Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்25Points88827Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்20Points46979Posts -
vasee
கருத்துக்கள உறவுகள்9Points3672Posts -
uthayakumar
கருத்துக்கள உறவுகள்8Points621Posts
Popular Content
Showing content with the highest reputation on 11/06/24 in Posts
-
தமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன்
8 pointsதமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன் தமிழ் யூடியூப் சில தம்பிமாருக்கு லொத்தர் சீட்டிலுப்பு விழுந்தது போல் சோக்காய் தான் வாச்சுப்போச்சு இலங்கை தேர்தல் திருவிழாவாச்சு சுத்தி அடிச்சு கதை பேசி சும்மா எல்லாம் உசுப்பேத்தி நாளுக்கு ஒரு கதை சொல்லி ஆளுக்கு ஒரு அரசியல் ஆய்வாளர் போல காலை ஒரு காணொளி மாலை ஒரு காணொளியாய் கனக்கவெல்லோ வருகுதிப்போ புலத்திலும் தான் நிலத்திலும் தான் சிங்கம் தனியா சிங்குலா வருகுது கோட்டைக்கு என்று வட்டுகோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு விலை சொல்லி அரசியல் வகுப்பு எடுக்கினம் யாருக்கும் ஒன்றும் தெரியாது போலவே கனக்க எல்லாம் புழுகியடிச்சு பணத்தை மட்டும் பார்கிறார்கள் சொந்த இனத்தை எண்ணி கவலை இல்லை இவர்களோடு கூட நின்று மேடை போட்டு முழங்கியது போலவே அருச்சுனன் பீமன் சகாதேவன் நகுலன் என்று நல்லாத் தான் நடிக்கிறார்கள் அந்தப் பாராளுமன்ற கதிரைக்காக ஆளுக்கு ஒரு சின்னத்தோட வீட்டுக்கு ஒரு வேட்பாளர் போல சிலர் சமத்துவமே வந்தது போல் தமிழர் பிரச்சினையே தீர்ந்தது போல் கனக்க வந்து காணொளியில் புழுகிறார்கள் நினைக்கவே கவலையாய் இருக்கு சமூக ஊடகங்கள் பொறுப்பாய் இல்லை ஏதோ ஒரு அலை எல்லோரையும் மயக்கத்தில தள்ளுது தமிழ் யூடியூப் தம்பிமாரே எல்லோரையும் சொல்லவில்லை நல்லோரும் உண்டு லைக்கை மட்டும் பார்க்காமல் கைக்கு வரும் காசை மட்டும் நினைக்காமல் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்காமல் பொறுப்பாய் கொஞ்சம் பேசுங்கள் அறிவாய் எதையும் அணுகுங்கள். பா.உதயன்✍️8 points
-
பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு!
வெளியில் எளிமையாக திரிகின்றார்கள். தேர்தலில் அமோக வெற்றி பெறுவார்கள் என நினைக்கின்றேன். மற்றும் படி தமிழ் வேட்பாளர்களை மக்கள் கணக்கெடுப்பதாக தெரியவில்லை. இதை எனக்கு சொன்னது வேட்பாளராக நிற்கும் என் உறவினர்.🙂 எனது சொந்தங்களில் 7 பேர் வேட்பாளராக நிற்கின்றார்கள்.4 points
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
நிச்சயமாக இது நடக்காது, இந்த போரில் உக்கிரேன் வெறும் அம்பு மட்டுமே, அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் தொழில்முனைவர்கள், சமூக ஆர்வலர்களினை குறிவைத்து சமாதானம் எனும் தொணிபட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், இரண்டு அதிகாரங்களுக்கிடையான போரில் அமெரிக்கா தனது நிலையினை தக்க வைக்க செய்யும் பிரயத்தனமே இந்த போர், ஆனால் இனி வரும் காலங்களில் அமெரிக்காவினது போரிற்காக ஐரோப்பா அதன் செலவினை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் அவ்வளவுதான் வித்தியாசம் போர் தொடரும் நிலையே காணப்படும் (அந்த செலவினை அமெரிக்கா ஐரோப்பாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும்.). உக்கிரேன், இரஸ்சியா போரினால் அழிவடையும் நிலை தொடரும், உலகம் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நிலையும் தொடரும்.3 points
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
ட்ரம்ப், புரின் லவ்வர்ஸ் மகிழ்ச்சிக் களிப்பில் இருக்கிறார்களெனத் தெரிகிறது😎. யாரோ இங்கே சுட்டியது போல போலந்து வீழந்தால், இவையள் அனேகமாக நான் முன்னரே ஒரு தடவை குறிப்பிட்டது போல Ramstein Airbase இற்கு ஷொப்பிங் பையோடு போனால் C-17 விமானத்தில் அத்திலாந்திக்கைத் தாண்டி வட அமெரிக்கா வந்து விடலாம். பிறகு இங்கால இருந்து "சீ..இதெல்லாம் ஒரு நாடோ?" என்று புதிதாக ஆரம்பிப்பினம் என நம்புகிறேன்😂. சீரியசாகப் பார்த்தால்: KFC க்கு வாக்குப் போட்ட கோழிகள் நிலை தான். ட்ரம்பும், வான்சும் அன்றாடம் போட்டுத் தாக்கிய இனக்குழுக்கள் பல்வேறு காரணங்கள் சொல்லி ஒன்று வாக்களிக்காமல் விட்டிருக்கிறார்கள், அல்லது டரம்புக்கே வாக்களித்திருக்கிறார்கள். உதாரணமாக, 20 வருடங்களாக முழு நீலமாக இருந்த என் மாநிலம் (கமலா வென்றாலும்) பெருவாரியாக ட்ரம்புக்கு வாக்களித்திருக்கிறது. வாக்களித்தது யார் என்று பார்த்தால் ஸ்பானிய அடி அமெரிக்கக் குடிகள். அனேகமாக, மெக்சிக்கரையும், ஏனைய ஸ்பானிய குடியேறிகளையும் ட்ரம்ப் அள்ளு கொள்ளையாக நாடுக் கடத்தும் போது இவையள் மகிழ்வினம் என நம்புகிறேன். அதே போல, கறுப்பின மக்களில் ஆண்கள் கமலாவுக்கு அவ்வளவு வாக்களிக்கவில்லை. ஏன்? "பெண் எங்களை ஆள்வதா?" என்ற மேலாதிக்க மனநிலை. அத்தோடு "சட்ட விரோதக் குடியேறிகள் உங்கள் தொழில்களைப் பறிக்கீனம்" என்று ட்ரம்ப் சொல்ல நம்பி விட்டார்கள். பகிடி என்னவென்றால் இதை நம்பிய பலர் வேலை வாய்ப்புகள் இருந்தும் வேலைக்குப் போய் உழைக்காமல் தெருமுனையில் நின்று ஈயோட்டிய "குடி மக்கள்"😎. அடுத்த பகிடி: அரபு அமெரிக்கர்கள். "ட்ரம்ப் சமாதானம் தருவார்" என்று நம்பியதாக வெளியே சொல்லிக் கொண்டு தான் இவர்கள் ட்ரம்பை நோக்கிச் சாய்ந்தார்கள். ஆனால், இவர்களின் உண்மையான காரணம், பெண் வெறுப்பு வாதம், ஒரு பால் உறவு, இடைப்பாலினர் மீதான வெறுப்பு என்பதாக இருக்கிறது. மோடி வாலா இந்திய அமெரிக்கர்களும், பலஸ்தீன/அரபு அமெரிக்கர்களும் ட்ரம்போடு ஒரே கட்டிலில்: The strangest bedfellows! தென்னிந்திய/சிறிலங்கா வழி அமெரிக்கர்களின் இலக்கோ பங்கு மார்க்கெட்டில் இப்போது வருவதை விட இன்னும் இலாபம் வர வேண்டும், அதை வைத்துக் கொண்டு ஊர் சுற்றுலா, ரெஸ்லா, மான்ஷன் வீடு என்று ஜாலியாக இருக்க வேண்டும் என்பதாக எனக்குப் புரிகிறது. வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகள், மனைவி, தங்களுடைய மண்ணிறத் தோல் கொண்ட வம்சாவழியினருக்கு, தாம் இறந்த பிறகும் நீடித்திருக்கும் ஆப்பை உருவாக்கியிருக்கிறோம் என்பது புரியாமலே ட்ரம்பை ஆதரித்திருக்கிறார்கள்.3 points
-
இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
நாங்கள் வழிபடுவதே பாலியல் சின்னம்தானே. கோயில் கோபுரங்கள் முழுதும் பாலியல் சிலைகள்தானே. மதங்கள் மனிதர்களை நல் வழிப்படுத்தவே இருக்க வேண்டும். அர்த்தநாதீஸ்வரர் இருப்பது இந்து மதத்தில்தனே ஆனாலும் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் ஆண்கள்தானே முடிவெடுக்கிறார்கள். விழாக்களில் கூட ஆண்கள் ‘சூட்’ அணிந்திருப்பார்கள். பெண்கள் சேலை அணிந்து வருவார்கள். அன்று கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறினாள். இன்று நிலமை அப்படி அல்ல. எந்த மதமானாலும் நல்லதை ஏற்க வேண்டும். அல்லதை களைய வேண்டும்3 points
-
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்; ராஜித சேனாரத்ன
இரண்டு தினங்களுக்கு முதல் ஒர் வீடியோ பார்த்தேன் அறூஸ் என்ற அரசியல் ஆய்வாளர் சொல்லியிருந்த்தார் சுவிஸ்லாந்து போல ஓர் அரசியல் கட்டமைப்பு இருந்தால் "புலம்பெயர்ஸ்"முதலீடுகளை செய்ய முன்வருவார்கள் என கூறியிருந்தார்...அதுதான் சும்மா நக்கலுக்கு அப்படி எழுதினேன்,,2 points
-
தமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன்
2 pointsஅப்படியே இந்த தவகரனுக்கு மட்டும் தனியே ஒரு கவிதை எழுதுங்கோ அண்ணை, கிளிநொச்சி சந்தைக்குள்ள புகுந்து சனத்தட்ட அநுரவுக்குத்தான் வாக்கு போடுங்கோ என்பதை அவர்கள் வாய்க்குள்ளாலயே புடுங்கி எடுக்க என்னமா படாத பாடு படுகிறார். தேர்தல் முறைமைப்படி பொதுமக்களிடம் தனிப்பட்ட ரீதியில் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்று கருத்து கணிப்புக்கள் நடத்துவதே தவறு என்று நினைக்கிறேன், இதெல்லாம் எப்படி அனுமதியோ தெரியல,2 points
-
பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு!
ஆர் வெண்டாலும்... உங்களுக்கு ஒரு "பார் பெர்மிட்" எடுத்து தர வேணும் என்று, இப்பவே சொல்லி வையுங்கோ குமாரசாமி அண்ணை. 😂2 points
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
ஐந்து மொழியில் அரைகுறை வித்தகம் உடையவருக்கும், அவரின் சக body களுக்கும், 1. உக்ரேனுக்கான, செலன்ஸிக்கான ஆதரவில் மாற்றம் இல்லை. அது ஒரு சுய நிர்ணயத்துக்காக போராடும் தேசிய இனத்தவனாக அதே நிலையில் இருக்கும் இன்னொரு தேசிய இனத்துக்கான ஆதரவு. 2. உக்ரேன் பற்றிய அத்தனை திரிகளிலும் - டிரம் 2025 இல் வந்தால் உக்ரேன்/செலன்ஸ்கி கதை ஓவர் எண்டே எழுதியுள்ளேன். அப்போ எழுதியதை கிரகிக்க மூளையில் திசுக்கள் இல்லாதவருக்கு, இப்போ இதை நான் புதிதாக எழுதுவது போல் தெரியலாம். அதுக்கு நான் பொறுப்பல்ல. அடுத்த 4 வருசம் புட்டின் காட்டில் மழைதான். ஈயூவில் யூகே சேர்ந்தாலும், சேராவிட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது. புலத்திலும், நிலத்திலும் தன் இனத்தின் எதிர்காலத்தை சிந்திப்பவரின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. 2009 ஐ இட்டு மேற்கின் மீது உங்களுக்கு இல்லாத கோவம் இங்கே வேறு எவருக்கும் இல்லை. ஆனாலும் இது உங்கள் கண்ணை மறைக்கவில்லை. புலிகளை - இனத்துக்கா நேசித்தவர்களுக்கும், புலிகளை “ஸ்கோர்” கேட்டு இன்பம் அடை, நேசித்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் இதுதான் வித்தியாசம்.2 points
-
அரசியல் சதிகள் அம்பலம்
2 pointsசாத்தான்.... இதில் குறை கூறும் பலர், புலிகளின் போராட்ட காலத்திலேயே... சிங்களத்துக்கும், ஓட்டுக்கு குழுக்களுக்கும் முட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்த ஆட்கள் என்பதால்.... இவர்களின் கருத்தை மினைக்கெட்டு வாசித்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இவர்களை பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. "மூக்கு இருக்கும் மட்டும்... சளியும் இருக்கும் என்பது போல்", இவர்களை, சகித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். 😂 🤣2 points
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
கமலாவின் தெரிவின் போதே டிரம்ப் தான் வெல்வார் என்பது தெரிந்ததே. ஆனால் நான் டிரம்ப் ஆதரவாளர் இல்லை. அவர் ஒரு இனவாதி மரத்தில் இருந்தபடி மரத்தை தறிக்கும் வேலையை நான் ஒரு போதும் செய்வதில்லை. இவருடைய வெற்றி விரைவில் வேகமாக நாம் வாழும் நாடுகளுக்கும் பரவும்.2 points
-
கோத்தாபயவுக்கு எதிரான அரகலய போராட்டத்தின்போது புலம்பெயர் புலிகள் தலையீடு! நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு
இது உண்மைக்கு புறம்பான செய்தி ஆர் ஆட்சியில் அமர்த்தினார்களே அவர்களே அடித்தும். ஓட ஓட. விரட்டியடிச்சிட்டார்கள். இப்போது புலிகள் இல்லை புலம்பெயர் நாடுகளில் புலிகள் இல்லை இருப்பது எல்லாம் டுப்பிலிக்கேட். போலி புலிகள் மட்டுமே உண்மை புலிகள் 2009 இல். அழிக்கப்பட்டு விட்டார்கள் நீங்கள் திறமையான ஆட்சி வழங்கியிருந்தால் நாட்டை விட்டுட்டு ஒட வேண்டிய தேவை இருந்து இருக்காது 🙏2 points
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
உக்ரைன் போரில்…. பைடன் அரசு காட்டிய அதீத ஆர்வமும், ஆயுதம் வழங்கலும்தான் கமலாவின் தோல்விக்கு முதன்மையான காரணமாக இருக்க முடியும்.2 points
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
பொய்யான அரசியல் என்றுமே நிலைப்பதில்லை என்பதற்கு இந்த அமெரிக்க தேர்தல் நல்ல உதாரணம். இது போல் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் மாற்றங்கள் வரும் என நம்பலாம். கேடு கெட்ட உக்ரேன் ஊத்தை அரசியல் இனியும் இந்த உலகிற்கு வேண்டவே வேண்டாம்.2 points
-
அரசியல் சதிகள் அம்பலம்
2 pointsகாணொளியை முழுமையாகப் பார்த்தேன். இவர் எம்மைப்போல் ஒரு சாமான்யன் அல்ல. நீண்ட காலம் இவ்வாறான அரசியல் ஆய்வுகளை செய்பவர். புலம் பெயர் அரசியல் அமைப்புகளுடன் நீண்டகாலமாக தொடர்சசியான தொடர்புகளை பேணுபவர். ஆகவே இவர் கூறியவற்றை நடைமுறைப்படுத்துவதானால் இவரும், இவரது புலம் பெயர் அமைப்புக்களும் கூட்டாக தாயகம் சென்று, இதை மக்களுக்கு புரியவைத்து மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்று இவர் இப்போது கூறியவற்றை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான குறைந்த பட்ச முயற்சிகளையாவது எடுத்திருக்க வேண்டும். புலம் பெயர் தமிழ் அரசியல் அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பவராதலால் இதற்குத்தேவையான நிதிவளத்தையும் கொண்டவராகவே இருப்பார். ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்கு இந்த ஞானோதயம் வந்திருந்தாலும் தாயகம் சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்து மக்களைச்சந்தித்து இக் காணொளியில் கூறிய விடயங்களை மக்களுக்கு கூறி இவர் குறை கூறும் அரசியல்வாதிகளை தோற்கடித்து பாராளுமன்றம் சென்று இதை நடைமுறைப்படுத்த முயற்சிதிருக்கலாம். அதை விடுத்து எங்கோ ஒரு மூலையில் இருந்து கற்பனை குதிரையில் ஏறி போகமுடியாத ஊருக்கு வழி சொல்லி பொழுது போக்குவதில் அர்ததம் இல்லை. தாயக அரசியல்வாதிகள் மோசமானவர்கள் தான். ஆனால், அவர்களை குறை சொல்ல இந்த கற்பனாவாதிக்கு எந்த அருகதையும் இல்லை. சுமந்திரனாவது இப்போதைய அரசியலமைப்பை விட மேம்பட்ட ஒரு அரசியலமைப்பை உருவாக்க பல முயற்சிகளை செய்துள்ளார். இவர் எதையும் செய்யாது வெறும் இவ்வாறான அலசல்கள் மட்டும் தான். இப்போதைய ground reality என்ன என்பதைப்பற்றி எந்த அக்கறையுமற்று மாய உலகில் வாழ்பவர்களுக்கு வெறும் வாயை மெல்லும் இவர் சொல்வது இனிக்கலாம்.2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point
-
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
சண்டையை விரும்பாதவர் என்றால் பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வை தரச் சொல்லுங்க பார்ப்போம். ரசியாவை பிடிக்கும் ஆனால் ஈரானை அடிக்க வேண்டும்??1 point
-
பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு!
நகமும் சதையும் அப்புறம் வராது.1 point
-
உயிர்த்தமிழே நீ வாழ்வாழ்வாய்.
1 point1 point
- உயிர்த்தமிழே நீ வாழ்வாழ்வாய்.
1 pointஉங்களின் வரிகள் அருமை. நிகழ்கால நிஷங்களையும் படம்பிடித்து காட்டியுள்ளது. பாடல்கேட்டு கருத்துப் பரிமாறியதற்கு உளமார்ந்த நன்ரிகள்.goshan அவர்களே. நெஞ்சார்ந்த நன்றிகள்🙏1 point- அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
அண்ணா இந்த பைத்தியம் வென்றதில் ஒரே ஒரு நிம்மதியான விடயம் இரண்டு பைத்தியங்களும் நண்பர்கள் என்பதால் பட்டினை அமுக்குவேன் என்று இனி பயமுறுத்த மாட்டார்கள்.1 point- மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்; ராஜித சேனாரத்ன
அது நடந்தது 2018 இல், இந்தியா எப்போதும் இலங்கையின் கரிசனையினை பெற விரும்புவது வாடிக்கையான விடயம், ஆனால் இலங்கைதான் இந்தியாவினை கண்டுகொள்வதில்லை.1 point- பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு!
இப்ப மட்டும் ஏதோ குறைவே? நாங்கள் எப்பவும் இணைபிரியா நண்பர்கள் தானே! 🙂 ஆனால் ஒண்டு மட்டும் சொல்லுறன் நான் சொல்லுற ஆக்கள் சும்மா ரைம் பாஸ்க்காக லெக்ஸன் கேக்கிற ஆக்கள் எண்ட உண்மையை இப்பவே உடைச்சு விடுறன் கரவெட்டியில ஏற்கனவே பாஸ் பத்திரங்களோட ஒண்டு இருக்கு.... 😂1 point- அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
முடியாது இவர் ரம்ப். இங்கே இருந்து அனுப்பிய விதையில். முளைத்தவர். தான் .....முன்பும் நாலு வருடங்களாக கத்தி கொண்டு திரிந்தவர். தான் அமெரிக்கா ரஷ்யா பிரான்ஸ் பிரித்தானியா போன்ற நாடுகள் ஒற்றுமையாக பல வருடங்களாக ஜேர்மனியை பங்கு போட்டு இருந்தும் ஜேர்மன் கம்பீராமாகத் தான் 28. நாடுகள் கொண்ட ஐரோப்பா கூட்டணிக்கு தலைமையும் ஆலோசனையும் வழங்கியுள்ளது வழங்கி வருகிறது இவரது ஆப்பை திருப்பி இவருக்கே கொடுக்க கூடியவர்கள் உக்கிரேன். ஒரு சின்ன நாடு ரஷ்யா ஆகக்கூடியது ஒரு கிழமையில். துவசம். செய்திருக்கும். ஆனால் முடியவில்லை காரணம் தொடர்ச்சியாக ஆயுத வழங்கல் வியட்னாம் போரை எடுங்கள் அமெரிக்கா வெல்ல முடியவில்லை காரணம் சீனாவின் தொடர்ச்சியான ஆயுத உதவிகள். இஸ்ரேலினை பல முஸ்லிம் நாடுகள் சேர்ந்தாலும். வெல்ல முடியாது காரணம் அமெரிக்கா தொடர்ந்து உதவும் ஆகவே எனது கருத்து எந்தவொரு சின்ன நாட்டையும் உதவிகள். தொடர்ந்து கிடைக்கும் பட்சத்தில் ரஷ்யா அமெரிக்கா இந்தியா சீனா, .போன்ற நாடுகளால். தனித்து நின்று எதுவும் செய்ய முடியாது வெல்ல முடியாது தமிழ் ஈழ விடுதலை புலிகளிற்கு தொடர்ந்து ஆயுதம் தங்கு தடையின்றி கிடைத்து இருக்குமாயின் தோல்வி அடைத்து இருப்பார்களா ?????????? கபித. 🙏1 point- அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
நிச்சயம் அப்படி ஒரு காலம் வந்தே தீரும். இந்த பூவுலகில் வீழாத சாராஜ்யம் என்று எதுவுமே இருந்ததில்லை, இருக்கப்போவதும் இல்லை. அமெரிக்காவும் ஒரு நாள் வீழும். பொதுவாக ஒரு சாம்ராஜ்யம் வீழ முன் அதனுள் ஒழுங்கான தலமையில்லை, உள்பிளவுகள் தலைதூக்கும். அமெரிக்காவில் இப்போ நிகழ்வதை வீழசியின் ஆரம்பம் என கருதுவோர் உளர். ஆனால் எனது வாழ்நாளில் வீழும் என நான் நினைக்கவில்லை.1 point- அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
தனியாக இருட்டு அறையில் முரட்டு குத்து ரேஞ்சில் இருக்கும் சந்திப்பு. கீழே ஒரு நேரடி ஒளிபரப்பு. வடிவேலு - டிரம்ப் ரெளடி - புட்டின். அல்ல கைகள் - Fox News, Elon Musk etc இது கள்ளன் களவு எடுத்தான். போலீஸ் நடவடிக்கை எடுத்தது. ஆகவே பொலிசையும், நாட்டையும் இயக்குவது கள்ளந்தான் எண்ட மாதிரியான தர்க்கம் அண்ணை. இது சரி. அடுத்த மிட்டேர்மில் காங்கிரசில், செனேட்டில் ஒன்றிலாவது ஆளுகையை இழந்தால் பவர் குறையும். இரெண்டிலும் இழந்தால் செத்த பாம்புதான். உள்ளூர் விடயங்களில். வெளிவிவகாரத்தில் யுத்தம் நடத்த முடியாவிட்டாலும், அமெரிக்காவுக்கு எதிரான போதிய நாசகார வேலைகளை செய்ய முடியும்.1 point- பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு!
இன்றிலிருந்து நான் உங்களின் இணைபிரியா நண்பன். அண்ணையை பிடித்து நானும் உண்ணு எடுக்கலாமென்று யோசிக்கிறன். நானும் பென்சன்காரன் தான். அனுரா தேர்தலில் நுhறு வென்றால் 113 க்கு யாரையாவது சேர்க்கத்தானே வேணும்.1 point- தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தானது - ரோஹண விஜய வீரவின் மகன் உவிந்து
சரியான நிலைப்பாடு. ஆனால் சிலர் நினைப்பதுபோல தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காது. ஒரு 127 இடங்கள் கிடைக்கலாம்.1 point- பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு!
ஒரே கட்சியிலை நிண்டு கூத்தடிக்க அவையளுக்கு என்ன விசரே? எல்லாரும் பரவலாய் நிக்கினம். அதில அஞ்சு பேர் பென்சன்காரர்.😎1 point- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
சனங்கள் கள்ளனை கள்ளன் எண்டு எழுதாமல் வேற எப்பிடி எழுதுவினமாம் 🤣1 point- அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
அந்த அநியாயங்களை எப்பிடி எழுதுறது? ஜேர்மனி ஊடகங்கள் ஒரு கிழமைக்கு முதல் கருத்துக்கணிப்புகள் நடத்தி கமலா அக்காவ அமெரிக்க ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தார்கள். ஆனால் இன்றோ பம்மி பம்மி ரம்பின் வெற்றிச்செய்தியை வாசிக்கின்றார்கள். 😂1 point- அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
47 வது அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிவாகை சூடிய டொனால்ட் ரம்புக்கு வாழ்த்துக்கள். கமலா கரீசின் தோல்விக்கு பைடனும் குடிவரவில் திடமான திட்டமில்லாததாலும் பெண்ணாக இருந்ததாலும் தோல்வியைத் தழுவிக் கொண்டார். மிகப்பெரிய வெற்றி செனட்சபையும் காங்கிரஸ்சபையும் ரம்பின் கைக்குள். அடுத்த 4 வருடங்களுக்கு ஐனநாயககட்சி பல்லு புடுங்கிய பாம்பு. பல வழக்குகளில் குற்றவாளியாக காணப்பட்ட ரம் ஜனாதிபதியாக வந்திருக்காவிட்டால் சிச்சயம் உள்ளக்கு போயிருப்பார். கமலா வந்தால் ஒரு பழைய ஜனாதிபதியை சிறையில் போட விரும்பாமல் மன்னிப்புக் கொடுக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவியது. அடுத்த 4 வருடத்துக்கு பிரச்சனை இல்லை என்றாலும் அது முடிய பிரச்சனை வரலாம். அதற்காக தனக்கு தானே மன்னிப்புக் கொடுக்க முடியுமா தெரியவில்லை? அப்படி முடியாதென்றால் 4வது வருட கடைசியில் ராஜினாமா செய்து விட்டு உபதலைவர் ஜனாதிபதியாக வந்து அவர் மூலமாக மன்னிப்பு பெறலாம். இங்கு ரம்புக்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வந்த @வாலி, @குமாரசாமி போன்றவர்களுக்கும் பாராட்டுக்கள். இந்தத் தடவை Fox news தவிர மற்றைய ஊடகங்கள் கடைசிவரை சரியான கணிப்பை சொல்ல முடியாமலே இருந்தன.1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
போட்டியின் கடைசி நாள் எப்ப? இன்னும் ஆமான ஆள் கிடைக்கேல்ல எனக்கு கொப்பியடிக்க!😂1 point- அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
ட்ரம்பின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி! டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியை ஏற்க மறுத்த முன்னாள் ஜனாதிபதியின் அசாதாரண மறுபிரவேசமாக இது அமைந்துள்ளது. இரண்டு படுகொலை முயற்சிகள் மற்றும் 34 குற்றச் செயல்களுக்கு மத்தியில் ட்ரம்பின் இந்த வெற்றி வந்துள்ளது. விஸ்கான்சினில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளர், ஜனாதிபதி பதவிக்கு தேவையான 270 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்றார். அலாஸ்கா, விஸ்கான்சினின் அண்மைய மற்றும் முக்கியமான முடிவுகளுடன் டொனால்ட் ட்ரம்ப் இப்போது 279 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்றுள்ளார். இதனிடையே கமலா ஹாரிஸ், நியூ ஹாம்ப்ஷயரில் வெற்றி பெற்ற நிலையில் 223 தேர்தல் கல்லூரி வாக்குகளை பெற்றுள்ளார். ட்ரம்பின் வெற்றியானது அமெரிக்காவின் பணவீக்கம் மற்றும் குடியேற்றத்தைச் சுற்றியுள்ள பொது மக்களின் விரக்திகள் எவ்வளவு ஆழமாக இருந்தன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. க்ரோவர் க்ளீவ்லேண்டிற்குப் (Grover Cleveland) பின்னர், இரண்டு சந்தர்ப்பங்களில் பதவி வகிக்கும் இரண்டாவது ஜனாதிபதியாக ட்ரம்ப் ஆவார். க்ரோவர் க்ளீவ்லேண்ட் அமெரிக்காவின் 22 ஆவது ஜனாதிபதியாக 1885 முதல் 1889 வரையும் 24 ஆவது ஜனாதிபதியாக 1893 முதல் 1897 வரையும் இருந்தார். ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக முதல் முறையாக 2016 முதல் 2020 க்கு இடையில் இருந்தார். எனினும், 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த பிறகு அவர் இரண்டாவது முறையாக வெற்றிபெறத் தவறினார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக ட்ரம்ப் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் 78 வயதில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மிக வயதான நபர் ட்ரம்ப் ஆவார். https://athavannews.com/2024/14075121 point- நூல் அறிமுகம் - சுப.சோமசுந்தரம்
1 pointநூல் அறிமுகம் : கி.இளம்பிறை அவர்களின் 'வழித்துணை நினைவுகள்' - சுப.சோமசுந்தரம் 03-11-2024 அன்று எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் பாசத்திற்குரிய திருமதி கி.இளம்பிறை என்ற பிரபா அவர்கள் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நெல்லை தியாகராஜநகரில் அமைந்திருக்கும் மின் ஊழியர் சிஐடியு சங்கக் கட்டிடத்தில் இனிதே நடைபெற்றது. 'வழித்துணை நினைவுகள்' மற்றும் 'திருவாசகம் - ஒரு தேடல்' என்பன அந்நூல்கள். இவற்றுள் 'வழித்துணை நினைவுகள்' எனும் கவிதை நூல் மீது பேசுமாறு இளம்பிறை அம்மா அவர்கள் முன்னரே எனக்கு அன்புக் கட்டளையிட்டிருந்தார்கள். புத்தகத்தை மின்னஞ்சலில் எனக்கு அனுப்பியும் தந்திருந்தார்கள். நான் பேசியது நன்றாக அமைந்ததாக விழாவிற்கு வருகை தந்த நண்பர்கள் பாராட்டியதோடு, வர இயலாத நண்பர் ஒருவர் முகநூலில் எழுதிடுமாறு கூறினார். அவர் முகநூல் நண்பர் மட்டுமல்லாது எனது முகநூல் பதிவுகளைத் தவறாமல் வாசித்துப் பின்னூட்டம் அளிப்பவர்; அன்ன மாட்சியர்தாமே முகநூலில் நம்மை உயிரோட்டமாய் வைத்திருப்போர் ! உடனே எழுதினால்தான் நான் மனதளவில் தயாரிப்புடன் பேசியவை கோர்வையாய் வந்து விழும் எனும் முனைப்புடன் இறங்கினேன். ஒரு கவிதை நூலை அறிமுகம் செய்வதில் எனது முதல் அனுபவம் என்பதாலும் உடனே பதிவிட விழைந்தேன். பேச நினைத்து அங்கே பேசாமல் விட்டதையும் இங்கு எழுத்தில் சேர்க்கும் உரிமை எனக்கானது. எனவே நூலுக்கு எழுத்து வடிவில் ஓர் அறிமுகமாய் இதனைக் கொள்ளலாம். இதனை எழுதும் எனக்கு மரபிலக்கியங்களின் (Classic literature) மீது தனித்த ஈர்ப்பு உண்டு. எனவே எந்தவொரு புதுக்கவிதையினை வாசிக்கும் போதும் எனக்குத் தெரிந்த மரபுவழிப் பாடல்களின் தாக்கம் ஏதும் தென்படுமானால் அதனை மகிழ்வோடு குறிக்கத் தவறுவதில்லை. அது அப்புதுக்கவிதையினை இயற்றிய கவிஞரின் முன்னோர் மொழி பொன்னே போல் போற்றும் திறமாக இருக்கலாம்; அல்லது கவிஞரே கவனிக்கத் தவறிய உவப்பான தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். மரபு வழிப் பாடல்களில் எத்துணையோ சிறப்புகள் இருப்பினும் அவற்றிற்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு புதுக்கவிதையில் உண்டு. வாசகர் ஒவ்வொருவரும் தமக்கே உரிய கண்ணோட்டத்துடன் விளக்கம் தரலாம் - ஒரு புத்தியல் ஓவியத்திற்கு (Modern art) ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் தருவதைப் போல. அப்புதுக்கவிதை எனும் வானூர்தியில் ஏறி கவிஞரே காணாத உலகையும் வாசகன் காணலாம். மரபு இலக்கியம் நமது காலத்தைச் சாராததால், அக்காலகட்டத்தில் தோன்றிய சான்றோர் தந்த விளக்கங்களே அறிவுலகத்தில் ஏற்கப்படும், ஏற்கப்பட வேண்டும் - சிறு விலகல்களைத் தவிர. அச்சிறு விலகல்களைத் தீர்மானிப்பதற்கும் அத்துறை சார்ந்த சான்றாண்மை இன்றியமையாததாகிறது. 'வழித்துணை நினைவுகள்' எனும் தலைப்பைப் பார்த்ததும் இளம்பிறை அம்மா அவர்கள் தமது வழித் துணையின் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த வாழ்க்கைத் துணைவரின்) நினைவுகளில் மூழ்கி எடுத்த முத்துகளைப் பதிவிட்டு இருப்பார் எனும் எண்ணம் மேலோங்கியது. வாசிக்க ஆரம்பித்ததும் தெரிந்தது - வாழ்க்கைத் துணைவரின் மறைவுக்குப் பின்னர், நினைவுகளை வழித்துணையாகக் கொண்டதன் பதிவு என்று. வாசிப்பதற்கு முன் என்னுள் தோன்றிய ஊகத்திற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இலக்கியக் கூட்டமானாலும் போராட்டக் களமானாலும் எழுத்தாளர் இளம்பிறை அவர்களும் அவரது இணையரான உயர்திரு இரா.கிருஷ்ணன் அவர்களும் இணைந்து பங்கெடுத்து 'இணையர்' என்னும் சொல்லுக்கு இலக்கணம் வகுப்பர். இறப்புக்குப் பின் தம் பூத உடல்களை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு எழுதி வைத்த முற்போக்காளர்கள் என்பது கூடுதல் செய்தி. திரு. கிருஷ்ணன் அவர்கள் மறைந்த போது மதச் சடங்குகளின்றி அதனை நிறைவேற்றியவர் திருமதி கி.இளம்பிறை. இவை கட்டுரையில் இருந்து சற்றே விலகிய செய்திகளாகத் தோன்றலாம். சொல்லும் செயலும் ஒன்றாய்க் கொண்ட ஒருவரின் எழுத்தைப் (நூலை) பேச வருகிறேன் என்பதை முன்மொழியவே இச்செய்திகள். மேலும் நூல் அறிமுகத்தில் நூலாக்கியோர் அறிமுகமும் மரபுதானே ! இக்கவிதை நூலில் என்னைக் கவர்ந்த இரண்டு பொருள்களைக் கையிலெடுத்துப் பேசுவது எனது வாசிப்புக்குப் பொருத்தமாய் அமைவது. ஒன்று, கவிஞர் அறம் பாடுவது; மற்றொன்று, என் மனதிற்கு நெருக்கமான மரபிலக்கியங்களுக்கு என்னை இழுத்துச் செல்வது. இந்த இரண்டில் ஒவ்வொரு பொருளுக்கும் சில மேற்கோள்களைக் காட்ட எண்ணம். அறம் சொல்ல வந்தவர், "தூவுவது அன்பாக இருப்பின் விலகுவது வம்பாக இருக்கும்" என்று (பக்கம் 18) நச்செனக் குறிப்பது நினைவில் கொள்ளத்தக்கது. "எவரும் புத்தன் இல்லை ஏனெனில் புத்தன் என்று ஒருவன் இல்லவே இல்லை" என்று (பக்கம் 20) குறிப்பது உடனே கடந்து செல்ல விடாத ஒன்று. அகவைக்கு ஏற்ப உணர்வுகள் இருக்கும் எனும் உலகியல் நடைமுறை சொல்ல வந்தவர், "புத்தன் என்று ஒருவன் இல்லவே இல்லை" என்றது கூட "எவரும் புத்தன் இல்லை" என்பதை மீண்டும் வலியுறுத்தவே எனப் புரிய சற்று நேரமும் பக்குவமும் அவசியமாகிறது. "பிறந்தது ஆண் குழந்தை எனில் அன்று மட்டும் மகிழ்ச்சி பிறந்தது பெண் குழந்தை எனில் வாழும் வரை மகிழ்ச்சி" என்று (பக்கம் 50) பெண்ணியம் பேசுமிடத்துச் சற்று சிந்திக்க வைக்கிறார். "அன்று மட்டும் மகிழ்ச்சி", "வாழும் வரை மகிழ்ச்சி" எனச் சொல்வதெல்லாம் ஓசை நயம் கருதி ஒரு கவிஞருக்கான உரிமம் என்பதும், பாடலின் மெய்ப்பொருள் "ஆண் என்றால் மகிழ்ச்சி, பெண் என்றால் பெரு மகிழ்ச்சி" என்பதும் கவிஞர் சொல்லாமல் சொல்லி நிற்பது. "ஆணென்ன பெண்ணென்ன ?" எனும் சமநோக்கு எத்துணை அவசியமோ, ஆணாதிக்கச் சமூகமாய் இருக்கும் வரை பெண் என்பது உயரிய நிலைதான் என முழங்குவதும் அவசியமாகிறது. இது தொடர்பில், "ஆண் மகவு பெற்றோர் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டோர்; பெண்ணைப் பெற்றோர் அந்த இறைவனையே பெற்றோர்" என்று எங்கோ வாசித்த நினைவு. இனி என்னைக் கவர்ந்த பகுதிகளில் இரண்டாவதுக்கு வருவோம். சில இடங்களில் நமக்குத் தோன்றும் பண்டைய இலக்கியங்களின் தாக்கம் இயற்கையானதே என்பதற்குக் கவிஞர் இளம்பிறை அவர்களே சான்று தருகிறார். எடுத்துக்காட்டாக, "எத்தனை எத்தனை முறை படித்தாலும் புதுப்புது சிந்தனை தோன்றும்" என்று (பக்கம் 31) அவர்கள் சொல்லுமிடத்து, "படிக்கப் படிக்கப் புதுமை" என்பதும், அதற்கு இணையாக "அறிதோறும் அறியாமை" எனும் குறளொலியும் நம் செவிப்புலனில் கேட்கின்றன. அவ்வொலி இயற்கையான ஒன்றே என்று அறிவிப்பது போல் பாடலின் அடுத்த வரியிலேயே "அறிதோறு அறியாமை கண்டற்றால்" எனும் குறளை இணைக்கிறார் கவிஞர். திருக்குறள் பிரபா என்று நட்பு வட்டத்தில் அறியப்படும் கி.இளம்பிறை அவர்கள் மேலும் சில இடங்களில் திருக்குறளை எடுத்தாள்கிறார். உதாரணமாக பக்கம் 11 ல் ஊடலில் தோற்றவர் வெல்லும் மாண்பு குறிக்கப்படுகிறது; பக்கம் 20 ல் தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறலும் சுட்டப் பெறுகின்றன. ஏற்கெனவே குறிப்பிட்டது போல் பழந்தமிழ் இலக்கியங்களின் தாக்கத்தைக் குறிக்க நமக்குக் கவிஞரே வழங்கிய உரிமத்தின் படி ஒன்றிரண்டு இடங்களைக் காணலாமே ! "என்னைத் தேடினால் நான் இல்லை ஒன்றாகவும் பலவாகும் எனை ஏற்ற தோழர்கள் ஊடே ஊடுறுவி விட்டேன்" என்று பக்கம் 28 ல் நட்பில் கரைந்து போகிறார். "என்னைத் தேடாதே உன்னுள் நான் வாழ்கிறேன்" என்று பக்கம் 36 ல் தலைவனும் தலைவியும் ஒருவர் மற்றவரிடம் தொலைந்து போதலைப் பேசுகிறார். இவ்விரண்டு இடங்களும், "வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்" "ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந் தானே" எனும் திருமந்திர வரிகளை மனக்கண்ணில் நிறுத்துதல் இயல்பான ஒன்று. பக்கம் 31 ல் அன்புடையார் அனைவரும் தம் நெஞ்சகத்தில் குடி கொண்டதால் தம் நெஞ்சம் கனப்பதைப் பாங்குடன் சொல்லிச் செல்கிறார் கவிஞர் இளம்பிறை. உணர்வுபூர்வமான பொருளான நெஞ்சம் இலக்கிய நயத்துடன் ஒரு உடற்கூறாக ஆளப்படுவது இலக்கிய உலகில் அரிதன்று. நம் நினைவுக்கு உடனே வரும் குறள் "நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து" (குறள் 1128; அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல்). அஃதாவது, காதலர் தன் நெஞ்சத்தில் உறைவதால் அவருக்குச் சுடுமே என அஞ்சி வெம்மையான பொருளைத் தான் உண்பதில்லை என்று தலைவியின் கூற்றாகக் குறளில் வருகிறது. இது தொடர்பில், "கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து" (குறள் 1127; அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல்) எனும் குறள் நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாத ஒன்று. இவ்வாறு சங்கிலித் தொடராக நினைவலைகளை எழுப்பும் 'வழித்துணை நினைவுகள்' காற்றினிலே வரும் கீதம் என்பது மிகையில்லை. பக்கம் 52 ல் "பற்றியது பற்றிய பின் பற்றைத் தவிர வேறு எதுவும் இல்லை .................................................... ..................................................... ஈவது தாளாண்மை என்று பின் சென்றாள் அப்பேதை" எனும் பாடலைக் கொள்ளலாம். முதல் இரண்டு வரிகள் மனக்கண்ணில் நிறுத்துவது, "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" (குறள் 350; அதிகாரம்: துறவு) என்ற பொய்யாமொழியை. குறளில் இறைப்பற்று வலியுறுத்தப்படுவது போல இங்கு மானிடப்பற்றை வலியுறுத்துவது கவிஞரின் பகுத்தறிவு. இவர் வலியுறுத்துவது மானிடப்பற்றே என்பது பாடலின் கடைசி வரிகளில் தெளிவு. அங்கு "பின் சென்றாள் அப்பேதை" என்று உடன்போக்கு மேற்கொண்டு தலைவன் பின் செல்லும் தலைவியைக் குறிக்கிறார். உடன்போக்கு என்னும் துறை தழுவிய எத்தனையோ அகப்பாடல்கள் இருப்பினும், இளம்பிறை அம்மாவின் சொல்லாட்சியானது நாவுக்கரசரின் திருத்தாண்டகத்தில் "முன்னம் அவனது நாமங் கேட்டாள்" எனத் தொடங்கும் பாடலை நம்முன் இழுத்து வந்து நிறுத்துகிறது. நாவுக்கரசர் பாடலில் 'பிச்சி' ("பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்") என்பது நமது கவிஞரின் பாடலில் 'பேதை' என்றானது; "தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே" என்று திருத்தாண்டகத்தில் ஒலித்தது, "பின் சென்றாள்" என்று வழித்துணை நினைவானது. இதுகாறும் குறித்த இரண்டு பொருள்கள் தவிர ஒன்றிரண்டு குறிப்புகளும் உண்டு. மானிடக் காதல் சிற்றின்பம் என்றும், இறைப்பற்று பேரின்பம் என்றும் வகைப்படுத்தல் உலகியலில் உண்டு. இரண்டும் பேரின்பமே என்பது எனது தனிப்பட்ட கருத்து. எனது கருத்துக்கான அடிப்படை என்னவெனில், தன்னை இழத்தல் பேரின்பம்; அது இரண்டிலும் உண்டு - அவ்வளவே ! திருநாவுக்கரசரின் திருத்தாண்டகமும் மாணிக்கவாசகரின் திருக்கோவையாரும் நமக்கு உணர்த்தும் பொருள் இதுவே. இரண்டும் அகம் சார்ந்த பக்தி இலக்கியங்கள். இரண்டிலும் இறைவன் தலைவனாகவும் பக்தன் தலைவியாகவும் உருவகிக்கப்படுகின்றனர். பக்தனாகிய தலைவி இறைவனாகிய தலைவனை அடைவது பாடல் பெற்றது. இப்போது நாம் கையில் எடுத்துள்ள கவிதை நூலிலும் கவிஞர் இக்கருத்தைச் சிறிய மாறுதலுடன், "சிற்றின்பம் தவிர்த்து எவரும் பேரின்பம் அனுபவிக்க இயலாது" என்று பக்கம் 42 ல் பதிவிடுகிறார். பக்கம் 33 ல் "உணவில் கலப்பு உயிர்க் குற்றம்; மொழியில் கலப்பு கொலைக் குற்றம்" என்ற கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. நூலுக்கான அணிந்துரை அளித்த பேரா. வ.ஹரிஹரன் அவர்கள் இக்கருத்தில் மாறுபட்டுள்ளது அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய நியாயம்தான். என்னைப் பொறுத்தமட்டில், எனக்குக் கவிஞரின் கருத்தில் முழு உடன்பாடு இல்லை; முழுமையான மாறுபாடும் இல்லை எனச் சொல்லியே ஆக வேண்டும். மொழிக் கலப்பினால் மொழி வளரும் என்பது வளரும் மொழிக்குச் சரிதான்; தமிழ் போன்ற வளர்ந்த மொழிக்கு எங்ஙனம் பொருந்தும் எனும் எண்ணம் தோன்றுவதால் கவிஞரின் கருத்தில் உடன்பாடு. பேருந்தில் இருந்து இறங்கியதும் ஆட்டோ ஓட்டுநரிடம், "சந்தைக்குத் தானி வருமா ?" என்பது செயற்கையாகவும், "சந்தைக்கு ஆட்டோ வருமா ?" என்பது இயற்கையாகவும் தோன்றுகிறது; ஆட்டோ வெளியிலிருந்து இந்நிலத்திற்கு வந்த பொருள்தானே எனும் எண்ணம் முன்வர கவிஞரின் கருத்தில் எனக்கு மாறுபாடு. இவை போல் இன்னும் எத்தனையோ ! அத்தனையும் பேச முனைந்தால், நூலைப்போல் இரு மடங்காவது நான் எழுத வேண்டி வரும். எனவே இவ்விடத்தில் இக்கட்டுரைக்கு நிறைவுத் திரையிடல் பொருந்தி வரும். எழுத்தாளர் இளம்பிறை அவர்களின் கவிதைப் பெட்டகத்தில் உறையும் மேலும் பலவற்றை வெளிக் கொணர்வது வாசகர்தம் வாசிப்பில் கை கூடுவது. நூலாசிரியர் மற்றும் பதிப்பக விவரங்கள் பின் வரும் முகநூல் இணைப்பில் உள்ள புத்தக அட்டையில் : https://www.facebook.com/share/p/17dPe1MQr4/1 point- அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எத்தனை முறை கேட்டாலும்.... மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். காணொளியின் தரம் குறைவு என்றாலும்... நடிப்பு, பாடல் வரிகள் மிக அருமை.1 point- அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
கமலா…. முன்னுக்கு வாற மாதிரி இருந்தால்… டக்கெண்டு ட்ரம்ப், சுமந்திரனிடம் ஆலோசனை கேட்டு… திருமதி ரவிராஜின் வாக்குகளை திருடி, அவர் பின்கதவால் சுத்துமாத்து செய்து பாராளுமன்றம் போன மாதிரியான ரெக்னிக்கை கேட்க சொல்லுங்கோ. 😂 🤣1 point- அரசியல் சதிகள் அம்பலம்
1 pointகாணொளியில் உள்ள முக்கியமான விடயங்களை யாராவது சுருக்கமாக குறிப்பிட்டால் பலருக்கும் உதவியாக இருக்கும் (நானும் பார்க்கவில்லை). இது ஒரு அரசியல் தீர்வு சம்பந்தமான விடயம் என புரிகிறது, நீங்கள் கூறும் கள யதார்த்தம் சிறுபான்மையினரை பொறுத்தவரை தற்போது தற்காலிகமாக மாறிவிட்டது என்பது உண்மை. ஆனால் இனவாத பெரும்பான்மையில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்ற யதார்த்தினை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. இலங்கை அரசியல் அமைப்பு சட்டமாக இருந்தாலும் சரி இலங்கை சட்டவமைப்பாக இருந்தாலும் சரி இலங்கையினை ஒரு மோசமான நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது, புதிதாக சட்டவமைப்பிலோ அல்லது அரசியல் சட்டவமைப்பிலோ மாற்றம் ஏற்படுத்தாது ஒன்றிணைந்த இலங்கைக்குள் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ முடியாது என்பது வரலாறாக உள்ளது, அதற்கு சான்றாக இலங்கையில் நிகழ்ந்தேறிய இனக்கலவரங்கள் மனித உரிமைகள் இருக்கின்றது, தற்போது மக்கள் விரும்புவது அமைதியான பாதுகாப்பான வாழ்வு அதனை ஒற்றை ஆட்சிமுறைமைக்குள்ளே அதிகார பரவலாக்கமின்றி அரசியல் அமைப்பு சட்டமாற்றம், சட்டவாக்க மாற்றத்தினூடாக இலங்கை ஒற்றை ஆட்சிக்குள்ளாகவே நிறைவேற்றினால் மக்கள் இந்த காணி,நிதி ,நீதி, காவல்துறை அதிகாரங்கள் என தனித்து கோரமாட்டார்கள். ஆனால் புதிய அரசால் கூட அதனை ஏன் செய்ய முடியவில்லை? நான் நினைக்கிறேன் சட்டவைமைப்பு மற்றும் அரசியலைமப்பு மாற்றங்களினால் ஏற்படும் புதிய ஜனநாயக சூழ்நிலை இலங்கையில் நிலவிய மற்றும் நிலவுகின்ற இனவாத நடவடிக்கைகலை சட்ட ரீதியாக சவால்களை எதிர்கொள்ள அரசுகள் விரும்பாமை காரணமாகும். அதனால் பாதுகாப்புதுறை மட்டுமன்றி அரசியல் உயர் பீடங்கள் கூட பிரச்சினையினை எதிர்கொள்ளும் நிலை உருவாகும். இந்த புதிய அரசு இதுவரை ஆட்சி பீடமேறாத அரசு அதனால் இந்த சட்ட மாற்றம் ஏற்படுத்துவதால் கட்சி ரீதியாக பாதிப்புள்ளாக மாட்டார்கள், ஆனால் பாதுகாப்புதுறை மற்றும் பெரும்பான்மை இன ஆதரவினை இழக்கும் அரசியல் தற்கொலையினை செய்ய விரும்பவில்லை. மக்கள் இந்த அரசிற்கு அறுதிப்பெரும்பான்மை கொடுக்க வேண்டும், அதன் பின்னர் மக்கள் ஒன்றை புரிந்து கொள்வார்கள் இலங்கை இன்னும் மாற்றத்திற்கு தயாராகவில்லை என்பதுதான். அடிப்படை பிரச்சினையே இனவாதத்தினை இலங்கையிலிருந்து நீக்க முடியாமைதான், இலங்கை மட்டுமன்றி இந்தியாவில் கூட இதே நிலைதான் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பில்லாமல் ஒரு தேசமாக வளர்ச்சி அடைய முடியாது.1 point- கோத்தாபயவுக்கு எதிரான அரகலய போராட்டத்தின்போது புலம்பெயர் புலிகள் தலையீடு! நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு
உங்கள் சித்தப்பனை... ஜனாதிபதி பதவியில் இருந்து ஓட ஓட விரட்டியமைக்கு புலிகள் காரணம் என்று ஒத்துக் கொண்டமைக்கு நன்றி நாமல் தம்பி. 😂 🤣1 point- உண்மைகளை போட்டு உடைக்கும் சுமந்திரன்
சுமந்திரனே.. ஒரு சுத்துமாத்துக்காரன். இவரின் வாயிலிருந்து வருவது... பொய்யும்,பிரட்டும், உருட்டும் தான். இந்த வீடியோவை... மினக்கெட்டு கேட்பது நேர விரயம். வருகின்ற தேர்தலுடன்... மக்களால் இவருக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி... கழுதை மேல் ஏற்றி, ஊரை விட்டு விரட்டியடிப்பது நிச்சயம்.1 point- இரான் பல்கலைக் கழகத்தில் திடீரென ஆடைகளை களைந்த இளம்பெண் - என்ன நடந்தது?
மதங்கள் என்று வரும்போது பெரும்பாலும் கேள்விகிடமின்றி ஒரு விடயத்தினை பின்பற்றுவதாகவே உளது, ஆரம்பத்தில் இயற்கை வழிபாடு இருந்ததாக கூறுகிறார்கள், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படாமல் இருக்க இயற்கை அனர்த்தம் ஏற்படுத்தும் விடய்ங்களை வழிபட்டனர் (பயத்தின் காரணமாக). இந்த பயபக்தி அனைத்து மதங்களிலும் காணப்படுகிறது, ஆரம்பகால உடைகளாக எம்மவர்கள் மேலாடை அணிவதில்லை என நினைக்கிறேன், அதே போல் மத்திய கிழக்கில் உள்ளவர்கள் தூசி புயலை சமாளிப்பதற்காக முகத்தினை மூடிய ஆடை அணிந்திருக்கலாம், அதனையே மரபு என தற்காலத்திலும் பின்பற்றும் நிலை காணப்படுகிறது, அதனை கலாச்சாரம் என கூறுவதற்கு மதம் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது என நினைக்கிறேன். நாங்களும் இதே மாதிரியான முட நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டு பிற மதங்களினை இலகுவாக கேள்விக்குள்ளாக்க முடிவதற்கான காரணம், நாம் நம்பும் மதம் என்றால் பயபக்தி இருக்கும் அதனை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவோம் ஆனால் மற்ற மதங்கள் தொடர்பில் எந்த வித பயமும் இல்லாதனால் எனது மதம் சிறந்தது மற்ற மதங்கள் மோசமானவை எனும் பொதுவான நிலைப்பாடாகவே இருக்கும்.1 point- மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு மீண்டும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்; ராஜித சேனாரத்ன
அவரே தான்..மலையகத்தை பூர்வீகமாக கொண்டவர் ...ஜெ.வி.பி யில் 84 களில் இணைந்தவர் என நினைக்கிறேன்..இவர் ஒருத்தர் தான் நீண்ட கால தமிழ் உறுப்பினர்..ஆரம்ப காலத்தில் இவரது தமிழ் புரியவே மாட்டது..தற்பொழுது ஒர்ளவு தமிழ் பேசுகின்றார் .. சில தமிழர்கள் சிறிலங்காவை சுவிஸ்லாந்து மாதிரி ஆக்கி போயினமாம்.பிறகென்ன வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை ஐஸ் தான் ...ஐஸ் சறுக்கல் எல்லாம் நம்மட சின்னதுகள் விளையாடப்போயினம்..... நாங்கள் ஐஸ் கொக்கி விளையடலாம்1 point- அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
ஐரோப்பிய நாடுகளின் ஆசையில் மண் அள்ளிப் போட்ட ட்ரம்ப் கெட்டிக்காரன்தான். 🙂1 point- அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
1 point- அரசியல் சதிகள் அம்பலம்
1 pointவிளங்க நினைப்பவன் , நான் எங்கே எழுதி இருக்கேன் சுமந்திரன் அமைச்சர் பதவியை பெறபோகிறார் என்று? நான் அர்த்தப்படுத்தியது பதவியென்று முன்னைய ஆட்சியிலிருந்ததுபோல் ஜனாதிபதி சட்டத்தரணி, அது,இது , மானே தேனே, பொன்மானே என்று எதாச்சும்... நிராகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அமைச்சர் பதவியென்று நான் அர்த்தப்படுத்தியது டக்ளசை, அவரும் ஓடோடி போய் அநுரவ சந்திச்சார் இல்லையா அதனால. நானும் பாக்கிறன் விளங்க நினைப்பவனின் அலசல்கள் இப்போலாம் கொஞ்சம் ஓவராதான் போய்க்கிட்டிருக்கு 😉1 point- மாவீரர்களின் கட்சியான... தமிழரசு அழிந்து போக இடமளியாதீர்கள். -சி.வி.கே. சிவஞானம்.-
இவரின் கூற்றுக்கு... சில பின்னுட்டங்கள். ஐயன்மீர் பிரிகேடியர் சம்பந்தன், கேணல் அமிர், லெப்கேணல் சிவபாலன் போன்ற பல "மாமா"வீரர்களைக் கொண்ட கட்சியை அழியவிடாதீர்! Eelapriyan Balan இதைச் சொல்ல இவனுக்கு வெட்கமில்லையா? Amuthan Singanayagam தாங்களே அழித்துக் கொண்டு மக்களை அழிய விடாதீர்களாம்..இம் முறையுடன் கதை முடியலாம். Sasi Sasikaran இப்படி கேட்பதை வேறு ஏதாவது கேட்கலாமே. அதுவும் இவரா... இவர், இனத்துரோகி ஆச்சே. சுமந்திரனுக்கு கூசா தூக்குபவனாச்சே. Sinniah Tiemann Loganathan வீட்டுக்கு.. தோல்விப் பயம் வந்திட்டு. Mano Jeganathan1 point- அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
வயசுக் கவர்ச்சி அதே கதிதானா..ஈழப்பிரியன் சார்...எடுத்த எடுப்பிலை நம்ம ரம்பு..வேகமாகப் போகிறாரே...சுமந்திரன் சார் அமெரிக்காவுக்கு பிரச்சாரத்துக்கு வந்தாரா?1 point- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
விகிப்பீடியாவின் கருத்தினடிப்படையில் 887000 புலம் பெயர் தமிழர்கள் அண்ணளவாக உள்ளார்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையிலிருக்கும் தமது உறவுகளுக்கு உதவி செய்கிறார்கள் வெறும் நாலில் ஒரு பகுதி (200000) ஆண்டிற்கு $2000 (மாதத்திற்கு $166) உதவி செய்தால் இலங்கைக்கு $400000000 வெளிநாட்டு செலாவணி கிடைக்கும், அது தவிர தனியார் , மற்றும் தொண்டு நிறுவனங்களினூடாக செய்யும் இலங்கைக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் செய்யும் உதவியின் மூலம் இலங்கைக்கு பெருமளவான வெளிநாட்டு செலாவணி கிடைப்பதுடன் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கியமாக புலம்பெயர் தமிழ் மக்கள் உள்ளனர். இவர்களது முதலீடுகள் இலங்கையில் நேரடியாக ஏற்படுத்தப்பட்டால் இலங்கைக்கு அது மேலும் சாதகமாவதற்கான சூழ்நிலை உள்ளது.1 point- புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
முதலில் தமிழர் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். அதற்காக பொய்யன் சுமந்திரனை தமிழர் பிரச்சனை குறித்து பேச அழைக்காதீர்கள்.👈1 point - உயிர்த்தமிழே நீ வாழ்வாழ்வாய்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.