Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87990
    Posts
  2. satan

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    10103
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3061
    Posts
  4. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    10209
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/02/25 in Posts

  1. கரைச்சல் வேண்டும் ---------------------------------- கடவுளே வருடம் வந்து விட்டதே என்று காணி நிலம் கேட்பார்கள் சொத்து சுகம் கேட்பார்கள் நீங்கள் கொடுக்க வேண்டும் என்றில்லை ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கரைச்சலாவது கட்டாயம் கொடுக்கவும் ஒன்றுக்கு மேல் கொடுத்தால் இன்னும் நல்லது பெரிதாக தேவையில்லை சிறியவையாகவே போதும் பச்சை தண்ணீர் குடித்தால் மூக்கு ஓடுவது போல முருங்கைக்காய் சாப்பிட்டால் தோலில் அரிப்பு வருவது போல இனிப்பு சாப்பிட்டால் நெஞ்சு எரிவது உறைப்பு சாப்பிட்டால் வயிறு எரிவது நடந்தால் பாதம் நோவது இருந்தால் பிஷ்டம் நோவது படுத்தால் கழுத்து சுளுக்கு குனிந்தால் இடுப்பு பிடிப்பு இப்படி சிலதை அள்ளி அள்ளி கொடுக்கவும் அளவில்லாத கருணையாளனே இதில் எதுவும் ஒரு போதும் தீரவும் கூடாது எந்தக் கரைச்சலும் இல்லாதவர்கள் உள்நாட்டு பிரச்சனைகள் உலக பிரச்சனைகள் எல்லாப் பிரச்சனைகளையும் தமதென்றாக்கி அடிமுடி தேடி பக்கத்தில் இருப்பவர்களை பாடாய் படுத்துகின்றார்கள் கடவுளே.
  2. இவரது செயற்பாடு, கேள்வி கேட்க்கும் தன்மை, பலரின் வயிற்றில் புளியை கரைக்கிறது. ஊழல், லஞ்சம், பந்தா, அதிகாரம் என்று ராஜ போக வாழ்க்கை வாழ்ந்தவர்கள், அது பாதிக்கப்படப்போகிறது என்பதால் அவரை பைத்தியம் என்று விமர்ச்சித்தார்கள், இவரை யார் உள்ளே விட்டது என்று கேள்விகேட்டார்கள். வழக்கம்போல் வந்து கூடி, உண்டு, கதை பேசி போக முடியவில்லையே எனும் ஆதங்கத்தால். இவர்களை யாரும் இதுவரையில் யாரும் கேள்வி கேட்கவில்லை, அதற்கு இவர்கள் விட்டதுமில்லை. இப்படி ஒரு நிலை தங்களுக்கு வருமென்று இவர்கள் நினைத்ததுமில்லை. அரசியல் வாதிகள் கூட்டங்களில் போய் ஆசுவாதமாய் இருந்து, கண்ணை மூடி அயர்ந்துவிட்டு கூட்டம் முடிய பத்திரிகை கூட்டங்களை நடத்திவிட்டு பெரிய சாதனை நடத்தியவர்கள்போல் ராஜ நடை நடந்தவர்கள் இப்போ முழிக்கிறார்கள். ஏதாவது செய்ய வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும். விலகக அல்லது விலக்க வைக்கப்படுவார்கள். அதனால் தமது இருப்பை காக்க வெறுப்பை அவர்மேல் கக்குகிறார்கள், அவர் அனுராவுக்கு பின்னால் ஒளிகிறாராம். அவர் யார் பின்னால் ஒளிந்தால் இவர்களுக்கென்ன? அது அவருடைய பிரச்சினை. கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாவிடில் இப்படி சேறு பூசுவது வழமை. சிங்களவனிடம் போராடுகிறோம். முதலில் நாம் நம்மிடம் போராட வேண்டிப்பெற வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. இவரை ஒழித்துக்கட்ட வேண்டிய நிலையில் பலர் உள்ளனர். அதே போல் அனுராவை பதவியில் இருந்து ஒழிக்கவும் ஒரு கூட்டம், தமிழர் பகுதியில் தங்கள் பழைய காரியங்களை தொடர்கிறார்கள். மொத்தத்தில் பாதிக்கப்படுவது ஏழை அப்பாவி தமிழர். ஆனால், பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் அர்ச்சுனாவுக்கு. நிதானம், பொறுமை, மற்றவர் சொல்வதை பொறுமையுடன் கேட்டு ஆராய்ந்து அவர்கள் வாயாலேயே உண்மையை வரவழைக்கலாம், அவர்களை பேச விட்டு பொறுமையுடன் கேட்டால். இல்லையென்றால் கோசம் போட்டு அவரது நிதானத்தை கலைத்து கோபமூட்டி அவரை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவார்கள்.
  3. அர்ச்சுனாவுக்கு நிதானம், பொறுமை அவசியம். குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம், சாட்சி போன்றவற்றை சேகரித்து நிதானமாக, முறையாக விசாரணையின் பின் குற்றங்களை நிரூபித்து குற்றவாளிகளை வெளியேற்ற வேண்டும். அதோடு அவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு படித்த, துடிப்புள்ள இளையவரை பயிற்ற வேண்டும். இதுவே உண்மையான, நேர்மையான ,தமிழ் மக்களுடைய ஆசையும் கூட உங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கிறேன்.
  4. கோயில் உண்டியலில் வேண்டுதல் பணம்.. மனோதத்துவ நிபுணர்கள் கூற்று என்ன.? திருமணம் ஆகி 1 வருடம் கழிந்த கூட்டு குடும்பத்தில் உள்ள பெண் ஒருவரின் வேண்டுதலா இருக்க கூடும்..
  5. செந்தமிழன் சீமான் அண்ணாவின் பரம்பரையில் மன்னிப்பு கேட்கும் வழக்கம் மட்டுமல்ல பொய், பித்தலாட்டம், கப்ஸா, பெண்களை ஏமற்றுதல் எவருக்குமே இல்லை! அந்தளவுக்கு கண்ணியமான பரம்பரையில் இருந்து வந்தவர் செந்தமிழன் அண்ணா! பின்னிணைப்பு; இவர்ட பரம்பரையில மன்னிப்புக் கேட்கும் வழக்கமில்லையாம், ஆனா சாட்டை துரைமுருகனை வச்சு டீல் பேசி விஜி அண்ணிக்கு மாதாமாதம் பாங்க் எக்கவுண்டுக்கு ஒரு எமவுண்ட் போகுது அது என்னவாம். மண்டியிடாத மானம் அல்லவா இது!😂 இப்ப கொஞ்சநாள் எமவுண்ட் ஒழுங்காப் போகுது போலை அதுதான் விஜி அண்ணி பேசாம இருக்காங்க!😂 எண்டு மக்கள் பேசிக்கிறாங்க!
  6. கரைச்சலோடு குடைச்சலும் வேண்டும்போல .............! 😁
  7. செல்வந்த மேற்குலகார் எப்பவும் காசு கூடக்குடுத்து சாமான் சக்கட்டையள் வாங்கித்தான் பழக்கமாம். 😎 மலிஞ்ச பெற்றோல்,காஸ் எண்டால் எங்களுக்கு வேண்டாம் எண்டு தலையை சுத்தி மூக்கை தொடுற கூட்டம்.🤪
  8. 2024/2025 *************** பழமைக்கு பிரியாவிடையும் புதுமைக்கு வரவேற்பும் இன்றிரவு 12 மணிக்கு! இழப்புகள், ஏற்றங்கள் துக்கங்கள், மகிழ்சிகள் வேதனைகள், சாதனைகள் வெறுப்புகள், வெற்றிகள எல்லாமே இரண்டறக் கலந்து எமக்குத் தந்தாய். அத்தோடு.. உலகச் சண்டைகளும் இயற்கையழிவுகளும் பொருளாதார சிக்கல்களும் தந்து.. பொறுமையிழக்க வைத்தாய். இத்துடன் முடிந்தது என்றுதான் இருந்தோம் உனது கோரப் பற்களால்-தென் கொறியா விமானத்தை தீயிட்டுக் கொளுத்தி 179 அப்பாவி உயிகளை தின்றுவிட்டுச் செல்கிறாயே இது நியாயமா? நீயே சொல். அவர்களின் துக்கத்தில் மூழ்கி உன்னை அனுப்பி வைக்கிறோம் போய் வா! ஆண்டே 2024. 2025தே வருக! வருக! புலரும் புது ஆண்டே வந்து- நீ உயிர் கொல்லி நோய்களை நீக்கு உலகத்தின் சண்டைகள் போக்கு ஊழல்கள் இலஞ்சத்தை கொழுத்து ஊர்களெல்லாம் அன்பை நிலை நிறுத்து. செயற்கை உணவுகளை பொசுக்கு தேசத்தில் உணவில்லா நிலைதன்னை ஓட்டு ஏழைகள் என்ற சொல்லை எடுத்தெறி இருள் சூழ்ந்த இனங்களுக்கு ஒளி கொடு மதச் சண்டை இனச் சண்டை அகற்று மனிதரெல்லாம் ஒன்றென நீ உயர்த்து இயற்கையவள் அழிவிலிருந்து காப்பாற்று எல்லோர்க்கும் உலகமென்பதை உணர்த்து. அன்பு இதயங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். அன்புடன்-பசுவூர்க்கோபி.
  9. உண்மையையும் நியாயத்தையும் நீண்ட காலம் வாழ விட மாட்டார்கள். பொய்யர்களுக்கு மத்தியில் ஒரு உண்மை நிலைத்து நிற்க முடியாது.இதுதான் இன்றைய உலக நடப்பு.
  10. நாங்கள் நினைத்தது, எங்களுக்கு வேண்டியது நடக்காவிட்டால்; அவரை தூற்ற வேண்டியது. இப்பவே படங்களையும் சேகரித்து வைப்போம். வேதநாயகம் சூடு கண்ட பூனை, அதை ஏற்கெனவே அனுபவித்தவர்.
  11. 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம். " அதென்ன அந்த 20 ம் திகதிக்குள் உள்ள ரகசியம்? ரசோதரன், இலங்கை பாராளுமன்றத்தில் ஒரு பிரச்சனை. தன் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் ரன்வெல. ஆனா இன்னும் அதை பிடிச்சு தொங்கிக்கொண்டு, மக்களின் பிரச்சனை, தங்களின் ஊழல் பிரச்சனையை மறைத்து, வளங்களையும் நேரத்தையும் வீணாக்கிக்கொண்டு பாராளுமன்றத்தை அவமதிக்கிறார்கள். இவர்களுக்கு நீங்கள் சொல்லும் இந்த கரைச்சல் சரிவராது, வேறேதும் வேண்டும். நல்லா யோசிச்சு சொல்லுங்கோ! அதோட, நம்ம சுமந்து இந்த வருடத்துக்குள் வீட்டை இடித்து தரை மட்டமாக்குவது என்று அடம் பிடிக்கிறார், அவருக்கும் ஏதாவது .....? இருந்தா சொல்லுங்கோ.
  12. தமிழீழத்திலிருந்து வீசிய ந.கேசவராஜனின் "கடலோரக்காற்று" (முழுநீளத் திரைப்படம்) - சுவிஸில் இருந்து அனலை அரிகரபுத்திரன் - பிரமாண்டங்களை அள்ளித் தெளித்தும், கோடிக்கணக்கான ரூபாய்களை விரயம் செய்யும் தமிழக வர்த்தக சினிமா சூழலில், மெகாசீரியலில் மூலம் மகாஜனங்களை மந்த புத்திக்குள்ளாக்கும் விசச் சூழலில் தமிழீழத்தில் இருந்து வெளிவந்திருக்கிற அற்புதமான சினிமா 'கடலோரக் காற்று' என்றால் அது மிகையாகாது. நீண்ட இடைவெளிக்குப் பின்பு வெளிவந்திருக்கும் படம் இது. வீடியோபடம் என்றாலே அது நாடக பாணியில் தான் அமைந்திருக்கும், அதில் காட்சிப்படுத்தல்களை வெளிப்படுத்துவது கடினம் என்ற கூற்றுக்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சினிமா என்ற மொழி, இலக்கணங்களை உள்வாங்கி காட்சிக் கவிதையாக வீசியிருக்கிறது கடலோரக்காற்று. சில தொழில்நுட்ப குறைபாடுகளையும், கலைநுட்ப குறைபாடுகளையும் கொண்டுள்ளபோதும், அதன் எளிமைத் தன்மைக்காகவும், சினிமா என்ற மொழியை புரிந்து கொண்டு அதனை படைப்பாற்றலுடன் வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநர் கேசவராஜனின் திறமைக்காகவும் நாம் கடலோரக் காற்றையும் அதன் கலைஞர்களையும் பாராட்டியே தீர வேண்டும். தமிழீழ சினிமா தனக்கான தனித்தன்மையுடன் மிளிர்வதற்கான வீரிய வித்து ஊன்றப்பட்டுவிட்டது. 'காற்றுவெளி', 'செவ்வரத்தம்பூ', 'இனி', போன்ற நல்ல குறும்படங்களைத் தந்த தமிழ்சினிமா இன்று அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. மண்ணும், மண்சார்ந்த போராட்டங்களும் அதில் போராளிகளும் மக்களும் கொண்டுள்ள உறவுகள், மனித உணர்வுகள், மானுட விழுமியங்கள் போன்ற பல கோணங்களில் இருந்தெல்லாம் இவை பேச முனைகின்றன. குறும்படங்கள் இவற்றை தமக்கேற்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வெளிப்படுத்தின என்றால் கடலோரக்காற்று அதைத்தாண்டி ஒரு முழுநேரத் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. ஏற்கனவே உருவான நல்ல குறும்படங்களின் தாக்கம் கடலோரக்காற்றில் வெளிப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தமிழக தமிழ்சினிமாவிலிருந்தும் தனக்கான சில அம்சங்களை தேர்ந்தெடுத்திருக்கிறது. அவற்றை வர்த்தக சினிமா என்றோ அல்லது குப்பைகள் என்றோ ஒதுக்காமலும் அதேநேரத்தில் தமிழீழ சினிமா பாரம்பரியத்தில் நின்று கொண்டு மண்வாசனையுடன் வீசியிருக்கிறது 'கடலோரக்காற்று'. இதுதான் இதன் கலைரீதியான வெற்றியாகிறது. பிரச்சாரரீதியான படங்கள் வெறும் பிரச்சாரம் என்றளவிலேயே குறுகிப்போக காற்றுவெளி, கடலோரக்காற்று, செவ்வரத்தம்பூ போன்ற படங்கள் சிரஞ்சீவியாக நிலைத்து நிற்கப் போகின்றன. அது மட்டுமல்லாமல் அவைதான் தமிழீழத் திரைப்படங்கள் என்ற தேசிய அடையாளத்தையும் பெற்றுத்தரப் போகின்றன. இவை குறித்தெல்லாம் நீண்ட மதிப்பீடுகள், விமர்சனங்கள் செய்யப்பட வேண்டும். இது விமர்சகர்களும் படைப்பாளிகளும் இணைந்து பணியாற்ற வேண்டிய களம். அதற்கு சற்று நீண்ட காலமும் தேவைப்படும். எனவே கடலோரக்காற்று மதிப்பீட்டுடனே இதனை நான் தற்போதைக்கு நிறுத்திக்கொள்கிறேன். யார் இவர்கள்? கைகளில் மலர்களை ஏந்திய வண்ணம் கடலை நோக்கிச்செல்கிறார்கள். இளம் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், நடுத்தர மனிதர்கள், என்ற சிறிய கூட்டம் தான் அந்த கடலோர கிராமத்து மக்கள். அவர்கள் மெல்ல மெல்ல அடியெடுத்து அலையை அண்மித்தவுடன் குனிந்து மலர்களை அலைகளில் தவழ விடுகிறார்கள். மற்றவர்க்காய், தமக்காய் மரணித்த அந்த மனிதப்பிறவிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். அவர்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களுமாய் சிறியகூட்டம்தான். ஆனால் அவர்களில் பலமுகங்களைப் பார்க்கின்றோம். தாய், தந்தை, உற்றார், நண்பர், போராளிகள், காதலி, சகோதரி என ஒருவருக்கே பல முகங்கள். அந்த கூட்டத்தில் சம்மாட்டியாரும் இருக்கிறார். அவரிடம் வட்டிக்கு கடன் வேண்டி தொழில் புரியும் மீனவனும் நிற்கிறான். பள்ளி மாணவ மாணவிகளும் நிக்கிறார்கள். புலம்பெயர்ந்து வந்து தொழில் புரியும் மீனவன் ‘மட்டக்கிளப்பான்' நிற்கிறான். ஆக இவர்கள் தான் சமூகம். கமறா இப்போ கீழிறங்குகிறது. அவர்களின் கால்களையும், அதில் மலர்கள் வந்து தழுவித்தழுவி விலகிச்செல்வதையும் காண்பிக்கிறது. அடுத்த காட்சி சகோதரியின் முகம் நெருக்கமாகத்தெரியும் பின்னணியில் அவளது தம்பி அவள் கூப்பிட்டும் நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறான். இந்தக் காட்சி படத்தின் இறுதியில் இடம்பெறும் காட்சி. இந்த காட்சி ஒன்றே போதும் இதன் தரம் குறித்து உணர. கதை இதுதான். யுத்தம் நடந்து கொண்டு இருக்கும் காலகட்டம். கடலலைகள் வந்து தாலாட்டும் அழகிய கடலோரக்கிராமம். அங்கே மீன்பிடித்தொழிலையே பிரதானமாக கொண்ட சில குடும்பங்கள், ஆண் போராளிகளின் ஒரு அணியின் முகாமும், பெண்போராளிகளின் ஒரு அணியின் முகாமும் அமைந்திருக்கின்றன. ஆண் போராளிகள் அணியில் நாலைந்து பேரில் ஒருவன் மட்டும் சற்று வித்தியாசமானவன். நகைச்சுவையுணர்வு நிரம்பியவன். அதிக மனித நேயம் கொண்டவன். இவனுக்கும் அவனது சகபோராளிகளுக்கும் இடையேயான போராட்ட உணர்வையும், கிண்டலும் கேலியும் கலந்த வாழ்வை எடுத்துச்சொல்கிறது ஒரு பகுதிக்கதை. மற்றைய இரண்டு குடும்பங்களில் ஒரு குடும்பம் சம்மாட்டியார் குடும்பம், மற்றது அவரை அண்டிப்பிழைக்கும் நடுத்தர குடும்பம். சம்மாட்டியாருடைய மகனும் மற்றைய குடும்பத்துப்பெண்ணும் காதலிக்கிறார்கள். அவளது தங்கை அங்கு தொழில் புரியும் பாவனையில் இரகசியமாக வந்து இருக்கும் போராளிகளில் உள்ள ஒருவன் மேல் காதல் வயப்படுகிறாள். இன்னொருவர் சற்று முதிய மனிதர் தனிக்கட்டை தனியே வாடியமைத்து வாழ்கிறார். இவருடன் புலம்பெயர்ந்து வந்து அந்த கிராமத்து மக்களிடையே ஐக்கியமாகிவிட்ட இன்னொரு தனிமனிதன் மட்டக்கிளப்பான். இந்த பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வில் யுத்தம் குறிப்பாக கடற்படை ஏற்படுத்தும் அனர்த்தங்கள், கிராமத்து மக்கள், தமக்கிடையில் கொண்டுள்ள உறவுகள், முரண்கள், போராளிகளுடனான அவர்களது பிணைப்புகள் இவைதான் இப்படத்தின் கதை. பல்வேறு முரண்களுடன் நெருக்கடிகளுடன் வாழும் இந்த மனிதர்களுடன் பம்பலாக வாழ்ந்த இளைஞர்கள் திடீரென காணாமல் போவதும் அவர்கள் தமக்காக மரணித்தார்கள் என்ற நிதர்சனமும் அவர்களை விழிப்படையவைக்கிறது. தேடிச்சோறு நிதமும் திண்டு பல சின்னஞ் சிறுகதைகள் பேசிக்கூடிக் கிழப்பருவம் எய்யும் வேடிக்கை மனிதராய் தாம் வாழ்கையில் தமக்காய் சிலர் மரணிப்பது எல்லாவற்றையும் கடந்தது. அவர்களை ஒற்றுமைப்படுத்துகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் தமக்காய் மரணித்த அந்த இளைஞர்களுடன் ஏதோவொரு விதத்தில் உறவுடையவர்கள். இறுதிக் காட்சியில் அவர்கள் இணைந்து வருவது இதையே குறிக்கிறது.. நிஜத்தில் எப்படியோ? ஆனால் திரைப்படப்படைப்பில் கேசவராஜன் என்ற கலைஞன் தன்னலங்களற்ற ஒரு சமூகத்தையே கனவு காண்கிறான். திரைக்கதையமைப்பும் இந்தப் படத்தை பொறுத்தவரையில் வெற்றியென்றே சொல்லவேண்டும். இன்னும் கறாறாகச் சொன்னால் இத்திரை ஓவியத்தின் வெற்றிக்கு மூலகாரணமே அதன் தெளிவான திரைக்கதை அமைப்புத்தான். அதே நேரத்தில் வித்தியாசமான திரைக்கதை அமைப்பும்கூட. பல்வேறு பிரிவினரின் கதைகளையும் தனித்தனியே அதற்கேயுரிய முக்கியத்துவத்துடன் சொல்லியும், அதேவேளை அதன் மைய இழை பிசகாமலும் சொல்லப்பட்டிருக்கிறது. கதாநாயகன், நாயகி அல்லது சில முக்கியபாத்திரங்கள் என்றமைய நேர்கோட்டு முறையில் கதை சொல்லப்படாமல் இருப்பது இதன் விசேசம். இதில் எல்லாப் பாத்திரங்களுமே முக்கியத்துவமானவை தான். இந்த வித்தியாசமான அணுகுமுறையினால்தான் இயக்குநர் தானொரு சிறந்த படைப்பாளியாகவும், கலைஞனாகவும் முத்திரை பதிக்கிறார். நடிப்பு, நடிகர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அந்தந்த பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஒப்பனை பூசிய முகங்கள் இல்லாமல் நாம் சந்திக்கும் நமது சமூக மனிதர்களாகவேயுள்ளார்கள். நடிகர்களுக்கு ஏற்ற பாத்திரங்களைத் தேடாமல், பாத்திரங்களுக்கேற்ற நடிகர்களை தேடியிருக்கிறார் இயக்குநர். அதில் வெற்றியும் கண்டுள்ளார். நண்பர்களை (சகபோராளிகளை) மக்களை நேசிக்கும் 'நீதி' என்ற அந்தப் போராளியின் பாத்திரம் கச்சிதம். நகைச்சுவை இரட்டையர்களாக வரும் அந்த வெற்றுடம்பு மனிதர்கள் இருவரின் நடிப்பும் சற்று மிகையாக தோன்றினாலும் அது தேவையான ஒன்று என்றே கருதுகின்றேன். ஏனெனில் எல்லாமே இயல்பு யதார்த்தப் பாணியில் அமைந்திருந்தால் அது வரட்சியாகத் தானிருக்கும். அதேவேளை அது எல்லைகடந்தால் கேலிக்கூத்தாகவும் போய்விடும். இது அவர்களின் நடிப்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. கடலில் கடற்படையிடம் சிக்கி அந்த இரு நண்பர்களும் மரணத்தின் தறுவாயில் நிற்கையில் தனது நண்பனை கடலில் தள்ளி 'தப்பிப்போ' என்று கூறிவிட்டு தான் மரணத்தை எதிர்கொள்கிறான் அந்த 'மட்டக்கிளப்பான்'. கோமாளிகளாகவும், நாடோடிகளாகவும் வாழ்ந்த அந்த மனிதர்களின் நட்பு நம்மை நெகிழச் செய்கிறது. அவனது மரணமும் தற்கொடை போராளிக்கு குறைந்ததல்ல. அதேபோல போராளி நண்பர்கள் தாங்கள் தற்கொடைத் தாக்குதலுக்கு போகும் பொழுது நீதியை மட்டும் 'நீ பஞ்சிபிடிச்சவன்', 'உனக்கு உது சரிவராது நீ இரு நாங்கள் போறம்' என அவனைத் தவிர்த்துவிட்டு போவது ஒன்றும் தற்செயலானது அல்ல. அது அவர்கள் அவன் மேல் கொண்ட நட்பாலும், பாசத்தாலும் நேர்வது. சகமனிதர்களை நேசிக்கும், நகைச்சுவை உணர்வு நிரம்பிய, எதிரியை கூட மனிதாபிமானத்துடன் கவனிப்பதோடு அவனுக்கு சிகரட் வேண்டிக்கொடுக்கும் நீதிதான் எதிரிகளை அழிக்க தற்கொலைப் போராளியாகவும் செல்கிறான். இதுதான் வாழ்வின் முரண். இந்த பாத்திரப்படைப்புக்கள் மூலம் தற்கொலைப்போராளிகள் பற்றிய இறுக்கமான பார்வைகள் தகர்த்தெறியப்பட்டிருக்கிறது. காதலையும் கூட அந்தந்த மண்வாசனைக்கேற்ப அந்தந்த வெளிப்பாட்டு வடிவங்களுடன் வெளிப்படுத்தும் போதுதான் அதுகூட உயிரோட்டமான கலைப்படைப்பாகிறது. காதலிக்கும் இரண்டு ஜோடிகளில் ஒன்று கைகூடுகிறது. மற்றது இனிய நினைவாகவே நின்று விடுகிறது. குடிதண்ணீர் எடுக்கச்செல்லுமிடம் காதலர் சந்திக்கும் இடங்களாகவும், முதல் சம்பாத்தியத்தில் காதலிக்கு காப்பு, சட்டை வாங்கித் தருவதும் காதலை வெளிப்படுத்தும் மண்ணின் அடையாளங்கள். பழங்காலத்தில் காதல்விடுதூது புறாக்கள் என்றால், நவநாகரீக சமூகத்தில் ஈமெயில் என்றால் கடலோரக் காதலர்களுக்கு நண்டு விடுதூது. இயக்குநரின் முத்திரைகளுக்கு இப்படி ஏராளமான காட்சிகளைச் சொல்லலாம். ஒளிப்பதிவை செய்துள்ள கிருபாவின் தனித்தன்மை படம் முழுவதும் காட்சிகளாய் விரவியுள்ளது. கடலுக்கும் கடல் சார்ந்த கிராம மக்களுக்குமிடையிலான உறவும் பிணைப்பும் உயிரோட்டமானது. தமிழீழத்தின் அழகான அந்த கடலையும் அந்த கிராமத்தையும் அதன் மக்களையும் அவற்றுக்கிடையிலான உறவையும் தனது மாறுபட்ட ஒளிப்பதிவுக் கோணங்களினாலும் காட்சிகளினாலும் உயிரோட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஒளி இயக்குநர் கிருபா. இதன் மூலம் படத்தின் பல பாத்திரப்படைப்புகளினூடே கடலையும் ஒரு பாத்திரமாக உலாவ விட்டிருக்கின்றார். யுத்தகாலங்களில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது ஆபத்தானது. ஆழ்கடலுக்கு செல்வதை "உயரப்போவது" என்கிறார்கள் அவர்களது வட்டாரமொழி வழக்கில். அப்படி 'உயரப் போபவர்கள்' எந்நேரமும் கடற்படையினரின் நரவேட்டைக்கு பலியாகலாம். அவர்களின் பிடியிலிருந்து தப்பிப்பது கடினம். தனது சுயஉழைப்பில் முன்னேறத் துடிக்கும் சம்மாட்டியாரின் மகன் பலர் தடுத்தும் கேளாமல் உயரப்போகிறான். உயரப் போனால் தான் நிறைய மீன்பிடிக்கலாம். அப்படி உழைத்தால் தான் தன் காதலியின் குடும்பம் தனது தகப்பனாரிடம் பட்ட கடனை அடைக்கலாம். அன்றும் ஒருநாள் மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். சம்மாட்டியார் மகன் உயரப்போகிறான். நேவி கலைக்கிறான். பலரும் தப்பினோம் பிழைத்தோம் எனக் கரை திரும்புகிறார்கள். சம்மட்டியார் மகன் மட்டும் வரவில்லை. எல்லோர் முகங்களிலும் தவிப்பு. மறுநாள் அதிகாலை கடற்கரையில் எல்லோரும் காணாமல் போனவர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கமரா எல்லோர் முகங்களையும் ஊடுருவி அதன் உணர்வுகளை நமக்கு காட்டுகிறது. முரட்டு சுபாவமுள்ள சம்மாட்டியார் முகத்திலும் புத்திரசோகம். ஆனாலும் அதைக் காட்டிக்கொள்ளாத 'அவன் எப்படியும் வருவான்' என்ற உறுதியான நம்பிக்கை. காதலியின் முகத்தில் இனம்புரியாத தவிப்பு. கமரா உயரே நோக்கி வானத்தைப் பார்க்கிறது. அதிகாலை இருளில் கடற்பறவைகள் மேலே வட்டமிடுகின்றன. ஒருவிதமான மரண ஓலத்தை காட்டும் பறவைகளின் ஒலியுடன் கூடிய பின்னணி இசை. நாமும் அவர்களுடன் சேர்ந்து பரிதவிக்கிறோம். திடீரென சம்மாட்டியாரின் மகன் மீண்டு வருகிறான். நமக்கும் 'அப்பாடா!' என்றிருக்கிறது. இப்படியாக பலகாட்சிகளை நாம் உற்று நோக்கலாம். இசையமைப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளரின் தனித்திறமைக்கும் ஒன்றினைந்த செயல்பாட்டிற்கும் பொருத்தமான கூட்டிணைவு. இசையமைப்பாளர், பின்னணி இசையால் தனது படைப்பாற்றலையும் வெளிப்படுத்தியிருக்கிறார். வசதிகுறைந்த தொழில்நுட்பத்துடனும் இவ்வளவு தூரம் உழைத்திருப்பது பாராட்டத்தக்கதே.. இருப்பினும் பாடல்களில் அவரது தனித்துவம் வெளிப்படவில்லை என்றே சொல்லவேண்டும். ஆயினும் ஒரு படைப்பாற்றலுள்ள பின்னணி இசைக்கலைஞனாக வளர்வதற்கான சாத்தியங்களை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக நகைச்சுவைக் காட்சிகளுக்கு இசைப்பிரியனின் இசைதான் மெருகூட்டுகிறது. கதை வசனத்தைப் பொறுத்தவரையில் பல பாத்திரங்கள் உரையாடும் பேச்சு மொழி நமக்கு புரிவதற்கு சற்று சிரமமாக இருந்த போதும், வசனங்களைக் குறைத்து காட்சிப்படுத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதினால் அவர்களின் உணர்வுகளுடனும், உணர்ச்சிகளுடனும் நாமும் ஒன்றிக்கிறோம். பக்கம் பக்கமாக வசனங்களைப் பேசி வீடியோ நாடகமாக மாற்றாமல் இதனை ஒரு சினிமாவாக ஆக்கியிருப்பதன் மூலம் ஒரு இயக்குநர், வசனகர்த்தா என்றவகையில் கேசவராஜா வெற்றிபெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் இடைக்கிடை பேச்சுவழக்கில் இருந்து திடீரென எழுத்து நடைக்கு (இலக்கணபாணி) மாறிப் பாத்திரங்கள் உரையாடுவது உறுத்தலாகவேயுள்ளது. உதாரணமாக மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கான பெண்போராளிகளின் உரையாடல், மற்றும் சம்மட்டியாரின் மகனுடைய காதலியின் குடும்பத்துடன் சண்டைக்கு நிற்கும் போது போராளிகளின் உரையாடல் போன்ற காட்சிகளைக் குறிப்பிடலாம். படத்தின் கதையோட்டத்தை குழப்பியடிக்காமலும், காட்சிகளின் தொடர்பினை உறுத்தாவண்ணமும் செய்யப்பட்டுள்ள படத்தொகுப்பில் சில தொய்வான காட்சிகளையும், நீண்ட பாடல்காட்சிகளையும் வெட்டிச் சுருக்கியிருந்தால் படத்திற்கு இன்னமும் விறுவிறுப்பும், செறிவும் கூடியிருக்கும். பிரச்சாரப்பாணியில் அமைந்த காட்சிகளையும், போராளிகளின் கடல் சாகசக்காட்சிகளையும் தவிர்த்திருந்தால் இதன் கலை ஆளுமை இன்னமும் சோபித்திருக்கும். சில சமரசங்களின் நிமித்தம் இயக்குநர் இந்த காட்சிகளை சேர்த்திருந்த போதும் அவை திரைக்கதை ஓட்டத்துடன் ஒட்டாமலே தனித்து நிற்கிறது. உண்மையில் மேற்படி சாகச காட்சிகளைவிட போராளிகளின் வாழ்வை திரைக்கதையோட்டத்துடன் பொருந்தும்படி சொல்லியிருக்கும் காட்சிகள் அழுத்தமானவை. உணர்வு ரீதியானவை. மாறாக உப்பு தாராளமாகக் கிடைக்கிறது என்பதற்காக அதை அளவுக்கு மீறிச்சேர்ப்பது உணவையே கெடுத்துவிடும் என்பது இயக்குநர் கேசவராஜனுக்கு தெரியாததல்ல. எது எப்படியிருப்பினும் இயக்குநர் கேசவராஜனும் அவரது அணியினரும் தமது உழைப்பில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். விமர்சகன் என்ற நிலைக்கு அப்பால் ஒரு ரசிகனாக, வாசகனாக சோகம், துக்கம், மகிழ்ச்சி, அழுகை, உணர்வைத் தொடுதல் என எல்லாமுமாக என்னை ஆட்டி வித்ததினால் அவர்கள் சாதித்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்களின் சாதனைகள் தொடர வேண்டும். பொ.தாசன் போன்ற படைப்பாளிகளின் பணியினை இவர்களால் ஈடுசெய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இந்த திரைப்படம் தமிழீழ சினிமாவுக்கு நல்ல முன்மாதிரியாகவும் திகழப்போகிறது. இதன் வழியே தமிழ் சினிமாவை தரணியின் தரத்துக்கு தமிழீழச் சினிமா உயர்த்தும் என நம்புவோம். நன்றிகள்: ஈழநாதம்-2003.07.25 (வெள்ளிநாதம்) - பக். 16 ஈழநாதம்-2003.08.01 (வெள்ளிநாதம்) - பக். 17 https://tamileelamarchive.com/wp-content/uploads/2019/09/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2003.07.25-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf https://tamileelamarchive.com/wp-content/uploads/2019/09/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2003.08.01.pdf
  13. இணையவன் குறிப்பிட்டதைத்தான் நானும் குறிப்பிடுகிறேன். எலோன் மஸ்க்குக்கும் ஏதாவது கரைச்சல் தர வேண்டும். யேர்மனியில் பயங்கரவாதம் நடந்தால், கன்ஸிலரை முட்டாள் என்கிறார். யேர்மனிய ஜனாதிபதியைக் கேவலப் படுத்துகிறார். அவரது தயாரிப்பான டெஸ்லா காரிலே குண்டு கொண்டு வந்து வெடிக்க வைத்த பயங்கரவாத த்துக்கு யாரை நோவது?
  14. "பிரபல்யம்" என்பது சரியானது என்று அர்த்தமல்ல. இங்கே இணைக்கப் படும் வரை நான் சுட்டிக் காட்டக் காரணங்களில்லை.
  15. இப்பொழுது தான் புதிதாக இணைந்துள்ளேன். தங்களின் வழிகாட்டுதலில் கூடிய சீக்கிரம் சரியான முறையில் பதிவிடுவேன். நன்றி. ஏதேனும் தறவுகள் இருப்பின் தெரிவியுங்கள். நன்றி.
  16. என்னப்பா 20ம் திகதிவரை பொறுக்க மாட்டியளோ?
  17. இவரது நியாயம் என்ன நியாயம் என்று புரியவில்லை. இவரது பாட்டன் தேர்தல்களில் பல முறை தோற்றார். ஆனால், அவர்தான் கட்சி தலைவர். இவரது தகப்பன் குமார் பொன்னம்பலம் மக்களால் நிராகரிக்கப்பட்டார். ஒரு முறை கூட பாராளுமன்றம் போகவில்லை. ஆனால் அவர் தான் கட்சி தலைவர். இப்போது தமிழரசுக் கட்சிக்கு வகுப்பு எடுக்கிறார். தனது கட்சி கடந்த தேர்தலில் படு தோல்வியடைந்தது ஏன் என்று இதுவரை வாய் திறக்கவில்லை.
  18. அன்பே . .... கல்வியை கலவியாக்குவதிலும் ஒரு இன்பம் உண்டு என்ன ........ திரு பாஞ் அவர்களின் அறிவு இவ்வளவு தூரம் பாயும் என்று நான் நினைக்கவில்லை ........! 😂
  19. Chennai விமான நிலைய விழுந்து நொருங்கும் கண்ணாடிகள் நினைவிற்கு வருகிறது. 😁
  20. ரணில் ஆட்சியில் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுவதற்கான அறிவித்தல் வந்த போது, சுமந்திரன்... தமிழரசு கட்சி தனியாக போட்டியிடும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து, பிரிவை ஏற்படுத்தியவர்.
  21. இதன் உண்மையான அர்த்தம் நிர்வாக சீர்கேடுகளை அகற்றுவதும் நிர்வாகத்தில் உள்ள ஊழல்களை ஒழிப்பது தான். துடைப்ப கட்டைய தூக்குவதல்ல.
  22. அவர்கள் அனுதாபத்தை தேட முன், அவர்கள் மேல் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் ஆதாரங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அவர்களை கைது செய்தாலும் கேள்வி கேட்கும், கைது செய்யாவிட்டாலும் கேள்விகேட்கும் ஒரு கூட்டம். ஊழல் வாதிகளை கைது செய்ய வேண்டுமென்றே மக்கள் அனுரவுக்கு ஆணை வழங்கினர்!
  23. 90ஸ்-கிட்ஸ் :: தமிழீழ தாயகத்தில் எடுத்த சினிமா ரிக்கற்களை நீங்கள் சேகரித்து வைத்துள்ளீர்களா ..?
  24. இன்று மாவையர் வேறு பேட்டி கொடுத்திருக்கிறார். இந்த சகுனி கட்சிக்குள் நுழைந்து, இனத்துக்கு எதிரான சதி வேலைகளை செய்யும் போதே தலையிலடித்துச்சொன்னோம், எச்சரித்தோம். யாரும் கேட்கவில்லை. தலையில் வைத்துக்கொண்டாடினார்கள், சொன்னதற்கெல்லாம் தலையாட்டினார்கள், சட்ட நிபுணர் என்று புகழாரம் வேறு சூட்டினார்கள். இப்போ எப்படி துரத்துவது என்று தெரியாமல், அவரின் தன்னிச்சையான அடக்குமுறைகளை தாங்கவும் முடியாமல் தவிக்கிறார்கள். ஒன்று சட்டப்படி இவரை கட்சியிலிருந்து நிறுத்த வேண்டும். அல்லது கட்சித்தொண்டர், ஆதரவாளர்கள், மக்கள் இவருக்கெதிராக கிளம்பி ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் வெளிப்படுத்த வேண்டும். மக்களால் நிராகரிக்கப்பட்டவருக்கு ஏன் அதிகாரங்களை வழங்குகிறார்கள்? அல்லது அதிகாரம் செலுத்த விடுகிறார்கள்? மற்றய உறுப்பினர் தோற்ற போது அவர்களுக்கு என்ன செயல்முறையை நடைமுறைப்படுத்தினார்களோ அதையே இவருக்கும் செய்ய வேண்டியதுதானே. வலிய வீட்டுக்கை பூந்த ச**னை, குனியை விரட்டுவது கஸ்ரம்.
  25. எடக்குமுடக்கான கேள்வியெல்லாம் புதுவருஷத்தில கேட்கக்கூடாது. வந்த வருஷத்தை வரவேற்று கொண்டாடுகிற வழியைப்பார்க்க வேணும். வருட முடிவில், அதிரடியின் காயங்களை பலபேரின் பதவிகளில், சிறைச்சாலைகளில் காணுவீர்கள்.
  26. ஆளுக்கொரு ஊடக சந்திப்புகளை ஏற்படுத்துவது, கருத்து விடுவது. பிறகு நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என நடிக்கிறது. இவர் முந்தா நாள் ஒரு கருத்து வெளியிட்டார், இன்று அதற்கு மாறாக கருத்து சொல்கிறார். எல்லாம் பதவி செய்யிற வேலை. மக்களை முட்டாளாக்குகிறார்கள்.
  27. செலவில்லாமல் செய்துவிடும் சிக்கன திட்டம். இல்லாத சுதந்திரத்தை இருப்பதாக காட்டுவது, ஒரு இனம் இன்னொரு இனத்தின் சுதந்திரத்தின் மேல் நின்று கொண்டாடுவதற்கு சுதந்திரம். தமிழில் சுதந்திர கீதம் பாடக்கூடாது, நாம் கொண்டாடுவது சுதந்திரம். இதில், சுதந்திரம் யாரிடமிருந்து, எப்போது, எப்படி, யாரெல்லாம் பெற்றுக்கொண்டோம் என்பதையும் விளக்க வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும், அதுதான் உண்மையான சுதந்திரம். அன்று, ஒரு நாட்டிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை பங்குதாரரோடு பகிர்ந்து கொள்ளாமல், பலநாடுகளிடம் அடைமானம் வைத்து கடன் வாங்கி, கடன் கொடுத்தவர்களை அழைத்து, லட்ஷக்கணக்கில் கொட்டி இல்லாத ஒன்றை பந்தா காட்டுவதற்கு பெயர் சுதந்திரம்.
  28. எதிரியானாலும் சிரித்துக்கொண்டே கைகூப்பி, வரவேற்று, விருந்தளித்து, உபசரித்து, உபத்திரவத்தை பெற்றுக்கொண்டோம். அதைத்தான் இப்போ அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். எங்களுக்குள்ளே இருப்பது பொறாமை, எதிரியிடத்தில் காட்டுவது பெருந்தன்மை. இது நமது இனத்துக்கு வந்திருக்கக்கூடாது. வந்தது எமது இனத்தின் துரதிஷ்ட்டம் என்கிறேன் நான்!
  29. எமது பழம்பெரும் தமிழ் அரசியல்வாதிகள் இதுவரை காலமாகவும் பொறுப்பாக பேசி செய்த நடவடிக்கைகள் என்று எதுவுமே இல்லை. வடிவேலு போல் துள்ளினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கிறார் என்பது என் கணிப்பு.
  30. உலக ரீதியாக பிறப்பு வீதம் அதிகரித்திருக்கிறதா? தரவுகள் இந்தக் கருத்திற்கு எதிர்மாறாக இருக்கின்றன புலவர். கீழே இணைப்பைப் பாருங்கள்👇. https://www.healthdata.org/research-analysis/library/fertility-forecasts-and-their-implications-population-growth உலக ரீதியில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைகிறது. ஆனால், வீழ்ச்சியடையும் வீதம் ஏழை நாடுகளான சில ஆபிரிக்க நாடுகளில் குறைவாக இருக்கிறது. இந்த உலகப் போக்கிற்குக் காரணங்கள் சமூக ரீதியானவை. அதிக வீதமான பெண்கள் கல்வியில் முன்னேறுவதால் பிந்திய திருமண வயது, திருமணமான பெண்களும் தங்கள் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்துவதால் குறைவான எண்ணிக்கையில் குழந்தைகள் - இவை தான் காரணங்களேயொழிய, பொருளாதாரச் சுமையென்று ஆட்கள் பிள்ளை பெறாமல் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்களில்லை. அப்படியானால், ஏழை நாடுகளில் அல்லவா பாரிய பிள்ளைப் பேறு வீழ்ச்சி வர வேண்டும்? "இனத்தைப் பெருக்க சேவை" செய்வதற்காக, தமிழ் சமூகத்தில் பெண்களை பள்ளிக்கூடம் போகாமல் நிப்பாட்டிக் கல்யாணம் கட்டி வைக்கலாம் என்கிறீர்களா😂?
  31. நான் சீமான் செய்வதெல்லாம்,பேசுவதெல்லாம் சரியென வக்காளத்து வாங்க வரவில்லை. தமிழ்நாட்டில் ஏனைய கட்சித்தலைவர்களும்,கட்சி தொண்டர்களும் சுத்த பத்தம் என நீங்கள் நிரூபியுங்கள். அதன் பின் சீமான் அரசியலை வழித்து ஊத்துங்கள். ஏதோ எம்ஜி ஆரும்,கருநாநிதியும்,ஜெயலலிதாவும்,ஸ்டாலினும்,,உதயநியும் பெண்கள் விடயத்திலும்.ஊழல் விடயத்திலும் தப்பு தாண்டாக்கள் செய்யாத மாதிரியும் சீமான் மட்டும் அருவருப்பு அரசியல் செய்வது மாதிரி நாடகங்களை அரங்கேற்றுகின்றீர்கள். கருணாநிதியும் எம்ஜிஆரும் அவர்கள் சார்ந்தவர்களும் செய்யாத பெண் லீலைகளையா சீமான் செய்து விட்டார்? தமிழ்நாட்டு அரசியலும்,கிந்திய அரசியலும் அப்படித்தான். அதற்கேற்ப நாங்களும் கருத்துக்கள் எழுத வேணும் இல்லையா? அதை விட்டு தனி வக்கிரத்திற்காக நீங்கள் சீமான் மீதான குற்றச்சாட்டு கருத்துக்களை எழுதினால்.... நானும் பெரியார்காலத்திலிருந்து இருந்த நாற்றங்களை எழுதலாம் என நினைக்கின்றேன்.😃
  32. இடதுசாரிகள் பக்கம் பக்கமாக எழுதுவார்கள்,மணித்தியாலக்கணக்கில் பேசுவார்கள் ..ஆனால் செயல் வீரர்கள் போல எனது அனுபவத்தில் தெரியவில்லை..
  33. காசு கொடுத்தாலும் பிள்ளை பெற மாட்டார்கள் ....நீங்கள் கூறியது போல பொருளாதார பிரச்சனை ..மற்றது அழகு பிரச்சனை... நயன்தார மாதிரி அழகாக இருக்க வேணும் எண்டு சிலர் நயன்தார +விக்னேஸ் தம்பதிகள் போல பிள்ளைகளை பெற முயற்சி செய்ய வெளிக்கிடியினம்....யாராவது பெத்து கொடுத்தால் வளர்க்கலாம் என்ற‌ யோசனையில் இருக்கினம் ...என்ன செலவு அதிகமாகும் என்பதால் சில தாமதம் நடக்கின்றது ...இந்த திட்டம் மலிவாக சந்தைக்கு வந்தால் நல்ல வசூல் நடக்கும்...
  34. தனது பேச்சிலும் செயலிலும் உள்ள பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களைச் சிறிது சிறிதாகக் களைவாரானால் மற்றைய டமில் அரசியல்வாதிகளுக்குப் பெரிய தலையிடியாக மாறலாம்.
  35. இந்தப் பதிவைக் கண்டதும்.ஒரு விடையத்தை சுட்டிக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்..யாரும் தவறாக நினைக்க வேணாம். இந்த ரிக்ரொக், யூருப், முகப் புத்தகத்தில் இருக்கும் சில மேககப் விற்பன்னர்கள் பொதுவாக பெண்கள் சேலை கட்டத் தெரியாதவர்களுக்காக கட்டிக் காட்டுறோம் என்று அவர்களிடம் மேக்கப் செய்யப் போகும் சில பெண்பிள்ளைகளை பாவாடை, சட்டையோடு நிற்க விட்டு சேலை கட்டும் விதத்தை வீடியோடு எடுத்து பப்பிளிக்கில் போடுகிறார்கள்.அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைக்கிறார்கள் இல்லை..ரிக்ரொக் போன்ற தளங்களை பார்ப்பர்கள் எதனால் இப்படியான விடையங்களை சொல்கிறேன் என்று புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேுன்..மிக, மிக குப்பைத் தளம் என்றால் அது ரிக் ரொக் தான்..தங்கள் வருவாய்க்காக இப்படி நடக்கிறது..
  36. சுய இன்பம் கண்டால் கண்கள் உள்ளே போய், கன்னங்கள் ஒட்டிபோய் மெலிந்து,உள்ளங்கயில் மயிர் வளர்ந்துவிடும் என நமபினேன்.
  37. 1. இரவில் சூரியன் மங்கியபின் பெரிய மரங்களுக்கு கீழ் சென்றால் பேய் அடிக்கும். 2. முடடை உப்பு கடன் கொடுத்தால் உறவு முறியும். 3. உணவு கொண்டு செல்லும்போது கரித் துண்டு வைக்க வேண்டும் 4. ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆ ண்டியாவான்
  38. பொய் சொன்னால் சாமி கண்ணை குத்தும் பாவம் செய்தால் சித்திரகுப்தனால் எண்ணேய் சட்டியில் வைத்து வறுக்கப்படுவீர்கள் அம்மா சத்தியம் செய்து பொய் சொன்னால், அம்மா இறந்து விடுவார் சரஸ்வதி பூசை செய்தால் படிப்பு நல்லா வரும் சோதனைக்கு முன் அந்தோணியாருக்கு மெழுகுதிரி கொளுத்தினால் சோதனை பாஸ் செய்யலாம் வலம்புரிச் சங்கை காதில் வைத்து கேட்டால் அதன் மூச்சு சத்தம் எப்பவும் கேட்கும் இது பொய் என்று எப்ப எப்படி கண்டு பிடிச்சீர்கள்?
  39. அம்மியில் அரைத்த நிலையில் உள்ள சம்பலையோ..அல்லது உரலில் இடித்த நிலயில் உள்ள சம்பலயோ அள்ளி சாப்பிட்டால் ...கலியாணத்துகு மழை வருமாம்
  40. கோவில் சுவற்றில் ஹால் டிக்கட் நம்பரை எழுதி வைத்தால் பரீட்சையில் பாஸாகிவிடலாம். விழுந்த பல்லை சாணி உருண்டைக்குள் வைத்து, வீட்டின் கூரை மேல் போட்டு விட்டால் சீக்கிரம் பல் முளைக்கும். மழை பெய்து கொண்டிருக்கும் போது.... வெயிலும் அடித்தால், நரிக்கு கல்யாணம் நடந்து கொண்டிருக்கும். யானையின் சாணியை மிதித்தால், படிப்பு வரும். சிவப்பு எறும்பு சாப்பிட்டால், கண் நல்லாய் தெரியும். 2020 ல் இந்தியா வல்லரசாகிவிடும். பென்சில் சீவிய குப்பையை... இண்டு நாள் அரிசி கஞ்சியில் ஊற வெச்சா அழிரப்பர் ஆயிடும். - இணையத்தில் பார்த்து ரசித்தவை. -
  41. அம்மி மேலே உட்க்காந்தால் திருமணத்தன்று மழை பெய்யும் . .....! அ , ஆவன்னா 12 எழுத்தும் படிச்சால் போதும் தமிழ் முழுதுமாய் தெரிந்து விடும் . ........! 12 ம் வாய்ப்பாடுவரை பாடமாக்கினால் போதும் எல்லா கணக்குகளும் சுலபமாய் செய்திடலாம் . .......! கிளுவம் சுள்ளியை தணலில் சுட்டு தலைமுடியில் வைத்தால் முடி சுருள் சுருளாய் வரும் . ........!
  42. 1)இரட்டை வாழைப்பழம் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்கும் வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைப் பிள்ளைபிறக்கும் 2)அரிசியைத் தின்றால் நம்மகல்யாணத்தன்று அடை மழைபெய்யும். 3) பொன்வண்ட புடிச்சு தீப்பெட்டியில அடச்சு வச்சா முட்டை போடும். 4)பல்லி கத்துனா கெட்ட சகுனம். 5)வானவில் போட்டால் மழை பெய்யாது. 6)நரி ஊளையிட்டால் நல்ல சகுனம். 7)பூனை குறுக்கே போனா போற வேலை நடக்காது. 8)கட்டிப் புடிச்சாலே புள்ள பொறந்துரும். 9)படித்தால் வேலை கிடைக்கும். 10) ஏதாவது பழ விதைகள் விழுங்கி விட்டால் வயிற்றில் மரம் முளைக்கும்.....
  43. *நண்பன்* *பள்ளியில் படிக்கும்போது பழகிய நெருங்கிய நண்பர்கள் நால்வரின் கதை இது..* *ஒரே பள்ளியில் SSLC வரை படித்தவர்கள்..* *அப்போது அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு சொகுசு ஹோட்டல்..அது.* *SSLC தேர்வு முடிந்ததும் அந்த ஹோட்டலுக்குப் போய் டீயும் காலையுணவும் சாப்பிடலாம் என்று முடிவு செய்தார்கள்..* நால்வரும் ஆளுக்கு இருபது ரூபாய் என மொத்தம் 80 ரூபாயை டெபாசிட் செய்து கொண்டனர், அன்று ஞாயிற்றுக்கிழமை, பத்து முப்பது மணிக்கு சைக்கிளில் ஹோட்டலை அடைந்தனர். *தினேஷ், சந்தோஷ், மகேஷ் மற்றும் பிரவீண் ஆகியோர் தேநீர் மற்றும் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தனர்..* 35 வருடங்களுக்குப் பிறகு நாம் ஐம்பது வயதை தொட்டிருப்போம். அப்போது உன் மீசை எப்படியிருக்கும், உன் முடி எப்படியிருக்கும், உன் நடை எப்படியிருக்கும், என்றெல்லாம் பேசி சத்தமாக சிரித்துக் கொண்டனர். வார்த்தைக்கு வார்த்தை சில்லறை சிதறுவது போன்று சிரிப்பொலி அவ்விடத்தையே ரம்மியமாக மாற்றிக் கொண்டிருந்தது. அன்றைய நாள் ஒரு April 01. *நாம் மீண்டும் ஏப்ரல் 01 ஆம் தேதி 35 வருடங்களுக்குப் பிறகு இதே ஹோட்டலில் சந்திப்போம் என்று நால்வரும் ஒருமனதாக முடிவு செய்தனர்..* அதுவரை நாம் அனைவரும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும், இதில் எந்த அளவு முன்னேற்றம் நமக்குள்ளே ஏற்படுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.. *அன்றைய தினம் கடைசியாக ஹோட்டலுக்கு வரும் நண்பன் தான் ஹோட்டல் பில் கட்ட வேண்டும்..* என முடிவெடுத்துக் கொண்டனர். *இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவருக்கு டீ, ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்த வெயிட்டர் முரளி, நான் 35 வருடம் இதே ஹோட்டலில் இருந்தால் நிச்சயமாக உங்களுக்காக இந்த ஹோட்டலில் காத்திருப்பேன்..* என்று சொல்லி 72 ரூபாய் பில்லை கொடுத்தான். மீதம் 8 ரூபாய் டிப்ஸாக வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு சிட்டாக சைக்கிளில் பறந்த காட்சி வெயிட்டர் முரளியின் கண்களில் ஸ்டில் போட்டோவாக பதிந்து இருந்தது. *மேல் படிப்புக்காக நால்வரும் பிரிந்தனர்..* *தினேஷின் அப்பா இடம்மாற்றத்தினால் அவன் ஊரை விட்டிருந்தான், சந்தோஷ் மேல்படிப்புக்காக அவன் மாமாவிடம் போனான், மகேஷும் பிரவீணும் நகரின் வெவ்வேறு கல்லூரிகளில் அட்மிஷன் பெற்றனர்..* *கடைசியில் மகேஷும் ஊரை விட்டு வெளியேறினான்..* *நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் உருண்டன. ஆண்டுகள் பல கடந்தன..* முப்பத்து ஐந்து ஆண்டுகளில் அந்த நகரத்தில் மாற்றங்களின் தேரோட்டமே ஏற்பட்டது எனலாம். நகரத்தின் மக்கள் தொகை பெருகியது, சாலைகள் விரிந்தன. மேம்பாலங்கள் பெருகின. பெரிய கட்டடங்கள் நகரத்தின் தோற்றத்தையே மாற்றின.. இப்போது அந்த ஹோட்டல் வெறும் ஒரு ஹோட்டல் அல்ல. ஐந்து நட்சத்திர ஹோட்டலாக உருமாறியிருந்த நிலையில், வெயிட்டர் முரளி இப்போது முதலாளி முரளி ஆகி இந்த ஹோட்டலின் உரிமையாளரானார்.. *35 ஆண்டுகளுக்குப் பிறகு, திட்டமிட்ட தேதி, ஏப்ரல் 01, மதியம், ஹோட்டல் வாசலில் ஒரு சொகுசு கார் வந்தது..* *தினேஷ் காரில் இருந்து இறங்கி வராந்தாவை நோக்கி நடக்க ஆரம்பித்தான், தினேஷிடம் இப்போது பத்து நகைக்கடைகள் உள்ளன..* *ஹோட்டல் உரிமையாளர் முரளியை அடைந்த தினேஷ், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்..* *பிரவீன் சார் உங்களுக்காக ஒரு மாசத்துக்கு முன்னாடியே டேபிள் புக் பண்ணியிருக்கார் என்று முரளி சொன்னார்..* *நால்வரில் முதல் ஆளானதால், இன்றைய பில் கட்ட வேண்டிய அவசியமில்லை என்று தினேஷ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், இதற்காக நண்பர்களை கேலி செய்வார்..* *ஒரு மணி நேரத்தில் சந்தோஷ் வந்தான், சந்தோஷ் ஒரு பெரிய பில்டர் ஆனான்..* *வயதிற்கேற்ப இப்போது வயதான மூத்த குடிமகன் போல் காட்சியளித்தார்..* *இப்போது இருவரும் பேசிக்கொண்டு மற்ற நண்பர்களுக்காக காத்திருந்தனர், மூன்றாவது நண்பன் மணீஷ் அரைமணி நேரத்தில் வந்தான்..* அவரிடம் பேசியதில் மகேஷ் மிகப் பெரிய தொழிலதிபராக மாறியிருப்பது இருவருக்கும் தெரியவந்தது. மூன்று நண்பர்களின் கண்களும் திரும்பத் திரும்ப வாசலுக்குப் போய்க் கொண்டிருந்தன, பிரவீண் எப்போது வருவான்..? * *இந்த நேரத்தில் பிரவீண் சாரிடமிருந்து மெசேஜ் வந்திருக்கு, அவர் வர கொஞ்சம் நேரமாகும். நீங்க டீ ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணுங்க, நான் வரேன்..* என்று சொல்லிச் சென்றார் ஹோட்டல் ஓனர் முரளி. *ரெஸ்டாரன்ட் ஈஸ் புக்க்ட்* என்று போர்ட் தொங்க விடப் பட்டது. ஹோட்டலின் அனைத்து சிப்பந்திகளும் இந்த நான்கு நண்பர்களுக்கு மட்டுவே சேவைகள் செய்ய வேண்டும் எனப் பணிக்கப் பட்டனர். 35 வருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்ததில் மூவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் இகழந்தும் பெருமையும் கேலியுமாக சில்லறை சிதறல்கள் மீண்டும் அந்த ரம்மியமான இடத்தை மேலும் ரம்மியமாக்கியது. இப்போது மூவருக்கும் பிரவீணின் மேல் கோபமும் வரத் துவங்கியது. மூவருக்கும் பிரவீணைப் பற்றியத் தகவல்கள் மட்டுமே இல்லாமல் இருந்தது. நால்வரில் பிரவீண் தான் நன்றாக படிப்பவனாக இருந்தான். சிறந்த அறிவாளியாக இருந்தான். பல மணிநேரம் சென்றாலும் பிரவீண் வரவில்லை. மறுபடியும் பிரவீண் சாரின் மெசேஜ் வந்திருக்கிறது, நீங்கள் மூவரும் உங்களுக்குப் பிடித்த மெனுவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடத் தொடங்குங்கள் என்றார் முரளி. சாப்பிட்ட பிறகு பில்லைக் கட்ட பிரவீண் வந்து விடுவார் என செய்தி வந்திருக்கிறது. வேலைப் பளுவின் காரணத்தால் தாமதமாகிறது. மன்னிக்கவும் என்ற செய்தி பகிரப்பட்டது. இரவு 8:00 மணிவரை காத்திருந்தாயிற்று. அப்போது ஒரு அழகிய இளைஞன் காரில் இருந்து இறங்கி, கனத்த மனதுடன் புறப்படத் தயாரான மூன்று நண்பர்களிடம் சென்றபோது, மூவரும் அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தனர்...! அந்த இளைஞனின் புன்னகையும் பலவரிசையும் பழைய பிரவீணை அவர்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. *நான் உன் நண்பனின் மகன் ரவி, என் அப்பா பெயர் பிரவீண்..* என்று அந்த இளைஞன் சொல்ல ஆரம்பித்தான். *இன்று உங்கள் வருகையைப் பற்றி அப்பா சொல்லியிருந்தார், இந்த நாளுக்காக ஒவ்வொரு வருடத்தையும் எண்ணி காத்திருந்தார், ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார்..* *என்னை அவர் தாமதமாக சந்திக்கச் சொன்னார், ஏனென்றால் நான் இந்த உலகில் இல்லை என்று தெரிந்ததும் என் நண்பர்கள் சிரிக்க மாட்டார்கள், ஒருவரையொருவர் சந்திக்கும் மகிழ்ச்சியை இழப்பார்கள்..* *எனவே தாமதமாக வரும்படி சொல்லியிருந்தார்..* அவர் சார்பாகவும் உங்களை கட்டித்தழுவச் சொன்னார், ரவி தன் இரு கைகளையும் விரித்தான். மூவரையும் கட்டித் தழுவினான். இந்த காட்சியை சுற்றி இருந்தவர்கள் ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தனர், இந்த இளைஞனை எங்கோ பார்த்திருப்போம் என்று நினைத்தனர்.. *என் அப்பா ஆசிரியராக பணியாற்றினார், எனக்கும் கற்றுக்கொடுத்தார், இன்று நான் இந்த மாவட்டத்துக்கு கலெக்டர்..* என்றார் ரவி. இந்த செய்தி ஹோட்டல் உரிமையாளர் திரு முரளிக்கு தெரியும். முரளி முன்வந்து நண்பர்களுக்கு ஆறுதல் கூறி *35 வருடங்களுக்குப் பிறகு அல்ல, 35 நாட்களுக்கு ஒருமுறை நீங்கள் எங்கள் ஹோட்டலில் மீண்டும் மீண்டும் சந்திக்க வாருங்கள், ஒவ்வொரு முறையும் என் பக்கத்திலிருந்து ஒரு பெரிய விருந்து நடக்கும்..* என்று கூறினார். அனைவரும் ஆச்சரியப்பட்டனர். *உறவுகளை சந்தித்துக் கொண்டே இருங்கள், நண்பர்களை சந்திக்க வருடக்கணக்கில் காத்திருக்காதீர்கள், யாருடைய முறை எப்போது வரும் என்று தெரியாது..* *உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருங்கள், உயிருடன் இருப்பதன் முக்கியத்துவத்தை உணருங்கள்..* இந்தப் பதிவு அனைத்து நண்பர்களுக்கும் சமர்ப்பணம் நன்றி........

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.