Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    15741
    Posts
  2. Justin

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    7051
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    87990
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/17/24 in Posts

  1. இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024 இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் நடக்க இருப்பதாக கூறுகிறார்கள்.இந்த தேர்தலுக்காக சிங்கள கட்சிகள் இப்போதிருந்தே ஆயத்தமாகத் தொடங்கிவிட்டன. ஐக்கிய தேசிய கட்சி ராஜபக்ச கட்சி சார்பாக ரணிலும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் சயித் பிரேமதாசவும் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக அனுர குமாரவும் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.இனிவரும் காலங்களில் இன்னும் புதிதாக யார் வேண்டுமானாலும் களமிறங்கலாம். இதுவரை இலங்கையில் நடந்த எந்த ஒரு தேர்தல்களிலும் நான் வாக்குச் செலுத்தவில்லை.இலங்கை ஜனாதிபதி தேர்தல்கள் சட்டதிட்டங்களைப் பற்றி எதுவும் இதுவரை அறிய முற்படவில்லை. எனவே இந்த வருடம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எந்த சிங்கள கட்சிக்கும் வாக்கு போட்டு பிரயோசனமில்லை.வழமை போன்றே ஏதாவது உத்தரவாதம் தருவார்கள்.இல்லாவிட்டால் வெளியே சொன்னால் சிங்கள மக்கள் இதைச் சாட்டாக வைத்தே எமக்கு வாக்குப் போட மாட்டார்கள் என்று சொல்லி இரகசியம் பேணுவார்கள்.வென்ற பின்பு இப்படி கதைத்ததையே மறந்துவிடுவார்கள். ஆகையினால் அடுத்த தேர்தலில் யாராவது ஒரு தமிழர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் தமிழர்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன். ஆனாலும் இப்போ தான் தெரிகிறது போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை என்றால் இரண்டாவது யாருக்கு புள்ளடி போட்டிருக்கிறார்கள் என்று பார்த்து அதையும் கணக்கிலெடுப்பார்கள் என்கிறார்கள். அப்படியானால் தமிழர் ஒருவர் பொது வேட்பாளராக களமிறங்கி பிரயோசனம் இல்லை.இந்த நிலையில் பொது வேட்பாளராக இரு தமிழர்கள் களமிறங்கி முதலாவதாகவும் இரண்டாவதாவும் இரு தமிழர்களுக்கும் வாக்குப் போட்டால் தமிழர்களின் வாக்குகள் சிங்கள கட்சிகளுக்கு போவதை தடுக்கலாமா? இப்படி செய்வார்களாக இருந்தால் முதலாவது அல்லது இரண்டாவது வேட்பாளரை மலையகத் தமிழர் ஒருவரை நிறுத்தலாம். இதுவரை ஜனாதிபதி தேர்தலுக்காக மக்களை ஒன்று சேர்த்து அவர்களை எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சியும் ஒழுங்குபடுத்தியதாக தெரியவில்லை. வெளிநாடுகளே இலங்கையில் யார் ஜனாதிபதியாக வரப் போகிறார் என்று கருத்துக் கணிப்புகளை நடாத்தி முன்னணியில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள தொடங்கிவிட்டார். ஐரோப்பா அமெரிக்கா போன்றவை ரணிலுக்கு ஆதரவாக மறைமுகமாக பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.எதிரும் புதிருமாக இருந்த இந்தியாவும் ஜேவிபியும் ஒன்றாகியுள்ளனர்.இது யாருமே எதிர் பார்க்க ஒன்று.அரசியலில் வெட்கம் மானம் சூடு சுறணை இருக்கக் கூடாது என்பார்கள்.அதையே தான் இந்தியா செய்துள்ளது. மாலைதீவை விட்ட மாதிரி இலங்கையையும் விட தயாரில்லை என்பதையே இந்தியாவின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. அனுர குமாரவைக் கூப்பிட்டு கதைத்த பின்பும் ஜேவிபி ஆதரவாளர்களிடமிருந்து இந்தியாவுக்கு எதிரான பழைய போக்கு மாறவில்லை என்கிறார்கள். வெளிநாடுகள் தங்களுக்கேற்ற அரசியல் தலைவர்களை கொண்டுவர முயற்சி பண்ணுகிறார்கள்.இதில் அவர்களை குறை கூறி பிரயோசமில்லை. இதே நிலையை அமெரிக்க இந்திய சங்கீதத்துக்கு ஆடாமல் மற்றவர்களை ஆட வைக்க வேண்டும்.
  2. சந்திரிக்கா செம்மணி கொலைகளையும் நடாத்தி நீலனுடன் சேர்ந்து (சிங்கள இனவாதிகளுடனும் சேர்ந்து) தமிழ் மக்களுக்கு தீர்வு தந்திருப்பார் என்பது கனவிலும் நினைத்து பார்க்க முடியாதது.
  3. தனி மனித சுதந்திரம் மற்றும் சர்வாதிகாரம் என்றால் என்ன என்று இங்கே பலருக்கும் இனியாவது புரியட்டும்.
  4. புரியும் ஆனால் புரிந்த மாதிரி காட்டி கொள்ள மாட்டோம்.... புட்டினுடன் இணக்க அரசியல் செய்து தனது செல்வத்தை பெருக்கி ,உயிரையும் காப்பாற்றியிருக்க வேண்டும் ...பிழைக்க தெரியாத மனுசன்
  5. @ஈழப்பிரியன் ஐயா ஆய்வாளர் ஆகிவிட்டார்😃 சிங்கள மக்கள் என்ன செய்வார்கள் என்பது எவருக்கும் தெரியாது!
  6. நீலன் விஷயத்திலோ அல்லது லக்ஸ்மன் கதிர்காமர் விஷயத்திலோ நான் விடுதலைப் புலிகளை வைய மாட்டேன். காரணம் புலிகள் தாம் எடுத்துக்கொண்ட கொள்கைக்கு நேர்மையாய் இருந்தனர் என்ற ஒரே காரணத்தால்த் தான். தமிழரின் தாயகம் தமிழ் ஈழத் தாயகம் என்பதில் உறுதியாக அவர்கள் இருந்ததால் அதற்கு குறைந்த எந்த தீர்வையும் முன்மொழியும் அனைவரும் அவர்களுக்கு துரோகிகளே தன் லட்சியதுக்காக தன்னையும் தன் குடும்பத்தையும் இழந்த தலைவரின் நேர்மை சந்தேகத்துக்கு இடமற்றது அந்தந்த காலத்துக்கு எற்றால் போல் தான் காரியங்கள் நடைபெறும், அதை அந்த காலப்பொருளில் உள்வாங்கிக் கொள்ளல் வேண்டும். இன்று காலம் +நிலைமை வேறு என்பதால் வேறு நிலைப்பட்டுடன் சிந்திக்க வேண்டி உள்ளது
  7. சித்தார்த்தன் பா. உவை எப்படி மறப்பது😂? புளொட்டின் வவுனியா பிசினஸ் பொறுப்பு மாணிக்கதாசும் , சின்ன தாஸ் (அல்லது அலவாங்கு தாஸ்) என்ற அடியாளும். இவர்கள் சேர்க்கும் கப்பக் காசின் பங்கை வாங்க சித்தார்த்தன் கொழும்பிலிருந்து இராணுவ உலங்கு வானூர்தியில் யோசப் முகாமிற்கு வருவார், முகாமை விட்டு வெளியே வரார். வாகனத் தொடரணியாக தாஸ் அணி யோசப் முகாமுக்கு வந்து சித்தார்த்தனிடம் பங்கைக் கொடுத்து விட்டு திரும்பிப் போகும். இந்தச் சடங்கு ஓரிரு மாதங்களுக்கொருமுறை நடக்கும்! இரு தாஸ்களையும் புலிகள் கொன்ற பின்னர், ஊத்தை பவான் உள்ளூர் புளொட் தலைவரானார், அதன் பின்னர் சித்தார்த்தன் கை நனைப்பது கொஞ்சம் குறைந்தது. புலிகள் இல்லாமல் போன பின்னர் வவுனியா வந்து வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்டு, தேர்தலில் வென்று இப்போது "என் வேட்டி வெள்ளை" எனத் திரிகிறார்😎! சம்பந்தரிடம் அரசியல் சார்ந்து முறைப்பாடுகள் இருக்கலாம் . ஆனால், அவர் நிதி ரீதியில் ஊழல்கள் செய்ததாக சிங்களவர்களே சொல்ல மாட்டார்கள். நம் ஆட்கள் தான் காழ்ப்புணர்வினால் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
  8. 1 point
    2007, நான் அத்தொழிற்சாலையில் இணைந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகியிருந்தது. என்னைப்போலவே இங்குவந்து, தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பல இந்தியர்களும், இலங்கையர்களும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலம். வெள்ளை நிறத்தவரின் தொழிற்சாலை, வேலைத்தளத்தில் அணியின் மேலாளர்களில் இருந்து அதியுயர் நிர்வாகத் தலைவர்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர்கள். அவர்களுடன், அவர்கள் பேசும் மொழியினையும், பேசும் சங்கேத வார்த்தைகளும் விளக்கமேயின்றிக் கேட்டுக்கொண்டு, அருகில் இருப்பவன் சிரித்தால், நாமும் சிரித்துக்கொண்டு, வேலைத்தளத்தில் சமூகப் படிகளில் நாம் ஏறலாம் என்று நினைத்திருந்த காலம். எனது வேலைத்தள அணியில் 20 பேர் இருந்தோம். எமது மேலாளர் ஒரு வெள்ளையினத்தவர். சுவிட்ஸர்லாந்தில் பிறந்து, இங்கு வளர்ந்தவர். சிலவேளைகளில் அவர் பேசுவதைக் கிரகிப்பதற்குள் அவர் அடுத்த வசனத்தைத் தொடங்கிருப்பார். புரிந்துகொள்வதற்குச் சிரமப்பட்டுக்கொண்டே பணிபுரிந்த காலம். சிலவேளைகளில் நாம் அவர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆறுதலாய்ப் பேசுவர்கள். அதுகூட சிலவேளை சிரமாகத் தெரிந்தது. என்ன உலகமடா இது என்று சலித்துக்கொண்ட பொழுதுகள். ஆனால், அணியிலிருந்த வெள்ளையர்களை விட நம்மவர் வேலைகளில் சுறுசுறுப்பானவர்கள். ஊரில் கஸ்ட்டப்பட்டு வேலை தேடி, அதனைத் தக்கவைத்துக்கொள்ள அதைவிடக் கஸ்ட்டப்பட்டு வேலை செய்யும் எமக்கு இங்குள்ள வேலை கடிணமானதாகத் தெரியவில்லை. ஆகவே, வேலையென்றால் கூப்பிடுங்கள் இலங்கையர்களையும் இந்தியர்களையும் என்று வெள்ளையர்களே அவ்வப்போது பேசுவது கேட்கும். கடிண உழைப்பாளிகள் என்கிற பெயரும் எமக்கு இருந்தது. அதனால், வழமை போலவே மேலாளரின் செல்லப்பிள்ளைகள் யாரென்பதில் எமக்குள்ப் போட்டி ஏற்படுவதுண்டு. எம்மிடம் வேலை வாங்கலாம் என்று அவர் எண்ணி வந்தபோதிலும், நாம் அதனை ஒரு கெளரவமாக பார்க்க ஆரம்பித்தோம். ஆகவே, எம்மைத்தவிர வேறு எவரும் மேலாளரின் மதிப்பிற்கு பாத்திரமாயிருப்பது எமக்கு எரிச்சலைத் தரும். அந்தக் காலமொன்றில்த்தான் அவன் வந்தான். என்னை விட வயதில் சிறியவன். 26 அல்லது 27 வயதிருக்கலாம். மிகவும் திடகாத்திரமானவன். வெள்ளையினத்தவன். சுருள் சுருளான மயிர்க்கற்றைகள் பொன்னிறத்தில் வளர்ந்திருக்க தனது பெயர் சொல்லி ஒருநாள்க் காலையில் அணியின் கூட்டத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டான். அவன் பற்றி மேலாளர் அறிமுகம் கொடுத்தபோது மனதிற்குள் சிறிய எரிச்சல். "எமக்கெல்லாம் இந்த அறிமுகம் கொடுத்தார்களா, இல்லையே? இவனுக்கு மட்டும் எதற்கு இந்த அறிமுகம்?" என்கிற கேள்வி. விடை எமக்குத் தெரியவில்லை. அணியில் பணிபுரிந்தவர்களில் கீழ்மட்ட வேலைகள், இடைநிலை வேலைகள், உயர் நிலை வேலைகள் என்று மூன்று பிரிவுகளாகாப் பிரிக்கப்பட்டிருந்தோம். இடைநிலை வேலைகளை பெரும்பாலும் இந்தியர்களும் இலங்கையர்களும் செய்துகொள்ள கீழ்மட்ட வேலைகளையும் உயர் மட்ட வேலைகளையும் வெள்ளையர்களே பார்த்துக்கொண்டார்கள். அவனும் கீழ்மட்டத்திலிருந்தே ஆரம்பித்தான். எமக்குக்கீழ் இருக்கிறான் என்பதால் அவன் பற்றி அதிக அக்கறை காண்பிப்பதை நாம் மறந்துவிட்டோம். ஆனால், அடிக்கடி அணிக் கூட்டங்களில் அவனின் பெயர் அடிபடும். அவனது பெயரை அணியின் மேலாளர் உச்சரிக்கும்போது வியப்பும், எரிச்சலும் ஒருங்கே வந்து போகும். ஆனாலும் அவன்குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்று இருந்துவிட்டோம். நாட்கள் செல்லச் செல்ல அவன் அணியில் முக்கியமானவர்களில் ஒருவனாகிப் போனான். கூட்டங்களில் அவன் பேசுவதை மேலாளர் உன்னிப்பாகக் கேட்பது புரிந்தது. அவன் ஈடுபட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து அவர் அடிக்கடி பெருமையுடன் பேசும்பொழுதுகளில் அதே எரிச்சல் வந்து போகும். ஆனால், அவன் குறித்த எமது பார்வைகள் தவறானவை என்பதை அவன் தொடர்ச்சியாக நிரூபித்து வந்தான். இலங்கையில் பொறியியல் படித்துப் பட்டம் பெற்றவன் என்கிற பெருமையும், இங்கிருக்கும் வெள்ளைக்காரனை விடவும் நாம் படித்தவர்கள் என்கிற எண்ணமும் அவனை எம்மிலும் கீழானவனாகப் பார்க்கத் தூண்டியது எமக்கு. அதனாலேயே அவனின் திறமைகளை ஏறெடுத்தும் பார்க்க நாம் நினைக்கவில்லை. ஆனால் எமது எண்ணங்களையும், பெருமைகளையும் அவன் மிக இலகுவாக உடைத்துக்கொண்டே எம்மை நோக்கி வந்துகொண்டிருந்தான். ஒருநாள் திடீரென்று கீழ்மட்ட அணியில் இருந்த அவனை எமது, அதாவது நடுத்தர வர்க்க அணியில் கொண்டு வந்து இணைத்தார் மேலாளர். எமக்கோ தூக்கிவாரிப் போட்டது. "இது எப்படித் தகும்? நாம் படித்தவர்கள் இல்லையா? பண்ணைகளில் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு நின்றவனை எம்மோடு, சரிக்குச் சமமாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். வெள்ளைக்காரன் என்பதால்த்தானே இதுவெல்லாம்?" என்கிற எண்ணம் தலையில் ஏறி அமர்ந்துகொள்ள அவன் மீது தேவையில்லாமல் எரிச்சலை வாரியிறைக்கத் தொடங்கினோம். ஆனால், அவனுக்குத்தான் நாம் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறோம் அல்லது எமக்குள் என்ன பேசிக்கொள்கிறோம் என்பதுபற்றி எதுவும் தெரியாதே? அவனோ எம்மிடம் மிகவும் சகஜமாகப் பழகினான். சில வேளைகளில் எம்மிடமே வந்து சில விடயங்களை எப்படிச் செய்யலாம் என்று கூடக் கேட்பான். விரும்பாதுவிடினும் கூட, அவன் கேட்கும்போது நாம் உதவியிருக்கிறோம். அவனும் நன்றியுடன் சென்றுவிடுவான். சில காலத்தின் பின்னர் இந்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் என்று கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியில் வேலையில் இணைந்தவர்களுக்கு அணியில் மேல்த்தட்டுப் பிரிவில் பதவி உயர்வு கிடைத்தது. அவ்வாறு பதவி உயர்வு கிடைத்துச் சென்றவர்களில் நானும் ஒருவன். மூன்று அல்லது நான்கு வருடங்கள் இருக்கலாம். 2010 வாக்கில் அவனையும் பதவியுயர்வு கொடுத்து எமக்குச் சமனானவனாக ஆக்கி அழகுபார்த்தது நிர்வாகம். இத்தனைக்கும் அவன் எம்மை வெறுக்கவில்லை. நிர்வாகத்திற்கு நெருக்கமானவன் என்பதைத்தவிர அவனை நாம் வெறுப்பதற்கு வேறு எந்த காரணங்களும் எமக்கு இருக்கவில்லை. அவன் குறுகிய காலத்தில் காட்டிய அதீத வளர்ச்சி எமக்குள் அச்சத்தை ஏற்படுத்தியிர்ந்தாலும் கூட, அவன் எமக்குப் போட்டியாக வரலாம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.
  9. அதைவிட அதிர்ச்சியான உண்மை என்ன தெரியுமா ? Electoral Bond Dark Side INDIA கூகிளில் கிண்டி பாருங்க இந்திய மக்கள் மீளவே முடியாத பாரிய யானை பொறி அங்கு நடப்பது ஜனநாயகம் அல்ல ஜனநாயகம் காப்போம் எனும் அரசியல் கொள்ளை கூட்டம்கள் மூலம் மக்கள் அடிமைகள் ஆக்கப்பட்டு பிழிந்து எடுக்கபடுகின்றனர் . இலங்கையும் இன்னும் சில வருடங்களில் அந்த நிலைக்கு வந்து விடும் அப்போது சிங்களவர்களில் பாதி வெளிநாடுகளில் இருக்கும் நம்மவர் போல் .
  10. சரியா சொன்னீர்கள் குழப்ப வேண்டாம்... தென் ஆபிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வந்த இனவழிப்பு சம்பந்தமான வழக்கை பார்த்து இஸ்ரேல் பயப்படவில்லை தொடர்ந்து இனவழிப்பை செய்து கொண்டு தான் இருக்கின்றது இஸ்ரேல் தனது திட்டம் நிறைவடைந்த பின்பு இந்த தாக்குதலை நிறுத்தலாம்... இன்னும்20 வருடங்களின் பின்பு பலஸ்தீனருக்கு எதிராக இனவழிப்பு நடைபெற்றது என இஸ்ரெலே சொல்லி மன்னிப்பு கேட் கலாம் ....இதனால் பாதிக்க பட்ட மக்களுக்கு எதுவும் கிடைக்க போவதில்லை...... கட்டு கட்டாக கடுதாசிகளில் முறைப்பாடுகளை சேகரித்து வைக்கும் ஐ.நா.சபை வைலில் ஆயிரத்தில் ஒர் முறைப்பாடாக இதுவும் சேர்த்து கொள்வார்கள்.... ஆர்மேனியாவில் இனப்படு கொலை நடந்த விடயம் கடுதாசியில் உண்டு என்ன பிர ஜோசனம்...
  11. நடத்துங்கோ ......😀 Arrivals Show all arrivals TIME FLIGHT FROM AIRLINE AIRCRAFT STATUS * All times are in local timezone 11:40 9I101 Chennai (MAA) Alliance Air AT7 Scheduled 12:00 C79405 Sigiriya (GIU) Cinnamon Air CNC Scheduled 11:40 9I101 Chennai (MAA) Alliance Air AT7 Scheduled Departures Show all departures TIME FLIGHT TO AIRLINE AIRCRAFT STATUS * All times are in local timezone 12:15 C79406 Colombo (CMB) Cinnamon Air CNC Scheduled 12:40 9I102 Chennai (MAA) Alliance Air AT7 Scheduled 12:40 9I102 Chennai (MAA) Alliance Air AT7 Scheduled https://www.flightradar24.com/data/airports/jaf
  12. எல்லாம் நம்ம சிறிலங்கா மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை எங்கன்ட புலம் பெயர் மக்களின் உதவியுடன் அதிகமாக்க தான் ...இப்படியான் இலவச ஐடியாக்கள்
  13. இப்படி ஐடியாவை அள்ளி வீசுங்க வருடத்தில் நாலு பள்ளிகூடா லீவுகளுக்கும் எங்களை இங்கு கரண்டி பிடிக்க வைத்து விடுவீர்கள் போல் உள்ளது .😀
  14. எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். அப்ப பகவத் கீதையில் கிருஷ்ணர் சொன்னது பொய் எங்கிறீர்களா ?
  15. ஆம் தமிழ் ஈழம் கிடைக்கவில்லை என்பதாலும் போராடியவர்கள் இல்லை என்பதாலும்
  16. அது க‌ருத்து க‌ணிப்பு இல்லை க‌ருத்து தினிப்பு............2021ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது அண்ண‌ன் சீமான் போட்டியிட்ட‌ தொகுதியில் அண்ண‌ன் சீமான் மூன்றாவ‌து இட‌ம் வ‌ந்தார்.............க‌ருத்து தினிப்பு சொன்ன‌து அண்ண‌ன் சீமானுக்கும் திமுக்கா வேட்ப்பாள‌ர் இவ‌ர்க‌ளுக்கிடையில் க‌டும் போட்டி என்று..........ஆனால் திமுக்கா வேட்ப்பாள‌ர் 48ஆயிர‌ம் ஓட்டு வித்தியாச‌த்தில் வென்றார்.........ஆதிமுக்கா வேட்பாள‌ர‌ விட‌ 2000க்கு குறைவான‌ ஓட்டு அண்ண‌ன் சீமானுக்கு கிடைச்ச‌தால் மூன்றாம் இட‌த்துக்கு வ‌ந்தார்................நான் உந்த‌ க‌ருத்துக் தினிப்பை ந‌ம்புவ‌ன் கிடையாது..............உத்த‌ன‌ கோடி ம‌க்க‌ள் வாழும் நாட்டில் 4கூமுட்டைக‌ளிட‌ம் மைக்கை நீட்டினால் அது உண்மை ஆகி விடுமா............நான் நினைச்சேன் நீங்க‌ள் அர‌சிய‌லில் அறிவுஜீவி என்று இப்ப‌டி எழுதுறீங்க‌ளே அண்ண‌.............. இந்த‌ சின்ன‌ விடைய‌த்தில் ப‌ல‌ குள‌றுப‌டிக‌ள் ந‌ட‌ந்து இருக்கு............விவ‌சாயி சின்ன‌ம் கேட்க்காம‌லே நீங்க‌ளே வைச்சு இருங்கோ என்று தேர்த‌ல் ஆனைய‌ம் வாயிலையே நுழையாத‌ க‌ட்சிக்கு தூக்கி குடுத்த‌வையாம் அவை அரை ச‌ங்கிய‌ல்.............நீதீம‌ன்ற‌த்தில் சின்ன‌த்தை மீண்ட்க்கும் ப‌ணி ந‌ட‌க்குது பாப்போம் எவ‌ள‌து தூர‌ம் கைகொடுக்குது என்று...............
  17. இரண்டாவது இந்தக் கொலைகளால் தமிழரின் போராட்டம் சர்வதேச ரீதியில் அடைந்த நனமைகள் எவை? ஒட்டு மொத்த போராட்டதையே புரட்டிப் போட்ட தீமைகளே விளைந்தது. சொந்த செலவில் தமக்கே சூனியம் வைத்த இந்த செயல்களுக்கு நியாயம் கற்பிப்பவர்கள் நிச்சயமாக தமிழ் மக்களின் எதிரிகளாகவே இருப்பர்.
  18. நவால்னியின் மரணத்திற்கு புட்டினே காரணம் - பைடன் Published By: RAJEEBAN 17 FEB, 2024 | 12:26 PM ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்த எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவால்னியின் மரணத்திற்கு ரஸ்ய ஜனாதிபதியே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார். புட்டினே இதற்கு முழுக்காரணம் என தெரிவித்துள்ள அவர் நான் கடவுளை நம்புகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து எந்த தவறுகளையும் இழைக்கவேண்டாம் புட்டினே காரணம் என அவா தெரிவித்துள்ளார். நவால்னியின் துணிச்சலையும் மீண்டும் ரஸ்யாவிற்கு திரும்பும் முடிவையும் பைடன் பாராட்டியுள்ளார். புட்டின் அரசாங்கத்தின் ஊழல் வன்முறைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் அவர் துணிச்சலாக எதிர்த்தார் என தெரிவித்துள்ள பைடன் இதற்கு பதில் புட்டின் நவோல்னிக்கு நஞ்சூட்டினார், கைதுசெய்தார், போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்குதாக்கல் செய்தார், சிறையில் அடைத்தார் அங்கும் அவர் தனிமையில் வைக்கப்பட்டிருந்தார் என பைடன் தெரிவித்துள்ளார். சிறையிலும் அவர் உண்மையின் குரலாக ஒலித்தார் என பைடன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/176606
  19. பிறந்தநாள் வாழ்த்துகள் நுணா! பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் ஏராளன்.
  20. ஒரு தீர்வு வரைபை வடக்கு கிழக்கு இணைத்து ...எல்லாளன் ஆண்ட பகுதி அனுரதபுரத்தையும். சேர்த்து தருவோம். என்று எழுதலாம் இப்படி எழுதப்படுவதெல்லாம். தீர்வு இல்லை எது நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ அது தான் தீர்வு ஆகும் போராட்டம் வளர்ச்சி பதையில் சென்று கொண்டிருந்த போது அதை குழப்பி அடிக்க. எழுதப்பட்டதே நீலனின். போலித் தீர்வு கடந்த காலங்களில் இது போன்று எழுதப்பட்ட ஒப்பந்தம்கள் நடைமுறை படுத்தப்படாமையால் தான் ஆயுதத்துடன் புலிகள் இயக்கம் தோன்றியது அந்த இயக்கத்தை அழிக்க எழுதப்பட்டது தான் நீலனின் வரைபு தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்குவதற்கு அல்ல என்பது சிறு பிள்ளைகளுக்கும் தெரியும் நீலன் சர்வதேசத்திலும் இலங்கையிலும் செல்வாக்கு உள்ளவராக இருக்கலாம் ஆனால் தீர்வு ஒருபோதும் பெற்று தந்திருக்கமாட்டார். அது எவராலும் முடியாது
  21. 1 point
    இப்பதிவில் கருத்துப் பகிர்ந்து, உணர்வுகளை இங்கு வெளிக்காட்டிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது இனத்தில் லட்சக்கணக்கானோரை இழந்திருக்கிறோம். ஆனால், அவர்களது இறப்பில் வராத துயர‌ம் ஒரு வேற்றினத்தவன் இறக்கும்போது வருவது எப்படிச் சாத்தியம் என்று பலர் இதனைக் கருதலாம் என்கிற தயக்கம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தது. உண்மையென்னவென்றால், எனது இனம் அழிக்கப்பட்ட வலி எனக்கு எப்போதும் அப்படியே இருக்கும். அது மறையாது. அதற்கான வடிகால்கள் தேடித்தான் இன்றுவரை இனம் சார்ந்தும், போராட்டம் சார்ந்தும் எதையாவது எழுதவேண்டும் என்று மனம் விரும்புகிறது. நாம் நடந்து வந்த பாதைகளில் எம்மைப் பாதித்த ஒரு சில வேற்றினத்தவர்களையும் நாம் சந்தித்திருப்போம். அவர்களில் ஒருவன் தான் இவனும். அவன் குறித்து நான் ஆரம்பத்தில் கொண்டிருந்த தப்பபிப்பிராயமும் இதனை எழுத என்னைத் தூண்டியிருக்கலாம். மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள் !
  22. அப்படி என்றால் இந்த மாபெரும் (?) தமிழரசு கட்சி சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் இருக்குறது என்று சொல்லுகிறீர்கள். மிகவும் சரியான கருத்து. அநேகமானோர் அவரைப்பற்றி எதிர்மறையான எண்ணத்தில் இருப்பதால் அவர்களால் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
  23. இதை ஏன் நம்பக் கஷ்டப் படுகிறீர்கள்😅? புலிகள் விரும்பிய தீர்வல்லாமல் ஒரு தீர்வுப் பொதியை சந்திரிக்காவுடன் சேர்ந்து நீலன் தயாரிக்க முயன்றார். அவருக்கு மேற்கின் ராஜதந்திர மட்டங்களிலும் மரியாதை இருந்தது (அவர் ஒரு அரசியலமைப்பு நிபுணர் என்பதால்). இது புலிகளைக் கோபப் படுத்தா விட்டால் வேறெது கோபப் படுத்தியிருக்கும் என்கிறீர்கள்? அமிர் இப்படி தானே கோபமூட்டினார்?
  24. 2000 களில் வடக்கு கிழக்கில் தமிழ் பா.உ என்றால் அவர்களது பணிப் பட்டியல் மிகக் குறுகியது: காசு வாங்கிக் கொண்டு அரச வேலை எடுத்துக் கொடுத்தல் பொலிஸ் பிடித்தால் வெளியே எடுத்து விடுதல் (இதற்கும் கூலி தான்). வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து காசுக்கு ஆட்களை வெளியே எடுத்து விட்டு வன்னியின் முன்னாள் பா.உ வினோகராதலிங்கம் போன்றோர் கோடிக் கணக்கில் உழைத்தனர். இது போன்ற கோல்மால் வேலைகளில் ஈடுபடாமல் இருந்த ஓரிருவரில் சம்பந்தரும் அடங்குவார். இந்த நிலையில் இருந்து, தமிழ் பா.உ என்றால் தீர்வு முயற்சியில் முழுமையாக ஈடு பட வேண்டுமென்ற புதிய தராததரத்தை அறிமுகம் செய்தது சுமந்திரன் என நினைக்கிறேன். 90 களில், இதே போன்ற ஒரு முயற்சியை தேசியப் பட்டியல் மூலம் உள்வாங்கப் பட்ட நீலன் திருச்செல்வமும் செய்ய முயன்று, பின் ஆதரவில்லாமல் வெறுத்துப் போய் விலகினார், பின்னர் புலிகளால் கொல்லவும் பட்டார். அவர் செய்ததெல்லாம், சந்திரிகாவுடனான தனிப் பட்ட நட்பைப் பாவித்து அந்த நேரம் அரசியலைமைப்பு மாற்றம் மூலம் தீர்வுக்கு முயன்றமை தான்.
  25. 1 point
    உங்களுடன் பயணம் செய்த சக தொழிலாழனை நண்பனாக ஏற்று அவரை எங்களுக்கு அறிமுகமாக்கி உருவகம் கொடுத்து இறுதியில் எம்மையும் அவருக்காகப் வேண்டுதல் செய்ய வைத்துவிட்டீர்கள் அவரது ஆன்மா வீடுபேறடைய மனமார வேண்டுகிறேன். யாரோ கண்காணாத ஒருவருக்காக மனங்கலங்கினால் அங்கு மனிதம் வெல்கின்றது என அர்த்தப்படும்.
  26. இதைப் பற்றி பல இடங்களில் விவாதித்திருப்பதால் மீள உரைத்தல் அலுப்புத்தரலாம்: ஆனால் இந்தப் பின் கதவால் வந்தார்கள் என்ற கருத்துக் கூட ஒரு மென்மையான சதிக்கதையே தவிர ஆதாரங்கள் கொண்ட கருத்துக்கள் , சந்தேகங்கள் அல்ல. என்னைப் பொறுத்த வரை, காழ்ப்புணர்வு தான் இவற்றின் மிக ஆழமான வேர். "போரை, ஆயுத வழியை அரசியலுக்கு வரமுதலே ஆதரிக்கவில்லை" என்று சுமந்திரன் சொல்வதை அந்த வழியில் தான் தமக்கு பிழைப்பு இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருப்போர் அச்சத்துடன் பார்ப்பதும் இன்னொரு காரணம். ஆனால், முதலில் தேசியப் பட்டியலில் வந்தவர் அதன் பின்னர் இரு தேர்தல்களில் அதே தீவிர தேசியம் சாராத கொள்கையைச் சொல்லியும் வென்றார் அல்லவா? எனவே, தாயகத்தில் இருப்போரின் முடிவுக்கு மதிப்பளித்து அவர்களை முடிவு செய்ய விட வேண்டியான். இத்தகைய தர்க்க ரீதியான முடிவுகளை எடுக்க முடியாமல் காழ்ப்பிலும், வெறுப்பிலும் உழல்வோர், பூடகமாக சுமந்திரன் வாழ்க்கை முடிவு பற்றியெல்லாம் எழுதி தங்கள் இருண்ட ஆன்மாவைத் தான் வெளிக்காட்டிக் கொள்கிறார்கள்.
  27. @Justin @Kandiah57 எனது பார்வையில், கடந்த 40 ஆண்டுகளாக சுயமாக சிந்திக்கும் திறமையான அரசியல்வாதிகள் தமிழ் அரசியல் பரப்பில் விரும்பதகாதவர்களாகவே உள்ளனர். அவ்வாறான அரசியல்வாதிகள், கல்விமான்கள் பலர் அரச ஆயுதப்படையினராலோ, தமிழ் போராளிக்குழுவினர்களாலேயோ படுகொலை செய்யப்பட்ட வரலாறே உள்ளது. 2009 ன் பின்னர் கூட சுயமாக சிந்திக்கும் அரசியல்வாதிகள் வெறுப்புடன் பார்க்கப்படுபவர்களாகவே உள்ளனர். அவ்வாறாக சுயமாக சிந்திக்கும் அரசியல்வாதிகளை வளரவிட்டால் அவர்கள் கடந்த கால வரலாற்றை நேர்மையுடன் அணுகி தவறுகளை கேள்விகுட்படுத்துவார்கள் என்ற அச்சம் பலரை வாட்டுவதால் இந்த நிலை தொடர்கிறது. இந்த நிலை தொடரும் வரை தமிழரின் அரசியல் நிலை மேலும் மேலும் சிங்கள இனவாதிகளின் விருப்பத்தை பூர்ததி செய்யும் வகையிலான பின்னடைவையே நோக்கிய பாதையிலேயே தொடர்ந்து பயணிக்கும்.
  28. முதலில் ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன் நான் அறிவில் சிறியவன்,உங்களை விட அறிவில் சிறியவன் நான் சரி என்று நினைப்பது உங்களுக்கு பிழையாக. தெரியும் இது சாதாரணமானது ஜேர்மனியில் ஒவ்வொரு கட்சியும். ஒவ்வொரு கிராமங்களிலும் கட்சியின் கிளைகளை நிறுவிக்கொண்டு அங்குள்ள இளைஞர்களுக்கு தலைவர் பொருளாளர் செயலாளர் அங்கத்துவம்,.போன்ற பதவிகளை கொடுத்து வைத்து உள்ளது ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் இரண்டு மூன்று பேர் தேசிய மாகாநாட்டில் பங்கு பற்றி வாக்கு போட்டு தலைவர் பொருளாளர் செயலாளர்..........போன்றவர்களை தெரிவு செய்வார்கள் Berlin Düsseldorf Dortmund, போன்ற மாநகரங்களில். நடக்கும் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது உண்டு இந்த கிராமங்களின். தலைவர்கள் தான் நாளடைவில் நகரம் மாநிலம் நாட்டு தலைவர்களாக பதவியேற்று இருக்கிறார்கள் அனேகமாக இங்கே மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தவர்கள் தான் பிரதமர் பதவியேற்று இருக்கிறார்கள் தற்போதைய பிரதமர் கூட ஒரு கிராமத்தில் சாதாரண அங்கத்துவம் வகித்து. மாநில முதல்வர் மத்திய அமைச்சர் நாட்டின் பிரதமர் பதவி வகிக்கிறார் நான் அறிந்த வகையில் எவருமே திடீரென ஒடிவந்து மாநில அரசில் சரி மத்திய அரசில் சரி அல்லது எந்தவொரு அரசியல் கட்சியில் சரி. பதவியேற்று கொள்ளவில்லை அது முடியாத காரியம் கிராமங்களில் இருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து அனுபவங்களை பெற்று மாநில மத்திய அரசுகளில். பதவி வகிக்கிறார்கள் 65 வயதுக்கு மேல் ஐனதிபதி பதவி தவிர மற்ற பதவிகளில் இருப்பது இல்லை தங்களாகவே வெளியோறி விடுவார்கள் தமிழரசு கட்சிக்கு கிராமங்களில் கிளைகள். உண்டா?? இல்லையென்றால் ஏன் நிறுவ இல்லை??? யாழ்ப்பாணம் என்ற மாநகருக்கு தமிழரசு கட்சியின் தலைவர் பொருளாளர் செயலாளர் யார்??? அங்கத்துவம் எத்தனை பேர உண்டு”?? கைதடி யாழ்ப்பாணத்தில். பெரிய கிராமம் அங்கே எந்த தமிழ் கட்சியின் கிளைகளுமில்லை ஒவ்வொரு கிராமத்திலும் கிளைகளை நிறுவும்போது அங்கே உள்ள இளைஞர்களுக்கு பதவிகள் வழங்க வேண்டும் பொறுப்பு வழங்க வேண்டும் இவற்றை தவிர்ப்பது யார் ??? எனது அப்பா சொன்னார் இங்கே பார் படிக்கும் போது வேலைகளை பழக வேண்டும் அப்போ தான் எனக்கு பின் இந்த தோட்டம் துரவுகளை பார்க்க முடியும் உனக்கு ஒன்றும் தெரியாது விடில் எல்லாம் சீராழிந்து போகும் அதாவது அழிவடையும் நாங்கள் ஒரு சிறு குடும்பம் இந்த பெரிய தமிழ் அமைப்பு தமிழரசு கட்சி அழிந்து போகாமல் இருக்க என்ன செய்துள்ளனர்??? அல்லது வளர்ச்சியடைய என்ன திட்டங்கள் உண்டு?? நீங்கள் வாய்ப்புகள் தட்டி பறிக்கப்படுகிறது என்பதை உங்களை அறியாமல் ஒத்துக் கொண்டுள்ளீர்கள் நன்றி இப்படி தலைவர் பிரபாகரன் நினைத்து இருந்தால் 30 ஆண்டுகள் போராடி இருக்க முடியாது
  29. https://www.bbc.com/news/live/world-68316979?src_origin=BBCS_BBC மிக அதிர்ச்சியான செய்தி. இறுதியாக நஞ்சூட்டப் பட்டு சிகிச்சைக்காக ஜேர்மனிக்கு கொண்டு செல்லப் பட்டுக் குணமான பின்னர், அங்கேயே தங்கியிருக்க அவருக்கு வாய்ப்புகள் இருந்தன. "ரஷ்யாவுக்கு வெளியே இருந்து எதுவும் செய்ய முடியாது" என்று மீண்டும் மொஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவர் நஞ்சூட்டப் பட்டு, ஆபத்தான நிலையில் இருந்தமை உலகச் செய்திகளாக வெளிவந்திருந்த நிலையிலும், "நீதிமன்றிற்கு வழக்கிற்கு வரத் தவறினார்" என்று உடனே கைது செய்து இரண்டு சிறைத் தண்டனைகள் கொடுத்திருந்தார்கள். துணிவான ஒரு மனிதர், இப்படியானவர்களை இப்போது மேற்கு நாடுகளில் கூட காண இயலாது!
  30. இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் 😂(நெடுக்கரிடம் இப்படி முன்வரக் காத்திருக்கும் அரசியல் ஆர்வமுள்ள, ஆனால் தடுக்கப் படும் அடுத்த தலைமுறை யார் எனக் கேட்டேன், பதில் கிடைக்கவில்லை. எனவே உங்களிடம் கேட்கிறேன்) மாவை வாரிசு அரசியல் செய்யும் சுய நல அரசியல் வாதி. சுமந்திரன் இப்படி இளையோரை அரசியலில் முன்னேற விடாமல் தடுத்த ஆதாரம், செய்திகள் எவையாவது உண்டா? மாறாக, அம்பிகா சற்குணநாதனை பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் முகமாக வேட்பாளராக்க முயன்ற போது, அவரை இணையத்தில் பாலியல் ரீதியாகக் கூட திட்டி ஒதுங்க வைத்தது சுமந்திரனின் எதிராளிகள். இதற்கு நிறைய ஆதாரங்கள் யாழ் களத்திலேயே செய்திகளாக இருக்கின்றன. (இன்னொரு விடயம், சுமந்திரன் தமிழ் தேசிய அரசியலுக்குக் கொண்டு வந்த இளையவரான சாணக்கியனையும் "அவர் தமிழரல்ல, கிறிஸ்தவ மதம் மாறி" என்று திட்டியவர்கள் இந்த திரியில் நிற்கிறார்கள்!) எனவே, எப்படி சுமந்திரன் இளையோரைத் தடுக்கிறார் என விளக்குங்கள்!
  31. மேலே விளையாடும் மான்களைப் பார்க்கும் ஜாகுவார்ப்புலி ..........மகிழ்ச்சிக்கும் மரணத்திற்கும் அதிக தூரமில்லை ......! 😂
  32. நான் சுமத்திரனை மற்றவர்கள் அவரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்து அணுகாமல் சுமத்திரன் தன் வாயால் என்ன தான் சொல்கிறார் என்பதை அவர் அரசியலுக்கு வந்த காலம் முதல் கொடுத்த பத்திரிகை, தொலைக்காட்சிப் பேட்டிகள் மூலம் மட்டுமே அணுகியிருந்தேன். காய்தல் உவர்தல் இன்றி நான் கவனித்ததில் என்னைப் பொறுத்த வரையில் சுமந்திரன் 1) தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் இப்பொழுது இருப்பதை விட ஒரு படி ஏனும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்புபவர் 2) இப்போதைக்கு அடைய முடியாத தமிழ்க் கனவைக் காண்பவர் அல்லர். 3) லிபரல் கொள்கை கொண்டவர், வலது சாரி மனநிலை இல்லாதவர் ஆகவே one way thinking இல்லாதவர். Critical thinking ability நன்கே உண்டு 4) தமிழனாக உணரும் அதே நேரம் இலங்கையனாகவும் உணர்கின்றார் 5)இந்திய எதிர்ப்பு மனநிலை உள்ளவர் 6) மேற்குக்கு விசுவாசமானவர் 7) காசுக்காக அவர் அரசியல் செய்யவில்லை 8) சட்டம் தெரிந்து இருப்பதால் உள்குத்து வேலைகளை சட்டப்படி எப்படி செய்வது என்று தெரியும் 9) சுமத்திரனின் பலம் தெளிவான அவரின் விளங்கப்படுத்தும் திறமை 10) இவர் செய்த தவறு இனப்படுகொலை விசாரணை விஷயத்தில் இலங்கை அரசு தப்பிக்க உதவியாய் இருந்தது ( அதையும் சட்ட வியாக்கியானம் செய்து தான் தவறு செய்யவில்லை என்று விளங்கப்படுத்தி இருப்பார் 😭😭) 11) தி மு க அனுதாபி
  33. 1 point
    நான் பணிபுரியும் தொழிற்சாலையிலிருந்து அவன் ஏறக்குறைய 100 கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் இன்னொரு கிளையில் பணிபுரிய ஆரம்பித்திருந்தான். இயல்பாகவே நட்பாகவும், மிகுந்த தோழமையோடும் பழகும் அவனுக்கு போகுமிடமெல்லாம் நண்பர்களை உருவாக்கிக்கொள்வதென்பது கடிணமானதாக ஒருபோதும் இருந்ததில்லை. ஏதாவது பயிற்சிநெறிக்காக அவனது தொழிற்சாலைக்குச் செல்லும்போது வணக்கம் சொல்லிக்கொள்வோம். அவனது சகோதரன் என்னுடைய அணியில் பணிபுரிவதால் இடைக்கிடையே அவன் குறித்து விசாரித்துக்கொள்வேன். எமக்குள்ளான பிரச்சினைகள் குறித்து அவன் தனது இளைய சகோதரனுக்குச் சொல்லியிருக்கலாம். ஆகவே, நான் அவனுடன் பேசும்போது சில விடயங்கள் குறித்து என்னிடம் கேட்பான் அவனது இளைய சகோதரன். இப்படியே கழிந்துசென்ற சில வருடங்களில் அவன் ஒரு வியட்நாமியப் பெண்ணை மணமுடித்துவிட்டான் என்றும், தொழிற்சாலைக்கு அருகிலேயே, கடற்கரையினை அண்டிய வீடொன்றில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான் என்றும் அறிந்தபோது சந்தோசமாக இருந்தது. தனக்குப் பிடித்த இடத்தில், பிடித்த பெண்ணுடன் மகிழ்வாக வாழ்வதென்பது எல்லோருக்கும் கிடைக்கக் கூடியது அல்லவே, அதுதான் அந்த மகிழ்ச்சி என்று வைத்துக்கொள்ளுங்கள்.
  34. 1 point
    2012 இலிருந்து 2015 வரையான காலப்பகுதியில் அவன் எமக்குப் பொறுப்பாகவிருந்தான். எமக்குத்தான் அவனுடன் பேசப் பிடிக்கவில்லையாயினும், அவன் என்றும்போல சகஜமாகவே பழகினான். சிறிது காலம் செல்லச் செல்ல அவன் மீதிருந்த வெறுப்பும், கோபமும் மறையத் தொடங்கியது. அவனுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்கிற நிலை வந்தபின்னர் வேறு வழி தெரியவில்லை எனக்கு. மற்றைய இரு இந்தியர்களும் அவனை சிறிதும் சட்டை செய்யவில்லை, அவனுக்கும் அது நன்றாகவே புரிந்தது. அனுபவத்தாலும், அறிவிலும் நாம் அவனைக் காட்டிலும் சிறந்தவர்கள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும், ஆகவே அவனும் அவர்களது நடத்தைபற்றிக் கண்டும் காணாதவன் போலச் சென்றுவிடுவான். அவனுடன் ஓரளவிற்கேனும் பேசுபவன் என்கிற ரீதியில் என்னுடன் வந்து அவ்வப்போது பேசுவான். அவ்வாறான வேளைகளில் அவனது இன்னொரு பக்கம் குறித்த விடயங்கள் சிலவற்றை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. மலையேறுதல், ஸ்கேட் போர்டிங் எனப்படும் மட்டைகளில் ஓடுதல் போன்ற விளையாட்டுக்கள் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன. ஆசியாவின் உணவை விரும்பிச் சாப்பிடும் அவனுக்கு ஆசியப் பெண்களையும் பிடிக்கும் என்பதும் எனக்குத் தெரியவந்தது. தொழிற்சாலையின் வினைத்திறன் அதிகரிக்கும் செயற்பாடுகளில் அவன் எடுத்த முயற்சிகளுக்கு என்னாலான உதவிகளை வழங்கினேன். அவனோடு தொடர்ந்தும் முரண்பட்டுக்கொண்டு பயணிப்பதில் பயனில்லை என்பதும் புரிந்தது. தொழிற்சாலையின் வருடாந்த கிறிஸ்துமஸ் நிகழ்வுகள், ஏனைய கொண்டாட்டங்களில் அவன் கலந்துகொள்வான். நானும் அடிக்கடி அங்கு சமூகமளிப்பதால் அவனது வேலைக்குப் புறம்பான வாழ்வுபற்றியும் அறிய முடிந்தது. சில காலம் எமது தொழிற்சாலையில் இருந்துவிட்டு இதே நிறுவனத்தின் இன்னொரு தொழிற்சாலைக்கு மாற்றலாகிப்போனான் அவன். அவனது வளர்ச்சிபற்றி எனக்குள் இருந்த பொறாமையோ, அல்லது வெறுப்போ அப்போது முற்றாக மறைந்திருக்க, அவன் பற்றி அவ்வப்போது பேசிக்கொள்வதுடன் அவன்பற்றிய எனது சிந்தனைகள் நின்றுபோகும். மாதத்தில் ஒருமுறையாவது எமது தொழிற்சாலைக்கு வருவான். வந்தால், அனைவருடனும் சிரித்துப் பேசுவான். தவறாமல் என்னிடம் வந்து "எப்படியிருக்கிறாய் நண்பா?" என்றுவிட்டுச் சிரிப்பான். "இருக்கிறேன், நீ எப்படி?" என்று கேட்பேன். "உனக்குத் தெரியும்தானே என்னைப்பற்றி? எதனையும் சீரியசாக எடுக்கமாட்டேன். வாறது வரட்டும் , பார்க்கலாம் என்று இருக்கிறேன்" என்று சொல்வான். அவனது இளைய சகோதரன் அப்போது எமது தொழிற்சாலையில் பணிபுரியத் தொடங்கியிருந்தான். எனது அணியில் அவன் இடம்பெற்றிருந்ததால், அவனது சகோதரன் பற்றி அடிக்கடி கேட்டுக்கொள்வேன்.
  35. 1 point
    ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் சென்றிருக்கலாம், 2012 என்று ஞாபகம். எமக்கு அடுத்த நிலைக்கான பதவி ஒன்று வெற்றிடமாகவ வரவே நானும் இன்னும் இரு இந்தியர்களும் அந்த நிலைக்கு விண்ணப்பித்தோம். 6 வருடங்களாக அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதால் அனுபவமும், தேர்ச்சியும், ஆங்கிலத்தில் ஓரளவிற்குச் சரளமாகப் பேசும் வல்லமையும் வந்து சேர்ந்துவிட்டதால், நேர்முகப்பரீட்சையில் இலகுவாக சித்தியடைந்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன். நேர்முகப் பரீட்சை நாள். வீட்டில் நான் செய்த தயார்ப்படுத்தல்களும், என்னைவிட வேறு எவரும் இந்தப் பதவிக்குத் தகுதியற்றவர்கள் இல்லை என்கிற அகம்பாவமும் ஒன்றுசேர நேர்முகப் பரீட்சையினை எதிர்கொண்டேன். ஆனால், அங்கும் ஒரு சிக்கல் இருந்தது. எனது அணியில் எனக்கு சற்று மேலான பதவியில் இருந்து பின்னர் மேற்பதவியொன்றில் பணிபுரிந்த ஒருவனும் நேர்முகப் பரீட்சைக்கான மூன்று தேர்வாளர்களில் ஒருவனாக இருந்தான். அவனுடன் அடிக்கடி நான் முரண்பட்டுக்கொண்டது நினைவில் வந்து போகவே அன்று காலையில் இருந்த அகம்பாவம் முற்றாகக் களைந்துபோக, எச்சரிக்கையுணர்வு மனதில் குடிபுகுந்து கொண்டது. நேர்முகத் தேர்வு கடிணமானதாக இருக்கவில்லை எனக்கு. எல்லாமே தெரிந்த விடயங்கள் தான். முடிந்தவரையில் மிகவும் நீண்ட பதில்களை அளித்தேன். "போதும் அடுத்த கேள்விக்குப் போகலாம்" என்று தேர்வாளர்களே இடைமறித்த சமயங்களும் இருந்தது. சுமார் 45 நிமிடங்கள் பேசியிருப்பேன், மிகுந்த நம்பிக்கையுடன், தேர்வு அறையினை விட்டு வெளியே வந்தேன். மறுநாள் என்னுடன் அதே பதவிக்கு விண்ணப்பித்த இரு இந்தியர்களையும் சந்தித்தபோது, என்னைப்போலவே தாமும் சிறப்பாகச் செய்ததாகக் கூறியபோதும் எனக்குள் இருந்த நம்பிக்கை சிறிதும் அசையவில்லை. ஆனால், அன்று மாலையே திடீரென்று மனதில் இடி வீழ்ந்தது போலாகிவிட்டது. நாம் விண்ணப்பித்த அதே பதவிக்கு அவனும் விண்ணப்பித்திருந்தான் என்பதும், அவனும் மிகவும் திறமையாக நேர்முகத் தேர்வைச் செய்தான் என்பதும் எனக்குத் தெரிய வந்தது. நம்பமுடியவில்லை. "இது எப்படிச் சாத்தியம்? நாம் விண்ணப்பிக்கும் பதவி எம்மைப்போன்ற அனுபவம் உள்ளோருக்கானது. இவனோ சின்னப் பையன், எமது அனுபவத்துடன் ஒப்பிடும்போது, மிகக் குறைந்த அனுபவத்தைப் பெற்றிருந்தவன். இவனை நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருக்கவே கூடாது" என்று மனம் சொல்லியது. அடுத்தவாரம் நேர்முகத் தேர்வின் முடிவுகள் வெளிவரவே நாம் மனமுடைந்து போனோம். எவரும் எதிர்பார்க்காதிருக்க, அவனுக்கு அந்தப் பதவியினை நிர்வாகம் கொடுத்தது மட்டுமல்லாமல் அவனையே எமக்குப் பொறுப்பான மேலாளனாகவும் ஆக்கியது. பெருத்த கோபமும், அதிர்ச்சியும், எரிச்சலும் வந்து மனதில் குடிகொண்டது. இந்தியர்களையும், இலங்கையனான என்னையும் வேண்டுமென்றே தவிர்த்து தமது இனத்தவனை பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள் என்று எமக்குள் பேசத் தொடங்கினோம். இது ஓரளவிற்கு உண்மை என்பதை பின்வந்த நாட்களில் எம்மால் உணரக் கூடியதாக இருந்தது. அவனுக்குப் பதவியுயர்வு கொடுத்து சில மாதங்களின் பின்னர் நேர்முகத் தேர்வில் தேர்வாளனாகக் கலந்துகொண்டவனுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. தென்கொரியாவைச் சேர்ந்தவன். அங்கு பிறந்திருப்பினும் மிகச் சிறிய வயதிலேயே அவுஸ்த்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்துவிட்டவன். இயல்பான இனவாதி. குறிப்பாக இந்தியர்களையும், இலங்கையர்களையும் வெளிப்படையாகவே வெறுப்பவன். என்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போது எதேச்சையாக, "அவனை நாம் தான் அப்பதவியில் அமர்த்தினோம். அப்பதிவியே அவனுக்காக உருவாக்கப்பட்டதுதான். அவனை இன்னும் மேல்நோக்கி எடுத்துச் செல்வதே எமது நோக்கம்" என்று மிகச் சாதாரணமாகக் கூறினான். "அப்படியானால் எமது நிலை என்ன?" என்று சற்றுக் கோபத்துடன் கேட்டேன். "உனது நிலையா? நீயும் அவனும் ஒன்றா?" என்று அவன் என்னிடம் கேட்டான். அதன் பின்னர் என்னிடம் கூறுவதற்கு எதுவுமே இருக்கவில்லை.
  36. பாரதிய ஜனதாவில் இருந்து பிரிந்த ஒருவர பெயர் sri வீர ரெட்டி முதன் முதலா தேர்தலில் போட்டி போடுகிறார்கள் அவர்கள் விவசாயி சின்னத்தை கேட்டு இருக்கிறார்கள் கொடுத்தார் களா இல்லியா என்பது இன்னும் உறுதியாகவில்லை நாளை தெரியும் என்கிறார்கள் . இதில் பகிடி என்னவென்றால் இவர்கள் முதலில் கேட்டது புலி சின்னம் தேர்தல் ஆணையம் உயிருடன் உள்ள சின்னம் கொடுக்க முடியாது விவசாயி சின்னத்தை ஒதுக்கியது அந்த சின்னத்தில் இரண்டு முறை போட்டியிட்டு வருமான கணக்கு வழக்கு விபரங்கள் தேர்தல் ஆணையகத்துக்கு சரியாக காட்டபட்டு இருந்தால் அந்த கட்சியின் சின்னத்தை மற்றைய லெட்டர் பேடு கட்சிக்கு எழுந்தமானமாய் கொடுக்க முடியாது . கதை இங்கு வேறு நான் நினைக்கிறன் அந்த சின்னத்தில் ஐந்து முறைக்கு மேல் போட்டியிட்டுள்ளார்கள் கடைசியாக 3௦ லட்சம் வாக்களார்கள் அந்த சின்னத்துக்கு வாக்கு அளித்துள்ளார்கள் . அது சரி சமிபத்தில் சீமானின் தம்பிகளின் வீடுகளில் nia ஏன் ரெய்டு அடித்தது அதுவும் இப்படியான தேர்தல் நேரம் ? இப்ப உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறன் . அதுசரி சீமானின் தம்பி பையன் இந்த பக்கம் வருவதில் லையா ? கொசிப்பு அந்த sri வீர ரெட்டி தமிழக முக்கிய அரசியல்வாதியின் உறவினர் என்கிறார்கள் செய்தி உறுதிபடுதப்டவில்லை நாளை லண்டன் அதிகாலை நேரம் செய்தி உண்மைத்தன்மை வெளிவரும் என்கிறார்கள் உண்மையானால் தமிழ்நாடு சுனமியாகும் .
  37. காதலர்தின கருத்தோவியங்கள். 😂 🤣
  38. ஆரம்ப கணிப்புக்களில் கடைசி நேர கருத்து கணிப்புக்கள் தல கீலாக்கிய பல சம்பவங்கள் உள்ளன சங்கி உள்ளே வந்தால் அவ்வளவுதான் தமிழ்நாடு .சீமான் மீண்டும் மீண்டும் கூட்டனி இல்லை இல்லை என்கிறார் அதுதான் அவரின் பலவீனம் . விஜய் என்ற கூத்தாடியை உதயநிதிக்கு பதிலா பல லட்சம் கோடி கொடுத்து அரசியலில் உள்ளே விட்டு இருக்கிறார்கள் .பொறுத்து இருந்து பார்ப்பம் பொப் கொர்னுடன் .
  39. இனி திமுகா என்ற கட்சி தமிழ்நாட்டில் இருக்குமா என்பதே சந்தேகம்தான் குடும்ப ஆட்ச்சிக்கு எதிராக கட்சிக்காரர்களே வெம்பி கொண்டு இருக்கிறார்கள் 2௦௦க்கு காசுக்கு போனவர்களே புரியாணி அண்டாவை துக்கிக்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் . வரும் தேர்தலில் அண்ணாமலை பாரிய அறுவடையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார் போற போக்கை பார்த்தால் ஸ்டாலின் சிறை செல்வதை தடுக்க முடியாது போல் உள்ளது .
  40. ஆயுத பயங்கர கொலைகளை செய்தவர்களை அரசியல் செய்பவர்களுடன் ஒப்பிட்டு ஆயுத பயங்கரவாதத்தை இது பரவாயில்லை என்ற வெள்ளை அடிக்கும் முயற்ச்சி அபாயகரமானது. சுரேஷ் மண்டையில் போட்டு தமிழர்களை கொன்றவர் தானே ☹️ நூறு வீதம் உண்மை
  41. சுரேஷ், செல்வம் அடைக்கலம், கோவிந்தம், வினோ, சிவசக்தி இன்னும் நிறைய பெயர்கள் எழுதலாம். இவர்கள் எல்லாம் செய்யாத கொலை குற்றங்களா? இன்று எப்படி இருக்கிறார்கள். அதே கட்சியில் இருந்து கொண்டுவெள்ளையும் சொள்ளையுமாக உடுத்திக்கொண்டு அரசியல் செய்கிறோம், மக்கள் சேவை செய்கிறோம் எண்டு திரியவில்லையா ? நான் இவரை ஒரேயடியாக நல்லவர் என்றோ சிறந்தவர் என்றோ கூறவில்லை. இந்த வெள்ளையும் சொள்ளையுமாக திரிகிற அரசியல் (?) வாதிகளுடன் ஒப்பிட்டுதான் கூறி இருந்தேன். இரண்டாய் உடைந்தால் என்ன மூன்றாய் உடைந்தால் என்ன? இவர்கள் கட்சி ஆரம்பித்து மக்கள் எதாவது பலனை கண்டார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா? இனியும் ஏதாவது செய்வார்கள் என்று சொல்ல முடியுமா? என்னை பொறுத்த வரைக்கும் நாம் பின்னோக்கி சென்றோமே ஒழிய முன்னோக்கி செல்லவில்லை.
  42. சிங்கள அமைச்சரின் காலில் விழ மறுத்த தமிழ் சிறுவன்.அமைச்சரின் காலில் விழுந்து வணங்குமாறு மாணவனின் தந்தை, தாயார் வலியுறுத்திய போதிலும் அம்மாணவன் பிடிவாதமாக நின்று கொண்டிருந்தான். இதனால் அமைச்சர் சங்கடத்துக்கு உள்ளானபோதிலும் அவர், தொடர்ந்தும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.அம் மாணவன் கூறியது ”நான் முல்லைத்தீவில் மிகவும் கஷ்ட சூழ்நிலையில் கல்வி கற்றேன். முகாம்களில் இருந்து படித்துள்ளேன். நான் எனது தந்தை தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன்”

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.