Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19134
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7053
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    8907
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/11/23 in all areas

  1. ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம், அவர்களிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், இஸ்ரேல் ஒரு தேசம், எனவே பழிவாங்கும் உணர்வு இருந்தாலும் இஸ்ரேல் படைகள் சிவிலியன்களைப் பாதுகாக்கும் படி நடந்து கொள்வது குறைந்த பட்ச தகுதியாக இருக்க வேண்டும். நிற்க: ஹமாஸ் காசாவில் 2007 இல் தேர்தல் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. மேற்குக் கரையில் ஹமாஸிற்கு ஆதரவில்லை. ஈரான், துருக்கி, கட்டார் ஆகிய நாடுகள் ஹமாசுக்கு பல் வேறு வழிகளில் நிதியுதவி செய்கின்றன. இவற்றுள், கட்டார் மட்டும் தான் மனிதாபிமான உதவிகளாகச் செய்கின்றது - இது இஸ்ரேலினால் அனுமதிக்கப் பட்டிருக்கும் உதவி என்கிறார்கள். இதை விட எகிப்தில் இருந்து காசாவினுள் வரும் பொது மக்களுக்கான உணவு, பாவனைப் பொருட்கள் மீது வரி விதித்து, ஹமாஸ் வருடாந்தம் பல மில்லியன் வருமானம் பார்க்கிறது. இந்த வரியையும் ஆயுதம் வாங்கத் தான் பாவிக்கிறார்கள் - ஏனெனில் காசா வாழ் மக்கள் கண்டது மருந்து, உணவு எல்லாமே தட்டுப்பாடான வாழ்க்கை தான் கடந்த 16 ஆண்டுகளாக. முக்கியமான கேள்விக்கு வருகிறேன்: காசா மக்கள் ஹமாசை இப்போது ஆதரிக்கிறார்களா? இந்த ஆண்டு ஜூனில் ~1200 பேர்களிடம் எடுக்கப் பட்ட மாதிரிக் கருத்துக் கணிப்பின் படி காசாவில் இருக்கும் 38% பேர் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் ஆகிய வன்முறை அமைப்புகளின் வருகை நல்ல விடயம் எனத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த வீதம் மேற்குக் கரையில் வெறும் 16%! இதற்கு இஸ்ரேல் மீதான வரலாற்றுக் கோபம் உட்பட பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் இஸ்ரேலின் இருப்பை ஒழிக்க வேண்டுமென எழுத்தில் வைத்திருக்கும் இரு அமைப்புகளை கணிசமானளவு காசா வாழ் மக்கள் விரும்புகிறார்கள் என்றே தெரிகிறது. 5 மில்லியன் மக்கள் தொகையில், வெறும் 1200 பேரின் மாதிரியாக (sampling) இருந்தாலும், பல சுவாரசியமான தரவுகளை உள்ளடக்கிய கருத்துக் கணிப்பு ஆவண இணைப்பு இது, நேரம் இருப்போர் வாசியுங்கள்: https://www.pcpsr.org/sites/default/files/Poll 88 English full text June 2023.pdf ஒரு முட்டுச்சந்தில் பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினை முட்டி நிற்கிறது. இந்த முட்டுச் சந்தை விட்டு நகர, இஸ்ரேல் செய்ய வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன, ஆனால் பலஸ்தீன மக்கள் செய்ய வேண்டிய பல விடயங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன்.
  2. இஸ்ரேலின் அடக்குமுறைகளுக்கெதிராக, பாலஸ்த்தீனர்கள் மீதான அவர்களின் அட்டூழியங்களைப் பொறுக்கமுடியாமலேயே ஹமாஸ் இத்தாக்குதலை நடத்தியதாக கூறுகிறார்கள் பாலஸ்த்தீன ஆதரவாளர்கள். சரி, அப்படியானால் இஸ்ரேலிய அரசையும் அதன் ஆக்கிரமிப்பு இராணுவத்தையும் அல்லவா குறிவைத்துத் தாக்கியிருக்க வேண்டும்? 1200 பொதுமக்கள் வேட்டையாடப்பட்டதற்குக் காரணம் என்ன? குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் , முதியோர் என்று ஆயிரக்கணக்கானோர் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதோடு தலைகள் கொய்யப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு மேலாக பலர் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரே நாளில் 1200 இஸ்ரேலியர்களை, குறிப்பாக பொதுமக்களைக் கொன்றுவிட்டு இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபடாமல் இருக்கும் என்று ஹமாஸ் எதிர்பார்த்ததா? சாதாரண கல்வீச்சுப் போராட்டத்திற்கே துப்பாக்கித் தாக்குதல் நடத்தி சில பலஸ்த்தீனர்களையாவது கொல்லும் இஸ்ரேலிய இராணுவம், 1200 பொதுமக்கள் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் என்ன செய்யும் என்று ஹமாஸ் எதிர்பார்த்தது? இல்லை, இஸ்ரேல் என்ன செய்யும் என்று தெரிந்தே இத்தாக்குதலை நடத்தியிருந்தால், அப்பாவிப் பாலஸ்த்தீனர்கள் இஸ்ரேலின் பதில்த் தாக்குதலில் கொல்லப்படவிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துதானே இதனைச் செய்திருக்கிறது? அப்படியானால், பாலஸ்த்தீன மக்களின் மேல் ஹமாஸ் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறதே? இஸ்ரேல் என்பது அதனை உலகின் வரைபடத்திலிருந்தே முற்றாகத் துடைத்தழித்துவிடக் காத்திருக்கும் நாடுகளால் சூழப்பட்டிருக்கிறது. ஆகவே, தனது பாதுகாப்பிற்காக எந்த மனிதவுரிமை மீறல்களிலும், இனக்கொலைகளிலும் அது ஈடுபடத் தயாராகவே இருக்கிறது. அயலில் உள்ள நாடொன்றினை ஆக்கிரமித்தல், எல்லைகள் மீறி ஊடுருவித் தாக்குதல், அயல்நாடுகளில் நாசகார வேலைகளில் ஈடுபடுதல் என்று தன்னிச்சையாகச் செயற்பட்டுவரும் ஒரு எதேச்சாதிகார அரசு. ஐ. நா வோ அல்லது சர்வதேச மனிதவுரிமைச் சபையோ அல்லது எந்த அமைப்போ இஸ்ரேலைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். அமெரிக்காவும், இன்னும் சில மேற்கு நாடுகளும் பின்னால் இருக்கும் தைரியத்தில் இஸ்ரேல் இதனைச் செய்கிறது. கொத்தணிக்குண்டுகளை இஸ்ரேல் பாவிப்பது இதுவே முதல்த் தடவையல்ல. இதற்கு முன்னரும் பலமுறை இஸ்ரேல் இதனைப் பாவித்திருக்கிறது. இதனை அமெரிக்கா கொடுத்திருக்கலாம், அல்லது இஸ்ரேலே சொந்தமாகத் தயாரித்திருக்கலாம். முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு, சாலை, புதுமாத்தளம், வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் ஹேலோ கண்ணிவெடி அகற்றும் அமைப்பினரால் கண்டெடுக்கப்பட்ட 46 கொத்தணிக்குண்டுகளின் எச்சங்களும், கோதுகளும் ரஸ்ஸியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதையே காட்டுகின்றன. மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் அதிகளவு மக்களைக் கொல்லும் நோக்கத்திற்காகவே இவை வீசப்பட்டன. இன்று இஸ்ரேல் செய்வதும் அதுதான். அதிகளவு பலஸ்த்தீனர்களைக் கொல்லுதல். உண்மையான விடுதலைப் போராட்டம் ஒன்றினை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கடத்திச் சென்று அப்பாவிகள் இருபக்கமும் கொல்லப்படக் காரணமாகிவிட்டிருக்கிறார்கள். சர்வதேசத்தில் பலஸ்த்தீன மக்களுக்கு இருந்த சிறிது அனுதாபத்தினையும் ஹமாஸின் மிருகவெறி இன்று முற்றாக அழித்திருக்கிறது. பலஸ்தீனர்களை அழிப்பதில் சிறிதும் கவலை கொல்லாத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசுக்கு தனது மக்களைக் கொல்ல தானே வழிசமைத்துக் கொடுத்திருக்கிறது ஹமாஸ். ஒவ்வொரு யூத மகனின் இறப்பிற்கு 10 பலஸ்த்தினர்களைக் கொல்லும் இஸ்ரேலிய அரசு, தனது 1200 மக்களின் படுகொலைக்கும் எத்தனை ஆயிரம் பலஸ்த்தீனர்களின் உயிர்களைக் காவு கொள்ளப்போகிறது? இஸ்ரேலின் விமானக் குண்டுவீச்சிற்குள்ளும், ஏவுகனை வீச்சுக்குள்ளும் உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருக்கும் தாய்மாரினதும், குழந்தைகளினதும் முகங்களில் தெரிவது வன்னியில் இலங்கை விமானப்படைக் குண்டுவீச்சில் கதறியபடி ஓடிய எனது உறவுகளே. ஹமாஸின் நரவேட்டையில் பலியான 1200 அப்பாவி இஸ்ரேலியர்களும், இஸ்ரேலின் குண்டுவிச்சில் கொல்லப்பட்டுவரும் பலநூற்றுக்கணக்கான பலஸ்த்தீனர்களும் செய்த தவறு என்ன? இக்கொலைகளை எப்படி நியாயப்படுத்த முடியும்? இதில் நாம் எத்தரப்பையும் சார்ந்து கருத்தெழுததுவதென்பது தவறானது. ஏனென்றால், இருபக்கமும் கொல்லப்படுவது அப்பாவிகளே.
  3. இந்த திரியில் நான் எழுதிய ஒரு கருத்தைத் தொடர்ந்து, தேவையற்ற விதமாக கருத்துக்கள், எழுதப்படுவதால் இந்த திரியில் அதனை எழுதியதற்காக உண்மையில் வருத்தப்படுகிறேன்.. நன்னிக்கு அந்தக் கருத்தை நான் எழுதியதன் நோக்கம் வேறு.. ஆனால் தேவையற்ற விதமாக திரிக்கு சம்பந்தம் இல்லாமல் அதனை வைத்தும், அதன் தொடர்ச்சியகவும் ஒருவரை ஒருவர் தாக்கி எழுதுவதைப் பார்க்க ஏன் அதனை எழுதினேன் என்றுதான் நினைக்கிறேன். பார்க்கப்போனால் இந்தப் போரில் இரண்டு பக்கமும் தவறு உள்ளது. காட்டுமிராண்டித்தனமாக செயற்படும் ஹமாஸும் சரி, தனது மக்களை காப்பாற்ற பதிலடி கொடுக்கிறேன் எனக் கூறிக்கொண்டு சாதாரண பாலஸ்தீன மக்களை மனிததன்மையற்று தாக்கும் இஸ்ரேலும் சரி. இரு தரப்பு செய்ததும் பிழை. ஆனால் இதனை தடுக்காமல் ஊக்குவிப்பதில்தான் மற்றைய நாடுகள் செயல்படுகின்றன. இந்த தீவிரமத வாதக்குழுக்களை உருவாக்கும்/ஊக்குவிக்கும் நாடுகளுக்கு அப்பாவி மக்களும் பற்றி அக்கறையில்லை. அதே போல மற்றைய நாடுகளும் தங்களது நாட்டுநலன்களுக்கேற்ப கண்டும்காணாதது போல இருக்கின்றன. என்னைப் பொறுத்த வரை இன்று இந்த உக்ரோன் போர் தொடங்கி இந்த பாலஸ்தீன போர் வரை உலகில் நடந்த/நடந்துகொண்டிருக்கும் போர்களைப் பார்த்தால் மனித உயிர்கள் இரண்டாம் பட்சம். மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லை. இவையெல்லாம் தெரிந்தும், தேவையற்ற விதமாக கருத்துகளை எழுதி மனஸ்தாபப்படவேண்டுமா?
  4. 🤣 அவர் எழுதியதை வைத்து - நன்னி முள்ளிவாய்க்கால் வரை போய் மீண்டவர் என நினைக்கிறேன். அதற்கும் மேல் நேரடி அனுபவம் தேவை என்றால் - ஒரு மனித எறிகணையாக மாறினால்தான் முடியுமாய் இருக்கும். இந்த அனுபவமே சில இனத்தினர்/மதத்தினர் மீது அவர் கடும் சினம் கொள்ளவும் காரணமாய் அமைகிறது என நினைக்கிறேன் (அந்த கோபத்தின் நியாப்பாடுகள் வேறுவிடயம்). எனக்கும் போர் ஓய்வுக்கு முன்னான காலத்தில் (துரதிஸ்டவசமாக) போர் அனுபவம் போதியளவு உண்டு. உங்களை போல் மூன்றாம் தரப்பாக போரை அனுபவித்தோர் அல்ல நாம். நாமே எமது வீடுகளிலும், பள்ளிகளிலும் எமக்கான பதுங்கு குழிகளை கிண்டி வாழ்ந்தவர்கள். நாமே எமது உறவுகளை குண்டு வீச்சில் தொலைத்து விட்டு நின்றவர்கள். நாமே உணவு, மருந்து தடைகளை எதிர்கொண்டு வாழ்ந்தவர்கள். நாமே கொழும்பில் மிருகங்கள் போல் நடத்தப்பட்டவர்கள். நாமே கொழும்புக்கும் ஊருக்கு உயிரை கையில் பிடித்து கொண்டு பயணித்தவர்கள். நீங்கள் சொல்கிறீர்கள் எமக்கு யுத்த அனுபவம் இல்லை என்று🤣. நியாயத்தை கதைப்போம் + எப்போதும் தமிழன் - politics makes strange bedfellows என்பது சரியாகத்தான் இருக்கிறது.
  5. இது அரைவாசிக் காரணம். மிகுதிக் காரணம், இது வரை நடந்த இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் பெற்றோரின் (முதல் 4 நாட்களிலேயே 260 குழந்தைகள் காசாவில் கொல்லப் பட்டன), பெற்றோரை இழந்த பிள்ளைகளின் உணர்வு ரீதியான எதிர் வினையாக இருக்கும். காலா காலமாக இத்தகைய இழப்புகளால் பாதிக்கப் பட்டோர் இதயத்தால் தான் யோசிப்பர், தலையால் அல்ல - அப்படி தலையால் யோசிக்கும் படி நாம் ஆலோசனை சொல்வதும் futile exercise என நினைக்கிறேன். அந்த காம்ப் டேவிட் (2000 ஆம் ஆண்டு) சமாதான முயற்சியின் பின்னர் பிறந்த ஒருவர் இப்போது 22 வயது இளைஞராக இருப்பார். வளர்ந்தவர்களே பொய்ச்செய்திகளால் ஆகர்சிக்கப் பட்டு எடுபட்டுப் போகும் இந்தக் காலத்தில், இத்தகைய இளைஞர்களை தம் வசம் இழுப்பது ஹமாஸ் போன்ற குழுக்களுக்கு மிக இலகு.
  6. இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய ஜெயாருடன் பேரம்பேசலில் ஈடுபட்ட அமெரிக்கா ஜெயவர்த்தனவின் ஆட்சியின் கீழ் தமிழர் மீதான தாக்குதல்களுக்குப் பழிவாங்க இராணுவத்தினரைத் தமிழ் இளைஞர்கள் இலக்குவைக்கத் தொடங்கினர். திருநெல்வேலித் தாக்குதலுலுக்குப் பழிவாங்கவென்று அரங்கேற்றப்பட்ட ஜூலைப் படுகொலைகளுட‌ன் இலங்கை இராணுவம் என்பது சிங்கள இராணுவமே எனும் நிலைமாற்றம் பூரணப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர், சிங்கள இராணுவம் எனும் நிலையிலிருந்து தமிழர்களுக்கு எதிரான இராணுவம் எனும் நிலையினை அது அடைந்தது. தமிழர்கள் இந்த இராணுவத்தை சிங்கள இராணுவம் என்பதையும் தம்மை ஆக்கிரமிக்க வந்த இராணுவம் என்பதையும் முழுமையாக உணர்ந்துகொண்டனர். இந்த இராணுவம் அந்நிய இராணுவம் என்று அவர்களால் அழைக்கப்பட்டும், நடத்தப்பட்டும் வந்தது. ஜூலை இனக்கொலை நடந்த சில நாட்களின் பின்னர் பிரபல ஊடகவியலாளரான மேர்வின் டி சில்வா இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர் டி சில்வாவிடம் ஜூலை இனக்கொலையினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் விளைவுகளில் எதனை நீங்கள் முக்கியமானதாகக் கருதுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு, "இராணுவம் அரசியலில் செலுத்தும் தாக்கமே" என்று அவர் பதிலளித்தார். இனப்பிரச்சினையில் சிங்கள மக்கள் சர்பாக இராணுவத்தைக் களமிறக்கிய‌ ஜெயார் , அதனை விரிவுபடுத்தி, நவீனமயமாக்கி தமிழர்களை முற்றாக வெல்லும் நிலைக்கு அதனை உயர்த்தவேண்டும் என்று உறுதிபூண்டார். அதற்கு அவருக்கு ஆயுதங்களும், பயிற்சிகளும் தேவைப்பட்டன. ஆகவே, அமெரிக்காவையும், பிரித்தானியாவையும் இதுகுறித்து தொடர்ச்சியாக அவர் அழுத்தி வந்தார். ஜெயவர்த்தனவுக்கு உதவ விரும்பிய அமெரிக்கா, சிங்கள மக்களை உற்சாகப்படுத்த உடனடியாக எதனையாவது செய்யவேண்டும் என்று கருதியது. இந்தியாவின் அழுத்தங்களையடுத்து சிங்களவர்கள் தமக்குத் தோழமையாக எவரும் இல்லையே எனும் மனநிலைக்கு வந்திருந்தனர். ஆகவேதான் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரான கஸ்பர் 1983 ஆம் ஆண்டு ஐப்பசி 1 ஆம் திகதி சிநேகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கொழும்பு வந்திருந்தார். இந்த விஜயத்தின் நோக்கமே, "கலங்கவேண்டாம், அமெரிக்கா உங்களுடன் நிற்கிறது" எனும் செய்தியை சிங்களவர்களுக்குச் சொல்வதே. வோஷிங்க்டன், கஸ்பரின் விஜயத்தை பெரிதாகக் காட்டிக்கொள்ள விரும்பாதபோதும் அவரது விஜயத்தின்போது இராணுவ உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டு சில முடிவுகளும் எடுக்கப்பட்டதாக அரசியல் அவதானிகள் தெரிவித்திருந்தனர். அமெரிக்காவின் மத்தியஸ்த்தத்தின் ஊடாக இஸ்ரேலினை இலங்கையினுள் கொண்டுவர அரசு முயல்வதாக எதிர்க்கட்சிகள் அப்போது குற்றஞ்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத் தக்கது. ஐப்பசியின் இறுதிப்பகுதியில் அமெரிக்க ராணுவ ஜெனராலன வேர்னன் வோல்ட்டர்ஸ் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார். ரீகனின் பிரத்தியேகச் செய்தியுடன் இலங்கை வந்திருந்த அவர் ஜெயாருடன் முக்கியமான பேச்சுக்களில் ஈடுபட்டார். ஜெயாரின் வாழ்க்கைச் சரிதையை எழுதிய கே.எம்.டி.சில்வா மற்றும் ஹவார்ட் ஹிக்கின்ஸ் ஆகியோர் வோல்ட்டர்ஸின் இந்த விஜயம் குறித்து பின்னாட்களில் அவரை வினவியிருந்தனர். அபோது பேசிய வோல்ட்டர்ஸ், "நான் ஜெயாரை தமிழ்ப் பிரிவினைவாதிகளுடனும் இந்தியாவுடனும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்படி கோரினேன். மேலும் இலங்கையின் இனப்பிரச்சினை மேலும் தீவிரமடைந்தால், இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம், இதில் இராணுவ‌த் தலையீடும் சாத்தியமாகலாம் என்ற அச்சத்தையும் அவரிடம் தெரிவித்தேன்" என்று கூறினார். ஆனால், வோல்ட்டர்ஸுக்கும் ஜெயாருக்கும் இடையே நடந்த கலந்துரையாடல்கள் குறித்து சில்வாவும், ஹிக்கின்ஸும் வேண்டுமென்றே குறிப்பிடத் தவறிய சில விடயங்களும் இருக்கின்றன. இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல்களின் முக்கிய கருப்பொருளே இஸ்ரேலிடமிருந்து இலங்கை இராணுவத்திற்கு எவ்வாறு ஆயுதங்களைத் தருவித்துக் கொள்வது என்பதும், இதற்கு கைமாறாக இலங்கை என்ன செய்யவேண்டும் என்பதும்தான். பேரம்பேசலில் மிகுந்த சாமர்த்தியம் உள்ளவரான வோல்ட்டார்ஸ் பின்வரும் விடயங்களைச் செய்யுமாறு அழுத்தம் கொடுத்தே இஸ்ரேலிடமிருந்தான ஆயுதக் கொள்வனவுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறியிருந்தார், 1. இஸ்ரேலுக்கு இராஜதந்திர அந்தஸ்த்தினை வழங்குவதும் அதனை அங்கீகரிப்பதும் 2. வொயிஸ் ஒப் அமெரிக்காவுக்கான புதிய ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொள்வது 3. அமெரிக்க எண்ணெய்க் கம்பெனிகளுக்கு திருகோணமலைத் துறைமுக எண்ணெய்க் குதங்களை குத்தகைக்குக் கொடுப்பதன் மூலம் துறைமுகத்தை அமெரிக்கச் செல்வாக்கின் கீழ் கொண்டுவருவது. 4. அமெரிக்க கடற்படைக் கப்பல்களின் பாவனைக்கு திருகோணமலைத் துறைமுகத்தினை வழங்குவது என்பனவே அவையாகும்.
  7. ஹமாசுக்கு சரி. பலஸ்தீன மக்கள் எவ்வாறு இந்த தகுதியை இழந்தார்கள். அவர்கள் ஹமாசின் மீது எவ்விதமான அதிகாரமும் இல்லாதவர்கள். இஸ்ரேல் இப்படி மூர்க்கமாக தாக்கும் என தெரிந்தே ஹமாஸ் இஸ்ரேலிய சிவிலியன்களை இலக்கு வைத்தது. காசாவை - கட்டங்கள் இல்லாத கூடார தேசம் tent city ஆக்குவோம் என்கிறார் ஒரு இஸ்ரேலிய அதிகாரி. நீங்கள் நினைக்கிறீர்களா இப்படி ஒரு நிலை வரும் என தெரிந்தும், காஸா மக்கள் ஹமாசின் தாக்குதலை ஆதரித்து இருப்பார்கள் என? இல்லை. ஆகவே இஸ்ரேல் ஹமாசை மட்டும் தாக்கும் அல்லது முடிந்தளவு மக்கள் இழப்பை தவிர்க்கும் வகையில் போர் செய்ய வேண்டும். தென் இஸ்ரேலில் ஹமாஸ் புகுந்து விட்டது என்பதால் அந்த கிராமங்களை யூத மக்களுடன் சேர்த்து இஸ்ரேல் துவம்சம் செய்யவில்லை. இதே அணுகுமுறையை காஸாவிலும் எடுக்கலாம். ஆனால் காஸாவின் carpet bombing செய்கிறார்கள். இது வேணும் என்றே சிவிலியன் இலக்குகளை குறிவைப்பது = யுத்தக்குற்றம்.
  8. சிறப்பான கருத்து......உந்த தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை போட்டுத்தானே எம்மினத்தவர்களையும் அழித்தார்கள் ...... இப்ப தங்கள் அயலவர்களையும் அழிக்கிறார்கள்......எந்தப் பக்கமாய் இருந்தாலும் சரி அப்பாவி மக்களுக்குத்தான் அவலம் எல்லாம்......!
  9. இஸ்ரேல் வெள்ளைப்பொஸ்பரஸ் குண்டுகளை வீசுவதாக இப்பொழுது ஊடகங்களில் செய்தி வருகின்றது.. வெடிக்கும் இடத்தில் கடைசி சொட்டு ஒக்சிசனும் முடியும் வரை எரிந்து தீர்க்கும் மனித உடலில் பட்டால் அவ்விடத்தில் ரசாயன தாக்கம் புரிந்து பொஸ்போரிக் அமிலத்தை உருவாக்கி இறப்பவரின் கடைசி நிமிடம் வரை நரகவேதனையை கொடுக்கும் கொடிய விசக்குண்டு.. ஈழத்தமிழரால் இலகுவில் மறந்து போய்விட முடியாத பெயர் இது.. சிங்கள அரசுக்கும் இவர்கள்தான் இந்த குண்டுகளை வழங்கி வீசும்படி வழிகாட்டி இருப்பார்களோ என்று யோசிக்க தோன்றுகிறது.. எதனாலும் நியாயப்படுத்த முடியாத அரச பயங்கரவாதம் இது.. இந்த அரசபயங்கர வாதத்தினால் பாதிக்கப்படும் ஒவ்வொரு அப்பாவி பாலஸ்த்தீன குழந்தைகளும் மக்களும் இன அழிப்பு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் உறவுகளும் வேறல்ல..
  10. ——- ஒரு இஸ்ரேலிய பெண்ணையும் அவரின் இரு பிள்ளைகளையும் விடுதலை செய்த ஹமாஸ்.
  11. மிகச் சரியாக சொன்னீர்கள் அண்ணா. இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் மக்கள், பெண்கள், குழந்தைகளை பணயம் பிடித்ததோடு மக்களின் தலைகளையும் வெட்டி கொன்று இருக்கிறார்கள். இது மத ரீதியாக போதிக்கபட்ட ஜிஹாத் ஆகும்.
  12. இதில் முரண் கருத்து எதுவும் எனக்கு இல்லை. இஸ்ரேல் ஹமாஸ் போல நடந்து கொள்ளக் கூடாதென முதல் வரியிலேயே சொல்லி விட்டேன். இஸ்ரேலுக்கு, பழி வாங்குவதை விட அதிக சுமையான, பொறுப்பான விடயங்கள் உண்டு. அந்த 38% பற்றி மேலதிக விளக்கம்: "1948 இல் Al Nakba என்ற பலஸ்தீனப் பேரழிவின் பின் (இது இஸ்ரேலிடம் பலஸ்தீன நிலம் முதலில் பறி போன நிகழ்வு) நிகழ்ந்த ஒரு நல்ல விடயம் என்ன?" என்ற கேள்விக்குத் தான் ஹமாஸ் உருவானமை என 38% காசா மாதிரிகள் துலங்கள் காட்டியிருக்கிறார்கள். நேரடியாக ஹமாசை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா என்ற கேள்வியைக் கேட்கவில்லை. இதை, கருத்துக் கணிப்பில் இருக்கும் இன்னும் சில கணிப்புகளோடு சேர்த்துத் தான், பலஸ்தீன மக்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறதென்ற கருத்தைச் சொல்கிறேன். இதன் அர்த்தம், காசாவில் இருக்கும் பலஸ்தீன மக்கள் ஹமாசின் குற்றப் பங்காளிகள் என்று சுட்டிக் காட்டுவதல்ல. ஆனால், நேரம் கிடைக்கும் போது முழு ஆவணத்தையும் வாசித்தீர்களானால், பலஸ்தீனர்கள் தங்கள் சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படுத்தாமல் இந்தச் சிக்கலில் இருந்து மீளவே முடியாதென்று நான் நம்புவதன் அடிப்படையை விளங்கலாம்: ஒரு சாம்பிள் - இரு- நாடுகள் தீர்வுக்கான ஆதரவு - மொத்த பலஸ்தீனர்களிடம் 28%, ஆயுதமே வழி என்று சொல்வோர் ~50%. 2008 இன் பின்னர் ஒரு தேர்தலும் நடக்காத நிலையில், இது போன்ற கருத்துக் கணிப்புகள் தான் பலஸ்தீன மக்களின் எண்ண ஓட்டத்தைக் காட்டுவதாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!
  13. நல்ல கருத்துக்கள். ஆனால் உக்ரேன் விடயத்தில் இந்த அணுகுமுறையும் கருத்துக்களும் ஏனோ மிஸ்ஸிங்? என்ன தைரியம் இருந்தால் அவர்கள் செலன்ஸிகு வாக்கு போடுவார்கள்? செலன்சியின் கொட்டத்தை அடக்க மரியுபோல் மக்களுக்கு அடி போடத்தான் வேண்டும். ஒரு பெரிய நாடு ரஸ்யாவின் பாதுகாப்பை தக்க வைக்க ரஸ்யா செய்வது சரிதான்… இவ்வாறாக உக்ரேனில் நடந்த போர்குற்றங்கள் நியாயப்படுத்த பட்ட போதும் இதே “சிறிலங்கன் ஆமியின் குரல்” உங்கள் மனதில் ஒலித்தல்லவா இருக்க வேண்டும்?
  14. இணைப்புக்கு முதற்கண் நன்றி. கருத்துக்கணிப்பை வாசிக்கிறேன். சில முரண் கருத்துக்கள். 1. உண்மையில் “வெறும்” 38% தான் ஹமாசுக்கும் இஸ்லாமிக் ஜிகாத்துக்கும் ஆதரவு என்பது எனக்கு வியப்பாகவே இருக்கிறது. ஹமாஸ் ஆயுத முனையில் அபாசின் பெட்டாவை காஸாவை விட்டு விரட்டிய பின் அது அங்கே ஒரு சர்வாதிகார ஆட்சியையே நிகழ்த்துகிறது. கிட்டத்தட்ட ஈபி யின் கீழ் நாம் 87-90 வரை இருந்த நிலை. இத்தோடு மேலே நீங்கள் சொன்ன மிக மோசமாக இஸ்ரேலால் வஞ்சிக்கப்பட்டு உள்ளோம் (1967 எல்லைக்கும் மேலான விஸ்தரிப்பு, அல் அக்சா மசூதி பிரச்சனை) போன்ற எண்ணக்கருவும் இருந்தும் கூட 38% தாம் அந்த மக்கள் ஹமாசுக்கு ஆதரவு என்றால் - நிச்சயம் அங்கே 62% (இது சந்திரிக்கா முதல் முறை வென்ற சதவீதம்- மிகபெரிய ஆதரவு நிலை) இஸ்ரேலுடன் சமாதானமாக வாழ விரும்பும் வழியை விரும்புவதாக கொள்ளலாம் அல்லவா? 38% க்காக 62% ஐயும் வழித்துடைப்பது அநியாயம். 2. 100% ஹமாசை ஆதரித்தாலும் - சிவிலியன்களை இலக்கு வைப்பது தவறுதான். போர்குற்றம்தான். மனித குல விரோதச்செயல்தான். இதில் எந்த மாற்று கருத்தும் உங்களுக்கு இருக்காது என நம்புகிறேன். 3. எப்படி ஹமாஸ் இஸ்ரேலை அழித்து முழு நிலமும் தமக்கு வேண்டும் என்று கேட்பது யுத்தத்தை நீடிக்கிறதோ - அதே போல இஸ்ரேலும் பலஸ்தீனத்தின் மிதவாதிகளை பலப்படுத்தாமல் -தனது தொடர் குடியேற்றத்தால் - கிழக்கு ஜெருசலேம் பற்றிய பிடிவாததால் (ஜெருசலேத்த்தை ஜெனிவான போல் இருபகுதியிம் பிரிக்கலாம்) - தீவிரவாதிகளை பலப்படுத்துகிறது என்பதும் உண்மை. 4. இஸ்ரேலை நெகிழ்வுதன்மையை காட்ட உன்னாத, மேற்கும் இதற்கு பங்காளியே. 4. அதே சமயம், இஸ்ரேலும், பலஸ்தீனியர்களும் ஒன்றுபட்டாலும் ஈரானும், ஹிஸ்புலாவும், சிரியாவின் அசாட்டும், ரஸ்யாவும் குழப்பி அடிப்பார்கள். இது முட்டு சந்து என்பதை விட, வெளியேறும் வழி இல்லாத maze (இதற்கு தமிழ் என்ன?). ஆனால் ஒரு ஜனநாயக நாடாக. Euro வில் கால்பந்து விளையாடும் நாடாக, global west இன் அங்கமாக இருக்கும் இஸ்ரேலுக்கு - இதை கையாளும் முறை பற்றி ஒரு கடப்பாடு இருக்கிறது. அருமை.
  15. பயங்கரவாதிகளாக எவரும் பிறப்பதில்லை. பயங்கரவாதிகள் ஆக்கப்படுகிறார்கள். இதனாலேயே இந்த திரிக்குள் எதுவுமே எழுதுவதில்லை. ஆனாலும் எழுதுபவர்களின் கருத்துக்களைப் பார்க்க புல்லரிக்குது.
  16. நீங்கள் சொல்வது சரி ஆனால் அதை பாலஸ்தீன மக்கள் தாக்கப்படாது என்பதை ஹமா சும். பாலஸ்தீன மக்களும் எதிர்பார்க்கும் தகுதிகளை இழந்து விட்டார்கள் இவர்கள் இஸ்ரேலில் மக்களை தாக்கி கொண்டு எங்களை தாக்காதே என்று எப்படி கோர முடியும் ?? எதிர்பார்க்கலாம்?? மேலும் அவ்வாறு இஸ்ரேல் தாக்குதல் செய்ய முற்பட்டால் ஹமாஸ்க்கு அதிகம் பாதிப்பு எற்ப்படாது ஆனால் அதேநேரம் ஹமாஸ் இஸ்ரேலில் பொதுமக்களை தொடர்ந்து தாக்கும் இதன் காரணமாக இஸ்ரேலியார்கள். நாட்டை இழந்து நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான சூழ்நிலை ஏற்படலாம்
  17. இது அவர்கள் கேட்டு பெற்றுக் கொண்டது இல்லையா??? பழைய கதைகள் தேவையற்றது 20 நிமிடங்களில் 5000 ரக்கெட்கள் கொண்டு தாக்கினால். ...இஸ்ரேல். என்ன செய்ய முடியும்??? அமைதியாக இருக்கலாமா?? அப்படி இருந்தால் காமாஸ். என்ன செய்யும்??? நாங்கள் பலசாலிகள் எங்களை எவரும் அடிக்க முடியாது என்பார்கள் எனவே எங்களை விட நீங்கள் பலமிக்கவர்களில்லை என்று சொல்ல வேண்டிய தேவை இஸ்ரேலுக்குண்டு அவர்களின் தாக்குதல் மிகவும் சரியானதாகும்
  18. பாவம், இந்த பாலஸ்தீன மற்றும் ரஷ்ய பயங்கரவாதங்களினால் அநியாயமாக எத்தனை உயிர்கள் பலியாகிவிட்டன!
  19. உண்மையில் இந்த வெள்ளை பொஸ்பரஸ் விடயத்தில் யாழ்கள கருத்தாளர் சிலரின் இரெட்டை வேடம் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒரு சாதாரண கருத்துக்களத்தில் கூட காஸாவில் நடந்தால் ரத்தம் உக்ரேனுக்கு வந்தால் தக்காளி சோஸ் என இரெட்டை நாக்கால் எழுதும் ஆட்களுக்கு - உலக நாடுகள் இரெட்டை வேடம் போடுகிறன என எழுத எந்த அருகதையும் இல்லை.
  20. ——————— வெள்ளை பொஸ்பரசை வீசும் இஸ்ரேலின் செயல் மனிதகுல விரோதமானது. ஆனால் இலங்கை வீசியதையே கண்டுக்காத நாடுகள் இஸ்ரேலை கண்டிக்கும் என்பது அப்பாவித்தனமா எதிர்பார்ப்பு. பிகு இதை சாட்டாக வைத்து ரஸ்யாவை வெள்ளை அடிக்க ஒரு சாரார் கிளம்பி உள்ளனர். உக்ரேனில் ரஸ்யாவும் வெள்ளை பொஸ்பரசை பாவித்தது. பாவிக்கிறது. இதை இங்கே நானும் ரஞ்சித்தும் முன்பே வீடியோ ஆதாரத்தோடு எழுதி உள்ளோம். அப்போ கள்ள மெளனம் சாதித்த யாழ்கள ஊறவுகள் இப்போ எகிறி குதிக்கிறார்கள். வல்லரசுகள் மட்டும் அல்ல, சாதாரண யாழ்கள உறவுகள் கூட மனித உரிமை கோசத்தை தமக்கு ஏற்ற தருணத்துக்கேற்பவே பாவிக்கிறார்கள். காஸாவில் மட்டும் அல்ல உக்ரேனிலும் சாவது மனிதர்கள்தான். இந்த நூற்றாண்டின் மிக குரூரமான நகைச்சுவை இந்த டுவீட்.
  21. மிகவும் கவலைக்குரிய செய்திகள் வருகின்றன. ஆனால் எம்மை அழிக்க துணை போனவர்கள் எம்மை அழித்தவனுடன் கை குலுக்கியவர்கள் நாங்கள் உயிருடன் எரிந்து சாம்பல் ஆகியபோது பார்த்துக் கொண்டு ஊமையாக கைகட்டி நின்றவர்கள் இனியாவது இதனூடாகவாவது எம் அவலங்களையும் பேசட்டும்.
  22. உங்களைவிட போர் அனுபவம் எனக்கு நிறையவே உள்ளது! அதை உங்களுக்கு சொல்லிக்காட்ட வேண்டிய அவசியமும் எனக்கில்லை! ***
  23. Russia has this weapons. We have weapons to wipe out Ukraine a 1000 times over. But we don't, we do not get back at Azov, Zelensky by bомbing innocent civilians indiscriminately Thesame horrible tactics the US deployed in Iraq. Go after HAMAS not Palestinians. This is a warcrime by Israel. The hypocrisy in the west is beyond what I have ever seen. Ukrainian lives are important but not Palestinians? https://twitter.com/i/status/1711351137784217629
  24. 85ம் ஆண்டு இவர் பால்குடியாய் இருந்திருப்பார்😀...பிறகு கொழும்பு வந்து ,வெளிநாடு வந்த இவர் போன்றவர்கள் சொல்வதை வேத வாக்காய் எடுத்து கொள்ளட்டாம் என்று சொல்கிறார்
  25. இதைத் தான் நானும் ஆரம்பத்திலேயே எழுதினேன் ...அவர் ஆரை ஆதரித்தாலும் எனக்கு அது பற்றி அக்கறை இல்லை ...ஆனால் பாதிக்கப்படட இனத்தில் இருந்து கொண்டு எப்படி மற்றவர்களின் இறப்பை ரசிக்க முடிகிறது?...எதிரியே ஆனாலும் அதற்குரிய மரியாதை கொடுங்கள் என சொல்லியவர் தலைவர்...அவரை மாமா என சொல்லி கொண்டு அப்பாவி மக்களது இறப்பை ரசிக்க எப்படி இவர்களுக்கு மனம் வருகுது இவர் மேல் இருந்த மதிப்பு நன்றாக குறைந்து விட்டது ... ஓவராய் புலி பாட்டு பாடுபவர்கள் இப்படி தான் சறுக்குவார்கள் என்று எனக்கு முதலே தெரியும் ...அதுக்காக இவரை துரோகி என்று எல்லாம் சொல்ல மாட்டேன்...அது வால்களின் வேலை
  26. பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக: 1. இஸ்ரேலியர்கள் காட்டும் வரலாற்றுக் காரணம்: இஸ்ரேல், யூதேயா ஆகிய தேசங்கள் அரசர்களின் கீழ் 2000 ஆண்டுகள் முன்பே இருந்திருக்கின்றன. இந்தத் தேசங்களில் வாழ்ந்தோரே யூதர்கள். எனவே தேசமொன்றாக இருந்த மக்கள் யூதர்கள் என்பது உண்மை. மறுவளமாக, பலஸ்தீனம் பல்வேறு பெயர்களில் பலஸ்ரைன் (Palestain), பெரும் சிரியா (Greater Syria), சிரியா பலஸ்தீன், "Mandatory Palestine" எனும் பெயர்களில் பலஸ்தீன் என்ற பிரதேசத்தில் அரபு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் ஒரு தனித் தேசமாக இருக்கவில்லை என்பது யூதர்களின் வாதம். 2. நடைமுறைக் காரணம்: பலஸ்தீனம் ஒரு தேசமாக இருந்திருக்கா விட்டாலும் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த மண்ணை தாய் நிலமாகக் கொள்ள வேண்டும், எனவே இரு நாடுகள் அந்தப் பிரதேசத்தில் உருவாக வேண்டும் என்பது ( கோசான் சொல்லியிருப்பது போல) 90 களில் இருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. எனவே, இரு பகுதிக்கும் உரிமை சமனானது என்பது ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. 3. முட்டுச்சந்து: இரு நாடுகள் உருவாக வேண்டுமானால் இரு பகுதிக்கும் அடிப்படையாக "நிலம்" வேண்டும். இங்கே தான் முட்டிக் கொண்டு நிற்க வேண்டியிருக்கிறது. பலஸ்தீனர்களின் கீழ் இருந்த நிலத்தில் 50% இற்கும்சிறிது அதிகமான பகுதி 1948 இல் ஐ.நா தீர்மானம் மூலம் இஸ்ரேலுக்குப் போனது. இதை ஏற்றுக் கொள்ளவோ, சமாதானமாகப் போகவோ விரும்பாத பலஸ்தீனர்களும், அரபு நாடுகளும் இஸ்ரேலைத் தாக்க முனைந்த போது போர் உருவாகி 1949 இல் மிக அதிக அளவிலான பலஸ்தீனப் பகுதி (78%?) இஸ்ரேல் வசமாகியது. 1967, 6 நாள் யுத்தத்தில் இது இன்னும் அதிகரித்தது. இதில் பாடம் என்னவெனில், ஒவ்வொரு முறையும் பலஸ்தீன கிளர்ச்சியும், அரபு நாடுகளின் தாக்குதலும் நடந்த போதெல்லாம், இஸ்ரேலுக்கு மேலும் அதிக நிலம் கிடைத்திருக்கிறது. அல்லது, மேலும் பாதுகாப்பு என்ற போர்வையில் பலஸ்தீனத்தைக் கட்டுப் படுத்தும் சாட்டுக் கிடைத்திருக்கிறது. இந்த முறையும் இதுவே நடக்கும். அனேகமாக, காசவினுள் இஸ்ரேல் படைகள் நுழையாது. அப்படி நுழைய வேண்டுமென்ற ஹமாசின் ஆசைக்கு இஸ்ரேல் பலியாகாது என நினைக்கிறேன். ஆனால், காசா, மேற்குக் கரை மீதான இஸ்ரேலின் பிடி இன்னும் இறுகும். மிகக் கடினமான ஒரு வாழ் நிலைக்குள் காசா வாழ் பலஸ்தீனர்கள் தள்ளப் படுவர். அவர்களாகவே ஹமாசை எதிர்த்தாலொழிய வழியில்லை என்ற நிலையை ஏற்படுத்த இஸ்ரேல் முயலும்.
  27. இப்படித்தான் அவர்களும் எள்ளி நகையாடியிருப்பார்கள் எம்மினம் முள்ளிவாய்க்காலில் அழித்தொழிக்கப்பட்டபோது! ஆனால் அப்போது எமது மனநிலை எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் யோசித்துவிட்டு எழுதுங்கள்!!
  28. மீண்டும்!! திரியை முழுவதுமாக வாசிக்காமல் வந்து பதில் எழுதுவதே உங்களுக்கு வேலையாகிவிட்டது. இதற்கான பதிலை பிரபாவுடனான கருத்தாடலில் எழுதிவிட்டேன். நன்னியின் சேவை போற்றுதற்குரியது என்பதில் மாற்று கருத்துமில்லை. இவ்வளவு தெரிந்த ஒருவர் ஒரு வஞ்சிக்கப்பட்ட இனத்திற்காக போராடும் ஒரு குழுவை இப்படி விமர்சிப்பதுதான் மனதை நெருடியது! எழுதிவிட்டு, பதியுமுன் அதை சரிபார்க்க பழகவும்.
  29. வேலை வாய்புக்காக இஸ்ரேல் போன தாய்லாந்து நாட்டவரை இறை கோசங்களை எழுப்பியபடி தோட்டம் வெட்டும் கத்தியால் கழுத்தை வெட்ட முயன்ற ஹமாஸ் ஆயுததாரி. 18 தாய்லாந்தினர் கொல்லப்பட்டுள்ளனராம். இன்னும் 11 தாய்லாந்து நாட்டவர் பணயகைதிகளாய் உள்ளனராம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.