Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    32727
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88402
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46894
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19368
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/14/26 in all areas

  1. அண்ணை, 1) படங்கள் கிடைத்து வட்சப் குழுவில் பகிர்ந்து விட்டேன். 2) விபரங்களை கேட்டுப் பெறுவேன். 3) படம், காணொளி எடுத்து போடச் சொல்லி உள்ளேன். 4) இதற்கு முடிந்தால் நானே சென்று எடுப்பேன் 5) பற்றுச்சீட்டுகள் பெற்றுத்தர சொல்லி உள்ளேன். (கடைகளில் பெறும் பொருட்களுக்கு சீமந்து, மணல், கல்லு போன்றவற்றிற்கு பெறலாம். பெக்கோ மூலம் குழி தோண்டுபவர் கையால் எழுதிய துண்டு தான் தருவார். தொழிலாளர் சம்பளமும் அவ்வாறு தான் தருவார்கள்.) அரச தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மதிப்பீடு செய்ய பணம் கேட்கிறார்கள், பிரதேச செயலரிடம் இலவசமாக செய்துதர கோரியுள்ளேன். மலசலக்குழிகள் வெட்டி கட்டுவதற்கான பிரதேச சபை அனுமதியையும் அவர்களே பெற்றுத்தர வேண்டும்)
  2. நன்றி தம்பி. கீழ் உள்ளதை நீங்கள் ஏலவே சிந்த்தித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். இருந்தாலும்... பயனாளர்களிடம் கீழ்கண்டதை கோருவது ஏற்புடையடதாக இருக்கும் என நம்புகிறேன். நாம் மேலும் கொடையாளர் நம்பிக்கையை பெற இது மிகவும் உதவும். 5 படங்கள் எடுத்து அனுப்பல் வேண்டும். 1. வேலை ஆரம்பிக்க முன்னான நிலை (before construction) 2. வேலைக்கான பொருள்கள் ( items used in construction) 3. வேலை நடக்கும் போது (during construction) 4. வேலை பூரணமானபின் (after construction) 5. ஏதேனும் அத்தாட்சிகள் (இருப்பின்) அவை (receipts etc) *பயனாளார்கள் படம் தவிர்க்கப்பட வேண்டும். *அத்தாட்சியில் பெயர் தவிர் வேறு தனி விபரங்கள் இருப்பின் அவை மறைக்கப்படலாம். இதில் மாற்றுக்கருத்து இருப்பின் கூறவும், யாருக்கேனும்.
  3. 3) முன்னோடிக்கான மூன்றாவது நன்கொடை ரூபா 319,122.00 சதம் 14/01/2026 கிடைக்கப்பெற்றது. இன்றைய 14/01/2026 வங்கி மீதி ரூபா 430,445.67 சதம் ஆகும். 250 ரூபா Swift கட்டணம் எடுத்துள்ளார்கள். மூன்றாவது நன்கொடையை அனுப்பி வைத்த உறவிற்கு மிக்க நன்றி. உங்கள் ஒவ்வொருவரின் கூட்டு முயற்சியால் வறுமை/ஏழ்மையில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு அடிப்படை சுகாதார வசதி கிடைக்கட்டும். முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026. ஒற்றுமையே பலம்.
  4. நன்றி, நீங்கள் சென்று மினெக்கெட வேண்டாம். மிக இறுக்கமான உங்கள் பரிவர்த்தனை முறையே நம்பிக்ககைக்குரியதும் போதுமானதும். நமது உடனடி வட்டத்துக்கு அப்பால் சென்று நிதி கோர -யாழில் படங்கள் கொஞ்சமேனும் போட்டால் -அந்த சுட்டியை பகிர்வது நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என நினைக்கிறேன். எல்லாம் நல்லபடி நடந்தால் முகப்பில் கூட இடம் தரலாம் என நிர்வாகம் சொல்லியுள்ளனர்.
  5. சாத்தர், சிங்களவர்கள் இப்போது எல்லா இடங்களிலும் கற்பது, தொழில் செய்வது உங்களுக்கு தெரியாதா என்ன. தமிழ் பெடிகளும் பலர் கூலி, தொழிற்சாலை வேலைகளிக்கு தென்பகுதி செல்கின்றார்கள். திருடியவர்கள் வாகன ஓட்டிகளோ யார் அறிவார்.
  6. பிராந்திய அரசியலை கையில் எடுக்க நினைக்கும் சீனா கொஞ்சம் வட கிழக்கு பகுதியிலும் கால் வைத்திருந்தால்... பலருக்கும் பல வெற்றிகள் கிடைத்திருக்கும். ஒரு தரித்திரம் வாலை சுருட்டியிருக்கும்.
  7. நீங்கள் கூறுவது எல்லாம் சரிதான். ஆனால் இந்த உலகில் ஈழத்தமிழினம் மட்டும் நேர்மையாக,நீதியாக,ஒழுக்கமாக இருக்க வேண்டும் என சிந்திப்பது ஏன்? இலங்கையில் தற்போது தமிழர் பிரதேசங்களில் நடக்கும் அரசியல் பிரச்சனைகளுக்கு வாய் திறக்காமல்......பழைய பிரச்சனைக்களுக்கு மட்டும் தீர்வு காண நினைக்கும் நீங்கள் யார் என்பது ரகசியம் அல்ல.
  8. இரண்டாம் தடவை எழுதும்போது இந்தியா என தவறுதலாக எழுத்துப்பிழையாக எழுதிவிட்டேன். 79 வயது மூதாட்டியை கிழவி என அழைப்பது வழமைதானே. இப்போது இலங்கையில் 50 வயது நபரையே முதியவர், தாத்தா என எல்லாம் அழைக்கின்றார்கள்.
  9. ஒரு நாடு முன்னேற போக்குவரத்து சட்டங்களும் மிக மிக முக்கியமானது. போக்குவரத்து சட்டங்கள் மீறப்படும்போது லஞ்சம் வழங்கப்படுவதால் இத்தகைய விபத்துகள் நிகழ மேலும் வாய்ப்பளிக்கின்றது. மேலைத்தேய நாடுகளைப்போல் சட்டங்கள் பாகுபாடின்றி இறுக்கமானதாக இருக்க வேண்டும்.
  10. இந்த திரியை ஆரம்பத்தில் மேலோட்டமாக வாசித்து இருந்தேன். தேர் சில்லு உருள ஆரம்பித்து விட்டது. சிறிய அளவு என்றாலும் முடிந்த அளவு என்னுடைய பங்களிப்பும் இருக்கும். (உங்களை போலவே வேறு இரண்டு திட்டங்களில் இணைந்துள்ளேன்) **பனர், இலச்சினை இவற்றில் யாழ்க்களத்தின் சின்னம் கூட சிறப்பாக இருக்கும். அனைவருக்கும் பாராட்டுக்கள். ❤️🙏
  11. அண்ணை, என்னுடைய மனத்திருப்திக்கும் நான் போய் பார்க்கவேண்டும், முகந்தெரியாத உறவுகள் நம்பிக்கையில் தரும் நன்கொடை சரியானவர்களின் கைகளில் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் விரும்புகிறேன்.
  12. முன்னோடி - அ.சு.வ.திட்டம் 1 :- திரு நாகன் பரராசசிங்கம் ஐயாவின் மலசலகூடக்குழி வெட்டி கட்டி பூரணப்படுத்தாமல் உள்ள மலசலகூடம் கட்டி முடிப்பதற்காக தேவைப்படும் 150000 ரூபா நிதியில் முதலாவது கட்டமாக 50000 ரூபா திரு நாகன் பரராசசிங்கம் ஐயாவின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துவிட்டேன். இருப்பு 430,445.67-50025=ரூ 380,420.67 சதம் இன்று 14/01/2026 50000 ரூபா வைப்புச் செய்த பின் வங்கி மீதி. 25 ரூபா மக்கள் வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள்.
  13. அனுப்புங்கள் அவருடைய தேவை விரைவில் பூர்த்தியடைய வாழ்த்துக்கள் உதவிய மற்றும் இன்னும் உதவக் காத்திருக்கும் உறவுகளுக்கும் நன்றிகள்🙏
  14. பொன்னாலை மூன்று சகோதரர்களின் புனரமைப்பு வேலையை வியாழன் செய்யத் தொடங்குவோம்.
  15. திரு நாகன் பரராசசிங்கம் ஐயாவின் வங்கிக் கணக்கிற்கு முதலாவது கட்டமாக 50000 ரூபாவை வைப்புச் செய்யட்டுமா?
  16. தகவலுக்கு நன்றி ஏராளன் இந்தத் தொகை நிதியைக் கொண்டு நாங்கள் முன்கூட்டியே எடுத்த முடிவின்படி அராலியிலும் பொன்னாலையிலும் வேலைகளை ஆரம்பிக்கலாம் அல்லவா இந்த உதவி அவர்களுக்கு மிகவும் வேண்டியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன் அனுப்பிவைத்த உறவிற்கு கோடி நன்றிகள்
  17. இலங்கையில்தான் வேறெங்கு போக முடியும்.🤣 பொதுவாக போட்டிகளினிடையே பயணம் பாதகமானது, அந்த வகையில் பங்களாதேசமும் பாகிஸ்தானுக்கும் சாதகம் எதிரணிகளுக்கேதிராக இருக்கும்.
  18. பாகிஸ்தான் வம்சாவளி வீரர்களுக்கும் இந்தியா விசா மறுத்துள்ளது. அமெரிக்க வீரர் அலி கானுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அலி இப்பொழுது கொழும்பில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பங்காளதேசமும் உறுதியாக உள்ளது போல்தான் உள்ளது. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ என்று தெரியவில்லை.
  19. நாங்கள் மகிந்த மீது குற்றம் சுமத்த முடியாது, ஏனென்றால் நாங்கள் தான் விடுதலை கேட்டு ஆயுதம் ஏந்திப் போராடினோம். நாங்கள் சோனியா மீது குற்றம் சுமத்த முடியாது, ஏனென்றால் நாங்கள் தான் இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போராடினோம் அதனை ஏவிவிட்டு எம்மில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று எமது பெண்களைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளாக்கக் காரணமான ரஜீவைக் கொன்றோம், ஜே ஆர், பிரேமதாச, சந்திரிக்கா, ரணில், டிங்கிரி பண்டா, சிறிமா, பண்டாரநாயக்க, கோத்தாபய என்று எவரையுமே குற்றம் சாட்ட முடியாது, ஏனென்றால் நாங்கள்தான் விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்து நடத்தினோம். எங்களுக்கெதிராக எம்மை அழித்தவர்கள் எல்லோருமே உள்நாட்டிலும் சர்வதேச‌த்திலும் வழக்குகள் போட்டுப் பயங்கரவாதிகள் என்று நாமமும் இட்டு அழித்து, அடக்கி விட்டார்கள். ஆனால் நாம் மட்டும் எதுவுமே பேசக் கூடாது, ஏனென்றால் நாம்தான் எமக்கு நடந்த அனைத்து அழிவுகளுக்கும் காரணம் ! இவ்வளவு கேவலமான உணர்வு தமிழரில் இல்லாமல் வேறு எந்த இனத்திலும் இருக்கமுடியாது.
  20. சிங்கள ஸ்ரீலங்கா பிக்பாஸ் நிகழ்ச்சி. கண்டு களியுங்கள்.😁
  21. சொந்த பணமா? கடனோடு கடனாக ஏத்திவிட வேண்டியது தானே. வந்தா மலை போனா மயிர்.
  22. 2) முன்னோடிக்கான இரண்டாவது நன்கொடை ரூபா 10,493.65 சதம் 13/01/2026 கிடைக்கப்பெற்றது. இன்றைய 13/01/2026 வங்கி மீதி ரூபா 111,573.67 சதம் ஆகும். இரண்டாவது நன்கொடையை அனுப்பி வைத்த உறவிற்கு மிக்க நன்றி. உங்கள் ஒவ்வொருவரின் கூட்டு முயற்சியால் முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 வெற்றி பெறட்டும்.
  23. றோ ஏஜெண்டுகள் நல்ல விசுவாசமாய் வேலை பார்க்கறீனம் போல.
  24. கண்கள் செருகிக் கொண்டு வருகின்றது. ஆள்… தப்புவது கடினம். தேசியக் கொடியை... அரைக் கம்பத்தில் பறக்க விடுங்கப்பா.
  25. விமல் வீரவன்ச... சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து, சாக... முற்கூட்டிய வாழ்த்துக்கள். 👍 இவன் சில வருடங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்த போது... உண்ணாவிரத மேடைக்கு பின்புறம் "மலிபன் பிஸ்கட்" பெட்டிகள் கண்டெடுக்கப் பட்டமை பத்திரிகைகளில் செய்தியாக வந்திருந்தது குறிப்பிடத் தக்கது. 😂
  26. அமெரிக்க ராணுவம் ஈரானில் இறங்க தயாராகிறது. பூட்டினுக்கு இன்னொரு விருந்தாளி கிடைக்கப் போகிறார்.
  27. ஈழத்தமிழர்களை பொறுத்தவரை சோனியா உயிருடன் இருந்தும் பிரயோசனமில்லை.இறந்தும் பிரயோசனமில்லை. சோனியாவை திட்டியும் பிரயோசனமில்லை...திட்டாமல் விட்டாலும் பிரயோசனமில்லை. ஈழத்தில் சிங்களவர்களால் ஏற்படுத்தப்பட்ட எத்தனையோ இனக்கலவரங்கள்,இன அழிப்புகளை கடந்து வந்தவர்கள் ஈழத்தமிழர்கள். அந்த அடிப்படையில்..... பாதிக்கப்பட்டவன் திட்டுவதும் பாதிக்கப்படாதவன் நியாயம் பேசுவதும் உலக வழக்கம்.
  28. அழுந்திச் சாதல் என்பதன் மூலம் நான் சொல்ல வந்தது சாகும் தறுவாயிலாவது தான் ஈழத்தமிழருக்குச் செய்த கொடுமைகளை நினைத்துக் கொண்டு சாகவேண்டும் என்பதுதான். அதைவிடுத்து சாதாரண மரணம் என்பது கூடாது என்பதே எனது எண்ணம். அடுத்தது, தான் செய்த கொடுமைகளுக்கான தண்டனையினை அவர் வாழும் காலத்தில் அனுபவிக்கவேண்டும். அவர் சாகும் முன்னர் இது நடக்கவேண்டும். இவருக்கெதிரான வழக்குகள் பதியப்பட்டு இவரது குற்றங்களுக்கான தண்டனை கிடைக்கவேண்டும். இதுவே நான் விரும்புவது. உதாரணத்திற்கு ஹிட்லர் தற்கொலை செய்துகொள்ளாமலும், கைதுசெய்யப்படாமலும் உலகின் ஏதோ ஒரு மூலையில், வயது முதிர்ந்து மரணிக்கும் தறுவாயினை எட்டுகிறான் என்று ஒரு பேச்சிற்கு வைத்துக்கொள்வோம். அப்போதும்கூட அவனை, "வயது முதிர்ந்த ஒரு மனிதனை அழுந்திச் சாகு என்று கூறுவது சரியில்லை" என்றுதான் சொல்வீர்களோ? நீங்கள் மிகச் சிறந்த மனிதாபிமானியாக இருக்கலாம், என்னால் அப்படியிருக்க முடியாது. ஒற்றை மனிதனின் மரணத்திற்காக ஒன்றரை இலட்சம் தமிழரைக் கொன்றும், அவர்களின் ஒரே நம்பிக்கையான விடுதலைப் போராட்டத்தினை முற்றாக அழித்தும் பழிவாங்கிய ஒருவரை சாதாரணமாக "வயது முதிர்ந்த மூதாட்டி" என்று கருணை காட்ட என்னால் முடியவில்லை. அவரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களிடம் நீங்கள் சென்று கூறிப்பார்க்கலாம். ஒருவர் வயது முதிர்ந்துபோவதால் மட்டுமே அவர் செய்த குற்றங்கள் மன்னிக்கப்பட்டு விடுமா என்ன?
  29. இதைத்தான். நானும் சொல்கிறேன். 1984. வரை. அங்கு. இருந்தேன். அச்சமயம். தாக்கப்படவில்லை. அதன். பின்னும். தாக்கப்பட்டதாக. கேள்விப்படவில்லை. ஆனால். புலிகள். தாக்கியதாக. வாசித்த. நாபகமுண்டு. அது. இந்தியன் ஆமிக்காலமா. அல்லதுஇலங்கை. இராணுவத்துடான. என்பது. தெரியாது.
  30. இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கும்*. “ சென்னை பெசண்ட் நகரில் அமைந்திருந்தது அந்த பங்களா! காலை 8மணி என்பதால் சாலை வழக்கப்படி பரபரப்பாக இருந்தது..! சரியாக 8.15க்கு அந்த வீட்டின் முன் நகரின் பிரபலமான மருத்துவமனைக்குசொந்தமான ஆம்புலன்ஸ் வந்து நின்றது..! அதிலிருந்து ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உடலை மருத்துவமனை ஊழியர்கள் இறக்கி வீட்டிற்குள் வைத்துவிட்டு பணத்தைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டனர்..!ஆம்!! அநத குடும்பத்தலைவர் சுப்பிரமணிதான் நேற்றிரவு மாஸிவ் அட்டாக்கில் உயிர் விட்டிருந்தார்... பிணத்தின் கால்மாட்டில் வந்து நின்ற அவர் மனைவி மாலா முகத்தைப்பார்த்து கண் கலங்கினாள்..,.! மணி 8.45- நகரின் பிரபலமான பிரௌசிங் சென்டரிலிருந்து வந்த இரு நபர்கள் கேமிராவை பொருததி வீடியோ கான்பரன்சில் அவரது உடல் உலகெங்கும் தெரியச்செய்துவிட்டுச்சென்றனர்!! பக்கத்துவீட்டு ராவ் வந்து துக்கம் விசாரித்துவிட்டுசென்றார்....! ஆஸ்திரேலியா- சிட்னியில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்த அநத வீட்டின் வீடியோ கான்பரன்சிங்கில் தெரிந்த தன் தந்தையின் உடலைப்பார்த்து விசும்பினாள் சுப்பிரமணியத்தின் மகள் மஞ்சு..! மதியம் 1மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்த அவள் கணவன் ஈஸ்வரன் " என்ன? Body தெரியறதா? சரிசரி, எனக்கு சாப்பாடு போடு. நான் அர்ஜெண்டா போகணும்" என்று கூறிய படியே சாப்பாடு மேஜையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்... சிங்கப்பூர் நகரின் சற்றே ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருந்தது கோபாலன் வீடு..! சுப்பிரமணியத்தின் இரணடாவது புத்திரன்!! "ஏண்டி! நாம ஒரு எட்டு போய்ட்டு வந்திருக்கலாமோ?" என்றான் கோபாலன், சற்றே கவலையுடன்..! " சும்மா இருங்க! போன வருஷம்தானே போய்ட்டு வந்தோம்? நாம போனா மட்டும் போன உயிர் வந்திடவா போகுது? பேசாம நெட்லயே பார்த்துக்கங்க!" என அழகாகப்பேசினாள் அவனது சகதர்மினி பாமா.. கோபாலன் மௌனமானான்!! USAவில் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள ஏஞ்சல்ஸ் அபார்ட்மெண்டில் 45 வது மாடியில் இருந்தான் சீனிவாசன்..! சுப்ரமணியத்தின் ஜேஷ்ட குமாரன்!! காலை செய்தியை கேட்டபோதிருந்தே கலங்கிப்போயிருந்தான்.! கிருஷ்ணனின் மனைவி லிண்டா அவன் அருகே வந்து நின்று அவனது கையைப்பிடித்துகொண்டாள்.. "Don't worry dear! You know, we can't do anything against the nature!!" என்று ஆறுதல் கூறினாள்..! அவளைத்திருமணம் செய்துகொண்டதால்தான் இன்று அவன் கிரீன்கார்டு சிட்டிசனாக அங்கே நிரந்தரமாகி இருக்கிறான்!! " why are you looking sad dad? Is anything going wrong? " என்று அவனைப்பார்த்து பாசத்துடன் கேட்டாள் அவனது 5வயது மகள் ரோஸலின்..! அவனது கண்கள் மானிட்டர் மீதே நிலைத்திருந்தது.......!! ன்னையில் காலை 10.30..! பெசண்ட் நகரில் சுப்பிரமணியம் உடல் மீது ஒரு பெரிய மாலையைக்கொண்டுவந்து போட்டார் ராவ்..! வெளியே யாரோ வரும் அரவம் கேட்டது..! தான் போனவாரம் புதிதாய் வாங்கிய BMW ல் சம்பந்தி சாந்தமூர்த்தியுடன்(யெஸ், தட் பாமாவின் அப்பா) வந்து இறங்கினார் நீலகண்ட சாஸ்திரிகள்..! அவரது கையில் லேப்டாப்பும் சிலபல எலக்ட்ரானிக் டிவைஸ்களும் இருந்தன....! சுப்பிரமணியத்தின் உடலைப்பார்த்ததும் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன் அவர் தன்னிடம் கூறியது சாஸ்திரிகள் நினைவுக்கு வந்தது. " எப்படியாவது என் பெரிய மகன் கையால எனக்கு கொள்ளி வைக்கணும்! அதுதான் எனக்கு கடைசி ஆசை சாஸ்திரிகளே!" என்று தம்மிடம் கூறியதை நினைவு கூர்ந்து நீண்ட பெருமூச்சு விட்டார்!... நேரம் பிற்பகல் 3மணியைத்தாண்டியது..! இறுதி ஊர்வலத்திற்கு சாஸ்திரிகள் ஏற்பாடு செய்தபடி அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் கூடிய தனியார் வாகனம் வந்து நின்றது. காரியங்கள் மளமளவென நடந்தன.! ஓரிரு சடங்குகளைச்செய்தபின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது..! BMWகாரில் வந்திருந்த நான்கைந்து உறவினர்கள் ஏறிக்கொள்ள அடுத்த பத்தாவது நிமிடம் சடலம் சுடுகாட்டை அடைந்தது... மணி 4.30 சுடுகாட்டில் இருந்த உதவியாளன் "என்ன சாமி, இந்தக்காலத்துல யாருமே விறகு வெச்சி பொணத்தை எரிக்கறதே இல்ல! கரண்ட்லயும் gasலயும் தான் எரிக்கறாங்க! , நீங்க என்னடான்னா வெறகே வேணும்னு கேக்கறீங்க!" என்றான் சாஸ்திரிகளிடம்..! "நீ தொணதொணன்னு பேசாம வேலையைப் பாருப்பா!" என்றார் சாஸ்திரிகள். விறகுக்கட்டைகள் அடுக்கப்பட்டு அதன்மீது சுப்பிரமணியம் உடல் வைக்கப்பட்டது.. சிலபல எலக்ட்ரானிக் வேலைகளைச்செய்தபிறகு தனது லேப்டாப்பை ஆன் செய்து யாருடனோ வீடியோவில் பேசினார். உடலைச்சுற்றி பெட்ரோல் ஊற்றினார். பெட்ரோல் மீது பட்டாசு போன்ற ஒரு டிவைசை வைத்தார். வீடியோ காமிராவில் சில மந்திரங்களை சொல்லியபடி "சரி சீனிவாசன், நீ இக்னிட்டரை ஆன் பண்ணு!" என்றார். திரையில் தெரிந்த அமெரிக்காவிலிருந்த சீனிவாசன் தன் கையிலிருந்த கேஸ் அடுப்பின் லைட்டர் போன்ற ஒரு வஸ்துவை கம்ப்யூட்டர் மானிட்டரை நோக்கி கண்களில் கண்ணீருடன் அழுத்த அடுத்த கணம் சென்னை பெசண்ட் நகரில் சுடுகாட்டில் கிடத்தப்பட்டிருந்த சுப்பிரமணியத்தின் உடலின் மீது ஊற்றியிருந்த பெட்ரோல் குபுக்கென பற்றியது..! ஒரு இரண்டு நிமிடம் அமைதியாக நின்றிருந்த அனைவரும் பின் ஒவ்வொருவராக கலைந்தனர்.. கொள்ளி வைத்த சீனிவாசன் தன் தந்தையின் மீது பாசம் மேலிட அமெரிக்காவில் குமுறிக்குமுறி அழுதான்... இண்டர்நெட்டில் அப்பாவின் முகம் பல பழைய நினைவுகளை அவன் கண் முன் கொண்டு வந்தது...! சுப்பிரமணியத்தின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மனநிறைவுடன் தானும் வீட்டுக்கு கிளம்பினார் சாஸ்திரிகள்..” படித்ததும் பகிர்ந்ததும்
  31. உந்த கெட்டித்தனம் எல்லாம் போட்டி இந்தியாவில் நடக்குமட்டும்தான்! வெளி இடங்களில் நடக்கும்போது பார்ப்போம் இந்தியாவின் வண்டவாளத்தை!!😜
  32. யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் மோ. சுமதி (பூமா) இன்று (14-01-2026) காலமானார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
  33. தெரியும், ஒரு தொழில் கூட மிச்சமில்லை, எல்லாமே அவர்கள்தான். தனியார் தொழிற்சாலை, அதில் எப்படி திருட முடிந்தது என்பதே எனது கேள்வி. அதுவும் ஒரு வருடத்தில் ஐம்பது மில்லியன், எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்தார்கள்? அரசாங்க நிறுவனத்தில் அரச ஊழியர், அரசியல்வாதிகள் செய்வதுதான் இதுவரைக்கால வழமை. இது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.