓடிப்போய் ஆட்டுக்கு தண்ணீ வைக்கும் பாத்திரத்தை கொண்டு வந்து கொடுத்தான் அவர்கள் கையினால் தூக்கி பார்த்தவுடனே அவன் கேட்ட சட்டியை கொடுத்து விட்டனர். அவனுக்கு பெரிய சந்தோசம் ஆட்டுக்கு புது பாத்திரம் வாங்கி வைத்த குட்டி தம்பி ...என்று. அன்று மாலை அவர்கள் இருவரின் சைக்கிளிலும் இருந்த புது சமான்கள் யாவும் முடிந்திருந்தது சைக்கிளில் சகல பழைய சாமான்களையும் சாக்கில் கட்டி ஹறியரில் வைத்து தள்ளி கொண்டு வந்தவர்கள் அவனை கண்டதும் குடிக்க தண்ணீர் கேட்டார்கள் இவனும் வீட்டினுள் சென்று எடுத்து வந்து கொடுத்தான். அந்த ஒழுங்கையில் உள்ள அநேகமானவர்களுக்கு அவர்கள் பழக்கமானவர்கள் ஆகிவிட்டனர். படலையில் நின்ற பக்கத்து வீட்டு அண்ரியை கூப்பிட்டு ஐநூறு ரூபா கொடுத்தான் . சருகை சேலைக்கு என்றான். குகனுக்கு விடுப்பு அறிவது என்றால் கொள்ளை பிரியம் . "அண்ணே நீங்கள் இருவரும் சொந்தகாரன்களே" "இவர் என்ட சொந்த தம்பி" "அண்ணே இந்த போத்தல் எல்லாம் என்ன செய்வீங்கள் கழுவிபோட்டு திருப்பி பாவிப்பிங்களோ" "இல்லை எங்கன்ட பெரியண்ண கொழும்பில் கடை வைத்திருக்கிறார் அவ‌ருக்கு அனுப்பிவிடுவோம் " "அவர் என்ன செய்வார் என எங்களுக்கு தெரியாது" "அப்ப சருகை ,அலுமினியம்,பித்தளை" "அதுகளை பெரியண்ணருக்கு தான் அனுப்புவோம்,சரி தம்பி போய்யிட்டு வாரம்" அவர்கள் போனபின்பு குகனும் வீட்டினுள் சென்று படுக்க போய்விட்டான் அப்பா நாளை காலை ஆட்டுக்கு தண்ணீர் வைக்கும் பொழுது ஆச்சரியப்படட்டும் என நினைத்தபடியே தூங்கிவிட்டான் விடியகாலையில் ' "டேய் குகா எங்கயடா ஆட்டுக்கு புண்ணாக்கு வைக்கிற சட்டி" "இந்தா இருக்கு புதுசு" " எங்கயடா பழைய சட்டி" "அதை கொடுத்து தான் இதை வாங்கினேன்" கண்ணத்தில் ஒர் அறை விழுந்தது அவனுக்கு "டேய் யாரிட்ட கேட்டு கொடுத்தனீ அதின்ட பெறுமதி எவ்வளவு என்று தெரியுமா?" இவர்களின் சத்தம் கேட்டு தாயார் ஒடி வந்தார் என்னது தகப்பனும் மகனும் புடுங்கு படுறீயள் "இவன் இருக்கிற சாமன்களை எல்லாம் எடுத்து உந்த பரணகோர்ட் காரனிட்ட கொடுக்கிறான் ஒருநாளைக்கு என்னையும் கொடுத்துபோட்டு புது அப்பா கொண்டு வருவான் நீ பார்த்து கொண்டு இரு".. "சும்மா கத்த வேண்டாம் ,பிள்ளை ஆடு பாவம் என்று புதுசு வாங்கி வைச்சு சந்தோசப்பட்டது நீங்கள் என்னடா என்றால்" " நீ அடுத்தவள், அந்த சட்டி பழங்காலத்து சட்டி அதின்ட வெயிட் எவ்வளவு தெரியுமா" "அந்த பழசுகளை வைச்சு என்ன செய்யப்போறீங்கள்" "இது பழசு என்றாலும் ஸ்ரொங்க் ,இந்த ஆடுகளின் சகல உதைகளையும் தாங்கி கொண்டு இருந்தது ஒரு ஒட்டை விழவில்லை அது போக அதை உருக்கினால் அதை வாங்கின காசின்ட முக்கால்வாசி காசு தேறும்." "சரி சரி" "உன்ட மகன் வாங்கி வைச்சிருக்கிறது அலுமினியம் ஆடு இரண்டு நாளில் சட்டியை பந்தாக்கி வைச்சிடும் பிறகு தாயும் மகனும் உங்கன்ட சீலையை கொடுத்து அவனிட்ட புதுசு வாங்கி வையுங்கோ" "அம்மா,பரணகோர்ட் அண்ணே பக்கத்து வீட்டு அண்ரியிட்ட ஐநூறு ரூபா கொடுத்தவர் சருகை சீலை கொடுத்தமைக்கு" "படுவா நான் இவ்வளவு கத்திறன் நீ என்னடா என்றால் திரும்ப திரும்ப பரணகோர்ட் காரனிட்ட போறது என் நிற்கிறாய் இனிமேல் வீட்டு வாசலில் பரணகோர்ட் காரனை கண்டன் என்றால் காலை அடிச்சு முறிச்சு போடுவன்" என கோபத்தில கத்திவிட்டு ஆட்டுக்கு புது பாத்திரத்தில் புண்ணாக்கு தண்ணீரை ஊற்றி விட்டு சென்று விட்டார் தந்தை. தந்தையார் கூறியது போல இரண்டு கிழமையில் சட்டி நெளிந்து ஓட்டை விழுந்து விட்டது .அதற்கு வீதியில் இருந்த தார் உருண்டையை உருக்கி ஒட்டி சில காலம் பாவித்தார்கள் பிறகு ஆடுகளை விற்று விட்டு கொழும்புக்கு வந்துவிட்டனர் குகன கொழும்பில் வேலை தேடி கொண்டிருக்கும் பொழுது விளம்பரம் ஒன்றை பார்த்தான்,ஸ்ரோர் கீப்பர் வேலைக்கு வெற்றிடம் இருப்பதாக போட்டிருந்தார்கள். குகனும் விண்ணப்பிருந்தான், நேர்முகபரீட்சைக்கும் அழைத்திருந்தார்கள் . குறிப்பிட்ட நேரத்தில் நேர் முகபரீட்சைக்கு போனான். அழகான பெண் ஒருத்தி அவனை உள்ளே அழைத்து சென்றாள் இராணுவ உடையில் ஒருத்தர் டி குடித்து கொண்டிருந்தார்.மற்ற மூவரும் பெரிய மேசையில் சிங்கள தேசிய உடையணிந்து அமர்ந்திருந்தனர். வாடிவென்ட என்றார்கள் இவனும் பயந்து பயந்து அமர்ந்தான் "நம மொக்கத" "குகன்" "கொயத வடக்கருவே" "வெர்ஸ்ட் ஜொப்" "கம ஹொயத" "யாப்பானய" "அப்பே(சி) பலன(சி) எஸ்பீரியன்ஸ் மான்(சி)" பைலை மூடி அவனிட்ட கொடுத்து விட்டார்கள். இவர்களை எங்கயோ கண்ட மாதிரி இருக்கே என நினைத்த படி வீடு வந்தான். "என்னடா இன்டெர்வியூ எப்படி" "சரிவரவில்லையப்பா" "சவுதிக்கு போட்ட வேலைக்கு வரச்சொல்லி போட்டிருக்கிறாங்கள்" என சொல்லிய படியே அந்த கடிதத்தை கொடுத்தார் . "அப்பா இன்றைக்கு போன கொம்பனியில் இன்டர்வியூ பண்ணினவர்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு" " எந்த கொம்பனி?பெயரை சொல்லு?" "GoMaBa" "அவன்கள் தான்டா ஊரில பரணகொர்ட் வியாபாரம் செய்தாங்கள் இப்ப அவன்கள் பெரிய வியாரிகள் அவனின்ட தம்பி ஒருத்தன் ஆர்மியில் இருக்கிறான்" "அடகோதாரி " "நான் சொன்னான் தானே அவ‌ன்கள் உங்கட்ட நவீன வடிவான பொருட்களை தந்து போட்டு பாரம்பரிய விலையுயர்ந்த பொருட்களை எடுத்து கொண்டு விற்று பெரிய பணக்காரங்கள் ஆகிட்டாங்கள் கள்ள பயல்கள்" அவனும் சவுதி சென்று அங்கிருந்து அவுஸ்ரேலியா சென்று ,வருடங்கள் கழிந்தன ,தந்தையும் தாயும் மரணமடைந்து விட்டனர் .சிறிலங்கா செய்திகளை படிப்பதை நிறுத்தவில்லை ..சகோதரர்கள் ஒன்றிணைந்து சிறிலங்கா மாதவை தூக்கி பிடிப்பதாக வரும் செய்திகளை படித்து மகிழ்வது உண்டு திடிரேனே சிறிலங்கா மாதா ஆட்டம் கண்டதை தொலைகாட்சியில் காட்டினார்கள் .தொடர்ந்து இரண்டு மாதங்கள் தான் மக்களுக்கு உணவு,எரிபொருட்கள் வழங்க முடியும் என சொன்னார்கள் ,மக்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர். தொலைகாட்சியை பார்த்தபடியே கதிரையில் கண்ணயர்ந்துவிட்டான் குகன். கோர்ட் சூட் போட்ட ஒருத்தர் சைக்கிளில் சிறிலங்காவை சாக்கில போட்டு இரண்டு பக்கமும் தொங்க விட்டபடி "டொலர் இருக்கா டொலர்,தங்கம் இருக்கா தங்கம்,மருந்து இருக்கா மருந்து ,யுவான் இருக்கா யுவான்" என்று கத்தியபடி கடலில் இறங்கி கொண்டிருந்தார் திடுக்கிட்டு எழுந்தான்
  2. உக்ரேன் மீது நடத்தப்படும் எழுந்தமானமான தாக்குதல்கள் மற்றும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் வலிந்த தாக்குதல்கள் சர்வதேச மனிதவுரிமைகள் அமைப்புக்கள் மற்றும், உக்ரேனில் இயங்கிவரும் ஐ நா மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் தகவல்களின்படி, உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக எழுந்தமானமான தாக்குதல்கள் , பொதுமக்கள் கட்டட அமைப்புக்களான குடிமனைகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் சிறுவர் பள்ளிகள் மீதான வலிந்த தாக்குதல்கள் என்பன இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாசி மாதம் 25 ஆம் திகதி, சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட அறிக்கையில், "மக்கள் அதிகமாகச் செறிந்துவாழும் நகர்ப்பகுதிகள் மீது, பொதுமக்கள் இறப்பினைச் சற்றும் சட்டை செய்யாது, பாரிய ஆயுதங்களான பாலிஸ்ட்டிக் ஏவுகனைகள் அடங்கலான பாரிய உயிரிழப்புக்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தும் கனரக ஆயுதங்களைக் கொண்டு ரஸ்ஸியா தாக்கி வருகிறது" என்று குற்றஞ்சாட்டியிருக்கிறது. ஆனால், இத்தாக்குதல்களை முற்றாக மறைத்த ரஸ்ஸிய ராணுவம், துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் திறன்கொண்ட ஆயுதங்களையே தாம் பாவித்ததாக கூறிவருகிறது. ரஸ்ஸியாவின் மறுப்பினை கண்டித்திருக்கும் மனிதவுரிமைக் கண்காணிப்பகம் வூலெடார், கார்கிவ், உமான் ஆகிய பகுதிகளில் ரஸ்ஸியா மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் போர்க்குற்றங்கள் ஆகும் என்று கூறுகிறது....
  3. @putthan உங்கள் பறண கனவு அருமை. நீங்கள் ஒரு முருக பக்தர் என்பதற்காக போற வாற இடங்களிலெல்லாம் அவன் பெயரை தூக்கி செல்வது அந்த அழகனுக்கு இன்னும் பெருமை.😀
  4. எவர் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் இலங்கைத் தீவின் தலை யாழ்ப்பாணம் தான். என்றைக்கு பேரினவாதிகள் தலையிலை கைவைத்தார்களோ அன்றிலிருந்து தீவுக்குப் பிடித்தது நசல். இப்பவும் எமக்கான நியாயமான தீர்வு ஒன்றை வழங்கினால் மட்டுமே இந்தப்பிணி தீரும்.
  5. பொறுமையாக கடைசி வரை பார்க்கவும். 😄
  6. கவிதையைப் பிரித்த ஐபிஎல் தூய வெள்ளை அரம்பையர் நின்றுமே துணங்கைக் கூத்திட வீரர் குழாத்தினர் ஆய தம்திறன் காட்ட, எறிந்த பந்(து) அண்டை வந்திட வீசி அடித்ததை பாயச் செய்து பவுண்டரி சிக்ஸராய் பலத்தைக் காட்டும் ஐபிஎல் களமதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அணிதிரண்டு குதிக்குமழகிலே நேயமுற்றனன் ஆதலினால் என்றன் நெஞ்சை நீங்கினளாம் கவிக்காதலி காலை மாலையிரவெனத் தேர்ந்திடாக் காதல் மேவ ஐபிஎல் லைப் பார்த்ததால் வேலையாவும் ஓர் மூலையிற் போனது வேறு நற்செயலில்லை யென்றானது. காலமோடியதாற் கவிக்காதலி காத்திருக்க விருப்பிலளாயினள் பாலையானது நெஞ்சப் பெருவெளி பாடயாதும் வராது தவிக்கிறேன் சீல மேவிய என் எழில் நங்கையை தேடி யெங்குமலைந்து திரிகிறேன். அன்னவட்கொரு அஞ்சலி செய்தென(து) அருகில் வாவடியென்று துதித்திட பின்னமுற்ற மனத்தினளாயவள் பிணங்கி யந்தத் துணங்கையை யாடிடும் கன்னியர்க்கு உன் காதலைக் காட்டுதி கவிதையேனுனக்கென்று சபித்தனள் என்ன செய்வது என்று அறிகிலேன் எனது வாழ்வில் அவளைவிட்டோர் துணை இன்னுமுள்ளதுவோ இலை நெஞ்சமே! எறியுனக்கினி ஐபிஎல் ஏன் கொலோ!
  7. நல்ல விடயம். உக்ரேனுக்காக மட்டும் இரட்டை முகம் கொண்ட மேற்குலகு கண்ணீர் வடிக்கும் போது நீங்களும் சேர்ந்து கட்டுரை வடிப்பது தான் உங்கள் சாரம்சம். வடியுங்கள். மேற்குலகின் வக்கிரத்திற்கு சார்பாக வடியுங்கள் வடித்துக்கொண்டேயிருங்கள்.😂
  8. அண்ணை, உங்களோட இன்னொரு வாதத்திற்கு வருகிற நோக்கம் எனக்கு இல்லை. அப்பாவிகள் கொல்லப்படுவதால் அதனை எழுதுகிறேன். நீங்கள் கூறியபடி, அப்பாவிகள் எங்கு கொல்லப்பட்டாலும் அதுபற்றி நாம் பேச வேண்டும். ஆகவே, நான் இதுவரை சிரியாவிலோ, பாலஸ்த்தீனத்திலோ, ஈராக்கிலோ, ஆப்கானிஸ்த்தானிலோ கொல்லப்பட்ட லட்சக்கனக்கான மக்களின் அவலங்கள் தொடர்பாக குரல் கொடுக்காமைக்காக வருந்துகிறேன். இனி அந்தத் தவறைச் செய்யப்போவதில்லை. எமக்கு நடந்த இனவழிப்புப் போன்று இனி எங்கு நடந்தாலும் நாம் பேசவேண்டும். அவ்வளவுதான் நான் உங்களுக்குக் கூறவிரும்புவது. உங்களுடனோ, இன்னும் இங்கு எழுதும் இன்னும் சிலருடனோ இன்னொரு கசப்பான வாதத்திற்கு வரும் நோக்கம் எனக்கு சற்றும் இல்லை. உங்களுக்குக் காட்டமாகப் பதில் எழுதும் நோக்கம் கூட எனக்கில்லை. எனது உணர்வின் பால் உந்தப்பட்டே இதனைச் செய்கிறேன். உலக அரசியல் பற்றி நான் கவலைப்படவில்லை. வணக்கம்.
  9. உக்ரேனில் உள்ள எதிர்க்கட்சிகளை ஏன் தடை செய்துள்ளார்கள் என்பதை உக்ரேன் அபிமானிகள் அறியத்தர வேண்டும்.அது மட்டுமல்லாமல் அந்த எதிர்க்கட்சி தலைவர்கள் என்ன ஆனார்கள் என்பதும் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. உலகில் எத்தனையோ நாடுகளில் போர்களும் அழிவுகளும் நடைபெற்று வருகின்றது. அங்கில்லாத அக்கறை உக்ரேனுக்கும் மட்டும் ஏன்??
  10. உக்ரேனில் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களால் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய தொகுப்பு தற்போது உக்ரேன் மீது ரஸ்ஸியா நடத்திவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் போர்க்குற்றங்களாகக் கருதப்படக்கூடியவை, மனிதநேயத்திற்கெதிரான குற்றங்களாகக் கருதப்படக்கூடியவை என்று சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களாலும், செயற்பாட்டாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. சர்வதேச நியமங்களினை மீறி ரஸ்ஸிய ராணுவம், இலங்கையில் தமிழர்களுக்கெதிராக சிங்கள இனவழிப்பு ராணுவம் புரிந்த மிருகத்தனமான படுகொலைகளுக்கு நிகராக உக்ரேனியர்கள் மீது மேற்கொண்டுவரும் அட்டூழியங்கள் கருதப்படக்கூடியவை என்றால் அது மிகையில்லை. ரஸ்ஸிய ஆக்கிரமிப்பு ராணுவம் உக்ரேனில் புரிந்துவரும் முக்கியமான மனிதவுரிமைகளுக்கு எதிரான, சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான செயற்பாடுகளைப் பார்க்கலாம். 1. சிவிலியன்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது, அதியுச்ச மக்கள் அழிவை மட்டுமே நோக்காகக் கொண்டு வேண்டுமென்றே நடத்தப்படும் கடுமையான குண்டுவீச்சுக்கள். 2. குறைந்தது 110 நாடுகளில் பாவிப்பதற்குத் தடைசெய்யப்பட்டுள்ள கொத்தணிக்குண்டுகளை மக்கள் செறிந்துவாழும் நகர்ப்பகுதிகள் மீது தொடர்ச்சியாகப் பாவித்து வருதல். இவற்றிற்கு மேலதிகமாக பரந்த நிலப்பரப்பில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற வாயுக் குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் பல்குழல் உந்துகணைச் செலுத்திகளைப் பாவித்து பெருமளவு உயிரிழப்புக்களை நோக்கமாகக் கொண்டு ஏவப்படும் தாக்குதல்கள். 3. பொதுமக்களின் வாழிடங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், பாலர் பள்ளிகள், அணுமின் நிலையங்கள், கலாசாரத் தொன்மை கொண்ட கட்டடங்கள், பாரம்பரிய தேவாலயங்கள் உட்பட்ட மக்களின் பாவனைக்கென்று இருந்த கட்டடங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள். 4. தன்னால் ஆக்கிரமிக்கப்பட்டுவரும் உக்ரேனின் நிலப்பகுதியில் வாழும் மக்களை விருப்பத்திற்கு மாறாக, கட்டாயமாக ரஸ்ஸியாவினுள் நாடு கடத்துதல். 5. உக்ரேனியர்களைக் கொல்வதை தமது படைநடவடிக்கையின் ஒரு நோக்கமாகக் கொன்டு செயற்படும் ரஸ்ஸிய ராணுவத்தால் கொல்லப்பட்ட பல்லாயிரக்கனக்கான உக்ரேனியர்களின் மரணங்கள். உதாரணத்திற்கு ரஸ்ஸிய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பூச்சா பாகுதியை விட்டு ஆக்கிரமிப்பாளர்கள் நீங்கியபின்னர் அங்கே கண்டெடுக்கப்பட்ட குறைந்தது 500 அப்பாவிகளின் சடலங்களும், அவர்கள் கொல்லப்பட்ட விதமும் ரஸ்ஸிய ராணுவம் போர்க்குற்றங்களிலும், மனித நேயத்திற்கெதிரான குற்றங்களிலும் ஈடுபட்டிருக்கின்றனன் என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. இவை தவிரவும் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் தற்போது கண்டுபிடிக்கப்படும் பாரிய மனித புதைகுழிகள், மற்றும் உக்கிரமான ஆக்கிரமிப்பும் அழித்தொழிப்பும் நடைபெற்றுவரும் மரியோபுல்லில் இதுவரை கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் பற்றி வெளித்தெரிய ஆரம்பித்திருக்கும் விபரங்களும் ரஸ்ஸிய ராணுவம் போர்க்குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றதென்பதையே சுட்டி நிற்கிறது. 6. ரஸ்ஸியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வசித்துவந்த ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களைக் கைதுசெய்தது மற்றும் கொடுமைப்படுத்திவருவது. இதுவரை 24 ஊடகவியலாளர்களும், 21 மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் இவ்வாறு ஆக்கிரமிப்பு ரஸ்ஸிய ராணுவத்தால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், பலர் கடுமையான சித்திரவதைகளுக்கும் உள்ளாகியிருக்கின்றனர். சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களின் துணையோடு, உக்ரேனில் ரஸ்ஸிய ராணூவத்தால் நடத்தப்பட்டு வரும் போர்க்குற்றங்களை ஆவணப்படுத்திவரும் உக்ரேனின் மனிதவுரிமை அமைப்பும், நீதிபதிகளும் இதுவரையில் குறைந்தது 2500 சாட்சியங்களை ஆவணப்படுத்தியுள்ளதுடன், பல நூற்றுக்கணக்கான ரஸ்ஸியப் போர்க்குற்றவாளிகளின் பெயர்களையும் வெளியிட்டிருக்கின்றது. உக்ரேனில் ரஸ்ஸியா புரிந்துவரும் போர்க்குற்றங்கள் மற்றும் இனவழிப்போடு ஒப்புநோக்கக் கூடிய குற்றங்களுக்காக, இம்மாதம் 7 ஆம் திகதியிலிருந்து, ஐ நா மனிதவுரிமைச் சபை ரஸ்ஸியாவை தனது அமர்வுகளிலிருந்து நீக்கியிருக்கிறது. உக்ரேனில் ரஸ்ஸியாவின் போர்க்குற்றங்களும், மனிதநேயத்திற்கெதிரான குற்றங்களும், இனவழிப்பின் வழிசெல்லும் குற்றங்களும் தொடரும்.................................
  11. கணவன் : சரசு சரசு ... மனைவி : என்னங்க ... கணவன் : சரசு நீ என்னை சீதனம் வாங்கி கட்டியவன் என்று சொல்லிக்கட்டி நச்சரிக்கிறா மனைவி : அதுக்கு ,,? கணவன் : வந்து ...கோயிலடியில ஒரு அழகான பொண்ண பார்த்தேன் அது தான் சீதனமில்லாம கட்டிக்கவா ? மனைவி : எடுடீ ... அந்த பூரிக் கடடைய ... கணவன் : எடுத்த ஓட்ட்ம் தான் ...மூசசு வாங்க .. கோவிலடியில். ????
  12. இன்றைய இரவுச்செய்தி- குமாரசாமி இன்றிரவு 22.35 அளவில் கோசான் அவர்களால் தாக்கப்பட்டார். 😎 கோசான் :- புத்தகம் வாசிக்காத மனிதனும், புதிதா யோசிக்காத இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை 🤣 குமாரசாமி:- வாவ்.....உவாவ்......உவாவ் இன்றைய இரவு மறக்க முடியாத இரவு 🤣
  13. பரணகோட் எங்க ஊரில “போத்தல் பித்தளை அலுமினியம் இருக்கா போத்தல் பித்தளை அலுமினியம்” என்று கூவுவார்கள். பழைய நினைவுகள்.சூப்பர் புத்ஸ்.
  14. கடைசியா உங்கட கனவுல வந்த இரண்டுபேரையும் எனக்கு தெரியும் நான் சொல்ல மாட்டன் ..........! 😂 பரணகோட் சூப்பர் புத்ஸ் ......!
  15. Name:Marupiravi Cast:Muthuraman , Manjula & more Director:Music Director: M. S. Viswanathan
  16. பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தியா. இன்று... பிறந்தநாளை கொண்டாடும்... வாதவூரானுக்கு இனிய வாழ்த்துக்கள் .
  17. நேற்று... பிறந்தநாளை கொண்டாடிய தியாவுக்கும், இன்று... பிறந்தநாளை கொண்டாடும்... வாதவூரானுக்கும், உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐
  18. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தியா..,🎂
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தியா 💐
  20. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் தியா 🤝
  21. இன்றைய பிறந்த நாள் இனிதாக மகிழ்வாக அமையட்டும்.
  22. இனிய பிறந்த றாள் நல் வாழ்த்துக்கள் தியா!✍👋
  23. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் theeyaa.
  24. அதாவது ரஞ்சித் மேலே எழுதிய, கொலைகள் எப்பிடி நடந்ததென்று மக்கள் கொடுத்த வாக்குமூலங்கள் எல்லாம் பொய், வெறும் பரப்புரை, ரஷ்யா உக்கிரைன் மக்களை அநியாயத்துக்கு நன்றாக நடத்துகிறது? நல்லது, இப்பிடியே தமிழ் மக்களுக்கு நடந்த போர்குற்றதுக்கு வெளியுலகில் நியாயம் கேட்க வாழ்த்துக்கள்.
  25. நல்லமனசுக்காரன்(1997)
  26. ரஞ்சித், எல்லா பக்கத்தாலும் வரும் distractionஇற்கு மத்தியில் இப்பிடி ஒருங்கிணைத்து எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும், நிறுத்தாமல் நீங்கள் நினைத்ததை தொடர்ந்து எழுதி முடியங்கள் ஒருவர் தான் நினைத்ததை, அவருக்கு சரியென்று பட்டதை எழுதுகிறார். அதற்கு ஏன் இவ்வளவு வன்மம் என்று புரியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.