Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. இது இயலாக்கடைசியில் சொல்வது. இஸ்ரேலின் உகண்டா பணய கைதிகள் மீட்பு உலக புகழ் பெற்றது. கமாசிடம் ஆப்பிட்டால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். ஒரு இனத்தை அழித்த வரலாறை பலஸ்தீனியர்கள் வைக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தொடர்ந்து போராடுகிரார்கள். அவர்களுக்கு உதவிகளும் உண்டு. உண்மையில் அழியும் இனம் நாம் தான்.
  2. கனடிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் திரிசங்கு நிலை சிவதாசன்இன்னும் 36 நாட்களில், ஏப்றில் 28 அன்று கனடிய பொதுத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கனடாவின் அதி குறைந்த ஆயுட்காலத்தைக்கொண்ட பிரதமர் என மார்க் கார்ணி வரலாற்றில் இடம்பெறுகிறார். அவரின் இன்றைய தேர்தல் அறிவிப்பை வானொலி மூலம் கேட்க முடிந்தது. அக்டோபர் 2025 மட்டும் அவகாசமிருக்க கார்ணி ஏந் இவ்வளவு அவசரமாகத் தேர்தலை அறிவித்தார் என ரொறோண்டோ ஸ்டார் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார். பதில் மழுப்புதலாக இருந்தாலும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியேவின் ‘கீறல் விழுந்த ரெக்கோர்ட்’ பதிலாக இருக்காதது வித்தியாசமாக இருந்தது. கனடிய அரசியலில் மிகவும் அதிர்ஷ்டம் குறைந்தவர் என்றால் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியேவ் தான். இரண்டு, மூன்று தடவைகளில் சந்தித்துப் பேசும் சதர்ப்பமும் கிடைத்தது. ‘அவ்வளவு பிழையான ஆளில்லை’ என்று ஊர் சொல்லக்கூடிய ஒருவர் தான். இருப்பினும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை. அடுத்த 36 நாட்களுக்குள் கிரகங்கள் ஏதாவது சடுதியாக மாற்றப்பட்டாலே தவிர ராஜாவுக்குச் சாண்சே இல்லைப் போலிருக்கிறது. ட்றம்ப் உளறத் தொடங்கியவுடனே டக் ஃபோர்ட் கொடுக்கைக் கட்டியதை பொய்லியேவ் ந்திருப்பாரோ அல்லது அவரது வாய்க்குப் பூட்டுப் போடப்பட்டதோ தெரியாது. அன்றே அவரிடமிருந்த ஒரேயொரு நட்பான கிரகமும் வீடு மாறிவிட்டது. எல்லாம் இந்த கருத்துக் கணிப்பாளர்கள் செய்யும் வேலை. தெருவில் திரிந்த சாதாரண மனிதரைப் பாப்பாவில் ஏற்றிவிட்டு சனத்தை உசுப்பேத்திவிட அவரைச் சுற்றியிருந்த ஆலோசக சேனை அவரது கண்ணாடியைக் கழற்றிவிட்டு அப்பிளைக் கொடுத்து கடித்துக் கடித்து ஊடகருக்குப் பதில் சொல்ல வைக்க உசுப்பேத்தப்பட்ட மகாஜனங்கள் கைதட்டி ரசிக்க ஏறியவர் இறங்க மறுத்துவிட்டார் – அது ட்றம்ப் குளறும்வரை. பப்பா மரத்திலிருந்து இறங்கியபோது கைதட்டிய மகாஜனங்களில் பலபேர் துண்டைக் காணோம் துணியைக் காணோஈம் என்று ஓடிப்போய் எதிரியின் கூடாரத்துக்குள் ஒளிந்துகொண்டனர். கருத்துக்கணிப்பாளர் பாவம். அவர்கள் தமக்குக் கிடைத்த கட்டளைகளை நிறைவேற்றத்தானே வேண்டும். கார்ணியின் வரவு தற்செயலானதல்ல. தேவை கருதி அவசரமாகக் களமிறக்கப்பட்ட ஒருவர் அவர். அவரது வரவால் சிறகொடிக்கப்பட்ட கிறிஸ்டினா ஃபிறீலாண்ட் ஒரு திருப்பலி. இதுவரை மேற்கு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக இருந்து கோலோச்சிய அமெரிக்காவும் ஒரு நாள் தடம் புரளும் என்பதை ட்றம்ப் நிரூபித்த பிறகு, மேற்கு தனக்கான ஒரு புதிய தலைமையை உருவாக்கத் தீர்மானித்துவிட்டது. ஐரோப்பாவை மையமாகக் கொண்டிருக்கும் இப்புதிய தலைமையின் உருவாக்கத்தில் கனடாவுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. அந்த அவசிய பயணத்தை முன்னெடுக்கக்கூடிய தலைமை பொய்லியேவுக்கு இல்லை. அதற்குத் தேவையான ‘ஆங்கிலோ சக்ஸன்’ மரபணு அவரிடம் இருப்பத் போலத் தெரியவில்லை. அந்த establishment இனால் முன்தள்ளப்பட்ட மாமணியே கார்ணி. கார்ணியின் முன்தள்ளலுக்குப் பின்னால் இருக்கும் establishment எனப்படும் இம்மர்ம விசையில் கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி பங்காளியாய் இல்லைப் போலத் தெரிகிறது. இதற்குக் காரணம் பொய்லியேவா அல்லது கட்சி இயந்திரமோ தெரியவில்லை. ஐரோப்பா தலைமையில் ஆரம்பமாகும் இப்புதிய ஒழுங்கிற்கான பின்னரங்கச் சந்திப்புகளில் பொய்லியேவ் ஒதுக்கப்பட்டு டக் ஃபோர்ட்டுக்கு உயரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளமை தெரிகிறது. இதற்கு ட்றூடோவின் பங்களிப்பும் இருந்திருக்கலாம். மாகாண பொதுத் தேர்தலில் டக் ஃபோர்ட் அமோக வெற்றி பெற்றதும் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அப்போதைய பிரதமர் ட்றூடோ தொலைபேசியில் அழைத்து டக் ஃபோர்ட்டிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சியாகவிருந்தும் தன் சக கட்சித் தலைவருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்க பொய்லியேவுக்கு 18 நாட்கள் எடுத்திருக்கின்றது. ஃபோர்ட்டுக்கும் பொய்லியேவுக்குமிடையில் பனிப்போர் இருக்கிறதென்பது தெரிகிறது. ஆனால் அது எப்போ, எதற்காக அல்லது யாருக்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு விளக்கமில்லை. டுத்தார். இருவருக்கும் அதிக நேரம் பேசத் தேவை இருக்காதவாறு உறவு புளித்துப் போயிருந்தது. ஆனாலும் டக் ஃபோர்ட் தனது பழிவாங்கலை வேறு வடிவங்களில் கச்சிதமாக முடித்துவிட்டார். தனது முடிசூடலுக்கு கிறிஸ்டியா ஃபிறீலாண்டுக்கு அழைப்பு விடுத்ததுடன் கார்ணியுடன் காலையுணவுக்கும் ஒழுங்குசெய்து விட்டார். ஃபோர்ட்டுக்கு சில வேளை தூரப்பார்வை அதிகமாக இருக்கலாம். வரப்போகும் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வி கண்டால் அதன் தலைமை ஆசனத்தில் அடுத்த தலைவராகத் தான் அமர்ந்துகொள்ளலாம் என்ற எண்ணமும் பொய்லியேவை உதாசீனம் செய்யக் காரணமாக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஃபோர்ட்டின் தேர்தல் வெற்றியை உடனடியாக வாழ்த்த விரும்பாத பொய்லியேவின் முடிவு சுயமானதா அல்லது தூண்டப்பட்டதா தெரியாது. ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலருக்கு இது அதிர்ச்சியானது என ரொறோண்டோ ஸ்டார் எழுதியிருக்கிறது. தூரத்தில் வைத்திருப்பது கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் புதிய விடயமல்ல. 2019 இல் ஃபோர்ட்டின் செல்வாக்கு சரிந்தபோது அப்போதைய மத்திய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அண்ட்றூ ஷியர் ஃபோர்ட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்திருந்தார். 6 வருடங்களில் இந்த வன்மம் வளர்ந்திருக்க வாய்ப்புண்டு. கனடாவின் 41 மில்லியன் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஒன்ராறியோவில் இருக்கிறது. மொத்தம் 343 ஆசனங்களில் 122 ஆசனங்கள் ஒன்ராறியோவில் மாத்திரம் இருக்கின்றன. அப்படியிருந்தும் ஃபோர்ட்டைப் புறந்தள்ளும் யோசனை கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வருகிறதென்றால் சாணக்கியம் என்பது இவர்களுக்கு அன்னியமானதொன்று என்றுதான் பார்க்க வேண்டும். இப்படியான ஒரு கட்சியால் ட்றம்ப் போன்றவர்களை எப்படிச் சமாளிக்க முடியும்? என வாக்காள மகாஜனங்கள் யோசித்து, தீர ஆலோசித்து வாக்குகளை அளிக்க கார்ணி அதிக அவகாசம் கொடுக்காமல் அவசர தேர்தலுக்கு – ஒரு வகையில் preemptive- அறிவிப்பை விடுத்திருக்கிறார். ட்றம்பின் பலத்தை முன்வைத்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டதை விட பொய்லியேவின் பலவீனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டதாகவே பார்க்கப்படவேண்டியிருக்கிறது. அடுத்த 36 நாட்களில் ட்றம்பின் சிறிய இரைச்சல்களையும் பெரிதாக amplify பண்ணுவதுதான் லிபரல் கட்சியின் strategy ஆகவிருக்குமென எதிர்பார்க்கலாம். நேரடடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஃபோர்ட் இதற்கு உதவி செய்வார். பொய்லியேவ் கட்சியில் ஊதுவதற்குப் புதிய விடயமுமில்லை. அதை முன்னெடுப்பதற்கான இரண்டாம் நிலை charismatic தலைவருமில்லை. லிபரல் கட்சியை அதிகமாக இடதுபக்கம் தள்ளிச்சென்ற ட்றூடோ கட்சியில் விட்டுச் சென்ற சிவப்புச் சாயத்தைக் கழுவி கொஞ்சமேனும் வலது பக்கம் நோக்கித் தள்ளும் முயற்சியை கார்ணி ஏற்கெனவே வெளிக்காட்டிவிட்டார். அதற்கு மாறாக வலது பக்கமிருந்த கன்சர்வேட்டிவ் கட்சியைக் கொஞ்சம் இடதுபக்கம் நகர்த்த பொய்லியேவ் முயற்சிப்பதும் தெரிகிறது. திடீரென அவர் தொழிலாளர்களைப் பின்வரிசையில் நிறுத்தி அவர்களின் தோழராகப் படம் காட்டுவது அப்பட்டமாகத் தெரிகிறது. அந்தளவிற்கு கட்சியில் மூளை வறுமை இருக்கிறது. பாவம் பொய்லியேவ். நல்ல மனிசன். சுற்றம் சரியில்லை. veedu.comகனடிய தேர்தல்: கன்சர்வேட்டிவ் கட்சியின் திரிசங்கு நிலை -...சிவதாசன் இன்னும் 36 நாட்களில், ஏப்றில் 28 அன்று கனடிய பொதுத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கனடாவின் அதி குறைந்த ஆயுட்காலத்தைக்கொண்ட பிரதமர் என
  3. எந்த தொழில் நுட்பத்தாலும் (இஸ்ரேலால்) பணய கைதிகளை கண்டு பிடிக்க முடிமாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இஸ்ரேலின் பொட்டுக்கேடும் இது தான். அயன் டோம் அடுத்த தோல்வி. எத்தனை ஊடகங்களை தடை செய்தாலும் உண்மைகள் வெளிவந்த வண்ணமே உள்ளன.
  4. தனிக்காட்டுராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  5. கடமை தவறியுள்ளது தேர்தல் திணைக்களம்! தேர்தல் திணைக்களம் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது என வல்வெட்டித்துறை சுயேட்சைக்குழுவின் முதன்மை வேட்பாளர் முன்னாள் வல்வெட்டித்துறை நகரபிதாவுமான சபாரத்தினம் செல்வேந்திரா குறிப்பிட்டுள்ளார். யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்றைய தினம் (22) சனிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் . உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலத்திய போது வேட்புமனு தாக்கலின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் தொடர்பான அறிவுறுத்தலுக்கு அமைவாக அவற்றை தயார் செய்து சமர்ப்பித்திருந்தோம். வேட்புமனு தாக்கல் 17 ஆம் திகதி இடம்பெற இருந்த நிலையில் இறுதி நேரத்தில் 16 ஆம் திகதி வேட்பாளர்களது பிறப்பு சான்றிதழ்களின் மூலப்பிரதி கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என திடீரென மாற்றம் செய்திருந்தனர். குறித்த மாற்றம் தொடர்பில் போதிய அறிவுறுத்தல் எதனையும் வழங்காதது அவர்களது தவறாகும். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்ற சமயத்தில் மாவட்ட செயலக வளாகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் தரப்பினருக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் எமது ஆவணங்களையும் சரிபார்த்திருந்தார்கள். இதன்போது பிறப்பு சான்றிதழ் பிரதியில் சமாதான நீதவான் மூலம் உறுதிப்படுத்தி வழங்குமாறு அறிவுறுத்தியிருந்தார்கள். உடனடியாக அதனை செய்தே நாம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தோம். மேற்குறித்த மாற்றம் குறித்து உதவி வழங்குவதற்காக இருந்த உத்தியோகத்தர்கள் கூட எதனையும் எமக்கு தெரிவிக்கவில்லை. இந்த விடயத்தில் தேர்தல் திணைக்களம் தனது கடமையில் இருந்து தவறியுள்ளது என்றார். https://torontotamilnews.com/breifNews.php?newsID=331005&category=TamilNews&language=tamil
  6. பொது தேர்தலில் தோற்று உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு கிழக்குக்கு அப்பால் கக்கீமுடன் (முஸ்லீம்காங்கிரஸ்) கூட்டு வைத்துள்ளார்.
  7. கிழக்கில் முஸ்லிம் காடையர்கள் செய்த கொலைகளுக்கு மன்னிப்பு கேட்டார்களா? மடவெல இணையம் கருத்தில் எடுக்கும் என நினைக்கிறேன். பல இனப்படுகொலைகளை செய்த சிங்கள அரசு மன்னிப்பு கேட்டதா? செங்கோலை தூக்கி கொண்டு ஒடியவர்கள், கைகலப்புகளில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர் தடை செய்யப்பட்டனர்?
  8. சிங்களா அரசு ( மக்களும் கூட) சாப்பாடு இல்லா விட்டாலும் . பறவாயில்லை வி. புலிகள் மீண்டும் உருவாக கூடாது என்ற மனோநிலையில் இருந்து செயற்படுகிறார்கள்.
  9. வணக்கம், செழியன்.
  10. ஒரு தலை ராகம் .......................... ஒரு மன மாற்றத்திற்காக அறையை இருட்டாக்கி, முறுக்கு டப்பாவை கையில் வைத்துக்கொண்டு, வசதியாக சாய்ந்தபடி, மனதிற்கு பிடித்த படம் யூ ட்யூபில் பார்க்கத் தொடங்கினேன்... 1980 ல் வெளி வந்த டி.ராஜேந்தரின் படம்... கதாநாயகி ரூபா அற்புதமான தேர்வு...மிகக் குறைந்த வசனம்தான் அவருக்கு படம் நெடுகிலும்... பேசமுடியாத வசனங்களை பேசும் கண்களால் அப்படியே நம்முன் கொட்டுகிறார்... அந்த அகன்ற கரிய விழிகள்தான் எத்தனை உணர்வுகளை படம் முழுதும் பேசிக் கொண்டே போகிறது...படம் முழுவதிற்கும் இரு முறை தான் சிரித்திரிப்பார்... அவர் கட்டியிருந்த அத்தனை காட்டன் சேலைகளும் அவ்வளவு அழகு... கதாநாயகன் சங்கர் அந்த காலத்தில் எங்களுக்கெல்லாம் ஹீரோ. இந்தத் திரைப்படம் வெளி வந்த உடன் எத்தனை இளம்பெண்கள் அவர் மேல் காதற்வயப்பட்டார்கள் என நன்கறிவேன்... சோகத்தை வெளிக் காண்பிக்கும் நடிப்பில் பின்னி எடுக்கிறார்... ஆனால் அந்த கால பெல்பாட்டமும், காதை மறைத்த தலை முடி அலங்காரமும், நெஞ்சில் பேன்ட்டை டக் இன் செய்யும் விதம்தான் கொஞ்சம் சிரிப்பு மூட்டியது... ஒவ்வொரு நடிகரும், நடிகையும், சந்திரசேகராகட்டும், உஷாவாகட்டும், ரவீந்தராகட்டும், தியாகுவாகட்டும், தன் கதாபாத்திரத்தை செவ்வனே செதுக்கியிருந்தார்கள்... 80 களில் இருபாலார் படிக்கும் கல்லூரியை அப்படியே கண்முன் நிறுத்தினார்கள்... எனக்கு நான் படித்த சிவகங்கை மன்னர் கல்லூரி, எங்கள் தோழிகள், கூட படித்த மாணவர்கள் என நினைவு சுழற்றி அடித்துக் கொண்டே இருந்தது.. வசனங்கள்...நோ சான்ஸ்...அவ்வளவு அருமை...இப்போதைய பெரும்பான்மையான படங்களில் தேவையில்லாத நேரத்தில் வண்டி வண்டியாக நடிகர்கள் வசனம் பேசுகிறார்களே? கதாநாயகன் கோவிலில் பக்கத்தில் நிற்கிறான்.. அவனுடன் பேச முடியாத நிலை..தங்கை அருகிலிருக்கிறாள்...எண்ணெய் கிண்ணத்தை தவற விடுகிறாள்... " எண்ணயவே (என்னய) கொட்டிட்டேன்...திருப்பி அள்ள முடியல" என்கிறாள் அவன் உணரும் வகையில்... நாயகிடம் நாயகன் என்னைக் காதலிக்கிறாயா எனக் கேட்க பதிலுரைக்காமல் மவுனமாக அங்கிருந்து அகல்கிறாள்... அவன், அவள் , தோழி என மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒன்றிருக்கையில் தோழியிடம் அவன் சொல்கிறான்" கேட்காத கேள்விக்கு நீங்க பதில் சொல்றீங்க...கேட்ட கேள்விக்கே சிலர் பதில் சொல்ல மாட்டேங்கறாங்க" அப்போது சுழற்றி சுழற்றி ரூபாவின் விழிகள் நர்த்தனமாடும் பாருங்கள்...மிக அழகு அக்காட்சி, வசனம் அத்தனையும்... இறுதி காட்சி...நாயகி நாயகனிடம் தன் மனதிற்குள் பொத்தி வைத்திருந்த காதலைப் பேசித் தீர்க்க வேண்டுமென நெடும் போராட்டத்திற்கு பின் கல்லூரி முடிந்த மறுநாள் முடிவெடுத்து கிளம்புகிறாள்.. அவள் மிகவும் அக்கறையுடன் தன்னை அலங்கரித்து கொள்வதை கவலை கலந்த வெறுப்புடன் தாய் பார்க்கிறாள்.. நாயகியின் அம்மா " காலைல எழுந்திரிச்ச, குளிச்ச, பேசாம போய்ட்ருக்க? எங்க போற?" "பேசத்தான் போறேன்" நாயகி.. "என்னடி உளர்ற?" அம்மா "உளறலம்மா இப்பத்தான் நிதானமா பேசறேன்" நாயகி.. இந்த இடத்தில் என்னையும் மீறி வசன அபாரத்திற்கு கரங்கொட்டி மகிழ்ந்தேன்... வசன கர்த்தாக்கள் படத்தை நகர்த்தும் விதம்தான் படத்திற்கு அழகூட்டும் என்பேன் நான்... பாட்டுக்கள் அத்தனையும் தேனினிமை.... என்ன பொருட்சுவை... என்ன காட்சிப் பொருத்தம்... "ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும் அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்" வாசமில்லா மலரிது பாடலில்.. "கிணற்றுக்குள் வாழும் தவளையை போல மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி" கடவுள் வாழும் கோவிலிலே பாடலில்.. 'வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்.. வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்" குழந்தை பாடும் தாலாட்டு பாடலில்.. மிகைப்படுத்தப் பட்ட சண்டைக் காட்சிகள் இல்லை... அபத்தமான வசனங்கள் இல்லை... நகைச்சுவை என்ற பெயரில் முகஞ்சுளிக்க வைக்கும் தனித்தடம் இல்லை... அழகு, யதார்த்தம், இயல்பு, இவையன்றி வேறேதும் இல்லை... ஆனால் படம் முடிந்த வுடன் மனம் முழுதும் சோகம் கவ்வியது.. 80 களில் பட்டையை கிளப்பிய படம்...200 நாட்கள் தாண்டி ஓடிய படம்... Hats off ராஜேந்தர் சார்... இதே போல் இன்னுமொரு அழகான படம் கொடுங்களேன்... Lakshmi RS
  11. இணையவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  12. சற்றுமுன் யாழ் மாவட்ட செயலகத்தில் குழப்பம் - கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிப்பால் பதற்றம்
  13. டீன்ஏஜ் வயசுலேயே கர்ப்பமா.. அச்சச்சோ.. என்னெல்லாம் சிக்கல் வரும் தெரியுமா!கர்ப்பகால அசெளகரியங்கள் பொதுவானவை. ஆனால் கர்ப்பிணி பெண்ணின் வயதும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறு வயதில் கர்ப்பம் அடையும் போது இந்த பிரச்சனைகள் அதிகமாகவே இருக்கும். அது என்ன என்பதை பார்க்கலாம்.டீனேஜ் கர்ப்பம் என்றால் என்ன? டீனேஜ் கர்ப்பம் என்பது 20 வயதுக்கு உட்பட்ட பெண் கர்ப்பம் தரிப்பதை குறிப்பது. பொதுவாக 15-19 வயதுக்கு இடைப்பட்ட வயதினரை குறிக்கிறது. வெகு அரிதாக இதைவிட குறைந்த வயது பெண்கள் அதாவது பெண் குழந்தைகள் என்று கூட சொல்லலாம். அவர்கள் இளமை பருவ கர்ப்பம் கொண்டவர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. முந்தைய காலங்களில் பெண்கள் பூப்படைவதற்கு முன்பு திருமணம் செய்யும் வழக்கம் இருந்தது. நாளடைவில் பெண்ணின் திருமண வயது 18 பிறகு 21 வரை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனினும் சில இடங்களில் பெண் குழந்தைகளுக்கு இளவயதில் திருமணமும் உடன் கர்ப்பமும் நிகழ்ந்துவிடுகிறது. இளவயதில் கர்ப்பமடைவதால் உண்டாகும் சிக்கல்கள் என்ன என்பதை அறியலாம். டீனேஜ் கர்ப்ப சிக்கல்கள் - மகப்பேறுக்கு முற்பட்ட பராமரிப்பு இல்லாமை கர்ப்பிணி பெண் பதின்ம வயதை கொண்டிருந்தால் சரியான பராமரிப்பு கிடைக்காமல் போகலாம். குறிப்பாக கர்ப்பத்தின் முதல் மாதங்களில். மகப்பேறுக்கு முற்பட்ட பராமரிப்பு தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் மருத்துவ பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. குழந்தையின் வளர்ச்சியை கண்காணிப்பதால் சிக்கல்கள் இருந்தாலும் விரைவாக சமாளிக்க உதவுகிறது. மேலும் ஃபோலிக் அமிலத்துடன் கூடிய முந்தைய வைட்டமின்கள், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு எடுத்துகொள்வது நரம்பு குழாய் குறைபாடுகள் போன்ற சில பிறப்பு குறைபாடுகளை தடுக்க செய்கிறது. ஆனால் இத்தகைய அபாயங்கள் மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு இல்லாமையால் இளவயது கர்ப்பத்தில் அதிகமாக எதிர்கொள்கிறார்கள். டீனேஜ் கர்ப்ப சிக்கல்கள் - உயர் ரத்த அழுத்தம் 20 அல்லது 30 வயதுக்குட்பட்ட கர்ப்பிணி பெண்களை விட பதின்ம வயதில் கருத்தரிக்கும் பெண்களுக்கு உயர் ரத்த அழுத்த அபாயம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கர்ப்பத்தால் தூண்டப்பட்ட உயர் ரத்த அழுத்தம் அவர்களுக்கு ப்ரீக்ளாம்ப்சியா ஏற்படும் அபாயத்தை உண்டாக்கலாம். இது ஆபத்தான நிலை. இதனால் சிறுநீரில் அதிகப்படியான புரதம் வெளியேறும். தாயின் கைகள், கால்கள் மற்றும் முகம் வீக்கம் அடைந்து உடலில் மற்ற உறுப்புகளும் சேதத்தை உண்டாக்க செய்கிறது. இந்த மருத்துவ அபாயங்கள் சிறு வயது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பை உண்டு செய்கின்றன. இது பிறக்காத குழந்தையின் வளர்ச்சியை சீர்குலைக்கும். முன்கூட்டிய பிறப்பு சிக்கல்களை உண்டாக்கும். டீனேஜ் கர்ப்பங்கள் - முன் கூட்டிய பிறப்பு முழு கர்ப்பம் என்பது 40 வாரங்கள் வரை நீடிக்கும். 37 வாரங்களுக்கு முன்பு பிரசவிக்கும் குழந்தை குறைமாத குழந்தை என்று அழைக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே தொடங்கும் முன்கூட்டிய பிரசவம் மருந்துகளால் தடுக்கபடலாம். மற்ற நேரங்களில் தாய் அல்லது குழந்தையின் ஆரோக்கியத்திற்காக குழந்தையை முன்கூட்டியே வெளியே எடுக்க மருத்துவர் திட்டமிடலாம். சுவாசம் செரிமான,, பார்வை, அறிவாற்றல் என மற்ற பிற பிரச்சனைகளுக்கான ஆபத்து உண்டாகலாம். டீனேஜ் கர்ப்பங்கள் - குறைந்த எடை பதின்ம வயதில் கருத்தரிக்கும் போது அது குறைந்த எடை கொண்ட குழந்தைகளை பெறுவதற்கான ஆபத்தை உண்டு செய்கிறது. முன்கூட்டிய குழந்தைகளின் எடையை விட குறைவாக இருக்கும். காரணம் கருப்பையில் வளரும் நேரத்தை குறைவாக கொண்டிருப்பதே இதற்கு காரணம். குறைந்த எடை கொண்ட குழந்தை 3.3. முதல் 5.5. பவுண்டுகள் மட்டுமே எடையை கொண்டிருப்பார்கள். குறைவான பிறப்பு எடை கொண்ட குழந்தை 3.3. பவுண்டுகளுக்கும் குறைவான எடை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சுவாசிக்க வெண்டிலேட்டரில் வைக்க வேண்டியிருக்கும். டீனேஜ் கர்ப்பங்கள் -எஸ்டிடி (பாலியல் நோய்கள்) கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்ளும் பதின்ம வயதினருக்கு கிளமிடியா மற்றும் ஹெச் ஐவி போன்ற எஸ்டிடிக்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. உடலுறவின் போது லேடக்ஸ் ஆணுறையை பயன்படுத்துவது STD களை தடுக்க உதவும். இது கருப்பை மற்றும் வளரும் குழந்தைக்கு பாதிப்பை உண்டு செய்யலாம். டீனேஜ் கர்ப்பங்கள் - மகப்பேறுக்கு பிறகு மனச்சோர்வு Centers for Disease Control படி பதின்ம வயது பெண் கருவுற்றால் பிரசவத்துக்கு பிறகான மனச்சோர்வு ஆபத்தை கொண்டிருக்கிறார்கள். கர்ப்பமாக இருக்கும் போது அல்லது பிரசவத்துக்கு பிறகு மனச்சோர்வடைந்த மற்றும் சோகமாக இருக்கும் பெண்கள் மருத்துவரிடம் வெளிப்படையாக பேச வேண்டும். புதிதாக பிறந்த குழந்தையை கவனித்துகொள்வதில் மனச்சோர்வு தலையிடலாம். மற்றும் ஆரோக்கியமான டீனேஜ் வளர்ச்சியுடன் சிகிச்சையளிக்க முடியும். சிறுவயதில் திருமணம் 16 அல்லது 17 வயதில் கர்ப்பம் என்றால் முதலில் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். மது, புகைப்பழக்கம் இருந்தால் அதிலிருந்து விலகி இருங்கள். இது கருவிலிருக்கும் குழந்தைக்கு அதிக தீங்கை உண்டு செய்யும். பிறப்பு குறைபாடுகளை தடுக்க ஒவ்வொரு நாளும் குறைந்தது 0.4 மில்லிகிராம் ஃபோலிக் அமிலத்துடன் கூடிய வைட்டமின் மருத்துவர் அறிவுரையுடன் எடுத்துகொள்ளுங்கள். இயன்றவரை சிறு வயது திருமணம் உடன் குழந்தைப்பேறு தவிர்ப்பதே நல்லது. Samayam TamilTeenage pregnancy: டீன்ஏஜ் வயசுலேயே கர்ப்பமா.. அச்சச்சோ....கர்ப்பகால அசெளகரியங்கள் பொதுவானவை. ஆனால் கர்ப்பிணி பெண்ணின் வயதும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறு வயதில் கர்ப்பம் அடையும் போது இந்த பிரச்சனைகள் அதிகமாகவே இருக்கும். அது என்ன என்பதை பார்க்கலாம்.
  14. இனப்படுகொலைகள் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டும்! [Thursday 2025-03-20 06:00] http://seithy.com/siteadmin/upload/sritharan-100125-seithy.jpeg தமிழ் மக்கள் மீது 1956 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரை நடந்த இனப்படுகொலைகள் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத் திட்டத்தின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பட்டலந்த வதைமுகாம் தொடர்பான செய்திகள் தற்போது மிகப் பரவலாக வெளிவருகின்றன. பட்டலந்த என்பது 1988 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் இந்த நாட்டில் இருந்த ஜே.வி.பி போராளிகளை கைது செய்து கொண்டு சென்று அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதுடன், படுகொலை செய்யப்பட்டனர் என்பதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கை இவ்வளவு காலமும் கிடப்பில் இருந்து, இப்போது அல்ஜசீராவுக்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய நேர்காணலுக்கு பின்னர் அந்த அறிக்கை வெளியில் வந்துள்ளது. 1988 மற்றும் 1989இல் நடந்த ஜே.வி.பி மீதான படுகொலைகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஐ.நா.வில் அறிக்கையொன்றையும் சமர்ப்பித்திருந்தார். ஜே.வி.பி. மீதான படுகொலைகள் தொடர்பான செய்தியை அவர் அங்கு கொண்டு சென்றிருந்தார். ஆனால் அந்தக் காலத்தில் இதற்கான தீர்வுகள் எட்டப்படவில்லை. ஜே.வி.பி. அடுத்து வந்த ஆண்டுகளில் சந்திரிகாவுடன் இணைந்து ஆட்சி செய்த போதும் பட்டலந்த படுகொலைகள் தொடர்பில் எவ்வித கோரிக்கைகளையும் விடுக்கவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. அந்த விடயத்தை இப்போது கையில் எடுத்திருப்பது நியாயமானது. இது தொடர்பில் விசாரணை வேண்டும். படுகொலை செய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு நீதி வேண்டும். கதிர்காமத்து அழகி மனம்பேரியை சொந்த சகோதர இராணுவத்தினரே நிர்வாணமாக்கி படுகொலை செய்தார்கள் என்பது உலக வரலாற்றில் மிக கேவலமான பதிவாக உள்ளது. அவ்வாறான இந்த நாட்டில் அதற்கு நீதி வேண்டும் என்று நான் பல தடவைகள் கூறியுள்ளேன். அதேபோன்று தமிழ்த் தேசிய இனம் சார்ந்த இசைப்பிரியா, கிருஷாந்தி போன்றோர் பாலியல் வன்புணர்வுக்கு பின்னர் அவர்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கான நீதி விசாரணைகளையும் நாங்கள் பல இடங்களில் கோருகின்றோம்.தமிழர்களுக்கு நடந்தது மிகப்பெரிய இனப்படுகொலை . ஆனால் சிங்கள மக்களுக்கு அவர்களின் எழுச்சி, கிளர்ச்சிகளுக்கு எதிராக இந்த வதைமுகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளில் தமிழர்கள் மீது படிப்படியாக பல இடங்களில் படுகொலை முயற்சிகள் இடம்பெற்றன. குறிப்பாக 1956 - 1958 காலப்பகுதியில் இலங்கையில் தமிழினம் மீது நடந்த மிகப்பெரிய இனப்படுகொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று 1970 மற்றும் 1976 காலப்பகுதியில் நடந்த மிகப்பெரிய இனப் படுகொலைகளும் பதிவாகியுள்ளன. அத்துடன் 1983இல் நடந்த ஜூலை படுகொலை மிகப்பெரிய இனப்படுகொலையாக உலக அரங்கில் பார்க்கப்படுகின்றது. அதன்பின்னர் 2006இல் வாகரையில் நடந்த இனப்படுகொலை, 2009இல் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி இனப்படுகொலை என்பன இந்த நாட்டில் மிகவும் முக்கியமானவையே. இதற்கான விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை. நாங்கள் பாதிக்கப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட ஒரு இனம். உணவுகூட அனுப்பாமல் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 4 இலட்சத்து 20ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறுதி யுத்தம் நடைபெறும் போது, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு பகுதியில் இருந்தனர். ஆனால் 70 ஆயிரம் பேரே இருக்கின்றனர் என்று அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவும்இ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும் கூறி, 70ஆயிரம் பேருக்கான உணவுப் பொருட்களையே அனுப்பினர். இதில் எத்தனைப் பேர் பட்டினியால் கொல்லப்பட்டிருப்பார்கள். இது தமிழ்த் தேசிய இனம் மீதான மிகப்பெரிய இனப்படுகொலையாக இந்த உலகத்தால் பார்க்கப்படுகின்றது. கனடா நாடு இந்த விடயத்தில் தனது கரிசனையை கொண்டுள்ளது. அங்குள்ள இரண்டு கட்சிகள் இங்கு நடந்தவை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளன. சர்வதேச அடிப்படையில் இந்த விடயம் பேசப்படுகின்றது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கை விடயங்கள் பேசப்படுகின்றன. ஆனால் இங்கு நடைபெற்றது இனப்படுகொலை இல்லை என வாதிடுகின்றீர்கள். அதுபற்றி பேசுவதில்லை. ஆனால் பட்டலந்த படுகொலை தொடர்பில் பேசுவதற்கு தயாராகின்றீர்கள். நாங்கள் அதனை எதிர்க்கவில்லை. விசாரணை வேண்டும். யார் அநியாயமாக கொல்லப்பட்டார்களோ, யார் நீதியின் கண்களுக்கு முன்னால் சித்திரவதை செய்யப்பட்டார்களோ அவர்களுக்கு நீதி வேண்டும் என்பதனை நாங்கள் தமிழர்களாக வலி உணர்ந்த மக்களாக வரவேற்கின்றோம். தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலை தொடர்பில், தமிழ்த் தேசிய இனத்தின் மீதான படுகொலை தொடர்பில் ஏன் இந்த அரசால் சரியான முடிவை எடுக்க முடியவில்லை. 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மனித உரிமைகள் பேரவையில் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றோம். பன்னாட்டு நீதியாளர்களின் ஆலோசனைகளை பெறுகின்றோம். தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்கின்றோம்,தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு நீதி காண்பதற்கு கலப்பு பொறிமுறையை கையாளுகின்றோம் என்று ஏற்றுக்கொண்டார். ஒரு அரசாங்கம் இருக்கும் போது ஏற்றுக்கொண்டதை கோட்டபய ஆட்சிக்கு வந்ததும் நிராகரித்தார். இந்த அரசாங்கமும் வந்த போது இதனை எதிர்த்து நிராகரித்துள்ளனர். நாங்கள் இந்த மண்ணில் உங்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு விரும்புகின்றோம். இதனை நாங்கள் பல தடவைகள் பதிவு செய்துள்ளோம். ஆனால் நீங்கள் நீங்களாகவும், நாங்கள் நாங்களாகவும் எங்களுடைய தனித்துவங்கள், அடையாளங்கள் நிராகரிக்கப்படாமல் வாழ்வதற்கான உரிமைகள் இந்த மண்ணில் இருக்க வேண்டும். அது சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வாகத்தான் அமைய முடியும். ஒற்றையாட்சி இலங்கைக்குள் இந்தத் தீர்வு ஒரு இனத்தை இன்னுமொரு இனம் சுரண்ட முடியாமல், கபளிகரம் செய்ய முடியாமல் மற்றும் அடக்காமல் இருப்பதற்கான வழிமுறை ஒற்றையாட்சிக்குள் உருவாக முடியாது. ஆனால் ஒரு நாடாக இருப்பதற்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு என்பதுஇ அந்த நாட்டில் வாழும் பல்தேசிய இனங்களை அரவணைத்து செல்வதற்கான மிகப்பெரிய பாதையாக மாறும். பட்டலந்த வதை முகாம் எல்லோருடைய இரத்தத்தையும் உறைய வைத்துள்ளது. அங்கு நடந்தது குற்றமென்றால் அது நிரூபிக்கப்படவும்இ உரியவர்கள் கைது செய்யப்படவும் தண்டடிக்கப்படவும் வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதேபோன்று நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏன் விசாரணை செய்ய தயங்குகின்றீர்கள்?. அத்துடன் நாகர்கோவிலில் நடந்த படுகொலைகள், மண்டைதீவில் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பில் ஏன் நீங்கள் சிந்திக்க தவறுகின்றீர்கள்?. குமுதினி படகில் கொல்லப்பட்ட மக்களுக்கு என்ன நீதி கிடைத்துள்ளது?. குருநகர் கடலில் கொல்லப்பட்டவர்கள், கொக்கட்டிச்சோலையில் கொல்லப்பட்டவர்களுக்கு , வாகரையில் கொல்லப்பட்டவர்களுக்கு, திருகோணமலையில் கொல்லப்பட்டவர்களுக்கு என்ன நீதி கிடைத்துள்ளது?. நெடுங்கேணி ஒலுமடுவில், அம்பாறை மாவட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு என்ன நீதி கிடைத்தது? கொத்துக்கொத்தாக பல இடங்களில் கொல்லப்பட்டு அழிக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனம் நிலங்களை இழந்துள்ளது. இன்னும் தமது சொந்த இடங்களுக்கு போக முடியாமல் மக்கள் இருக்கின்றனர். பௌத்த தேவாலயங்கள் அமைக்கப்படுகின்றன. அந்த பிரதேசங்களின் காணிகளை பௌத்த இடங்களுக்குரிய காணி என்று கூறுகின்றனர். இன்னும் காணிகள் எடுக்கப்படுகின்றன. நாட்டின் நீதி என்ன? நீதி எவ்வாறு கிடைக்கும்? யாழ். செம்மணி சுடலையில் மனித எலும்புகூடுகள் எடுக்கப்பட்டன. அதற்கான நீதி இன்னும் வெளிவரவில்லை. அண்மையில் முல்லைத்தீவு குமுளமுனை பகுதியில் வீதி அகலப்படுத்தும் பணியின் போது இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்டவர்களினதாக இருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பெண் போராளிகளின் உள்ளாடைகளுடனும், இலக்கத்தகளுடனும் அவை அந்த புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தாக்கப்பட்ட விதத்தைக்கூட தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் வாயை திறந்த நிலையில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். எவ்வளவு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். பட்டலந்தை மட்டுமல்ல இந்த நாட்டில் வடக்கு மற்றும் கிழக்கில் பலபகுதிகளில் வதை முகாம்கள் உள்ளன. தமிழர் வாழும் பிரதேசங்களில் நீங்கள் மண்ணைத் தோண்டினால் அங்கு தமிழரின் மனித எலும்புகூடுகளை காணும் பிரதேசங்களாக மாறியுள்ளன. நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள். நாங்கள் இந்த மண்ணில் அழிக்கப்பட்ட தனி தேசிய இனம். நாங்கள் கேட்பது நீதி, அந்த நீதி நியாயமானதாக இருக்க வேண்டும். சர்வதேச விசாரணைக்கு உட்பட்டதாகவும், மனித நேயத்திற்கும் மனித உரிமைகளுக்கும் மதிப்பளித்தவையாக இருக்க வேண்டும்.மனிதர்களை கொல்வதில் மிகப்பெரிய குற்றமான உணவு அனுப்பாமல் கொல்லுதல், அவர்கள் மீது பராச் குண்டுகளையும் கொத்துக் குண்டுகளையும், பொஸ்பரசு குண்டுகளையும் வீசி கொல்லுதல்,மிகப்பெரிய தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்தல் என்பன மிகப்பெரிய போர்க் குற்றங்களாகும். வாகரையிலும், முள்ளிவாய்க்காலிலும் மிகப்பெரிய அளவில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த குண்டுகளின் அடையாளங்களுடன் மக்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். படைகளிடம் பலர் உயிருடன் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. குறைவாக நிறுத்தப்பட்டு நிறுத்தப்பட்டு உணவுகளை அனுப்பிய போது எத்தனையோ ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். எத்தனையோ ஆயிரம் குழந்தைகள் தமிழர் புனர்வாழ்வு கழகம் வழங்கிய கஞ்சிக்காக சின்ன சின்ன கிண்ணங்களுடன் வரிசையில் இருந்த போது பராச் குண்டுகளில் சிக்கி கொல்லப்பட்ட வரலாறு அந்த மண்ணில் இடம்பெற்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இனத்தின் சார்பாக அதனை நேரில் கண்டவன் என்ற வகையில் கூறுகின்றேன். தயவு செய்து நீதி விசாரணையை எல்லாவற்றுக்கும் கொண்டு வாருங்கள். அந்த மக்கள் நம்பக்கூடிய வகையில் அதனை செய்யுங்கள். அதுவே நல்ல செய்தியாக அமையும். பட்டலந்தவில் உங்களுடைய போராளிகளுக்கு நடந்தவற்றை மட்டும் விசாரணைக்கு உட்படுத்துவது ஒரு பக்கச்சார்பானதாக மாறும். உங்களை நாங்கள் ஜே.வி.பி போராளிகளாகவே பார்த்தோம். உங்களை பயங்கரவாதிகளாக பார்க்கவில்லை. ஜே.வி.பி போராளிகள் கிளர்ச்சியாளர்கள் என்று கூறினாலும் உங்களுக்காக இரக்கத்துடன் பேசியவர்கள் நாங்கள். களனி ஆற்றில் இளைஞர்கள் கழுத்து வெட்டப்பட்டு மிதந்து வந்தபோது அவற்றை பார்த்து கவலையடைந்தவர்களில் தமிழர்கள் முக்கியமானவர்கள். எவர் கொல்லப்பட்டாலும் அதற்கான விசாரணை வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றோம். பட்டலந்தவில் இருந்த வதை முகாம் ஒரே இனத்துக்குள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள் .ஆனால் எங்கள் மீது திட்டமிட்டு 80 வருடங்களாக மெல்ல மெல்ல எமது நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பல இலட்சமான மக்கள் அழிக்கப்பட்டுள்ளனர். உணவு அனுப்பாமல்இ தடை செய்யப்பபட்ட ஆயுதங்களை பயன்படுத்தி இனப்படுகொலை செய்தனர்.இதனால் தமிழ்த் தேசிய மக்கள் மீதான இனப்படுகொலை மிகவும் கருத்தில் கொள்ள வேண்டியது. இதற்கான நீதி விசாரணை வேண்டும். பட்டலந்த என்ற சொல்லில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான இனப்படுகொலையை மறைத்துவிட வேண்டாம். அதுசர்வதேச அளவில் பேசப்படும் பொருள்.இறுதி யுத்தம் நடைபெற்ற போது பல நாடுகளின் செய்மதிகள் இங்கு நடந்த படுகொலைகளை மிகத்துள்ளியமாக படம்பிடித்து வைத்துள்ளன. உலக நாடுகளிடம் இருக்கும் ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் தமிழ் மக்களின் சாட்சியங்களாக இருக்கின்றன. இதன்படி சரியான நீதி விசாரணை வேண்டும். இந்த நாட்டில் உங்களின் கலாசாரம், பண்பாடு, அடையாளம் என்பனவற்றை மதிக்கின்றோம். உங்களுடன் சேர்ந்து வரத் தயாராக இருக்கின்றோம். அதேபோன்று தமிழர்களுடைய தனித்துவம், அவர்களின் தேசிய அடையாளம்,கலாசார அடையாளம் என்பனவற்றை கருத்திற்கொண்டுஇ அவர்களுக்கான நீதியை வழங்க வேண்டும். அதற்கு தயாராகுங்கள். இப்போது முக்கிய சாட்சியாக காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டங்கள் மூவாயிரம் நாட்களையும் கடந்து வீதிகளில் நடக்கின்றன. அவற்றை கருத்தில் எடுத்து நீதிக்கான கதவுகள் திறக்கப்பட வேண்டும்,அவை உண்மையை கொண்டுவர வேண்டும் என்றார். http://seithy.com/breifNews.php?newsID=330901&category=TamilNews&language=tamil
  15. dilruba instrument தென்றல் வந்து தீண்டும்போது...
  16. அப்பாடா இப்ப தான் நிம்மதி. பயங்கர போட்டி இருக்கும் என நினைத்தேன்.😂
  17. சுமந்திரனின் அறிவு புலமை பற்றி பேசியவர்களை மேடைக்கு அழைக்கிறோம்.
  18. கொழும்பில் போட்டியிடவில்லை என்று சொன்னது சுமந்திர தேரர் தான்.
  19. பல தகவல்கள் உண்டு. யாழ் கழத்தில் பதிய கள விதிகள் அனுமதிக்குமோ தெரியவில்லை.
  20. மன்னிக்கவும் அண்ணா பிந்திய பதிலுக்கு. யாழ், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறுதியில் நுணாவிலில் காலமானார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.