Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    39465
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    89120
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8995
    Posts
  4. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    16981
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/19/26 in Posts

  1. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் அபாரமான 75 (46 பந்துகள்) ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. ஷாமர் ஜோசப் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 42 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த @goshan_che க்குப் புள்ளிகள் கிடையாது. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி, பதும் நிஸங்கவின் அதிரடியான 62 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், பவன் ரத்னாயக்கவின் வேகமான 44 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காத புயல்வேக 63 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், சிகண்டர் ராசாவின் அபாரமான 45 (26 பந்துகள்) ஓட்டங்களுடனும் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ஸிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த @vasee க்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கும்!. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த மற்றைய 22 பேருக்கும் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி, இப்ராஹிம் ஸட்ரானின் ஆட்டமிழக்காத புயல்வேக 95 (56 பந்துகள்) ஓட்டங்களுடனும், செதிகுல்லா அடலின் வேகமான 44 (32 பந்துகள்) ஓட்டங்களோடும் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 118 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: @vasee நான்குபடிகள் மேலே ஏறியுள்ளார்!
  2. வசி, பிடித்திடலாம் என்று சொன்னேனில்லையா. ஒரே நாளில் பெரும் பாய்ச்சல்🤣
  3. எனக்கு மிஞ்சி போனால் 60 புள்ளிகள்தான் என நினைக்கிறேன். சூப்பர் எட்டில் 7/8 அணிகளை சரியாக தேர்ந்தாலும் முதல் எது, இரெண்டாவது எது, கடைசி எது என்பதற்கான பதில்கள் எல்லாமும் எங்க எங்க இருக்க கூடாதோ, அங்க அங்க இருக்கிறது😂
  4. ஆடு அறுக்க முன்னர் டுபுக்கு வேணும் என்று ஆசைப்பட்டால் இப்படித்தான்😂🤣 👇🏿
  5. ஆமா.... நடேசன், அவருடன் பல போராளிகள், பாதிரியார் அவருடன் சரணடைந்த போராளிகள், பாலச்சந்திரன், பல பொதுமக்கள் யாரிடம் சரணடைந்தனர்? அவர்களை கொன்றது யார்? அவர்கள் என்ன ஆனார்கள்? சரணடைவோரையெல்லாம் கொன்று யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று யார் கட்டளையிட்டது? சர்வதேசம் போரை முடிவுக்கு கொண்டுவர வற்புறுத்தியது, ஆனால் நாம் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோமென கோத்தாவே பலமுறை சொல்லியிருக்கிறார். இவர் அப்பப்போ தூக்கத்தால் எழும்பியதுபோல் ஒவ்வொரு கதை சொல்வார். தெரிவிக்கப்படாமல் எப்படி இவருக்கு எல்லாம் தெரிந்தது? இட்டுக்கட்டினாரா? சரத் பொன்சேகாவின் பெரிய பகிடி! போரில் ஈடுபடாத பொதுமக்கள், பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டனர். இராணுவம் விடுதலைப்புலிகளின் தலைவர்களை காப்பாற்ற விரும்பவில்லை என்கிறார், பின்னர் அவர்கள் இராணுவத்திடம் சரணடைந்திருந்தால் அவர்கள் உயிருடன் இருந்திருப்பர், தலைவர் முதலமைச்சராக இருந்திருப்பார் என்கிறார், ராஜபக்சக்கள் விடுதலைப்புலிகளை காப்பாற்ற எண்ணினர், இராணுவத்தினர்தான் அதற்கு எதிராக இருந்து அழித்தனர் என்கிறார். அப்போ, போரில் இறந்தவர்கள், பாலியல் கொலை, சிறுவர் கொலை எல்லாவற்றையும் இராணுவத்தினர்தான் திட்டமிட்டு செய்தனர் என்பதை ஒப்புக்கொண்டு ராஜபக்சக்களை காப்பாற்றுகிறாரா? இவர் என்னதான் சொல்ல வருகிறார்? இவரே இராணுவத்தினரின் போர்க்குற்றத்தை ஏற்றுக்கொள்கிறாரா? சொல்லுங்கள் இன்னும் தளபதியாரே! கேட்கத்தான் எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம் நாங்கள்.
  6. வணக்கம், வருகைக்கு நன்றி. மங்களகரமாக வந்துள்ளீர்கள். மங்களமற்ற சொற்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி
  7. ஐயா… உங்களின் பூர்வீகம் இலங்கையா, தமிழகமா. 😁 நானும் அவரின் எழுத்தைப் பார்த்து… வயது அதிகம் இருக்கும் என நினைத்திருந்தேன். அவர் பென்சன் எடுக்க… இன்னும் 25 வருசம் இருக்கு. 😂
  8. இலங்கை காவல்த்துறையும் நானும் காலம் : 2000 முதல் 2002 வரை இடம் : பிலியந்தலையிலிருந்து கட்டுப்பெத்தை வரையான பயணப்பாதை 2000 ஆம் ஆண்டு ஆவணி மாதத்திலிருந்து கொழும்பின் புறநகர்ப்பகுதியான பிலியந்தலையின் பட்டக்கத்தரை எனும் பகுதியில் அமைந்திருந்த ஈஸ்வரன் சகோதரர்கள் நிறுவனத்தினதும் இந்தியாவின் நில்க்கமால் நிறுவனத்தினதும் பிளாத்திக்கு தளபாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பொறியியலாளனாகப் பணியாற்றி வரத் தொடங்கினேன். தற்போது நூற்றுக்கு நூறு வீதம் சிங்களவர்களை மட்டுமே கொண்ட அப்பிரதேசத்தில் 1983 ஆம் ஆண்டுக் கலவரத்தின்போது அப்பகுதியில் வேலை நிமித்தம் வாழ்ந்துவந்த தமிழர்கள் தாக்கப்பட்டதாகவும், அத்தொழிற்சாலையில் பிற்காலத்தில் தொழிலாளர்களாகவும், வாகன ஓட்டுனர்களாகவும் இணைந்துகொண்ட அப்பகுதிச் சிங்களவர்கள் கலவரத்தின்போது தமிழர் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் என்றும் எனக்கு முன்னர் அத்தொழிற்சாலையில் பணியாற்றி, பின்னர் கனடா சென்றிருந்த தமிழ் நண்பர் ஒருவர் கூறியிருந்தார். ஆகவே மிகுந்த அவதானத்துடனேயே அப்பகுதிக்குச் சென்றுவந்தேன். என்னைப்போலவே இன்னொரு தமிழ்ப் பொறியியலாளரும் கூடவே அங்கு பணியாற்றி வந்தார். ஆறு பொறியியலாளர்களால் வழிநடத்தப்பட்டு வந்த அத்தொழிற்சாலையில் சுமார் 60 வரையான சிங்களத் தொழிலாளிகள் பணியாற்றி வந்தார்கள். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இயல்பாகவே அவர்களுக்கு இருக்கும் கர்வம், நான் தமிழ‌ன் என்று தெரிந்திருந்தமையினால் இரட்டிப்பாகியிருந்தது எனக்கு நன்கு புரிந்தது. வேலை நிமித்தம் அவர்களுடன் பேசும்போது அதட்டலான தொனியில் பேசுவதும், நான் கூறும் வேலைகளை செய்ய மறுப்பதும் சிலவேளைகளில் நடப்பதுண்டு. "நீ வேண்டுமானால் இத்தொழிற்சாலையில் நடத்துனராக இருக்கலாம், ஆனால் நீ எனது வீதியினூடாகத்தான் ஒவ்வொருநாளும் இங்கு வந்து செல்லவேண்டும் என்பதை மறந்துவிடாதே" என்று அதட்டும் அள‌விற்கு அவர்களின் போக்கு இருந்தது. பெரும்பாலான சிங்களத் தொழிலாளிகள் தாமுண்டு, தம் வேலையுண்டு என்று இருந்துவிடுபவர்கள். ஆனால், பலர் வெளிப்படையாகவே இனவாதம் கக்கினார்கள். அதுவும் தமிழ்ப் பொறியியலாளர் என்று தெரிந்ததும் அவர்களின் இனத்துவேஷம் வெளிப்படையாகவே தெரிந்தது.
  9. பல கல்வெட்டுக்களை புரட்டிப் பார்த்து…. உங்களுக்கு 39 வயது என கணித்துள்ளேன். சரியா… 🙂
  10. குரூப் B யில் முதல் பிடிக்கும் அணி எது என அவுஸ்திரேலியாவை தெரிவு செய்தவர்கள் இனி கவலை படத்தேவை இல்லை. ஒருத்தருக்கும் புள்ளிகள் கிடைக்காது. இதேபோல அடுத்த சுற்றிலும் சிம்பாவே ஒரு சில போட்டிகள் வென்றால் கவலை இல்லாமல் இருக்கலாம் 😄
  11. இப்படியே வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்திக்கச் செல்வதும், வடையும் கோப்பியும் அருந்திவிட்டு வருவதும் தான் நாம் காலம் காலமாகச் செய்வது. இதனால் யாருக்கு என்ன இலாபம்? இங்கிலாந்தும் எதுவும் செய்யப்போவதில்லை, அமெரிக்காவும் செய்யப்போவதில்லை, இந்தியாவும் செய்யப்போவதில்லை. இவ்வாறான சந்திப்புக்கள் எல்லாமே தமிழ்க் கட்சிகள் "நாமும் இருக்கிறோம்" என்பதை தமிழ்ச் சனத்திற்குக் காட்ட நடத்தப்படுபவைதான். இதனால் ஆன பயன் எதுவும் இல்லை. ஏனென்றால் சிங்களத்தை மீறி, அவர்களை எதிர்த்து தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கைகளை வெளிநாடுகளிடம் வைக்கப்போவதுமில்லை, வெளிநாடுகளும் அவற்றைக் கேட்கப்போவதில்லை. அரசியலில் உதிரிகளாகச் சிதறிக் கிடந்தபடி, பேரினவாதிகளை மடிக்குள் வரவிட்டு விட்டு இன்று வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சென்று பார்த்துப் படமெடுத்துப் போடுவதால் மட்டும் எதுவுமே ஆகிவிடாது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட எவரிடமாவது இதன் மூலம் தமிழினத்திற்குச் சார்பான துரும்பைத்தன்னும் நகர்த்த முடிந்ததா என்று கேளுங்கள். அப்படியில்லை என்றால் எதற்காக இப்படியான சந்திப்புக்களில் கலந்துகொள்கிறீர்கள் என்றாவது கேளுங்கள்.
  12. இப்போது எமது காலத்தைய அரைச்சுவர் வகுப்பறைகள் கட்டப்படுவது இல்லை போல. அரை சுவர் என்றாலும் இரும்பு நெட் எல்லாம் அடித்து சிறை போல் உள்ளது. ஒரு விதத்தில் பாதுகாப்பு என பார்த்தாலும் இன்னோர் விதத்தில் அவசரம் ஆபத்திற்கு வெளியேற முடியாது.
  13. இவரது தொலைபேசி இலக்கம் புதுக்குடியிருப்பு ·என்ற ஒரு பக்கத்தில் பகிரப்பட்டு இருந்தது.இப்போதும் அந்தப் பக்கத்தில் வேலை தேவைப்படுவோருக்காக இணைப்புக்கள் குடுக்கப்பட்டு இருக்கிறது.தப்பான இடம் என்று தெரிந்தும் உடல் உறுப்பை கூட இழக்கும் அளவுக்கு போனவர்களுக்காக என்ன செய்வது..மன்னார் பகுதிக்கு அரசாங்கத்தின் உதவி தொகை போய் உள்ளதாகவும் அதற்கு என்ன நடந்தது என்று தெரியாமலிருக்கிறது என்றும் எழுதுகிறார்கள்.அந்த துறை சார்ந்தவர்களுக்கு கொஞ்சம் அழுத்தம் குடுத்தால் மட்டுமே பணத்திற்கு என்ன நடந்தது என்பது வெளி வரும். சிலரோடு தொடர்பு வைத்தால் அனுப்பும் பணம் முடிந்ததும் மீளவும் தொடர்பு கொண்டு உதவி கேட்பார்கள் கவனம்.தொலைபேசி இலக்கம் - 077 763 2388.
  14. உருவம் வித்தியாசமாக இருந்தாலும் உள்ளடக்கம் ஒன்று தான். யாரும் தப்பவே முடியாது.
  15. கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா பெப். 27, 28இல்! - பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல் 19 Feb, 2026 | 12:12 PM கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இம்மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தேவாலயத்துக்கு வருகைதரவிருக்கும் பொதுமக்களுக்காக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள போக்குவரத்து வசதி, உணவு விநியோகம் முதலான ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவானது யாழ். மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பின் கீழ் யாழ். ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, இந்திய துணைத் தூதரகம் யாழ்ப்பாணம், பிரதேச செயலகம் - நெடுந்தீவு, பிரதேச சபை - நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழுமையான ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையின் ஊடாக பொதுமக்களுக்கு அறியத் தருவதாவது : 2026.02.27ஆம் திகதி காலை 4 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும். கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து 27.02.2026ஆம் திகதி காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும். குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 ஆகும். கச்சதீவுக்கு குழுவாக / தனியாக படகில் வருகை தரும் பக்தர்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர், தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் 2026.02.27ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கச்சதீவு உற்சவத்தில் கலந்துகொள்ளும் யாத்திரிகர்களுக்கு 28.02.2026ஆம் திகதி காலை உணவு மட்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாத்திரிகர்கள் தங்களது தேவைக்கான உணவினை கொண்டுவரமுடியும் என்பதுடன் அப்பிரதேசத்தில் உணவினை சமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாக உள்ளதால் மதுபானம் கொண்டு செல்லுதல், பாவித்தல் மற்றும் புகைப்பிடித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/239035
  16. என்னுடைய நிலைமை படு மோசம்!அவுசை நம்பி மோசம் போய்விட்டேன்.
  17. அந்த நாட்களில் காத்தவராயன் கூத்து - ஆரியமாலா திருமணம் என்று விடிய விடிய கோவில் வீதியில் நடத்துவார்கள். அதில் ஒரு பாட்டு வரும் என்று ஞாபகம். 'ஓராம் படியில் காலை வைத்தேன் பெற்றவளே தாயே எனக்கு.................' என்று ஏதாவது ஒரு இக்கட்டைச் சொல்லுவார்கள். இப்படி எக்கச்சக்கமான படிகளைச் சொல்லிப் பாடி நடிப்பார்கள். யாழ் களத்திலும் கீழே இருந்து மேலே போவது அதே கடினம் தான்...............🤣.
  18. நல்ல தொடக்கம் கொடுத்து நல்ல முடிவை பெர்ரிருக்கினம் என்னைய குண்டைதூக்கிப் போடுறியள் ... நாளைக்கே என் பதவி இறக்கநாளை வைத்திடலாமா....கிருபன் ஜீ இவ்வளவு நாளும் முதல்வராக வைத்திருந்ததிற்கு நன்றி
  19. சுமார் ஒருவருடம் முடிவடைந்த பின்னர் என்னுடன் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற நண்பனான பிரபாகரனையும் அவ்வேலைத்தளத்தில் இணைத்துவிட்டேன். இயல்பாகவே அதிகம் பேசத் தயங்கும் அவன், அத்தொழிற்சாலையில் எவருடனும் அதிகம் பேச்சுக்கொடுப்பதில்லை. தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்துவிடுவான். இதனாலேயே அவன் மீது அங்கு பணியாற்றிய சில சிங்களப் பொறியியலாளர்களும், பெரும்பாலான தொழிலாளர்களும் சந்தேகப் படத் தொடங்கினர். அவனது பெயரும் பிரபாகரன் என்று தெரிந்துவிடவே ஏதோ விடுதலைப் புலிகளின் தலைவரே அங்கு வேலைக்கு வந்து இணைந்திருப்பதாக அவர்கள் நினைத்திருப்பார்களோ என்னவோ? அவன் குறித்து என்னிடம் தொடர்ச்சியாக கேள்விகேட்கத் தொடங்கினார்கள். அவனை எப்படி உனக்குத் தெரியும்? ஏன் எம்முடன் பேசமாட்டேன் என்கிறான்? ஏன் எப்போது பார்த்தாலும் கண்களை முழுசுவது போல வைத்திருக்கிறான்? இவனுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் தொடர்பு இருக்கின்றதா? என்பதே அவர்களின் கேள்விகளாக இருந்து வந்தது. சிலர் வெளிப்படையாகவே அவனைக் கொட்டியா என்று அழைக்கத் தொடங்கினார்கள். சிலவேளைகளில் மனமுடைந்து பேசுவான். எதுக்கடா இங்கே வந்தேன் என்று இருக்கிறது என்றும் கூறுவான். அந்தச் சூழலில் அவனால் நெடுநாள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. "உனக்குச் சிங்களம் தெரியும், அதனால சமாளிக்கிறாய், என்னால முடியாது" என்று சொல்லிக்கொண்டிருந்தான். இதற்கிடையில் அவனது சகோதரியொருவர் ஜேர்மனியிலிருந்து அவனை அழைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருந்தார். சில மாதாங்களிலேயே அவனுக்கான விசா கிடைத்தவுடன், எதுவுமே கூறாது வேலையை விட்டு விட்டுச் சென்றுவிட்டான். அவன் அவ்வாறு வேலையினை உதறித்தள்ளிவிட்டுச் சென்றமையானது நிர்வாகத்தில் அதிருப்தியினை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக எனது நண்பன் என்றபடியினால் என்மீதே அவர்களின் கேளவிக்கணைகள் வந்து வீழ்ந்தன. சிலர் அவனைப் புலிகளின் உறுப்பினர் என்று நம்புமளவிற்கு வதந்திகள் பரவத் தொடங்கியிருந்தன.
  20. புதிய உறுப்பினர் நமச்சிவாயம் வருக! நல்வரவாகுக
  21. எல்லாம் ந‌ப் ஆசையில் பெரிய‌ப்பு ஹா ஹா😄😛.................
  22. வணக்கம் நமசிவாயம், உங்களை அன்புடன் யாழ்.களம் வரவேற்கின்றது.
  23. நன்றி அன்பு சகோதரன்! உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த தமிழ் மூவாயிரத்தின் பாடல் ௲௮௱௨௰௩ (ஆயிரத்தி எண்ணூற்றி இருவத்தி மூன்றாம்) உண்மையும் ரகசியமும் ஆகும். அன்பு மாசித்தர் எம் மகா குரு தேவா திருமூலர் அவர்களின் திருவடிகளை போற்றுகின்றேன். சிவ சிவ ஹர ஹர ௐ முருகா
  24. ந‌ம‌க்கு முட்டை தான்😄😛.............வ‌சி ம‌ட்டும் தான் ச‌ரியா க‌ணித்து இருக்கிறார் வாழ்த்துக்க‌ள் வ‌சி அண்ணா😍....................
  25. வணக்கம் வாருங்கள் நமச்சிவாயம். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே. திருமந்திரம்
  26. இந்தியா மைதானங்களும் இலங்கை மைதானங்களும் வித்தியாசமானவை. இங்கிலாந்து இலங்கையில் சிறப்பாக விளையாடலாம் என நினைக்கிறேன் பிரேமதாசா மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானவை. இங்கு இலங்கை நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இங்கு மிச்சல் சாண்டருடன் இஷ் ஸோதியும் விளையாடுவார் என நினைக்கிறேன் அவுஸ்திரேலியாவை வென்றதைவைத்து இலங்கை இனிமேலும் சிறப்பாக விளையாடும் என்றும் சொல்லமுடியாது. நான் பாகிஸ்தான், இங்கிலாந்தினை அடுத்த சுற்றுக்கு செல்லும் அணிகள் என்று விடை எழுதியிருக்கிறேன் நிசாங்க , ரத்நாயக்க, கமிண்டு மெண்டிஸ் , குசால் மெண்டிஸ் போன்றவர்கள் கவனமாக விளையாடினால் இலங்கைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மற்றைய அணிகளும் பலமானவை.
  27. நமசிவாயம் முருகா வாருங்கோ தங்களின் யாழ்வரவு நல்வரவாகட்டும்.🙏🙏🙏
  28. நான் நினைத்த‌தை விட‌ மூன்று ர‌ன்ஸ் கூட‌ அடித்து விட்டின‌ம் ஹா ஹா 178ர‌ன்ஸ்😄😛 சிம்பாவே அணியால் இந்த‌ ஸ்கோரை அடிச்சு ஆடி வெல்ல‌ முடியாது...................................
  29. வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துகள் !!! இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க ........!
  30. இந்தியனுக்கு சர்வதேச அளவில் நிகழ்வுகளை நடத்தக் கூடிய.. பொறுப்பான குணம் அறவே இல்லை. எல்லாவற்றிலும் ஊழல், களவு, ஏமாற்று வேலைகளை செய்வது… அவர்களின் இரத்தத்தில் ஊறிப் போனது. இந்தக் குணங்கள் நிச்சயமாக அரசியல்வாதிகளிடம் இருந்து தொற்றி இருக்க வேண்டும். அது, மாறி நல்ல குணங்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் தற்போது அறவே இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஒரு சர்வதேச விளையாட்டுப் போட்டியில்… வீரர்கள் தங்குவதற்கான வீடுகளில்… தண்ணீர் இணைப்புகள் சரியாக கொடுக்கப் படவில்லை, கட்டிலில் பழைய மெத்தைகளை போட்டு இருந்தார்கள் என்று பல முறைப்பாடுகள். போதாக் குறைக்கு அந்த வீடுகளில் பாம்புகளின் நடமாட்டமும் இருந்ததாம். இந்தியனுக்கு…. சினிமாவையும், கிரிக்கெட்டையும் தவிர உலகில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றது… அதற்கேற்ப தம்மையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அறிவு இல்லை.
  31. அப்படியெல்லாம் கேட்கக்கூடாது! அவர் ஏன் அணியில் சேர்க்கப்பட்டார் என்றுதான் கேட்கவேண்டும். இவரைவிட Fakhar Zaman நல்ல அதிரடி ஆட்டக்காரர்!!
  32. ஒவ்வொருவருக்கும் மூன்றே மூன்று போட்டிகள். இலங்கை சிறப்பாக விளையாடும். துடுப்பாட்டம் ஆகட்டும் பந்து வீச்சு ஆகட்டும், ஒன்றாக திரண்டு வருது. இலங்கைக்கு முதற் போட்டி பாக்கிஸ்தானுடன்.
  33. கால் நகத்தையும் விட்டு வைக்காத தமிழன்.. யம்புலிங்கேசுவரர் கோயில் - திருவானைக்காவல்
  34. தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
  35. நான் 2003ம் ஆண்டு டென்மார்க்கில் இருக்கும் கில‌ப்பில் ஒன்றான‌ Aalborgக்கு விளையாடினேன்.................ரெனிஸ் ப‌ந்தில் விளையாடின‌ என‌க்கு கொக்பொல் ப‌ந்தில் விளையாடும் போது தான் தெரிந்த‌து கிரிக்கேட் விளையாடுவ‌து எவ‌ள‌வு சிர‌ம‌ம் என்று.................தொலைக் காட்சியில் கிரிக்கேட்டை பார்க்க‌ ந‌ல்லா இருக்கும்...................டென்மார்க் அணி பெரிய‌ அணிக‌ளுட‌ன் விளையாடும் போது அணிக்கு க‌ப்ட‌னாய் இப்ப‌ இருக்கும் சின்ன‌ப் பெடிய‌ங்க‌ளில் ஒருவ‌ர் க‌ப்ட‌னாய் இருப்பார்....................இந்த‌ நாட்டு அர‌சாங்க‌ம் கிரிக்கேட் விளையாட்டை இன்னும் அங்கிக‌ரிக்க‌ வில்லை அதுவும் டென்மார்க் அணிக்கு பின்ன‌டைவு.............................
  36. சிங்களவன்…. விகாரை கட்டுறான், சோனகன்…. அரபு கல்லூரி கட்டுறான், தமிழன்… நண்டு மாதிரி, தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டு இருக்கிறான். எப்பதான் திருந்தப் போகுதுகளோ….
  37. இது வரவேற்கத்தக்க செயல். இதன் மூலம் விபத்துக்களை பெருமளவு குறைக்கலாம். கள்ள மண் ஏற்றிக் கொண்டு… அசுர வேகத்தில் செல்லும் பார ஊர்திகளால், விபத்து ஏற்பட்டு தினமும் பலர் சாகின்றார்கள். இதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  38. பகிடி வதை செய்வதே தவறு. அதை பல்கலைக்கழத்தில் சிறிய அளவில் செய்தாலும் கடந்து போய் விடலாம். ஆனால் பல்கலைக் கழகத்திற்கு வெளியே… புதிய மாணவர்களை தமது தங்கும் விடுதிக்கு அழைத்து… பாலியல் சீண்டல் செய்வது சுத்த அயோக்கியத்தனம். இவர்களுக்கு அதி உச்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
  39. பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான பழங்குடி ஓவியரின் மனைவிக்கு அரசுப்பணி பட மூலாதாரம்,Getty Images நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குறும்பர் பழங்குடி ஓவியர் கிருஷ்ணன் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள நிலையில், அவரது மனைவிக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கல்வியைத் தொடரவும் அரசு வழிவகை செய்துள்ளது. கடந்த ஆண்டில் கிருஷ்ணன் மறைந்துவிட்ட நிலையில், அவரின் குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கிருஷ்ணனின் மனைவி சுசீலா, ஒரு மகன், 3 மகள்களுடன், கிருஷ்ணனின் வெள்ளரிக்கோம்பையில் வசித்து வந்தார். கிருஷ்ணன் மறைவுக்குப் பின், பாதுகாப்பு கருதி, கல்லாறு அருகேயுள்ள புளியமரத்தூர் என்ற கிராமத்திற்கு அவரின் குடும்பம் குடிபெயர்ந்தது. சுசீலாவின் தாய், தந்தை, அங்குள்ள ஒரு பாக்குத்தோட்டத்தில் பணியாற்றி வந்தனர். அவர்கள் குடியிருப்பதற்கு அந்தத் தோட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த குடிசை வீட்டில், சுசீலாவும் 4 குழந்தைகளும் வாழ்ந்து வருகின்றனர். சுசீலா அதே தோட்டத்தில் ரூ.300 கூலிக்கு பணியாற்றி வந்தார். இவர்களின் மூத்த மகள் வாசுகி, பிளஸ் 2 முடித்து விட்டு, உதகையிலுள்ள தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் பார்மஸி டிப்ளமோ படித்துவந்தார். ஆனால் அதற்கான கல்விக்கட்டணத்தைச் செலுத்த முடியாமல் வீட்டில் இருந்துவந்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் ராகுல், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளி விடுதியிலும், ஏழாம் வகுப்பு படிக்கும் கீதா, நான்காம் வகுப்பு படிக்கும் கீர்த்திகா ஆகிய இருவரும் நீலகிரியிலுள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளியிலுள்ள விடுதியிலும் தங்கிப் படித்து வந்தனர். இந்நிலையில்தான் கிருஷ்ணனுக்கு கடந்த மாதத்தில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. தங்களின் குடும்ப நிலை குறித்து சுசீலா, பிபிசி தமிழ் உள்ளிட்ட ஊடகங்களிடம் பேசியிருந்தார். தன்னுடைய கல்வித்தகுதிக்கேற்ப அரசுப்பணி வழங்கவேண்டும், தனது மூத்த மகள் அவள் படித்த அதே கல்லூரியில் படிப்பதற்கும், மற்ற குழந்தைகள் கல்விக்கும் அரசு உதவ வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் விளைவாக, தமிழக அரசு சார்பில் கிருஷ்ணன் குடும்பத்தினரை நீலகிரி மற்றும் கோவை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அணுகினர். அவர்களுடைய விருப்பத்தின்பேரில், தற்போது நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள அரசு ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளியில் தோட்டப்பணியாளர் பணிக்கான ஆணையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வழங்கினார். அதே பள்ளியில் அவர்கள் குடியிருக்க வீடும் ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த மகள் வாசுகி, அவர் படித்து வந்த கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் தொடரவும், மற்ற 3 குழந்தைகளும் சுசீலா பணியாற்றும் அதே ஏகலைவா பள்ளியில் விடுதியில் தங்கிப்படிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய கிருஷ்ணனின் மனைவி சுசீலா, ‘‘எனது கணவர் இறந்தபின்பும் எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். அவரால்தான் எனக்கு இந்த பணி கிடைத்துள்ளது. என் மூத்த மகள் வாசுகியை இந்த ஆண்டில் டிப்ளமோ பார்மஸி படிப்பில் தொடரவும், அடுத்த ஆண்டில் அவள் விரும்பியபடி பி.பார்ம் படிப்பில் இணையவும் நீலகிரி ஆட்சியர் ஏற்பாடு செய்திருக்கிறார்.’’ என்றார். மேலும் பேசிய அவர், ‘‘எனக்கு மாதம் ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் பணி ஆணை தரப்பட்டுள்ளது. இனிமேல் என்னுடைய 3 குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. எங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டுமென்ற கோரிக்கையையும் அரசிடம் வைத்திருக்கிறோம். அதற்கும் ஆவன செய்வதாக ஆட்சியர் கூறியுள்ளார். வரும் 22, 23 ஆகிய நாட்களில் சென்னை ஆளுநர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் 15 பேருடன் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. அங்கே செல்கிறோம். ’’ என்றார். https://www.bbc.com/tamil/live/clyx48qxzddt?post=asset%3A3cb5d876-3db9-425e-bc74-55638be241d8#asset:3cb5d876-3db9-425e-bc74-55638be241d8
  40. அவுஸ் வெளியேற என்ன காரணம்? ஐ பில் எல் செய்த சூனியமோ?
  41. ரசனிக்கு... கட்டிய கோயிலில், சிவராத்திரி சிறப்பு பூஜை செய்த ரசிகர். காணொளி: 👉 https://www.facebook.com/reel/2564899520615829 👈
  42. யாழ்கள உறுப்பினர் தயா அவர்களின் யூலை 83 கலவர அனுபவம். யாழ்கள அமரர் சோழியன் அவர்களின் கருப்பு யூலை அனுபவம் http://www.madathuvaasal.com/2006/07/83.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.