Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    29
    Points
    88831
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    3127
    Posts
  3. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    9308
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    35001
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/22/24 in Posts

  1. 👍.......... என்னுடைய batchmate அநுர ஜனாதிபதியாக வந்தது மிகச் சந்தோசம்.......... இலங்கைப் பக்கம் போகும் போது இந்த தொடர்பு கை கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை............🤣. ஆனாலும் அங்கு படிக்கும் நாட்களில் ஒருநாள் எங்கள் வகுப்பில் இருவருக்கு கன்னத்தை பொத்தி விழுந்ததும் நல்லாவே ஞாபகத்தில் இருக்குது...............🫢.
  2. இது புலம்பெயர்ஸ்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி. புலம்பெயர்ஸ் இனியாவது நிலத்தில் உள்ள மக்களின் மனநிலையறிந்து தேவையறிந்து செயற்பட வேண்டும். தற்போதும் காலம் கடந்துவிடவில்லை.
  3. புலம்பெயர் புண்ணியவான்கள் கம்மெண்டு இருந்தாலே போதுமானது. தாயகத்து மக்கள் தமது அரசியலைத் தகவமைத்துக்கொள்ளுவார்கள்!
  4. அரியநேந்திரனுக்கு வடக்கில் (யாழ்ப்பாணம் - வன்னி தேர்தல் தொகுதிகளில்) கிடைத்த வாக்குகளாக ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 65 வாக்குகளை பெற்றிருக்கிறார்... இவருக்கு எதிர்த்தரப்பில் போட்டியிட்ட சிங்களக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கியுள்ள வாக்குகள் 4 லட்சத்து இரண்டாயிரத்து 228… தமிழ் பொதுவேட்பாளருக்கு வழங்கிய வாக்குகளைவிட தமிழ் மக்கள் சிங்களக் கட்சியினருக்கு வழங்கியுள்ள வாக்குகள் கிட்டத்தட்ட முன்று மடங்கு அதிகம்… கிளிநொச்சியில் (யாழ்ப்பாணத்தில்தான் கொஞ்ச முஸ்லீம் சிங்கள மக்கள் இருக்கிறார்கள் ஆனால் கிளிநொச்சியில் தூய தமிழ் ஏரியா) தமிழ்ப் பொது வேட்பாளரைவிட (20348) சிங்களக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகள் இரண்டு மடங்கு அதிகம் (40558).. ஒவ்வொரு தொகுதியிலும் இதுதான் நிலமை… அவ்வளவு பந்தி எழுத்துக்கள் இணைய பத்திரிகை பிரச்சாரங்கள் புலம்பெயர்ஸ் பலரின் ஆதரவு நிதிபங்களிப்பு பிரச்சாரம், பெரிய தமிழ் அரசியல்கட்சிகள் பலவற்றின் அங்கத்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு மற்றும் பிரச்சாரம் இவற்றுடன் வலம் வந்து அரியம் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடுகையில் எந்தப் பிரச்சாரமும் செய்யாத - யாருமே ஆதரவளிக்காத - சிவாஜிலிங்கம் 2019 தேர்தலில் பெற்ற வாக்குகள் 12 ஆயிரத்துச் சொச்சம்... வடக்கு கிழக்கிலுள்ள 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் வாக்குகளில் அரைவாசிக்கு மேலாவது எடுத்திருக்கவேண்டாமா அரியம்? இவரைவிட சிவாஜி பெற்றவாக்குகள் 12 ஆயிரத்துச் சொச்சம் வாக்குகள் தர்மப்படி அதிகம்.. பொதுவேட்பாளர் கோமாளிகள் இல்லாவிட்டால் அனுராவின் வெற்றி கடினமாகி இருந்திருக்கும்.. அனுரா தரப்பு யுத்தத்துடன் எந்த விதத்திலும் சம்பந்தப்படாதது.. யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பையும் அரசியலில் இருந்து அகற்றியாச்சு.. இனிமேல் ஆட்சியில் இருப்பவர்களை போரின் பங்காளிகளாக விரல்காட்டி நீதிகோரும் அழுத்தங்களை வழங்கமுடியாது… சிங்களத் தரப்பினர் தமிழர்கள் விடயம் உட்பட சகலதிலும் புதிய அணுகுமுறையோடு களத்திற்கு வந்திருக்கிறார்கள்… யுத்தமும் அதன் பின் நீண்ட ஒன்றரை சகாப்தமும் முடிந்து இப்பொழுது சிங்களதேசம் கடந்தகால யுத்தங்களை, வெற்றிகளை பேசி உசிப்பேத்த முடியாத( ஏனெனில் அதில் பங்கெடுக்காத படியால்) ஒருதரப்பை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறது.. இவர்களுக்கும் கடந்தகால போருக்கும் போர்க்குற்றங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சர்வதேசத்துக்கும் தெரியும்.. ஆக இன்று பெரும் இக்கட்டில் மாட்டியிருப்பது தமிழர் தரப்பு… மாட்டவைத்ததில் பொதுவேட்பாளர் கோமாளிகளின் பங்கும் உண்டு.. தமிழ் தேசியத்தின் வீழ்ச்சிக்கான முதல் ஆணியை பொதுவேட்பாளர் கூட்டம் அடிச்சு விட்டிருக்கு.. அது இருக்க இங்கு யாழில் பொதுவேட்பாளருக்கு முட்டுக்கொடுப்பவர்கள் இவர்கள் பொதுவேட்பாளர்கள் தரப்பு சந்திக்கப்போகும் சர்வதேசம் யார் என்று சொல்லிட்டு போங்க… யார் யார் அந்த செய்தியை கொண்டு போகப்போறாங்க..? இந்த பொதுவேட்பாளர் கூட்டே இந்த தேர்தலுக்கு மட்டுமே ஒப்பந்தம் போட்டு சேர்ந்த கூட்டு.. இன்றுடன் அந்த ஒப்பந்தங்களும் காலாவதியாகின்றன.. இனிமே இந்த பொதுவேட்பாளர் கூட்டில் யார் இருப்பார்கள்..? அதன் எதிர்காலம்..??
  5. பொது வேட்பாளர் என்பது இன்றைய தமிழரின் அபிலாசைகளை கருதி பிறந்த குழந்தை. அது உடனேயே ஓட்டப்போட்டியில் வெற்றி பெறவேண்டுமென நாம் நினைத்தால்; அது நமது தவறு. அதுவும் இரண்டுபட்ட தமிழரசுக்கட்சியை வைத்துக்கொண்டு எதிர்பார்ப்பது நமது அனுபவக்குறைவேயல்லாமல் வேறொன்றுமில்லை. அவர் வெற்றி பெறாததால் ஒன்றும் குடிமுழுக்கப்பபோவதில்லை. எமது தேவைகளை, அபிலாசைகளை முன்னிறுத்தியுள்ளது. அது சிங்களத்துக்கும் புரியும். அனுரா அதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய பாதையில் பயணிப்பது முதலில் சிரமமாகத்தான் இருக்கும், போகப்போக அதன் ஏற்ற இறக்கங்கள் புரியும்.
  6. சிங்களம் தமிழரின் சகவாழ்வு குறித்துச் சிந்திக்கும் என இத்தனை அழிவுகள் அதன் பின்வந்த 15 ஆண்டுகால சிங்களத்தின் நகர்வுகள், அதற்குச் சான்றாகத் தமிழர் தெருக்கள் தோறும் பௌத்த அடையாளங்களை நிறுவுதல் என்று சிஙகள அரசு செய்துவருகின்றது. இதனை எதிர்த்து ம.வி.மு எங்காவது ஒருவார்த்தை கூறியுள்ளதா? இந்த (அவ)லட்சணத்தில் அநுரா வந்தால் தேனும் பாலும் தெற்கிலிருந்து வட-கிழக்கு நோக்கிப்பாயப்போகுதாம் என்று நம்புவோரை நினைத்து... நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  7. நீங்கள் நித்திரை கொள்ளப் போகின்றேன் என்று போய் விட்டீர்கள்............. நாங்கள் இப்படியே இது இழுபடுவதை பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்............🤣.
  8. தாங்களும் ஒரு பிரதேச வல்லரசு, அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தால் உலக வல்லரசு ஆகி விடுவோம் என்ற ஒரு ஆசை தான்..................🤣. சுற்றிவர இருக்கும் நாடுகளில் பூட்டானைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் வேறு பக்கம் சாய்ந்துவிட்டன. ஷேக் ஹசீனா ஓடியவுடன் பங்களாதேஷும் 'ரசாக்கள்' ஆகிவிட்டனர். இலங்கை இன்றுடன் 'மாவோ நமோ நமோ.....' என்று அந்தப் பக்கமும் சரியும். நேபாளும், மாலதீவும் ஏற்கனவே போய்விட்டன. அதானியின் மன்னார் காற்றாலையை காப்பாத்துவதே வல்லரசு இப்ப செய்ய வேண்டியது...........🤣.
  9. யதீந்திராதான் எழுதிய வித்துவான்! https://www.facebook.com/share/JXanQwQr5LuWsQiY/?mibextid=WC7FNe
  10. இன்னும் மூன்று வரிசத்தில் இந்த மனிசனை மீண்டும் தேடிப் பிடித்து ஆட்சி அமைக்க சொல்லும் நிலை வராவிடின் மகிழ்ச்சி. பார்ப்பம் 69 இலட்சம் பேரின் தெரிவு பாணுக்கும் பருப்புக்குன் லைனில் நிற்க வைத்தது இப்ப 56 இலட்சம் பேரின் தெரிவு என்னாகும் என்று.
  11. மற்றைய ஜனாதிபதிகள் போல் ஒரு பக்க சார்பாக நடக்காமல், தமிழ் இனத்தின் கோரிக்கைகளையும் செவிமடுத்து, புதிய பாதையில் அரசமைக்க…. அனுரவிற்கு வாழ்த்துக்கள்.
  12. அனுராவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். வாழு வாழவிடு. இரு இனங்களும் மனசு வைச்சால் இலங்கை சொர்க்க பூமியாகும்.
  13. அனுராவிற்கும் சஜித்திற்கும் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசம். அரியம் எடுத்தது 2 லட்சம் மட்டுமே. அவரின் முழு வாக்குகளும் சஜித்திற்கு விழுந்தாலும் சஜித் முன்னுக்கு வந்திருக்க முடியாது. அண்ண கணக்கில கொஞ்சம் வீக் போல இருக்கு. அதுசரி கூட்டமைப்போ, தமிழரசுக்கட்சியோ ஆதரித்த எந்த வேட்பாளர் ஜனாதிபதியாக வந்துள்ளார்? முதலில் வெல்லப்போகும் குதிரையில் பந்தயம் கட்டவேண்டும் இல்லையா மூடிக்கொண்டு ஓரமா படுக்கவேண்டும்.
  14. நிலாந்தன், யதீந்திரா, சோதிலிங்கம், தமிழரசு என்றொரு வரிசையை நான் கண்டேன் அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல இன்று நானும் ஏமாந்தேன்!😂
  15. @ரசோதரன் அண்ணை உங்க ஆசை நிறைவேறிவிட்டது!! இரண்டாம் சுற்று எண்ணப்படுகிறது.....
  16. அத்துடன்... அரியநேத்திரன் தமிழர் அரசியலில் பிரபலமான ஆளும் இல்லை. தமிழ் அடையாளத்துக்காக நிறுத்தப் பட்ட ஆளே... மிகவும் எளிய முறையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின் மூலம் இலங்கையின் நாலாவது இடத்தைப் பிடித்தது வெற்றிதான். 💪 அதை ஜீரணிக்க இங்குள்ள சிலருக்கு கஸ்ரமாக இருக்குது. அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாது. புலம்பிப் போட்டு.. குப்புற படுக்க வேண்டியதுதான். 😂 🤣
  17. NPP ANURA KUMARA DISSANAYAKE 2,459,99339.44% SJB SAJITH PREMADASA 2,124,29834.06% IND16 RANIL WICKREMESINGHE 1,094,42617.55% IND9 ARIYANETHIRAN PAKKIYASELVAM 210,3793.37% SLPP NAMAL RAJAPAKSA 142,5892.29% அரியநேத்திரன் அகில இலங்கை ரீதியில் நான்காவது இடத்திலும், நாமல் ராஜபக்சவை பின்தள்ளி, முன்னுக்கும் உள்ளார்.
  18. கந்தையா அண்ணை, இன்றைக்கு உங்களோட பேச்சுவார்த்தை கிடையாது. நீங்கள் கேட்கப் போகின்ற கேள்விகளில் இந்த தேர்தலில் யார் யார் நின்றார்கள் என்பதே மறந்து போய்விடும்...........🤣.
  19. இங்கு தமிழ் பொது வேட்பாளரை மக்கள் முழுமையாக ஒதுக்கவில்லை என்றாலும், தமிழ் மக்கள் ஒரு செய்தியினை சொல்லிவிட்டார்கள், இது ஒரு வகையில் தெளிவான செய்திதான் அனைத்து மக்களும் இலங்கையராக பயணிக்க கூடிய ஒரு சூழ்நிலை உருவானால் தமிழ் மக்களும் எந்த் வித தய்க்கமுமின்றி இணைந்து பயணிக்க தயாரக உள்ளார்கள் என்பதே, இது ஒட்டு மொத்த இலங்கைக்கும் கூறப்பட்டுள்ள செய்திதானே? இந்த பொது வேட்பாளரால் ஏற்பட்ட நன்மை எனக்கொள்ளலாம் (பொது வேட்பாலரை ஆதரித்தவர்களில் நானும் ஒருவன்). மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதனை புரிந்து புலம்பெயர் தமிழர்களும் செயற்படுவார்கள்தானே?
  20. ரசோதரன்…. மகிந்த கோஷ்டிக்கு இந்தத் தேர்தலில் தோற்போம் என்று தெரியும். ஆனால் அவர்களின் கோட்டையே தகர்ந்து போகும் அளவிற்கு… இந்தளவு மரண அடி விழும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 😁 போரை வென்ற வெற்றி நாயகன் என்ற விம்பம் எல்லாம் தவிடு பொடியாகி விட்டது. இனி…. சிங்களவர் யாரும், ஈழப் போரை வைத்து அரசியல் செய்ய முடியாது என நினைக்கின்றேன். சரத் பொன்சேகா எத்தனை வீத வாக்கு எடுத்தார் என்று அறிய ஆவலாக உள்ளது. 😂
  21. நாமல் மிக நிதானமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றார்............... 2.2% இலிருந்து 2.9% இற்கு வந்துள்ளார்.........
  22. சுமந்திரன் எந்தப் பக்கம் இனி போவார்? அது அவருக்கே தெரியாதாம்.😀
  23. பொதுவான Bottom trawling எனக் கூறப்படும் கடலடி இழுவைப் படகு மீன்பிடி முறை என்பது கடலின் நில மட்டம் வரை வலையைப் போட்டு இழுக்கப்படும் முறையைக் குறிக்கும். இங்கே கடல் அடித்தளத்தில் இருந்து வலைகள் மேலெழாதபடி இருப்பதற்காக பாரமான இரும்பு போன்ற உலோகப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாக்கு நீரிணைப் பகுதி ஓர் ஆழமற்ற கடர்பகுதியாக இருப்பதால் சூரிய வெளிச்சம் கடலின் அடிப்பகுதிவரை சென்று கடற்தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதனால் இங்கே கடல் உயிரினங்கள் தமது இனப்பெருக்கத்திற்காக இந்து சமுத்திரத்திலிருந்து இங்கே வருகின்றன. அப்படியாக வரும் கடல் உயிரினங்களில் இறால் மிகவும் முக்கியமான ஒன்று. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இறால் ஒரு மண்ணினுள் புதைந்து வாழும் உயிரினம். இந்த இறாலைப் பிடிக்க வேண்டும் என்றால் மண்ணின் அடிப்பாகத்தைக் கிளற வேண்டும். எனவே, இந்திய மீனவர்கள் தங்களது அதிக சக்திவாய்ந்த இழுவைப்படகுகளால் கடலடித் தளத்தை கிளறுகிறார்கள். அப்போது மண்ணிலிருந்தெ மேலெலும் இறால் நண்டு, கடற் சங்கு போன்ற கடலுயிர்கள் வலையினுள் அகப்படுகின்றன. இவர்கள் கடலின் அடித்தளத்தை உழுகிறார்கள் என்பதே உண்மை. கற்பனை செய்து பாருங்கள் ; 500 இந்திய இழுவைப்படகுகள் கூட்டமாக மன்னார் தீவுப்பகுதியில் இருந்து வடக்கு நோக்கி கச்சதீவு வரை ஒரு 50 KM தூரத்திற்குப் கூட்டமாக கடலடித் தளத்தை உழுதுகொண்டே செல்கிறார்கள். இப்போது அவர்கள் உழுதுகொண்டு போன பாதையில் எது மீதமாக இருக்கும்? இந்த மீனவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனை என்பது, அவர்கள் ஒவ்வொரு முறை கடலில் இறங்கும்போதும் நடுக்கத்தை உண்டுபண்ண வேண்டும். 😡
  24. மாங்காய் வடிவமான இந்து சமுத்திரத்தின்ர முத்து சிலோன்...... ஹொங் கொங் பிரச்சனை மாதிரி வராவிட்டால் சந்தோசம். 😎
  25. குட்டி தனி நாடு இருப்பது உண்மை தான் என நானும் நினைக்கிறேன்... இந்தியாவுக்கு கச்சைதீவை வைத்த அரசியல் செய்ய தெரியாத நிலை...இதில் அவர்கள் 13 யை வைத்து வெருட்டுவினமே.... புலி புராணம் பாடி சிங்களவர்களை கைக்குள் போட முயற்சிப்பினம் அதுவும் தோல்வி தான்...முடிவடையும் ...இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் இன்னும் பழைய பாடப்புத்தகம் தான் படிக்கினம் போல... சீனாவின் சிறிலங்கா தனிநாட்டில் அமெரிக்கா இந்தியா நிறுவனங்கள் செயல் படுவதாக கேள்வி
  26. என்ன அரியம் வெண்டதுக்கு ஸ்ரீதரன் எம் பி ண்ட bar லதான் பாட்டியாம்..?
  27. கோபம் இருக்கிற இடத்தில் தான் குணமிருக்கும் அண்ணை! நம்பிக்கை தானே வாழ்க்கை.
  28. “இது எம்மனைவரதும் வெற்றியாகும்“ பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகிக்கொண்டிருக்கிறது. இந்த கனவை நனவாக்குவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளது. அதற்காக என்னால்உங்களுக்கு நன்றிகூற முடியாது. அதற்கான காரணம் அது என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின் பெறுபேறாகும். இது எம்மனைவரதும் வெற்றியாகும். நாங்கள் மாத்திரமல்ல இந்த வெற்றிக்காக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தமது இரத்தம், கண்ணீர், வியர்வையை மாத்திரமன்றி உயிர்களைக்கூட தியாகம்செய்துள்ளார்கள். எமக்கு முந்திய தலைமுறையினர் எம்மிடம் கையளித்த குறுந்தடியில் வீணாகிப்போய்விடாத அவர்களின் முடிவிலா அர்ப்பணிப்பே பொதிந்துள்ளது. அதன் சுமையை நாங்கள் நன்றாகவே அறிவோம். எதிர்பார்ப்புகள் நிறைந்த உங்களின் இலட்சக்கணக்கான விழிகள் எமக்கு தெம்பூட்டுகின்றன. இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுதவேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றன. கனவை முழுமையாகவே யதார்த்தபூர்வமானதாக அமைத்துக்கொள்வதற்காக இந்த மண்ணுக்கு புத்தம்புதிய ஆரம்பமொன்று அவசியமாகும். சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்றுசேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன்மீதுதான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும். வாருங்கள் நாங்கள் அதற்காக கைகோர்த்துக்கொள்வோம்! https://oruvan.com/sri-lanka/2024/09/22/its-a-win-for-all-of-us அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம்..
  29. வெய்ட் பண்ணுங்க அண்ணை, நிலாந்தன் மாஸ்டர் ஆய்வு எழுதிக்கொண்டிருக்கிறாராம்! உங்கட பீலிங்ஸுக்கெல்லாம் பதில் தருவார்!🤣
  30. இதுதான் என் கருத்தும். இனியும் மோட்டுத்தனமாய் நடக்காமல்.... எங்களை வாழ விடு நீயும் வாழ்வாய். காச மட்டும் தாங்கோ மிச்சத்த நாங்க பாத்துக்கிறம் பீலிங்....🤣
  31. 65 வீதத்திற்கும் மேல் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட பொது வேட்பாளரை மக்கள் திரளாக ஒன்றிணைந்து ஆதரவு கொடுத்துள்ளனர் என்று சொல்வதன் மூலம் நீங்கள் எல்லாம் ஒரு காலத்திலும் திருந்தப் போவதில்லை என்பதையே எமக்கு மீண்டும் நிரூபிக்கின்றீர்கள். போரும், அழிவும், குண்டு மழையும், இடப்பெயர் வாழ்வும், பொருளாதார சீரழிவும் காணாமாக்கபடுதலும் கூட தமிழ் மக்களை தமிழ் தேசிய அரசியலில் இருந்து விலகிப் போகச் செய்யவில்லை. ஆனால் உங்களின் தூர நோக்கற்ற, தம் இருப்பை மட்டும் பேணுகின்ற வெற்று கோச அரசியல் அவர்களை தமிழ் தேசிய அரசியலில் இருந்து விலத்தி செல்ல வைத்துள்ளது. சிங்களம் செய்ய முற்பட்டு செய்ய முடியாமல் போனதை 15 வருடங்களில் தமிழ் அரசியல் கட்சிகள செய்து முடித்து விட்டன.
  32. "தமிழ் தேசிய அரசியலையும் உணர்வையும் மேலும் நீர்த்து போகச் செய்வது எவ்வாறு"
  33. ஒரு விடயம் தொடர்பாக இது சரிவராது, இது சரிவராது என்று ஒருவர் அடிக்கடி சொல்கிறார் என்றால், அது சரிவராது என்று அர்த்தம் அல்ல. அது சரிவரக்கூடாது என்பது அவரது விருப்பமாகவும், தெரிவாகவும் இருக்கிறது என்று அர்த்தம்.
  34. அனுரவின் வெற்றி உங்கள் கருத்துக்கு எதிராக இருக்கிறதே. அனுரவின் கட்சி வெல்லும் என கடந்த தேர்தல்களில் யாரும் நினைக்கவில்லை. தமிழரசுக்கட்சியிலுள்ள புல்லுருவிகளை களைந்தால் நமக்கு வெற்றி நிட்சயம். சளைக்க மாட்டோம். தமிழர் எல்லோரும் கடந்த காலத்தில் தமிழரசுக்கட்சிக்கு மட்டுமா வாக்களித்தனர்?
  35. ஒம் பையன். தமது வயிற்றில் அடித்த ரணிலை சிங்கள மக்கள் மன்னிக்கத் தயார் இல்லை. அவர்களை பாதுகாத்த ரணிலை, பழி வாங்கி விட்டார்கள். ஆனால்… ரணிலுக்கும், பாராளுமன்றத்தில் அவர்களின் தயவு தேவைப் பட்டதால் அவாரால்… அவர்களை பகைத்துக் கொண்டு போக முடியவில்லை. ரணில் ஒற்றை ஆளாக இருந்து கொண்டு ஜனாதிபதியானது ஒரு சாதனை எனறாலும், “அரகலய” போராட்டக் காரர்கள் போட்ட பிச்சை அது.
  36. அனுரவின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக தயார் செய்யப்பட்ட கேக்குகளுக்கு வேலை இல்லாமல் போய் விடுமோ... 😲 இருக்காது. தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணி... கைகாட்டின ஆள் வெல்ல சந்தர்ப்பமே இல்லை. 😂
  37. அது கூட... எங்களுடைய சில புல்லுருவிகளுக்கு பிடிக்கவில்லை. ஒரே... வயித்தெரிச்சலில் புலம்பிக் கொண்டு திரிகிறார்கள். 😂
  38. அழகு சிரிக்கின்றது ........! 😍
  39. இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா கிடவாது. போர்க்காலத்தில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் விசாரிக்கப்பட்டு நீதிமன்றம் தண்டிக்கும் என்று அனுரா சொன்னதை நம்பி விட்டார்கள் போலுள்ளது. அனுராவுக்கும் தமிழருக்கும் சிண்டு முடியிற வேலை. அனுரா தமிழரின் கடந்த கால அழிவுகளை, காயங்களை கணக்கிலும் எடுக்க மாட்டார். காயங்களுக்கு கட்டு போடவோ, அனுதாபம் தெரிவிக்கவும் மாட்டார். தனது அரசியலை எப்படி வளர்ப்பது கொண்டு செல்வது என்பதே அவரது இலக்கு.
  40. என்னதான் சொன்னாலும் அதுகளுக்கு உறைக்காது புதுப்புது கெட்டப்பில் வந்து தாயக மக்களுக்கு அரியண்டம் குடுத்துக்கொண்டே நிக்குங்கள்!
  41. இது உங்களுக்கு சந்தோஷம் போல
  42. ஆட்சியில் இருப்பவரை சுற்றி…. ஒரு கோஷ்டி “ஜால்ரா” அடித்துக் கொண்டே இருக்கும். அதை நம்பி கனவு காண வெளிக்கிட்டால் அம்போதான். அதே கோஷ்டி… எந்த வெட்கமும் இல்லாமல், அடுத்து வருபவருக்கு ஜால்ரா அடிக்க கிளம்பி விடும். டக்ளஸ், செந்தில் தொண்டமான், அங்கஜன், பிள்ளையான் போன்றவர்களை கவனித்துக் கொண்டு இருங்கள், எல்லோரும் இரண்டு மூன்று மாதத்தில் அனுர கூடாரத்துக்கு போய் விடுவார்கள். ரணில்… கோவில் திருவிழாவில் தொலைந்த பிள்ளை மாதிரி தனியே நிற்பார். 😂
  43. நாமலின் தேர்தல் பிரச்சாரம் அம்பாந்தோட்டையில் நடந்த போது… கல்லெறியும் விழுந்தது. 😂
  44. அனுரா சேர்த்துகொள்வாரா எனப்து தான் பிரச்சனை?
  45. இல்லாட்டி… சிங்கள கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வடக்கையும் கிழக்கையும் இணைத்து விட்டுத்தான் அடுத்த அலுவல் பார்க்கும். 😀
  46. இன்று ரணிலுடன் நிற்கும் குண்டர்களும் முன்னர் மகிந்தவுடன் நின்று நாட்டைச் சுரண்டியர்களே. இதே கேள்வி எனக்குள்ளும் இருக்கிறது. அப்படி என்ன தான் கடுமையான வேலை செய்து ஊழைத்துக் களைத்திருப்பார்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.