Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by புங்கையூரன்

  1. புத்தன், உங்கட வளவுக்குள்ள பத்து பிலா மரங்கள் காய்ச்சுத் தள்ளுது எண்டு வெளி ஆக்கள் வளவுக்குள்ள வந்து புடுங்கிறது சரியா? அவை சொந்தக்காரர் எண்டாலும்..களவு களவு தானே।
  2. சிங்களவர் தம்மை சிங்கள இனம் என்றே அடையாளப் படுத்துகிறார்கள். அவர்கள் தம்மைப் பௌத்த இனம் என்று கூறுவது இல்லையே. பௌத்தம் ஒரு மதமல்லவா? ஜப்பானியர்கள் தங்களை ஆசியர் என்று தானே வகைப் படுத்துகிறார்கள். இனம் எனும் போது பெரிய பரிமாணம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
  3. வணக்கம், சுமே.,.! கன காலத்துக்குப் பிறகு நல்ல ஒரு அனுபவக் கதை..! வளமில்லாத மண்ணில் வாழ்வதாலோ என்னவோ, இது தான் எமது இனத்தின் கலாச்சாரமாகி விட்டது போல கிடக்கு..! நானும் இரண்டு தாய் தகப்பன் இல்லாத பொம்பிளைப் பிள்ளைகளுக்குத் தொழில் வசதி செய்யலாம் எண்டு வெளிக்கிட்டு நல்லாய்க் களைச்சுப் போனன். அவர்களின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் எங்களதை விடவும் மிகவும் அதிகம் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. ஐபோன் தான் வேணும் எண்டு அடம் பிடிக்குதுகள்! என்ன செய்யிறது சுமே?
  4. கண்ணகி மன்னனை மட்டும் எரித்திருக்கலாம்..! அது நியாயம் ஏன் மதுரையை எரித்தாள்? மதுரை என்ன தவறு செய்தது? அனுமனும் தேவையில்லாமல் தான் இலங்கையை எரித்தான்…! அழகிய எழுத்து நடை உங்கள் வித்தை..।
  5. அல்வாயன் வடித்தெடுத்த…, அழியாத அழகின் மீது, அந்தப் பிரமனுக்கே.., காதல் வரும்..! பிரபஞ்சப் படைப்பின், இரகசியம் புரிந்தவர் நீர் ஐயா…! பொத்தி வைத்திருக்கும்.., முத்துக்களில் சிலதை, சிந்தி விடுங்களேன், எங்களுக்காக…!
  6. புத்தன், எமது இளம் வயதுகளில் தூர் வாருதல் போன்ற வேலைகளில் ஈடுபட்ட அனுபவம் உண்டு. மு. தளையசிங்கம் அவர்களது சர்வோதய இயக்கம் இவற்றை ஒழுங்கு செய்திருந்தது. இரண்டு பெரிய குளங்களை இணைக்கும் திட்டம் கூட ஆயத்த நிலையில் இருந்தது. இப்போது பார்க்கும் போது எல்லாமே வரண்டு போய்க் கிடப்பது மிகவும் கவலையாக உள்ளது. அங்கு எவருக்கும் எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. மிகக் குறுகிய காலத்திலேயே கூர்ப்படைந்து விட்டார்கள் போல உள்ளது…!
  7. சிட்னியியிலும் முட்டை வலு தட்டுப்பாடு தான்..! அண்டைக்கு ஒரு நாள் சுப்பர் மார்க்கட்டில முட்டையைக் கண்டு வாங்கியாச்சு. விலை போட்டிருக்கவில்லை. வீட்டை வந்து மனிசி விலையப் பார்த்தா வழக்கத்தை விடவும் இரண்டு டொலர் கூட. விசாரிச்சுப் பாத்தால் இந்தியாக் காறர் தான் இப்ப மனேச்சராம். எங்க போனாலும் எங்களைக் கலைக்கிறாங்கள் இவனுகள்…! எங்கட கோழிகளுக்கு பேர்ட் புளூவாம்🥱
  8. என்ர லண்டன் நண்பன் ஒருவர் முதல் தரமா கனடால வந்து நிக்கிறார். அவரே சினோவைக் கண்டு ஆச்சரியப் பட்டுப் படம் அனுப்பியிருக்கிறார். கிள்ளிக் குடுக்கேல்ல இயற்கை. அள்ளியே கொட்டியிருக்கு..!😀
  9. அமெரிக்கவில ரக்ஸிக்கும், வினியோக வாகனங்களுக்கும் சாரதி தட்டுப் பாடு கெதில வரப்போகுது…!
  10. நான் அவுஸ் வந்த காலத்தில் ஒரு இந்தியரும் வந்தார். தங்கள் நாட்டில் தபால் சேவை அவுஸை விடவும் எவ்வளவோ திறம் எண்டார். பிறகு கொஞ்ச நாள் போக தகப்பனுக்கு ஒரு rayban sunglass வாங்கி அனுப்பினார். இரண்டு கிழமையாகியும் அது தகப்பனுக்குப் போய்ச் சேரவில்லை. ஏன் உங்கள் தபால் சேவை திறம் எண்டு சொன்னீங்கள் என்று கேட்டேன். தபால் காறன் Ray ban புதுசாப் போட்டுக் கொண்டு திரியிறான் எண்டு தகப்பன் சொன்னதாகச் சொன்னார். இப்பிடித் தான் இந்தியன் பெருமைகள் அனேகமாக முடியும்…!
  11. ம்ம்.,,சந்திராயன், மங்களாயன் போலத் தான் இதுவும் இருக்கும், வசி….!
  12. எனது வாழ்த்துக்களும் நுணா…!
  13. போடுங்கள் கோயில்களும் பெரிசாக் கட்டிக் கும்பிடவோ அல்லது பூசை செய்யவோ ஆளில்லாமல் கிடக்குது. பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமல் காயிது, ஆஸ்பத்திரீகளில் டாக்குத்தர் மாரே பிறைவேற்றுக்குப் போங்கோ எண்டு சொல்லுகினம். நாங்கள் தான் பழைய காலத்திலேயே வாழுறம் போல கிடக்குது அல்வாயன்.
  14. நீங்க சொல்லுறது சரி தான் புத்தன் . .! கடகம் மாதிரிக்கு கொஞ்சம் உயரமாகச் செய்து வைக்கலாம் ! உள்ளூர் வாசிகளுக்குத் தொழில் வாய்ப்புக் கொடுத்த மாதிரியும் இருக்கும் ! கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும் ! இப்பிடியெல்லாம் சிந்திக்கிற ஆக்கள் யாழில் இருப்பது ஒரு பெருமை தான் புத்தன் . ..!
  15. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இன்னொரு மனிதன் ஒளிந்து கொண்டிருக்கின்றான் . ...! அவன் பொதுவாகவே தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை ! அவன் வெளிப்படும் வேளைகளில் , உலகம் மனிதாபிமானத்தைத் தரிசிக்கின்றது . தொடருங்கள் . ..ரசோதரன் ...!
  16. அந்தளவு ஆற்றல் இவருக்கு இருந்திருந்தால் . ...இவருக்கு ஏன் இந்த நிலைமை வந்திருக்கு , ஈழப்பிரியன் ?
  17. எல்லாருக்கும் இப்படி ஒரு அனுபவம் வந்து தான் போகும் போல, உடையார்? நீங்களும் கன்னி ராசிக்காரன் போல…!😔
  18. வணக்கம் செம்பாட்டான்…! உங்கள் வரவு நல் வரவாகட்டும்..! நான் வசிக்கிற நாடு முழுவதுமே செம்பாட்டு மண் தான்..!
  19. அதற்குப் பதிலளித்த மோதிஇ "இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எங்கள் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் என்னவென்றால் 'உலகமே ஒரு குடும்பம்' என்பதுதான். நாங்கள் முழு உலகத்தையும் ஒரே குடும்பமாகக் கருதுகிறோம்." இப்ப விளங்குது எங்கட வள்வுக்குள்ள வந்து ஏன் மீன் பிடிக்கிறீங்க எண்டு…! பரதேசிப் பயலுங்க நீங்க…!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.