Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. உயிர் போற நேரத்திலை கொள்கை ஆவது, Hair ஆவது. 😂 ஆபத்துக்கு... பாவம் இல்லை என்று ஸ்ரீலங்கன் என்று சொல்லி தப்பிக்க வேண்டியதுதான். 🤣
  2. இன்று திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கும்... ராசவன்னியரின் மகனுக்கும், மருமகளுக்கும்... இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் 🙏
  3. வளவன்... இப்போ இங்குள்ள Pizza கடைகள், Taxi கள் எல்லாம் வட இந்தியர்களின் ஆதிக்கம்தான். அவர்களின் கொண்டாட்டம் இல்லாத பொது இடங்களில் கூட... பெண்கள், ஆண்கள் அதிக இந்திய உடைகளில் திரிவதை பார்க்க மற்றவனுக்கு எரிச்சலாக இருக்கும். பர்தா போடும் இஸ்லாமியர்களை எவ்வளவு வெறுத்தார்களோ.. அதே நிலைமை... இந்திய எதிர்ப்பு என்ற வடிவில், எங்களையும் பாதிக்கும் எனும் போது கவலையாகத்தான் உள்ளது.
  4. அமெரிக்கா துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் (JD Vance) வேன்ஸ். அவரின் மனைவி ஆந்திராவை சேர்ந்த உஷா சிலிக்குரி. கமலா... இல்லையெண்டால், விமலா. 😂 🤣 சில பின்னுட்டங்கள்.... சேதுராமன். தென்மாப்பட்டு சேதுராமன் தென்மாப்பட்டு இப்ப கஸ்தூரி சொன்னுது நிஜம்தானே. காத்தமுத்து கம்ப்யூட்டா் கோர்ஸ் கமலா ஹாரிசும் தெலுங்கு பிராமின்தான்ணே.
  5. கனடாவின் விடுமுறை இல்லாத தினத்தில்... இவர்கள் வீதியில் வெடி கொழுத்தி கொண்டாடுவது, மற்றைய மக்களுக்கு மிகவும் இடைஞ்சலானது. கண்டிக்கத்தக்க செயல். ஜேர்மனியில் வருடப் பிறப்பை அண்மித்த மூன்று நாட்கள் மட்டுமே வெடி கொழுத்த அனுமதி. நத்தார் பண்டிகைக்கும் வெடி கொழுத்துவதில்லை. மற்றைய நாட்களில் கடைகளில் கூட விற்க முடியாது. அப்படி யாரும்... தமது இருப்பில் உள்ள வெடிகளை கொழுத்தினால் காவல் துறையின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வரும். ஆசியர்கள்.... தமக்கு வாழ்வு தந்த மற்றைய நாட்டு சட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.
  6. இந்தப் படத்தில்... சிவப்பு கட்டத்தில் உள்ளவர் செய்யும் வேலை, வட இந்தியர்களுக்கே பிரத்தியேகமானது. 😂
  7. மதிலும் இல்லை... பல இடங்களில், படங்கு துணி. (தார்ப்பா) 😂 அங்காலை ட்ரம்ப், இங்காலை குடிசை. 🤣
  8. நாடாளுமன்ற தேர்தல்; பிரச்சார நடவடிக்கைள் திங்கள் நள்ளிரவுடன் நிறைவு! 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. நவம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் அமைதியான காலம் ஆரம்பாகிறது. அந்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலானது நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்றும் (07) நாளையும் (08) மேற்கொள்ளப்படவுள்ளன. ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிக்க முடியாத முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் வாக்காளர்களுக்கும் இன்று தபால் வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1407540
  9. மோடி உண்மையான நண்பன் – ட்ரமப்க்கு வாழ்த்திய மோடி. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்பை தொலைபேசி வழியே தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். குறித்த அழைப்பில் உலக அமைதிக்காக இரு தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்றுவது என உறுதி மேற்கொண்டனர் என அரசியல் தகல்கள் தெரிவித்துள்ளன. ஒட்டுமொத்த உலகமும் பிரதமர் மோடியை விரும்புகிறது. இந்தியா ஒரு பிரமிக்க வைக்கும் நாடு. பிரதமர் மோடி ஒரு உன்னதம் வாய்ந்த நபர். பிரதமர் மோடியையும், இந்தியாவையும் உண்மையான ஒரு நண்பராக கருதுகிறேன் என பிரதமர் மோடியிடம் டிரம்ப் கூறியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றி பெற்ற பின்பு முதன்முதலாக நான் பேசிய உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், 2-வது முறையாக பதவி வகிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1407576
  10. தற்செயலாக இன்று கமலா வென்று இருந்தால்…இந்தியா கமறி இருக்கும். இப்ப இருந்த இடம் தெரியாமல், பம்மிக் கொண்டு இருக்கின்றார்கள். 😂
  11. பசுவூர்க்கோபி…. நீங்கள் இயற்றிய பாடல் வரிகளுக்கு, தேனிசை செல்லப்பா கணீர் குரலில் பாடியமை மிக இனிமையாக இருந்தது. இளங்கோவின் இசையமைப்பும் பிரமாதம்.
  12. அப்ப முதல் சந்திப்பு... கிரெம்ளினில் என்று சொல்கிறீர்கள். 😂
  13. ஆர் வெண்டாலும்... உங்களுக்கு ஒரு "பார் பெர்மிட்" எடுத்து தர வேணும் என்று, இப்பவே சொல்லி வையுங்கோ குமாரசாமி அண்ணை. 😂
  14. அடிப்படை அறிவு கூட இல்லாமல் அரசியல் விளக்கம் சொல்லிக் கொண்டும், தேவையில்லாத இடங்களில் எல்லாம் ஆங்கிலத்தையும் செருகுவதும், பிழையான உச்சரிப்புடான் ஆங்கில சொற்களை சொல்வதும் கேட்க கடுப்பாக இருக்கின்றது. நல்ல தமிழ் சொற்களை.. இவர்களே பேச்சு வழக்கில் இருந்து ஒழித்து விடுவார்கள் போலுள்ளது. காலத்துக்கு ஏற்ற கவிதைக்கு நன்றி உதயன்.
  15. செல்வநாயகத்தின் மகன் சந்திரகாசன் மாதிரி... எதிரிக்கு, பொல்லு எடுத்துக் குடுக்கிற ஆளோ. 😂 🤣
  16. எல்லாம்.... பம்மாத்து. நேரம் மினைக்கெட்ட வேலை. யாரோ ஒரு முதலாளியின் ஆசையை... பத்திரிகை நிறுவனம், மக்கள் மேல் திணித்து மக்களை குழப்புவார்கள்.
  17. பல அதிரடி மாற்றங்கள் செய்து கொண்டு இருக்கின்றார்கள். 1) லஞ்சம் வாங்கிய நான்கு சுங்க அதிகாரிகளுக்கு 35 வருட கடூழிய சிறை. 2) "இராஜதந்திர பதவிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளின் குடும்பத்தினரும் திருப்பி அழைப்பு" என்று நினைத்துப் பார்த்திருக்க முடியாத செயல்களை செய்வது வரவேற்கத் தக்கது.
  18. சுங்கத்திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறை! இலங்கை சுங்கத்திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது. 2015ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பஸ் உதிரி பாகங்களை விடுவிப்பதற்காக பஞ்சிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 125 மில்லியன் ரூபா இலஞ்சமாகப் பெற்றமையே இதற்குக் காரணமாகும். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 125 மில்லியன் ரூபா அபராதம் விதித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407492
  19. இராஜதந்திர பதவிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளின் குடும்பத்தினரும் திருப்பி அழைப்பு! முன்னாள் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அரசியல் தொடர்புகள் ஊடாக வெளிநாட்டு இராஜதந்திரப் பணிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் 2024 டிசம்பர் 01 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னாள் அரசாங்கத்தினால் சில வெளிநாட்டு இராஜதந்திர பணிகளுக்கு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களாக சிலர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இன்று (06) ஊடகங்களுக்கு தெரிவித்தார். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு சேவைகளில் அனுபவம் பெற்றவர்கள் அல்ல, அவர்கள் அனைவரையும் அரசியல் நியமனங்கள் என்று வகைப்படுத்த முடியாது. அவர்களில் சிலர் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் மற்றும் மனைவிகள் தூதுவர் பதவிக்கு கீழான பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1407496
  20. நண்பர் எனக் கூறி ட்ரம்புக்கு மோடி வாழ்த்து! 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டெனால்ட் டர்ம்பின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோசடி குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எக்ஸ் கணக்கில் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ள நரேந்திர மோடி, ட்ரம்ப்பை நண்பர் என வர்ணித்துள்ளார். மோடியின் வாழ்த்துச் செய்தியானது அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அமெரிக்க-இந்தியா விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான உற்சாகத்தை வெளிப்படுத்தியது. அந்த செய்தியில், எனது நண்பர் டொனால்ட் ட்ரம்ப்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்கள் வரலாற்றுத் தேர்தல் வெற்றியில் உங்கள் முந்தைய பதவிக் காலத்தின் வெற்றிகளை நீங்கள் கட்டியெழுப்பும்போது, இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்கள் ஒத்துழைப்பைப் புதுப்பிக்க எதிர்பார்த்துள்ளோம். ஒன்றாக, நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் பாடுபடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407480
  21. ட்ரம்பின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி! டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியை ஏற்க மறுத்த முன்னாள் ஜனாதிபதியின் அசாதாரண மறுபிரவேசமாக இது அமைந்துள்ளது. இரண்டு படுகொலை முயற்சிகள் மற்றும் 34 குற்றச் செயல்களுக்கு மத்தியில் ட்ரம்பின் இந்த வெற்றி வந்துள்ளது. விஸ்கான்சினில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளர், ஜனாதிபதி பதவிக்கு தேவையான 270 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்றார். அலாஸ்கா, விஸ்கான்சினின் அண்மைய மற்றும் முக்கியமான முடிவுகளுடன் டொனால்ட் ட்ரம்ப் இப்போது 279 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்றுள்ளார். இதனிடையே கமலா ஹாரிஸ், நியூ ஹாம்ப்ஷயரில் வெற்றி பெற்ற நிலையில் 223 தேர்தல் கல்லூரி வாக்குகளை பெற்றுள்ளார். ட்ரம்பின் வெற்றியானது அமெரிக்காவின் பணவீக்கம் மற்றும் குடியேற்றத்தைச் சுற்றியுள்ள பொது மக்களின் விரக்திகள் எவ்வளவு ஆழமாக இருந்தன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. க்ரோவர் க்ளீவ்லேண்டிற்குப் (Grover Cleveland) பின்னர், இரண்டு சந்தர்ப்பங்களில் பதவி வகிக்கும் இரண்டாவது ஜனாதிபதியாக ட்ரம்ப் ஆவார். க்ரோவர் க்ளீவ்லேண்ட் அமெரிக்காவின் 22 ஆவது ஜனாதிபதியாக 1885 முதல் 1889 வரையும் 24 ஆவது ஜனாதிபதியாக 1893 முதல் 1897 வரையும் இருந்தார். ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக முதல் முறையாக 2016 முதல் 2020 க்கு இடையில் இருந்தார். எனினும், 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த பிறகு அவர் இரண்டாவது முறையாக வெற்றிபெறத் தவறினார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக ட்ரம்ப் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் 78 வயதில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மிக வயதான நபர் ட்ரம்ப் ஆவார். https://athavannews.com/2024/1407512

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.