Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. பிந்திக் கிடைத்த தகவல்களின் படி பாரதப் பிரதமர் மோடியும் அதி உயர்ரக போர் விமானம் ஒன்றை தானே செலுத்தியபடி இலங்கை விரைகின்றார். இலங்கைக்கு உடனடியாக உதவுவதில் தன்னுடன் இணையுமாறு ராகுலை அவர் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இலங்கையில் திராவிட மாடலை அமுல்படுத்தினால் எல்லாப் பிரச்சனைகளும் தீரும் என்று தமிழ் நாட்டு முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
  2. இந்தியா, சீனா, ரஷ்சியா மட்டுமல்ல, எந்த நாடுகளிடமும் நாம் எதனையும் கேட்டுப் பெற முடியாது தான் நிதர்சனம். ஆனால் இதில் சீனாவும் ரஷ்சியாவும் இலங்கைக்கு செய்த உதவிகளை விட (ஆயுத உதவி மற்றும் இலங்கையை ஐ.நாவில் காப்பாற்றுவது) மேற்கு எமக்கு செய்தது தான் மிகப் பெரும் துரோகம். எம் போராட்ட வலுவை முற்றாகச் சிதைத்ததில் மேற்கினது பங்களிப்பு முக்கியமாக அமெரிக்காவினது பங்களிப்பு இந்தியாவின் பங்களிப்புக்கு நிகரானது. எனக்கு தெரிந்து இருவரைத் விர மனித உயிர்களின் இழப்பை எவரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இந்தப் போரை ஆரம்பிக்க கூடிய தவிர்க்க முடியாத நிலைக்கு ரஷியாவை கொண்டு நிறுத்திய காரணங்களை நியாயப்படுத்துகின்றதை தான் அவதானிக்க முடிகின்றது. இன்று வெள்ளைத் தோலும் நீல நிறக் கண்களும் கொண்ட மக்களின் இறப்புக்காக இங்கு கவலைப்படும் பலர் அமெரிக்காவின் ஆதரவுடன் சவூதி யேமனில் நடாத்தும் படுகொலைகளுக்கு கவலைப்படுவதை காண முடியுது இல்லை. அதே போன்று அன்று அலெப்போ நகர் மீது 4 வருடங்கள் முற்றுகையிட்டு இறுதியில் குளோரின் குண்டுகள் உட்பட இரசாயன ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தி சிரிய மக்களை கொல்லும் போதும் எவரும் யாழில் கவலைப்பட்டு கண்ணீர் விட்டு, கட்டுரைகள் எழுதியதையும் அவதானிக்கவில்லை.
  3. பிரபா, எங்கள் நிலையைக் எவருக்கு ஒப்பிட்டு காட்டி நியாயம் கேட்க போகின்றீர்கள்? மேற்குலகிடமா? எம் போராட்டத்தினை நசுக்க பேச்சுவார்த்தை என்ற பொறியை விதைத்து போரிடும் ஆற்றலின் முதுகெலும்பை முற்றாக உடைத்த மேற்கிடமா? மேற்கின் எதிரி / மேற்கின் நண்பன் என்ற அளவு கோல்களை வைத்து ஒருவர் தான் எதனை எவரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது கூட அறமற்றது என்பேன்.
  4. கொழும்பான், உங்கள் எழுத்து நடை ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கு உரிய எழுத்து நடை. நின்று நிதானமாக எழுதியுள்ளீர்கள். உங்கள் அனுபவத்தை போல எத்தனையாயிரம் அனுபவங்கள் எம் மக்களுக்கு. வெள்ளைத் தோலும் நீல நிற கண்களும் எமக்கும் இருந்திருந்தால் எம் துயரத்துக்கான நியாயமாவது கிடைத்து இருக்கும். தொடர்ந்து உங்கள் அனுபவங்களை பகிருங்கள்.
  5. யாயினியிற்கும் அண்மையில் பிறம்த தினம் கொண்டாடிய அனைவருக்கும் என் வாழ்த்துகள்!
  6. வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி எனக்கு / எமக்கு வரும் சில கனவுகள் இனம்புரியாத உணர்வுகளை தோற்றுவிப்பன. அடுத்த நாள் காலையில் எழுந்தால் அக் கனவின் சுமை கண்களின் வழி மனதெங்கும் பரவி அன்றைய நாளின் மீது கவிழும் மேகமாக தொடரும் இயல்புள்ளன. என்ன கனவு என்று தெளிவாக அடுத்த நாள் சொல்ல முடியாமல் இருக்கும். மீள அதை நினைவில் கொண்டு வர முடியாமல் இருக்கும். அது தரும் உணர்வுகளையும் பழக்கமான வார்த்தைகளால் அளக்க முடியாமல் இருக்கும். அப்படி ஒரு கனவு நேற்றுக் காலையில் வந்தது. அதில் கடல் நிரம்பி இருந்தது. விடிய எழும்பும் போது கண்களில் எரிச்சலும் மனசில் உளைச்சலுமாக இருந்தது. அதை எழுத்தில் கொண்டு வர எடுத்த முயற்சி தான் இது. யாழின் 24 ஆவது அகவைக்கு என்று மினக்கெட்டு எழுதவில்லை இது. தானாக வந்த கவிதை.
  7. நேற்று என் கனவில் கடல் வந்தது என் கடல் நீலமாய் இருக்கவில்லை அதன் அலைகள் கடும் சிவப்பிலும் ஆழத்தில் தொலைந்திருந்த எங்கோ புதைந்து கிடந்த என்றோ மறந்து விட்ட ரகசியங்களின் நிறமாகவும் இருந்தது. கரையே அற்ற பெருங்கடல் அது இரக்கமற்றவர்களின் பிரார்த்தனை போலவும் மரணங்களைக் கொண்டாடும் கடவுள்களின் துதிப்பாடலைப் போலவும் இரைச்சலாக இருந்தது. ஈரமற்ற நீர்ப்பரப்பாய் வானமற்ற நீர் வனமாய் உயிர்கள் அற்ற ஆழியாய் அது பரந்து சூழ்ந்தது அதன் அலைகளின் நுனிகளை பற்றி இருந்தேன் நுரைகளால் நிரம்பிக் கிடந்தேன் அதன் பெரும் இரைச்சலை எனக்குள் இறக்கிக் கொண்டேன் அலைக்கழிக்கும் ஒரு பெரும் துயரத்தின் ஆழத்துக்குள் அதன் சுழி என்னை இட்டுச் சென்றது மீள முடியாத பெரும் சுழி அது தொடக்கமும் முடிவும் ஒரே புள்ளியில் சில கணங்களும் பின் விலகி எதிர் துருவங்களில் சில கணங்களுமாக நேர் கோட்டிலும் குறுக்குவாட்டிலும் பின் சிறுத்தும் பரந்தும் சுருங்கியும் விரிந்தும் என்னை இறுக்கி பிழிந்து உயிர் குடிக்கும் பெரும் சுழி அது மூச்சிழந்து கிடந்தேன் உடல் மரத்து வேர்வை ஆறாகி பெருக தப்ப வழியற்று தப்பும் ஆசையும் அற்று அதன் நெடிய கரங்களுக்குள் இன்னும் நெருக்கிக் கொண்டு அலைக்கழிந்தேன் ஈற்றில் முன்னை இட்ட தீ சுழிக்குள் தகித்து எரிய கடலில் சாம்பலாகி அலைகளில் துகள்களாகி கோடிக்கணக்கான அணுக்களாகி கரைந்தே போனேன். நேற்று என் கனவில் கடல் வந்தது இமைகள் திறந்த பொழுது அந்தக் கடல் வற்றிக் கொண்டது வற்றிப் போக முன் என் அறையெங்கும் சேற்று மணத்தை நிரப்பி விட்டுச் சென்றிருந்தது... March 27, 2022
  8. மிகவும் தவறான, ஆபத்தான கருத்து. யாழ் இணையம் ஒரு கருத்துக்களம். இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் எவரும் தங்கள் கருத்துகளை முன்வைக்கலாம். அவ்வாறு தம் கருத்துக்களை முன்வைக்க கூடாது என்று உத்தரவு விட உங்களால் முடியாது. யாழின் பிறந்த தினத்துக்காக சுய ஆக்கங்களை யாழ் வரவேற்பதே கருத்துக்களத்தை மேலும் விரிவுபடுத்தவே. கருத்துக்களத்தின் அடிப்படை நோக்கத்தை சிதைக்காமல் இந்த திரியை கொண்டு சொல்லுங்கள்.
  9. நல்ல கவிதை புங்கை. நீண்ட காலத்தின் பின் உங்களின் சுய ஆக்கம் நல்ல கனமான ஒன்றைத் தாங்கி வந்துள்ளது. மேற்குலக ஊடகங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு, மேற்குலகில் வாழ்கின்றோம் என்பதற்காய் அதன் போர்களை நியாயப்படுத்துகின்றவர்கள் கூட இந்த பன்னாடையை போன்றவர்கள் தான். உலகமே ஒரு விதத்தில் இந்தப் பன்னாடை போன்றது தான் - நாம் உட்பட.
  10. நிகழ்ச்சியின் உத்தியோகபூர்வ live stream மினூடாக நிகழ்ச்சியின் இறுதி இரண்டு மணித்தியால நிகழ்வுகளை பார்க்க முடிந்தது. அலைபேசியின் திரையை அகண்ட தொலைக்காட்சி திரைக்கு mirror பண்ணி பார்த்தமையால் அருமையான அனுபவம் கிடைத்தது. ஆனாலும் நேரில் பார்த்த அனுபவம் இதை விட பல மடங்கு அற்புதமாக இருந்திருக்கும்.
  11. புத்தன், உங்கள் இந்த சிறுகதையை யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தவா?
  12. பிறந்த நாள் வாழ்த்துகள் நுணா!
  13. என்றென்றும் மறக்க முடியாத சந்திகளில் ஒன்று! இந்தச் சந்திக்கு வாய் பேச முடிந்தால், ஒரு பெரும் வரலாற்றையே சொல்லத் தொடங்கும்.
  14. நானும் ஒரு ஆன்ட்ராய்ட் பயனாளி. தற்போது Samsung s21 கைபேசியும் Samsung watch 4 வும் பயனபடுத்தி வருகின்றேன் (என்னை நான் ஒரு Anti Apple product person என்று சொல்வதுண்டு) ஆனால் மனைவியும் பிள்ளைகளும் எப்பவும் அப்பிள் போன் தான் பயன்படுத்துகின்றனர். எப்பவாவது அவர்களின் போனை நான் பயனபடுத்த வேண்டிய நிலை வரும் போது ஒவ்வொரு முறையும் வெறுத்து விடுவேன். என்னைப் பொறுத்தவரைக்கும் ஆன்ட்ராய்ட் எப்பவும் பாவனையாளர்களின் தேவைக்கு ஏற்ப தன் அம்சங்களை (Features) கொடுக்கும். அப்பிள் தன் அம்சங்களுக்கு ஏற்ப பயனாளரை மாறச் சொல்லும்.
  15. ஏராளனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  16. வாழ்த்தியமைக்கு மிகவும் நன்றி!
  17. மேலும் வாழ்த்துக் கூறிய நொச்சி, ஜெகாதுரை, பெருமாள், ராசவன்னியன் அண்ணா மற்றும் எப்போதும் தமிழன் ஆகியோருக்கும் என் நன்றி. வாழ்ந்த காலங்களை விட வாழப் போகும் காலம் குறுகிக் கொண்டு செல்லும் நேரம் இது. இந்த மிச்ச சொச்ச வாழ்க்கையில் வாழ்த்து சொல்லிய அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி.
  18. வாழ்த்துக்கு நன்றி பாஞ்ச் அண்ணா என் 100 ஆவது வயதில் இப்படி தான் இருப்பேன் என நினைக்கின்றேன்.
  19. காலையில் எனக்கு பிடித்த உழுந்து வடையும், மிளகாய் சம்பலும் மனிசி செய்து தந்து விட்டு வேலைக்கு போய் விட்டார். ஒரு 10 வடையை சாப்பிட்டு இப்ப மந்தமாக இருக்கின்றேன். 😂
  20. பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்ன சுவி அண்ணா, கிருபன், உடையார், குமாரசாமி அண்ணா, வாதவூரன், ஈழப்பிரியன் அண்ணா, ஏராளன், யாயினி, நிலாமதி அக்கா, தமிழ் சிறி, புரட்சி, நந்தன், கந்தையா, நுணா, இணையன் மற்றும் புங்கையூரன் ஆகியோருக்கு என் நன்றிகள்!
  21. வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  22. பின்னால் ஓடியவர்கள், நின்றவர்களைத் தான் திரும்பி பார்க்க முடியவில்லை, முன்னுக்கு ஒயிலாக ஓடுகின்றவ மயிலின் பெயர், விலாசம் அல்லது ஆகக் குறைந்தது தொலைபேசி இலக்கமாவது வாங்கினீர்களா? 😄
  23. முகம் தெரியாத எத்தனை பேர் எம்மை எம் வாழ்வில் ஊக்குவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்! 7 கிலோமீற்றர் என்பது பெரிய தூரம், அதை களைத்த பின் இரண்டு சீனிக்கட்டிகளுடன் ஓடியிருக்கின்றீர்கள். ஆனால் இப்படி செய்வது ஆபத்தையும் கொண்டு வரும் அல்லவா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.