Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    19301
    Posts
  2. விளங்க நினைப்பவன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    4383
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20123
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    88182
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/04/26 in all areas

  1. உக்ரைனை நீ வச்சுக்கோ!தாய்வானை அவன்வச்சிருக்கட்டும்!!வெனிசுலாவை நான்வச்சிருக்கிறன். பட் இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பேக்கரி டீல் ஓவர்.
  2. நீ நடத்து தல. உக்ரேனை புட்டின் ஆக்கிரமிக்கமுடியும்…. வெனிசுலாவுக்குள் பூந்து அதிபரையே தம்பர் அபேஸ் பண்ண முடியும் எண்டால்… நீ மட்டும் என்ன தக்காளி தொக்கா தல? தைய்வான் மட்டும் இல்ல தல, இந்த அவுஸ்ரேலியா, நியூசிலாந்த கூட நீ சீனாவோட இணைச்சுகலாம்…தப்பே இல்லை. பிகு இதெல்லாத்தையும் பார்த்துட்டு நம்ம ஜி அகண்ட பாரத் ந்னு இன்னொரு வாட்டி கிளம்பி, மூணு ரபேலை காவு கொடுக்காத வரை ஓக்கேதான்😂
  3. அதிரடி 1. சிங்கள கட்சியை எதிர்த்து பொது வேட்பாளராக களமிறங்கிய அரிய நேந்திரன் தமிழரசுக்கட்சியிலிருந்து அதிரடி பதவி நீக்கம். அதிரடி 2. அரசுக்கு சார்பாக வாக்களித்ததால் சிறிதரன் கட்சியிலிருந்து பதவி நீக்கம். ஆனால் கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக, கட்சியின் ஒப்புதலின்றி, அரசுடன், வெளிநாட்டு தூதுவர்களுடன் இரகசிய பேச்சுக்கள், நகர்வுகள், முடிவுகள் மேற்கொண்ட, தமிழ்தேசியத்துக்கெதிரான கருத்துக்கள் சொன்ன, தனக்கென பதவிகளை உருவாக்கிக்கொண்ட ,பதவியை இறுக பிடித்துக்கொண்டுள்ள சுமந்திரன் கட்சியின் பொது செயலாளர். தமிழரசுக்கட்சி தன் முடிவை நோக்கி பயணிக்கிறது. சுமந்திரன் அடிக்கடி சொல்லுவார், தமிழ்த்தேசியம், தமிழரசு என்று கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் இருப்பதால் சிங்களவர் கோபம் அடைகின்றனராம், பயப்படுகின்றனராம். அவற்றை இல்லாமல் செய்வதற்காகவே கட்சிக்குள் இறக்கப்பட்டார். வந்த காரியம் ஓரளவு நிறைவேறிவிட்டது. தன் இனம் சார்ந்த பெயரை தமிழ் மக்கள் வைப்பதற்கு சிங்களம் ஏன் வெறுக்க வேண்டும்? அதனால் சிங்களத்திற்கு என்ன பாதிப்பு? அதாவது தமிழர் இந்த மண்ணின் குடிகள் இல்லை என்று நிறுவுவதற்கு இவைகள் தடையாக உள்ளனவோ? தமிழ் என்று சொல்லக்கூடாது என்று கூறு அரசுக்கு துணை போகிற சுமந்திரன், எப்படி தமிழ் மக்களின் பிரதி நிதியாகவோ அல்லது அவர்கள் சார்பாக முடிவெடுக்கும் ஒருவராகவோ இருக்க, செயற்பட முடியும்? இருந்தாலும் சுமந்திரனின் அரசியல் அஸ்தமனமாகிறது.
  4. வெனிசுலா எந்த விதத்திலும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் இல்லாத நாடு. இருந்தும் அந்த நாடு மீது அமெரிக்கா ஆக்கிரமித்தது கண்டிக்க வேண்டிய செயல். கேவலம்.....அமெரிக்கர்கள் வீட்டுக்கு 5 வாகனங்கள் வைத்திருப்பவர்களின் எரிபொருள் தேவைக்காக......எண்ணை வளம் மிக்க வலிமை இல்லாத நாட்டை ஆக்கிரமிப்பது கேவலத்திலும் கேவலம். உக்ரேன் போரை இலங்கை ஒப்பிட்டது முடிந்து.....இனி வெனிசுலா பிரச்சனையையும் ஈழ பிரச்சனையோடு ஒப்பிடாத வரைக்கும் சந்தோசம்.
  5. ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் அவர்களுக்கும், எனக்கும் இன்று ஒரே விடயம் பற்றியே கவலை என்பதும், அத்துடன் நாங்கள் இருவரும் சிறிது நேரத்திலேயே இதை மறந்து விட்டு, எங்களின் அடுத்த வேலையை பார்க்க போய் விடுவோம் என்பதும் நம்ப முடியாத ஒற்றுமையாக இருக்கின்றது. எத்தனை எத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆக்கிரமிப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஒவ்வொரு ஆக்கிரமிப்பாளர்களும் இன்னும் அதிக அழிவுகளையும், அவலங்களையும் அன்றி வேறு எதையும் ஆக்கிரமிக்கப்படும் நாடுகளுக்கும், சமூகங்களுக்கும் வழங்குவதில்லை. அந்த நாடுகளின் வளங்களையும், செல்வங்களையும் சுரண்டுதல் அன்றி, இங்கு வேறு எதுவுமே ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கம் அல்ல. ஆக்கிரமிப்பை அந்த நாட்டு மக்களே விரும்பினார்கள், அந்த நாட்டின் அதிபர் ஒரு சர்வாதிகாரி, அந்த நாடு போதைப் பொருட்களை உற்பத்தி செய்கின்றது, அந்த நாட்டினால் எங்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து என்றெல்லாம் காரணங்களை இட்டுக் கட்டிக் கொண்டே ஒரு வலிய நாடு ஒரு மெலிய நாட்டை அடித்துப் பிடிக்கலாம் என்னும் மன்னர் ஆட்சி காலம் நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அடிமைத்தளையும், அடக்குமுறையும் சொல்லொணா துன்பங்கள். ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்கும் ஒரேயொரு வாழ்வையும் இவை அழித்துவிடுகின்றன. இவ்வாறான ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக குரல் கொடுப்பதும், இவை எவ்வடிவில் வந்தாலும் அவற்றை ஆதரிக்காமல் விடுவதும், ஒவ்வொரு சாதாரண மனிதனும் நிச்சயம் செய்ய வேண்டியவை. ஐநா பொதுச் செயலாளரே அவ்வளவு தான் செய்கின்றார், அவரால் கூட அவ்வளவு தான் செய்யமுடியும்.
  6. ஈழத்தமிழர்கள் போராட்ட வரலாறு தமிழ்நாட்டில் பேசுபொருள் ஆக்கப்படக்குடாது என்று திட்டமிட்டு தமிழர்கள் தம் வரலாறு இருக்ககூடாது என்று திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யும் அதிகாரத்தில் இருக்கும் ஒரு கூட்டத்தால் திரையரங்குகள் வழங்கப்படாமல் திட்டமிட்டு புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ள சல்லியர்கள் திரைப்படத்தை உலகெல்லாம் பரந்து வாழும் இந்திய, ஈழத்தமிழர்கள் மற்றும் உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்து வெற்றிபெறச்செய்து நம்சக்தியை காட்டுவோம்.. இதற்கு நாம் கொடுக்கும் ஆதரவுதான் இனிமேல் இன்னுமொருவர் எமது வரலாற்றையும் தமிழர்கள் வாழ்வியலையும் பேசும்படங்களையும் எடுக்க வரும்பொழுது நம்பிக்கையையும் ஊக்கத்தைய்யும் துணிவையும் தரும்.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பகிர்ந்துள்ள ottp தாலத்தில் சென்று பார்த்து எம் ஆதரவை கொடுப்போம்.. தமிழரை, தமிழை பேசுபவர்களை வளர்த்துவிடுவோம்..
  7. ஒரு சிலர் தடம்புரள்வது என்பது வழமையான ஒன்று. இப்படி பார்த்தால் கொசாவோ வாக்கெடுப்பு நடந்திருக்காது. கிழக்கு திமோர் வாக்கெடுப்பு நடந்திருக்காது... தென் சூடான் வாக்கெடுப்பு நடந்திருக்காது. ஏன் தென்னாபிரிக்கா விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றிருக்காது. அல்ஜீரியாவில் பிரான்ஸ் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்திருக்காது. ஆக நாம் எமது தார்மீக உரிமைகளையும் கோரிக்கைகளையும் தொடர்ந்து முன்னிறுத்தாமல்.. சர்வதேசத்திடம் இதைச் செய் அதை செய் என்று கோரி நிற்க முடியாது. எல்லா நாட்டிலும் எல்லா இனத்திலும் கோடரிக்காம்புகள் உண்டு. அவற்றை விஞ்சி தான் எல்லா உரிமைப் போராட்டங்களும் வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஆயுதப் போராட்டம் தோற்ற நிலையிலும்.. பல போராட்டங்கள் தொடர் உரிமைக்குரலால் வெற்றி பெற்றதே யதார்த்தம். எமது ஆயுதப் போராட்டம் தேவையான அளவுக்கு எமது உரிமைக்குரலை சர்வதேச மயப்படுத்தி இருக்குது. ஆனாலும் தொடர்ந்து நாம் எமது உரிமைக்குரலுக்கு அதற்கான நியாயத்திற்கு முன்னுரிமை வழங்கி சர்வதேசத்தின் முன் தொடர்ந்து எம்மை முன்னிறுத்தாமல்.. எமக்கான உரிமையை தேச விடுதலையை சாத்தியமாக்க முடியாது. தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் எப்போதையும் விட இப்போது இன்னும் இன்னும் முன்னிறுத்த வேண்டியதும் அதை தொடர வேண்டியதும் மிக அவசியமாகும்.
  8. கீழ்கண்ட திரியில் ஆலோசித்து ஏற்று கொண்ட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான திரி. பிகு இதை கேணல் சங்கர் ஞாபகார்த்த அடிப்படை வசதி திட்டம் என பெயர் சூட்ட விரும்புகிறேன்ழ் புலத்தில் மிகபெரிய வசதி வாய்ப்பை உதவி விட்டு நாடு திரும்பிய முதலாவது வான்படை சிறப்புத்தளபதி கேணல் சங்கர் பெயரலால் இதை செய்வதில் அனைவரும் உடன்படுவீர்கள் என நம்புகிறேன். மாற்று கருத்து இருப்பின் தெரியப்படுத்தவும்.
  9. 🤣 புட்டின் ஒரு நம்ப தகாதவர் என்ற உண்மையை முதலே விளங்கி கொண்ட அந்த அறிவுஜீவிகள் யார் புட்டினின் ஈழ தமிழ் காதலர்கள் ஆனால் காதலனின் நாட்டின் பக்கம் தலை கூட வைத்து படுக்க மாட்டார்கள் மேற்குலகநாடுகளில் விரும்பி வாழ்பவர்கள்
  10. Sri Lanka’s Ambassador to Cuba, Sarath Dissanayake who is concurrently accredited to the Bolivarian Republic of Venezuela, presented his Letter of Credence to President of Venezuela, Nicolas Maduro Moros at a simple but elegant ceremony at the President’s Office in Caracas on 2nd October 2013. Earlier in the day, Ambassador handed over a copy of Credentials to Vice Foreign Minister of Venezuela, David Velasquez Caraballo at the Foreign Ministry following a luncheon hosted by the latter for the newly accredited envoys to Venezuela. During a brief exchange of views and pleasantries with President Maduro, Ambassador Dissanayake conveyed President Mahinda Rajapaksa’s sincere greetings and warm wishes to President Maduro and the people of Venezuela. Recalling the deep rooted friendship and understanding nurtured between the late President Hugo Chavez and President Rajapaksa, Ambassador Dissanayake emphasized the commitment of Sri Lanka to build up even closer relations with Venezuela based on mutual trust, respect and shared values. President Maduro, on his part commended President’s Rajapaksa’s steadfast and visionary leadership and also Sri Lanka’s post-conflict progress and developments that ushered in a new era for all Sri Lankans. He also noted Venezuela’s firm resolve to further strengthen multifaceted ties and cooperation in all areas of interest with Sri Lanka for mutual benefit. http://www.mfa.gov.lk/images/stories/cuba200ara.jpg The Venezuelan President extended his best wishes to President Rajapakse and the people of Sri Lanka for continued happiness, wellbeing and progress. Ambassador Dissanayake conveyed his sincere gratitude to President Maduro for the warm welcome and opportunity to meet him and present Credentials. During his short stay in Caracas, Sri Lanka’s Ambassador took the opportunity to meet with few other Venezuelan officials and discussed Sri Lanka - Venezuela relations and issues of interest and concern to both countries. During discussions he also emphasized the significance of the upcoming Commonwealth Heads of Government Meeting (CHOGM) scheduled to be held in Sri Lanka from 12th-17th November 2013 and sought Venezuela’s participation at the Commonwealth Business Forum (CBF) which would bring together Heads of Government, Ministers and top business leaders from around the world including over a thousand delegates. Embassy of Sri Lanka Havana, Cuba 06th October 2013
  11. வெனிசுலாவில் அமெரிக்கா செய்வது பச்சை காடைத்தனம். இதை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் ஐரோப்பா, யூகே, கனடா, அவுஸ், நியூசிலாந்த் வெளியிட்டுள்ள அறிக்கைகள் சுத்த பயந்தாங்கொள்ளி தனம். இரெட்டை நிலைப்பாட்டின் உச்சம். அமேரிக்கா போதை பொருள் கடத்தல் என சொல்வது பொய் சாட்டு. அது உண்மை எனிலும் கூட… ஒரு நாட்டின் தலைவரை இன்னொரு நாட்டின் உள்நாட்டு சட்டத்துக்கு அமைய, மற்றைய நாட்டில் புகுந்து தூக்கி வந்து வழக்கு போடுவது…. ஐநா சாசனத்தை மீறும் செயல்… சர்வதேச சட்டத்துக்கு முரணானது…. நிச்சயமாக இது ரஸ்யா, சீனா வுக்கு மட்டும் அல்ல அகண்ட் பாரத் கனவில் இருக்கும் சங்கிகளுக்கு கூட எதிர்காலத்தில் இன்னொரு நாட்டில் அடாவடி செய்ய ஒரு ப்ளூ பிரிண்ட்தான்.
  12. செயற்கை நுண்ணறிவை பாவித்து ஒரு சேனல் இனித்தான் செய்யலாமா என்று யோசிக்கிறேன். திறந்ததும் அறிவிக்கிறேன். சப்ஸ்கிரைப் பொத்தான் பெல் பொத்தானை சொடுக்கி எல்லாரும் இணைப்பு எடுத்திடுங்கோ.
  13. இதைத்தான் உக்ரேன் போர் ஆரம்பித்த நாளில் இருந்து எழுதுகிறேன். வல்(லூறு) அரசுகள் எப்போதும் வல்லூறுகளே. இதில் நாம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களை ஆதரிப்பது மட்டுமே எடுக்க கூடிய ஒரே ஒரு நியாயமான நிலைப்பாடு. இதை சொன்னால், புட்டின் மீதுள்ள அதீத காதலில், அல்லது மேற்கு வெறுப்பில் ஒரு பகுதியை மேற்கின் ஆதரவாளர் என பெயிண்ட் அடித்து, ரணகளம் பண்ணி விட்டார்கள்😂.
  14. பாவம் கிந்தியாவுக்குத்தான் பேக்கரி டீல் போடவும், வீரம் விண்ணானம் காட்டவும், வச்சுக்கொள்ளவும் ஒன்றும் இல்லை போல.
  15. சரி பிழைக்கு அப்பால் - விசேட இராணுவ நடவைடிக்கையை அமெரிக்கா 2 மணி 30 நிமிடத்தில் முடித்துள்ளது. ரஸ்யா உக்ரேனில் ஐந்து வருடமாக வைச்சு தாளிப்பதை போல அல்லாமல்😂. அமெரிக்கா போல் அல்ல, புட்டினை நம்பினோர் கைவிடப்படுவதில்லை 😂
  16. இந்த உலகில் ''இறையாண்மை'' என்று ஒன்று உள்ளதா? அப்படியிருப்பதாக இருந்தால் ஆக்கிரமிப்பும் குடியேற்றவாதமும் நிறைவடைந்த 50க்குப் பிற்பட்ட உலக சூழலில் இனங்களின்(தனித்துவம்) சுயநிர்ணயம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். தமிழீழம் முதல் காசா வரையான அழிவுகளும், ஈராக், உக்ரேன் முதல் வெனிசுவேலா வரையான ஆக்கிரமிப்புகள் நடைபெற்றிருக்குமா? பாபர் மசூதி இடிப்பு, காஸ்மீரின் தனித்துவ உரிமைகள் மறுப்பு மற்றும் சட்டநீக்கம் எனப் பல்தேசிய இனங்களின் உரிமை மறுப்பு, காலிஸ்தான் உரிமைப்போராட்ட அழிப்புப் போன்றனவும் தொடர்கின்றன. யூகோஸ்லாவியாக்காவைக் கையாண்டது ஒரு விதம். இலங்கையை மற்றும் இஸ்ரேலைக் கையாள்தல் ஒருவிதம் எனத் தத்தமது தேவைகளும், கொள்ளையிடத் தேவையான வளங்களுமே சுயநிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் தீர்மானிக்கின்றன. மேற்கோ கிழக்கோ வளச்சுரண்டலுக்கான போட்டியில் ஒருவரை ஒருவர் மிஞ்சியோரல்ல. ஆனால், அழிவது என்னவோ அப்பாவி மக்களே. சனநாயகமென்ற போர்வையுள் நின்று ஆக்கிரமிப்பையும், அப்பாவி மக்கள் மீதான படுகொலைகளையும் புரிவோர் இறுதிவரை அரச சுகபோகங்களை அனுபவித்து அரவசவாழ்க்கையை வாழ்ந்து அரசமரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டுவிடுகின்றனர். அதற்கும் மக்களின் வரிப்பணமே செலவாகிறது. சீ** இந்த வெட்கம் கெட்ட வாழ்வுக்கு எத்தனை பந்தா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வேறு. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  17. உக்ரேன் நாட்டின் இறையாண்மையை மீறி புட்டினால் ஆக்கிரமிக்கமுடியும் என்றால் ஏன் மற்றவர்களால் முடியாது
  18. மன்னிக்கவும் ...நீங்கபுதிய கனடா யூடியூப்காரரோ....சிரிக்க மட்டும்
  19. 4 மீன்பிடி கப்பலுக்கு குண்டுபோட்டு கொஞ்ச போதைப் பொருளை எடுத்துவிட்டு நாட்டைப் பிடிக்க வேண்டியது தான். பழையபடி எல்லோரும் அரசர்கள் தான்.
  20. இன்னொரு புஸ்வாண வழக்கை போட்டிருக்கிறது அனுர அரசு. அனுர ஆட்சி அல்லவா…அடுத்த்தது அதுதான் நீங்கள் களைக்காமல் ஆடுங்கள் காவடியை😂.
  21. உலக வெளியில் நாங்கள் புறக்கணிக்கத்தக்க துணிக்கைகள். எங்களுக்கு ஏற்கனவே 2009 தீர்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. இனி வெனிசுவெலா என்ன ஈரான் என்ன எது நடந்தாலும் எங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை யாராவது மாற்றி எழுதப்போறாங்களா என்ன. அது சரி உந்த வெனிசுவலா அதிபரை பார்க்க சதான் குசைனின் முகசாயல் அடிக்கிது. எனக்கு கண்ணில் கோளாறோ அல்லது யாராவது உங்களுக்கும் அப்படி தோன்றுகின்றதோ? துருத் சோசல் பாவிக்கிற ஆட்க்கள் யாராவது முடியுமானால் டிரம்ப் பார்க்கக்கூடியமாதிரி இலங்கையில் மன்னார் எனும் இடத்தில் வெனிசுவெலாவை விட அதிக எண்ணை உள்ளதாய் எழுதிவிடுங்கோ. என்ன நடக்கிது என்று பார்ப்பம்.
  22. மிகவும்நன்றி கிருபன். வழமை போல எனது மனதுக்கு பிடித்தமான அணிகளுக்கு ஆதரவு கொடுத்துள்ளேன்.
  23. உக்ரேனின் மீது ரஸ்யா செய்த அடாவடிக்கும்…. இதற்கும் கிஞ்சித்தும் வித்தியாசமில்லை. என்ன….நாளைக்கு சீனா தய்வானை சுற்றி மூண்டு “போதை படகை” அனுப்பி போட்டு - இறங்கி அடிப்பான் - கேட்டால் அதே நியாயம்😂. அமெரிக்கா சதாமிற்கு பின் என்ன என திட்டமிடாமல் பாக்தாத்தில் இறங்கி சில்லவல்ல பட்டதை விட மோசமாக இங்கே மூக்குடைய கூடும். வெனிஸ்சுவேலாவின் செவேஸ் ஆதரவாளர்கள் மிக பலமானவர்கள். அத்துடன் எதிரணி நோபல் பரிசு வென்ற மரியாவையும் டிரம்ப் புறக்கணித்து பேசியுள்ளார். மதுரோவின் deputy ஐ டிரம்ப் விரும்புவதாக பேச்சில் தெரிந்தத்து. ஆனால் டிரம்பின் பின் டீவியில் தோன்றிய அந்த பெண்மணியோ, அமெரிக்கவை போட்டு வாங்கி விட்டு, இன்னும் மதுரோவோ ஜனாதிபதி என கூறுகிறார். தம்பர் நல்லா ஆப்பு இழுத்து விட்டார் என நினைக்கிறேன். ஐயோ அதையே கேக்கிறியள்😂. தம்பர் போரை விரும்பாத உத்தமர் என புகழ்ந்த அண்ணைக்கெல்லாம்… வெரி டெலிகேட் பொசிசன்.
  24. ஈராக் முதல் வெனிசுவேலா வரை இந்த ஒரே ஒப்பாரியை வைத்துவிட்டு ஓய்ந்துவிடுவதே வழமை. பிறகென்ன. பேசாமல் ஐ.நாவைக் கலைத்தவிட்டு அமெரிக்கச்சபையாக்கிவிடலாம்.
  25. இந்த செய்தியினை அமெரிக்க தரப்பினை தவிர வேறுதரப்பு உறுதி செய்ததாக தெரியவில்லை, இந்த பிரச்சார உலகில் உண்மைகள் பொய்களை பிரித்தறிவது கடினம், அமெரிக்க அதிபர் கூறியுள்ளார் என்பதற்காக அதனை தேவ வாக்காக எடுக்க முடியாது. கடந்த கால அமெரிக்க வரலாற்றினை பார்க்கும் போது உருவகப்படுத்தப்பட்ட கதைகளாக பல விடயங்களை அமெரிக்க தொடர்பில் கூறப்படுகிறது (நிலவில் கால் பதித்தது பற்றிய விவாதம் எப்போதும் இருக்கும்), இதற்கு காரணம் மக்களில் ஒரு பிரிவினர் செய்திகளை அப்படியே உண்டு ஜீரனிப்பதில்லை என்று கூறிவிட முடியாது ஆனால் அது அமெரிக்க கடந்த கால வரலாறுகளில் இருந்து மக்கள் பெற்ற அனுபவம். புலி வருது என கத்திய சிறுவனின் சிறுபிள்ளைத்தனம் ஏற்படுத்திய பாதிப்பு போல இன்று அமெரிக்க செய்தியினை நம்பமுடியாமல் இருக்கும் நிலை. அதனால் அமெரிக்கா இந்த ஆக்கிரமிப்பினை செய்யாது என மக்கள் நினைக்கவும் மாட்டார்கள், ஏனெனில் அதிலும் அமெரிக்க வரலாறு அற்புதமாக உள்ளது. அமெரிக்காவினை உத்தமர்கள் என சாதாரண மனநிலை கொண்டவர்கள் நம்பிவிடுவதில்லை, அவ்வாறு இந்த உலகில் எதுவும் நிகழ்வதில்லை, சில நம்பிக்கைகள் உண்மைகளால் உடைக்கப்படும் போது ஏற்படும் வலிகளை மடை மாற்ற முயற்சிப்பதால் யதார்த்தம் மாறப்போவதில்லை, யதார்த்தத்துடன் மனது முரண்டுபிடித்தால் அதனால் எமக்குத்தான் பாதிப்பு ஏற்படும். நாம் விரும்புவது போல உலகு இயங்குவதில்லை, அதனை எம்மால் எதுவும் செய்யமுடியாது; நிகழ்வதனை ஏற்று கொள்ளவேண்டியதுதான், இது ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தி, ஆனால் அமெரிக்காவின் பிரச்சாரத்திற்கும் ஆக்கிரமிப்பிற்கும் நல்ல வரலாறு உண்டு.
  26. அமெரிக்கப் படையினர் மிக இரகசியமாக இரவோடு இராவாக, பாகிஸ்தான் நகரம் ஒன்றில் தரையிறங்கி, பின்லேடனை கொலை செய்த காட்சியை, அப்போதை ஜனாதிபதி பராக் ஒபாமா நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரின், சில காட்சிகளை, அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ அமெரிக்கப் படைகளினால் கைது செய்யப்பட்டதை டொனால்ட் ட்ரம்ப் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். இதில் என்ன புதுமை? இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் எண்ணிக்கையில் குறைந்த சிறிய தேசிய இனம் ஒன்றின், அதேநேரம் வலுவான மரபு வழி விடுதலை இயக்கத்தை அழித்த நாடுகளில் அமெரிக்கா முக்கியமானது. இப்போது, சிறிய ஆனால் பொருளாதார வலுவுள்ள வெனிசுலா ஜனாதிபதியை, சட்ட ஆட்சிக்கு மாறாக கைது செய்து நியாயப்படுத்துவதும் அமெரிக்கா தான். ஆனால் ஒன்று -- சிறிய நாடுகளோடும், சிறிய விடுதலை இயக்கங்களோடும் மாத்திரமே அமரிக்காவின் சண்டித்தனம். அதேநேரம், அநுரகுமார திஸாநாயக்கா என்ன குறைந்தவரா? டித்வா புயலினால் அநுராதபுரத்தில் பேருந்து ஒன்று 60 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியபோது, இலங்கைக் கடற்படையினர் அவர்களை காப்பாற்றிய காட்சியை நேரலையில் பார்த்தவர் அல்லவா? அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid02M7WbaYWuRuP6bheyQi4LnbX4TaFWL9WJ4fHsXag8fgb5auv2k4DG98oTPe86vej8l/? படுக்கையில் வைத்து கணவன் மனைவியை தூக்கியதாக சொல்கிறார்கள். அப்படி இருக்க இப்படி எல்லாம் கட்டளை பிறப்பித்தாக சொல்லப்படுகிறது.
  27. எண்ணெய் வளத்தை குறிவைத்து அமெரிக்கா நகர்கிறது. அதில் வெற்றியும் அடையும். ஈரானிலும் ஆட்சி மாற்றத்தை விரும்பி நகர்வுகள் இருக்கின்றன. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
  28. அப்போ இவர் செய்த கொலைகள் எந்த வழக்கில்?
  29. முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான அடிப்படைச் சுகாதார மேம்பாட்டு செயற்பாடு. அண்ணை, பயனாளிகளுடன் கதைக்க தேவையில்லை. சரியான பயனாளியின் வங்கி விபரம் தந்தால் அதற்கு பணத்தை வைப்புச் செய்யலாம்.
  30. களத்தில் கேர்ணல் சங்கர் ஞாபகார்த்தமாக என இந்தத் திட்டம் பெயர் சூட்டப்பட்டாலும் அதே பெயரில் நாட்டில் இயங்க முடியாது என்றால் நாட்டில் அதை இன்னொரு பெயரால் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படியென்றால் மட்டுமே யாழ்களத்தை விட்டு வெளியே சென்று நண்பர்கள் உறவினர்களிடம் இதற்கான நிதி உதவிகளைக் கோரலாம் என்று நினைக்கின்றேன்.
  31. நன்றி ஏராளன் தகவலுக்கு காரைநகரின் பெயரை வைத்துப் பல அமைப்புக்கள் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் இருக்கும் நிலையிலே........ (ஆலயங்கள் கட்டுதல், புனரமைத்தல், கும்பாபிஷேகம் செய்தல் என்பன தான் அந்த அமைப்புக்களின் முதன்மையான திட்டங்கள்) உங்கள் அமைப்பு இப்படியான உதவிகளை பல காரைநகர் மக்களுக்காகச் செய்து வருவது பாராட்டப்பட வேண்டிய விடையம்.. நாங்கள் குறுகிய காலம் அங்கே தங்கி நிற்கும் நிலையால் இப்படியானவர்களை அடையாளம் காண முடிவதில்லை பாடசாலை, மாணவர்கள், கல்வி, பரிசளிப்பு, என்ற நிலையிலே தான் பலருடைய தனிப்பட்ட உதவிகளும் செல்கின்றன. இனிமேலாவது சரியான வழியில் செல்வார்கள் என் நம்புவோம் 🙏 அடுத்த கட்டமாக எப்படி எந்த வகையில் எங்கள் பங்களிப்பினை செய்யலாம்? ஏராளன் உங்கள் அமைப்பின் வங்கி இலக்கத்தைப் பயன்படுத்தலாமா? அல்லது உங்களால் இதற்கென ஒரு புதிய வங்கி கணக்கை ஆரம்பிக்கலாமா ? அல்லது ஏதாவது மாற்று வழி உள்ளதா ?
  32. நல்லது, மாற்று கருத்து இல்லை அண்ணா. தாயகத்தில் அவர் பெயரைச் சொல்லி செயற்படமுடியாது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். யாழிணையத்தில் அவர் பெயரால் இந்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது என்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது என நம்புகிறேன். மூன்று மாவீரர் (அதனை வெளிப்படையாக சொல்வதில்லை) கொண்ட குடும்பத்திற்கு ஏற்கனவே காரைநகரில் மலசலகூடம் திருத்திக் கொடுத்து மாதாந்தம் குடிநீரும் வழங்கி வருகிறோம். தந்தையார் பக்கவாதம், பார்வையிழப்பு. மகள் பார்வைக்குறைபாடு. அடுத்த மகள் மனவளக் குறைபாடு. மூத்த மகளுக்கும் பார்வைக் குறைபாடு, அவருக்கு ஒரு மகன் மூட்டை தூக்கும் தொழில் செய்கிறார். இவர்கள் பக்கத்தில் ஓர் வீட்டில் இருக்கின்றனர்.
  33. என்னுடைய ஞாபகத்தின்படி இந்திய இராணுவ வருகைக்கு சில (மாதங்கள்) காலங்களுக்கு முன்னமே ஊர் பெரியவர்கள், பிரபலங்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரையிம் உள்ளடக்கி இப்படியான பிரஜைகள் குழு அமைக்கப்பட்டது. இலங்கை இராணுவ திடீர் படை இறக்கம், உளவாளிகள் ஊடுருவல், கிராம மட்டங்களில் நடக்கும் சிறிய சமூக பிரச்சினைகள் போன்றவற்றை அவதானித்து இயக்க பொறுப்பாளருடன் உரையாடி ஆலோசிப்பது அவர்களுக்கான ஒத்துழைப்பை , உதவிகளை வழங்குவது போன்ற செயல் பாடுகள் நடந்தன. நாவட்குழியில் நானும் நண்பர்களும், ஊர் பெரிசுகளும் சேர்ந்து இரவு நேர ஊர் காவல், நோட்டமிடல், சென்ரி, உணவு வழங்கள் போன்ற செயல்பாடுகளில் இருந்து இருக்கிறோம் . இது தவிர, இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு பிறகு மக்கள் அரசியல் செயல்பாடுகளாகவும் பிரஜைகள் குழு என்று ஒன்றும் இருந்தது நினைவுக்கு வருகிறது. இவர்கள் பலரை ராணுவ துணை குழுக்கள் கொலை செய்த்ததாகவும் செய்திகள் வாசித்த ஞாபகம் இருக்கிறது.
  34. நானும் 6அல்லது 7தடவைகள் உள்ளே போய் வந்திருக்கிறேன்.ஆடாமல் அசையாமல் இருக்கும் போது சவப்பெட்டிக்குள் இருந்த பீலிங் வந்து போகும்.மிசின் உள்ளுக்க இழுக்க ஆரம்பித்ததும் கண்ணை இறுக மூடிக்கொள்வேன்.கெட்ட கெட்ட நினைவுகள்,கவலைகள் வந்து போகும்.🤣 சில நேரம் சந்திரமண்டலத்துக்கு போற மாதிரியும் இருக்கும். 😂 அதுக்குள்ள போயும் நித்திரை வந்திருக்கு எண்டால் நீங்கள் லேசுப்பட்ட ஆளில்லை. மகான்.😀 உங்கடை வீட்டுக்கு பக்கத்தாலை ரயில் அடிக்கடி போய் வருமா? 😎
  35. இதெல்லாம் Volume-1 தான் ஐயனே... மற்ற 1000 பக்கங்கள் இல்லை. அழிந்துவிட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.