Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    3061
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    38770
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/28/24 in Posts

  1. சாரதாஸ் இலவசம் ---------------------------- அவரை அங்கே பார்த்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. அவருக்கு அப்பொழுது 75 அல்லது 80 வயதுகள் இருக்கும். ஆனாலும் அவரில் என்றுமே வயது தெரிவதில்லை. நல்ல உயரமும், அவரின் திடகாத்திரமான நிமிர்ந்த உருவமும் என்றும் அப்படியே இருக்கின்றது. நான் மிகச் சிறுவனாக இருந்து போது அவர் கால்ப்பந்து விளையாடியதை பார்த்திருக்கின்றேன். பின்னர் நான் வளர்ந்து, ஓரிரு வருடங்கள் அவருக்கு எதிராக விளையாடியிருக்கின்றேன். அங்கிருந்த பல கழகங்களில் அவர் ஒரு கழகம், நான் வேறு ஒரு கழகம். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். தனக்கு ஞாபகமில்லை என்று மிகவும் தயக்கத்துடன் சொன்னார். என் தந்தையை அவருக்கு ஞாபகம் இருந்தது. என்னைப் போல ஆயிரம் பேரை பார்த்திருப்பீர்கள் என்று சொல்லி அந்தச் சூழ்நிலையை கொஞ்சம் இலகுவாக்கி விட்டு, அவரின் பல பழைய விளையாட்டு மற்றும் அது சம்பந்தமான நிகழ்வுகளையும் சொல்ல ஆரம்பித்தேன். மிகவும் உற்சாகமானார். நான் அறியாத பல நிகழ்வுகளைச் சொன்னார். திருமணத்தின் பின் பலர் கழகம் மாறிய கதைகளைச் சொன்னார். பெண் வீட்டுக் கழகத்திற்கு மாறாமல் இருந்த ஒரு சிலரைப் பற்றியும் சொன்னார். ஓடிப் போய் தமிழ்நாட்டில் அகதிகளாக இருந்த காலத்தில், எங்களின் பல கழகங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு அணியாகி, தமிழ்நாடெங்கும் போட்டியிட்ட கதையைச் சொன்னார். ஒரு தடவை அவர்களின் காவல்துறை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிகவும் அடக்கமாக விளையாடியதை சொல்லிச் சிரித்தார். கதையின் நடுவே, நான் வேட்டியின் மேல் கட்டியிருந்த துவாயைக் காட்டி இது அந்த நாளில் சாரதாஸ் இலவசமாகக் கொடுக்கும் துவாய் என்றார். கட்டுக் கட்டும் போது இந்த துவாய்கள் பலவற்றை அவர்கள் இலவசமாக தருவார்கள் என்றார். கட்டு என்பது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடலினூடு கடத்தப்படும் பொதிக்கான உள்ளூர் பெயர். துவாயை அப்பொழுது தான் சரியாகப் பார்த்தேன். மிகவும் சாதாரண நூல் துவாய். நீட்டாகவும் குறுக்காகவும் கோடுகள். மொத்தமே இரண்டு நிறங்கள் தான் அதில் இருந்தது. அதிலும் ஒரு நிறம் மிகவும் தனித்துவமானது. ராசவள்ளிக் கிழங்கை சீவிக் கழுவின தண்ணீரின் மெல்லிய நிறம். எனக்கு அந்த துவாயை மிகவும் வேண்டிய, நெருங்கிய ஒருவரே கொடுத்திருந்தார். புதிது என்று சொல்லியே கொடுத்தார், ஆனால் இலவசமாகக் கிடைத்தது என்று அவர் சொல்லவில்லை. அவர் கட்டு கட்டும் தொழிலில் என்றும் இருந்ததில்லை. யாரோ அவருக்கு இலவசமாகவே கொடுத்திருக்க வேண்டும். கதைத்து முடித்து விட்டு கிளம்பும் போது தனக்கு இப்ப எதுவுமே ஞாபகத்தில் தங்கி நிற்பதில்லை என்றார். என்னையும் மறந்து, இங்கு கதைத்தவற்றைக் கூட அநேகமாக மறந்து விடுவேன் என்றார். திரும்பவும் என்னை மறந்து விடப் போகின்றாரோ என்ற கவலை உடனே வந்தாலும், அது உடனேயே மறைந்து, அவரைப் பார்த்ததும், நீண்ட நேரம் கதைத்ததும் ஒரு இனிய நினைவாக உள்ளுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது. அடுத்த நாள். திருவிழாவில், அதே இடத்தில் அவர் இன்னொருவருடன் கதைத்துக் கொண்டிருந்தார். அருகில் போய் நின்றேன். அவருடைய கதையின் நடுவே என்னுடைய துவாயை மட்டும் இடைக்கிடை பார்த்துக் கொண்டேயிருந்தார்.
  2. இரண்டாவது அரையிறுதிப் போட்டி மழையால் குறித்த நேரத்திற்கு நடக்காமலும், இடையே தடங்கலுக்கு உள்ளாகியிருந்தும் இருந்தது. எனினும் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் 57 ஓட்டங்களுடன் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிதானமாக ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 16.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 103 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 68 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றதால், ஏதாவது ஒரு அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெல்லும் எனக் கணித்திருந்த 13 பேருக்குத் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 121 2 ஈழப்பிரியன் 114 3 ரசோதரன் 113 4 கந்தப்பு 113 5 சுவி 111 6 குமாரசாமி 109 7 கோஷான் சே 108 8 நீர்வேலியான் 105 9 தமிழ் சிறி 102 10 கிருபன் 102 11 வீரப் பையன்26 100 12 எப்போதும் தமிழன் 100 13 நந்தன் 99 14 வாத்தியார் 98 15 வாதவூரான் 97 16 நிலாமதி 96 17 அஹஸ்தியன் 96 18 தியா 94 19 ஏராளன் 94 20 P.S.பிரபா 93 21 கல்யாணி 82 22 புலவர் 80 23 நுணாவிலான் 78 முதல் மூன்று நிலைகளும் அமெரிக்கர்களால் தொடர்ந்தும் தக்கவைக்கப்ப்ட்டுள்ளது! @குமாரசாமி ஐயா ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்!
  3. மாலைத்தீவு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு கடந்த ஆண்டு மாலைத்தீவில் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். பதவியேற்றதிலிருந்து இந்தியப் படைகளை வெளியேற்றியது உட்படப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி முய்சு, சீன ஆதரவாளராகப் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் ஜனாதிபதி முய்சுவிற்கு எதிராக ப்ளக் மெஜிக் (Black Magic) மூலம் பில்லிசூனியம் வைக்க முயன்றதாகத் தெரிவித்து அவரது கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் அந்நாட்டுக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் ஷாம்னாஸ் சலீம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சராகப் பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் 7 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/304756
  4. எழுத்தாளர் இரா.முருகவேள் தன் முகநூலில் எழுதியது... // ‘ஏழை மக்கள் உடல் வலிக்காகக் குடிக்கிறார்கள். அவர்களுக்குக் குறைந்த விலையில் பாதுகாப்பான சாராயமும் கள்ளும் அரசே தர வேண்டும்' என்ற வாதம் படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. உடல் வலி தாங்க முடியாத அளவுக்கு மக்கள் உழைக்கிறார்கள் என்றால், அவர்கள் உழைப்பின் கடுமையைக் குறைக்க வேண்டும். உடல் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு வேலை நேரம், ஊதியம், நிம்மதியாகத் தூங்க ஓரளவு வசதியான வாழ்விடம் இவைதான் அரசு செய்ய வேண்டியவை. மக்கள் வலிக்காகக் குடிக்கத் தொடங்கி அது பழக்கமாகி குடிக்கு அடிமையாகி ஐம்பது வயதில் உழைக்கத் தகுதியற்றவர்களாக உடைந்துபோகிறார்கள். இந்த வாழ்நிலையில் எந்தச் சாராயத்தைக் கொடுத்தாலும் இதுதான் நடக்கும். குறைந்த விலை சரக்கு என்பது குறுக்கு வழி. உதிரிப் பாட்டாளி வர்க்கம் ஈடுபடும் கடின உடலுழைப்பு பணிகள் அன்றாடக் கூலிப் பணிகளாக உள்ளன. அரசு வரிகளுக்குள் வருவதில்லை. எனவே பெரும் நிறுவனங்களும் இப்படிப்பட்ட பணிப்பாதுகாப்பு இல்லாத உழைப்பில் மக்களை ஈடுபடுத்திவருகின்றன. நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியமான பகுதி, இதுபோன்ற உழைப்பை நம்பியுள்ளது. இவர்களுக்காக அரசுக் கண்காணிப்பு, வரிவிதிப்பு ஆகியவற்றுக்கு உள்ளே வராத கள்ளச் சாராயம் போன்றவை கண்டும் காணாமலும் விடப்படுகின்றன. கறுப்புப் பணம் என்பது போல இது கணக்கில் வராத உழைப்பு. இந்த மக்களின் உயிருக்கு பத்து லட்சம்தான் விலை. இதோடு கணக்குத் தீர்க்கவே முதலாளித்துவ அரசுகள் முயலும். குறைந்த விலை, பாதுகாப்பான சாராயம் என்ற அவர்கள் வாதத்தில் சிக்கினால் நாம் சாராயக் கம்பெனிகளின் விற்பனைப் பிரதிநிதிகள் ஆவோம்.//
  5. உங்கள் கருத்திற்கு நன்றி, இந்த காணொளியில் உடல் மொழி எனும் கருத்தாய்வினை இங்கு இணைத்தபோது யாராவது கிளி யோசியம் பற்றி கூறுவார்கள் என எதிர்பார்த்தேன்😁. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர் உலகில் போர் பதற்றம் உள்நாட்டு பிரச்சினைகள் குறைவடையும் என எதிர்பார்க்க அதனை விட மோசமாக சூழ்நிலை உருவாகி இப்போது அணுவாயுத போர் ஆரம்பிக்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள், இதனைவிட பனிப்போர்காலத்தில் ஓரளவு உலகம் பாதுகாப்பாக இருந்தது.
  6. அரை இறுதிபோட்டிக்கு இந்தியா தெரிவானால் கயானா மைதானத்தில்தான் போட்டி நடக்கும் என முன்பே தீர்மானிக்கப்பட்டது. இதனால் இந்தியா 4 சூழல் பந்து வீச்சாளர்களை இந்த உலக கோப்பைக்கு தெரிவு செய்தது. இந்தியா அணிக்கு மட்டுமே அரை இறுதி போட்டிக்கு தாங்கள் எங்கே விளையாட வேண்டும் என தெரிந்திருக்கிறது. இது இந்தியாவுக்கு சாதகமான விடயம். Did India have a clear advantage knowing where their T20 World Cup 2024 semi-final was going to be staged? India captain Rohit Sharma didn't think there was any. Former India batter Sanjay Manjrekar thought otherwise. "Clear advantage," Manjrekar said on ESPNcricinfo's Timeout show. "Rohit has to say that. He can't say it was an advantage. India would've picked their side based on it. India's problem has been semis and finals and when you know you're playing in Guyana, if you've been wondering why they've got four spinners in their squad, this could be the reason." Former England batter Nick Knightconcurred with that assessment that "it didn't seem right or fair" that India knew where they were playing. It's a school of thought that seems to have found favour from several quarters, most notably his former colleague and opening partner Michael Vaughan. "Literally, it's their tournament," Vaughan said in the Club Prairie Fire podcast on Thursday. "They get to play whenever they want. They get to know exactly where their semi-final will be. They play every single game in the morning so people can watch them at night in India on TV. "I get that. I get that money is a big play in the world of cricket. And I get that in bilateral series, but you would think that when you get to a World Cup, the ICC should be a little bit fairer to everybody. It shouldn't be just India just because they bring a few quid in. Knight went a step further in questioning the ICC's decision to have separate rules for both the semi-finals. The Afghanistan-South Africa semi-final on Wednesday night had a reserve day scheduled, while the India-England semi-final had only the provision of an extension by 250 minutes, and no reserve day. The decision to have the final on a Saturday was among other scheduling concerns raised. "I can't quite get my head around why we've got to this point," Knight said. "I thought watching the group stages, it could've been condensed. I thought they were elongating moments at times between games. And why can't we play the final on Sunday? Am I oversimplifying this to give teams the extra day to travel? I wonder if we could've pushed it altogether a little bit more to prevent this situation from happening." "As I said, bilateral, I completely understand it. But when you get to a World Cup, there cannot be any kind of sympathy or any kind of sway towards one team in the tournament. And this tournament is purely set up for India, simple as that." Manjrekar called for the ICC to make it a level-playing field, and not solely focus on commercial gains. "It's a wrong way to go about it," he said. "I'm talking about a very idealistic kind of a situation. In this sport, we've put the cart before the horse a lot. We're so excited to take it to the USA, New York. But what about the conditions? You've got to focus on making the product high-quality and a level-playing field and then look for commercial gains. "We can't just say 'this is what the market wants, let's cater to that' because this is not really a pure, commercial venture. It's got to be about having a high-quality [product]." விகடனில் யூன் 6 ம் திகதியில் வந்த ஆக்கம் மற்ற அணிகளெல்லாம் கன்னாபின்னாவென பயணம் செய்து சகட்டுமேனிக்கு நேரம் மாறி மாறிப் போட்டிகளில் ஆடிக்கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் சௌகரியமாக இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஜாலியாக எல்லா போட்டிகளையும் ஆடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவுக்குச் சாதகமாக தொடரின் அட்டவணைகள் வடிவமைக்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு சில காலமாகவே பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா மட்டும் எப்படி ஆடி எந்த இடத்தைப் பிடித்தாலும் பாகிஸ்தானுக்குச் செல்லாமல் இருக்கும் வகையில் கோக்குமாக்கான அட்டவணை ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தியா பாகிஸ்தானுடன் ஆடிய போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே வழங்கப்பட்ட கூத்தெல்லாம் நடந்திருந்தது. அது கூட ஆசியக்கோப்பை, அங்கேயும் ஜெய்ஷாதான் தலைமைப் பீடத்தில் இருக்கிறார் என்பதால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உலகக்கோப்பையில் எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஐ.சி.சி ஏன் இப்படி செய்ய வேண்டும்?
  7. அவர் சகோதரன் தீயா..... சரி, அது இருக்கட்டும். பையன் சார், நீங்க எல்லா தோசையும் சுட்டபடியால், சாதா தோசை, ரவா தோசை, பேப்பர் தோசை, மசலா தோசை, அனியன் தோசை, இப்படி ............ நாங்கள் எது எதுவென்று சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டம்..........🤣. 🤣.......... அகஸ்தியர் ஒருவருக்கு மட்டும் தான் அந்த வல்லமை அன்றும் இன்றும் இருக்கின்றது..........
  8. எங்கள் வீட்டிலும் ஒரு நாலுகால் ஜீவன் லூனா எனும் பெண் நாய் .....பதினோரு வருடங்களாக எங்க ளுடன் வாழ்கிறது . வீட்டிற்கு வருவோரை முதல் ஆளாகி வரவேற்கும். கீழ் தளத்தில் நின்றாலும் மகனின் கார் சத்தம் தெருமுனையில் வரும்போது மேலே ஓடிச்சென்று வாலை ஆட்டிக் கொண்டு நிற்கும். எந்த சாமத்தில் வந்தாலும் . ஒரு குண்டூசி சத்தம் கேடடாலும் அலெர்ட் ஆகி விடும். தெரியாதவர்களையும் கண்டு வாலாட்டும் தபாற்காரன் . ups காரன் என்பவர்களையும் கண்டு வரவேற்கும் ( கள்ளன் வந்தாலும் வரவேற்கும்) பிழை செய்தால்பம்மி கொண்டு நிற்கும். பேரப்பிள்ளைகள் வாலைப்பிடித்து இழுத்து என்ன சித்ரவதை செய்தலும் சகித்து கொள்ளும். பேத்தி சிறுவயதில் சிலசமயம் அதைக் கட்டிபிடித்துஉறங்கி விடுவாள் ...பாவம் தற்போதுகண் தெரியாமல் போய் விட்ட்து ஒருமாற்றுவழியும் இல்லையாம். சிலர் கருணைக் கொலைக்கு அனுப்ப சொன்னார்கள். மகன் அடிக்காத குறை அது தன்னுடனே இருக்கட்டும் என்பான் நடக்க முடியாவிலும் தூக்கி கொண்டு மேல் தளத்துக்கு வருவான். . குளிப்பாட்டி தனித் துவாய் வைத்து துடைத்து விடுவான். வித விதமாய் ஷாம்போ கால நகம் வெட்டிட கத்தரிகோல் மாதாந்த வருடாந்த check up எல்லாம் செய்வான். தட்டித்தடுமாறி நடக்கிறது ஆனால் உணவு வைக்கும் இடம் தண்ணீர்வைக்கும் இடம் மல ஜலத்துக்கு "சிக்னல்" என்பன மாறவில்லை. படியில் இறங்க ஸ்டெப்ஸ் என்று சொன்னால் நிதானமாக கால்வைக்கும். வாழும் வரை வாழட்டும். நன்றி உள்ள பாசக்கார ஜீவன்.
  9. றீகன் அவர்களின் வரலாறு எனக்கு தெரியவில்லை, ஆனால் அமெரிக்கர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பும், மரியாதையையும் தெரியும். அவரின் திட்டங்களும், கனவுகளும், மற்றைய அதிகார மையங்களின் திட்டங்களுடன் ஒத்துப் போயிருக்கக் கூடும். உண்மையில் ட்ரம்ப் உருப்படியாக, அவர் பெயர் சொல்லும் படி என்ன செய்தார் என்றே தெரியவில்லை. அவரில் பட்ட காற்றுக் கூட கலிஃபோர்னியாப் பக்கம் வராது. சில சென்டிமெண்டுகள், எமோஷன்ஸ் என்பதை விட, அவரின் சாதனைகள் என்று ஏதாவது மிஞ்சுமா என்று தெரிய வில்லை.
  10. 🤣......... நீங்கள் ஒரு வக்கீல் ஆகியிருக்க வேண்டியவர்.... எங்கிருந்து கட்டளைகள் எங்கு போகின்றன என்பது முக்கியம் என்று நினைக்கின்றேன். என்னுடைய அனுமானத்தின் பிரகாரம், ரஷ்யா மற்றும் அது போன்ற நாடுகளில் கட்டளைகள் அரச தலைவரிடமிருந்தே ஆரம்பிக்கின்றது. ஆரம்பகட்ட தகவல்களை அவர் பலரிடமிருந்து அல்லது நம்பிக்கையான ஒரு சிலரிடமிருந்தோ பெற்றுக் கொள்வார். அமெரிக்கா போன்ற நாடுகளில் கட்டளைகள் அரச தலைவரிடமிருந்து ஆரம்பிப்பதில்லை. அவர் ஓரளவு பின்னரேயே கலந்து ஆலோசிக்கப்படுவார். இறுதி முடிவில் அவரின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். கிட்டத்தட்ட இங்கு தனியார் நிறுவனங்களும் இப்படியே நடத்தப்படுகின்றன.
  11. புகை மூட்டம் இப்ப விலகி விட்டது.......கோலி இரண்டாவது பந்தில் காலியாகுன்றார், ரோகித் நாலாவது பந்தில் டக் அவுட் ஆகின்றார்.... அடுத்து வந்தவர் அடுத்த பந்தை வாங்கக் கூடாத இடத்தில் வாங்கி அப்படியே திரும்பிப் போகின்றார்.......................... அப்படியே தென் ஆபிரிக்கா வெல்லுது........🤣.
  12. அவர் சிறந்தவரா அல்லது இவர் சிறந்தவரா என்ற ஒப்பீடு இவர்கள் இருவருக்கும் இடையில் இல்லை என்று நினைக்கின்றேன். இப்பொழுது நாடு இருக்கும் நிலையில் அது சிறந்ததா அல்லது இது சிறந்ததா என்பதே நடுநிலையான வாக்காளர்களின் சிந்தனையாக இருக்கும். என்னுடையது அதுவே. நாட்டையே, அமெரிக்காவை மட்டுமே, முன்னிலைப்படுத்தியே இவர்கள் ஒரு பக்கம் சாய்வார்கள். பொதுவாக உலக நடப்புகள் வெறும் ஊறுகாய் மட்டுமே, வேறு எதுவுமே இல்லாவிட்டால் அதை கையில் எடுப்பார்கள். இரண்டு கட்சிகளினதும் தீவிர ஆதரவாளர்களும், ட்ரம்பின் ரசிகர்களும் என்ன ஆனாலும் மாறப் போவதில்லை. பங்குச் சந்தை போன்றே இந்த நாடும். வல்லுநர்கள் ஏதேதோ சொல்வார்கள், ஆனால் நடப்பதோ வேறு ஒன்று. ஏற்கனவே இருக்கும் பொறிமுறையில், சில சின்ன மாற்றங்களுடன், தான் நாடு போய்க் கொண்டிருக்கும், ஆனாலும் ட்ரம்ப் வந்தால் குடியேறிய மற்றும் அகதிகளாக வந்த முதலாவது தலைமுறைக்கு உள்ளூர ஒரு பயம் இருக்கும். இனவாதம், தூய்மைவாதம் போன்றன வெளியில் வந்து நடனமிடும். விவேக் ராமசாமி போன்றும் பலர் முன்னே வருவார்கள். மாற்றுக் கருத்துகள் சொல்வார்கள். நாங்கள் சிரித்துக் கொண்டேயிருக்க நான்கு வருடங்கள் ஓடி விடும். இளைஞர்கள் இங்கு மெதுமெதுவாகவே முன்னுக்கு வரலாம். அவர்கள் அதி வேகத்தில் முன்னே வருவதற்கு இங்கு ஒரு வெற்றிடம் பொதுவாக ஏற்படுவதில்லை. ஏற்கனவே ஒரு அதிகார, பதவி வரிசை இரு கட்சிகளிலும் இருந்து கொண்டேயிருக்கும். ஆனாலும் இரு கட்சிகளிலும் இப்பொழுது அந்த வரிசை பலமாக இல்லை, முக்கியமாக ஜனநாயக் கட்சியில். கலிஃபோர்னியா கவர்னர், நியூசம், அடுத்த தலைவராகப் பார்க்கப்படுகின்றார். அமெரிக்காவைப் பொறுத்த வரை அவர் ஒரு இடதுசாரி, அது ஒரு பலவீனம். விவேக் தவிர வேறு எந்த இளையவரும் தொடுவானம் வரை இல்லை. விவேக்கை ஒருவரும், அவர் தவிர, பெரிதாக பொருட்படுத்துவதில்லை. நடைமுறை சாத்தியமற்ற அதிரடியான கருத்துகள் மூலம் கவனம் பெறுவார், வேறு எதுவும் இல்லை.
  13. வளர்ச்சி அடைந்த நாடுகளில் வலதுசாரிகளும், அப்பட்டமான இனவாதிகளும் ஆட்சிக்கு வரவேண்டும். அதேபோல வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் சர்வாதிகாரிகளும், பின்தங்கிய நாடுகளில் இராணுவ ஆட்சியும் வரவேண்டும். இப்படி உலகம் முழுவதும் கொடூரமான ஆட்சிகள் வந்தால்தான் 8 பில்லியன் தாண்டிய உலகின் சனத்தொகை வளர்ச்சியைக் குறைக்கலாம். வேகமாக பூமியைச் சூடாக்கவும், போர்களை நடாத்தி மக்களைக் கொல்லவும், பஞ்சம், பட்டினிகளை உருவாக்கவும் இவர்களை விட்டால் சிறந்தவர்கள் கிடையாது.😎
  14. செலன்ஸ்கி வெகுவிரையில் எல்லோராலும் கைவிடப்படும் நாள் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரிகிறது.. பிரான்சில் பிரித்தானியாவில் ஜேர்மனியில் அமெரிக்காவில் என முக்கிய வல்லரசு நாடுகளில் வலதுசாரிகள் கைகள் மேலோங்குகின்றன.. அவர்கள் உள்ளூர் மக்களின் குரலாக ஒலிக்கிறார்கள்.. இடதுசாரிகளும் நடு நிலைவாதிகளும் உள்ளூர் மக்களின் கஸ்ரங்களையும் பிரச்சினைகளையும் தீர்க்காமல் உக்கிரேனுக்கு பில்லியன்களில் அள்ளிவழங்கும் அறிவிப்பை வெளியிடும்போது எண்ணெய்க்கும் கரண்டுபில்லுக்கும் அல்லாடும் உள்ளூர் வெள்ளைகள் செம காண்டாகிறார்கள.. அனைத்து வலதுசாரிகளின் முக்கிய அறிவுப்புகளில் ஒன்று உக்கிரேன் போருக்கு ஆதரவு இல்லை என்பது..
  15. வடமாகாணத்தில் மாவட்ட ரீதியில் ஜுனியர் சுப்பர் சிங்கர் - இறுதிப் போட்டிக்கு தென்னிந்திய பாடகர்களும் வருகை PrashahiniJune 28, 2024 வடமாகாணத்தில் மாவட்ட ரீதியில் ஜுனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியொன்று நடாத்தப்படவுள்ள நிலையில் அதன் இறுதிப் போட்டி 2024 செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. C J Pramoters & Dhedjassam Event Solutions அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கலாசார நிலையத்தில் நடத்தப்படும் இந்த இறுதிப் போட்டியில், வடமாகாணத்தில் மாபெரும் ஜுனியர் சுப்பர் சிங்கர் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. டி. கே. பட்டம்மாளின் பேத்தியான நித்யஸ்ரீ மகாதேவன், தமிழ் திரைப்பட பாடகரும் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றவருமான திவாகர், சுப்பர் சிங்கர் புகழ் தென்னிந்திய பின்னணிப் பாடகர் சத்தியபிரகாஷ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதலாம் பரிசாக பத்து லட்சம் ரூபாவும் இரண்டாம் பரிசாக மூன்று லட்சம் ரூபாவும் மூன்று பரிசாக ஒரு லட்சம் ரூபாவும் வழங்கப்படும். இந்தப் போட்டியின் முதலாவது குரல் தேர்வு யாழ்ப்பாணம், பிரதான வீதியிலுள்ள திருமுறைக்கலாமன்றத்தில் எதிர்வரும் 2024 ஜுலை 06ஆம், 07ஆம் திகதிகளில் நடைபெறும். இந்தப் போட்டியின் இரண்டாவது குரல் தேர்வு யாழ்ப்பாணம், மருதனார்மடத்தில் உள்ள வடஇலங்கை சங்கீத சபை மண்டபத்திலும் சாவகச்சேரி நகராட்சி மண்டபத்திலும் எதிர்வரும் 2024 ஜுலை 13ஆம், 14ஆம் திகதிகளில் நடைபெறும். இந்தப் போட்டியின் மூன்றாவது குரல் தேர்வு மன்னார், நகர சபை மண்டபத்தில் எதிர்வரும் 2024 ஜுலை 20ஆம், 21ஆம் திகதிகளில் நடைபெறும். இந்தப் போட்டியின் அடுத்த குரல் தேர்வு பருத்தித்துறை, வல்லை, யாழ் பீச் ஹோட்டலில் எதிர்வரும் 2024 ஜுலை 27ஆம், 28ஆம் திகதிகளில் நடைபெறும். இந்தப் போட்டியின் குரல் தேர்வொன்று கிளிநொச்சி, பரந்தன் ஆர்ஜே மஹாலில் எதிர்வரும் 2024 ஓகஸ்ட் 03 ஆம், 04ஆம் திகதிகளில் நடைபெறும். https://www.thinakaran.lk/2024/06/28/breaking-news/69114/வடமாகாணத்தில்-மாவட்ட-ரீத/
  16. இந்த் விடயத்தில் நன்மையுமுண்டு தீமையுமுண்டு, ஆனால் பெரும்பாலும் இந்த சிறார்கள் உளவியலாக மோசமாக பாதிக்கப்படுவாகள், எந்த கவலையுமில்லாமல் சந்தோசமாக விளையாடி திரிந்த எமது காலம் ஒரு பொற்காலம் என கருதுகிறேன்.
  17. இது உணமை, ஆனால் இனி யாராலும் அமெரிக்காவினை காப்பாற்ற முடியாது, ஏனென்றால் அவர்களை வேறு யாரும் அழிப்பதில்லை, அவர்களது எதிரிகள் வேறு யாருமல்ல அவர்களேதான்.
  18. கடலும் கரையும்தான் சேர்ந்தாச்சு கரையில் வீடுகள் வந்தாச்சு கண்களுக்கு விருந்தாச்சு ..........! 😂
  19. 10 வயது மாயா நீலகாந்தன் 10-Year-Old Guitarist Maya Neelakantan Performs "Last Resort" |
  20. நல்லது .....நடக்கட்டும்....... நல்லதே நடக்கட்டும்.......! 👍
  21. இலங்கையில்... சிங்களவருக்கு ஒரு சட்டம், தமிழருக்கு ஒரு சட்டம் நடைமுறைறையில் உள்ளது என்பதே உண்மை. முழுப் பூசணிக்காயை சோத்துக்குக்குள் மறைக்காதீர்கள். 😂🤣
  22. ஆனாலும் பக்கத்து இலைக்குப் பாயாசம் வேண்டும் என்று கேட்பதுபோல் உள்ளது சிறித்தம்பியரின் பின்னூட்டம்.😆
  23. கவனம் அடையாளம் கண்டு போட்டுத்தள்ளவும் உதவும். ஒரு துவாயே பல கதை சொல்லும் போல.
  24. ஆனால் நீங்கள்தான் எங்களை விட முன்னிலையில் இருக்கிறீர்கள். அடுத்து கிருபனால் நடாத்த இருக்கும் துடுப்பாட்ட போட்டி சாம்பியன் கிண்ணமாக வாய்ப்பு இருக்கிறது. பெப்ரவரி மாதத்தில் பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. இந்தியா அரசாங்கம் , பாகிஸ்தான் மண்ணில் இந்தியா விளையாட அனுமதி வழங்குமா என்பது ஒரு கேள்வி. இப்போட்டிகள் Rawalpindi, Karachi,Lahore மைதானத்தில்தான் நடக்கவுள்ளது. ஆனால் இந்தியா விளையாடும் போட்டிகள் , இறுதி போட்டி எல்லாம் லாகூர் (Lahore) மைதானத்திலே நடக்கவுள்ளது. இதனால் இந்த மைதானத்திற்கு ஏற்ப இந்தியா அணி தெரிவு செய்யப்படும். Wagah எல்லை ( இந்தியா பாகிஸ்தான் எல்லை)க்கு அருகில் லாகூர் இருப்பதினால் இந்தியா இரசிகர்கள் பாகிஸ்தானுக்கு சென்று போட்டிகளை பார்க்க வசதியாக இருக்கும். அத்துடன் ஒரே இடத்தில் இந்தியா தங்குவதினால் பாதுகாப்பு பிரச்சனைகள் குறைவாக இருக்கும். இதுவரை வெற்றி பெற்ற அணிகள் 1998 - தென்னாபிரிக்கா 2000 - நியுசிலாந்து 2002 - இந்தியா , இலங்கை ( மழை காரணமாக இறுதி போட்டி நடைபெறவில்லை , இதனால் இரண்டு அணிகளும் வென்றதாக அறிவித்தார்கள்) 2004 - மேற்கிந்தியா தீவுகள் 2006 - அவுஸ்திரேலியா 2009 - அவுஸ்திரேலியா 2013 - இந்தியா 2017 - பாகிஸ்தான் ரகசியம் சொல்லியாச்சு . இனி எங்களை விட முன்னுக்கா இல்லை பின்னுக்கா வருவீர்கள் என உங்களின் கைகளில்தான் இருக்கிறது 😄
  25. இருப்பதை வைத்து திருப்திப்படுவது தான் மனிதனுக்கு அழகு. மிருகங்களும் பறவைகளும் தமக்கு மிஞ்சி எதையும் சேகரிப்பதுமில்லை. உண்ணுவதுமில்லை. இயற்கையை மீறி எதையும் செய்வதுமில்லை. ஆனால் ஆறறிவு உள்ள இனம் மட்டும்....? ஏனோ தெரியவில்லை இந்த பாடல்தான் ஞாபகத்திற்கு வருகின்றது. வந்த நாள் முதல் இந்த நாள் வரை வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான்.. வானம் மாறவில்லை வான் மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான்.. நிலைமாறினால் குணம் மாறுவான் பொய் நீதியும் நேர்மையும் பேசுவான் தினம் ஜாதியும் பேதமும் கூறுவான் அது வேதன் விதியென்றோதுவான் மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்.. பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினைக் கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்?
  26. பிறந்தநாள் வாழ்த்துகள் பிரியன் அண்ணை
  27. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், பிரியன் அண்ணா.
  28. பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிரியன்.
  29. நேற்று பிறந்தநாள் கொண்டாடிய... ஈழப்பிரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂🍰 நோய் நொடியின்றி நலமோடும் மகிழ்வோடும் வாழ்க வளமுடன். 🙏
  30. நானும் பலகாரப் பன்பலாக இருக்கும் என்டு வந்து பாத்தால் மொழி ஆராட்ச்சி நடக்குது.சந்திப்பில் கலந்து கொன்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  31. வாங்கோ சுண்டல்! இளமை இறங்கினால் யாழில் தஞ்சம் புகலாம் என்று எந்த ப்ரோ சொன்னது?😛
  32. ஜ‌முனா ச‌ரியான‌ கில்லாடி யாழில் ஏதாவ‌து ஒரு பெய‌ரில் கிறுக்குவார் என்று என‌க்கு ந‌ல்லாவே தெரியும்😂😁🤣.................. 2008 . 2009க‌ளில் என‌க்கு போன் ப‌ண்ணுவார் . சுக‌ம் விசாரிக்க‌ மாட்டார் உட‌ன‌ கேட்பார் த‌ம்பி யாழுக்கு போனிங்க‌ளோ என்று அந்த‌க் கால‌த்தில் ஜ‌முனா கூட‌ ஒரே சிரிப்பு போனிலும் யாழ்க‌ள‌த்திலும்....................... யாழில் என‌க்கு கிடைச்ச‌ ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் ஜ‌முனா ம‌ற்றும் சுண்ட‌ல்...........................................
  33. அதெல்லாம் முடியாது.. இதுதான் அந்த சுண்டல் என்பதற்கு என்ன அத்தாட்சி..?
  34. உங்கள் மீள்வரவு நல்வரவாகுக, சுண்டல். நான் புதிது, சில மாதங்களின் முன் இங்கு இணைந்தேன்.........
  35. வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!! மீண்டும் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி சுண்டல் ...........! 👍
  36. மாட்சிமை பொருந்திய ஐயன் நாவலர் பெருமான் தமிழை தலையில் சுமந்து திரிந்தார்........அவர்களை முத்திரையில் இட்டு சிறப்பித்து மகிழ்ந்தோம் ........... ஐயகோ அவரின் சந்ததிகள் தட்டுவடை பலகாரங்கள் எல்லாம் தட்டுடன் கடத்திக் கொண்டு திரிகிறார்களே, இவர்களை என் செய்வோம் ......... ! 😂
  37. யாழ்கள தமிழக நாடாளுமன்றப் போட்டியில் முதலாவதாக வென்றால் பரிசு தருவேன் என்ற சொல்லை காக்கவேண்டும் என்பதற்காக @வீரப் பையன்26 எனக்குப் பரிசுத் தொகையை அனுப்பவேண்டும் வேண்டும் என்று ஒற்றைக்காலில் விடாப்பிடியாய நின்றார். லொட்டரி ரிக்கற் எடுக்காமல் இருப்பதையே ஒரு கொள்கையாக கொண்டுள்ள எனக்கு பரிசுத்தொகையைப் பெறமுடியாது என்று நயமாகச் சொல்லி, விரும்பினால் ஒரு சமூகத் தொண்டுக்கு உதவுமாறு சொன்னேன். இலண்டனில் ஏ லெவல் படிக்கும்போது அறிமுகமாகி விரைவிலேயே எனது buddy ஆகிய நண்பனின் மகள் சஹானா இரண்டு வருடங்களுக்கு முன்னர் புற்றுநோயால் 14 வயதிலேயே மரணித்திருந்தார். அவரின் நினைவாக Sahana Foundation என்னும் அறக்கட்டளை அமைப்பை நிறுவி சாவகச்சேரிப் பகுதியில், தீராத நோய்களால் மரணத்தினை நெருங்கிய நோயாளிகளை கவனிக்கும் ஒரு இல்லத்தை, Palliative Care hospice, பல தொண்டு அமைப்புக்களுடன் சேர்ந்து அமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த இல்லத்திற்கு ஒரு அம்புலன்ஸ் வாங்குவதற்கான £75oo பவுண்ட்ஸ் பணம் சேர்க்க எனது இன்னொரு நண்பர் சூரி North of Wales Cotswold Way Challenge எனும் 50km கடினமான நடைபயணம் ஒன்றை அடுத்த ஞாயிறு (22 ஜூன்) மேற்கொள்கின்றார். தாராள மனம்கொண்ட @வீரப் பையன்26 £1oo பவுண்ட்ஸைக் கொடுத்ததோடு கமிஸனாக £15 பவுண்ட்ஸையும் கொடுத்துள்ளார். அம்புலன்ஸ் வாங்கும் நிதி சேர்ப்புக்கு பங்களித்த பையனுக்கு நன்றி பல. கள உறுப்பினர்கள் யாராவது பங்களிக்க விரும்பினால் பின்வரும் இணைப்பில் சென்று பங்களிக்கமுடியும். ஆனால் பையனைப் போல £15 கமிஸனைக் கொடுக்காமல் அதனை ஒரு பவுண்ட்ஸ் அல்லது அதற்கும் கீழாக மாற்றினால் நல்லது, https://www.justgiving.com/crowdfunding/Soori?utm_source=whatsapp&utm_medium=socpledgemobile&utm_content=Soori&utm_campaign=post-pledge-mobile&utm_term=r4yXppEQw
  38. சீச்சீ…. நான் சொல்ல மாட்டன். புது மட்டுவா, பழைய மட்டுவா… கந்தர்மடத்தில் காணி வாங்கினவர் பிரான்ஸ்சில உள்ளவர் தான் ஒற்றைக் கால்ல நிண்டவர். நானும் வீடுவளவு விற்கப் போகிறேன். யாராவது விரும்பினால் சொல்லுங்கோ.
  39. கூலிப்படை மலிச்சு போயிருக்கு, அதில ஆமிக்கு தலைவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்தால் எதுவும் செய்யலாம்
  40. சும்மா ஐந்துக்கும் பத்துக்கும் ஆட்களைக் கொல்லுகிற காவாலிக் கூட்டம் பெருகிப் போச்சு......! 😴

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.