Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    23
    Points
    19670
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    88827
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    16
    Points
    46979
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3127
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/03/24 in Posts

  1. @Kandiah57 @ரசோதரன் புலிகள் ஆயுதத்தை மெளனித்த போது…. புலம் பெயர் மக்களே எம் கொடியை தூக்கி செல்லுங்கள்…. என்றோ… புலம்பெயர் மக்களே எம்மை உலக அரங்கில் புனிதர்களாக்குங்கள் என்றோ கேட்டகவில்லை. அவர்கள் தாம் உலக அளவில் ஒரு toxic brand ஆக வந்து விட்டோம் என்று தெரிந்தே…அத்தோடு நிறுத்தினார்கள். தொடர்ந்து புலம்பெயர் சமூகம் ஒரு பொறுப்பான சிவில் கட்டமைப்பை நிறுவி, அதில் 2009 மே யிற்கு முற்பட்ட எதையும் கலக்காமல் - தாயக அரசியலையும் கூட்டிணைத்து பயணித்து இருந்தால் 15 வருடத்தில் பலதை சாதித்திருக்கலாம். ஆனால் நடந்தது இதற்கு நேர் எதிரானது. இனியும் திருந்தவாய்ப்புள்ளது. வாய்ப்பை பிடிப்பதும் விடுவதும் நம் கையில்தான் உண்டு.
  2. சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒருநாட்டை சொல்லுங்கள் ரதி அறிந்துகொண்டால் அண்டா அளவு மகிழ்ச்சி. அதவிட முக்கியம் சிங்கப்பூரே முதலாளித்துவநாடாச்சே அப்போ கம்யூனிஸ்ட்டுக்களிடம் நாட்டை கொடுத்தால் சிங்கப்பூர்போல முதலாளித்துவ நாடு ஆக்கிடுவார்களா? அப்புறம் எதுக்கு கம்யூனிச கொள்கை அவர்களுக்கு? அப்பப்போ பாட்ஷா ரஜனிமாதிரி வந்து உருட்டிபோட்டு ஓடிறீங்கள் அதுதான் தமிழ் மக்கள் மனசில் உள்ள கவலை. அதாவது இலங்கைக்குள் புலிகள் தனிநாடு உருவாக்க நினைத்தது ஜேவிபியைவிட ஆபத்தான செயலா? அப்போ கொழும்பில் இருந்தவனையெல்லாம் 58/77/83ல் அடிச்சு மட்டக்களப்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சிங்களவன் விரட்டிவிட்டு அது உங்கள் இடம் ஓடுங்கோடா என்று கலைச்சுவிட்டது உங்கநாடு இதுதான் என்று சிங்களவன் சொன்னது மாதிரி இல்லையா? தனிநாட்டை முதலில் கோடு போட்டு காட்டியது சிங்களவனா தமிழனா?
  3. இரு மாபெரும் புத்திஜீவிகள் சந்திப்பு. இனி தமிழ் மக்களுக்கு விடிவுகாலம்தான் போங்கோ! தமிழ்க் கூட்டமைப்பை முதலில் பாராளுமன்ற கதிரைகளுக்காக உடைத்துக்கொண்டு முதலில் வெளியேறியவர் இந்த கஜே-கயே குழுத்தலைவர் கஜேந்திரகுமார். இது சுமந்திரன் வருவதற்கு முன் நிகழ்ந்தது. மக்களால் நிராகரிக்கப்பட்ட சுமந்திரன் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளவேண்டும். மக்கள் தமக்குத் தேவையானவர்களைத் தெரிவுசெய்வார்கள். குறிப்பாக அர்ச்சுனா இராமநாதன் போன்றவர்களை அனுப்பியுள்ளார்கள். பிக்பாஸ் அதிகம் பார்ப்பதன் விளைவாகக் கூட இது இருக்கலாம். அநுர அரசு சமர்ப்பிக்கப் போகின்ற புதிய அரசிலமைபுத்தொடர்பாக கஜே, பார் சிறீதரன், அருச்சுனா போன்ற புத்திஜீவிகள் மக்களுக்குப் போதிய விளக்கம் அளிப்பார்கள் அல்லது புரியவைப்பார்கள் என நம்பலாம். எனவே சுமந்திரன் தன்னை நிராகரித்த மக்களின் ஆணையைக் கருத்திற்கொண்டு இதுபற்றி வாளாதிருப்பதே சாலச் சிறந்தது!
  4. இவ்வளவு காலமும்... சம்பந்தன் சுமந்திரன் இருந்த படியால்தான்... கஜேந்திரக்குமார் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பது ஊரறிந்த ரகசியம். 🙂 சுமந்திரன் வந்தால்.... கஜேந்திரகுமார் வெளியேறுவார். எது உங்களுக்கு விருப்பம் என்று, ஒரு முடிவுக்கு வாங்கோ விசுகர். 😂 வேலியிலை போன ஓணானை, திரும்பவும் பிடித்து வேட்டிக்குள் விடாதீங்க. 😜 பட்டது போதும், பட்டினத்தாரே... 🤣
  5. சந்தோசம். இதை வரவேற்று இப்போதைக்கு பொதுவெளியில் இவர்கள் இருவரையும் கடுமையாக விமர்சிப்பதை தவிர்கிறேன். டில்வின் மா.சபை முறை கலைக்கப்படும் என கூறியதற்கு, சபையில் விளக்கம் கேட்ட சாணாக்ஸ். விளக்கம் ஏதும் கொடாமல், சிறிதரனுடன் சாணக்கியனும் அனுர வை சந்தித்து கேட்கலாம் என பதில் சொன்ன பிமால் ரத்நாயக்க.
  6. பதவியில் இருந்து இதை கூட செய்யா விட்டால் உலகம் என்ன சொல்லும்??
  7. கார்களில் ஏற்படும் நம்மால் சரி செய்யப்படக்கூடிய கோளாறுகளை இவர் விளக்குகிறார். இதனை ஏற்பதும் விடுவதும் நமது இஷ்டமே. ஆனால் ஒன்று மெக்கானிக்கிட்ட போனால் உங்களுக்கு 3000 டொலர் செலவாகியிருக்கும் என்று அடிச்சு விடுறார் அதுதான் நெருடல். ஏனென்றால் நம்மவர்களில் சிலர் வைத்திருக்கும் காரே 3000 டொலர்தான் வரும். .................................................................. இயந்திரம் குலுங்குவது ஏன் அதை எப்படி சரி செய்யலாம் என்று சொல்கிறார் கார் கதவு , Fan belt எழுப்பும் சத்தங்களை சவர்க்காரத்தின் உதவியுடன் எப்படி சரி செய்யலாம் என்று சொல்கிறார். எஞ்சின் லைட் எரிந்தால் அதனை சரி செய்வதுபற்றி உருளைக்கிழங்கால் தேய்த்தால் எவ்வளவு மழை அடித்தாலும் கார் கண்ணாடி இருளாகாது என்கிறார் கார் டயர் பற்றிய தகவல் கார் திறப்பு காருக்குள் சிக்கிக்கொண்டால் பிரேக் திடீரென பிடிக்காவிட்டால், ஆனால் எல்லா காருக்குமிது பொருந்தாது காருக்குள் லொகேற்றர் பொருத்தியிருந்தால் கண்டுபிடிப்பது எப்படி மேலும் சில
  8. எப்படி சிங்களவர் (மட்டும் அல்ல முஸ்லிம்களும்) ஓம்படாமல் தீர்வை நாட்டில் எட்ட முடியாது என்பது உண்மையோ… அதே போல் புலத்தில் இருக்கும் நீங்கள் சொல்லும் சப்போர்டசை விலத்தி இங்கே ஒரு பெரிய அளுத்தத்தை பெற முடியாது. மேலும் அவர்களை போலவே நீங்களும் prisoner of your past அதாவது கடந்த கால கசப்பான அனுபவங்களின் கைதியாக இருக்கிறீர்கள். அருச்சுனா சொன்னது போல் இதுதான் கடைசி சந்தர்ப்பம். இதை கஜனும் சிறியும் விழங்கிகொண்டது போல்… ஒவ்வொரு புலம்பெயர் ஐலண்ட்டும், குமாரசாமியும், தமிழ் சிறியும் விளங்கி ஒரே முகமாக செயல்பட்டால் எதையாவது முயலாலாம். இல்லை, இனம் உரிமையோடு வாழாவிட்டாலும் பரவாயில்லை பழைய கறளைத்தீர்ப்பதே இலக்கு என்றால் - உங்கள் இஸ்டம்.
  9. எனக்கு அவர்கள் இணைந்து பேசுவதை விட நீங்கள் கூறிய இந்த விடயம் இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது..நல்ல விடயம் விமர்சனம் என்ற போர்வையில் நானும் எனக்கே தெரியாமல் தமிழ் தேசியத்திற்கு விரோத கருத்துக்களை எழுதியிருக்கலாம்..
  10. இது யாழ்ப்பாணீஸ் தங்களுக்குத் தாங்களே எடுத்துச் செருகிய ஆப்பு,...🤣
  11. கூட இருக்கும் எல்லோரையும் மட்டம் தட்டி கொண்டே இருக்கும் குணம்தான் சுமந்திரனை இந்த நிலைக்கு இறக்கி விட்டுள்ளது. உண்மையில் மக்கள் இப்படி நிராகரித்தது அவருக்கு பலத்த பின்னடைவுதான். தோல்வியின் பின் அவர் தனியே இருந்து reflection செய்வாராயின், தன் குணவியல்பு அரசியலுக்கு ஏற்றதல்ல என்பதை விளங்கி விலகி கொள்வார் என எதிர்பார்க்கிறேன். குறுக்குசால் ஓட்டாமல், ஜனநாயகத்தை மதித்து, மக்கள் தேர்ந்த இருவர் இணைந்து அரசியலை முன்னெடுக்க சுமந்திரன் வழி விட்டு விலக வேண்டும். அரசியல்சட்ட விவகாரம் என்பது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல, திம்பு கோரிக்கை நேரம் இயக்கங்கள், அறிஞர் குழுக்களை அமைத்து ஒரு தெளிவான நிலைப்பாட்டை கண்டன. அதில் சிவா பசுபதி போன்றோர் உதவினர் என நினைக்கிறேன். சுமந்திரனை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அரசியல் சட்டத்தை தனித்துறையாக எடுத்து படித்தவர்கள் எல்லாம் புலம்பெயர்தேசத்தில் இருக்கிறார்கள். தமிழ் நாடு, மலேசியா, சிங்கபூரிலும் உள்ளனர். ஆனால் எமக்கு இப்போ தேவை ஒரு நல்ல diplomat ஒரு நல்ல negotiator. இதை செய்பவர் கட்டாயம் எம்பியாக இருக்க வேண்டியதில்லை.
  12. ஆம். அதில் என்ன சந்தேகம். 😂 சுமந்திரனை விட... பத்தாயிரம் மடங்கு திறம். 🤣 இதற்குள் சுமந்திரன் வந்தால்.... நான் திரும்பவும் அரசியலில் குதிக்க வேண்டி வரும்.
  13. இரெண்டுமே காரணங்கள். மேலும் இரு காரணங்கள்: தன் அதி தீவிர அரசியல் இன நலனை பாதிப்பதை கஜன் காலம் தாழ்தியாவது உணர்ந்திருக்கலாம் (மாற்றம் எப்போதும் நல்லதே). தான் இயலுமைக்கு அப்பாலான, சுமக்க முடியாத ஒரு சுமையை வாண்டடாக தலையில் ஏற்றி கொண்டேன் என்பதை சிறி உணர்ந்திருக்கலாம். இதில் சுமந்திரன் இப்போதைக்கு தேவையில்லை என நினைக்கிறேன். அவரது personality அரசியலுக்கு சரிவராது. சாணாக்ஸ் உள்ளே வரவேண்டும்.
  14. அவர் சொல்வது எல்லாம் சரிதான் அவை கிழங்கு , சவர்க்காரம் போன்றவை பாவித்தல் பெரிய பிரச்சினை இல்லாத விடயங்கள் . ...... சிலதுக்கு அதுக்கும் அடிப்படையான இயந்திரம் சம்பந்தமான அறிவு இருக்க வேண்டும் . ஆனால் இன்றைய நவீன 2010/2012 க்கு பின் வந்த வாகனங்களுக்கு எலக்ட்ரிக் வயர்கள் கழட்டுதல் போன்றவை பெரிய சங்கடத்தில் கொண்டுபோய் விட்டுடும் ...... கார் கம்பெனிகள் மற்றும் அதததுக்குரிய கராஜ்கலில்தான் அவைகளைக் கையாளக்கூடிய விசேஷமான உபகரணங்கள் இருக்கும் .......அவர்கள் என்ன பிழை என்று பார்க்கிறதுக்கே 300 ஈரோ வரை எடுப்பார்கள் . ......செய்யிறதுக்கு அல்ல .......இது வியாபார உலகம்..... அப்படித்தான் போகும் . .......! மக்களுக்கு சம்பளத்தைக் குடுத்து அவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கையில் ஆசைகளை ஏற்படுத்தி தொழிற்துறை , வைத்தியத்துறை ,ஆடைகள், சப்பாத்துக்கள் போன்றவை மற்றும் பல துறைகள் எல்லாம் சிறிது சிறிதாக பணத்தை சுரண்டி சுரண்டி எடுத்துக் கொள்வார்கள் . .......நாம்தான் கவனமாய் இருக்க வேண்டும் ஆனால் அதுவும் முடியாது எமக்கு ஆடம்பரங்களை மோகிக்கும் மனைவி பிள்ளைகள் இருக்கிறார்கள் . ...... பேசாமல் வாரியார் பிரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டு போகவேண்டியதுதான் . ........!
  15. அதுதானே... புத்திசாலி மனுசன். 😂 நம்ம, திராவிட உடன்பிறப்புகளை பார்த்து பழகியிருப்பாரோ.... 🤣
  16. ஒரு மனிதனுக்கு மரணம் எப்போது என தெரிந்தால் அவனுக்கு தினசரி மரணம் தான். இந்த வகையில் நான் நேசிக்கும் அந்த இயற்கையை ஆகாயம் நோக்கி இரு கரம் கூப்பி வணங்குகின்றேன்.🙏
  17. உலகத்துக்கு ஜனநாயக பாடம் எடுத்துக்கொண்டு தாங்கள் செய்வதெல்லாம் சுத்துமாத்து அரசியல். பைடன் உக்ரேனில் உள்ள தனது/மகன் சம்பந்தமான ஊழல்களை மறைக்க போர் மூட்டங்களை தொடக்கியதாகவும் ஒரு கதை உண்டு. எது எப்படியிருந்தாலும் இந்த செயல் அமெரிக்க சமுதாயத்திற்கு ஒரு அவமானம். இதே செயலை ரஷ்ய அதிபர் செய்திருந்தால் மேற்கத்திய ஊடகங்களும் அது சார்ந்த கருத்தாடல் ஜாம்பவான்களும் புட்டினை இல்லை உண்டு என ஆக்கியிருப்பார்கள். 😋
  18. மனுநீதிச் சோழன் மகனையே தேரால் ஏற்றிக் கொல்ல உத்தரவிட்டார் என்று இல்லாத பொல்லாத கதைளை எங்களுக்கு சொல்லி எங்கள் மனதுகளை சிறுவயதிலேயே மாற்றிவிட்டார்கள். ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப் போல நாங்கள் வளர்ந்திருக்கவேண்டும்.......... அந்தச் சிலையை கடலுக்குள் தாட்டுவிடலாம்............................😌.
  19. என்னுடைய வீடு தென் கலிஃபோர்னியாவில் கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு நகரில் இருக்கின்றது, வளவன். குளிர் மிகவும் குறைந்த, பல மாதங்கள் வெப்பமான உலர் காலைநிலை உள்ள இடம், பனி விழுவதே இல்லை. ஓரளவிற்கு எங்களின் ஊர் போலவே. இங்கு பலரின் வீடுகளில் எங்களின் மரங்கள், தாவரங்கள், பூச்செடிகள் பலவும் உள்ளன. பெரிய இரண்டு முருங்கைகள், மா, பலா, கொய்யா, வாழை, நாவல், மாதுளை, பப்பாசி, கறி வேப்பிலை, தேசி என்று பல மரங்கள் இங்கு என் வீட்டில் நிற்கின்றன.............
  20. சதுரங்க வேட்டை ----------------------------- இது கதையில்லை, செய்திதான். ஆனால் கதைகளை மிஞ்சும் செய்தி. இன்றைய டெயிலி மிர்ரரில் இருக்கின்றது. அனுராதபுரத்தில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வயது 70. அவர் தன்னிடம் இருந்த ஒரு டிராக்டரை 29 இலட்சம் ரூபாய்களுக்கு விற்றார். டிராக்டரை வாங்க வந்தவர்களில் ஒருவர் தான் ஒரு சோதிடர் என்று அந்தச் செல்வந்தருக்கு சொன்னார். இந்த வீட்டில் உள்ள தோட்டத்தில் ஒரு பெரும் புதையல் புதைக்கப்பட்டு இருப்பதை தன்னால் உணரக்கூடியதாக இருப்பதாகவும், அதை எடுப்பதற்கு தான் அந்தச் செல்வந்தருக்கு உதவுதாகவும் சொன்னார். சோதிடர் அன்றிரவு யாருக்கும் தெரியாமல் செல்வந்தரின் தோட்டத்தில் சில போலி இரத்தினக்கற்களை புதைத்தார். அடுத்த நாள் இன்னொருவருடன் அங்கே போனார். அவருடன் கூடப் போனவர் ஒரு பாம்பாட்டி. அவர்கள் ஏற்கனவே ஒரு பாம்பை செல்வந்தரின் தோட்டத்தில் விட்டு வைத்தும் இருந்தனர். அந்தப் பாம்பு தான் புதையலைக் காக்கும் சக்தி என்று செல்வந்தருக்கு சொன்னார்கள். பின்னர் புதைத்து வைத்திருந்த போலி இரத்தினக்கற்களை எடுத்துக் கொடுத்தனர். அதன் பெறுமதி நான்கு கோடி ரூபாய்கள் என்றனர். சோதிடரின் பங்காக 50 இலட்சம் ரூபாய்கள் கேட்டனர். மிகவும் மகிழ்ந்திருந்த செல்வந்தர் கையில் டிராக்டரை விற்று வைத்திருந்த 29 இலட்சம் ரூபாய்களை அவர்களிடம் கொடுத்து விட்டு, மிகுதியை இரத்தினக்கற்களை விற்ற பின் கொடுப்பதாகச் சொன்னார். சோதிடர் செல்வந்தரை இரத்தினக்கற்களை ருவான்வெலிசாயவிற்கு எடுத்துப் போய் ஒரு பூஜை செய்யும் படி கேட்டுக்கொண்டார். தான் ஒரு சில நாட்களில் திரும்பி வருவதாகவும் சொன்னார். போன சோதிடர் போனது தான்.................... அவர் திரும்பி வரவேயில்லை. இரத்தினக்கற்களை ஒரு நகைக்கடைக்காரர் பார்த்து, போலிக் கற்கள் என்று சொன்னார். அனுராதபுர போலீசார் இப்பொழுது சோதிடரையும், பாம்பாட்டியையும் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். கேள்வி என்னவென்றால், இந்த செல்வந்தர் எப்படி 70 வயதுகள் வரை எங்கும் ஏமாறாமல் ஒரு செல்வந்தராகவே இருந்தார் என்பதே............. https://www.dailymirror.lk/top-story/Astrologer-cheats-businessman-of-Rs-2-9Mn-with-fake-treasure-scam/155-297301
  21. என்னது இந்தப்பக்கம் நீதிமான்கள் ஒருத்தரையும் காணேல்ல..... 😂
  22. வெள்ளத்திற்குள் நின்று ஒரு வீடியோ வரப் போகுதோ என்று நினைத்துக் கொண்டிருக்க, 'டீச்சர், இவன் நுள்ளிட்டான்..................' என்று ஒன்று வந்திருக்கின்றது...............🫣.
  23. அருமையான கருத்து. எனது பாணியில் நான் கூறுவதற்கும் இதற்கும் கருதியலில் வேறுபாடு இல்லை. நன்றி.
  24. பிறநாடுகள் பற்றி எனக்குத் தெரியவில்லை, ஆனால் இங்கு அமெரிக்காவில் கதவைத் தட்டியவுடன் கதை முற்றும் முடிந்துவிடுகின்றது. அதன் பின் அவர்கள் எங்கேயும் நெருப்பாக நிற்கமுடியாது. முகநூல் கணக்கையே மூடிவிட்டுப் போக வேண்டியதுதான்................. பெயரில் கூட நெருப்பு, அக்னி இப்படி எதுவும் இருந்தால், அதையும் எடுத்து விடவேண்டும்.............🤣.
  25. நான் உங்களையும் செய்யுங்கள் என சொல்லவில்லை அண்ணை. தேத்தண்ணி கடை வாங்கில் எனக்கு பக்கத்தில் இருந்து கதைக்கும் இன்னொரு ஆள்தான் நீங்களும், என்பது எனக்கும் தெரியும். 2009 க்கு முன்பே நான் இப்படித்தான். சொந்த வாழ்விலேயே உலக மகா சோம்பேறியான என்னை நீங்கள் இனத்துக்கு வழி காட்ட சொன்னால் - இது நடக்கிறகாரியமா? என்னால் முடியுமானது - எழுதுவது, ஒற்றுமையாக கூட்டம் போட்டால், போராடினால் அதில் ஒரு தலையாக போய் நிற்பது, தேவை என படின் என்னால் ஆன நிதியை கொடுப்பது. ஆனால் புலம்பெயர் தேசத்தில் பல வினைதிறனான செயல்வீரகள் இருக்கிறார்கள். 2009 உடன் அவர்கள் எல்லாரும் செத்து விடவில்லை. கள்ளர்களினதும், புலனாய்வு ஏஜெண்ட்களினதும், மொக்கர்களினதும் தலைமைதுவ கேடால் - அவர்கள் விலகி போய்விட்டார்கள். இப்படியான செயல்வீரர்களுக்குத்தான் நான் எழுதும் செய்தி. யாழில் எழுதும் என்னை, உங்களை போன்ற விசைப்பலகை வீரருக்கு அல்ல. நாம் அந்த வேலைக்கு சரிவரமாட்டோம் என்பது எனக்கு எப்பவோ தெரியும்🤣.
  26. இதனை பார்க்கும்போது மக்களின் தீர்ப்பு சுட்ட பாடமாக இருந்தாலும் சுமந்திரன் ஒரு தடையாக இதுவரை இருந்திருக்கலாம் என்றும் பார்க்கலாம் அல்லவா. (உண்மையில் இதை விவாதத்திற்காக திசை திருப்ப முயலவில்லை) சுமந்திரனும் இதற்குள் கொண்டு வரப் படவேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்து.
  27. ஓகோ... கதவை தட்டினத்திற்கே பதுங்கிய வீர மறவர்கள் தான் புலிக்கொடியை போர்த்திக்கொண்டு முகநூலில் பயர் விடுகினமா. அங்க பதுங்கிக்கொண்டு தாயகத்தில் மக்கள் போராடவேண்டும் இவர்கள் சொல்வதில் தப்பேயில்லை. முதலில் ஈழ தமிழர்கள் மங்கோ மடையர்ஸ் மாதிரி சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். எமது போராட்டத்தை எவ்வளவு பெரிய விலை கொடுத்து சிங்களவன் ஒழித்தவன் என்பது எமக்கு தெரியுமல்லவா...? அப்படிப்பட்ட விலை கொடுத்தவன் கண்கொத்தி பாம்பாக தான் இருப்பான். அது யாழ்ப்பாண/கிழக்கு தமிழர்களின் ஆஸ்தான நாயகன் அனுர வந்தாலும் சரி தேசிக்காய்களின் ஆஸ்தான நாயகன் பொன்சி வந்தாலும் சரி. இந்த அடிப்படை பொது அறிவு கூட இல்லாமல் உணர்ச்சிவேகத்தில் முகப்புத்தக லைக்குகளை அள்ள ஸ்டண்ட் அடித்தால் சிலவேளை மாமியார் வீட்டுக்களி அவர்களுக்கு இந்த பொதுஅறிவை கற்பிக்கும். நாங்கள் உங்களுக்கு சொல்லிக்கொடுக்கும் அரசியல் கிடைப்பதை எடுத்து உங்கள் புள்ளைகுட்டிகளை படிக்கவையுங்கள். எப்பவுமே கிடைக்காத மட்டன் பிரியாணிக்காக கிடைக்கும் குஸ்காவையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு பட்டினி படுக்காதீர்கள். நன்றாக நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மட்டன் பிரியாணியை பெற்றுத்தர ஆண்டவனால் கூட முடியாது. இந்த புலம்பெயர்ஸ் எல்லாம் மட்டனும் வேணாம் மண்ணாங்கட்டியும் வேணாம் எண்டு இருப்பது முப்பது வருஷத்திற்கு முன் இடத்தை காலி பண்ணிய கோஷ்ட்டி அவர்கள் டோமஹாவ்க் ஸ்டேக்கை ஐரோப்பிய அமேரிக்க ஸ்டைலில் உள்ளவிட்டுக்கொண்டு நீங்கள் பட்டினி படுத்தால் தான் தீர்வு வரும் என்று கதையடிப்பார்கள். இவர்களுக்கு நீங்கள் ஆய்வுகூட எலிகள் மட்டுமே. உங்களுக்கு என்ன நடந்தாலும் அவர்களுக்கு போச்சு ஒரு ஹைகோர்ட்
  28. உங்களை போல் சாதாரண கருத்தாளர் இல்லை சுமந்திரன். அவர் தன் மனைவியிடம் கூட ஒரு அரசியல் விடயத்தை பொதுவெளியில் வைத்து கூறினால் - அது எல்லோரு காதுக்கும் போகும். சுமந்திரன் பல பொதுவெளிகளில் இப்படியான பேய்கதைகளை கதைத்துள்ளமைக்கு போதிய ஆதராம் உள்ளது. யாழில் திரிகளே ஓடியுள்ளது. வேறொன்றும் இல்லை - சுமந்திரனுக்கு தான் ஒரு player, commentator அல்ல என்பது கடைசிவரை புரியவில்லை. கொமெண்டேட்டர் போல் வாயைவிட்டு தன் டீமுக்கு ஆப்பை செருகிகொண்டார்.
  29. போன வருசம் செய்து பாத்திட்டன். அண்டைக்கு என்ரை மனிசி நக்கலாய் பாக்க வெளிக்கிட்டது இன்னும் நிப்பாட்டவே இல்லை. 🙃 இதுக்கு மிஞ்சி விளக்கம் என்னாலை தரேலாது. 🤐
  30. போனாப் போகுது ஒரு உருளைக்கிழங்கு தானே................ இரகசியமாக தேய்த்துப் பார்க்கின்றேன், இங்கே மழைக்காலம் இப்ப...................🤣. ஆயுர்வேத, மூலிகை, இயற்கை வைத்தியங்கள் என்று மனிதர்களுக்கு சொல்லப்படும் ஆலோசனைகளின் சாயல் இவற்றில் தெரிகின்றது........ வைபர் வேலை செய்யவில்லை என்றால் உருளைக் கிழங்கு தேய்த்தால் உதவியாக இருக்கும். Hello @suvy உடனடியாக மேடைக்கு அழைக்கப்படுகிறீர்கள்.
  31. ஸ்ரேரிங் வீல் பிரச்சனைகள் திடீர் என்று கார் இயங்காதுவிட்டால் ரிவர்சில் கார் பார் பண்ணும் முறை, இது முக்கியமாக எங்கட பொம்பிளையளுக்கு தேவைப்படும். உலகத்திலேயே மிக கேவலமான டிரைவர்கள் இரண்டுபேர் முதலாவது சீனர்கள் இரண்டாவது எங்க ஊரு அம்மணிகள் உண்மைதான் விளங்க நினைப்பவன், அதேநேரம் மிக விலை உயர்ந்த கார் வைத்துக்கொண்டு ஒரு கோப்பி வாங்கவே நூறுமுறை யோசிக்குறதும், எவனாச்சும் ஓசி கோப்பி வாங்கி தருவானா என்று பம்முற மான தமிழர்களும் உண்டு.
  32. ஈழத்தமிழர்களே தங்கள் அரசியல்வாதிகளையும்,புலம்பெயர் அமைப்புகளையும் நம்புவதில்லை மதிப்பதில்லை.😎 காரணம் அவ்வளவு செயல் திறன். இப்படியிருக்க சிங்களவன் இவர்களை எப்படி மதிப்பான்? 😁
  33. இந்த முறையும் வழமை போல் ஜேர்மனிதான் மூன்றாம் உலக போரை சம்பிரதாயமாக ஆரம்பிக்கும் போல் தெரிகின்றது. அப்படி ஆரம்பித்தால் இனிமேல் ஜேர்மனி உலக வரைபடத்தில் இருக்காது. அல்லது புல் பூண்டுகள் முளைக்காத பாலைவனமாக மாறும்.
  34. புலத்தில் இருக்கும் தமிழர்களோ அல்லது புலம் பெயர்ந்த தமிழர்களோ அப்படியான ஒரு அழுத்தத்தை இலங்கை அரசின் மீது ஏற்படுத்தும் பலம் இல்லாதவர்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன். இது ஏலவே தேய்ந்து இன்று ஒரு கட்டெறும்பு, சிற்றெறும்பு நிலைக்கு வந்துவிட்டது. பல கருத்துகளை கருத்துகள் சொல்பவர்களின் நம்பிக்கைகளாகவும், அந்த நம்பிக்கைகளை தாங்கி நிற்கும் ஒரு வகைப் பிரச்சாரங்களாகவும் தான் எடுக்கவேண்டும் போல. ஒரு மதப் பிரச்சாரம் போல.
  35. புலம்பெயர் தமிழர்கள் எதுவும் செய்ய முடியாது முடிந்ததால் 16 ஆண்டுகளில் செய்திருப்பார்கள். 🙏
  36. என்ன ஐயா இப்படி சொல்லாமல்கொள்ளாமல் கச்சையை மாற்றிவிட்டீர்கள் ...சொல்லிய்ருந்தால் நானும மாற்றியிருப்பேன்னல்ல‌😅
  37. ஆபத்தில் உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். தனி - பத்திரம்.
  38. நான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த கருத்தை கூறவில்லை கோஷான். இலங்கை அரசின் யுத்த குற்றங்களைப் பேசிக்கொண்டு தமிழரிடையே உசுப்பேற்றும் கருத்துக்களை பேசுவோரிடை மட்டுமே இதைக் கூறுகிறேன். “ஶ்ரீலங்கா அரசு மட்டுமே நேர்மையற்றது, நாம் மிக நேர்மையாக அறத்துடன் எமது போர் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்”, என்று வரலாற்று உண்மைகளைத் திரித்து மக்களையும் அடுத்த தலைமுறையையும் உணர்சசிவசப்படுத்துபவர்களை நோக்கியே, அப்படியில்லை நம் பக்கமும் யுத்த நடவடிக்கையில் நேர்மை இருக்கவில்லை, அவர்களுக்கு இணையாக பல சம்பவங்களை எமது தரப்பும் செய்தது என்ற உண்மையை சுட்டிக்காட்டவே அதைக் குறிப்பிட்டேன். இதை தமிழரிடையே சுட்டிக் காட்டுவதால் அது தமிழருக்கு தீர்வு கிடைப்பதில் இடைஞ்சலை உண்டாக்கும் என்ற உங்களது கருத்தை நான் ஏற்கவில்லை. நிற்க, புலிகள் செய்த குற்றங்களை தமிழ் மக்கள் செய்ததாக எடுத்து கொள்ள வேண்டியதில்லை, தமிழ் மக்களுக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. புலிகளின் தவறுகளை தூக்கி சுமக்க வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இல்லை என்ற உங்களுடைய கருத்தை வரவேற்கிறேன். உண்மையில் மிக சிறந்த உலக அரசியல் தெளிவு கொண்ட பாரவை அது. ஆனால், உங்களுடைய இந்த தெளிவு ஐநாவில் மனித உரிமை கூட்டங்களில் அரசு சார்பற்ற தமிழர் அமைப்புகள் சார்பாக யுத்தக்குற்றங்கள் பற்றி சர்வதேச ராஜதந்திரிகளுடன் கடந்த 15 வருடங்களாக பேசுவதாக கூறிவரும் தமிழர் அமைப்புகளுக்கு உள்ளதா? நான் பார்த்தளவில் ஐநாவில் தமிழர் சார்பாக செல்வோர் எல்லாம் நீங்கள் கூறியதைப் போல் தெளிவான சிந்தனையுடன் குறைந்தது வெளிப்பார்வைக்காவது தம்மை மக்களின் பிரதிநிதிகளாக நடந்து கொள்வதில்லை. கிட்டத்தட்ட புலிகளின் பேச்சாளர்கள் போலவே அவர்கள் நடந்து கொள்ளும் போது இங்கு நீங்கள் கூறியது எப்படி சாத்தியமாகும்? ஜநா மனித உரிமை அமர்வுகளிலோ அல்லது சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கோ, சர்வதேச பத்தியாளருக்கோ சுமந்திரன் தன்னிச்சையாக இவ்வாறு கூறியிருந்தால் அது தவறான செயல். ஆனால், அப்படி தன்னிச்சையாக சர்வதேச அரங்கில் கூறியிருந்தாரா அல்லது பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அப்படி கூறியிருந்தாரோ, அல்லது தமிழர் அமைப்புகளுடன் பேசும் போது மட்டும் அதைக் கூறினாரோ என்பது குறித்த எந்த தெளிவான செய்தியோ ஆதாரங்களோ இல்லை. மக்களின் பணத்தை சுருட்டிய புலம் பெயர் திருட்டு தேசியவாதிகளினது கூற்றுகளை மட்டும் வைத்து இதை எடை போட முடியாது.
  39. நான் எழுதியதைத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள் அல்லது அதற்கு உங்கள் optimistic முலாமைப் பூசியிருக்கிறீர்கள். புலம் வாழ் தீவிர தேசியர்களின் அச்சம் தாயக மக்கள் பாதிக்கப் படுவர் என்ற பொது நல நோக்கு, நீண்டகாலத் தீர்வு பற்றியெல்லாம் அல்ல. இவர்களது தொடர்ந்த இருப்பு தொடர்பானது. நான் இப்படி அபிப்பிராயப் படக் காரணம், அவர்களே பல தடவைகள் வெளிப்படையாகச் சொல்லியிருப்பது போல, அவர்களுக்கு ஒரே தீர்வு தான். அந்த தீர்வைத் தவிர மிகுதி எதையும் ஆராயவோ, பேசவோ முற்படும் தரப்புகள் எல்லாம் துரோகிகள். இந்த வரட்டுக் கொள்கையினால், போர்க்காலத்தின் பின்னர் கூட தாயக மக்களை இங்கே இருந்த படி ரிமோட் கொன்ட்ரோல் வழி கட்டுப் படுத்த முயன்றனர். இப்போது "சிறிலங்கா" என்ற ஒரே சாக்கில் அனுர போட்டு அடிக்க முயல்வது போல, எங்கள் தீவிர தேசியர்களும் மிதவாதம், இணக்கம், என்று பேசிய அனைவரையுமே "துரோகி" என்ற ஒரே சாக்கில் போட்டு இன்றும் கூட அடித்து வருகின்றனர். இதைச் செய்ய, ஒன்று இவர்கள் முட்டாள்களாக இருக்க வேண்டும், அல்லது "செத்த வீடானாலும் நான் தான் பிணமாக இருக்க வேணும்" என்று நினைக்கும் சுயநலமிகளாக இருக்க வேண்டும். இவர்கள் முட்டாள்கள் அல்ல, நன்கு தம் வாழ்க்கை முறைக்குப் பழக்கப் பட்டு விட்ட சுயநலமிகளாகத் தான் இருக்க வேண்டுமென நான் கருதுகிறேன். இவர்களுக்கே பேரச்சம். மக்களில் அக்கறை கொண்டோர் "எது வரை போகிறதெனப் பார்க்கலாம்" என்று இருக்கிறார்கள். யாழ் களத்திலே இந்த இரு வகையான போக்கு நன்கு வெளிப்படுவதைக் காண்கிறேன்.
  40. ரஞ்சித் உங்கள் பதிவுக்கு நன்றி. இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை. ஆனாலும் 2015 இல் மைத்திரிக்கு நிபந்தனையில்லாத ஆதரவையும் எமது மக்களைக் கொன்று குவித்த சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கியதையும் எதிராக எழுதியபோது @பாலபத்ர ஓணாண்டி @நிழலி ஆகியோரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. இங்கு வெள்ளை வான் இல்லை கிரீஸ்பூதம் இல்லை. ஒரு துண்டு பாணுக்காக வரிசையில் நிற்கத் தேவையில்லை என்று பலதையும் சொன்னார்கள்.அங்குள்ளவர்களின் நிலமையைப் புரிந்து கொண்டேன். இப்போது தமிழர்கள் கேட்காமலேயே பல விட்டுக்கொடுப்புக்களை செய்கிறார்கள்.பாதையைத் திறந்து விடுகிறார்கள்.அமைச்சருக்கு முறைப்பாடு செய்த அடுத்த அரைமணி நேரத்திலேயே களத்தில் அதுவும் எதுவித பந்தோபஸ்தும் இல்லாமல்(சுமந்திரன் போகும்போதே 4 அதிரடிப்படையாட்கள் போவார்கள்)போய் தோழில் கைபோட்டு கதைக்கிறார்.மழை பெய்தவுடன் பாதிக்கப்பட்ட மக்களுடன் அமைச்சர் நிற்கிறார். எமக்கு ஏமாற்றமாக இருந்தாலும் தாயகத்து மக்கள் சந்தோசப்படுகிறார்கள்.
  41. இந்தியாவுடன் இரண்டரை வருடங்கள் யுத்தம் புரிந்து இரத்தம் சிந்தியது மாகாணசபை முறையை எதிர்தது தானே!
  42. சங்கு சின்னத்தில் அரியத்தாரை நிற்பாட்டும் போது, இப்படியான லூசுத்தனமான வேலைகளை செய்தால் சனம் தமிழ் அரசியல் கட்சிகளை கைவிட்டு, தேசியக் கட்சிகள் பக்கம் போகும், முக்கியமாக அனுரவின் / ஜேவிபியின் வெற்றி இதன் மூலம் வலுப்படும். ஜேவிபி சமூக நீதி எனும் முகமூடி போட்ட மிக மோசமான ஒரு இனவாதக் கட்சி என்பதால் அது வெல்லக் கூடாது என தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தேன். இன்று நடப்பவை எனக்கு எந்த வியப்பையும் அளிக்கவில்லை. இன்னும் நிறைய நடக்கவுள்ளன. மழை வெள்ளத்தை அனுர அரசு வடக்கில் கையாண்ட விதத்தை மக்கள அங்கு மிகவும் வரவேற்கின்றனர். வரும் மாகாண சபைத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியில் இருந்து வடக்கிற்கு முதலமைச்சர் தெரிவாகும் சாத்தியங்கள் அதிகம். அப்பவும் நாம் புலம்பிக் கொண்டு இருப்போம்.
  43. ஒரு சில நாடுகளுக்கு சண்டைகள் இல்லா விட்டால் கை கடித்துக்கொண்டே இருக்கும். காஸா யுத்தம் ஓய......அடுத்தது
  44. இதிலென்ன ஆச்சரியம்? ஒரு அவதாரில் வந்து வைக்கும் அவியலுக்கு யாரும் ஆதாரம் கேட்டால், மாற்று அவதாரில் வந்து ஆதாரம் கேட்டவரைத் திட்டி விட்டு, மீண்டும் ஒரிஜினல் அவதாரில் வந்து திட்டலுக்குப் பச்சை குத்துவது..இப்படி பல "மானஸ்தன்கள்" உலா வந்த/வரும் இடம் இது😎!
  45. எதிர்வரும் 5ஆண்டுகளில் தெளிவான செய்தியை இடதுசாரிக் கோட்பாட்டு முகமூடியுள் மறைந்துள்ள புதிய சிங்கள இனவாத ஆட்சியாளரிடமிருந்து தெளிவானதும் முழுமையானதுமான பரிசுகளைத் தமிழினம் பெறும்வரை இந்த அங்கலாய்ப்புகள் தொடரும். முதலாவது ஆட்சி ஆண்டில் கொண்டுவரப்படும் அரசியல் திருத்தம் 13ஐ தூக்கி எறிவதோடு தொடங்கும் என்றே ஊகிக்கமுடிகிறது. அல்லது இந்தியாவைப் பகைக்காது 13இல் இருக்கும் ஏனைய பற்களையும் பிடுங்கிவிட்டு ஒப்புக்குத் தேர்தலை நடாத்தி அதிகாரங்களை மாகாணங்களுக்குக் கொடுப்பதாகக் காட்டிவிட்டுத் தமிழினத்தை பப்பாவிலேத்தித் தள்ளிவிடும் அரசியலை யே.வி.பி என்ற என்.பி.பி கையெலெடுக்கும். தமிழினம் கவர்ச்சியரசியலுள் அள்ளுண்டுபோயுள்ள சூழலில் தமிழினம் தனது இருப்பை எப்படித் தக்கவைக்கப்போகிறது என்பது மிகப்பெரும் வினாவாகத் தொக்கிநிற்கிறது. சிங்களத்தின் உளவு அமைப்புப் புலம்பெயர் நாடுகள்வரை வியாபித்துள்ள சூழலில், தாயகநிலை எப்படியிருக்கும், அவர்கள் தமிழ்த்தேசிய ஆதரவுத்தளங்களைச் சும்மாவிடுவார்களா? இல்லைத்தனே. ஆட்சியும் கட்சியின் பெயருமே மாறியுள்ளது. ஆனால், அமைந்துள்ளது சிங்களர் அரசாகும். யூரூப்பர்கள் மட்டுமன்றி சில முன்னணி ஊடகங்களும் இப்படியான தலைப்புகளைப் போடுவது வெட்கக்கேடு. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.