Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87994
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8910
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/10/23 in all areas

  1. என்னட்ட காசில்லை. இதை சொல்ல நான் ஒரு போதும் வெட்கப்பட்டதில்லை. பசித்திருபவன் முன் ஒப்பீட்டளவில் பகட்டாய் வாழ்வதை இட்டு வெட்கப்பட்டிருக்கிறேன். ஊரில் பஞ்சபராரிகளாக நிற்கும் குழந்தைகளோடு ஒரு திருவிழாவிலோ அல்லது கூட்டத்திலோ லண்டன் புஷ்டியோடு என் மகன் நிற்பதை பார்த்து வெட்கப்பட்டிருக்கிறேன். கால்கள் இல்லாமல் வீதியில் நின்று ஐஸ்கிரீம் வித்த முன்னாள் போராளியிடம் நைக் சூ போட்டபடி ஓடிவந்த நான் ஐஸ்கிரீம் வாங்கி குடித்த போது வெட்கத்தால் கூனி குறுகி போயிருக்கிறேன். ஆனால் என்றும் என் பொருளாதாரத்தை, இல்லாமையை எண்ணி வெட்கப்பட்டதில்லை. நான் எப்போதுமே மத்திய தர வாழ்க்கையே. இலங்கையிலும், வெளிநாட்டிலும். ஆனால் நீங்கள் சொல்லுவது மிக சரி. வெளிநாட்டில் மத்திய தர வாழ்க்கை வாழ்வோர் டிரைவர், வேலையாள் வைத்து வாழ முடியாது. ஆனால் ஒன்று தெரியுமா ? இலங்கையில் ஒரு டிரைவர், ஒரு வேலையாள் வைக்கும் காசுக்கு சென்ட்ரல் ஆபிரிகன் ரிபப்ளிக்கில் இருபது பேரை வேலைக்கு வைக்கலாம். டிரைவருக்கு டிரைவரும் வைக்கலாம். அதற்காக சென்ரல் ஆபிரிக்கன் ரிபளிக் இலங்கையை விட சொர்க்கம் என்றா சொல்வீர்கள். நீங்கள் தினேஷ் ஷாப்ரடை விட பெரிய பணக்காரரா ஓணாண்டி? அவரின் அப்பா என்ன சொல்லியுள்ளார் என பாருங்கள் - குடும்பத்தை லண்டனுக்கு கொண்டு வந்து செட்டில் ஆக்க, கொலையாகிய இரவு புறப்பட இருந்துள்ளார். கொவிட்டுக்கு பின் மட்டும் என் தெரிந்த வட்டத்தில் இருந்து 10 பேர் அளவில் என்னிடம் வெளிநாடு போவது பற்றி கேட்டிருப்பார்கள். அதில் பலர் பவுண்ஸ்கணக்கில் மல்டி மில்லியனர்கள். ஆள், அம்பு, சேனை, நிறைவேற்று அதிகாரி, கொழும்பு 7 மாளிகை, எல்லாவறையும் விட்டு விட்டு, மனைவியை ஸ்டூடன் விசாவில் அனுப்பி விட்டு, தாமும் பிள்ளைகளும் அவரில் தங்கியவர்களாக வந்து இறங்கியுள்ளார்கள். ஒருவர் இருவர் அல்ல. பலர். இதுதான் இலங்கையில் பணக்காரரின் நிலை. நீங்கள் சொல்வதை போல் அப்போலோவில் மருந்து பார்க்கலாம் - என் நெருங்கிய உறவை வைத்து பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன் - கையிருப்பு இருக்கும் வரை, சொத்தை வித்தும் செலவழிக்கலாம் - அதன் பின்? முன்பும் சொல்லி இருக்கிறேன். நிச்சயமாக நான் ஒரு போதும் (கொவிட்டுக்கு முன் கூட) இலங்கைக்கு முற்றாக போக மாட்டேன். ஒரு 10 வருடம் வெள்ளன ஓய்வை எடுத்து விட்டு, 6 மாதம் அங்கே, 6 மாதம் இங்கே என இருப்பதே என் ஐடியாவாக இருந்தது. வாழ்க்கை பூராக இங்கே வரியை கட்டி விட்டு, பாழும் வயதில் இலங்கை போய், சொத்தை வித்தோ, அல்லது சொந்த காசிலோ வைத்தியம் பார்க்க நான் மடையன் இல்லை. அதே போல் உங்களுக்கு நேரடியாகவே சொல்லி உள்ளேன், வாழ வேண்டிய பிள்ளைகை, வாய்புக்கள் நிறைந்த வெளிநாட்டில் இருந்து கூட்டிப் போய் சிங்களவனுக்கு பின்பக்கம் கழுவும் நிலைக்கு உள்ளாக்குவதை போல் ஒரு சுயநலம் வேறு எதுவும் இல்லை. என்னை பொறுத்தவரை என்ன பொருளாதார வளம் நாளை எனக்கு கிடைத்தாலும், மகனின் படிப்பு ஏ எல் தாண்டும் வரை நான் அவரை விட்டு அகல போவதுமில்லை, அவரை யூகேயை விட்டு அகற்ற போவதும் இல்லை ( பள்ளி படிப்பை யூகேயில் படியாததால் நான் கண்ட பிரதிகூலங்களை வைத்து) . அதன் பின் விருப்ப ஓய்வை எடுத்து, 6 மாதம் 6 மாதம் யுகேயிலும் இன்னொரு நாட்டிலும் இருப்பதுதான் திட்டம். அந்த இன்னொரு நாட்டு லிஸ்டில் இலங்கை முதலாம் இடத்தில் முன்பு இருந்தது. இப்போ யோசிக்க வேண்டி உள்ளது. ஓம்… மிக சரியான தகவல்.
  2. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரிய நகரத்தில் இடிபாடுகளில் இருந்து காப்பாற்றப்பட்ட பிறந்த குழந்தை வடமேற்கு சிரிய நகரமொன்றில் இடிந்து விழுந்த கட்டிடத்தை தோண்டிய குடியிருப்பாளர்கள், இந்த வார அழிவுகரமான பூகம்பத்தின் இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்தபோது, அழும் சிசு ஒன்றைக் கண்டுபிடித்ததாக உறவினர்கள் மற்றும் மருத்துவர் செவ்வாயன்று தெரிவித்தனர். புதிதாகப் பிறந்த சிறுமியின் தொப்புள் கொடி இறந்த நிலையில் இருந்த அவரது தாயார் அஃப்ரா அபு ஹதியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். துருக்கிய எல்லைக்கு அடுத்துள்ள ஜின்டெரிஸ் என்ற சிறிய நகரத்தில் திங்கள்கிழமை கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருந்து தப்பிய அவரது குடும்பத்தில் குழந்தை மட்டுமே உயிர் பிழைத்துள்ளது என்று உறவினர் ரமலான் ஸ்லீமான் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார். நிலநடுக்கம் ஏற்பட்டு 10 மணி நேரத்திற்கும் மேலாக திங்கள்கிழமை மதியம் பிறந்த குழந்தை மீட்கப்பட்டது. மீட்பவர்கள் அவளை தோண்டி எடுத்த பிறகு, பக்கத்து வீட்டு பெண் ஒருவர் வடத்தை அறுத்தார், அவரும் மற்றவர்களும் குழந்தையுடன் அருகிலுள்ள நகரமான ஆஃப்ரினில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு விரைந்தனர், அங்கு அவர் ஒரு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார் என்று குழந்தைக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர், டாக்டர். ஹானி மரூஃப். குழந்தையின் உடல் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாக (95 டிகிரி ஃபாரன்ஹீட்) குறைந்துள்ளது, மேலும் அவள் முதுகில் ஒரு பெரிய காயம் உட்பட காயங்கள் இருந்தன, ஆனால் அவள் நிலையான நிலையில் இருப்பதாக அவர் கூறினார். அபு ஹதியா பிரசவத்தின் போது சுயநினைவுடன் இருந்திருக்க வேண்டும், விரைவில் இறந்திருக்க வேண்டும் என்று மரூஃப் கூறினார். குழந்தை கண்டுபிடிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே பிறந்துவிட்டதாக அவர் மதிப்பிட்டார். நிலநடுக்கத்திற்கு சற்று முன்பு பெண் குழந்தை பிறந்திருந்தால், குளிரில் இத்தனை மணி நேரம் உயிர் பிழைத்திருக்க மாட்டாள், என்றார். “அந்தப் பெண்ணை இன்னும் ஒரு மணி நேரம் விட்டு வைத்திருந்தால், அவள் இறந்திருப்பாள்,” என்று அவர் கூறினார். திங்கட்கிழமை விடியற்காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அபு ஹதியா, அவரது கணவர் மற்றும் நான்கு குழந்தைகள் தங்கள் அடுக்குமாடி கட்டிடத்தை விட்டு வெளியேற முயன்றனர், ஆனால் கட்டிடம் அவர்கள் மீது இடிந்து விழுந்தது. அவர்களின் உடல்கள் கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் காணப்பட்டன, புதிதாகப் பிறந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு சம்பவ இடத்திற்கு வந்த ஸ்லீமன் கூறினார். "அவள் தன் தாயின் கால்களுக்கு முன்னால் காணப்பட்டாள்," என்று அவர் கூறினார். "தூசி மற்றும் பாறைகள் அகற்றப்பட்ட பிறகு சிறுமி உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது." குழந்தை 3.175 கிலோகிராம் (7 பவுண்டுகள்) எடையுள்ளதாகவும், புதிதாகப் பிறந்த குழந்தையின் சராசரி எடையாகவும் இருந்ததாகவும், அதனால் குழந்தை பிறக்கும் வரை சுமந்து சென்றதாகவும் மரூஃப் கூறினார். "எங்கள் ஒரே கவலை அவள் முதுகில் காயம் உள்ளது, அவள் முதுகுத் தண்டில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பதை நாங்கள் பார்க்க வேண்டும்," என்று அவர் கூறினார், அவள் கால்கள் மற்றும் கைகளை சாதாரணமாக நகர்த்தினாள். திங்கட்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து பல அதிர்வுகள், தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியா முழுவதும் பரவலான அழிவை ஏற்படுத்தியது. | அசோசியேட்டட் பிரஸ் மூலம். subscribe & like
  3. என்னுடன் தற்போது Reha Clinic‘ல் தெரப்பி செய்து கொண்டு இருக்கும், 25 வயதுடைய ஜேர்மன் இளைஞனும் அவனது நண்பியும், சென்ற வருடம் 2022 மாசி மாதமளவில் “Gotha Go Home“ போராட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது இலங்கைக்கு நான்கு கிழமை ✈️ சுற்றுலாவில் 🛩 சென்றவர்கள். பெடியனுக்கு… 25 வயது என்ற படியால், அவன் என்றே தொடர்ந்து குறிப்பிடுகின்றேன். 😁 அவன் போன நேரம்… காலி முகத் திடல் மட்டுமல்லாது பல இடங்களிலும் ஆர்ப்பாட்டாங்கள் நடந்து கொண்டு இருந்தாலும்… தங்களை அது பெரிதாக பாதிக்கவில்லை என்றும், பார்ப்பதற்கு சுவராசியமாக இருந்ததாக குறிப்பிட்டார். ஶ்ரீலங்கா போய் இறங்கிய நேரம் ஒரு ஐரோ 280 ரூபாய் இருந்தது என்றும், பிறகு தினமும் 📈 அதிகரித்து சென்று 380 ரூபாயில் வந்து நின்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று சொன்னார். ஒரு முறை 🚅 ரயிலில் போக… ரயில் நிலையத்துக்கு சென்று பயணசீட்டு கேட்ட போது, அங்கு இருந்த அரச 👨🏻‍✈️ ஊழியர் இனி ரயில் ஒண்டும் ஓடாது, வேண்டுமென்றால் மலிவான விலையில் வாடகைக் 🚙 கார், சாரதியுடன்… ஒழுங்கு செய்து தருவதாகவும், இலங்கையில் நிற்கும் காலம் முழுக்க அதனையே பாவிக்கலாம் என்றும்… ஒரு நாள் வாடகை 250 ஐரோ படி, மிகுதி மூன்று கிழமைக்கும் மொத்தமாக முற்பணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த ரயில் நிலைய அரச அதிகாரி கேட்டாராம். தான் ஹோட்டேலுக்கு போய் யோசித்து சொல்வதாக சொல்லிவிட்டு வந்துவிட்டாராம். அடுத்த நாள் பார்த்தால்… வழமை போல் ரயில் ஒடுவதாகவும். நல்ல காலம் ஒரு ஏமாற்று பேர் வழியிடம் இருந்து தப்பி விட்டதாகவும் குறிப்பிட்டார். 🚂 ரயிலில்… கதவருகே இருந்து… அவனும், நண்பியும் தொங்கிக் கொண்டு சாகசம் செய்தபடி போன தருணங்கள் மிக இனிமையான நிகழ்வுகளில் ஒன்றாக குறிப்பிட்டார். 🐘 யானையில் சவாரி செய்ததையும், யானையை தொட்டு குளிப்பாட்டியதையும் அடிக்கடி குறிப்பிடுவதோடு… மற்றைய ஜேர்மன்காரருக்கும் அந்தப் படங்களை காட்டி பெருமைப் பட்டுக் கொள்வார். 😀 நான் இலங்கையில் வசிக்கும் போது…. சிவனொளிபாத மலை, சிகிரியா போன்றவற்றை பார்க்கவில்லை என்று அறிந்ததும்… நான் பார்க்காததை, தான் பார்த்து விட்டதாக… அவருக்கு அற்ப சந்தோசமும் உள்ளது. 😂 உணவு வகைகளில்…. விதம் விதமான 🥬 மரக்கறி வகைகள் தமக்கு மிகவும் பிடித்தவை என்றும், தாம் மாமிசம் சாப்பிடாதவர்கள் என்பதால், தம் வாழ் நாளில் சாப்பிடாத 🥒 மரக்கறிகளை உண்டதாகவும், அதிலும் பிலாக்காய் கறியின் 🌶 சுவையையும் பாராட்டினார். 🍌 வாழைப்பழம் எல்லாம்… ஒரே மாதிரி என்று நினைத்துக் கொண்டிருந்த தனக்கு…. இலங்கை சென்ற பின்தான் தெரிந்ததாம் சிவப்பு, பச்சை நிறங்களிலும்… வித்தியாசமான அளவுகளிலும், சுவைகளிலும் வாழைப்பழங்களை பார்த்து ஆச்சரியப் பட்டதாக கூறினார். ஒரு முறை, தான் வாங்கிய ரயில் பயணச் சீட்டு குறிப்பிட்ட ரயிலுக்கு செல்லாது என தெரிந்து கொண்ட உள்ளூர் தம்பதிகள்.. தம்முடைய செலவிலேயே புதிய ரயில் பயணச் சீட்டை வாங்கித் தந்ததை நன்றியுடன் குறிப்பிட்டார். எப்போ, எங்கு… சாப்பிடப் போனாலும் தினமும் பருப்புக் கறியை தந்து, தனக்கு வெறுப்பு ஏற்படுத்தி விட்டார்களாம். 😂 ஜேர்மனிக்கு வந்து ஒரு வருடமாகியும் பருப்பை கண்டால் வெறுப்பாக இருக்குதாம். 🤣 பெடியன்… யாழ்ப்பாணம், நயினாதீவு எல்லாம் போயிருக்கிறான். 🥰யாழ்ப்பாண பயணம்தான்… இலங்கையிலேயே தனக்குப் பிடித்த இடம் என்றான். அது வரை, நான் அங்கு பிறந்ததாக அவனுக்கு சொல்லவில்லை. அவனாகவே சொன்ன கருத்து அது. ஏன் யாழ்ப்பாணம் பிடிக்கும் என்று கேட்ட போது… வெள்ளைக்காரர் ஒருவரும் இல்லாமல் தாங்கள் மட்டும் அந்த மக்களிடையே வித்தியாசமாக இருந்தது தனக்கு மிகவும் பிடித்துக் கொண்டதாக கூறினார். பிற்குறிப்பு: கிளினிக்கில் இருந்து கைத்தொலை பேசியில் எழுதியதால், பதிவை… வர்ணமயமாக மெருகூட்ட முடியாமைக்கு மன்னிக்கவும். இன்னும் இரண்டு நாள்தான் இங்கு இருப்பேன். பெடியனிடம் உங்கள் சார்பாக கேட்க வேண்டிய கேள்விகள் இருந்தால் கீழே எழுதவும். கேட்டு பதில் சொல்கின்றேன். 😁 புதன் கிழமை வீட்டிற்கு செல்வதால்… அதற்குப் பின் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வராது. 🤪 🤣
  4. இப்பிடியே சொல்லிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.. ஆடத்தெரியாதவன் மேடை சரி இல்லை எண்டமாதிரிதான் போகவிருப்பமில்லாதவன் கூறும் ஒவ்வொரு சாட்டும்.. ஏதோ அமெரிக்கா ஜரோப்பாவில் வாழுறவன் மட்டும் நூறு இரு நூறு வயசு வரையும் வாழுறாங்கள் சிறிலாங்காவில் இருப்பவன் அஞ்சு வயதில் மருந்து இல்லாமல் சாகிறான்.. இஞ்ச யாழ்ப்பாணத்தில சகல மருந்தும் இருக்கு.. காசிருந்தா சரி.. ஒரே ஒரு காரணத்தை சொல்லுங்கோ எனக்கு பொருளாதாரம் போதுமானதா இல்லை அதால சிறீலங்கா வந்து செற்றிலாக விருப்பமில்லை எண்ட உண்மைக்காரணத்தை.. மற்றதெல்லாம் சும்மா சப்பை கட்டு.. காசு இருந்தா ராஜவாழ்க்கை சிறீலங்காவில.. காசில்லாட்டி பிச்சைக்கார வாழ்க்கை பிரித்தானியா கனடாவிலையும்.. தற்ஸ் ஆல் யுவரானர்.. உதாரணத்துக்கு எவ்வளா காசிருந்தாலும் வெளிநாட்டில் டிறைவர் வீட்டு வேலை சமையலுக்கு ஆள் வைக்கேலா.. தன் வேலைய தான் தான் செய்யோணும்.. சம்பளம் குடுத்து கட்டாது.. ஆனால் இலங்கையிலோ தமிழ் நாட்டிலோ ஒரு வைத்தியர் அல்லது பொலிஸ் அதிகாரி அல்லது பிஸினஸ்மான் வீட்டில் இதுக்கு எல்லாத்துக்கும் ஆள் இருக்கும்.. அதுக்குத்தான் சொன்னன் காசுஇருந்தா இங்கைதான் சொர்க்கம் வெளிநாட்டில் அல்ல.. அங்கு பிச்சைக்கார வாழ்க்கை.. அவசர சிகிச்சைக்கு அப்பலோவுக்கு கூட போகலாம்.. அதால ஊருக்கு போய் இருக்க என்னட்ட காசில்லை எண்டு நேர்மையா சொல்லுங்கோ.. அதவிட்டிட்டு மற்றதெல்லாம் உங்களை நீங்களே ஆறுதல்படுத்த சொல்லிக்கொளவது..
  5. வீடு இடிந்தாலும் சைக்கிள் இருக்க எதுக்கு கவலை? வட கிழக்கு மக்களின் ஒரே தெரிவு சைக்கிளாக இருக்கட்டும் தேசியம் சுயநிர்ணயம் என்று பயணிக்கும் தடுமாறாத ஒரே தலைமை …… Prashanthan Navaratnam 😁 😂 🤣
  6. காக்கா நரிக் கதை I ain’t playin பொறுப்பு துறப்பு கதைமாந்தர்கள், சம்பவங்கள் யாரையும் குறிப்பன அல்ல. கதை சொல்லி, தானே தன் வாழ்க்கையில் நரியாகவும், காக்காவாகவும் இருந்துள்ளார், இருக்கிறார், இருப்பார் என்பதை ஏற்று கொள்கிறார். ——————-//////————//////——————— நரிக்கு மனம் பக்…பக்… என்று அடித்துக்கொண்டது. இன்னும் ஒரு அரை வினாடி மட்டும்தான்…. பாடுகிறேன் பேர்வழி என்று இந்த அண்டங்காக்காய் மட்டும் வாயை திறக்கட்டும்… வடையை ஒரே லபக்கில் முழுங்கி விட வேண்டியதுதான். இந்த ஒரு வடைக்காக எத்தனை பாடு? எத்தனை பிரயத்தனம்? எத்தனை அவமானம்? காகத்தின் இந்த கர்ணகடூர ஓசையை கூட இசை என்று பொய்யாக புகழும் படி ஆயிற்றே…. அதுவெல்லாம் கூட பரவாயில்லை, என் சுயத்தை மறைத்து, நல்லவன் போல அல்லவா நடிக்கும் படி ஆயிற்று ? எத்தனை பெரிய ஒறுப்பு அது? பாட வாய் எடுத்தது போல் இருந்த காகத்தின் வாயில் நரியின் ஒட்டு மொத்த கவனமும் குவிந்திருந்தது. ஆனால் காகமோ பாடுவதாகக் காணோம். கால்களில் வடையை பற்றி கொண்டு, தலையை ஸ்லோமோசனில் இடமும், வலமுமாக திருப்பியது. இடையிடையே கண்களை திறந்து மூடிக்கொண்டது. பிறகு தலையை கீழே குனிந்து வடையை சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்து கொண்டிருந்தது. நரிக்கு இருப்பு கொள்ளவில்லை. வடை எல்லாம் பெரிய மேட்டரே இல்லை. சொல்லப்போனால் நரிக்கு வடை மேல் அதிக இஸ்டம் கூட இல்லை. இந்த காகத்தோடு வீணடித்த நேரத்தை, ஒரு ஆட்டு மந்தையில் செலவழித்திருந்தால் ஒரு கறி விருந்தேசாப்பிட்டு இருக்கலாம். ஆனால் அதுவல்ல முக்கியம். இது ஒரு விளையாட்டு, காகத்தின் வடையை கவர வேண்டும். அவ்வளவுதான். இந்த காகத்தை ஏமாற்றி விட்டேன் என என் சக நரிகளுக்கு நிரூபிக்க வேண்டும். அனைவர் முன்னிலையிலும் காகத்தை கேலிக்குள்ளாக்க வேண்டும். முக்கியமாக காகத்துக்கு ஒன்றும் தெரியாது என்று நிறுவ வேண்டும். அப்போதான் காகம் சொல்வது எதையும் இனி இந்த காடு நம்பாது. நரி சொல்லே மந்திரம் என இந்த காடு கட்டுப்படவேண்டும். அதற்கு என்ன தியாகமும் செய்யலாம். காகம் இப்போ பாடத்தயாராவது போல தெரிகிறது. ஆனால் வடையோ இன்னமும் காகத்தின்கால்களில்டையேதான் சிக்கிகொண்டுள்ளது. என்னது ஒரு அற்ப காகம் நம்மை விட குறுக்குப்புத்தி உடையதாக இருக்குமோ? நரிக்கு சந்தேம் சற்றே எட்டிப்பார்க்க தொடங்கியிருந்தது. காகம் மெதுவாக குனிந்து வடையை வாயில் கவ்வி…. தொப் … என்று நரியின் முகத்தில் விட்டெறிந்தது…. காகம் பாட மட்டும் இல்லை, நரியோடு பேசக்கூட செய்யவில்லை. பறந்தே போயிற்று.
  7. சரியாக சொன்னீர்கள். ஒவ்வொருவருக்கும் தமது வசதிக்கு ஏற்ற ஏதோ ஒன்று மகிழ்ச்சியை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது. அது திடீரென்று இல்லாமல் போனால்… சோகம்தான். 🙂 நீங்கள், “நோக்கியாவை புடுங்கி விட்டால்” என்று அடாத்தாக சொன்னதுதான் இன்னும் சோகத்தை வரவழைத்தது. 😂 🤣
  8. நர்மதை ஆற்றங்கரை (இந்தியா)......! 🙏
  9. அவர் தமிழர், சிங்களவர் என்று பிரித்து பார்க்கவில்லை. யாழ்ப்பாணத்தில் விடுதியிலும், சிங்களப் பகுதிகளில்… கிராமத்து வீடுகளிலும் தங்கியுள்ளார். இலங்கையில் இறங்கிய முதல் நாள் மட்டும் கொழும்பில் நின்றதாகவும், அங்கு ஒரு ஹொட்டேலில் இரண்டு பேர் படுக்கும் அறைக்கு 150 € கொடுத்ததாகவும், அது அதிகமாக தெரிந்ததால் உள்ளூர் நகரங்களில் தங்க முடிவு எடுத்ததாகவும் கூறினார். உள்ளூரில்…. 20 € விலிருந்து 35 € விற்கு அந்த குடும்பத்தினருடன் தங்கக் கூடிய திருப்திகரமன அறைகள் கிடைத்ததாக சொன்னார். கொழும்பில் நின்ற காலங்களில்… பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்த மாதிரியும், வங்கிக்கு சென்றால் ஆட்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்களாம். (வெளிநாட்டு பணத்தை வாங்கி விற்பவர்காளாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.) அத்துடன் இலங்கை தெருக்கள் முழுவதும் பிளாஸ்ரிக் கழிவுகளும், குப்பைகளும் அதிகமாக இருந்தனவாம். திருகோணமலை கடலில் சுழியோடிய போது, கடலுக்கு அடியிலும்.. பிளாஸ்ரிக் போத்தல்களை கண்டதாக கூறினார். தனக்கு அங்குள்ள சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை.. கிடைப்பதை வைத்து, மிக மகிழ்ச்சியாக வாழ்வதாக கூறினார். உதாரணத்துக்கு…. ஒரு வீட்டில் ஒரு சிறுவர் சைக்கிள் இருந்தால்… அந்தத் தெருவில் உள்ள பிள்ளைகள் எல்லோரும் அதனை மாறி, மாறி ஒடி குதூகலமாக இருந்தார்களாம். பெரியவர்களிடம் நவீன தொலை பேசிகள் இல்லாமல் “Nokkia“ கைத்தொலைபேசிகளை வைத்துக் கொண்டே திருப்தியான வாழ்க்கை வாழ்வதாக குறிப்பிட்டார். ஜேர்மனியில் என்றால்… வருடா வருடம் புதிதாக வரும் தொலை பேசிக்கும், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை, பாவிக்கும் வாகனத்தை மாற்றவும்… பணத்தை செலவழித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றார்.
  10. உள்ளம் கொள்ளை போகுதே.......கண்களைக் கவரும் பிரமாண்டமான கண்ணாடி மாளிகை......! 👍
  11. இலங்கை ரெலிகொம்மில் மிக உயர்ந்த நிலை அதிகாரியாக இருந்த என் நண்பன் (வேலையில் இவன் கார் கதவை திறக்க என்றே ஒருவர் இருந்தார் என்பதை கண்கூடாக கண்டனான்), குடும்பத்துடன் இங்கு வந்து விட்டான். ஏன் என்று கேட்டதுக்கு, இங்கு பிச்சை எடுத்தாலும் பாதுகாப்பாக, முக்கியமாக தனி மனித சுதந்திரத்துடன் வாழலாம் என்கின்றான். Millennium m IT இல் உயர் பதவியில் வேலை செய்கின்ற, சிங்களப் பெண்ணை மணந்த என் தமிழ் நண்பன், தன் மகனையும் மகளையும் இங்கு படிக்க அனுப்பி வைத்து செட்டிலாக்கி விட என் மூலம் முயல்கின்றான் என் திட்டமும் எண்ணமும் அச்சொட்டாக இது தான் கொழும்பு என்று (யாழ்ப்பாணம் அல்லவே அல்ல) இருந்த எண்ணம், கொஞ்சம் நகர்ந்து சென்னை என்று ஆகியுள்ளது இப்ப.
  12. நிச்சயமாக. இரண்டாம் உலகப் போரின் கதையை, பிரிட்டன், சேர்ச்சில், ப்ளெட்ச்லி பார்க், RAF இவையெல்லாம் குறிப்பிடாமல் எழுதவே முடியாது! - அலன் ரூரிங்கும் வருவார்!
  13. பிரித்தானியாவில் எனக்கு தெரிந்து எத்தனையோபேர் வீட்டு சமையலுக்கு வீடு துப்பரவு செய்ய வைத்திருக்கினம் வாகன ஓட்டுநர் வைத்திருக்கினம் பிள்ளையை வயது வந்த பெற்றோரை பார்க்க ஆள் வைத்திருக்கினம். ஊரிலிருந்து sponsor செய்தவையும் உண்டு. இங்கும் தனியார் வைத்தியசாலைகள் GP உண்டு. எங்கட பல ஆட்களுக்களுக்கு அரசாங்க பணத்தில் வாழ்பவர்களையும் கள்ள மட்டைக்காரர்களையும் தான் தெரியும். ஏனென்றால் அவர்களை சுற்றி அவர்கள் தான்.
  14. ஆம் சுவியர்.. எல்லாம் சிங்கள, ஆங்கில பத்திரிகைகளில் வருபவை தான். வீரகேசரியில்... செல்வன் என்பவரின் கருத்தோவியமும் வரும். ஆனால் அவர் பிக்குகளை வரைந்ததை இது வரை காணவில்லை. 😂
  15. சிறியர் இந்த கருத்துப் படங்கள் எல்லாம் நாட்டிலுள்ள சிங்களப் பத்திரிகைகளிலா வருகிறது.......இன்னுமா அந்தப் பத்திரிகைகள் செய்கூலி சேதாரம் இல்லாமல் அச்சிடப்படுகின்றது.......! 😁
  16. இன்கமிங் ,அவன்தான் பிரச்சனை பன்றான்
  17. மரணம், சயனைட் செலுத்தப் பட்டதால் ஏற்பட்டிருந்தால் உடனே உண்மை மரண விசாரணையில் வெளிவந்திருக்கும். கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்ப்பட மரணம் என்றே அறிக்கை வெளிவந்தது. சுத்துமாத்து பண்ணி, விசாரணையை திசைதிருப்பி, பேரம்பேசி, வெள்ளையை கறுப்பாக்கி, உண்மை திரிய கால அவகாசம் வேண்டாமோ? பேரம் இரண்டு மாதத்தில் படிந்து விட்டதென்றால் தொகையை கற்பனை பண்ணிப்பாருங்கள்.
  18. உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது ...தமிழர்களை விட சிங்களவர்களது உபசரிப்பு நன்றாக இருந்தது என்று அவர் சொல்லவில்லையா?
  19. இந்த தண்டவாளத்தில் கல்யாண சோடிகள் வர போகிறார்களோ? சுவி நானும் 2017 இல் கதிர்காமம் போனபோது யானைக்கு பழம் ஊட்டிவிட்டேன். இப்போ பல காணொளிகளிலும் யானை வானை பிரட்டுது இடிக்குது. நல்ல காலம் தப்பிப் பிழைத்து வந்துவிட்டோம்.
  20. உலக நாடுகள் என்ன செய்தன? ஹிற்லரின் நாசிக் கட்சியின் ஆட்சியில் ஜேர்மனி வந்த காலப் பகுதி ஒரு அசாதாரணமான உலகக் சூழல் நிலவிய காலம். முதல் உலகப் போரினால் ஒரு லட்சம் இளைஞர்களையும், அதே காலப்பகுதியில் ஐந்து லட்சம் வரையான மக்களையும் இன்புழுவன்சாப் பெருந்தொற்றினால் இழந்த அமெரிக்கா, 1929 இல் உருவான பொருளாதார மந்த நிலையினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது (இந்த மந்த நிலை- Great depression, ஏதோ ஒரு வகையில் 1939 வரை நீடித்தது). எனவே அமெரிக்கா ஒரு உலக சக்தியாக யாருக்கும் தோன்றவில்லை அப்போது. ஆனால், தங்கள் காலனிகள், சக்தி மிக்க கடற்படைகள் என்பவை காரணமாக பிரிட்டனும், பிரான்சும் இராணுவ ரீதியில் பலமாக இருந்த காலம் அது. நாடுகளின் சங்கம் (League of Nations) என்ற ஐ.நாவின் முன்னோடியான அமைப்பு அமெரிக்காவினால் முன்னின்று உருவாக்கப் பட்டாலும், அமெரிக்கா அந்த அமைப்பில் நிரந்தர உறுப்பினராகவில்லை. மாறாக, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய நிரந்தர உறுப்பினர்களோடு, சில டசின் நாடுகளை உறுப்பினர்களாக வைத்துக் கொண்டு "கூட்டுப் பாதுகாப்பு (collective security)" என்ற அடிப்படையில் நாடுகளின் சங்கம் இயங்கியது. ஆனால், செயல் திறன், அமலாக்கல் சக்தி என்பன குறைந்த ஒர் அமைப்பாக இருந்ததால் உண்மையிலேயே உலகின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பிரச்சினைகளை நாடுகளின் சங்கத்தால் தீர்க்க இயலவில்லை. உதாரணமாக, நிரந்தர உறுப்பினரான ஜப்பான், சீனாவின் மஞ்சூரியாப் பகுதியை ஆக்கிரமித்த போது, நாடுகளின் சங்கத்தினால் கண்டனம் மட்டுமே தெரிவிக்க முடிந்தது - இந்தக் கண்டனமே ஜப்பான் தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளக் காரணமாக இருந்தது. ஜேர்மனி கூட ஒரு குறுகிய காலப்பகுதியில் நாடுகளின் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப் பட்டது. ஹிற்லர் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் காரியங்களில் ஒன்றாக அந்த அமைப்பில் இருந்து ஜேர்மனியை விலக்கிக் கொண்டார். இதன் மூலம், உலகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக வரப் போகும் இரு நாடுகள் நாடுகளின் சங்கத்தைப் புறக்கணிக்கும் வசதி வாய்ப்பு அமைந்தது. இப்படி உலக நாடுகள் - குறிப்பாகப் பலம் பொருந்திய நாடுகள்- தங்கள் உள்விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்த காலப்பகுதி (isolationism என்பார்கள்)ஹிற்லருக்கும், கிழக்கில் ஜப்பானியர்களுக்கும் மிக வாய்ப்பான காலமாக இருந்தது. மொத்தத்தில், ஜேர்மனியின் புதிய நாசி அரசை உலக நாடுகள் வித்தியாசமாகப் பார்க்கவில்லை என்று தான் பின்னர் வெளி வந்த இராஜதந்திரப் பரிமாற்றங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மாறாக, அரவணைத்துச் செல்லும் (appeasing) முயற்சி கூட 1932 முதல் ஆரம்பித்து விட்டது. உதாரணமாக, அமெரிக்கா, வெர்சை உடன்படிக்கையின் படி ஜேர்மன் மீது விதித்த பொருளாதாரத் தண்டனைகளை ஈடு செய்ய, குறுகிய காலக் கடன்களை வழங்கியிருந்தது. 1932 இல், ஜேர்மனியின் பொருளாதரப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு அந்தக் கடன்களை வசூலிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்தது (debt moratorium - வட்டி மட்டும் கட்ட வேண்டிய நிலை). இதன் பின்னர், 1934 இல் ஹிற்லர் ஒரு சட்டத்தை இயற்றி, சகல வெளிநாட்டுக் கடன்களையும் ஒரு தலைப் பட்சமாக நிறுத்தி வைத்தார். இதனால், ஜேர்மன் பணம் நாட்டை விட்டு வெளியே செல்வது வெகுவாகக் குறைக்கப் பட்டது. பொருளாதாரத்தில் ஒரு கண் வைத்திருந்த நாசிகள் கடன்களின் சுமையில்லாமல் மூச்சு விடக் கிடைத்த இடைவெளியில் நாசிகள் ஜேர்மன் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாக ஈடுபட்டனர். ஜேர்மன் மக்களின் தொழில் நுட்பத் திறமை, உயர்ந்த கல்வி மட்டம், அதிகாரத்திற்குப் படிந்து எதையும்செய்யும் நடத்தைப் போக்கு (இதை முறைப்பாடு செய்யாமல் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் stoicism என்றும் சொல்வார்கள் - இது ஜேர்மன் தேசிய அடையாளங்களுள் ஒன்று என்று கூடச் சிலர் சொல்வர்!) என்பன நாசிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. வேலையற்ற ஜேர்மனியருக்கு வேலை வழங்க, கட்டுமானத் திட்டங்கள் உருவாக்கப் பட்டன - உலகின் முதல் நெடுஞ்சாலை வலையமைப்பு ஆட்டோ பான் (Autobahn) என்ற பெயரில் ஜேர்மனியில் உருவானது. இரும்புப் பொருட்கள் உற்பத்தி, எண்ணை சுத்திகரிப்பு, செயற்கை இறப்பர், இரசாயனங்கள் என ஏராளமான பொருட்களின் உற்பத்தி அளவு ஒரிரு ஆண்டுகளிலேயே பல மடங்குகளால் அதிகரித்தது நாசிகளின் ஆட்சியில். அதே வேளையில், வேலையில்லாதோருக்கு சீருடைகளை அணிவித்து, புதிது புதிதாக ஆயுதப் படைப்பிரிவுகளை உருவாக்கும் வேலையும் நடந்தது. காக்கிச் சட்டைகள் (brown shirts) என்று அழைக்கப் பட்ட ஹிற்லர் இளைஞரணியும் ஒரு தனிப் படையாக வளர்க்கப் பட்டது. நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் அதிகரித்தது. நாசிகளை நம்பிக்கையுடன் ஆதரித்த மக்கள் "இது பொற்காலம்" என மகிழ்ந்து அவர்களது கூட்டங்களில் மந்திர சக்தியால் ஆட்கொள்ளப் பட்ட பொம்மைகள் போலக் கலந்து குதூகலித்தனர், ஆர்ப்பரித்தனர். ஆனால், இந்த 1930 களின் நாசி ஜேர்மன் பொருளாதாரம் ஒரு போர்க்காலப் பொருளாதாரம் என்பது முன்னுரிமை வழங்கப் பட்ட துறைகளைப் பார்க்கும் போதே தெளிவாக யாருக்கும் தெரிந்து விடும். அதாவது, வெர்சை உடன் படிக்கையின் படி ஆயுதப் படைகளை நவீன மயப்படுத்தும் உரிமையை இழந்த ஜேர்மனி, மறைமுகமாக தன் இராணுவப் பற்களைத் தீட்டிக் கொண்டிருந்தது. இதனை எத்தனை உலக நாடுகள் புரிந்து கொண்டிருந்தன என்பதில் வரலாற்றியலாளர்கள் முரண்படுகின்றனர் - ஆனால், ஹிற்லர் தன்னைச் சுற்றி வைத்திருந்த ருடோல்f ஹெஸ், ஜோசப் கோயபல்ஸ், ஹேர்மன் கோறிங் ஆகிய பெரிய தலைகள் ஜேர்மனியின் ஆயுத மயமாக்கலின் நீண்டகால நோக்கத்தை அறிந்திருந்தனர். உதாரணமாக, வெர்சை உடன் படிக்கையின் படி, ஜேர்மன் விமானப்படையொன்றைக் கட்டியெழுப்ப தடை இருந்தது. ஆனால், ஜேர்மனியில் பல சிவிலியன் விமான நிறுவனங்கள் முதல் உலகப் போர் காலத்திலேயே இருந்திருக்கின்றன. ஹெர்மன் கோறிங், இந்த சிவிலியன் விமான நிறுவனங்களின் திறமை வாய்ந்த விமானிகளை இரகசியமாக ஒன்று சேர்த்து, பயிற்சியளித்து ஜேர்மன் விமானப் படையை கண்காணிப்புக் குறைந்த ஜேர்மன் நாட்டுப் புறங்களில் கட்டியமைத்து வந்தார். இவ்வாறு உருவாக்கப் பட்ட ஜேர்மன் விமானப்படை (Luftwaffe), இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு மிகுந்த சவாலாக விளங்கியது குறிப்பிடத் தக்கது. இருளிரவின் ஆரம்பம் இவ்வளவு தொழில்நுட்ப, பொருளாதார, கல்வி மேலாண்மை கொண்ட ஜேர்மன் சமுதாயம், "ஆரியர்கள்" அல்லாத யூதர்கள், றோமா மக்கள் ஆகியோரையும், ஓரினச் சேர்க்கையாளர்களையும், லூதரன் கிறிஸ்தவர்கள் அல்லாத ஏனைய கிறிஸ்தவர்களையும் எப்படி ஒதுக்கி வைத்தது? ஒதுக்கி வைத்தது மட்டுமல்லாமல், அவர்களை எப்படி வகை தொகையின்றிக் கொன்றொழித்தது? இத்தகைய இருண்ட மாற்றங்கள் 1933 இலிருந்து ஆரம்பிக்கின்றன - ஹிற்லரின் பேச்சுக்கள் செயல் வடிவம் பெற்றன. சாதாரண ஜேர்மன் மக்களும், ஜேர்மனியில் வசித்த வெளிநாட்டவர்களும் கூட "நாசிகள் ஒன்றும் மோசமில்லை"😎 என்று சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு எப்படி பொருளதாரம், கலாச்சார மேன்மை ஆகிய பொன்முலாம் கொண்டு நாசிகள் தங்கள் மிருகத் தனத்தை மறைத்தனர்? இது தான் நண்பர்களே வரலாறு திரும்பும் ஒரு சிறந்த உதாரணக் கதையாக இருக்கிறது. -இன்னும் வரும் ஜஸ்ரின்
  21. அவையெல்லாம் தன்னிச்சையாக நடப்பது ........! 😍 அகவை அக்காவாகி விட்டது .......திருத்தியாச்சுது...... நன்றி முதல்வன்.......! 👍 வேறுயார் உங்களது ஜெர்மன் poy யும் girl லும்தான்......அவர்கள்தான் ஒரு முத்தம்கூட குடுக்கவில்லை தெரியாதா......! 😂
  22. டீ சூடு இல்லியே..!! சார் அது சாம்பார்..
  23. ஒருவரின் கருத்துக்கு நீங்கள் மறு கருத்து பேசாத வரையில் அவருக்கு நீங்கள் நண்பன் தான்.
  24. அழகிய தோட்டம் என்றும் மனஅமைதி தரும் .......! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.