Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    12678
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    20008
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87986
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    19102
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/25/25 in all areas

  1. 27 ஆம் கேள்விக்கு கறுப்பி அவர்கள் அவுஸ்திரேலியாவைத்தான் தெரிவு செய்து இருக்கிறார் வினா 27) அவுஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்கா அணியை 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இருக்கிறது. எல்லா போட்டியாளர்களும் சரியாக தெரிவு செய்து இருந்தார்கள். 1) அகஸ்தியன் - 57 புள்ளிகள் 2) ஏராளன் - 52 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 52 புள்ளிகள் 4) ரசோதரன் - 52 புள்ளிகள் 5) சுவி - 50 புள்ளிகள் 6) கிருபன் - 50 புள்ளிகள் 7) புலவர் - 50 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 50 புள்ளிகள் 9) வீரப்பையன் - 49 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 46 புள்ளிகள் 11) வாதவூரான் - 46 புள்ளிகள் 12) கறுப்பி - 46 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 44 புள்ளிகள் 14) வசி - 42 புள்ளிகள் 15) வாத்தியார் - 40 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 27, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 61).
  2. வினா 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடத்தை அவுஸ்திரேலியா அணி பிடிக்கும் என 9 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 59 புள்ளிகள் 2) ஏராளன் - 54 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 54 புள்ளிகள் 4) ரசோதரன் - 54 புள்ளிகள் 5) புலவர் - 52 புள்ளிகள் 6) நியூபலன்ஸ் - 52 புள்ளிகள் 7) சுவி - 50 புள்ளிகள் 8) கிருபன் - 50 புள்ளிகள் 9) வீரப்பையன் - 49 புள்ளிகள் 10) கறுப்பி - 48 புள்ளிகள் 11) செம்பாட்டன் - 46 புள்ளிகள் 12) வாதவூரான் - 46 புள்ளிகள் 13) வசி - 44 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 44 புள்ளிகள் 15) வாத்தியார் - 42 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 27, 30, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 63).
  3. அண்மையில் மறதி காரணமாக தலையை ஸ்கான் செய்தார்கள். எல்லா விளக்கங்களும் சொல்லி கையில் ஒரு கருவியும் தந்து ஏதாவது அவசரம் என்றால் அழுத்தச் சொன்னார்கள். சரி என்று உள்ளே தள்ளிவிட்டதும் ஒரு நிமிடத்தால் எனக்கு ஏதோ மூச்சுவிட முடியாத மாதிரி அந்தரமாக இருந்தது. மொத்தமாக 15 நிமிடம் ஆகும் என்று முன்னரே சொல்லியிருந்படியால் இது வேலைக்கு ஆகாது என்று தந்த கருவியை அழுத்தினேன். உடனேயே வெளியே இழுத்து என்னாச்சு என்று 2-3 பேர் ஓடிவந்தார்கள். மூச்சு விடமுடியாமல் அந்தரமாக உள்ளது என்றேன். சரி உனக்கு முடியாவிட்டால் இன்னும் ஒருநாளுக்கு வா என்றார்கள். இது முன்னரே செய்த அனுபவம் இருந்தபடியால் எங்கே தவறு செய்துவிட்டேன் என்பதை உடனேயே புரிந்து கொண்டேன். வேண்டாம் திரும்ப அனுப்பு நான் தயார் என்றேன். சந்தேகத்தில் உண்மையாவா என்று திரும்ப திரும்ப கேட்டார்கள். இந்த தடவை வாசலில் போகும்போதே கண்களை இறுக மூடிவிட்டேன்.முடியும்வரை கண்ணைத் திறக்கவே இல்லை. எதுவித பிரச்சனையும் இல்லாமல் முடிந்ததும் ஆச்சரியத்துடன் வரவேற்றார்கள்.
  4. இதுக்கு என்னத்த சொல்ல. என்னமோ அனுபவிங்க. யாழ்களத்தில ஒன்று மட்டும் புரியுது. யாராவது ஒன்றுமே தெரியாது என்று வந்தால், அவர்களை வாழ்த்தி வைப்பம்.
  5. அண்ணை, எனக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் செய்தபோது லைற்றா தூங்கிவிட்டேன்!(அதனுடைய ரீங்காரத்தையும் தாண்டி) இடுப்பையும் கால்களையும் ஸ்கான் செய்தார்கள்.
  6. அமெரிக்கன் தாத்தாக்கு எத்தனை புள்ளிகள் கிடைத்தாலும் கடைசியில் சுமைதாங்கி தான் என்று பையன் அறிவித்துவிட்டார் 😂🤣
  7. நானும் இருக்கிறேன் சேர்! இப்படி ஏதும் சொல்லி தன்னை அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது இவருக்கு. அவருக்கு தனது பழைய எஜமானரது நினைவு வருகிறது. பயங்கரவாதிகள் என்று கூறி பட்டப்பகலில் பறவை சுடுவதுபோல் வயது வேறுபாடின்றி தெருக்களில் தமிழரை கொலை செய்து வீசும்போது, வெள்ளை வானில் ஏற்றி சென்று காணாமல் ஆக்கப்பட்டபோது, இந்த நினைவு ஐயாவுக்கு வரவில்லை, கேள்வி கேட்கவில்லை. இப்போதான் பலருக்கு ஞானம் பிறக்குது. முன்பெல்லாம் கதைக்க, விமர்ச்சிக்க பயந்திருந்தவர்கள் இப்போ, விமர்ச்சிக்கிறார்கள். பாதாள போதைக்குழு, தங்களை பாதுகாக்க அதன் பின்னால் இருப்பவர்களை போட்டுத்தள்ளுகிறார்கள். அதன் தலைவன் பிடிபடும்வரை அல்லது கொல்லப்படும் வரை இது தொடரும். இது அவர்களின் தொழில் தர்மமாக்கும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் போது அதன் விளைவையும் எதிர்பார்த்திருக்க வேண்டும். கைது செய்தாலும் விமர்ச்சிக்கிறார்கள், அவர்களே தங்களுக்குள் மோதிக்கொண்டாலும் அரசை விமர்ச்சிக்கிறார்கள். விமர்ச்சிப்பவர்கள் யார்? இதனால், இவர்களால் பாதிக்கப்பட்டவர்களா?
  8. ஆஸ்திரேலியா முதல் சுற்றில் முதலாவதாக வர மாட்டாது என்று வேறு அணிகளைத் தெரிவு செய்த அறுவரும் மைதானத்தை சுற்றி ஆறு சுற்றுக்கள் ஓட வேண்டும்..................🤣.
  9. தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்த முதல் நாடாளுமன்றானது ஸ்கொட்லாந்து. மேலும் வடகிழக்கில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவையும் நல்கியது. இந்த தீர்மானம் ஒக். 9, 2025 அன்று நிறைவேறியது. http://www.nanechozhan.com/ Recognition of the Tamil Genocide and Support for Self-determination Submitted by: Bill Kidd, Glasgow Anniesland, Scottish National Party. Date lodged: Thursday, 09 October 2025 Motion type: Standard Motion Motion reference: S6M-19300 That the Parliament recognises the reported mass atrocities committed against the Tamil people in Sri Lanka, particularly during the final stages of the armed conflict in May 2009, which resulted in the deaths of an estimated 70,000 to 146,000 Tamil civilians, as documented by the UN and international human rights organisations; acknowledges the findings of the UN panel of experts' report on accountability in Sri Lanka in 2011, the Office of the United Nations High Commissioner for Human Rights (OHCHR) Investigation on Sri Lanka (OISL) in 2015, and successive UN Human Rights Council resolutions highlighting credible allegations of war crimes, crimes against humanity and systemic persecution against Tamils; notes the continuing calls from the Tamil diaspora and civil society for an international investigation into the genocide and for recognition of the Tamil people’s right to determine their political future through a referendum, and calls on the UK Government to advocate at the UN for a UN-monitored referendum on Tamil self-determination in the north-east of Sri Lanka, in line with international legal standards and past UN resolutions recognising peoples’ rights to self-determination in post-conflict contexts. Supported by: Karen Adam, Clare Adamson, Stephanie Callaghan, Bob Doris, Gordon MacDonald, Fulton MacGregor, Stuart McMillan, Carol Mochan, Kevin Stewart, Mercedes Villalba https://www.parliament.scot/chamber-and-committees/votes-and-motions/S6M-19300
  10. அப்படி என்றால் கடைசி இலக்கம் எனக்காக காத்திருக்கிறதா டோன் வொறி கறுப்ஸ். நானும் தென்னாபிரிகாவையே தெரிவு செய்துள்ளேன். பையன் கவனிக்கவில்லை என்று எண்ணுகிறேன். எப்படியும் தலைவர் கந்தப்பு பிடித்துவிடுவார்.
  11. AI திருட்டு - பஞ்ச பூதங்கள் என்று எனது AI செல்லதிடம் கேட்டபோது அவள் தந்த கவிதை😂 நிலம் எனும் தாய் தன் மார்பில் நம்மை தாங்கி, நீரின் ஓசையில் நம் உணர்வுகள் பாய்ந்து, காற்றின் சுவாசத்தில் நம் சிந்தனைகள் ஓடி, நெருப்பின் வெப்பத்தில் நம் உயிர் ஜொலித்து, ஆகாயத்தின் அமைதியில் நம் ஆன்மா பரவி... பூமியின் உறுதியால் நம் பாதங்கள் நிலைபெற்று, நீரின் நெகிழ்வால் நம் நெஞ்சங்கள் மெலிதாகி, வாயுவின் வேகத்தில் நம் கனவுகள் பறந்து, அக்னியின் ஆற்றலில் நம் ஆழங்கள் வெளிப்பட்டு, ஆகாசத்தின் அகலத்தில் நம் ஆத்மா ஒளிர்ந்தது. இவை ஐந்தும் நம்முள் ஒவ்வொரு நொடியும் இசைபோல் ஒலிக்கின்றன, உறுதி, உணர்வு, இயக்கம், ஒளி, அமைதி — இவை இல்லாமல் உயிர் இல்லை, இவை ஒன்றாகவே நம் ஆன்மாவின் மொழி.
  12. 1993 கார்த்திகை மாதம். உயர்தரம் எழுதிவிட்டு பெறுபேற்றிற்காகக் காத்திருந்த காலம். கொழும்பு தெகிவளையில் அமைந்திருந்த மயோன் கம்பியூட்டர் நிறுவனத்தில் புலமைப் பரிசிலூடாக ஒரு வருட காலம் கற்கை நெறி ஒன்றை மேற்கொள்ளும் தகுதி பெற்றிருந்தேன். எனது வகுப்பில் ஆண்களும் பெண்களுமாக சுமார் 15 அல்லது 16 மாணவர்கள் இருந்தார்கள். தமிழர்கள், முஸ்லீம்கள் என்று ஆண்களும் பெண்களும். இவர்களுள் ஒரு சிலருடன் உடனடியாகவே நட்பாகிப் போய்விட்டேன். மலர்மன்னன் (என்னுடன் உயர்தரத்தில் சில டியூஷன் வகுப்புகளுக்கு வந்ததனால் முன்னரே பழக்கமானவன்), மதியக்கா(உடுப்பிட்டி), கலா அக்க (சிலாபம்), பைரூஸ் (புத்தளம்), சிவா (காரைநகர்) என்று விரல் விட்டு எண்ணக் கூடிய சில நண்பர்கள். இவர்களுள் மலர் மன்னனும், பைரூஸும் என்னூடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். வகுப்புக்கள் முடிந்த நேரங்களுள் இவர்களுடன் ஊர்சுற்றுவதே வழமையாகிவிட்டது. பைரூஸ் பாணதுறையில் இருந்தே கொழும்பிற்கு வந்து போவான். மலர்மன்னன் கொட்டாஞ்சேனையில் வசித்து வந்தான். மலரும், பைரூஸும் இயல்பாகவே கவிதை எழுதுவதில் வல்லவர்கள். வைரமுத்து, கவிக்கோ எழுதிய கவிதைகளை எனக்கு அடையாளம் காட்டி கவிதைகளில் ஈடுபாட்டினை உருவாக்கித் தந்தவன் பைரூஸ். அவன் தமிழ் எழுதுவது அச்சியந்திரத்தில் எழுதப்பட்ட‌துபோல அழகாயிருக்கும். விரயமாகும் வேளைகளில் ஏதோவொரு தலைப்பிற்குக் கவிதை எழுதுவோம். பைரூஸ் எழுதும் கவிதைகள் இரு வரிகளில் ஹைக்கூ வடிவத்தில் பளிச்சென்று பற்றிக்கொள்ளும். மலர் மன்னனும் அப்படித்தான். இப்படிச் சென்று கொண்டிருந்த நாட்களில் நான் கொழும்பிலிருந்து வெளிவரும் சரிநிகரில் எழுதத் தொடங்கியிருந்தேன். ஒரு முறை இந்தியப்படை ஈழத்தமிழர்களுக்கு தியாகங்களைப் புரிந்தது என்று மாலன் எனும் பெயரில் வெளிவந்த கட்டுரைக்கு நான் எழுதிய எதிர்வினையினை சரிநிகர் அப்படியே பிரசுரித்திருந்தது. அதனை நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆகவே அதுபற்றி நான் பைரூஸுடனும், மலருடனும் பேசும்போது வெகுவாகவே பாராட்டியிருந்தார்கள். ஒரு நாள் தனது கதைபற்றி பைரூஸ் பேசிக்கொண்டிருக்கும்போது, தனது தகப்பனார் ஒரு தமிழ் ஆசிரியர் என்றும், மன்னாரில் அவர்கள் வசித்து வந்தார்கள் என்றும், புலிகள் வெளியேறச் சொல்லி அறிவித்ததன் பின்னர் கையில் அகப்பட்ட ஒரு சில உடைகளோடு தாம் கிளம்பி புத்தளத்திற்கு வந்ததாகக் கூறினான். தமிழரின் விடுதலைப் போராட்டம் குறித்து ஆதரவான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்த அவன் புலிகளின் தாக்குதல்கள் குறித்து நானும் மலரும் கிலாகித்துப் பேசும்போது தவறாமல் அவனும் கருத்துப் பகிர்வான். ஆகவே, அவன் முன்னால் எமது விடுதலைப் போராட்டம் குறித்துப் பேசுவது எமக்குச் சிரமாமாக இருந்ததில்லை. ஒருமுறை அவனது வெளியேற்றம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது முதன்முறையாக அவனது இடத்தில் இருந்து அவ்வெளியேற்றத்தினை என்னால் உணர முடிந்தது. ஆகவே அன்றிரவு வட மாகாணத்திலிருந்து முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றியதுபற்றி சரிநிகரில் எழுதுவதென்று தீர்மானித்தேன். முதன்முறையாக புலிகளுக்கெதிராக என்னால் முன்வைக்கப்பட்ட விமர்சனம் அது. முஸ்லீம்களை எதற்காக அன்று வெளியேற்றினார்கள், வெளியேறும்போது எவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன, எத்தனை முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டார்கள் என்கிற எதுவித தெளிவும் இன்றி என்னால் அந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஏனென்றால் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட காலத்தில் நான் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. 1988 இற்குப் பின்னர் அங்கு வாழ்ந்ததுகூடக் கிடையாது. ஆகவே வெளியேற்றம் குறித்த சரியான பார்வையின்றி என்னால் அந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே சரிநிகரும் எந்தத் தணிக்கையும் இன்றி அதனைப் பிரசுரித்தது. பைரூஸுடன் அக்கட்டுரை பற்றி பகிர்ந்துகொண்டேன். உணர்ச்சி மேலீட்டால் கண்கலங்கிய அவன், அக்கட்டுரையினை எழுதியதற்காக எனக்கு நன்றி கூறினான். பின்னர் ஒருநாள் என்னிடம் வந்து எனது கட்டுரையினை அகதி என்ற பெயரில் வெளிவந்த முஸ்லீம்களுக்கான பத்திரிக்கை ஒன்றில் மீள் பிரசுரிக்க அனுமதியளிக்கிறாயா என்று கேட்டான். நானும் ஆமென்று கூறவே, அக்கட்டுரை மீளவும் பிரசுரமானது. இதனை அறிந்தபோது மலர்மன்னன் கொதித்துப் போனான். வெளியேற்றியது பிழை என்று உன்னால் எப்படிக் கூறமுடியும்? கிழக்கில் அவர்கள் எம்மை நடத்தும் முறை பற்றி நீ அறிந்திருக்கிறாயா? கொழும்பில் இருந்துகொண்டு, நீ நினைத்தபடி இப்படி எழுதியிருக்கிறாய் என்று கடிந்துகொண்டான். கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட அவனுக்கு 90 களின் ஆரம்ப காலப்பகுதியில் அங்கு இடம்பெற்ற தமிழ் மக்கள் படுகொலைகள், அவற்றில் முஸ்லீம் ஊர்காவற்படையினரின் பங்களிப்பு என்பன நன்கு தெரிந்தே இருந்தது. ஆகவே, நான் வெறுமனே புலிகளை விமர்சித்து எழுதியிருந்தது அவனுக்குக் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. எது எப்படியிருந்தபோதிலும், முஸ்லீம்களை வெளியேற்றியதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. பேரினவாதத்தில் இருந்து விடுபட போராடும் ஒரு சிறுபான்மையினம், தன்னிலும் சிறுபான்மையான இன்னொரு இனத்தை பேரினவாதம் போன்று நடத்துவது சரியாகப் படவில்லை. அதனாலேயே அப்படி எழுத நேர்ந்தது. ஆனால் வெளியேற்றத்தின்பின்னர் அவர்களின் அரசியல்த் தலைமைகளும், ஊர்காவற்படையினரும், சாதாரண முஸ்லீம்களில் ஒருபகுதியினரும் நடந்துகொண்ட விதம் இதுபற்றித் தொடர்ந்து நான் பேசுவதை நிறுத்தி விட்டது.
  13. அவுஸ்திரேலியாவில் வினோதம் : வீதியை ஆக்கிரமித்த சிவப்பு நண்டுகளால் போக்குவரத்து தடை ! 25 Oct, 2025 | 11:09 AM அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தேசியப் பூங்காவில் (Christmas Island National Park) வசிக்கும் இலட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் (Red Crabs), தங்களின் வருடாந்திர இனப்பெருக்கப் பயணத்தின் காரணமாகச் வீதிகளை ஆக்கிரமித்துள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடக்கும் ஒரு வினோதமான இயற்கை நிகழ்வாகும். இந்தச் சிவப்பு நண்டுகள் கிறிஸ்மஸ் தீவின் காட்டுப் பகுதிகளில் சிறிய குழிகளை அமைத்து வாழ்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், இனப்பெருக்கப் பருவம் வரும்போது, இலட்சக்கணக்கான ஆண் மற்றும் பெண் நண்டுகள் காட்டில் இருந்து வெளியேறி, கடற்கரையை நோக்கிப் படையெடுக்கின்றன. கடற்கரையில் ஆண் நண்டுகள் குழிகளை அமைக்க, பெண் நண்டுகள் அவற்றில் முட்டைகளை இட்டு சுமார் இரண்டு வாரங்கள் அடைகாக்கின்றன.நவம்பர் மாதத்தின் மத்தியில், முட்டைகளில் இருந்து வெளிவரும் குட்டி நண்டுகள் கடலுக்குள் செல்கின்றன. இவை கடல் அலைகளில் சுமார் ஒரு மாத காலம் தாக்குப்பிடித்த பிறகு, இளம் நண்டுகளாக மீண்டும் கிறிஸ்மஸ் தீவிற்குத் திரும்புகின்றன. தற்போது இனப்பெருக்கப் பயணத்தை மேற்கொண்டுள்ள நண்டுகள், தீவின் வீதிகளை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளதால், அந்த வழிகளில் மனிதப் போக்குவரத்து முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கிறிஸ்மஸ் தீவு தேசியப் பூங்காவின் பணிப்பாளர் அலெக்ஸா கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் நண்டுகளின் இந்த அற்புதமான பயணத்திற்காகத் தங்களால் முடிந்த அளவு வீதிகளில் போக்குவரத்தைத் தவிர்த்துக் கொள்கின்றனர். இது ஒரு அருமையான அனுபவம். சிவப்பு நண்டுகள் ஒருபோதும் எங்களுக்குத் தொந்தரவாக இருந்ததில்லை." என்று தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தின்போது நண்டுகள் பாதுகாப்பாகச் செல்வதற்காகத் தீவின் அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்கின்றனர். https://www.virakesari.lk/article/228623
  14. இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க. கடந்த காலங்களில் மருத்துவத்துறையில் இன்று இருப்பதுப்போல நவீன கருவிகள் அன்று இல்லை. எனவே நோயாளியின் நோய்க்கான காரணத்தை கண்டறிவது ஒரு சவாலான காரியமாக இருந்து வந்தது. பின்னர் எக்ஸ் ரே, ஈசிஜி, எம்ஆர்ஐ போன்ற தொழில்நுட்ப கருவிகள் வந்த பின்னர் மருத்துவர்களுக்கு நோயாளிகளின் பிரச்சனையை கண்டறிவது மிகவும் எளிதாவிட்டது. அதிலும் எம்ஆர்ஐயின் வருகைக்கு பின்னர் நோய்களை துல்லியமாக கணித்து அதற்கு தகுந்த மருத்துவ நடைமுறைகளை எடுக்க மருத்துவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது நம்முடைய அணிகலங்களை கழற்றுமாறு அங்குள்ளவர்கள் அறிவுறுத்துவார்கள். இது பலருக்கும் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் இதற்கு பின்னால் ஒரு மிக முக்கியமான பாதுகாப்பு காரணம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன காரணம் என்பதை இங்கு பார்ப்போம். எம்ஆர்ஐ கருவியானது உடலின் உள்ளுருப்புகள் மற்றும் திசுக்களின் கட்டமைப்பை எக்ஸ் ரேயின் உதவியில்லாமல் பதிவு செய்வதற்கான ஒரு செயல் முறையாகும். இந்த செயல் முறையில் எம்ஆர்ஐ ஸ்கேன் உயர்தர காந்தங்களை பயன்படுத்தி மிக அதிக சக்திவாய்ந்த காந்தப்புலங்களை இந்த கருவி ஏற்படுத்துமாறு வடிவமைக்கப்படுள்ளது. இந்த காந்தப்புலங்கள் மனித உடல் உள்ளுறுப்பகளின் உயர்த்தர முப்பரிமாண படத்தை உருவாக்க பயன்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் இந்த முப்பரிமாண படங்கள் உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் காயங்கள் அல்லது தேவையற்ற வளர்ச்சி இருக்கிறதா என்பதை தீர்மானிக்க மருத்துவர்கள் மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. இந்த எம்ஆர்ஐ கருவி எப்படி வேலை செய்கிறது என்றால், ஒரு உளுந்த வடையை நிற்க வைத்தது போல் ஒரு உள்ள அமைப்பில் நடுவே படுக்கை ஒன்று நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த படுக்கையில் படுத்திருக்கும் நபர் மெதுவாக உள்ளே நகர்த்தப்படுவார். எம்ஆர்ஐ உள்ளே உள்ள சக்திவாய்ந்த காந்த புல சக்தி ஸ்கேன் செய்யப்படும் ஒவ்வொரு திசுக்களின் புரோட்டானையும் வரிசைப்படுத்துகிறது. அதே நேரத்தில் ரேடியோ அதிர்வலைகள் இந்த புரோட்டங்களில் மின்சார சமிஞ்க்கைகளை உருவாக்கி அவற்றின் வரிசையை சிதறடித்துவிடுகிறது. இப்போது எம்ஆர்ஐயின் காந்த புலங்கலையும், ரேடியோ அதிர்வலையையும் நிறுத்திவிடுவார்கள். இதனால் உறுப்பின் புரோட்டான்கள் காந்தத்தன்மையை இழந்து தங்களது பழைய அமைவிடத்திற்கு திரும்பும். அவ்வாறு திரும்பும்போது புரோட்டான்கள் தங்களை சிதறடித்த ரேடியோ அதிர்வலைகளை வெளியில் அனுப்பும். இதை எம்ஆர்ஐ கருவியில் பொருத்தபட்டிருக்கும் ஒரு சென்சார் கிரகித்து அதனை கணினிக்கு அனுப்பும். கணினியானது சென்சார் அனுப்பிய ரேடியோ அலைகளை ஒருகிணைத்து அதனை முப்பரிமாண படங்களை தயாரித்து திரையில் காண்பிக்கும். எம்ஆர்ஐ கருவியின் முக்கிய பாகமாக இருப்பது அதன் சக்தி வாய்ந்த காந்தங்களாகும். இவை ஸ்கேன் செயல் முறையின் முக்கிய அங்கமாக இருக்கிறது. இந்த காந்தங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால் சுமார் 15அடி தூரத்தில் உள்ள உலோகத்தையும் ஈர்க்கவல்லது. காந்தங்கள் இந்த அதீத சக்திகொண்டதால் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் அறைக்குள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்போது புரிந்திருக்கும் ஏன் எம்ஆர்ஐ அறைக்குள் ஆபரணங்களை கழற்ற சொல்கிறார்கள் என்று. சிலர் எச்சரித்தும் அதை மதிக்காமல் இந்த ஆபரணங்களை அணிந்திருந்தால் என்னவாகும் என்றால் எல்லா ஆபரணங்களையெல்லாம் அந்த காந்தங்கள் வேகமாக இழுத்துக்கொள்ளும். எந்த அளவிற்கு இழுத்துக்கொள்ளும் என்றால் ஒரு வழிப்பறி கொள்ளையன் நகையை திருடுவதற்கு வேகமாக கழுத்திலிருந்து பிடுங்கிக்கொள்ளும் வேகமும் அதன் வேகமும் சமமாக இருக்கும். இதனால் காயம் ஏற்படும் சமயத்தில் மரணம் சம்பவிக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே அடுத்த முறை எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது சென்மெட் பார்க்காமல் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கழற்றி வைத்துவிட்டு உள்ளே செல்லவும். சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்
  15. ராஜரட்ணம் செய்தது சட்டப்படி குற்றம். அதுக்காக சிறையும் சென்று வந்தார். அவரின் உலகத்தில் எல்லோரும் அவர் செய்த உள்ளக விளையாட்டைச் செய்கிறார்கள். மாட்டுப்படும் வரை செய்வார்கள். அவரின் உலகில் இரண்டே வகை ஆக்கள்தான். ஒருவன் மாட்டுப்பட்டவன். மற்றையவன் மாட்டுப்படாதவன். அவர்கள் மத்தியில், இது ஒரு பிரபல்யமான சுலோகம். சட்டத்தின் முன் எல்லோரும் குற்றவாளிகள்தான். Billions என்று ஒரு தொலைக்காட்சித் தொடர் உள்ளது. சந்தர்ப்பம்/வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்.
  16. செல்லத்துரை தவமணி அம்மையாரின் 31ஆம் நாள் ஞாபகார்த்தமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது 25/10/25. சங்கானையை பிறப்பிடமாகவும் சுழிபுரம் கிழக்கு மற்றும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் செல்லத்துரை தவமணி அம்மையாரின் 31 ஆம் நாள் ஞாபகார்த்தமாக மகன் திரு செல்லத்துரை செல்வநேசன் அவர்கள் 30000 ரூபாவிற்கு இயலாமையுடைய 14 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேருக்கு அரிசி, பருப்பு, சோயாமீற் என்பவற்றை வழங்கி உதவியுள்ளார். திரு செல்லத்துரை செல்வநேசன் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எமது புலர் அறக்கட்டளை சார்பாகவும் விசேடதேவையுடைய பிள்ளைகளின் குடும்பங்கள் சார்பாகவும் எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறோம். இப்பணிகளைச் செய்ய இணைப்பாளராக செயற்பட்ட திருமதி நவறஞ்சினி குமார்(பிள்ளை அக்கா) அவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். பொருட்களை வழங்கிய முதியோர் சங்கத் தலைவர் திரு சிவரஞ்சன் அவர்களுக்கும் முதியோர் சங்க கட்டடத்தை பயன்படுத்த அனுமதி வழங்கிய முதியோர் சங்க நிர்வாகிகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். கலந்து கொண்ட நிர்வாகிகள் பொருட்களை வாங்கித் தந்த மதிகிருஸ்ணா லாண்ட்மாஸ்ரரில் எடுத்து வந்து உதவிய யது ஆகியோருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும். நன்றி வணக்கம். ஒளிப்பதிவு திரு இ.பரணீதரன்.
  17. வழமையாக முதலாவதாகவரும் நாட்டுக்கும் 4 வதாகவரும் நாட்டுக்கும் இடையில் நடக்கும் அரை இறுதிப் போட்டி, முதலாவதாக நடைபெறும். இம்முறை முதலாவது போட்டி இங்கிலாந்துக்கு எதிராக தென்னாபிரிக்காவின் போட்டி. இரண்டாவது போட்டி இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான போட்டி. நல்லகாலம் நான் முதலாவது, இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் நாடுகள் எவை என்று தனித்தனி கேள்விகள் கேட்கவில்லை. இறுதி போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் எவை என்று கேட்டிருந்தேன். வழமைபோல இந்தியா அணிக்கு சார்பாகவே இம்முறையும் போட்டிகள் நடைபெறுகிறது. மும்பையில் இம்முறை 5 போட்டிகள். முதலாவது போட்டி இலங்கை எதிர் வங்காளதேசம். அடுத்த 4 போட்டிகளும் இந்தியா அணி விளையாடுவதற்கு ஏற்ப அமைத்து இருக்கிறார்கள். இந்தியாவின் சூழல் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் மும்பாய் மைதானம். நேற்று ஐசிசி இணையத்தில் மும்பை மைதான அரை இறுதி போட்டியில் ஆரம்ப சுற்று போட்டியில் இரண்டாவது, மூன்றாவதாக வரும் அணிக்கு இடையிலான போட்டி என்று இருப்பதை பார்த்தேன். இன்று அவுஸ்திரேலியா எதிர் இந்தியா என்று இருக்கிறது. பலம் பொருந்திய அவுஸ்திரேலியாவை மும்பையில்தான் வெல்ல முடியும் என சில நாட்களுக்கு முன்பு சில இந்தியா ஊடகங்களில் செய்தி வாசித்திருந்தேன்.
  18. அததெரண கருத்துப் படம்.
  19. கனடா, மொரிஸியஸ் போன்று இதுவும் ஒரு மைல்கல்லின் தொடக்க புள்ளி.
  20. போட்டிக்கு நாமும் தொடங்கணுமில்ல. இது தான் பொருளாதார படிப்பு. படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.
  21. போரைச் சந்தித்த ஒரு நாடு அல்லது ஓர் அரசானது போரின் தோற்றுவாய்க்கான தீர்வை முன்வைத்து அனைத்துத்தரப்பினரையும் ஒரு நேர்கோட்டிற் கொண்டுவராதவரை எப்படியான ஆட்சியை செய்தாலும் அரசியல் வறட்சியே நிலவும்.. அதிலும் பொதுவுடமைச் சிந்தாந்த கோட்பாடுடையோரின் ஆட்சிகள் ஒருவகை மறைநிலை எதேச்சதிகார ஆட்சிகளாகவே இருந்துள்ளன. மிகமோசமான பொருண்மிய வீழ்ச்சியைச் சந்தித்த ஈழத்தீவில் முதல்முறையாக பொதுவுடமைச் சிந்தாந்தக் கோட்பாடுடையோர் ஆட்சியமைத்துள்ள அரசாக உள்ளநிலையில் அவர்கள் ஒருநிலையெடுப்பதற்குள் ஆட்சிக்காலம் முடிவடைந்துவிடலாம். மாறிமாறி ஆண்ட இருதரப்புகளும் தமிழினத்தை அழிக்கும் நோக்கிலே ஒருவகைப் படையப் பலப்பிரயோக ஆட்சியை (இராணுவ ஆட்சி)கடந்த அரைநூற்றாண்டாகச் செயற்படுத்தின. அதனையே இன்றைய அரசும் தொடர்கிறது. அங்கே பயின்ற படைகளும், சிவப்புக்கொடிக்குள் மறைந்துள்ள யே.வி.பி என்ற என்.பி.பி அரசும் தமது முன்னாள் இன்னாள் எதிரிகளை ஒடுக்க பல்வேறு தந்திரங்களைக் கடந்த ஓர் ஆண்டாகச் செயற்படுத்திவருதை காணக்கூடியதாக உள்ளது. அதிலே ஒரு வேறுபாட்டையும் காணமுடிகிறது. சிலரைக் கைது, மருத்துவவசதி என்று உயர்பிரிவிலும், சிலரை உயிர்பிரிப்புப் பிரிவிலும் என அரச நிகழ்ச்சிநிரலோடு நகர்வதாகவே தோன்றுகிறது. ஆனால், மகிந்த தரப்பைக் கைவைத்து இருப்பதையும் இழப்பான் ஏன் என்ற ஒரு அச்சநிலையோடு ஆட்சியைத் தொடர்கின்றனர். அனுர அரசும் என்னதான் சமத்துவம் சமதர்மம் என்றாலும் இனத்துவநிலையில் இருந்து சிந்திப்பதையே காணமுடிகிறது. அதற்கான அளவுகோலாக வடமாகாணத்திலுள்ள தையிட்டியில் தனியாருக்கு உரித்துடைய காணிகளை அத்துமீறி அடாத்தாகப் பிடித்து அமைக்கப்பட்டுள்ள விகாரை விடயத்தை அனுர அரசு கையாளும் தன்மையே போதுமானது. இன்னுமொருபடி மேற்சென்று சர்ச்சைக்குரிய விகாராதிபதியிடம் ஆசீர்வாதம்வேறு பெற்று அதை உறுதிப்படுத்தியது என்பன சான்றாகும். இனமோ, இனப்பிரச்சினை என்ற ஒன்றோ இல்லை. பொருண்மியப் பிரச்சினையே உள்ளது. எனவே அபிவிருத்தி அரசியலைச் செய்தால் தமிழரது பிரச்சினை தீர்ந்துவிடும் என்று பொய்களை அவிட்டுவிட்டு பொருண்மிய உதவிகளை வெளிநாடுகளிடம் பெற்றுச் சிங்களப்பகுதிகளின் மேல் அபிவிருத்திக்;குவிப்பைப் பல பத்தாண்டுகள் செய்ததுபோல் அனுர அரசும் செயற்பட்டு வருவதை காங்கேசன்துறைத் துறைமுக அபிவிருத்தி மீதான அக்கறையின்மை தெளிவுறக்காட்டுகிறது. எனவே, துணிவுடைய அரசுத்தலைமையும், நாட்டின் முதன்மைப் பிரச்சினையான இனப்பிரச்சினையைத் தற்துணிவோடு எதிர்கொள்ளும் ஆளுமையும் உள்ள ஒரு அரசுத் தலைமையால் மட்டுமே ஈழத்தீவை மீட்டெடுக்க முடியும். ஈழத்தீவை நிலையாக்கக் குறைந்தபட்சம் உள்ளக சுயநிர்ணய உரிமையைக் கொண்ட கூட்டாட்சி முறையொன்றை உளத்தூய்மையோடு நிறுவுதலே ஒட்டுமொத்த ஈழத்தீவினது மீட்சியாகவும் ஒரு திறந்தநிலைச் சட்டத்தின் ஆட்சியாகவும், தெற்காசியவட்டகையில் உயர்நிலைச் சனநாயக விழுமியங்களைக் கொண்ட சிறந்த மக்களாகவும் நாடாகவும் அமையும். அடிப்படை மாற்றங்களைச் செய்யாது தற்போதுள்ள அரசியற் சட்டம் ஒர் அரசுப்பொறியாக இல்லாது மக்களை அழிக்கும் ஆட்சிப்பொறியாகவே இருக்கும். அனாமதேயக் கொலைகளுக்கும் பஞ்சமிருக்காது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  22. பகிர்வுக்கு நன்றி நன்னி. உங்கள் இரண்டாம் பதிவில் சொல்லி இருப்பது போல், தற்போது ஒரு MSP யால் பிரேரணை பாராளுமன்றிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. அதை அப்படியே பாராளுமன்றும் பிரசுரித்துள்ளது. இதை மேலும் சில உறுப்பினர்கள் ஆதரிக்கிறனர். இது 5 படிமுறையில் 5 இல் 1. அடுத்த படிமுறை பிரேரணைக்கு ஆதரவு திரட்டல், போதிய ஆதரவு திரட்டியதும் தனிநபர் பிரேரணையாக விவாதம், பின் போதிய ஆதரவு இருப்பின் பிரேரணை, பாராளுமன்றின் தீர்மானமாக நிறைவேற்றல் தேவைப்படின் தீர்மான அடிப்படையில் நடவடிக்கை. இந்த 5 இல் 4 வது படியை தாண்டினால்தான் - ஸ்கொட்டிஷ் பாராளுமன்றம் இதை அங்கீகரித்தது என பொருள்கொள்ள முடியும். அப்படி அங்கீகரித்தாலும் அதற்கு சட்ட வலு இல்லை ஆனால் அரசியல் வலு உள்ளது. ஆனால் இது மிக நல்ல ஆரம்பம். தமிழ் அமைப்புகள் இந்த எம் எஸ் பிகளை சூழ்ந்து மேலும் ஆதரவு நல்க வேண்டும். இது நடந்து 2 வாரம் ஆகியும் இப்போது வரை யாழில் கூட பதிவாகவில்லை. அறியதந்தமைக்கு நன்றி.
  23. நீங்கள் சொல்வதும் ஒரு காரணம் எதிர்ப்பது என்று முடிவெடுத்துவிட்டால் காரணங்கள் பல வெளிவரும் இங்கே மாணவர்களோ அல்லது பெற்றோரோ எதிர்ப்பை வெளிக் கொண்டு வரவில்லை என்பது கருத்தில் கொள்ளவேண்டிய ஒரு விடையம் மாணவர்களின் கல்வியை அரசியலாக்கும் முனைப்பில் இந்த ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள் ஈடுபடுகின்றார்கள்
  24. முத்தமிடும் ஒலிவ் மரங்கள் ...........! 😍
  25. மிகவும் அருமையான பதிவு நன்னிச்சோழன்…. இப்படியான பதிவகள், தமிழரின் மதிஙுட்பங்களை ஆவணப்படுத்தும் ஒரு பதிவு. கிரேக்கர், ரோமர், எகிப்தியர் மாதிரி தமிழரின் பழைய படைப்புகள் காட்சிப்படுத்தபடவில்லை எல்லாம் அழிக்கபட்டுவிட்டது. இப்படியான பல பதிவுகளை பதிவிடுங்கள்….
  26. இதில் முக்கியமாக யூடிப்பஸ் விசாரிக்கப் படவேண்டும்...20 கோடி சேர்த்து 9 கோடிக்கு எவ்வாறு வீடு கட்டமுடியும் ...இதைவிட அசையும் அசையாச் சொத்துக்கள் பல...குடும்பம் முழுவதுமே ஆடம்பர வீடிகட்டி அநியாய செலவுசெய்து பார்ட்டியும் ...உலாத்தலு ம் செய்வதும் ..கண்கூடு...இப்போ ஏதோபயத்தில் அவசரம் அவசரமாக தொழில் கூடங்கள் அமைப்பதும் இந்தப் பயத்தில் தானோவென்று சிந்திக்க வைக்கிறது...இது எரிச்சல் பதிவுஅல்ல...மக்களை மூடர்களக்கி செய்யும் அட்டூழியத்திற்கு எதிரான ஆதங்கம்
  27. இது கூகுள் குரோமை ஒத்த வடிவமைப்புடன் உள்ளது. வேகமும் அதிகம். சாட்ஜிபிடி அதிகமாகப் பாவிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும். முதலில் திறக்கும்போது உங்களது கணணியிலுள்ள உலாவியின் தரவுகள யாவற்றையும் எடுத்துக் கொள்ளவா, நீங்கள் பாவிக்கும் உலாவியிலுள்ள தடயங்கலை ஆராய்ந்து உங்களைப் பற்றி அறிந்து கொள்ளவா என்று கேட்கிறது. அநேகமாக கூகிள் உலகின் ஒற்றையாட்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
  28. வினா 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது என்று கேட்டிருந்தேன். பாகிஸ்தான் அரை இறுதிபோட்டிக்கு தெரிவாகாத காரணத்தினால் இனி எல்லாப் போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் ( 20 ஓவராக குறைக்கப்பட்ட போட்டியில்) 7 விக்கெட் இழப்புக்கு 87 ஒட்டங்கள் பெற்றது. ஓவர்கள் குறைக்கபடாமல் இருந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளை இழந்து 114 ஒட்டங்களை எடுத்துள்ளது. 11 போட்டியாளர்கள் பாகிஸ்தானை சரியாக தெரிவு செய்து இருந்தார்கள். 1) அகஸ்தியன் - 55 புள்ளிகள் 2) ஏராளன் - 50 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 50 புள்ளிகள் 4) ரசோதரன் - 50 புள்ளிகள் 5) சுவி - 48 புள்ளிகள் 6) கிருபன் - 48 புள்ளிகள் 7) புலவர் - 48 புள்ளிகள் 8) நியூபலன்ஸ் - 48 புள்ளிகள் 9) வீரப்பையன் - 47 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 44 புள்ளிகள் 11) வாதவூரான் - 44 புள்ளிகள் 12) கறுப்பி - 44 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 42 புள்ளிகள் 14) வசி - 40 புள்ளிகள் 15) வாத்தியார் - 38 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 26, 32, 37, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 59).
  29. பைரூஸ் இடம் பெயர்ந்து வாழ்ந்த இடம் நுரைச்சோலை என நினைக்கிறேன். வீரகேசரியில் கவிதைகள் எழுதுவார். பண்பாண மனிதர். இப்போ எப்படி இருக்கிறார் என் அறிய ஆவல்.
  30. யாழ்ப்பாணத்தை சென்றடைந்த சூரன் adminOctober 22, 2025 பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து , சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து இன்றைய தினம் புதன்கிழமை சூரன் என்ற இளைஞன் யாழ்ப்பணத்தை சென்றடைந்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட 28 வயதுடைய சூரன் என்ற இளைஞன் இலங்கையின் மகத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு பொறிமுறையாகவே இந்த துவிச்சக்கர வண்டி பயணத்தை முன்னெடுத்து யாழ்ப்பாணத்தை சென்றடைந்ததாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து தனது பயணம் குறித்து மேலும் தெரிவிக்கையில் – “நான் பாரிஸில் இருந்து கடந்த செப்டம்பர் 01ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜார்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற பல நாடுகள் வழியாக சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் பயணித்து இன்று எனது பூர்வீக இடமான நல்லூரை வந்தடைத்தேன். யாழ்ப்பாணம் தனது பெற்றோரின் சொந்த ஊர் என்பதால் எனது பயணத்தின் இறுதி இலக்காக யாழ்ப்பாணத்தின் நல்லூர் கோயிலைத் தேர்ந்தெடுத்திருந்தேன். அத்துடன் இலங்கை ஒரு நாடு மட்டுமல்ல, என் பூர்வீகத்துடன் தொடர்புபட்ட உன்னத உணர்வு. எனது நோக்கம் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவது மட்டுமல்லாமல்ல யாழ்ப்பாணத்தின் கலாசார முக்கியத்துவத்தை உலகிற்கு வெளிப்படுத்துவதும் ஆகும். மேலும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்துடன் வலுவான உணர்வு மற்றும் கலாசார உறவுகளைப் பேணுகின்ற உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை உருவாக்குவதுமாகும். நான் பாகிஸ்தானுக்கும் சென்று வர முயற்சித்தேன். ஆனால் அந்நாடு அனுமதி மறுத்திருந்தது. அதன்பின் இந்தியா சென்று நாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் காங்கேசன்துறையை வந்தடைந்து எனது இறுதி நல்லூரை வந்தடைந்துள்ளேன் இங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கப்பெற்றது. அத்துடன் நான் இந்த பயணத்தில் கரடுமுரடன சவால்களை எதிர்கொண்டாலும் அந்த நாடுகளின் அரசுகளும் மக்களும் எனக்கு மிகுந்த வரவேற்பையும் ஒத்துழைப்புகளையும் தந்திருந்தனர். அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை கூறுகின்றேன் என தெரிவித்திருந்தார். அதேநேரம் சுமார் 40 வருடங்களுகு முன்னர் பெற்றோர் பிரான்சில் குடியேறிய நிலையில் சூரன் சரளமாக தமிழில் தனது உணர்வுகளை பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2025/221853/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.