Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    26
    Points
    87990
    Posts
  2. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    5417
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38770
    Posts
  4. putthan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    14676
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/28/25 in Posts

  1. ஐபிஎல் 2025 இன் 08வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பல வீரர்கள் பந்துகளை வீணாக்காமல் வேகமாக அடித்தாடியதால், ராஜட் படிதாரின் அரைச் சதத்துடன் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரச்சின் ரவீந்திராவையும் இறுதியில் வந்து வாணவேடிக்கை காட்டிய தோனியையும் தவிர மிகுதி அனைவரும் வேகமாக விக்கெட்டுகளை இழந்ததால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல்வராக @செம்பாட்டான் நீடிக்கின்றார். பதில் முதல்வராக @suvy ஐயா பறந்துவந்துள்ளார்!
  2. நான்கு அதன்பின்னர் கிணற்றுக்கு மேலே கம்பி வலை போட்டு குப்பைகள் விழாதவாறு மூட 10000 ரூபாய்கள். ஆனால் இரண்டு நாட்களில் தருவதாகக்கூறி ஒரு பத்துதடவை போன் செய்து, ஒருவாரத்தின் பின்னர் தான் கொண்டுவந்து பூட்டினார்கள். ஒரு பெண்ணைக் கூப்பிட்டு வீடு முழுதும் நன்றாகக் கழுவித் துடைத்து சுத்தம் செய்தபின்தான் மனம் நிம்மதியடைகிறது. அதன்பின்னர் மரங்கள் நடலாம் என எண்ணி கணவருக்கு போன் செய்ய சுற்றிவர கமுகை நடு. பார்க்க அழகாய் இருக்கும் என்கிறார். தேக்கு மரமும் நடுங்கோ அம்மா. காணி ஒருகாலத்தில விக்கிறது என்றாலும் பெறுமதி என்று வேலைக்கு வந்தவர்கள் கூற 100 கமுகுகள் மற்றும் ஐம்பது தேக்கமரம் என்று சுற்றிவர நட்டுவிட்டு கறுவா, ரமுட்டான்,மங்கோஸ்டீன், கசு, அவகாடோ மற்றும் மூலிகைக் கன்றுகள் பூங்கன்றுகள் என்று ஆசைப்பட்ட கன்றுகள் எல்லாம் வாங்கி நடுகிறேன். வெட்டிய தென்னைகளுக்குப் பதிலாக 15 தென்னங்கன்றுகளும் நாட்டபின்னும் எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. அதன்பின்னர் வளவைச் சுற்றி நான்கு புறமும் மரங்களுக்குத் தண்ணீர் விடுவதற்காக பைப்புகளைத் தாட்டு ஆசைதீரத் தண்ணீர் பாய்ச்சுகிறேன். எல்லாவற்றுக்கும் நீர் விட கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முடிகிறது. நான் வந்து நான்கு மாதங்கள் முடிந்து இன்னும் இரண்டு மாதங்கள் தான் இருக்கு. காணியை சும்மா விட்டுவிட்டு வர முடியாது. ஆரையன் வீட்டில் வாடகைக்கு இருத்தப் பார் என்கிறார் மனிசன். என் வீடு மெயின் ரோட்டில் இருந்து கொஞ்சம் உள்ளுக்குள் இருக்கு. இரு பக்கம் 30 பரப்பு கலட்டுக் காணிகள். உரிமையாளர்கள் மூவர் ஒஸ்ரேலியாவில். அவர்களின் தொடர்பை எடுக்க முடியவில்லை இதுவரை. ஒருபுறம் தோட்டக்காணி. இருவர் குத்தகைக்குத் தோட்டம் செய்கின்றனர். பின்னால் நான்கு குடும்பங்கள். எனது வளவு பெரிது என்பதால் பலரும் வந்து பார்த்துவிட்டு அதிக வீடுகள் இல்லை. தனிய மனிசியையோ அல்லது அம்மாவை விட்டுவிட்டு வேலைக்குப் போக முடியாது. உந்த வளவைப் பாராமரிப்பதும் கஸ்டம் என்று செல்லி சாட்டுகளைச் சொன்னபடி போக, வீட்டில என்ன பெரிய பொருட்களா கிடக்கு. ஆட்களை வாடகைக்குப் போடுறதை விட பூட்டிப்போட்டு வாறன் என்றுசொல்ல, கணவர் பாதைப்புடன் கட்டாயம் ஆரையும் இருத்தாமல் வராதை என்று கண்டிப்புடன் கூற மீண்டும் ஆட்களைத் தேடுகிறேன். இன்னும் ஒன்றரை மாதமிருக்கே. இரண்டு அறைகளுக்கு அட்டாச் டொயிலற் கட்டவோ என்று கேட்க, அதற்கும் மனிசன் தடைபோடுகிறார். அது நானும் வந்து நிக்கும்போது கட்டலாம். உனக்கு சரிபிழை தெரியாது என்கிறார். அடுத்து இரண்டு நாட்களின் பின்னர் வெளியே உள்ள டொயிலற்றுக்கு போய் கதவைத் திறக்கமுதல் பார்த்தால் வெளியே ஊசி போன்று வால் ஒன்று தெரிகிறது. நீளமாக இருப்பதால் பாம்பாகத்தான் இருக்கும் என நினைத்து முன்பக்கமாக ஓடுகிறேன். வீட்டின் உள்ளே சென்று கதவைச் சாற்றிவிட்டு கடைசி அறையைத் திறந்து யன்னல் வழியாகப் பார்த்தால் எதையும் காணவில்லை. வீட்டில் என்னைத் தவிர யாரும் அந்த நேரம் இல்லை. வேலை செய்பவர்கள் வர இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது. அந்தப் பக்கம் இந்தப்பக்கம் பார்க்காது டொயிலற் வாசலையே பார்த்துக்கொண்டு நிற்க ஒரு பத்து நிமிடத்தின் பின்னர் ஒரு சிறிய பாம்பு வெளியே தலையை நீட்டுகிறது. ஒரு இரண்டு நிமிடமாக அங்குமிங்குமாக தலையைத் திருப்பிப் பார்த்துவிட்டு வெளியே வந்து பின்பக்கமாகப் போகிறது. அதன்பின் வேலை ஆட்கள் வரும்வரை நான் வெளியில் வரவேயில்லை. வண்டனில் அதிகாலை நேரம் என்பதால் கணவர் நித்திரையால் எழும்பியபின் கட்டாயம் அட்டாச் டொயிலற் கட்டியே தீரவேண்டும் என்கிறேன். கணவரும் வேறு வழியின்றிச் சம்மதிக்க இரண்டு மூன்று பேரைக் கூப்பிட்டு கதைத்தால் வெளிநாட்டுக்காரர் என்று தெரிந்து அதிகமாகச் சொல்கின்றனர். பின் வீட்டுக்கு வரும் வழியில் கல்லரியும் யாட் ஒன்று உண்டு. அந்தத் தம்பியுடன் கதைக்க நீங்கள் வெளிநாடு எண்டு எப்பிடியும் கண்டுபிடிச்சிடுவாங்கள். கூடத்தான் கேட்பார்கள். நான் உங்களுக்கு நல்ல மேசனைப் பிடித்துத் தருகிறேன். நாட்கூலி குடுத்துக் கட்டுங்கோ அக்கா என்று கூற நானும் சம்மதிக்கிறேன். அடுத்த நாளே மண், கல், சீமெந்து எல்லாம் அந்தத் தம்பியின் யாட்டில் இருந்தே வந்திறங்க, மற்ற இடங்களில் விசாரித்தால் அவர் கூட்டி வைக்காமல் தருவதை அறிய மனதில் நிம்மதி பிறக்கிறது. இரண்டு அறைகளுக்குத் தனித்தனியாக அட்டாச் டொயிலற். ஆனால் கட்டடம் ஒன்றாகக் கட்டி இடையில் சுவர் வைத்து பிரிப்பதான அமைப்பு இரு அறைகளுக்கிடையில் இருந்தது எமது அதிட்டமாகிறது. காலையில் நான்குபேர் வேலைக்கு வருவார்கள். சில நேரம் ஆறுபேர். மெயின் மேஷனுக்குக் கூலி 3500. மற்றவர்களுக்கு 3000. 10.30 க்கு மாப்பால் கரைத்து ஒரு தேநீர் மற்றும் ஏதாவது ஒரு சிற்றுண்டி. 11.30 வெறும் தேநீர். 12.30 இக்கு மதிய உணவு இடைவேளை. ஒருவர் சென்று எல்லோருக்கும் பக்கத்திலிருந்த கடையில் உணவுப் பொதிகள் வாங்கிவருவார். வீட்டுக்குச் சிறிது தள்ளி ஒரு கார் நிறுத்துவதற்குக் கட்டிய ஒரு ஓடு வேய்ந்த சீமெந்துக் கட்டிடம். அதற்குள் இருந்து உண்டு முடிய பாயைப் போட்டுச் சிலர் சாய சிலர் போனில் அல்லது நேரில் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு 1.30 அல்லது 2.00 மணிக்கு மீண்டும் வேலையை ஆரம்பிப்பார்கள். எனக்கும் மத்தியான வெயிலும் ஓடித் திரிந்ததும் அலுப்பாக இருக்க, நானும் வீட்டுக் கதவை உள்ளே பூட்டிக்கொண்டு மதிய உணவு உண்டு முடிய நான் வாங்கிப் போட்ட கட்டிலில் ஒரு மணி நேரத்துக்கு போனில் அலாம் செட் பண்ணி வைத்துவிட்டுத் தூங்கி எழுவேன். என் எலாம் அடிக்கமுதலே மனிசன் வேலைக்குப் போகமுதல் எழுந்து எனக்குப் போன்செய்து ஏதும் ஆலோசனை சொல்வதோடு நடப்பவை பற்றிக் கேட்பார். பின்னர் 3.30 இக்கு அவர்களுக்கு மீண்டும் ஒரு பால் தேநீர். ஐந்து மணிக்கு வேலைமுடிந்து போக நானும் கதவுகள் யன்னல்கள் எல்லாம் பூட்டிவிட்டு வெளியே வந்து இணுவிலுக்கு வந்துவிடுவேன். ஒரு மாதத்தில் இரு அட்டாச் டொயிலற்றும் கட்டி முடித்து மாபிள்கள் பதித்துமுடிய களைத்தே போய்விட்டேன். ஆனாலும் தனிய இந்தப்பெரிய வேலையைச் செய்து முடித்துவிட்டேன் என்னும் பெருமிதமும் கூடவே வர அடுத்தடுத்த நாட்களில் தேவையான பொருட்கள் பாத்திரங்கள் என்று வாங்கி காஸ் அடுப்பில் நானே தனியாகச் சமைத்து மிக நெருக்கமான உறவுகள் ஒரு இருபத்தைந்து பேர்களை அழைத்து என் கையால் அந்தாறு கறிகளுடன் உணவு சமைத்துக் கொடுத்தபின்தான் மனம் நிம்மதியானது. அதன் பின்னும் யாராவது வீட்டுக்கு வாடகைக்கு வரமாட்டார்களா என்று தேடியதில் ஒரு குடும்பம் இரண்டு வயதுக் குழந்தையுடன் வருகின்றது. எமக்காக இரண்டு அறைகளை வைத்துக்கொண்டு மிகுதியாய் அவர்கள் பயன்படுத்தலாம் என்று சொல்ல அவர்களும் சம்மதிக்கின்றனர். நீங்கள் வாடகை தரவேண்டாம். கரண்ட் காசு இந்த இரண்டு மாதங்களும் 1200 ரூபாய்தான் வந்தது. மூன்று நாட்களுக்கு ஒருக்கா நீங்கள் என் கன்றுகளுக்குத் தண்ணீர் திறந்து விட்டால் போதும். நானே உங்கள் கரண்ட் காசையும் கட்டுகிறேன் என்கிறேன். அவர்களும் சம்மதிக்கின்றனர். லோயரைக் கொண்டு ஒரு ஆண்டுக்கு வாடகை ஒப்பந்தம் எழுதி அவர்களுக்கு ஒருபிரதி எனக்கு ஒருபிரதி தர 2000 ரூபாய்கள் மட்டும் எடுக்கிறார் கோண்டாவிலில் உள்ள ஒரு லோயர். ஒருவித நிம்மதியுடன் இருக்க எனக்கோ திரும்ப போகவே மனமில்லை. கட்டடம் கட்டும் வேலை இழுபட்டாலும் என்று எனது விமான டிக்கற்றை மூன்று வாரங்களுக்குத் தள்ளிப் போட்டிருந்தேன். அடுத்தநாள் மதியம் என் கடைசி மகள் போன் செய்து “அம்மா உங்கள் கஸ்பண்டுக்குச் சமைத்துக் கொடுத்து நான் களைத்துவிட்டேன். நீங்கள் உடனே வாருங்கள். இனிமேல் போவதென்றால் அவரையும் அழைத்துக்கொண்டே செல்லுங்கள் என்கிறாள். எனக்கோ கணவரையும் பிள்ளைகளையும் நினைக்கப் பாவமாக இருக்கிறது. இன்னும் மூன்று வாரத்தில் வந்துவிடுவேன் என்கிறேன்.
  3. கருத்த உருவம் காவிப்பற்கள் தெரிய சிரிப்பு.. எண்ணெய் பூசிய உடல்போல் வழுவழுப்பான தேகம் கையில் இருக்கும் உருண்டைத்தடியில் உருட்டப்பட்ட ..இனிப்பு சுருள் அதற்கு ரெயின் கோட்டு வெள்ளை நிற பொலித்தீன் மடித்துக் கட்டிய சாரமும் அழுக்குத் துணியால் முண்டாசும் கட்டி மூக்குத் துடைக்கவும் முட்டாசு அழுக்கை துடைக்கவும் துணித்துண்டு ஒன்று இதுதான் ..அந்தக்கால இனிப்பு வண்டி... பம்பக் ..பம்பக் என்று கத்திக் கொண்டே வரு ம் அந்த வண்டி மனிதன் ஐந்துசதம் பத்து சதத்துடன் முட்டிமோதும் எம்மை ஆசை வார்த்தை கூறி இனிப்புச் சுருளை இழுத்து நீட்டி மடக்கி..நீட்ட இனிதாய் மகிழும்..எம்மனம் இப்படி... இந்த பம்பாய் மிட்டாசு தின்று மகிழ்ந்த அந்த இனிய நாட்களை ஊரில் நின்றபோது கற்பனையில்தான் காணமுடிந்தது.... எனினும் அது அழகான இனிமையான கற்பனைதான்
  4. கவலை தரும் விடயம் ....வட்சப்,முகப்புத்தகம்,இன்ரோகிராம்....போன்ற சமுக ஊடகங்களில் நேரத்தை வீணடிப்பதால் ...என நினைக்கிரேன்
  5. ஆயிரம் புடுங்குப்பாடு இருந்தாலும்.... நாம் பிறந்த நாடு... நமது நாடுதானே. 😂 🤣
  6. அப்ப... பிலிப்பைனுக்கு போங்கோ. அதுகும்... தாய்லாந்து மாதிரியான கலாச்சாரம் உள்ள இடம்தான். போன காசுக்கு, கைநிறைய பலன் கிடைக்கும். கை நடுக்கம் வந்தாலும்.... நிலநடுக்கம் வரவே... வராது. 😂
  7. சென்ற பாராளுமன்ற தேர்தலில்... உங்களுக்கு தந்த, பதிலடி மாதிரியா... சுமந்திரன். உள்ளுராட்சி தேர்தலில் உங்கள் எல்லாருக்கும்... நல்ல பதிலடி கிடைக்கும். கவலைப்படாதீங்க.
  8. அஞ்சுபேர் போட்டி முடிவிலும் வீர தீர சூரனோடு கூட்டமாகத்தான் நிற்பினம் 😜
  9. இவர் இலங்கை இராணுவத்துக்கு கொடுத்த நற்சான்ழிதளைப். பாருங்களேன் 🤣 அதாவது இலங்கை இராணுவம் இஸ்ரேல் இராணுவம் போன்றது தான்
  10. ஒரே ஒரு இழையில் தொங்கியபடி ஒரு சிலந்தி இருந்தது. எங்கிருந்தோ யாரோ சொன்னார்கள், சிலந்தி இருப்பது கூட்டுக்கு நடுவில் அல்லவா? சிலந்தியும் ஊடுபாவாக கூடு கட்டத் துவங்கிற்று. போதாக்குறைக்கு உலக வலைப்பின்னலிலும். ... இப்போதெல்லாம் அது கட்டிவிட்ட கூட்டிலிருந்து தப்பிவிடத் தான் எத்தனிக்கிறது ஆனால் சிக்கலுக்கு மேல் சிக்கலாகி இழைகளே அதை நெரிக்கின்றன அதன் கூக்குரலோ வலைப்பின்னல்களில் எதிரொலித்தாலும் யாருக்கும் கேட்பதாயில்லை. சுற்றும் முற்றும் பார்த்தால் தன்னைப் போலவே பல சிலந்திகள்... சிலதோ ஏதோ ஒரு உத்வேகத்தோடு, கழுத்தை நெரித்தாலும் - மேலும் மேலும் வலைகளைப் பின்னுவதும் தெரிகிறது. இப்போது சிலந்திக்குச் சிரிப்பும் வருகிறது வலையைப் பின்னப்போய் வாழ்க்கையை இழந்து விட்டேனே.
  11. யாழ்பாணத்திலோ கவரிமான் பரம்பரை என்று வீர வசனம் வெளிநாட்டில் தக்கன பிழைக்கும் என்று scientific theory யை தான் பவ்வியமாக தங்களுக்கு கடைபிடிப்பார்கள்
  12. Lakers வ‌ந்து Luka Doncic வாங்கி விட்டின‌ம் , நீங்க‌ள் போன‌ வ‌ருட‌ம் இவ‌ரின் விளையாட்டை பார்த்து விய‌ந்த‌தாக‌ எழுதி இருந்தீங்க‌ள்..............என‌க்கும் Lakers வெல்ல‌னும் என்று விருப்ப‌ம் , கார‌ண‌ம் Lebron Jamesக்கு இது தான் க‌ட‌சி NBA விளையாட்டு அடுத்த‌ சீச‌னில் விளையாட‌ வாய்ப்பு மிக‌ குறைவு வெற்றியுட‌ன் ஓய்வு பெற‌ட்டும் ஆனால் வெற்றிக்காக‌ க‌டின‌மாய் இவ‌ர்க‌ள் ஒருங்கினைந்து விளையாட‌னும்🙏👍💪....................................................
  13. எங்கள் தலைவர் தங்கத் தலைவர் தானைத் தலைவர் 😂 யாழ் களத்தின் முடி சூடா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் ❤️ சில காலம் துணை முதல்வர் பதவியை தானே கேட்டு வாங்கியுள்ளார். இன்றைய முதல்வர் செம்பாட்டான் மக்களின் நலன்களுக்கு மதிப்பளிக்கின்றாரா என ஒட்டுப் பார்க்கும் வேலையில் இறங்கியுள்ளார் 😅 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
  14. வாழ்த்துகள் செம்பாட்டான். இனி செம்பாட்டானை நெருங்க முடியாது. செம்பாட்டான் துல்லியமான கணிப்புக்ளைச் செய்திருக்கிறார்.துணைமுதல்வர் சுவி ஐயாவுக்கும் வாழ்த்துகள்.நம்ம அன்புத்தம்பி பையனை நினைத்தால் ரொம்ப பரிதாபக இருக்கிறது. அவரைப்பார்த்து கொப்பியடித்து இடைக்கிடை மாற்றங்களைச் செயதவர்கள் நான் உட்பட பாஸ்மார்க் எடுக்கப் பையன் பெயில் மார்க் எடுத்திருப்பது மிகவும் சோகம். இந்த நிலைமையிலும் களத்தைக் கலகலப்பாக வைத்திருக்க எங்கள் பையனால்தான் முடியும்.
  15. என்ன தம்பி நீங்களும் சத்தமில்லாமல் விகாரைக்குள் மடம் கட்டியது போல ஏதேதோ நடக்குது.
  16. இரத்த பாசம் ...நல்ல கதை ... இன்றைய காதல் என்றால் முக்கியமாக வெளிநாடுகளில் வீட்டுக்கு காதலனை அழைத்து வந்து நான் இவரை லவ் பண்ணுகிறேன் ...என காதலர்கள் சொன்னால் l...பெற்றோர்கள் சொல்வார்கள் உனக்கு பிடிச்சிருந்தா சரி நீ தானே வாழப்போறவள் என டயலோக் பேசுவோர்கள் ..இடத்துக்கு ஏற்ற வகையில் கலாச்சாரம்,பண்பாடு, ஏற்ற தாழ்வுகள் எல்லாம் மாறுபடும்...🤣
  17. போட்டு ஒரு பக்க போட்டியாக சுவாரசியமில்லாமல் முடிந்துவிட்டது, ஆனால் கள உறவுகள் திரியினை சுவாரசியமாக வைத்திருக்கிறார்கள்.
  18. செம்மண்ணிலே தண்ணீரைப்போல் உண்டான சொந்தம் இது சிந்தாமணி ஜோதியைப்போல் ஒன்றான பந்தம் இது தங்கை அல்ல தாயானவள் கோடி பாடல் அண்ணன் பாட பொருளானாள் ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
  19. அவரேதான் ......சனலை தற்சமயம் பார்த்தேன் ..எனக்கும் பெயர் நினைவில்லை
  20. GMT நேரப்படி நாளை சனி 29 மார்ச் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT எதிர் MI 07 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் 16 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் வசீ அல்வாயன் பிரபா ஏராளன் நுணாவிலான் எப்போதும் தமிழன் அகஸ்தியன் மும்பை இந்தியன்ஸ் ஈழப்பிரியன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ரசோதரன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?
  21. இலங்கை என்றால்... திரையில் பேசும் மொழி உச்சரிப்புகள், படப்பிடிப்பு நடத்திய இடங்கள், உடை அலங்காரங்கள், இசை... என்று ஒரு சில விடயங்களை உன்னிப்பாக கவனிக்க ஆசை.
  22. இரத்தம் நன்றாக அங்கு ஓடுவதற்கு... என்ன செய்ய வேண்டும். 😂
  23. கந்தையர் வாழ்க்கை வாழ்வதற்கே....எப்பவும் என்னமும் நடக்கலாம்....வாழும்வரை சந்தோசமாக இருப்போம்
  24. உப்பு, முட்டை... போன்றவற்றையே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து சாப்பிடும் நாட்டில்... மரக் கரண்டியை இறக்குமதி செய்வது, அவ்வளவு வெட்கக் கேடான விடயம் அல்ல. 😂 🤣
  25. குடிக்கும் நீரையே... காசுக்கு விற்கும் நிலை வந்து விட்டது என்றால்... காப்பரேட் கம்பனிகளின் செல்வாக்கை பாருங்கள். எமது தாத்தாவோ, பாட்டியோ... தண்ணீரை, விலைக்கு விற்பார்கள் என்று நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள். எதிர்காலத்தில்... சுவாசிக்கும் காற்றும் காசுக்கு வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
  26. உங்கள் நாடா.?? ...இப்ப ஒரு ஆறு மாதமாக நமது நாடு நமது பிரதமர் நமது ஐனதிபதி ....என்று அனைவரும் கூறுகிறார்கள் 🤣🤣🤣🤣 கேட்க இனிமையாக இருக்கிறது
  27. இப்போ கொஞ்சம் தளர்த்தி உள்ளார்களாம். அதுகும்... முன்பு பயிரிட்டவர்களுக்கு மட்டுமே அந்த அனுமதி கொடுத்துள்ளார்கள் என்று முகநூலில் ஒருவர் தெரிவித்து இருந்தார். இது நல்லது என்றே நினைக்கின்றேன். அந்த மண்ணுக்கே உரிய பாரம்பரிய பயிர்களை முற்றாக அழிய விடாமல் பாதுகாக்கப் படுவது நல்லது. குரோஷியா நண்பர் ஒருவர் தமது நாட்டில்... அரசாங்கம், சிகரெட் கொம்பனிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு... உள்ளூரில் புகையிலை பயிரிடுவதை தடை செய்து விட்டார்களாம். இப்போ... தமது நாட்டின் பாரம்பரிய புகையிலை கன்றுகள் முற்றாக அழிந்து விட்டது என்று கவலைப் பட்டார்.
  28. கேப்பாபிலவு ஊர் போல உங்கள் காணி இருக்கிறதே! ஒரு ரிசோர்ட்டாக மாத்தலாம்! எனக்குத் தெரிஞ்சவர் இருக்கின்றார் இப்படியான ஐடியாவில்.. உங்கள் காணியை லீஸுக்குத் தருவீங்களா?🤪
  29. பையா உங்களுக்கு எதிராக வாக்களித்த அண்ணனின் நிலமை எப்படி இருக்கு ........!
  30. SRH-ஐ சிதைத்த ஷர்துலின் விஸ்வரூபம் - லக்னௌவின் ஆணிவேராக அமைந்த பூரன், மார்ஷ் ஜோடி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஹைதரபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 7வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்தது. 191 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 23 பந்துகள் மீதம் இருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஹைதராபாத் மைதானத்தில் 190 ரன்கள் சேர்த்தால்கூட டிஃபென்ட் செய்ய முடியாது என்பதை நேற்றைய ஆட்டம் உணர்த்திவிட்டது. கடந்த சீசனில் லக்னெள சேர்த்த 165 ரன்களை ஹெட், அபிஷேக் இருவரும் 9.5 ஓவர்களில் சேஸ் செய்து அவமானப்படுத்தியதற்கு பதிலடி கொடுத்தது லக்னெள அணி. லக்னெள அணி இந்த சீசனில் முதல் வெற்றியைப் பெற்று 2 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டி 0.963 என்று 2வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. லக்னெள அணி ஒரு வெற்றி ஒரு தோல்வி பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட்டில் வலுப்படுத்திக் கொண்டுள்ளது. சிஎஸ்கே, பஞ்சாப், டெல்லி அணிகள் தலா ஒரு வெற்றியுடன் இருந்தாலும் நிகர ரன்ரேட் சரிவால் பின்தங்கியுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பாலம் மீண்டும் திறக்க வித்திட்ட காதல் ஜோடியின் மரணம்3 மணி நேரங்களுக்கு முன்னர் மோதியை விமர்சிப்பவர்கள் விரும்பும் ஈலோன் மஸ்கின் 'க்ரோக்' எவ்வாறு இயங்குகிறது?23 மார்ச் 2025 விலை போகாத வீரர் விஸ்வரூபம் பட மூலாதாரம்,GETTY IMAGES லக்னெள அணியின் வெற்றிக்கு 3 பேரை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர், பேட்டிங்கில் நிகோலஸ் பூரன், மிட்ஷெல் மார்ஷ் ஆகிய மூவரும்தான் லக்னெள வெற்றிக்கு மூலதாராமாக இருந்தவர்கள். அதிலும் ஐபிஎல் டி20 ஏலத்தில் விலை போகாத விரக்தியில் இங்கிலாந்தில் கவுண்டி தொடர்களில் விளையாட ஷர்துல் ஆயத்தமானார். காயம் காரணமாக மாற்று வீரர் தேவை என்றபோது ஷர்துல் தாக்கூரை லக்னெள வாங்கியது. தனது திறமையை எந்த அணியினரும் மதிக்கவில்லை என்ற ஆதங்கத்தை ஒவ்வொரு போட்டியிலும் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் வெளிப்படுத்திச் சிறப்பாக ஆடி வருகிறார். முதல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த சீசனில் முன்னணி பந்துவீச்சாளர்கள் பலர் இருந்தபோதும் விலை போகாத வீரராக ஒதுக்கப்பட்ட ஷர்துல் தாக்கூர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி பர்பிள் தொப்பியுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்றார். எம்புரான் விமர்சனம்: லூசிஃபர் அளவுக்கு அழுத்தமான படமாக இருந்ததா?4 மணி நேரங்களுக்கு முன்னர் தங்க நகைகளை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் துருப் பிடிக்குமா?27 மார்ச் 2025 வெற்றியை பெரிதாக எடுக்கவில்லை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிகோலஸ் பூரன், மார்ஷ் இருவரும் சேர்ந்து 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் வெற்றிக்குப்பின் லக்னெள கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில், "உண்மையாகவே பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. அணியாக சிறப்பாகச் செயல்பட்டோம். வெற்றி பெற்றவுடன் உயரத்தில் பறக்கவும் இல்லை. தோற்றவுடன் நம்பிக்கை இழக்கவும் இல்லை. அணியாக கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. எங்களால் கட்டுப்படுத்தக்கூடிய அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்தினோம். ஆவேஷ், ஷர்துல் சிறப்பாகப் பந்துவீசினர். பூரனுக்கு முழு சுதந்திரம் அளித்துவிட்டோம். அந்தச் சுதந்திரம்தான் வெற்றியைக் கொடுத்துள்ளது. ஒவ்வொருவரும் சரியான திட்டமிடலுடன் வந்தோம், பயிற்சி எடுத்தோம், பின்னர் அதைச் செயல்படுத்தினோம்," என்று தெரிவித்தார். ரிஷப் பந்தை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 27 கோடிக்கு லக்னெள அணி வாங்கியது. முதல் வெற்றி கிடைக்காமலும், தன்னுடைய விலை அழுத்தத்தாலும், ரிஷப் பந்த் கடும் நெருக்கடியில் இருந்தார். இந்த வெற்றியால் ரிஷப் பந்த் நிம்மதி அடைந்தார் என்பதோடு, அணியின் நிர்வாகிகள் வெற்றிக்குப் பின் ஓடி வந்து ரிஷப் பந்தை கட்டியணைத்துப் பாராட்டியதன் மூலம் லக்னௌ அணிக்கு இந்த வெற்றியின் அவசியத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. தோனியின் வியூகத்தை உடைப்பாரா கோலி? கொல்கத்தாவை எளிதாக ஜெயிக்க வைத்த ராஜஸ்தான் அணி - கேப்டன் செய்த அந்த மிகப்பெரிய தவறு என்ன? ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன? ஒரேபோட்டியில் குவிக்கப்பட்ட 528 ரன்கள் ! இஷான் கிஷன் சதத்துடன் ஹைதராபாத் அமர்க்கள ஆரம்பம் சன்ரைசர்ஸை சிதைத்த வீரர்கள் நிகோலஸ் பூரனின் ஆட்டம் நேற்று மிரள வைத்துவிட்டது. இந்த ஐபிஎல் சீசனில் அதிவேகமாக 18 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்த வீரர் என்ற சாதனையை பூரன் படைத்தார். பூரன் 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதற்கு அடுத்த 8 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து 70 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது கணக்கில் 6 சிக்ஸர், 6 பவுண்டரி என 269 ஸ்ட்ரைக் ரேட்டில் ருத்ரதாண்டவமாடினார். அதேபோல கடந்த சீசனில் டெல்லி அணிக்கு சரியாக ஆடாத மார்ஷ் நேற்று சன்ரைசர்ஸ் பந்துவீச்சை அநாயாசமாகக் கையாண்டார். 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 31 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த இருவரும் சேர்த்த ரன்கள்தான் லக்னெள வெற்றிக்கு ஆணிவேராக அமைந்தது. குழம்பிய கம்மின்ஸ் நிகோலஸ் பூரன், மார்ஷ் இருவரும் சேர்ந்து சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தபோது, கேப்டன் கம்மின்ஸ் எவ்வாறு இருவரையும் பிரிப்பது எனத் தெரியாமல் குழம்பினார். இரண்டாவது ஓவரில் ஜோடி சேர்ந்த இருவரும் 9வது ஓவருக்குள் 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துவிட்டனர். பவர்பளே ஓவர்களில் 77 ரன்களும், 7.3 ஓவர்களில் 100 ரன்களையும் லக்னெள எட்டியது. நிகோலஸ் பூரன் 70 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தபோது லக்னெள வெற்றிக்கு 68 பந்துகளில் 71 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், லக்னெள அணி சிறிதுகூட பதற்றப்படாமல் இலக்கைத் துரத்தியது. டேவிட் மில்லருடன் ஜோடி சேர்ந்த அப்துல் சமது தனது பங்கிற்கு 8 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என 22 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக்கினார். பூரன், மார்ஷ் இருவரையும் பிரிக்கவும், லக்னெள பேட்டர்களை ஆட்டமிழக்கச் செய்யவும் கம்மின்ஸ் நேற்று 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் அனைவரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் சராசரியாக ஓவருக்கு 12 என்ற ரன்ரேட்டில் ரன்களை வாரி வழங்கினர். யஷ்வந்த் வர்மா: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக சர்ச்சையில் சிக்கிய இவரின் 5 முக்கிய தீர்ப்புகள்27 மார்ச் 2025 பிரிட்டனில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த இரு பெண் உளவாளிகளை கண்டுபிடித்த பிபிசி27 மார்ச் 2025 இந்திரா காந்தி, ஃபெரோஸ் காந்தி திருமணத்தை நேரு கடுமையாக எதிர்த்தது ஏன்?27 மார்ச் 2025 சன்ரைசர்ஸை கட்டம் கட்டிய லக்னெள பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிச்செல் மார்ஷின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு கொண்டாடிய சன்ரைசர்ஸ் அணி சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்த தொடக்கத்திலயே விக்கெட் வீழ்த்துவதுதான் சரியானது என்பதை அறிந்த லக்னெள அணி அதற்குரிய திட்டமிடலுடன் களமிறங்கியது. ஆஸ்திரேலிய பேட்டர் டிராவிஸ் ஹெட்டுக்கு வைடர் யார்கர்களையும், அபிஷேக் சர்மாவுக்கு ஷார்ட் பந்துகளையும் ஆயுதமாகப் பயன்படுத்தியது. ஷர்துல் தாக்கூர் வீசிய 2வது ஓவரிலேயே அதற்குரிய பலன் கிடைத்தது. அபிஷேக் ஷர்மா ஷார்ட் பந்தில் தூக்கி அடித்து 6 ரன்னில் பூரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் வந்த வேகத்தில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து டக்-அவுட்டில் விக்கெட்டை இழந்தார். டிராவிஸ் ஹெட்டுக்கும் குறிவைக்கப்பட்டது, ரவி பிஸ்னாய் பந்து வீச்சில் டிராவிஸ் ஹெட் அடித்த ஷாட்டில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை பூரன் தவறவிட்டார். ஆனால் ஹெட் 45 ரன்கள் சேர்த்திருந்தபோது, அவருக்கு வலுவான யார்கரை வீசி பிரின்ஸ் யாதவ் ஆட்டமிழக்கச் செய்தார். டாப் ஆர்டர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஆயுதங்களையும், திட்டங்களையும் லக்னெள வைத்திருந்தது. கிளாசனுக்கு நேர்ந்த கொடுமை கிளாசன் களத்துக்கு வந்தவுடன் சிக்ஸர், பவுண்டரி என விளாசி 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். 11வது ஓவரை பிரின்ஸ் யாதவ் வீசினார். நிதிஷ் ரெட்டி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க பிரின்ஸ் முயன்றபோது அவரின் கைகளில் பட்டு பந்து நான்-ஸ்ட்ரைக்கர் ஸ்டெம்பில் பட்டது. அந்த நேரத்தில் கிளாசன் க்ரீஸைவிட்டு வெளியே நின்றிருந்தால் பரிதாபமாக ரன்-அவுட்டாகி வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் நிதிஷ் ரெட்டியை 32 ரன்களில் ரவி பிஸ்னோய் வெளியேற்றினார். ஹமாஸுக்கு எதிராக காஸாவில் வீதிகளில் இறங்கிய மக்கள் - திடீர் போராட்டத்துக்கு என்ன காரணம்?27 மார்ச் 2025 மேட்ரிமோனி தளங்களில் மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழக்கும் நபர்கள் - சைபர் போலீஸ் எச்சரிக்கை27 மார்ச் 2025 மம்மூட்டிக்காக சபரிமலையில் பூஜை செய்த மோகன்லால்: சர்ச்சையானது ஏன்? - இன்றைய டாப் 5 செய்திகள்27 மார்ச் 2025 புதிய கண்டுபிடிப்பான அனிகேத் வர்மா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சன்ரைசர்ஸ் அணியை எப்படி வீழ்த்துவது என்று மற்ற அணிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் சன்ரைசர்ஸ் அணி, இளம் வீரர் அனிகேத் வர்மாவை தனது புதிய கண்டுபிடிப்பாகப் பிடித்துள்ளது. 21 வயதாகும் அனிகேத் வர்மா, 13 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து 36 ரன்கள் சேர்த்து பிஞ்ச் ஹிட்டராக மாறினார். இந்த ரன்களை அனிகேத் அடிக்காமல் இருந்திருந்தால், சன்ரைசர்ஸ் அணி 160 ரன்களில் சுருண்டிருக்கும் என்பதுதான் நிதர்சனம். அனிகேத் வர்மா ஆட்டமிழந்த பிறகு, பின்வரிசையில் வந்த பேட்டர்கள் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கம்மின்ஸ் மட்டும் 3 சிக்ஸர்களுடன் 18 ரன்கள் சேர்த்தார். டெத் ஓவர்களையும் பயன்படுத்த சன்ரைசர்ஸ் அணியில் கடைசி வரிசையில் பேட்டர்கள் இல்லை. ஒட்டுமொத்தத்தில் சன்ரைசர்ஸ் அணியை எப்படி காலி செய்வது என்று மற்ற அணிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ். அதிரடி வீரர்களுக்கு யார்கர் ஆயுதம் என்பதை உணர்ந்து, நேற்று மட்டும் 16 ஓவர்களில் 14 யார்கர்களை லக்னெள பந்துவீச்சாளர்கள் வீசியுள்ளனர். அதிலும் பிரின்ஸ் யாதவ் தன்னுடைய 4 ஓவர்களிலும் யார்கர்களை திட்டமிட்டு வீசினார். ஒருதரப்பாக ஆட்டத்தை மாற்றிய பூரன் லக்னெள அணி 190 ரன்களை துரத்தியது. ஆனால் மார்க்ரம் தொடக்கத்திலேயே ஏமாற்றினார். அடுத்து வந்த பூரன், பவுண்டரியுடன் கணக்கையும், அதிரடியையும் தொடங்கினார். பூரன் இடதுகை சுழற்பந்துவீச்சுக்குத் திணறுவார் என்று அபிஷேக் சர்மாவை பந்துவீச கம்மின்ஸ் அழைத்தார். ஆனால், அபிஷேக் பந்துவீச்சைத் துவைத்து எடுத்த பூரன் சிக்ஸர், பவுண்டரி எனச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆடம் ஸம்பா பந்துவீச்சை விட்டு வைக்காத பூரன், 2 சிக்ஸர்களை விளாசினார். பூரன் சந்தித்த முதல் 20 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடங்கும். 18 பந்துகளில் பூரன் அரைசதத்தை எட்டினார். பூரன் அதிரடியாக ஆடியபோது மார்ஷ் சிறிது பொறுமை காத்து 22 பந்துகளில் 37 ரன்களுடன் இருந்தார். பூரன் ஆட்டமிழந்தவுடன் மார்ஷ் அதிரடியாக ஆடத் தொடங்கி, ஷமி பந்துவீச்சில் 2 சிக்ஸர்கள், கம்மின்ஸ் பந்துவீச்சில் 2 பவுண்டரி என விளாசி 29 பந்துகளில் அரைசதம் எட்டினார். கடைசி 11 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது. ரிஷப் பந்த்(15), பதோனி (6) விரைவாக விக்கெட்டை இழந்த நிலையில், மில்லர், அப்துல் சமது வெற்றியை உறுதி செய்தனர். அதிலும் சன்ரைசர்ஸ் அணியில் கடந்த சீசனில் இருந்த இளம் வீரர் அப்துல் சமது 2 சிக்ஸர், 2 பவுண்டரி என 8 பந்துகளில் 22 ரன்களுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மில்லர் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cedld161z54o
  31. அப்போ நல்லூர் திருவிழா நேரங்களில் நிறைய பம்பாய் மிட்டாசு விற்பவர்களை காண முடியும். அந்த இனிப்பின் சிகப்பு நிறத்திற்கும், பளபளப்பிற்கும் அதனை வாங்கி சாப்பிட ஆசை இருந்த போதும், அந்தத் தடியில் கட்டி இருந்த ஊத்தைத் துணி, அந்த ஆசையை குழி தோண்டிப் புதைத்து விட்டது. 🤮 நிறைவேறாத ஆசைகளில் இதுவும் ஒன்று. 😁
  32. அல்வாயன்… ஆழம் அறியாமல் காலை விடக் கூடாது. 😂 🤣 சுவி, ஈழப்பிரியன், நெடுக்காலை போவான், வாலி, கந்தையா அண்ணை எல்லாரும் இந்துக் கல்லூரிதான்.
  33. அதற்கும் இந்த தமிழ் இடதுசாரிகள் ஆப்பு வைத்து விடுவார்களோ ? என்ற பயம் வருகிறது
  34. அவரின் தற்போதைய பொலிசி இதுதானே...இதை வைத்தே அடித்து நொறுக்கிடுவார் நாடு எவரோடும் இருந்திட்டு போகட்டும். தமிழர் தேசம் என்றும் தமிழரசோடு இருக்கட்டும்!
  35. பல ஆதாரங்கள் தரலாம்: முதலாவது வி. நவரத்தினம் அவர்கள் எழுதிய "The Fall And Rise Of The Tamil Nation" (1995) என்ற புத்தகத்திலேயே உள்ளது, முதன் முதலில் தமிழீழத்தைக் கோரியவர் செ. சுந்தரலிங்கம் என்று... அலகு 2 ஐ வாசிக்கவும். இரண்டாவது வி. நவரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட "Eylom: Beginning of the Freedom Struggle" (1962) என்ற புத்தகத்தில தந்தை செல்வாவை சாடியுள்ளார்; சமஸ்டியை தூக்கிப் பிடிப்பதற்கு. (pg 72-73) மூன்றாவது இன்னொரு கடிதத்தில் (1960களில் எழுதப்பட்டது), தந்தை செல்வாவை ஏன் நாடாளுமன்றத்தில் சமஸ்டி தான் வேண்டும்... ஏன் தனிநாட்டை முன்வைக்கவில்லை என்பதான தொனிப்பட்ட/ சூழமைவு கொண்ட கடிந்த கடிதம் ஒன்றை தந்தை செல்வாவாவிற்கு எழுதினார் என்று Sangam.org வாசித்தேன். C Suntheralingham in an open letter dated July 28, 1957, addressed to S J V Chelvanayakam, wrote, “Into what a sorry pass have you led the Tamils? “I differed from your party in this regard [establishment of one or more linguistic states] to the extent that I wanted an autonomous Tamil state which would constitute a Commonwealth of Dominion of Tamil Ilankai as set out in terms of a motion I moved in Parliament by way of amendment to the Throne speech of 1956. I was all-in-all with your party in regard to the ‘Autonomous Tamil Linguistic State’. I repeat, while your party wanted federation, I wanted separation, because I am convinced since 1955, that no Tamil should trust a Sinhalese politician and certainly not Prime Minister Bandaranaike, to protect Tamil interests.” https://sangam.org/sri-lanka-the-untold-story-chapter-16/
  36. பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது... நேரம் காலம் சேரும் போது வாழக்கை வருகிறது... நல்ல நல்ல நேரம் நம்மை வந்து சேரும் முத்து முத்து தீபம் நித்தம் ஒளி வீசும் அந்த வானம் வாழ்த்தும் ``` கோடி கோடி கனவுகள் கண்டேன் கூடி வந்ததென்ன காலம் நேரம் வாழ்த்தும் போது இனிமேல் கவலையென்ன நினைத்தது நடக்கிறது என் நெஞ்சம் இனிக்கிறது ஆனந்த மழையினிலே என் கண்கள் நனைகிறது பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது... நேரம் காலம் சேரும் போது வாழக்கை வருகிறது. ஏணியாக ஏற்றி வைப்பேன் உலகில் நீ உயர மாலை போட காத்து நிற்பேன் மகனே நீ ஜெய்க்க கோபுரம் நீ யாக உனை தாங்கிடும் நிலமாவேன் வெளிச்சத்தில் நீ வாழ என் விழிகளில் விளக்கு வைப்பேன் பூவும் காத்தும் சேரும் போது வாசம் வருகிறது... நேரம் காலம் சேரும் போது வாழக்கை வருகிறது... ஒரு மகனின் /மகளின் வளர்ச்சி ஒரு அப்பாவின் வழிகாடடலில், கடின உழைப்பில்,பாடலில் அப்பாவின் பாசம் தெரிகிறது.( இன்று என்னைக் கவர்ந்த பாடல்)
  37. போனை நோண்டுவதால் வந்த வினை. தூங்குவதற்கு 2 மணித்தியாலங்களுக்கு முன் மேற்படி புத்தன் சொன்ன கருவிகளை (GADGETS)நிறுத்தி விட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது மருத்துவ உலகால்.
  38. போரின் போது உயிர் காக்க, கடன்பட்டு ஓடி வந்து ,அகதி கேட்டு. துன்பப்பட்டு வந்த இளையவர்களின் கடின உழைப்பு , தற்போதைய இளையவர்களுக்கு ,கஷ்டம் தெரியாதவர்களுக்கு, இருப்பதில்லை . அக்கரைக்கு இக்கரை பச்சை, இலகுவாக(நோகாமல்) உழைக்கலாம் எனும் போக்கு தான் காணப்படுகிறது .
  39. நிர்வாணம் அடைந்த விட்டதாக சொல்லுவினம் உடுப்பு போடதேவையில்லை ....ஆஞ்சநேயர் தங்களுடை வம்சம் என குரல் கொடுப்பினம் சுமத்திரன் வாதட போனால் இவர்களின் நீதிமன்றில் எப்படி வாதிடுவார் என நினைத்து பார்த்தேன் சிரிப்பு வருகிறது
  40. எங்கள்ஊ ரில்ஒரு மூதாட்டி இருந்தார் . கணவன் இறந்து விட அவரது பென்ஷன் காசில் வாழ்ந்து வந்தார். சங்க கடையில் நாலு மீற்றர் துணி வாங்கி மேற் சடடையும் லுங்கியும் (சாரம் போல ) தைத்த பின் ...பிள்ளை மிச்ச துணி இருந்த ஒரு கைப்பையும் (handbag )யும் அடிச்சு விடு பிள்ளை என்று எனது அயல் உள்ள அக்காவிடம் சொல்லுவார். அந்த நினைவு தான் உங்கள்பதிவை பார்க்க வந்தது .😁
  41. திருவாளர் வசி அவர்களே, தன்னடக்கம் இருக்கலாம் அதற்காக இவ்வளவு அடக்கம் தேவை இல்லை. தொழில்நுட்ப ரீதியாக மிகவும் நுட்பமாக அலசக்கூடியவர் நீங்கள். அதை விட்டு விடாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். குப்பை கொட்டுவதற்கு நாங்கள் கொஞ்சம் பேர் இங்கே இருக்கின்றோம். நாங்கள் அந்தத் திணைக்களத்தைப் பார்த்துக் கொள்கின்றோம்.
  42. மூன்று வீட்டில் இருப்பவர் இரண்டு வாரங்கள் வங்கி அலுவலாக வெளிமாவட்டம் சென்றதனால் உடனே வாடகை ஒப்பந்தம் எழுத முடியவில்லை. இரண்டு நாழின்பின் வந்துசேர அவரை வரச்சொல்லிவிட்டு மணிவண்ணனிடம் போகிறேன். ஒப்பந்தம் எல்லாம் எழுதி முடிந்து வெளியே வருகிறோம். “ஏனக்கா அந்தப் பலா மரத்தை வெட்டினீர்கள்? நல்ல பழம். காய்த்துக் கொட்டுற மரம். அதைவிட வீட்டுக்கு நல்ல குளிர்ச்சி” “உங்கள் தங்கைதான் அது பலவருடங்களாகக் காய்க்கவில்லை என்று கூறினா” “அவ என் தங்கை இல்லை. என் அம்மாவைப் பாராமரிப்பதற்கு நான் வைத்திருப்பவர், என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே. அவ வந்து இப்ப ஒரு வருடம்தான்” “நாம் முதல்முதல் வந்தபோது புரோக்கர் உங்கள் தங்கை என்று சொன்னார். அதன் பின்னும் அவ அண்ணா என்றுதான் சொன்னா. நான் நம்பிவிட்டேன்” சரியக்கா என்று அவர் கிளம்ப, அந்தப் பெண்ணுக்கு இரண்டு திட்டுத் திட்டவேணும் என்ற கோபம் எழுகிறது. தீர விசாரிக்காத என் அவசர புத்தியை எண்ணி என்னை நானே நொந்துகொள்கிறேன். அடுத்த நாளே வீட்டுக்குப் போகும்போது ஒரு மீற்றர் உயரமான பலாக்கன்று ஒன்றை வாங்கிச் சென்று வெட்டிய இடத்துக்குப் பக்கத்தில் நட்டு சுற்றிவர தடிகளை ஊன்றி ஆடு கடிக்காதவாறு பாதுகாப்புக் கொடுத்தபின் மனம் சிறிது ஆறுகிறது. அடுத்து வந்த நாட்களில் மிகுதி இடங்களில் இருந்த புற்களை ஆட்களைக் கொண்டு பிடுங்கிவித்து தென்னை மரங்களுக்குத் தாட்டு பாத்திகளையும் கட்டுவிக்கிறேன். ஓர் ஆணுக்கு ஒருநாள் கூலி 3000. பெண்ணுக்கு 2500. இது தோட்ட வேலையோ கடின வேலையோ செய்பவர்களுக்கு. சாதாரணமாகப் புல் புடுங்குபவர்களுக்கு 1400. அத்துடன் காலை 9 மணிக்குப் பின்னர்தான் வேலைக்கு வருவார்கள். அவர்களுக்கு 10.30 - 11.00 க்குள் ஏதும் வடை அல்லது மிக்சரோ முறுக்கோ ஏதோவொன்று கொடுத்து தேனீரும் கொடுக்கவேண்டும். மதியம் உணவையும் கேட்டார்கள். என்னால் சமைக்க முடியாது என்று 500 ரூபாய்கள் மேலதிகமாகக் கொடுத்து அவர்களே கொண்டுவரும்படி கூறிவிடுவேன். இப்படியே மூன்று மாதங்கள் முடிய அவர்கள் தாம் ஒரு வாரத்தில் எழுந்துவிடுவதாகக் கூற எனக்கோ அளவில்லா மகிழ்ச்சி. அதன்பின் இரண்டு மூன்று நாட்கள் தாம் நிற்கமாட்டோம் என்று கூறியதால் நான் வீட்டுப்பக்கம் செல்லவில்லை. நான்காம் நாள் போன் செய்தால் யாருமே போனை எடுக்கவில்லை. அடுத்தநாள் ஓட்டோ பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தால் வீட்டின் வெளிவாசலில் பூட்டுத் தொங்க, அதில் நின்றபடி அந்தப் பெடியனுக்குத் தொடர்ந்து போன் செய்தபடி இருக்க, என் வற்சப்புக்கு மெசேச் ஒன்று வந்து விழுகிறது. “வீட்டில் இருந்த பெண்ணின் தந்தை கிளிநொச்சியில் நோய் வாய்ப்பட்டு இருக்கிறார். அவர் அங்கே போய்விட்டார். மூன்று நாட்களின் பின்னர் திறப்புத் தருகிறேன்” முதலே எனக்கு அந்த செய்தியைச் சொல்லியிருந்தால் நான் தேவையில்லாமல் வந்திருக்கத் தேவை இல்லை என்று செய்தி அனுப்புகிறேன். அதன்பின் மூன்றாம் நாள் காலை மீண்டும் ஓட்டோக்காரருடன் வந்தால் அப்போதும் பூட்டுத்தான் தொங்குது. திரும்ப போன் செய்ய, திறப்பை இன்ன இடத்தில் வைத்திருக்கு, எடுங்கோ என்று செய்தி வற்சப்பில் வருகிறது. ஓட்டோக்காரர் தேடித் திறப்பை எடுத்து வருகிறார். திறந்துகொண்டு உள்ளே செல்ல, அக்கா மோட்டார் இருக்காது போய் பாருங்கோ என்கிறார். போய்ப் பார்த்தால் மோட்டார் கிடங்கினுள் இல்லை. “எப்பிடி உங்களுக்கு மோட்டர் இருக்காது எனத் தெரிந்தது தம்பி? “அவர்கள் இரண்டு நாட்களும் போன் எடுக்காது உங்களை அலைக்களித்தவுடன் எனக்கு விளங்கிவிட்டுது. பைப்பைத் திறந்து பார்த்தால் தண்ணீர் வருக்கிறதுதான். ஆனாலும் அது எப்ப முடியும் என்று தெரியாதுதானே. எம் மூரில் ஒரு தெரிந்த எலெக்ரீசியன் இருக்கிறார். அவருக்குத் தொலைபேசியில் விபரம் சொல்ல, இன்று வரமுடியாது அக்கா. நாளை வருகிறேன் என்கிறார். வீட்டை நன்றாகக் கழுவிவிட்டுத்தான் உள்ளே பயன்படுத்த வேண்டும். ஆனால் தண்ணீர் இல்லாது இன்று வீட்டில் நின்று பயனில்லை. ஆகவே ஓட்டோவில் உடனேயே திரும்ப வீடு செல்கிறேன். எப்ப வந்தாலும் இங்கு சாப்பிடலாம் என்று மச்சாள் கூறினாலும் சிலவேளைகளில் மட்டுமே நான் அங்கு உண்பது. உண்மையில் கொஞ்சம் சமையலில் இருந்து விடுதலை வரும் என்று நம்பித்தான் லண்டனில் இருந்து வரும்போது நினைத்தது. ஆனால் அன்ரியின் வயது காரணமாக அவர் சமைத்து நான் உண்பது ஏற்புடையதாக இல்லை. காலையில் எழுந்து குளித்துவிட்டு காலை உணவு சமைத்து மதியத்துக்கும் ஏதாவது இரண்டு கறிகளை வைத்துவிட்டு எனக்கு மதிய உணவையும் கட்டிக்கொண்டு சென்று உண்பது தொடர்ந்தது. பஞ்சி வரும் நேரங்களில் மட்டும் காலை உணவை மட்டும் செய்துவிட்டு எனக்கு மதிய உணவு வேண்டாம் என்று கூறிவிட்டு கடைகளில் வாங்கி உண்பதும் சிலவேளைகளில் நடந்ததுதான். அடுத்தநாள் வழமைபோல் எல்லாம் செய்துவிட்டு புதிய பூட்டுகள் மூன்றும் வாங்கிக்கொண்டு செல்கிறேன். எலெக்ரீசியன் தானே மோட்டரை வாங்கி வருவதாகக் கூறி வாங்கி வருகிறார். அவர் மோட்டரை மாற்றும்போது பார்த்தால் கிணற்றினுள் ஒரே பாசியும் தென்னோலைகளுமாக இருக்க, பக்கத்து வீட்டுக்குச் சென்று கிணறு கலக்கி இறைக்க யாரும் இருக்கிறார்களா என்று கேட்க ஒருவரின் தொலைபேசி இலக்கம் தருகிறார். அந்த வீட்டுக்காரியின் பெயர் ரதி. கணவனும் மனைவியும் மட்டுமே அங்கு இருக்கின்றனர். ஆண் பிள்ளைகள் மூவர். திருமானமாகிவிட்டது. இருவர் வெளிநாட்டில். கதைத்துக்கொண்டு போக யேர்மனியில் வசிக்கும் அவரின் உறவினர்கள் எமக்குத் தெரியவருகின்றனர். எனக்கு நல்ல ஒரு துணை அயலில் என்ற மகிழ்ச்சி. அதன்பின் அப்பப்ப அவருடன் சென்று கதைப்பதும் விபரங்களை அறிவதுமாகி நெருக்கமாகிவிடுகிறார் ரதி அக்கா. புதிய மோட்டார் போட்டபின் அடுத்த நாளே கிணற்றைக் கலக்கி இறைக்க இருவர் வருகின்றனர். முன்னர் பலா மரம் வெட்ட வந்தவர்களை தென்னைக்குப் பாத்தி கட்டவும் அழைத்திருந்தேன். அவர்களும் வந்தபடியால் புதியவர்களுடன் நிற்க பயம் ஏற்படவில்லை. முதலில் இரண்டு மணிநேரம் எமது மோட்டறினால் இறைத்துவிட்டு பின்னர் அவர்கள் கொண்டுவந்த மோட்டரைப் போட்டு கலக்கி இறக்கின்றனர். மூன்று பெரிய ஊற்றுகள் இருந்ததனால் மூண்டு வாழைக் குற்றிகளை வெட்டி ஊற்றை அடைத்தபின் பாசிகளை எல்லாம் அள்ளுகின்றனர். அக்கா கிணற்றுக்குள் இரண்டு பாம்பு இருக்கு என்றவுடன் நான் பாய்ந்து ஓடுகிறேன். “ஐய்யோ அக்கா பாம்பு செத்துப்போய் கிடக்கு” “தண்ணீர் குடிக்கத்தான் பாம்பு கிணற்றுள் வந்ததோ தம்பி” இல்லை அக்கா கிணற்றுள் ஒரு ஓட்டை இருக்கு. முட்டையும் இருக்கு. ஏதும் பறவைகள் வந்து இருந்திருக்கும். முட்டையைக் குடிக்கத்தான் பாம்பு வந்து தவறி விழுந்திருக்கும் என்கிறார். ஆக், உந்த செத்தபாம்பு கிடந்த தண்ணியில் தான் தேநீர் ஊற்றிக் குடிச்சதோ என்கிறேன். நல்லகாலம் நான் ஒரு போத்தலுக்குள் இணுவிலில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து குடித்ததில் மனம் நிம்மதியாகிறது. கிணறு கலக்கி இறைக்க மூன்று மணித்தியாலம். 3000 ரூபாய்கள் தான். அடுத்தடுத்த கிழமைகளில் ஸ்கூட்டியும் வாங்கி ஓடிப் பழகி விழுந்தெழும்பிய கதை முதலே எழுதியாச்சு.
  43. எங்கள் பின்னணி பற்றியே எங்களிடம் போதிய தகவல்/விளக்கம் இல்லை. உணர்ச்சியை முறுக்கேற்றி வைத்துள்ளோம். என்னிடம் பதில் இல்லை ஓவியர்.
  44. நான் அங்கு நின்ற ஆறு மாதகாலத்தில் நடந்தவற்றை மேலோட்டமாக முன்னர் எழுதியிருந்தேன். அதனால் எழுதாமல் விட்ட சிலதை இப்ப எழுதினாலத்தான் ஒரு தொடர்ச்சி வரும் என்பதனால் எழுதுகிறேன். வீடு எல்லாம் எழுதி முடிந்து கணவரும் சென்ற பிறகு ஒரு வாரம் செல்ல, அடுத்தநாள் காலை வாங்கிய வீட்டுக்குச் செல்கிறேன். தாயும் அந்தச் சகோதரியும் நிற்கின்றனர். நான் வளவைச் சுற்றிப் பார்க்கிறேன். நாம் வாங்கும்போது இருந்ததைவிட வளவு குப்பையாக இருப்பதுபோல் எனக்குத் தெரிகிறது. வீட்டுடன் சேர்ந்து ஒரு பக்கத்தில் இரண்டு தூண்கள் எழுப்பி ஓடு போட்டபடி ஒரு இடம். அதைக் கடந்துதான் வெளியே உள்ள டொயிலெட்டுக்குப் போகவேண்டும். அந்தத் தூண்களில் இரண்டு மறி ஆடுகள் கட்டப்பட்டிருக்கு. மூன்று குட்டிகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்க ஆசையாக இருந்தாலும் ஆடுகள் கட்டியிருந்த இடம் பார்க்க அருவருப்பைத் தருகின்றது. ஆடுகள் முந்தி இருக்கேல்லையே. எப்ப வாங்கியது என்கிறேன். கன நாட்களாக வளர்க்கிறோம். நீங்கள் வீடு பார்க்க வந்தபோது வெளியே உள்ள வளவில மேயவிட்டனான். அம்மாவுக்கு ஆட்டுப் பால் தான் கொடுக்கிறது என்கிறார் சகோதரி. நாம் முதல்முதல் வந்தபோது ஒவ்வொன்றாகப் பார்க்கவில்லை. பார்க்கத் தோன்றவுமில்லை. நாம் வந்து பார்த்த முதல் நாள் இரு மருங்கும் செவ்வரத்தம் கன்றுகள் சடைத்து நின்றன. இப்போது பார்த்தால் அவை எல்லாம் ஆடுகள் கடித்து மொட்டையாகத் தடிகள் மட்டும் நிற்கின்றன. ஏன் தங்கச்சி ஆடுகடிக்க விட்டீர்கள் என்றதற்கு சின்னக் குட்டிகள் தானே இன்னும் கட்டத் தொடங்கேல்லை என்கிறார். வீட்டுக்குள்ளே சென்று பார்க்கலாமா என்கிறேன். ஓம் போய் பாருங்கோ என்று கூற ஒவ்வொரு அறையாகப் பார்த்துக்கொண்டு வர மூன்றாவது அறையில் இரண்டு கதவுகள் தெரிகின்றன. வெளிப் பக்கம் ஒன்று. உள்ளே இருந்து திறப்பதற்கானது அடுத்தது. நான் மின்விளக்கைப் போட்ட உடன் அறையில் அங்காங்கே ஆட்டுப் பிழுக்கைகள் தெரிய என்ன தங்கச்சி இது என்கிறேன். சின்னக் குட்டி எண்டதால அவை உள்ளேயும் வந்து படுக்கிறவை என்று சாதாரணமாகக் கூற, வீடு பழுதாப் போயிற்றுது உங்கள் வேலையால் என்று நான் கோபமாய்க் கூறுகிறேன். இன்னும் மூன்று மாதத்தில நாங்கள் போயிடுவம் என்கிறார் சகோதரி. இனிமேல் ஆடுகளை உள்ளே விடவேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறினாலும் அவர்கள் அதைக் கடைபிடிக்கப் போவதில்லை என்பது எனக்கு தெரிய, எதுவும் பேசாது வெளியேறுகிறேன். அதன்பின் ஒரு வாரம் தென்னைகள் தறித்து வளவைச் சுத்தம் செய்து முடிய பின்னர் உயிர் வேலிகளைத் தறித்துவிட்டு தகரவேலி அடைத்துவிட்டு, இருந்த கிழுவைகளை பின்பக்க தகர வேலியின் உள்ளே அரை அடி தள்ளி ஊன்றும்படி சொல்ல முன்னர் தென்னை தறிக்க வந்த இருவருமே அந்த வேலையையும் செய்கின்றனர். தென்னைகள் எவற்றுக்கும் ஐந்து ஆண்டுகளாகத் தண்ணீரே விடவில்லை. மழைத் தண்ணீர் மட்டும்தான். அதனால் செழிப்பற்று இருக்கு. புற்கள் மட்டும் பெரிதாக வளர்ந்திருக்கு. பலதும் முட்கள் உள்ள செடிகளாகவும் இருக்கு. அதனால் வேலைக்கு வந்த இருவருமே இரண்டு நாட்கள் பெரிய புற்களைச் செதுக்கி முடிக்கின்றனர். வீட்டின் ஒரு பக்கம் கிட்டத்தட்ட நான்கு பரப்பு நிலம் தோட்டம் செய்யக்கூடிய நிலையில் இருக்கு. ஆனால் ஒருமிளகாய்க் கன்று கூட அவர்கள் நட்டிருக்கவில்லை. அந்த நிலத்தை உழவு இயந்திரத்தினால் உழுதுவிடு என்று கணவர் கூற 6000 ரூபாய்க்கு ஒருவரைக் கூப்பிட்டு உழுதால் மண் சம நிலைக்கு வரவில்லை. அவரிடமே சிறிய மண்ணைச் சமப்படுத்தும் இயந்திரம் இருக்கிறதா என்று கேட்க தன்னிடம் இல்லை என்று வேறு ஒருவரை ஒழுங்குசெய்து தருகிறார். அவருக்கு 4000. அதில் ஏதாவது பயிர் வைப்போமா என்று கணவருடன் கதைத்தால் அது நாங்கள் போய் இருக்கும்போது வைக்கலாம் என்கிறார். பின்பக்கம் முழுதும் வாழைகள். அதுவும் பாராமரிக்கப்படாமல் இருக்கு. அவர்கள் வீட்டை விட்டு எழும்பும் மட்டும் பேசாமல் இரு என்கிறார் மனிசன். வீட்டின் பின்பக்கம் ஒரு பெரிய பலாமாரம். வலது பக்கத்தில் இன்னொரு பெரிய பலாவும் மாமரமும். நான் ஊஞ்சல் ஆடியபடி அந்த சகோதரியுடன் கதைத்துக்கொண்டு இருக்கிறேன். “இந்தப் பலாமரத்தையும் தறியுங்கோ அன்ரி” “ஏன் நல்ல வடிவாத்தானே இருக்கு மரம்” “இல்லை அன்ரி. மரம் உள்ளால கோறையாப் போச்சு. வீட்டுக்குமேல சரிஞ்ச விழுந்தால் உங்களுக்குத்தான் வீண்செலவு” “மரத்தைப் பார்த்தால் அப்பிடித் தெரியேல்லையே” “மரம் ஒரு காய் கூட இப்ப ஐந்தாறு வருஷமாக் காய்க்கவுமில்லை” நான் இறங்கிப் போய் மரத்தைச் சுற்றிப் பார்க்கிறேன். "பெரிதாக கோறையானமாதிரித் தெரியவில்லையே” “உங்களுக்கு வெளியில தெரியாது. உள்ளுக்குள்ள சரியாப் பழுதாக்கி இருக்கும். நான் சொன்னதைச் சொல்லீற்றன். உங்கடை வீடு. உங்கடை விருப்பம்” அடுத்தநாள் தென்னை தறித்தவர்களைக் கூப்பிடுகிறேன். என் நண்பரின் அம்மா வீட்டில் வேலை பார்ப்பவர்கள் என்பதால் அவர்கள் மேல் கடும் நம்பிக்கை. “இந்தப் பிலாமரம் கோறை பத்திக் கிடக்கு என்று அந்தப் பிள்ளை சொல்லுறா. ஒருக்காப் பாருங்கோ தம்பியவை” “ஓமம்மா. வெட்டுறதுதான் நல்லது” “கனகாலமா காய்கவும் இல்லையாம். சரி அப்ப வெட்டுங்கோ” “மரத்தை எங்கையம்மா போடுறது” “வெட்டுங்கோ முதல்ல பிறகு ஆரன் விறகுக்குக் கேட்டால் குடுப்பம்” “நான் பெரிய துண்டுகளைக் கொண்டு போகட்டே” “எப்பிடிக் கொண்டு போவியள்” “லான்ட்மாஸ்டர் கொண்டுவந்து ஏத்துவம்” “கொண்டுபோய் என்ன செய்வியள்? லாண்ட்மாஸ்டர் பிடிக்கிற காசுக்கு அங்கினையே விறகுகள் வாங்கிப்போடலாமே” “இப்ப விறகு சரியான விலையம்மா” “பிலாவிலையளையும் சின்னக் கொப்புகளையும் நான் எடுக்கிறன் அன்ரி. பிலாவிலை ஆடுகளுக்கு நல்ல சத்து, நல்லாப் பால் சுரக்கும்” எனக்கு உள்ளுக்குள் சரியான மகிழ்ச்சி. தானாகவே வளவு சுத்தமாகுதே என்று. பலாமரம் வெட்டி முடிந்து அவர்கள் மரங்களைத் துண்டுபோட்டு லாண்ட்மாஸ்டரில் ஏற்றிக்கொண்டு இருக்கும் போது என் ஓட்டோ வருகிறது. “ஏனக்கா உதை வெட்டினனீங்கள்? ஓட்டோக்காரர் கேட்கிறார். கோறையாயிற்றுது என்று இவ சொன்னா. அதோடை காய்கிகிறதும் இல்லையாம். என்கிறேன். அவர் சென்று மரங்களைப் பார்த்துவிட்டு வந்து அவசரப்பட்டிட்டியள் அக்கா என்கிறார். எனக்கும் ஏதோ ஒருமாதிரி இருந்தாலும் மரம் வெட்டியாச்சு இனி ஒண்டும் செய்ய ஏலாது என்று மனதைத் தேற்றிக்கொள்கிறன். ஓட்டோவில் செல்லும்போது அவங்கள் பலாமரத்தைக் கொண்டுபோய் நல்லவிலைக்கு விப்பாங்கள். அதுதான் அவங்களும் சேர்ந்து வெட்டியிருக்கிறாங்கள் என்கிறார். சரி விடுங்கோ. காய்க்காத மரத்தை வச்சிருந்து என்ன பலன் என்கிறேன். மேலால கொஞ்சத்தை வெட்டியிருந்தாலே காய்க்குமே அக்கா. சரி வெட்டியாச்சு. இனிக்கதைச்சுப் பிரயோசனம் இல்லை. வாற கிழமையே ஒரு பலக் கன்றை நடுவம் என்று கூறுகிறேன்.
  45. நாட்டில ஒரு குழப்பம், அதிகரித்த துப்பாக்கிச்சூடுகள் களை கட்டப் போகின்றன. இனவாதத்தையும், ஊழலையும் பெருக்கி அதில் சுகம் கண்ட அரசியல் வியாதிகள் சிறை செல்லும் நிலைமை வரும்போது, நாட்டில் அமைதியை குழப்பி, தங்களை காட்டிக்கொடுக்கக் கூடியவர்களை கொலை செய்து, சாட்சிகளை அழிக்கவும், மக்களை அரசுக்கெதிராக கிளப்பவும், போலீசார், இராணுவம் முடுக்கி விடப்பட்டுள்ளது. கைது செய்யப்படும் குற்றவாளிகள், தாங்கள் மறைத்து வைத்துள்ள ஆயுதங்களை அடையாளம் காட்ட போலீசாரை அழைத்துச்சென்ற போது, குற்றவாளிகள் போலீசாரின் துப்பாக்கியை பறித்து போலீசரை தாக்க முற்பட்ட வேளை, பதிலுக்கு போலீசார் நடத்திய தாக்குதலில் குற்றவாளிகள் உயிர் இழந்துள்ளனர் என்கிற கதைகள் வெளிவரப்போகின்றன. இராணுவ ஆட்சிக்கும் முயற்சிக்கலாம். தமிழருக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட கொலைகள், இயற்றிய சட்டங்கள் இப்போ அவர்களுக்கெதிராகவே திரும்பப்போகின்றன. முந்துகிறவன் பிழைப்பான். மஹிந்த கோஷ்டியோடு ஒட்டிக்கொண்டுதிரிந்தவர்கள் தங்களை மஹிந்தவிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ளட்டும். விமல் வீரவன்சவின் பாதுகாப்பும் சந்தேகமே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.