Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    20018
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/04/24 in Posts

  1. மரத்தில் ஏறுவதை விட்டு மனைவிமீது ஏறு மானிடா!! சம்பளமும் உன்பலமும் சேர்ந்தே கூடினால்.. மதனோற்சவம் பதியோடுதான் மதியில் கொள்ளடா!! பின்குறிப்பு - "மனைவிமீது ஏறு" என்பது மனைவியின் இதயத்தில் இடம்கொள் என்ற பொருளோடு வாசிக்க 😉
  2. புள்ளடி போடுவதாயின் ஒரு புள்ளடி மட்டும்தான் போட முடியும் உன்றுக்கு மேற்பட்ட புள்ளடிகள் இருந்தால் அது செல்லுபடியற்றதாகி விடும்.புள்ளடி போடாமல் 1.2.3 என்று எண்கள் இடப்பட்டால்1 என்பது முதல் சுற்றில் எண்ணப்படும். முதல் சுற்றில் 50 வீதத்திற்குமேல் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுவார். முதல்சுற்றில் எவருக்குமே 50 வுpதத்திற்கு மேல் கிடைக்காவிட்டால் மலாம் இரண்டாம் இடத்தைப் பெற்ற வேட்பாளர்கள் மட்டும் தெரிவு செய்யப்பட மற்றையவர்கள் நீக்கப்படுவார்கள். பின்னர் 2வது 3வது தெரிவுகள் எண்ணப்படும்.இதுவரையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலகளில் 2வது சுற்று எண்ணப்படவில்லை. இந்த முறை அப்படிப்ப நிலை வரலாம் என்று நம்பப்படுகிறது.
  3. வெறுமனே கடுமையான தண்டனைகளால் இப்படியான குற்றங்களை 100 வீதம் இல்லாமல் செய்ய முடியாது என்பது நிரூபிக்கட்டது தான். ஆனால் 99% குறைக்க முடியும். இதனால் தான் புலிகள் இருந்த காலங்களில் இவ்வாறான நிகழ்வுகள் மிக மிக குறைவாக இருந்தன. கழுத்து வெட்டுகின்ற தண்டனை இருக்கும் நாடுகள் இஸ்லாமிய நாடுகள் மட்டுமே. இங்கு பெண்களை முழுக்க மூடிக் கொண்டு இரு என்று உத்தரவு போடுவது, கடைந்தெடுத்த அடிப்படைவாத இஸ்லாமிய ஷரியா சட்டங்கள் ஆகும். இது பெண்களை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட நடைமுறை அல்ல. இந்த கழுத்தறுக்கும் நாடுகளில் முஸ்லிம் தந்தை தன் மகளை வல்லுறவுக்குள்ளாக்கினால் பெரியளவில் தண்டனை கொடுக்க மாட்டாது. காரணம், திருமணத்துக்கு முன் பெண்ணின் பாதுகாவலன் அவளது தந்தை அல்லது சகோதரன் என்பதால், அவர்களுக்கு அதுக்கான உரிமை இருக்கு என்று நியாயம் பிளப்பர். https://english.alarabiya.net/News/middle-east/2015/08/02/Saudi-court-sentences-man-who-raped-daughter-to-13-years-in-jail- https://www.buzzfeednews.com/article/tasneemnashrulla/saudi-arabian-preacher-who-raped-and-tortured-his-5-year-old
  4. காலையிலேயே இதை பார்த்தனான் சிறி. பார்த்து விட்டு மனசுக்குள் நினைத்தது 'தலைவர் பிஸ்ரல் குறூப்பையாவது இயங்க விட்டுட்டு ஆயுதங்களை மவுனித்து இருக்கலாம்' என.
  5. சரியாக தேர்தல் நேரம் ஒத்துளைப்பு மாநாடு நடாத்த தீர்மானித்துள்ளார். என்ன ஒரு கரிசனை???
  6. இந்தாளுக்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்த தெரியவில்லை. எவ்வளவு பேர் ஏங்கி தவிக்கிறார்கள் இந்த தவத்திற்காக....😜
  7. ஒரு ஆண் வேண்டுமானால் எத்தனை பெண்களையும் போய் சந்தித்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் தனது மனைவி மட்டும் கட்டுப்பாடுடன் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு இயல்பான விடயம்தான். இதைத்தான் ஆண் உலகம் என்பார்கள். இப்படியான விடயங்களை ஆண் செய்தால் சம்பவம். பெண் செய்தால் சரித்திரம் என்று ஊரில் சொல்வார்கள். பிரான்ஸ் நாட்டில் ஒரு ஆண் செய்த சம்பவம் ஒன்று இப்பொழுது பேசு பொருளாகி இருக்கிறது.. பிரான்ஸில் ஒருஆண், பல ஆண்டுகளாக (2011-2020) பிற ஆண்களை தனது மனைவியை வன்புணர்வு செய்ய அனுமதித்திருக்கிறான். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இந்த விடயம் நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரியவந்திருக்கிறது. காரணம், அந்த ஆண், போதை மருந்துகளைக் கொடுத்துத் தனது மனைவியை நினைவிழக்க வைத்து விட்டு அதன் பிறகே சம்பவங்களை அரங்கேற்றியிருக்கிறான். இப்பொழுது அவளது கணவனும் இன்னும் ஐம்பது ஆண்களும் நீதிமன்றத்தில், தீர்ப்பை எதிர்பார்த்து வரிசையில் நிற்கின்றார்கள். அந்த ஆணின் பெயர் டொமினிக்(71). அவரது மனைவியின் பெயர் கீசெலா (72). இருவருக்கும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றைய ஆண்கள் 18க்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். தீயணைப்பு வீரர், செவிலியர், சிறைக் காவலர், பத்திரிகையாளர் என வெவ்வேறு துறைகளில் இருப்பவர்கள் எல்லாம் வரிசை கட்டி வந்திருக்கிறார்கள் என்பது சமூகத்தின் புருவத்தை உயர்த்த வைக்கிறது. இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், அந்த ஆண்களிடம் இருந்து டொமினிக் பணமாக ஒரு ‘சென்ற்’ கூடப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதே. பிறகெதற்கு இந்த விளையாட்டு? நடந்த சம்பவங்களை வீடியோ எடுத்து, தனது பாலியல் கற்பனைகளை திருப்திப்படுத்துவதே டொமினிக்கின் நோக்கமாக இருந்திருக்கிறது. தானும் சளைத்தவன் இல்லை என்று டொமினிக்கும் அவ்வப்போது நிகழ்ச்சியில் பங்கெடுத்து அவற்றையும் வீடியோ எடுத்து பத்திரமாக வைத்திருக்கிறார். நீதிமன்றத்தில் இப்பொழுது மொத்தமாக 92 சம்பவங்கள் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. டொமினிக் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த நூற்றுக்கு மேற்பட்ட வீடியோக்களை பார்வையிட்டதில், சிலர் ஒரு முறையே போதும் என்று ஒதுங்கி விட்டிருந்தனர். சிலர் சும்மாதானே என ஆறு முறை கூட வந்திருந்தனர். வைத்திய நிபுணர்களின் கூற்றுப்படி, டொமினக்குக்கோ, வந்து போன ஆண்களுக்கோ உளவியல் பிரச்சினைகள் இல்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆக முழுமையான தண்டனை அவர்களுக்குக் கிடைக்கும் என்பது ஒரு ஆறுதலான விடயம். ஆனாலும் வீடியோவில் உள்ள 72 ஆண்களில் சிலர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர்கள் இன்னும் வெளியில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி டொமினிக் மாட்டிக் கொண்டார் என இப்பொழுது ஒரு கேள்வி எழலாம். எல்லாம் ஆர்வக் கோளாறுதான். டொமினிக் பல் பொருள் அங்காடி ஒன்றில், பெண் வாடிக்கையாளரின் பாவாடையின் கீழ் கமாராவைப் பிடித்து வாடிக்கையாளருக்குத் தெரியாமல் வீடியா எடுக்கப்போய் மாட்டிக் கொண்டதில், சகலதையும் தோண்டி எடுத்திருக்கிறார்கள். டொமினிக்கின் கீசலாவுடனான ஐம்பது வருடக் குடும்ப வாழ்க்கை இப்போ முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கும் டிசம்பர் 20ந் திகதி வரை நடக்க இருக்கிறது. அதன் பிறகு டொமினிக்குக்கு இன்னுமொரு வாழ்க்கை இருக்கும். அவர் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த வீடியோக்களைப் பார்ப்பதற்குத்தான் முடியாமல் போகும். அநேகமாக இந்தச் செய்தி பல மொழிகளில் வந்திருக்கும். நான் வாசித்தது இங்கே, https://www.n-tv.de/panorama/Mann-liess-Ehefrau-von-72-Maennern-vergewaltigen-article25199233.html
  8. ஒம் சூப்பரான தெரிவு! 2005 தேர்தல மனசுல வச்சு சொல்லியிருக்காப்பில!
  9. மூன்றாவது முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழன். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இதுவரை பரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் , பரா ஒலிம்பிக்கில் 3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், மூன்றாவது முறையாகப் பராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள்! தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1398204
  10. அணில் இப்பதான் தொடங்குதா?முடியுதா?
  11. பிஸ்ரல் குழுக்களையும் மின்கம்ப தண்டனையையும் வெறுத்த பலர் இன்று இப்படி தண்டனை கொடுக்க யாராவது வரமாட்டார்களா என ஏங்குகிறார்கள்.
  12. இந்தா மேசையில அடிச்சு சொல்லுறன்....😄 14 வயது பொடியன் மனநலம் குன்றியவன் எண்டு வாற கிழமை தீர்ப்பு வரும் பாருங்கோ...😎
  13. எந்தவொரு தீர்வுகளையும் தந்தால். அல்லது அமுல்படுத்தப்பட்டிருந்தால். தான் அது தீர்வாகும். பேசுவது கதைப்பது எல்லாம் தீர்வு இல்லை பண்டாரநாயக்கா தான் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்தவன் அதற்கு தமிழ் தலைவர்கள் ஆதரவு அளித்தார்களா?? இல்லையே,.....ஆனால் அமுல் செய்யப்பட்டுள்ளது இதேபோல் தமிழர்கள் எதிர்த்ததாலும். அந்த தீர்வுகளை ஏன் அமுல் செய்ய முடியாது?? குறிப்பு,... முட்டையில் மயிர் புடுங்கவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் 🤪
  14. பிஸ்டலால் தீர்க்கப்பட கூடிய விசயம் அல்ல....கழுத்து வெட்டுகின்ற நாடுகளிலும் இது இருந்த படியால் தான் பெண்கள் முற்றாக மறைத்து கொண்டு வீடுகளில் வாழ வேண்டியிருக்கு ....தண்டனை வழங்கலாம் ஆனால் மற்றொருவன் செய்ய தான் போகிறான்...
  15. இந்த காணி , பொலிஸ் அதிகாரம் வேண்டாம் என்று தானே 1987 ல் அதை தமிழர்கள் குழப்பினார்கள். அதை விட மிக அதிகம் தேவை என று போய் இன்று 1987 ல் கிடைத்தது கூட கிடைக்க போவதில்லை என்பது தான் நிஜம். காலம் எப்போதும் ஒரே நிலையில் நிற்பதில்லை மாறிக் கொண்டே போகும் . 1929 ல் சிங்கள தலைவர்கள் சமஸ்டியை வலியுறுத்திய போது அன்றைய தமிழர்கள் அதை நிராகரித்தனர். தமிழ் தலைவர்களை சமஸ்டிக்கு இணங்க வைக்க சிங்களத் தலைவர் பண்டாரநாயக்கா அன்று முயன்று தோல்வியடைந்தார். இன்று காலங்கடந்து தமிழர்கள் சமஸ்டியை கேட்கிறார்கள். 2002 ல் பேச்சுவார்தை தொடங்கிய பின்னர் நோர்வேயில் உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய சமஸ்டியை ஆராய்வது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு சமஸ்டியை ஆராய வல்லுனர. குழு நியமிக்கப்பட்ட பின்னர் தமிழர்களால் அது நிராகரிக்கப்பட்டது. இன்று அதை வேண்டிப் போராட்டம். இதற்கு தான் கூறுவது காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள வேண்டும் என்று. இளமை துடிப்பில் தன்னை மன்மதன் என்று கற்பனை செய்து திருமணத்துக்கு ஆயிரம் நிபந்தனைகள் வைத்து வந்த பெண்கள் எல்லோரையும் நிராகரிப்பவர்களுக்கு வயதான பின்னர் அதே எந்தப் பெண்ணும் கிடைப்பது அரிதாக தான் இருக்கும். தமிழரின் அடுத்த சந்ததியாவது அறிவை பயன்படுத்த வேண்டும்.
  16. சரி... சரி.., ரென்சன் ஆகாதேங்கோ. 😂 அடுத்தமுறை கவனமாக பார்த்து பதிகின்றேன். 🤣
  17. பாரா ஒலிம்பிக் போட்டியில்... ஈழத்தை பூர்வீகமாக கொண்ட இத்தாலிய தமிழர், தங்கம் வென்று மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார். பாரா ஒலிம்பிக் தடகள வீரர் ரிகிவன் கணேசமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை மாலை பாரிஸில் தங்கம் வென்றார், மறக்க முடியாத இரவில் அவர் வெற்றிக்கான பாதையில் மூன்று முறை F52 வட்டு எறிதலுக்கான உலக சாதனையை முறியடித்தார். ஸ்டேட் டி பிரான்ஸில் போட்டியிட்ட அவர், தனது இரண்டாவது முயற்சியில் 25.48 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையை முறியடித்தார். சிறிது நேரத்தில், அவர் 25.80 மீட்டர் எறிந்து தனது சொந்த சாதனையை முறியடித்தார். கூட்டம் பரவசமடைந்தது, ஆனால் கணேசமூர்த்தி இன்னும் முடியவில்லை. அவர் 27.06 மீட்டர் தூரம் எறிந்து, இந்த நிகழ்வில் தனது மூன்றாவது உலக சாதனையை அடைந்து இத்தாலிக்கு தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். கணேசமூர்த்தி, ஈழத் தமிழ் பெற்றோருக்கு 1999 இல் ரோமில் பிறந்தார். பதினெட்டு வயதில், அவருக்கு குய்லின்-பாரே நோய்க்குறி இருப்பது கண்டறியப்பட்டது, இது தசை பலவீனம் மற்றும் கால்கள் மற்றும் கைகளில் உள்ள உணர்ச்சி மாற்றங்களால் வகைப்படுத்தப்படுகிறது. வீழ்ச்சிக்குப் பிறகு 2019 இல் அவரது உடல்நிலை மோசமடைந்தது, ரோமில் உள்ள சாண்டா லூசியா மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் அவர் சக்கர நாற்காலி கூடைப்பந்தாட்டத்தைத் தேர்ந்தெடுத்தார், அதற்கு முன் கள நிகழ்வுகளுக்குச் சென்றார். 2023 இல், அவர் ஷாட் புட் F55 மற்றும் வட்டு எறிதல் F54-55 பிரிவுகளில் இத்தாலிய பாராலிம்பிக் சாம்பியனானார். ஒரு வருடம் கழித்து, கணேசமூர்த்தி பாராலிம்பிக் விளையாட்டுகளில் அறிமுகமானார் - அவரது மூன்றாவது சர்வதேசப் போட்டி மட்டுமே - மற்றும் சிறந்த செயல்திறனுடன் தங்கத்தை கைப்பற்றினார். வரும் நாட்களில் ஈட்டி எறிதலிலும் கலந்து கொண்டு தனது சாதனைகளுக்கு மேலும் ஒரு பதக்கம் சேர்க்கும் நம்பிக்கையில் உள்ளார். இத்தாலிய நிருபர்களுடனான அவரது வெற்றிக்குப் பிந்தைய நேர்காணல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது, கணேஷமூர்த்தி அவரது குடும்பத்தினருக்கும் "வீட்டில் இருக்கும் மற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும்" அஞ்சலி செலுத்தினார். https://www.tamilguardian.com/content/italian-tamil-smashes-world-record-three-times-take-gold-paralympics
  18. Published By: DIGITAL DESK 3 03 SEP, 2024 | 03:37 PM பிரிந்து சென்ற தனது மனைவியை மீண்டும் தன்னுடன் இணைத்துத்தருமாறு கோரி நபர் ஒருவர் மரத்தில் ஏறி போராட்டம் மேற்கொண்டமையால் வவுனியா நகரில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றையதினம் காலை வவுனியா தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் கீழே இறங்கமால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பாக அவரிடம் விசாரித்த போது தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்துசென்றுள்ளதாகவும் அவரை தன்னுடன் மீண்டும் இணைத்துவைக்குமாறு தெரிவித்துள்ளார். நீண்டநேரமாக மரத்தில் இருந்து இறங்காமல் இருந்தமையால் குறித்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்ப்பட்டது. பின்னர் பொலிஸார் மற்றும் ஏனைய தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க போராட்டத்தில் ஈடுபட்ட நபர் மரத்தில் இருந்து கீழே இறங்கியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/192754
  19. பீரிஸ் முதலாவது புள்ளடி இரண்டாவது புள்ளடி என்றது பிழை அதற்கு பதிலாக இலக்கம் 1. இலக்கம் 2. என்று வர வேண்டுமா ??
  20. மலையைக் கொண்டு வருவன், ஆற்றைக் கொண்டு வரவேன் என்று பம்மாத்து விட்டுக் கொண்டு இருக்காமல், 13 ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ளபடி காணி, பொலிஸ் அதிகாரத்தினை வடக்கு கிழக்கு உட்பட எல்லா மாகாணசபைகளுக்கும் வழங்கி அவற்றை நடைமுறைப்படுத்துவேன் எனச் சொல்வது நடைமுறைச் சாத்தியமாகவாவது இருக்கும்.
  21. பைலட் அண்ணே... கொஞ்சம் நிற்பாட்டுங்க. என்ரை பெட்டி, கீழை விழுந்திட்டுது. 😂
  22. ஒரு உணவகத்தில் புகைபிடிக்கும் பகுதியில் உள்ள ஓவியம் .........! 😂
  23. நான் இனி வீதியில் வேகமாக ஓட மாட்டேன் ஐயா , இந்த ஒருதடவை மட்டும் மன்னித்துக் கொள்ளுங்கள் ......! 😂
  24. இவர் மரத்தில் ஏறிப் போராட்டம் செய்யுமளவு அந்தத் தெய்வம் இவருடன் குடும்பம் நடத்தியிருக்கிறா .......! 😂
  25. தொடர்ந்து மூன்றாவது முறையாக பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் மாரியப்பன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் (T63) வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த ஃப்ரெச் 1.94 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். இந்திய வீரரான ஷரத் குமார் 1.88 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். தமிழகத்தைச் சேர்த்த வீரரான மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார். மாரியப்பன் தங்கவேலு இதற்கு முன்பாக, 2016 ரியோ டி ஜெனிரோ பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் (T42) தங்கமும், 2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் (T63) வெள்ளியும் வென்றுள்ளார். கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றிருந்தார் மாரியப்பன் தங்கவேலு. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் அரங்கில் அவர் வென்ற முதல் தங்கம் அது. அந்த இறுதிப் போட்டியில், 1.88 மீட்டருக்கு மேல் உயரம் தாண்டி மாரியப்பன் அசத்தியிருந்தார். அதன் மூலம் புதிய சாதனையையும் படைத்தார். அதற்கு முன்னர், அதே சாம்பியன்ஷிப் தொடரில் ஷரத் குமார் தாண்டிய 1.83 மீட்டர் உயரமே சாதனையாக இருந்தது. மாரியப்பன் கடந்து வந்த பாதை தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தில் 1995ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி பிறந்தவர் மாரியப்பன். இவருக்கு நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளனர். தந்தை குடும்பத்தை கைவிட்டதால், தாயார் சரோஜா குழந்தைகளை வளர்த்துள்ளார். தாயார் செங்கல் தூக்கும் தொழிலாளியாகவும், காய்கறிகள் விற்றும் ஒரு நாளைக்கு 100 ரூபாய் வருமானத்தில் குடும்பத்தை வளர்த்தெடுத்தார். மாரியப்பனுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது நடந்த ஒரு விபத்தில், பேருந்து சக்கரத்தில் சிக்கி அவரது வலது கால் மூட்டு நசுங்கியது. அது அவரை நிரந்தர மாற்றுத்திறனாளி ஆக்கியது. தமது பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரனால் உந்தப்பட்டு தடகளத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் மாரியப்பன். 2016 பாராலிம்பிக் போட்டிகளின் போது அளித்திருந்த பேட்டியில், “பள்ளிப் பருவத்தில் உயரம் தாண்டுதலில் அசாத்தியமான எனது திறமையை அறிந்த உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், எனக்கு ஊக்கம் கொடுத்து பயிற்சி அளித்தார்.” என்று மாரியப்பன் கூறியிருந்தார். பள்ளியில் படித்துக்கொண்டே மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாரியப்பன், 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தேசிய, சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றார். 2013இல் நடந்த தேசிய பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப்பில் மாரியப்பன் உயரம் தாண்டிய விதம், பயிற்சியாளர் சத்யநாராயணனுக்குப் பிடித்துப் போக, மாரியப்பனுக்கு பெங்களூருவில் வைத்து பயிற்சி அளிக்கத் தொடங்கினார். 2015இல், தமிழ்நாட்டின் ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ (BBA) பட்டப்படிப்பை முடித்தார் மாரியப்பன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 1.88 மீட்டருக்கு மேல் உயரம் தாண்டி மாரியப்பன் அசத்தியிருந்தார் ரியோ பாராலிம்பிக்-2016 போட்டியில் தங்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2016 ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிறகு மாரியப்பனுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் தகுதி பெற, துனிசியாவில் நடந்த ஐபிசி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில், மாரியப்பன் 1.78 மீட்டர் உயரத்தை தாண்டினார். இதைத்தொடர்ந்து ரியோ பாராலிம்பிக் போட்டியில், T42 பிரிவில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி ஆசிய அளவிலான சாதனையைப் படைத்தார் மாரியப்பன். அவர் தங்கம் வென்ற பிறகு, அவருக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன. நவம்பர் 2019இல், துபாயில் நடந்த ‘2019 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில்’ ஆண்களுக்கான T63 உயரம் தாண்டுதலில் 1.80 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை மாரியப்பன் வென்றார். அதைத் தொடர்ந்து, டோக்கியோ 2020 (கொரோனா காரணமாக 2021இல் நடத்தப்பட்டது) பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார். அப்போது நடந்த, T63 உயரம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் கிரீவுக்கும் மாரியப்பனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் சாம் கிரீவ், 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டிய மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டிக்குப் பிறகு மாரியப்பன் அளித்த பேட்டியில், "இன்று விளையாட்டை ஆரம்பித்தபோதே லேசாக மழை தூரல் இருந்தது. ஆரம்பத்தில் சிரமம் தெரியவில்லை. ஆனால், 1.80 மீட்டர் உயரத்தைக் கடந்து தாண்டும் போது மழை அதிகமானது. மழைநீரில் நனைந்து எனது சாக்ஸ் ஈரமானது. அப்போது தான் நான் உண்மையான சவாலை சந்தித்தேன். எனக்கு டேக் ஆஃபில் (Take off) பிரச்னை தென்பட்டது. இல்லாவிட்டால் நிச்சயமாக 1.90 மீட்டரைக் கடந்திருப்பேன்" என்று கூறியிருந்தார். மத்திய அரசு மாரியப்பனுக்கு, 2017ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும், 2020ஆம் ஆண்டில் இவருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் வழங்கி கெளரவித்தது. 2017ஆம் ஆண்டு மாரியப்பனின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தை திரைப்பட இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ், ‘மாரியப்பன்’ என்ற பெயரிலேயே இயக்குவதாக அறிவித்திருந்தார். பின்னர் சில காரணங்களால் இத்திரைப்படம் கைவிடப்பட்டது. 2016இல் ரியோ பாராலிம்பிக், 2021இல் டோக்கியோ பாராலிம்பிக் என இரு சர்வதேச போட்டிகளில் தங்கம், வெள்ளி என பதக்கங்களை வென்றதன் மூலம், பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக ஒரே பிரிவில் இரண்டு முறை பதக்கம் வென்ற பாராலிம்பிக் வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் மாரியப்பன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgw531xy30o
  26. சாதனை நிகழ்த்தி பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி கிரின்ஹாம்! பாரிஸ் பராலிம்பிக்கில் பிரிட்டனைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனையான ஜொடீ கிரின்ஹாம், மகளிருக்கான வில்வித்தைப் போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். 7 மாத கர்ப்பிணியான அவர்இ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருந்த சக நாட்டு வீராங்கனையான பேட்டர்சனை வீழ்த்தி வெண்கலம் வென்றார். இதன் மூலம் விளையாட்டுத்துறையில் பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி என்ற பெருமையை தொடரில் படைத்துள்ளாா். https://athavannews.com/2024/1398066
  27. இவர்களைவிட செல்வம், சிறீக்காந்தா, சிவாஜி, சித்தார்த்தன், அனந்தி வகையறா புலமைசார் மேன்மக்கள் அதிகம் தகுதி படைத்தவர்கள்! இதில் பிள்ளையான் சூப்பர் தெரிவு, குழந்தைப் போராளியாக இருந்து பின்னர் கிழக்கு மாகாண முதல்வராகி தன் திறமையை வெளிப்படுத்தியவர். ஶ்ரீதரனுக்கு திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் அபிவிருத்தி அமைச்சர் பதவி கொடுக்கலாம்.
  28. என்னை பாட வைத்து ஏமாற்றிய இயக்குநர்! | 'வாழை' படத்தில் பேசாததை பேசுவோம் | சித்தன் ஜெயமூர்த்தி
  29. இரண்டாவது வாக்கையாவது தாருங்கள் என்று பேரினவாத கட்சிகள் கேட்பது பொதுவேட்பாளருக்கு கிடைத்த வெற்றியே.
  30. முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை பீரிஸ் என்பவரின் அறிவுரை சஜித்துக்கு ஆதரவான வாக்குகளை வீணாக்குகின்ற வேலை போல தெரிகின்றது ஏன் என்றால் இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றி தெரிந்தவர்கள் சொன்னது படி புள்ளடி போடுவதானால் ஒருவருக்கு மட்டுமே போட முடியும் இரண்டு புள்ளடிகள் போட்டால் அந்த வாக்கு செல்லுபடியற்றதாகிவிடும்
  31. தமிழரின் அரசியல் இருப்பின் வீழ்ச்சிக்கும் சுமந்திரன்தான் காரணமா? இலங்கைத் தமிழர் இந்தியாவிற்கு விசுவாசமாக, ஆதரவாக இருக்குவரை இலங்கைத் தமிழரின் அரசியல் இருப்பு வீழ்ச்சியடைந்துகொண்டே செல்லும்.
  32. எதையும் சொல்லுங்கள் பேச்சுவார்த்தை குழப்பி அடிக்கப்பட்டது என்று கூற வேண்டாம் காரணம் தமிழருக்கு 1,.வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி கொடுப்பது இல்லை 2,..வடக்கு கிழக்கு மாகணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை கொடுப்பது இல்லை 3,..வெளிநாடுகளிடமிருந்து நிதியுதவி பெறும் அதிகாரமில்லை எந்தவொரு அபிவிருத்தியும். மத்திய அரசின் ஒப்புதல் இன்றி செய்யும் அதிகாரங்கள் கொடுப்பது இல்லை 4,. இந்த எல்லா பேச்சுவார்த்தைகளும். பேச முதலே இலங்கை அரசு குழப்பி அடித்து விட்டது 5. தமிழர்கள் நாங்கள் எப்படி ?? என்னத்தை குழப்பி அடிப்பது?? 6... இன்றைக்குக்கூட இலங்கை அரசு விரும்பினால் டக்ளஸ் முதலமைச்சர் கருணா பாதுகாப்பு அமைச்சர் பிள்ளையான் உள்நாட்டு அமைச்சர் சாணக்கியன் நிதியமைச்சர் சுமத்திரன். நீதி அமைச்சர் சுமத்திரன். வெளிநாட்டு அமைச்சர் இப்படி ஒரு வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி கொடுக்கலாம் யார் மறிப்பது??? எவருமில்லை ஆனால் இவர்களையும் நம்ப அவர்கள் தயார் இல்லை எனவே… தயவுசெய்து தமிழர்கள் பேச்சுவார்த்தை குழப்பினார்கள் என்று சொல்லாதீங்கள். 🙏
  33. மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி, ஒலிம்பிக் போட்டி நடந்த அதே பாரிஸ் நகரில் இப்போது நடந்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா எட்டுப் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியிருக்கிறது. இது இந்தியா 2024ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வென்ற மொத்தப் பதக்கங்களை விட அதிகம். அது மட்டுமல்ல, இப்போது பதக்கப் பட்டியலில் பதினைந்தாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. இது இன்னும் முன்னேறலாம். இந்தியா தனது 2024 ஒலிம்பிக்கை 71வது இடத்தில் நிறைவு செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். நமது பிள்ளைகளை ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்கிறார்களோ இல்லையோ இந்தப் பாராலிம்பிக் போட்டிகளைப் பார்க்க நாம் ஊக்குவிக்க வேண்டும். அங்கே வலிக்கிறது, இங்கே வலிக்கிறது என்று சொல்லிவிட்டு சாதாரண உடற்பயிற்சிகளைக் கூட செய்யாமல் இருப்பவர்களுக்கு பாராலிம்பிக் வீரர்கள் மண்டையில் ஓங்கி ஒரு குட்டு வைத்து சொல்லித் தருகிறார்கள். ஏதேதோ பிரச்னைகள், அழுத்தங்கள் என்ற மனநிலையோடுதான் கால்களை மட்டுமே பயன்படுத்தி அம்பு எய்யும் ஷீத்தல் தேவியின் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு இரண்டு கைகளையும் பயன்படுத்தி அம்பு எய்பவர்களோடு சரி சமமாகப் போட்டி போடும் ஷீத்தலின் வயது வெறும் பதினேழுதான். ஆனால் 10, 9 என்ற புள்ளிகளை விட குறைவாக ஒரு அம்பு கூட செல்லவில்லை. பாராலிம்பிக் இருபாலருக்குமான அம்பு எய்தும் போட்டியில் ஷீத்தல் வெண்கலம் வென்றாள். அந்த அறிவிப்பு வந்தபோது அனைவரும் மகிழ்ந்து கொண்டாட அவள் கண்கள் கலங்குகின்றன. துடைத்துக் கொள்ள நீளும் கைகள் இல்லை அவளுக்கு. கலங்கத் தொடங்கிவிட்ட என் கண்களை துடைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். நானெல்லாம் பிரச்னை என்று சொல்லிக் கொள்ளவே தகுதியற்றவன் என்பதை ஷீத்தல் மட்டுமல்ல பாராலிம்பிக்கில் போட்டியிடும் ஒவ்வொரு வீரனும் வீராங்கனையும் எனக்கு உணர்த்தி விட்டார்கள். வீரம் என்பது முதலில் நம்மை வெல்வது. நம் மனம், உடல் தரும் தடங்கலைத் தாண்டி போட்டிக்கு வந்து நிற்பது. அதற்குப் பிறகுதான் வெற்றி தோல்வி எல்லாம். பாராலிம்பிக் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாகிறது. தவறாமல் பாருங்கள். Shan Karuppusamy 03-09-24
  34. 2009 க்கு பின்னர் எந்த ஒரு அசைவும் அற்ற இனமாக எம் இனம் இருப்பதற்கு காரணம் புலிகள் இல்லாத இந்த இடைவெளியை அவர்கள் எப்பொழுது தொலைவார்கள் என்று காத்திருந்து அதற்காக அல்லும் பகலும் உழைத்து காத்திருந்த காவாலிகள் அந்த இடங்களில் புகுந்து விட்டது தான். 😡 தாயகத்தில் மட்டும் அல்ல புலம்பெயர் தேசங்களிலும் அதே நிலை தான்.
  35. விசுகு... சரியாக சொன்னீர்கள். நாங்கள் செய்யவும் மாட்டம், செய்யுறவனையும்.. கேலியும், நையாண்டியும் சொல்லிக் கொண்டு இருப்பம்.
  36. பாரிஸ் பாரா ஒலிம்பிக் Badminton போட்டியில்... தமிழ் நாட்டை சேர்ந்த நித்திய ஸ்ரீ வெண்கலப் பதக்கம் வென்றார். ஏற்கெனவே நடந்த Badminton போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த துளசிமதி வெள்ளியும், மணிஷா வெண்கலமும் வென்றுள்ளனர். இம்முறை நடக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில்... பதக்கங்களை அள்ளிக் குவிக்கும் தமிழர்களுக்கு பாராட்டுக்கள். 🙂
  37. Paadhavathi | Vaazhai | Kalaiyarasan | Jayamoorthy, Meenakshi | Santhosh Narayanan | Mari Selvaraj சித்தன் ஜெயமூர்த்தி பாடியது.
  38. அரியத்தாருக்கு போதிய வாக்குகள் விழாவிடின் நட்டம் அவருக்கல்ல!!
  39. யாழ். நல்லூர் ஆலய சூழலில் இளைஞர்கள் குத்தாட்டம்: மாநகர சபை பராமுகம் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலய சூழலில் துள்ளல் இசை பாடல்கள் ஒலிக்க இளையோர் குத்தாட்டம் போடுவது தொடர்பில் யாழ்.மாநகர சபைக்கு பல தரப்பினர் பல்வேறு தடவைகள் அறிவித்தும், எவ்விதமான நடவடிக்கைகளையும் மாநகர சபை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நல்லூர் திருவிழா காலங்களில் ஆலய சூழலில் மாநகர சபையினால் கடைகள் குத்தகைக்கு வழங்கப்படும் போது, "பக்தி கீதங்கள் மட்டுமே ஒலிபரப்பு செய்யமுடியும்" எனும் நிபந்தனையுடனையே கடைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. கடைகளை குத்தகைக்கு எடுத்தவர்கள் நிபந்தனைகளைமீறும் பட்சத்தில், மாநகர சபையினால் எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதோடு, அதனையும் மீறினால் ஒலிபரப்பு சாதனங்களை பறிமுதல் செய்யப்படும். மக்களுக்கு இடையூறு இந்த நிலையில், இம்முறை மாநகர சபையினர் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையிலும் குறித்த ஒரு கடைக்கு எதிராக மாத்திரம் நடவடிக்கை எடுக்காது இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக கடைக்கான இடத்தினை மாநகர சபையிடம் குத்தகைக்கு பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் திருவிழா காலங்களில் இரவு வேளைகளில் கடையில் பெரிய திரையில் (8 X 10 LCD) திரையில் துள்ளல் இசை பாடல்களை ஒளி ஒலிபரப்பு செய்வதனால் , அவ்விடத்தில் கூடும் இளையோர் அதற்கு குத்தாட்டம் ஆடி , அவ்வழியாக செல்லும் ஏனையோருக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கோரிக்கை இதன் படி, சம்பவம் தொடர்பில் தியாக தீபத்தின் நினைவிடம் மற்றும் ஆலய சூழலில் களியாட்ட நிகழ்வுகள் போன்று இவ்வாறான செயற்பாடு நடைபெறுவது தொடர்பில் மாநகர சபையினருக்கு பல தடவைகள் முறைப்பாடுகள் செய்த போதிலும் மாநகர சபையினர் எவ்விதமான நடவடிக்கையும் குறித்த நபர்கள் மீது எடுக்கவில்லை என்றே குறிப்பிடப்படுகிறது. நல்லூர் ஆலய பூங்காவன உற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலையும் நாளைய தினம் புதன்கிழமை வைரவர் சாந்தி உற்சவமும் நடைபெறவுள்ள நிலையில், பெருமளவான மக்கள் ஆலயத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதனால் , பின் வீதியில் துள்ளல் இசை பாடல்களை போடும் குறித்த நபர்களுக்கு எதிராக மாநகர சபையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். https://ibctamil.com/article/municipal-council-did-not-take-any-action-jaffna-1725356308

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.