Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    23
    Points
    19122
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    87990
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    16
    Points
    46783
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3054
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/03/24 in all areas

  1. @Kandiah57 @ரசோதரன் புலிகள் ஆயுதத்தை மெளனித்த போது…. புலம் பெயர் மக்களே எம் கொடியை தூக்கி செல்லுங்கள்…. என்றோ… புலம்பெயர் மக்களே எம்மை உலக அரங்கில் புனிதர்களாக்குங்கள் என்றோ கேட்டகவில்லை. அவர்கள் தாம் உலக அளவில் ஒரு toxic brand ஆக வந்து விட்டோம் என்று தெரிந்தே…அத்தோடு நிறுத்தினார்கள். தொடர்ந்து புலம்பெயர் சமூகம் ஒரு பொறுப்பான சிவில் கட்டமைப்பை நிறுவி, அதில் 2009 மே யிற்கு முற்பட்ட எதையும் கலக்காமல் - தாயக அரசியலையும் கூட்டிணைத்து பயணித்து இருந்தால் 15 வருடத்தில் பலதை சாதித்திருக்கலாம். ஆனால் நடந்தது இதற்கு நேர் எதிரானது. இனியும் திருந்தவாய்ப்புள்ளது. வாய்ப்பை பிடிப்பதும் விடுவதும் நம் கையில்தான் உண்டு.
  2. சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒருநாட்டை சொல்லுங்கள் ரதி அறிந்துகொண்டால் அண்டா அளவு மகிழ்ச்சி. அதவிட முக்கியம் சிங்கப்பூரே முதலாளித்துவநாடாச்சே அப்போ கம்யூனிஸ்ட்டுக்களிடம் நாட்டை கொடுத்தால் சிங்கப்பூர்போல முதலாளித்துவ நாடு ஆக்கிடுவார்களா? அப்புறம் எதுக்கு கம்யூனிச கொள்கை அவர்களுக்கு? அப்பப்போ பாட்ஷா ரஜனிமாதிரி வந்து உருட்டிபோட்டு ஓடிறீங்கள் அதுதான் தமிழ் மக்கள் மனசில் உள்ள கவலை. அதாவது இலங்கைக்குள் புலிகள் தனிநாடு உருவாக்க நினைத்தது ஜேவிபியைவிட ஆபத்தான செயலா? அப்போ கொழும்பில் இருந்தவனையெல்லாம் 58/77/83ல் அடிச்சு மட்டக்களப்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சிங்களவன் விரட்டிவிட்டு அது உங்கள் இடம் ஓடுங்கோடா என்று கலைச்சுவிட்டது உங்கநாடு இதுதான் என்று சிங்களவன் சொன்னது மாதிரி இல்லையா? தனிநாட்டை முதலில் கோடு போட்டு காட்டியது சிங்களவனா தமிழனா?
  3. இரு மாபெரும் புத்திஜீவிகள் சந்திப்பு. இனி தமிழ் மக்களுக்கு விடிவுகாலம்தான் போங்கோ! தமிழ்க் கூட்டமைப்பை முதலில் பாராளுமன்ற கதிரைகளுக்காக உடைத்துக்கொண்டு முதலில் வெளியேறியவர் இந்த கஜே-கயே குழுத்தலைவர் கஜேந்திரகுமார். இது சுமந்திரன் வருவதற்கு முன் நிகழ்ந்தது. மக்களால் நிராகரிக்கப்பட்ட சுமந்திரன் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளவேண்டும். மக்கள் தமக்குத் தேவையானவர்களைத் தெரிவுசெய்வார்கள். குறிப்பாக அர்ச்சுனா இராமநாதன் போன்றவர்களை அனுப்பியுள்ளார்கள். பிக்பாஸ் அதிகம் பார்ப்பதன் விளைவாகக் கூட இது இருக்கலாம். அநுர அரசு சமர்ப்பிக்கப் போகின்ற புதிய அரசிலமைபுத்தொடர்பாக கஜே, பார் சிறீதரன், அருச்சுனா போன்ற புத்திஜீவிகள் மக்களுக்குப் போதிய விளக்கம் அளிப்பார்கள் அல்லது புரியவைப்பார்கள் என நம்பலாம். எனவே சுமந்திரன் தன்னை நிராகரித்த மக்களின் ஆணையைக் கருத்திற்கொண்டு இதுபற்றி வாளாதிருப்பதே சாலச் சிறந்தது!
  4. இவ்வளவு காலமும்... சம்பந்தன் சுமந்திரன் இருந்த படியால்தான்... கஜேந்திரக்குமார் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பது ஊரறிந்த ரகசியம். 🙂 சுமந்திரன் வந்தால்.... கஜேந்திரகுமார் வெளியேறுவார். எது உங்களுக்கு விருப்பம் என்று, ஒரு முடிவுக்கு வாங்கோ விசுகர். 😂 வேலியிலை போன ஓணானை, திரும்பவும் பிடித்து வேட்டிக்குள் விடாதீங்க. 😜 பட்டது போதும், பட்டினத்தாரே... 🤣
  5. சந்தோசம். இதை வரவேற்று இப்போதைக்கு பொதுவெளியில் இவர்கள் இருவரையும் கடுமையாக விமர்சிப்பதை தவிர்கிறேன். டில்வின் மா.சபை முறை கலைக்கப்படும் என கூறியதற்கு, சபையில் விளக்கம் கேட்ட சாணாக்ஸ். விளக்கம் ஏதும் கொடாமல், சிறிதரனுடன் சாணக்கியனும் அனுர வை சந்தித்து கேட்கலாம் என பதில் சொன்ன பிமால் ரத்நாயக்க.
  6. பதவியில் இருந்து இதை கூட செய்யா விட்டால் உலகம் என்ன சொல்லும்??
  7. கார்களில் ஏற்படும் நம்மால் சரி செய்யப்படக்கூடிய கோளாறுகளை இவர் விளக்குகிறார். இதனை ஏற்பதும் விடுவதும் நமது இஷ்டமே. ஆனால் ஒன்று மெக்கானிக்கிட்ட போனால் உங்களுக்கு 3000 டொலர் செலவாகியிருக்கும் என்று அடிச்சு விடுறார் அதுதான் நெருடல். ஏனென்றால் நம்மவர்களில் சிலர் வைத்திருக்கும் காரே 3000 டொலர்தான் வரும். .................................................................. இயந்திரம் குலுங்குவது ஏன் அதை எப்படி சரி செய்யலாம் என்று சொல்கிறார் கார் கதவு , Fan belt எழுப்பும் சத்தங்களை சவர்க்காரத்தின் உதவியுடன் எப்படி சரி செய்யலாம் என்று சொல்கிறார். எஞ்சின் லைட் எரிந்தால் அதனை சரி செய்வதுபற்றி உருளைக்கிழங்கால் தேய்த்தால் எவ்வளவு மழை அடித்தாலும் கார் கண்ணாடி இருளாகாது என்கிறார் கார் டயர் பற்றிய தகவல் கார் திறப்பு காருக்குள் சிக்கிக்கொண்டால் பிரேக் திடீரென பிடிக்காவிட்டால், ஆனால் எல்லா காருக்குமிது பொருந்தாது காருக்குள் லொகேற்றர் பொருத்தியிருந்தால் கண்டுபிடிப்பது எப்படி மேலும் சில
  8. எப்படி சிங்களவர் (மட்டும் அல்ல முஸ்லிம்களும்) ஓம்படாமல் தீர்வை நாட்டில் எட்ட முடியாது என்பது உண்மையோ… அதே போல் புலத்தில் இருக்கும் நீங்கள் சொல்லும் சப்போர்டசை விலத்தி இங்கே ஒரு பெரிய அளுத்தத்தை பெற முடியாது. மேலும் அவர்களை போலவே நீங்களும் prisoner of your past அதாவது கடந்த கால கசப்பான அனுபவங்களின் கைதியாக இருக்கிறீர்கள். அருச்சுனா சொன்னது போல் இதுதான் கடைசி சந்தர்ப்பம். இதை கஜனும் சிறியும் விழங்கிகொண்டது போல்… ஒவ்வொரு புலம்பெயர் ஐலண்ட்டும், குமாரசாமியும், தமிழ் சிறியும் விளங்கி ஒரே முகமாக செயல்பட்டால் எதையாவது முயலாலாம். இல்லை, இனம் உரிமையோடு வாழாவிட்டாலும் பரவாயில்லை பழைய கறளைத்தீர்ப்பதே இலக்கு என்றால் - உங்கள் இஸ்டம்.
  9. எனக்கு அவர்கள் இணைந்து பேசுவதை விட நீங்கள் கூறிய இந்த விடயம் இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது..நல்ல விடயம் விமர்சனம் என்ற போர்வையில் நானும் எனக்கே தெரியாமல் தமிழ் தேசியத்திற்கு விரோத கருத்துக்களை எழுதியிருக்கலாம்..
  10. இது யாழ்ப்பாணீஸ் தங்களுக்குத் தாங்களே எடுத்துச் செருகிய ஆப்பு,...🤣
  11. கூட இருக்கும் எல்லோரையும் மட்டம் தட்டி கொண்டே இருக்கும் குணம்தான் சுமந்திரனை இந்த நிலைக்கு இறக்கி விட்டுள்ளது. உண்மையில் மக்கள் இப்படி நிராகரித்தது அவருக்கு பலத்த பின்னடைவுதான். தோல்வியின் பின் அவர் தனியே இருந்து reflection செய்வாராயின், தன் குணவியல்பு அரசியலுக்கு ஏற்றதல்ல என்பதை விளங்கி விலகி கொள்வார் என எதிர்பார்க்கிறேன். குறுக்குசால் ஓட்டாமல், ஜனநாயகத்தை மதித்து, மக்கள் தேர்ந்த இருவர் இணைந்து அரசியலை முன்னெடுக்க சுமந்திரன் வழி விட்டு விலக வேண்டும். அரசியல்சட்ட விவகாரம் என்பது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல, திம்பு கோரிக்கை நேரம் இயக்கங்கள், அறிஞர் குழுக்களை அமைத்து ஒரு தெளிவான நிலைப்பாட்டை கண்டன. அதில் சிவா பசுபதி போன்றோர் உதவினர் என நினைக்கிறேன். சுமந்திரனை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அரசியல் சட்டத்தை தனித்துறையாக எடுத்து படித்தவர்கள் எல்லாம் புலம்பெயர்தேசத்தில் இருக்கிறார்கள். தமிழ் நாடு, மலேசியா, சிங்கபூரிலும் உள்ளனர். ஆனால் எமக்கு இப்போ தேவை ஒரு நல்ல diplomat ஒரு நல்ல negotiator. இதை செய்பவர் கட்டாயம் எம்பியாக இருக்க வேண்டியதில்லை.
  12. ஆம். அதில் என்ன சந்தேகம். 😂 சுமந்திரனை விட... பத்தாயிரம் மடங்கு திறம். 🤣 இதற்குள் சுமந்திரன் வந்தால்.... நான் திரும்பவும் அரசியலில் குதிக்க வேண்டி வரும்.
  13. இரெண்டுமே காரணங்கள். மேலும் இரு காரணங்கள்: தன் அதி தீவிர அரசியல் இன நலனை பாதிப்பதை கஜன் காலம் தாழ்தியாவது உணர்ந்திருக்கலாம் (மாற்றம் எப்போதும் நல்லதே). தான் இயலுமைக்கு அப்பாலான, சுமக்க முடியாத ஒரு சுமையை வாண்டடாக தலையில் ஏற்றி கொண்டேன் என்பதை சிறி உணர்ந்திருக்கலாம். இதில் சுமந்திரன் இப்போதைக்கு தேவையில்லை என நினைக்கிறேன். அவரது personality அரசியலுக்கு சரிவராது. சாணாக்ஸ் உள்ளே வரவேண்டும்.
  14. அவர் சொல்வது எல்லாம் சரிதான் அவை கிழங்கு , சவர்க்காரம் போன்றவை பாவித்தல் பெரிய பிரச்சினை இல்லாத விடயங்கள் . ...... சிலதுக்கு அதுக்கும் அடிப்படையான இயந்திரம் சம்பந்தமான அறிவு இருக்க வேண்டும் . ஆனால் இன்றைய நவீன 2010/2012 க்கு பின் வந்த வாகனங்களுக்கு எலக்ட்ரிக் வயர்கள் கழட்டுதல் போன்றவை பெரிய சங்கடத்தில் கொண்டுபோய் விட்டுடும் ...... கார் கம்பெனிகள் மற்றும் அதததுக்குரிய கராஜ்கலில்தான் அவைகளைக் கையாளக்கூடிய விசேஷமான உபகரணங்கள் இருக்கும் .......அவர்கள் என்ன பிழை என்று பார்க்கிறதுக்கே 300 ஈரோ வரை எடுப்பார்கள் . ......செய்யிறதுக்கு அல்ல .......இது வியாபார உலகம்..... அப்படித்தான் போகும் . .......! மக்களுக்கு சம்பளத்தைக் குடுத்து அவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கையில் ஆசைகளை ஏற்படுத்தி தொழிற்துறை , வைத்தியத்துறை ,ஆடைகள், சப்பாத்துக்கள் போன்றவை மற்றும் பல துறைகள் எல்லாம் சிறிது சிறிதாக பணத்தை சுரண்டி சுரண்டி எடுத்துக் கொள்வார்கள் . .......நாம்தான் கவனமாய் இருக்க வேண்டும் ஆனால் அதுவும் முடியாது எமக்கு ஆடம்பரங்களை மோகிக்கும் மனைவி பிள்ளைகள் இருக்கிறார்கள் . ...... பேசாமல் வாரியார் பிரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டு போகவேண்டியதுதான் . ........!
  15. அதுதானே... புத்திசாலி மனுசன். 😂 நம்ம, திராவிட உடன்பிறப்புகளை பார்த்து பழகியிருப்பாரோ.... 🤣
  16. ஒரு மனிதனுக்கு மரணம் எப்போது என தெரிந்தால் அவனுக்கு தினசரி மரணம் தான். இந்த வகையில் நான் நேசிக்கும் அந்த இயற்கையை ஆகாயம் நோக்கி இரு கரம் கூப்பி வணங்குகின்றேன்.🙏
  17. உலகத்துக்கு ஜனநாயக பாடம் எடுத்துக்கொண்டு தாங்கள் செய்வதெல்லாம் சுத்துமாத்து அரசியல். பைடன் உக்ரேனில் உள்ள தனது/மகன் சம்பந்தமான ஊழல்களை மறைக்க போர் மூட்டங்களை தொடக்கியதாகவும் ஒரு கதை உண்டு. எது எப்படியிருந்தாலும் இந்த செயல் அமெரிக்க சமுதாயத்திற்கு ஒரு அவமானம். இதே செயலை ரஷ்ய அதிபர் செய்திருந்தால் மேற்கத்திய ஊடகங்களும் அது சார்ந்த கருத்தாடல் ஜாம்பவான்களும் புட்டினை இல்லை உண்டு என ஆக்கியிருப்பார்கள். 😋
  18. மனுநீதிச் சோழன் மகனையே தேரால் ஏற்றிக் கொல்ல உத்தரவிட்டார் என்று இல்லாத பொல்லாத கதைளை எங்களுக்கு சொல்லி எங்கள் மனதுகளை சிறுவயதிலேயே மாற்றிவிட்டார்கள். ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப் போல நாங்கள் வளர்ந்திருக்கவேண்டும்.......... அந்தச் சிலையை கடலுக்குள் தாட்டுவிடலாம்............................😌.
  19. என்னுடைய வீடு தென் கலிஃபோர்னியாவில் கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு நகரில் இருக்கின்றது, வளவன். குளிர் மிகவும் குறைந்த, பல மாதங்கள் வெப்பமான உலர் காலைநிலை உள்ள இடம், பனி விழுவதே இல்லை. ஓரளவிற்கு எங்களின் ஊர் போலவே. இங்கு பலரின் வீடுகளில் எங்களின் மரங்கள், தாவரங்கள், பூச்செடிகள் பலவும் உள்ளன. பெரிய இரண்டு முருங்கைகள், மா, பலா, கொய்யா, வாழை, நாவல், மாதுளை, பப்பாசி, கறி வேப்பிலை, தேசி என்று பல மரங்கள் இங்கு என் வீட்டில் நிற்கின்றன.............
  20. ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை தான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் மிகவும் வன்முறையான, மனிதாபிமானமற்ற முறையிலும், ஒட்டுமொத்த உலக நாடுகளின் விருப்பத்திற்கு எதிராகவும் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் அவை எல்லாம் வெறும் பேச்சளவிலேயே இருக்கிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. நான் அமெரிக்காவின் அதிபராக பெருமையுடன் பதவியேற்கும் நாளான 2025 ஜனவரி 25, க்கு முன்பாக காசாவில் இருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் மத்திய கிழக்கும், மனிதகுலத்துக்கு எதிராக இத்தகையை அட்டூழியங்களை செய்து கொண்டிருப்பவர்களும் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். இதற்கு காரணமானவர்கள் மீது அமெரிக்க வரலாற்றிலேயே யாரும் செய்யாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும். உடனடியாக பிணைக் கைதிகளை விடுவியுங்கள். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேல் நாட்டில் சுமார் 1,200 பேரை படுகொலை செய்து, 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், அவர்கள் தங்கியிருக்கும் காசாவில் தீவிர தாக்குதலை நடத்திவருகிறது. இதில், இதுவரை 43,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. அவர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்று தெரியப்படுத்தப்படவில்லை. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஹமாஸுக்கு-ட்ரம்ப்-கடும்-எச்சரிக்கை/50-348159
  21. நான் இவை பற்றி எதுவும் இந்த திரியில் எழுதவில்லை. நான் கற்பனை உலகில் வாழ்கிறேன் என்றீர்கள்… ஓம்…அண்ணன் சீமானை போல என்று சொன்னேன். அவ்வளவுதான் 😎
  22. சீமானின் வெருட்டல்களினாத்தான் திமுகா கொஞ்சமாவது நல்லது செய்கின்றது 😎
  23. கற்பனையில் சந்தோசப்படுவதும் மனிதனின் இயல்புதானே. உங்கள் கற்பனை உலகம் தொடர என் வாழ்த்துகள். 😂
  24. மக்களிடம் தோற்றுப்போனவர்கள் மக்களின் தெரிவை கேளிக்கை செய்கின்றார்கள். மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா முடங்கவேண்டும் என்பதே பலரின் ஆவல், எதிர்பார்ப்பாக உள்ளது போலும்.
  25. இந்த மொக்குதனத்தை புலம்பெயர் அமைக்புகள் கைவிடுவதோடு, கஜேசையும் கைவிட வலியுறுத்த வேண்டும். இப்போ கூடாரம் காலியாகி அனுரா பக்கம் போவதை கண்டதும் புலம்பெயர் தமிழர்+கஜே தம் நிலைப்பாட்டில் இருந்து இறங்க தயாராகி விட்டனர் என நினைக்கிறேன்.
  26. இதை எப்படி கோசான் சொல்லுவார் ..நீங்கள் எப்படி அதை ஆதரிக்கிறீர்கள்?....யுத்தம் நடக்கும் போது நிதியுதவி முதல் கொண்டு அனைத்து உதவிகளும் புலிகளுக்கு செய்து விட்டு ,சகல நாடுகளிலும் உள்ள பாராளுமன்றம் போய் நின்று நாங்கள் தான் புலிகள் ,புலிகள் தான் நாங்கள் என்று கத்தி விட்டு எல்லாம் முடிந்த பின் நாங்கள் பொறுப்பேற்கத் தேவையில்லை என்றால் அது எப்படி சரியாகும்? முதலாவது பந்தி சரியாய்த் தான் எழுதி இருக்கிறீர்கள்
  27. 10 ஆவது பாராளுமன்றத்தில் பேசிய தமிழ் தேசியவாதிகளின் கன்னியுரை நம்பிக்கை தருவதாக உள்ளது...அனுரா புகழ்ந்து நேசக் கரம் நீட்டியுள்ளனர் ...மாகாணசபையுடன் வருவார்களா என இருந்து பார்ப்போம்...
  28. அவரும் தனது தவறுகளை உணர்ந்திருப்பார் என்றே நினைக்கிறேன். மீண்டும் எல்லோரும் ஒன்றாக கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. நன்றி சகோ. (பச்சை கைவசம் இல்லை)
  29. வைக்கோ க‌ருணாநிதி குடும்ப‌த்தை பார்த்து கேக்க‌ வில்லையா இந்த‌ தொழில் செய்வ‌தும் பார்க்க‌ வேறு தொழில் செய்ய‌லாம் என்று ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளை அழிக்க‌ துணை போன‌ திமுக்கா கூட‌ எந்த‌ த‌மிழ‌ன் கூட்ட‌னி வைப்பான் உங்க‌ளுக்கு வெக்க‌ம் மான‌ம் ரோச‌ம் சூடு சுர‌னை இல்லையா என்று ஊட‌க‌ங்க‌ள் முன்னாள் பேசின‌ ந‌ப‌ர் தான் வைக்கோ இப்ப‌டி த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் பிழைப்பு வாதிக‌ளை ப‌ற்றி எழுத‌ நிறைய‌ இருக்கு தாத்தா😁😁😁😁😁😁😁😁😁😁.....................................
  30. வாழை பொத்தி வெளி வரும் போது, சாம்பல் அல்லது பொட்டாசியம், தேயிலை சாயாம் இவற்றை வாழைக்கு ஊத்திவிடுங்கள் நன்றாக குலை தள்ளும்👍
  31. இதனை பார்க்கும்போது மக்களின் தீர்ப்பு சுட்ட பாடமாக இருந்தாலும் சுமந்திரன் ஒரு தடையாக இதுவரை இருந்திருக்கலாம் என்றும் பார்க்கலாம் அல்லவா. (உண்மையில் இதை விவாதத்திற்காக திசை திருப்ப முயலவில்லை) சுமந்திரனும் இதற்குள் கொண்டு வரப் படவேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து.
  32. அது எல்லாம் சிங்கல பிரதேசத்தில் ஆரம்பமானது. யாழ்பாணத்திலும் யாழ்களத்திலும் முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கம் பலமிக்க நிலையில் உள்ளது அப்படி நடைபெற அனுமதிக்காது
  33. 2009 இல் இயக்கம் ஆமியை உள்ளுக்க விட்டு அடிக்கப் போகுது என்றும் பெரிய பிளான் போடுகிறார்கள் என்றும் அதற்கு Second world war படங்களில் பார்த்த விஷயங்களை எல்லாம் எழுதி என்று புருடா விட்டவர் தான் இவர்.
  34. எங்கே, எந்த துறையில் கல்லா நிதி பட்டம் எடுத்தார் என தெரியவில்லை. அருஸ் இவர் புனைபெயர் என நினைக்கிறேன். போர்க் காலத்தில்….வேல்சில் இருந்து அரூஸ் என்ற பீடிகையோடு…. ஏதோ இரணமடு பண்டில் ஏறி நிண்டு பார்த்தவர் போல இக்பால் அத்தாஸ் முதல் கிழமை சண்டே டைம்சில் எழுதியதை + தன் கற்பனை சேர்த்து அள்ளி விட்ட வாய்வாளர் இவர்.
  35. அட ஏன் அங்கே எல்லாம் போகிறீர்கள்…பலர் யாழில் மானசீக தேர்தலில் சைக்கிளுக்கு போட்டு விட்டு, இப்போ அனுரவுக்கு அவகாசம் கொடுக்கலாம் என எழுதுகிறனர். ஆனால் இதுவரை அழிவை தரும் தேர்வுகளை (கோட்டா 2019 நியாபகம் இருக்கலாம்) தேடி, தேடி ஆதரித்த இவர்கள், இப்போ அனுரவை தேர்தலின் பின் ஆதரிப்பது, ஒரு வழியாக சைக்கிள் கோஸ்டி டைப், கிடைக்கவே முடியாத வன் தமிழ் தேசியத்தில் இருந்து இவர்கள் விடுபடுவதற்கான அறிகுறி என்றே நான் கருதுகிறேன். ஆனால் என்ன வன்-தமிழ் தேசியத்தில் இருந்து நேராக இண்டர் சிட்டியை பிடித்து பிக்கு காலில் போய் விழப்பார்கிறார்கள். இடையில் ரயில நிப்பாட்டி இவர்களை மென்- தமிழ் தேசிய பஸ்சில் ஏற்றலாம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இது யாழ்களத்தில் மட்டும் அல்ல, வெளியிலும்.
  36. ரஜனி இறப்பின் பின் உருட்டபடகூடிய கம்பி கட்டும் கதைகள்…. ஒரு முன்னோட்டம்….: முள்ளும் மலரும் படத்தை என்னை ரிமேக் பண்ண சொல்லி ரஜனி கெஞ்சினார்… பாஷா படத்தில் அவர் வேடத்தில் நான் நடித்திருந்தால் இன்னும் நன்றாக போயிருக்கும் என்றார்…. என்னை சந்தித்த பின்பே ரஜனியை தமிழக மக்கள் அறிந்துகொண்டனர்… ரஜனி எனக்கு ஓரங்குட்டான் ஊத்தப்பம் சுட்டு தந்தார்…. ஒரங்குட்டான் ஊத்தப்பத்தில் …நான் முடியை நீக்கி விட்டு சாப்பிட்டதை ரவிந்திரன் துரைசாமி குறிபெடுத்து ரஜனியிடம் சொன்னார். என் போயஸ்கார்டன் வீடு, பண்ணை வீடு, சகல சொத்துக்களையும் இனி நீங்கள்தான் உங்கள் சொத்து போல நிர்வகிக்க வேண்டும் என சாகும் தறுவாயில் ரஜனி எனக்கு வாய்ஸ்மெயில் வைத்தார்.
  37. முதலில் அநுர அரசு பாலஸ்தீன பிரதேசத்தில் குடியேறிய அரபிக்கள் பயங்கரவாதத்தைக் கைவிட்டு ஜேவிபியைப் போல ஜனநாயக வழிக்கு வருமாறு கோரவேண்டும்.
  38. முதளாளித்துவ நாடுகளில் நன்கு செட்டில் ஆகிக்கொண்டு கம்மினியூச வகுப்பு எடுப்பார்கள்!😂
  39. செந்தமிழன் சீமான் அண்ணாவுடன் என்ன பேசினார் என்பதை ரஜனி சார் தாம் மரணமடைய முன்னரே தெரிவித்தால் நல்லது. ஒரு பத்து நிமிட சந்திப்பிலேயே பல விடயங்களைச் சாதித்த சீமான் அண்ணா இரண்டு மணிநேரச் சந்திப்பில் பற்பல விடயங்களைச் சாதித்து இருப்பார். அதனை செந்தமிழன் சீமான் அண்ணா ரஜனி சார் இல்லாத காலங்களில் கதைகளாக சொல்கின்றபோது மக்கள் இது புல்டா போண்டா கஞ்சா கப்ஸா கதையெண்டு சொல்லக்கூடாது. ரஜனி சார் இப்பவே சொன்னால் நல்லது. எனக்கு செந்தமிழன் சீமான் அண்ணவை நினைக்கும்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசெல்லம் தான் நினைவில் வருவார்கள். 1400 வருடங்களுக்கு முன்னரே நாயகம் அவர்கள் விண்வெளிக்கு கோவேறு கழுதையைவிடச் சிறியதும் கழுதையைவிடப் பெரியதுமான ஒரு வாகனத்தில் விண்வெளிப் பயணம் செயததாகச் சொல்லியிருக்கின்றார்கள். பவம் சஹாபாக்கள்!😂
  40. இந்தக் காய்வாளர்கள்..தொல்லை பெரும் தொல்லையப்பா...பிரியாணிக்கடை விளம்பரம் மாதிரி
  41. இளைஞர்கள் அடிப்படை புரிதலின்றி உணர்ச்சிவசப்படும் செயல்பாடுகளில் இறங்குவது அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் துன்பத்தையே தரும். இலங்கையில் விடுதலைபுலிகளுக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது, அப்படியிருக்க புலிகள் சம்பந்தமான பதிவுகளை தனி மனிதர்கள் சமூக ஊடகங்களில் பதிவது நிச்சயமா சிங்கள நாட்டு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமே. ஏன் மனித உரிமைகளின் உச்சமென்று கருதப்படும் மேற்குநாடுகளில்கூட தடைசெய்யப்பட்ட அமைப்பு என்ற ரீதியில் புலிகளுக்காக நிதி சேர்ப்பது, ஆயுத போராட்டத்தை மீள் கட்டமைக்க முனைவது என்று யாரும் ஈடுபட்டால் அது தண்டனைக்குரிய குற்றமே. ஒவ்வொரு மாவீரர்நாள் தினத்திற்கும் இதுபோன்ற முகநூல் பதிவுகளால் இளைஞர்கள் சிங்கள புலனாய்வு பிரிவிடம் சிக்கி கொள்வது வாடிக்கையாகிவிட்டது. மைத்திரி கோத்தபாய ஆட்சியில்கூட தலைவர் பிறந்தநாள் வாழ்த்து, மாவீரர்தின பதிவுக்காக கொழும்புக்கு நாலாம் மாடிக்கு விசாரணக்கு அழைத்ததும் நினைவில் உண்டு, அவர்கள் என்ன ஆனார்கள் தொடர்ந்து சிறையிலா அல்லது விடுதலை செய்யப்பட்டார்களா தெரியவில்லை, விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் சிங்கள புலனாய்வின் பூரண கண்காணிப்பில் தொடர்ந்தும் இருப்பார்கள் என்பது உறுதி. மாவீரர்களை நினைவுகூர கட்டுப்பாடின்றி பொதுவெளியில் அனுமதி தந்தால் அனைவரும் அங்கே ஒன்று கூடுங்கள் அதைவிடுத்து அதை தனியான முறையில் பதிவுகளிட்டு சிங்கள சட்டத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். தனிமனித ரீதியில் ஆவேசப்பதிவுகளீட்டால் ஒரு அரசாங்கம் சட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டும், தென்னிலங்கை சிங்கள இனவாதிகளுக்கு பதில் சொல்லவேண்டும், ஏன் அவர்கள் கட்சிக்குள்ளேயே குழப்ப,ம் வர வாய்ப்புண்டு. என்னதான் அநுர வந்தான் இனவாதம் இனி இல்லையென்று நாம் பேசிக்கொண்டாலும், இனவெறி சிங்களவனுக்கு நம்மை பிடிக்காது என்பதை எப்போதும் தெளிவாக மனதில் வைக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் இம்முறை சிங்கள கட்சி வென்றதால் யாழ் சகோதரர்களே என்று சமூக ஊடகங்களில் திடீர் பாசம் காட்டும் சிங்களவர் ஒருவேளை யாழில் என்பிபி ஒரு சீட் கூட வென்றிருக்காவிட்டால் நாம் எப்போதும் கொட்டிதான் அவனுக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.